சவுதி அரேபியா - இரான் இடையே வெடித்துள்ள மோதல் மத்திய கிழக்கில் அமைதிக்கான முயற்சியை சிக்கலாக்கியுள்ளது: - நக்கீரன் | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
April 24, 2024 [GMT]

சவுதி அரேபியா - இரான் இடையே வெடித்துள்ள மோதல் மத்திய கிழக்கில் அமைதிக்கான முயற்சியை சிக்கலாக்கியுள்ளது: - நக்கீரன்
[Thursday 2016-01-07 23:00]

அல்லா ஒருவனே ஏக இறைவன், அவனைவிட வேறு இறைவன் கிடையாது, அவனால் அருளப்பட்டது குர் ஆன், அவனது இறுதித் தூதர் முகம்மது நபி என்ற இஸ்லாத்தின் அடிப்படை கோட்பாடுகளை எல்லா முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்கின்றனர். இஸ்லாத்தில் சுன்னி மற்றும் ஷியா என்ற இரண்டு பிரிவுகள் உண்டு. இருந்தும் சுன்னிகளும் ஷியாக்களும் அல்லா ஒருவனே, குர்ஆனும் ஒன்றே, இறுதித் தூதரும் ஒருவரே, மக்கா இறையில்லமும் (கஅபா) ஒன்றே என்பதை ஏற்றுக் கொள்கின்றன. முகம்மது நபிக்குப் (கிபி 632) பிறகு, இஸ்லாமிய ஆட்சியாளராக (கலீபா) யாரை நியமிப்பது என்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பெரும்பான்மையோர் முகம்மது நபியின் நெருங்கிய நண்பரும் மாமனாருமான அபூபக்கர் கலீபா ஆக வர வேண்டும் என்று விரும்பினார்கள். சிறுபான்மையோர் முகமது நபியின் மருமகன்களில் ஒருவரான அலியே முகம்மது நபியின் உண்மையான வாரிசு என்று வாதிட்டார்கள். இந்தச் சண்டை பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. ஷியா என்ற சொல் அரபு மொழியில்
  

ஒரு காலத்தில் தமிழர்கள் சைவம் - வைணவம் - பவுத்தம் - சமணம் எனப் பிரிந்து நின்று சண்டையிட்டார்கள். சைவர்கள் சமணர்களை வாதில் வென்று கழுவேற்றினார்கள் என்ற கதைகளும் உண்டு.

சுன்னி இஸ்லாத்தின் தொழுகைக்கான அழைப்பு (பாங்கு) "அல்லாகு அக்பர்' என்று தொடங்கும். அதன் பொருள், "இறைவன் மிகப் பெரியவன்! வணக்கத்துக்குரியவன் இறைவனைத் தவிர வேறெவரும் இல்லை. முகம்மது இறைவனின் தூதர். தொழ வாருங்கள். வெற்றி பெற வாருங்கள்' என்பது. இதில், ஷியாக்கள் மேலும் ஒரு வரியைச் சேர்த்துக் கொள்கிறார்கள். "முகம்மது நபி அல்லாவின் இறுதித் தூதர், அவரது வாரிசு அலி' என்பதே அவ்வாசகம் ஆகும். ஐந்து வேளைத் தொழுகையை, மூன்று வேளைகளில் (இரண்டை ஒரே வேளையில்) ஷியாக்கள் தொழுது விடுகின்றனர். தொழுகையில், ஸஜ்தா எனும் சிரம் பணியும் நிலையில், "காகே ஷிபா' எனப்படும் புனித கர்பலாவின் மண்ணால் செய்யப்பட்ட "சில்' (ஓடு) ஒன்றை வைக்கிறார்கள். சுன்னிகள் இவ்வாறு செய்வதில்லை.

இன்று உலகின் இரண்டாவது பெரிய மதம் இஸ்லாம். உலகில் தோராயமாக 157 கோடி (1.5 பில்லியன்) முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் எனக் கணக்கிடப்படுகிறது. அதாவது உலகின் மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 23 விழுக்காடு ஆகும். அது மட்டுமல்ல உலகில் அதி வேகமாக வளர்ந்து வரும் மதம் இஸ்லாம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

உலக நாடுகளில் ஏறக்குறைய 50 நாடுகள் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகள் ஆகும். இந்தோனீசியா, பாகிஸ்தான், இந்தியா, வங்காளதேசம், எகிப்து, நைசீரியா, ஈரான், துருக்கி, அல்சீரியா, மொரக்கோ ஆகிய 10 நாடுகளில் 67 விழுக்காடு முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.

ஆனால் கெட்ட காலத்துக்கு முஸ்லிம்கள் இரு பிரிவாக இருந்து கொண்டு தங்களுக்குள் பயங்கரமாக மோதிக் கொண்டிருக்கிறார்கள். சுன்னி - ஷியா என்ற இரு பிரிவுகளில் பெரும்பான்மை (85 விழுக்காடு) சுன்னி பிரிவைச் சேர்ந்தவர்கள். சிறுபான்மை ஷியா பிரிவினர் (13 விழுக்காடு) சில நாடுகளில் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். ஷியாக்களின் ஆட்சி நடைபெறும் நாடுகள் ஈராக் மற்றும் இரான் ஆகும். அடுத்தபடியாக லெபனான், பாகிஸ்தான், வங்காளம், இந்தியா போன்ற நாடுகளில் ஷியா பிரிவினர் வாழ்கிறார்கள்.

கடந்த வாரம் ஷியா மதகுரு ஷேக் நிமர் அல் நிமர் (56) உட்பட 47 பேருக்கு சவுதி அரசு மரண தண்டனையை நிறைவேற்றியது. கொல்லப்பட்டவர்களில் 43 பேர் சுன்னிகள், மதகுரு ஷேக் நிமர் அல் நிமர் உட்பட 4 பேர் ஷியா பிரிவைச் சேர்ந்தவர்கள். வன்முறை மற்றும் பயங்கரவாதத்தில் ஈடுபட்டார்கள் என்று இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் ஷேக் நிமர் அல் நிமர் வன்முறையைத் தூண்டும் விதமாக நடந்து கொள்ளவில்லை எனச் சொல்லப்படுகிறது.

ஷேக் நிமர் அல் நிமர் அவர்களது தரத்தை ஒத்த ஷியா பிரிவைச் சேர்ந்த ஒரு மதகுரு இதற்கு முன்னர் இப்படிக் கொல்லப்படவில்லை. இதற்கு முன்னர் ஷேக் நிமர் அல் நிமர் போன்ற எதிர்ப்பாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். சவுதி அரேபியாவின் கிழக்குப் பகுதியில் ஷியாக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். இங்கேதான் சவுதி அரேபியாவின் பெரும்பான்மை எண்ணெய்க் கிணறுகள் இருக்கின்றன.

இன்றைய சவுதி அரேபியா 1932 இல் முகம்மது இபின் சவுத் என்பவரால் உருவாக்கப்பட்டது. அரவு மொழியின் பிறப்பிடம் சவுதி அரேபியாதான். இங்கே இஸ்லாமுக்கு புனிதமான இரண்டு மசூதிகள் இங்கேதான் இருக்கின்றன. ஒன்று அல் மஜித் அல் ஹறம் (மெக்கா) மற்றது அல் மஜித் அன் நபாவி (மெடினா). சவுதி அரேபியா வாகிபிசம் என்ற அடிப்படை - குர் ஆன் மற்றும் சுன்னா - இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றும் நாடு. குர் ஆன் மற்றும் சுன்னாவே நாட்டின் அரசியல் யாப்பாகும். புனித இமாம்களை வணங்கும் ஷியாக்கள் உண்மையான முஸ்லிம்கள் அல்ல எனக் கருதப்படுகின்றனர். சவுதி அரேபியாவில் உள்ள ஷியா பிரிவினர் கல்வி, வேலை வாய்ப்பு போன்றவற்றில் புறக்கணிக்கப்படுகிறார்கள். 1990 -1991 காலப் பகுதியில் சவுதி அரேபியா 900,00 ஷியா யேமானியர்களை நாட்டு விட்டு வெளியேற்றியது.

சுவுதி அரேபியாவின் மக்கள் எண்ணிக்கை 28.7 மில்லியன் (2010) ஆகும். இதில் சவுதி குடிமக்ள் 19.7 மில்லியன். ஏனையோர், பெரும்பாலும் வேலை நிமித்தமாக சென்ற ஆபிரிக்க - ஆசிய நாட்டவர் 9.0 மில்லியன் ஆவர். சவுதியில் 3 1/2 இலட்சம் இலங்கையர் (பெரும்பான்மை முஸ்லிம்) வேலை பார்க்கிறார்கள். மத அடிப்படையில் சுன்னி முஸ்லிம்கள் 85 விழுக்காடு, ஷியா பிரிவினர் 13 விழுக்காடு, ஏனையோர் 2 விழுக்காடாகும். சவுதி அரேபியாவின் பரப்பளவு 2.15 மில்லியன் சதுர கிமீ (830,000 சதுர மைல்) ஆகும்.

மிகவும் வறிய நாடாக இருந்த சவுதி அரேபியா கச்சா எண்ணெய் கண்டு பிடிக்கப்பட்ட பின்னர் உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது. நாட்டின் மொத்த ஏற்றுமதி வருமானத்தில் 90 விழுக்காடு கச்சா எண்ணெய் ஏற்றுமதி மூலம் கிடைக்கிறது. 2014 இல் சவுதி அரேபியாவின் மொத்த உள்ளூர் உற்பத்தி 1.61 திரில்லியன் அமெரிக்கா டொலராகும். தனியாள் வருமானம் 52,000 அமெரிக்க டொலராகும்.

சவுதி அரேபியா தனது மொத்த வருமானத்தில் 10 விழுக்காட்டை இராணுவத்துக்கு செலவழிக்கிறது. இராணுவம் 75,000, வான்படை 18,000, வான் பாதுகாப்பு 16,000, கடற்படை 15,500, தேசிய பாதுகாப்பு படையணியில் 75,000 இராணுவத்தினர் 25,000 பழங்குடியினர் என மொத்தம் 224,500 வீரர்கள் இருக்கிறார்கள்.

இராணுவத்துக்கு செலவழிப்பதில் உலகின் முதல் ஐந்து நாடுகளில் (அமெரிக்கா 610 பில்லியன், சீனா 216 பில்லியன், உருசியா 84.5 பில்லியன், சவுதி அரேபியா 80.8 பில்லியன், பிரான்ஸ் 62.3 பில்லியன்) ஒன்றாகும். உலகச் சந்ததையில் கச்சா எண்ணெய் விலை பீப்பா ஒன்றுக்கு 33 அமெரிக்க டொலருக்கு வீழ்ச்சி கண்டுள்ளதால் சவுதி அரேபியா தனது செலவினங்களை வெகுவாகக் குறைத்துள்ளது.

சவுதி அரேபியா ஷியா மதகுரு ஷேக் நிமர் அல் நிமர் உட்பட 47 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றியது அதன் பலத்தை அல்ல அதன் பலவீனத்தைக் வெளிக்காட்டுகிறது என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

மதகுரு ஷேக் நிமர் அல் நிமர் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஷியா பிரிவு முஸ்லிம்கள் அதிகம் வாழும் இரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள சவுதி தூதரகத்தை இரானியர்கள் முற்றுகையிட்டுத் தீயிட்டுக் கொளுத்தினர்.

இந்நிலையில், தூதரகம் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், இரானுடனான இராஜாங்க உறவுகளை துண்டித்துக் கொள்வதாக கடந்த சனவரி 3 ஆம் நாள் (ஞாயிற்றுக்கிழமை) சவுதி அரேபியா அறிவித்தது. இரானில் உள்ள அனைத்து சவுதி தூதரக அதிகாரிகளும் உடனடியாக நாடு திரும்பு மாறு சவுதி கேட்டுக் கொண்டது. அதே சமயம் இரான் நாட்டு தூதரக அதிகாரிகள் சவுதியி இருந்து வெளியேறுவதற்கு 48 மணி நேரம் கெடு விதிக்கப்பட்டது.

இது குறித்து இரான் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் அடெல் அல் ஜுபேர் கூறும்போது,

  
   Bookmark and Share Seithy.com


இமாலயப் பிரகடனம் யாருக்குச் சேவகம் செய்யும்....? Top News
[Friday 2023-12-29 01:00]

இமாலயப் பிரகடனத்தைச் செய்ததன் மூலம், உலகத் தமிழர் பேரவை புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் மத்தியில் பெருமளவுக்குத் தனிமைப்படுத்தப்பட்டு விட்டது. அந்த அமைப்புடன் இணைந்து மகிந்தவைச் சந்தித்த கனேடியத் தமிழ்க் காங்கிரஸின் சில உறுப்பினர்கள் கனடாவில் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றார்கள்.


ஏழ்மையைக் கண்டு ஒதுங்குவதும் துன்பத்தைக் கண்டு விலகுவதும் மனித பண்பல்ல என்றனர் ஆன்றோர். Top News
[Friday 2023-09-29 20:00]

எமது தாயகத்திலே அரவணைப்போர் என்று எவரும் இன்றி அனாதரவாகவும் நிற்கதியாகவும் போரின் வடுக்களுக்களைச் சுமந்தவாறும் பொருளாதார வெறுமையில் சிக்கித் தவித்த வாறும் உடலியல் உழவியல் என்ற வகையிலும் சொல்லொணா உபாதைகளுக்கு உள்ளாகி எவரேனும் மனமிரங்கி கை தூக்க வாராரோ எனும் அங்கலாய்ப்புடனும் ஏக்கங்களுடனும் அன்றாடம் துயருற்றிருக்கும் எம் பிறந்த மண் உடன் பிறப்புக்களோ எண்ணற்றவை.


இலங்கையில் சர்வாதிகார சனாதிபதிக்குப் பதிலாக ஒரு கொடுங்கோலன் நியமனம்!
[Saturday 2022-08-27 08:00]

பல ஆண்டுகளாக எண்பித்துக் காட்டியது போல், தற்போதைய அரசியல்வாதிகளுக்கு, வாக்காளர்கள் மற்றும் நாட்டின் நலனில் அக்கறை இல்லை. எவரும் நாட்டை முதன்மைப் படுத்துவதாகத் தெரியவில்லை. சரியான திட்டமிடல் மற்றும் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும், அதற்கு ஆதரவான சட்டத்தைக் கொண்டு வருவதற்கும் பதிலாக, இளைஞர்கள் மற்றும் வயதான அரசியல்வாதிகள் திட்டமிட்ட முறையில் இன மற்றும் மதப் பிளவுகளையும் குழுக்களுக்குள் விரோதங்களையும் சுயலாபத்திற்காக திசைதிருப்பும் தந்திரோபாயங்களாக ஊக்குவித்தார்கள்.


அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை- நிரந்தர எதிரிகளும் இல்லை! - கனடா நக்கீரன்
[Friday 2022-07-22 22:00]

கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சுக் கொண்டு கொடுக்குமாம். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சனாதிபதி இரணில் விக்கிரமசிங்க அவர்களைப் பொறுத்தளவில் வியாழன் பட்டையிலும் வெள்ளி துலாவிலும் இருக்கின்றன.


13வது திருத்த சட்டம் யாருக்கு தேவை? ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்
[Saturday 2022-01-29 18:00]

மிக அண்மையில் ஓர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற காணோளியை பார்வையிட்டடேன். அதில் ஓரு பேச்சாளர், ‘யார் மக்களின் சமூக பொருளதார நலன்களில் அக்கறை கொண்டவர்களென்ற’வினாவை முன்வைத்து உரையாற்றினார். இவரின் உரையின் பிரகாரம், அரசியல்வாதிகள் என்பவர்கள் தினமும் தமது அடுத்த தேர்தலை பற்றிய சிந்தனை கொண்டவர்ளே தவிர, மக்களின் நலன்களிலோ எதிர்காலத்திலோ அக்கறை கொண்டவர்கள் அல்ல என்ற விடயத்தை முன்வைத்தார்.


‘ரொறோண்டோ சமர்’ | பின்னடி விமர்சனம்!
[Tuesday 2021-11-23 13:00]

கடந்த சனியன்று (நவம்பர் 20) ரொறோண்டோவில் நடைபெற்ற சுமந்திரனெதிர்ப்புப் போராட்டம் இப்போது ஒரு உலக சமாச்சாரம். விடுதலைப் புலி ஆதரவாளர்களையும், பொதுவாக ஈழத்தமிழர் சமூகத்தையும் நகைப்பிற்கிடமாக்கிய இச் சம்பவம் ஒருவகையில் இலங்கையில் அரசியல் தீர்வொன்றுக்காகப் போராடிவரும் சக்திகளுக்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது.


யாழ்-உதயன் பத்திரிகையின் ஞாயிறு பதிப்பில் வெளிவந்த பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது செவ்வி.
[Wednesday 2021-09-22 18:00]

"ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளரின் அறிக்கை ஏமாற்றத்தை தந்துள்ளது." எம்மைப் பொறுத்தவரை விடுதலைப்புலிகள் போர்குற்றம் புரியவில்லை என்பதனை நிருபிக்க நாங்கள் தயாராக இருப்பதோடு, சிறிலங்கா இனப்படுகொலையினை புரிந்த அரசு என்பதனையும் நிருபிக்க தயாராகவுள்ளோம்.”— பிரதமர் வி.உருத்திரகுமாரன்JAFFNA,


இலங்கை தமிழ் வானொலிகளின் இன்றையபோக்கு: -சிறிமதன்
[Thursday 2021-03-18 19:00]

தெற்காசியாவிலேயே மிகவும் புகழ்பெற்ற வானொலி சேவை இலங்கையில் தான் அன்று இருந்தது. தொலைக்காட்சி ஊடகம் தொடங்கப்படாத காலம் அது. வேறு எந்த கேளிக்கை மாசும் மனதில் படியாத வசந்த காலம் அது. அப்போது தமிழ் ரசிகர்கள் மனங்களில் முழுக்க முழுக்க ஆக்கிரமித்திருந்தது இலங்கை வானொலி ஒன்றுதான்.


இன அழிப்பின் உயிர்வாழும் ஆதாரங்கள்
[Monday 2020-10-19 21:00]

வைத்தியர் சி. யமுனானந்தா

செம்மொழி எனப் போற்றப்படும் தமிழ் மொழியின் சொந்தக்காரர்கள் வரலாற்றுக்காலம் முழுவதும் அந்நியரால்அழிக்கப்பட்டு வந்தனர். ஆனால், தமிழ் மொழியின் செழுமையோ அதன் பண்பாட்டுப் பரிமானமோ மாறாது இயற்கை உற்பவம் காத்து வந்தது. அவ்வாறே 2009இல் ஏற்பட்ட அழிவுகளையும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளத் தலைப்பட்டனர்.


முத்தையா முரளிதரனை நாம் அவரது வர்க்க குணாம்சத்தை வைத்தே அளவிட வேண்டும்:
[Sunday 2020-10-18 14:00]

முத்தையா முரளிதரனுடைய வாழ்க்கை வரலாற்றை படமாக்கப்படுவது தொடர்பாகவும் அதில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பது தொடர்பாகவும் கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவரும் வாதப் பிரதிவாதங்களை அவதானித்த பின்னர் சில குறிப்புகளை எழுதலாம் என்று எனக்குத் தோன்றுகிறது.


Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா