கனடாவில் 'கரபிராம் 2017' ஈழம் சாவடி: - தனியார் கம்பெனியாக மாற்றம் பெற்று வருவதாக பலரும் விமர்சனம்! | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
April 23, 2024 [GMT]

கனடாவில் 'கரபிராம் 2017' ஈழம் சாவடி: - தனியார் கம்பெனியாக மாற்றம் பெற்று வருவதாக பலரும் விமர்சனம்!
[Thursday 2017-07-13 11:00]

பிராம்ப்டன் ஈழம் - ஈழம் சாவடி நிகழ்வு தனியார் கம்பெனியாக மாற்றம் பெற்று வருவதாக பலரும் விமர்சிக்கின்றனர் - ஈழத்து தாய்நாட்டின் பெயரால் உள்ளே என்னதான் நடக்கிறது..?? சும்மா பெயருக்கு ஒரு தலைவர் செயலாளர் தடால் புடல் என்று மக்களுக்கு வெளியே காட்டிக்கொண்டு.. உள்ளே தில்லு முள்ளுகள் நிறைந்து.. மமதை பிடித்த அதிகார மாமேதைகலால் கட்டுப் படுத்தப் பட்டு சர்வாதிகார நிலைப் பாட்டில் சுயநல சுயஇலாப நோக்கில் இயக்கப் படுவதே ஈழம் சாவடி நிகழ்வு என விமர்சிக்கப்படுகிறது.. அதில் உண்மைகள் இருப்பதாகவே தெரிகிறது.. - இதை பிராம்ப்டன் வாழ் சமூகநலன் விரும்பிகள் பலரும் நன்கொடையாளர்கள் பலரும் இனப்பற்று மொழிப்பற்று மிக்க ஈழம்சாவாடி செயற்பாட்டாளர்கள் சிலரும் சொல்லி விசனப் படுகிறார்கள்.


  

இந்த ஈழம் சாவடி நிகழ்வை நடாத்தும் குழுவை பின் நின்று கட்டுப் படுத்தும் சிலர் தாம் எடுத்த முடிவுகளுக்கு நிர்வாகத்தில் உள்ள அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்கிற நிலைப் பாட்டில் உள்ளதாகவும் தமது கட்டளைகளுக்கு ஏற்ப்ப இசைந்துகொடுக்கும் நபர்களையே தலைவர்களாகவும் கரும கர்த்தாக்களாகவும் நியமிக்கப்படுகிறார்கள் என்கின்ற வலுவான குற்றச்ச்சாட்டு கடந்த பல வருடங்களாக இருந்துவருகிறது. உள்ளே என்னதான் கூத்து நடக்கிறது???

கடந்த வருடம் பல விடயங்களை சுட்டிக் காட்டி கேட்டபோது - நீங்கள் மஹிந்தவின் ஆக்கள் என சிலர் சீறினர் .. இந்தவருடம் குறை நிறைகளை சொன்னால் நீங்கள் மைத்திரியின் ஆக்கள் என்பார்கள் போலும்.. இப்படியே தொடர ஈழம் சாவடியை அனுமதிக்கமுடியாது என்கின்றனர் இனநலன் விரும்பிகள்.. அநீதிகளும் அநாகரீகங்களும் நிர்வாக சீர்கேடுகளும் எங்குநடந்தாலும் வரிக்கு வரி தட்டிக் கேட்பதில் தான் நீதி பிறக்கும் என்பார்கள்.. அப்படி என்னதான் நமது ஈழம் சாவடி நிகழ்வுகளில் நடை பெறுகிறது என்பதை விரிவான விமர்சனக் கட்டுரை ஒன்றில் பின்னர் பார்க்கலாம்.

2017 ஈழம் சாவடி நிகழ்வு பற்றி வெளியாகிய செய்தி இது - இச் செய்தி ஊடு வரிக்கு வரி பல கேள்விகளும் விமர்சனங்களும் இங்கே தரப்படுகின்றன..

## ஒன்ராரியோவின் பிரம்ரன் நகரில் பல்கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் பல நாடுகளையும் இனங்களையும் உள்ளடக்கிய பிரமாண்டமான கரபிராம் கொண்டாட்டம் இவ்வார இறுதியில் நடைபெறவுள்ளது. பிரம்ரன் தமிழ் ஒன்றியத்தின் பிரதான ஏற்பாட்டில் வருடாந்தம் நடைபெறும் கரபிராம் பல்கலாச்சார விழாவில் ஈழம் சாவடியின் கொண்டாட்டமும், 5 வது தொடர் வருடமாக பெருமெடுப்பில் இடம்பெறவுள்ளது.

முதலாவது வருடம் சிங்களவர்களது பெரும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த ஈழம் சாவடி நிகழ்வை ஒழுங்கமைத்த பலர் இன்று இந்த குழுவில் இல்லை. காரணம் என்ன..?? பொது மனப் பான்மை அற்ற.. போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவி விரிவாக்கம் என்ற சில தொண்டர்களது குறிக்கோளை அப்போது ஏற்க மறுத்த ஈகை மனப் பாம்மை அற்ற சில பின்னணி இயக்குனர்களது செயற்பாடுகளே காரணம்.

## கனடியத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பிரமாண்டமாய் அமையும் ஈழம் சாவடிக்கு இந்த வருடம் மைய ஊடகங்களும் அரசியல் தலைவர்களும் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பல மத்திய மாகாண நகரசபை அரசியல் தலைவர்கள் தமது வாழ்த்துச் செய்திகளை வெளியிட்டுள்ளனர். கரபிராமில் 14 சாவடிகள் மொத்தம் 53 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

கரபிராமில் 14 சாவடிகள் - 14 சாவடிகளில் ஒன்றுதான் நமது ஈழம் சாவாடி - இந்த ஈழம் சாவடியின் பெயரால் வர்த்தகர்களிடம் தாயகத்தில் பாதிக்கப் பட்டோருக்கும் உதவி செய்கிறோம் என்று சொல்லி சேர்க்கப் படும் நிதியில் எத்தனை சதவீதம் தாயக மக்களை சென்றடைகிறது என்கின்ற தொடர் கேவிகளுக்கு ஈழம் சாவடியில் விரிவான விளக்க பத்திரங்களை காட்சிப் படுத்த மறுப்பது ஏன்? ஆடோ.. மாடோ.. கம்ப்யூட்டரே கொடுத்து உதவுவதை அவற்றின் வருடாந்த செலவறீக்கையை மக்களுக்கும் நன்கொடையாளர்களுக்கும் பகிரங்கப்படுத்தலாம் அல்லவா ???

## இதில் கனடியத் தமிழர்களின் தொன்மையான வரலாற்று கலாச்சார பாரம்பரியங்களை ஏனைய மக்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் ஈழம் சாவடி அமைவது மிக்க மகிழ்ச்சி அளிப்பதாகவும், கனடிய பல்கலாச்சார வாழ்வை பிரம்ரன் பல்கலாச்சார விழா பிரதிபலித்து நிற்பதாகவும் வாழ்த்தி மகிழும் இவர்களது பாராட்டுக்களுடன், பல ஆயிரக்கணக்கான மக்களின் வருகைக்காக களம்கட்டி நிற்கிறது கரபிராம் ஈழம் சாவடி 2017.

பல ஆயிரக்கணக்கான மக்களின் வருகை என்பது :- இந்த ஈழம் சாவடி நிகழ்வுக்கான மக்கள் வருகை என்பது கடந்த 4 வருடங்களில் ஒப்பிடுகையில் படு வீழ்ச்சியே கண்டுள்ளது எனலாம்.. காரணம் நிகழ்ச்சி நிரல்களில் குளறுபடிகள் தொடர்தல் - நீதியற்ற முதன்மை படுத்தல்கள் - கலைஞர்கள் நடனப் பள்ளிகள் அனைவர்க்கும் சந்தர்ப்பந்தர மறுத்தல். தட்டி கழித்தல். ஒரு சாராரது நிகழ்வுகளை மட்டும் தொடர்ந்து மேடையேற்றல் - போன்ற விமர்சங்கள் மக்கள் மத்தியில் கடந்த 4 வருடங்களில் பரவியுள்ளதால் மக்கள் வரவு குறைந்து செல்கிறது - பல்லாயிரக் கணக்கான மக்கள் ஈழம் சாவடிக்கு வருகிறார்கள் என்பது வெளி உலகுக்கு சொல்லும் கதையே.

ஒன்ராரியோ எதிர்க்கட்சித் தலைவர் தனது வாழ்த்துச்செய்தியில், ஈழம் சாவடி நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பல்கலாச்சார சமூகத்தில் ஒருவரை ஒருவர் புரிந்து நடந்து கொள்ள இவ்வாறான நிகழ்வுகள் மேலும் வலுச் சேர்ப்பதாகவும், தமிழ் கலை கலாச்சாரங்களை வளமாக்கும் இத்தகைய நிகழ்வுகள் பாராட்டுக்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.

ஒன்ராரியோ எதிர்க்கட்சித் தலைவர்:- தமிழ் மக்கள் எங்கே என்ன நிகழ்வை நடாத்தினாலும் அவர் வாழ்த்தத் தவறியதில்லை - சமூகம்தர தவறியதில்லை.. அவருக்கு தலை சாய்த்த நன்றிகள்.

கலாச்சாரங்களின் சங்கமமாக அமையும் இம்மூன்று நாள் விழாவில் அமையும் 14 கலாச்சார சாவடிகளில் ஒன்றாக ஈழம் சாவடியும் இடம்பெற்றிருப்பது தமிழர்களுக்கு பெருமை சேர்ப்பதாகவும், பிரம்ரன் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு மக்கள் பிரதிநிதிகளும் தெரிவித்துள்ளனர்.

ஈழம் சாவடி யூலை 14ம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரையும், சனி 15ம் நாள் மதியம் 12 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரையும், ஞாயிறு 16ம் நாள் மதியம் 12 மணிமுதல் மாலை 7 மணிவரையும் மக்கள் வருகைக்காக திறந்திருக்கும் என அறியத்தரப்பட்டுள்ளது. உணவுச்சாவடிகள், மலிவு விலை வர்த்தகச் சாவடிகள், தமிழர் பாரம்பரிய கண்காட்சி, தமிழர் கலை நிகழ்வுகள் என ஈழம் சாவடி ஒவ்வொரு நாளும் அனைத்து இன மக்களுக்கும் பெருவிருந்தாக இவ்வாண்டும் அமையவுள்ளதாக அமைப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உணவுச்சாவடிகள், மலிவு விலை வர்த்தகச் சாவடிகள்...:- கடந்த பல வருடங்களாக அமைக்கப்படும் சாவடிகளும் சரி அரங்க நிகழ்வுகளும் சரி - நிர்வாகத்திலுள்ளோரது உறவினர்களுக்கும் வேண்டப்பட்டொருக்குமே முன்னுரிமை கொடுக்கப்பட்டுவருவதாக பேசப் படுகிறதே.. ஈழம் சாவடி என்பது ஈழத்தமிழர்கள் பாராபட்ச்சமின்றி நடாத்தப்படடாலே அது பொதுவான பொதுமக்கள் சாவடியாக அமையும். தவிர தில்லுமுல்லுகள் நிறைந்தால் அது தனியார் கம்பெனி எனவே விமர்சனங்களை தாங்கிச்செல்லும் - மாற்றம் பெறுமா ஈழம்சாவடி..??

பிரம்ரனில் Sandalwood parkway/Dixie Road சந்திப்புக்கு அருகாமையில் 1495 Sandalwood Parkway இல் உள்ள Brampton Soccer Centre இல் பிரமாண்ட அரங்கில் ஈழம் சாவடி அமையவுள்ளதாக அமைப்பாளர்கள் கூறியுள்ளார்.

அமைப்பாளர்கள்!! - யார் இந்த அமைப்பாளர்கள்..? அதிகாரமற்ற மற்றும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண அதிகாரம் இல்லாத ஒரு தலைவர் - உள்ளக முரண்பாடுகளை வெளி ஆட்களுக்கு போட்டுக் கொடுக்கும் சில சுயநலவாதிகள். தமது சுயநலன்களுக்காக அமைப்பை கட்டுப்படுத்தும் - அரசியல்வாதிகளுக்கு குடைபிடிக்கும் சில குள்ளநரிகள்.. இவர்கள்தானா ""அமைப்பு"" ஆளர்கள் ??

அத்துடன், வெள்ளி மாலை முதல் ஞாயிறு வரை தமிழர் சாவடிக்கு மத்திய, மாநில மற்றும் நகரப் பிரதிநிதிகள் பலரும் வரவுள்ளதாகவும் அவர்கள் மேலும் அறியத்தந்துள்ளனர். வெள்ளி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ள உத்தியோகபூர்வ ஆரம்ப விழாவிற்கு பெருமளவில் தமிழ் மக்களை கலந்து சிறப்பிக்குமாறும் அவர்கள் அன்புடன் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஈழத் தமிழர்களுக்கு தனிப்பெருமையைத் தேடித்தரும் 'ஈழம் சாவடி' என்ற பெயரை எப்படியாவது நிராகரித்து விட வேண்டும் என்பதில் எதிரிகள் தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டபோதிலும், 5வது வருடமாக வெற்றியுடன் ஈழம் சாவடி அமையவுள்ளது.

எதிரிகள் தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டபோதிலும்:- ஈழம் சாவடிக்கு கனடாவில் எதிரிகளோ துரோகிகளோ இல்லை எனலாம்.. இந்தநிகழ்வை நடாத்தும் குழுவை பின் நின்று கட்டுப் படுத்தும் சிலரே அதன் விரோதிகள் எனலாம்.. -

ஈழத் தமிழர்களுக்கு தனிப்பெருமையைத் தேடித்தரும் 'ஈழம் சாவடி' :- ஈழத் தமிழர்களுக்கு தனிப்பெருமையைத் தேடித்தரும் 'ஈழம் சாவடி நிர்வாகத்தை பின்னின்று இயக்கும் சுயநல வாதிகள் அகற்றப் பட்டு - வெளியே தமக்குள்ள முரண்பாடுகளை பிரச்சனைகளை ஈழம் சாவடிக்குள் இழுத்துவந்து பகைமை தொடுத்து பழிவாங்கும் அநாகரீக செயல்களை அரங்கேற்றும் நபர்கள் வெளியேற்றப் பட்டு அல்லது சீர்திருத்தப் பட்டு ஈழம் சாவடி நிர்வாகம் தூய்மைப்படுத்தப் படவேண்டும். இவை கருத்தில் எடுக்கப்டு போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவி என்பதை விரிவுபடுத்தினால் மட்டுமே ஈழம் சாவடி நிகழ்வு வெற்றிநடை போடும் என்பது வெளிப்படை.. இதை நன்கொடையாளர்களும் கவனத்தில் எடுப்பது அவசியம்.

## இந்தியாவுக்கென ஒரு சாவடி அமைக்கப்படும் அதேவேளை சீக்கியர்கள் தமக்கென ஒரு தனியான சாவடி அமைப்பதை உதாரணம் காட்டி, ஈழம் சாவடியை நீக்குமாறு மீண்டும் எதிரிகள் போர்க்கொடி எழுப்பிய போதிலும், தடைகளைத் தாண்டி இவ்வருடமும் ஈழம் சாவடி களம் காண்கிறது.

எதிரிகள் போர்க்கொடி எழுப்பிய போதிலும்..:- ஈழம் சாவடிக்கு கனடாவில் எதிரிகளா..?? ஈழத்து தாய் நாட்டின் பெயரால் நடாத்தப்படும் நிகழ்வே ஈழம்சாவடியாகும். இந்த ஈழம் சாவடி நிகழ்வுக்கு என பெறப்படும் நிதியுதவிகள் நன்கொடைகள் எல்லாமே தாயகத்தில் போரால் பாதிக்கப்பட்டொருக்கும் உதவி என சொல்லப்பட்டு பெறப்படுகிறதே..! அந்த உதவிகளை செவ்வனே செய்யுங்கள் என உள்ளிருந்து அல்லது வெளியில் இருந்து கேட்டால் அவர்கள் எதிரிகளா ?? துரோகிகளா?? அல்லது அவ்வாறான இன நலன் விரும்பிகளது கருத்துக்களுக்கு மதிப்பளித்து விமர்சனங்களை தாங்கிவரும் ஊடகங்கள் துரோகிகளா?? ஈழம் சாவடிக்கு கனடாவில் எதிரிகளோ துரோகிகளோ இல்லை எனலாம்.. இந்தநிகழ்வை நடாத்தும் குழுவை பின் நின்று கட்டுப் படுத்தும் சுயநலவாதிகள் ஒருசிலரே அதன் விரோதிகள் எனலாம்..

பொம்மலாட்ட போடுதடி நிர்வாகங்களை அமைத்துவைத்துக் கொண்டு பாதிக்கப் பட்ட மக்களுக்கும் உதவுகிறோம் என்று கூறிக்கொண்டு ஈழம்சாவாடிக்கு என ஈழத்தமிழர் பெயரால் சேர்க்கப்படும் நிதி மக்களை சென்றடையவேண்டும்.

ஹவாய் சாவடி, பிலிப்பைன்ஸ் சாவடி இந்திய சாவடி, லத்தீன் அமெரிக்க சாவடி போன்ற பலவற்றோடு, ஈழம் சாவடியும் பல சுவையான உணவுகளையும் பண்பாட்டு கலை நிகழ்வுகளையும் சுவைபட வழங்கத் தயாராகி வருகின்றது. மேலும், கரபிராம் பல்கலாச்சார விழாவில் சந்திப்போம் என உரிமையுடன் தமிழ் உறவுகளுக்கு அழைப்பு விடுக்கின்றனர் என பிரம்ரன் தமிழ் ஒன்றியத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

ஹவாய் சாவடி, பிலிப்பைன்ஸ் சாவடி இந்திய சாவடி, லத்தீன் அமெரிக்க சாவடி போன்ற சாவடிகள் :- மேற்படி சாவடிகளோடு சுயநலக் காவடி - அதிகாரக் காவடி - பழிவாங்கும் காவடிகளை எடுத்து தாளம் தப்பி ஆடும் சில சுயநலவாதிகள் ஈழம் சாவடி நிர்வாகத்தில் இருப்பது தமிழ் இனத்துக்கே இழுக்கு..

சும்மா பெயருக்கு ஒரு தலைவர் செயலாளர் தடால் புடல் என்று மக்களுக்கு வெளியே காட்டிக்கொண்டு.. உள்ளே தில்லு முள்ளுகள் நிறைந்து.. தெரு ரவுடிகளால் கட்டுப் படுத்தப் பட்டு சர்வாதிகார நிலைப் பாட்டில் சுயநல - சுயஇலாப நோக்கில் இயக்கப் படுவதே ஈழம் சாவடி நிகழ்வு என பேசப் படுகிறது.. அதில் உண்மைகள் இருப்பதாகவே தெரிகிறது.. - இதை பிராம்ப்டன் வாழ் சமூகநலன் விரும்பிகள் பலரும் நன்கொடையாளர்கள் பலரும் சொல்லி விசனப் படுகிறார்கள் - இந்தநிகழ்வை நடாத்தும் குழுவை பின் நின்று கட்டுப் படுத்தும் சிலர் சுயநலப் போக்கோடு நடப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது. உள்ளே என்னதான் கூத்து நடக்கிறது..?

ஈழம் சாவடி நிகழ்வு பற்றிய விமர்சனத்துடன் பிராம்ப்டன் வாழ் இனநலன் விரும்பிகள்

  
   Bookmark and Share Seithy.com


இமாலயப் பிரகடனம் யாருக்குச் சேவகம் செய்யும்....? Top News
[Friday 2023-12-29 01:00]

இமாலயப் பிரகடனத்தைச் செய்ததன் மூலம், உலகத் தமிழர் பேரவை புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் மத்தியில் பெருமளவுக்குத் தனிமைப்படுத்தப்பட்டு விட்டது. அந்த அமைப்புடன் இணைந்து மகிந்தவைச் சந்தித்த கனேடியத் தமிழ்க் காங்கிரஸின் சில உறுப்பினர்கள் கனடாவில் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றார்கள்.


ஏழ்மையைக் கண்டு ஒதுங்குவதும் துன்பத்தைக் கண்டு விலகுவதும் மனித பண்பல்ல என்றனர் ஆன்றோர். Top News
[Friday 2023-09-29 20:00]

எமது தாயகத்திலே அரவணைப்போர் என்று எவரும் இன்றி அனாதரவாகவும் நிற்கதியாகவும் போரின் வடுக்களுக்களைச் சுமந்தவாறும் பொருளாதார வெறுமையில் சிக்கித் தவித்த வாறும் உடலியல் உழவியல் என்ற வகையிலும் சொல்லொணா உபாதைகளுக்கு உள்ளாகி எவரேனும் மனமிரங்கி கை தூக்க வாராரோ எனும் அங்கலாய்ப்புடனும் ஏக்கங்களுடனும் அன்றாடம் துயருற்றிருக்கும் எம் பிறந்த மண் உடன் பிறப்புக்களோ எண்ணற்றவை.


இலங்கையில் சர்வாதிகார சனாதிபதிக்குப் பதிலாக ஒரு கொடுங்கோலன் நியமனம்!
[Saturday 2022-08-27 08:00]

பல ஆண்டுகளாக எண்பித்துக் காட்டியது போல், தற்போதைய அரசியல்வாதிகளுக்கு, வாக்காளர்கள் மற்றும் நாட்டின் நலனில் அக்கறை இல்லை. எவரும் நாட்டை முதன்மைப் படுத்துவதாகத் தெரியவில்லை. சரியான திட்டமிடல் மற்றும் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும், அதற்கு ஆதரவான சட்டத்தைக் கொண்டு வருவதற்கும் பதிலாக, இளைஞர்கள் மற்றும் வயதான அரசியல்வாதிகள் திட்டமிட்ட முறையில் இன மற்றும் மதப் பிளவுகளையும் குழுக்களுக்குள் விரோதங்களையும் சுயலாபத்திற்காக திசைதிருப்பும் தந்திரோபாயங்களாக ஊக்குவித்தார்கள்.


அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை- நிரந்தர எதிரிகளும் இல்லை! - கனடா நக்கீரன்
[Friday 2022-07-22 22:00]

கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சுக் கொண்டு கொடுக்குமாம். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சனாதிபதி இரணில் விக்கிரமசிங்க அவர்களைப் பொறுத்தளவில் வியாழன் பட்டையிலும் வெள்ளி துலாவிலும் இருக்கின்றன.


13வது திருத்த சட்டம் யாருக்கு தேவை? ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்
[Saturday 2022-01-29 18:00]

மிக அண்மையில் ஓர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற காணோளியை பார்வையிட்டடேன். அதில் ஓரு பேச்சாளர், ‘யார் மக்களின் சமூக பொருளதார நலன்களில் அக்கறை கொண்டவர்களென்ற’வினாவை முன்வைத்து உரையாற்றினார். இவரின் உரையின் பிரகாரம், அரசியல்வாதிகள் என்பவர்கள் தினமும் தமது அடுத்த தேர்தலை பற்றிய சிந்தனை கொண்டவர்ளே தவிர, மக்களின் நலன்களிலோ எதிர்காலத்திலோ அக்கறை கொண்டவர்கள் அல்ல என்ற விடயத்தை முன்வைத்தார்.


‘ரொறோண்டோ சமர்’ | பின்னடி விமர்சனம்!
[Tuesday 2021-11-23 13:00]

கடந்த சனியன்று (நவம்பர் 20) ரொறோண்டோவில் நடைபெற்ற சுமந்திரனெதிர்ப்புப் போராட்டம் இப்போது ஒரு உலக சமாச்சாரம். விடுதலைப் புலி ஆதரவாளர்களையும், பொதுவாக ஈழத்தமிழர் சமூகத்தையும் நகைப்பிற்கிடமாக்கிய இச் சம்பவம் ஒருவகையில் இலங்கையில் அரசியல் தீர்வொன்றுக்காகப் போராடிவரும் சக்திகளுக்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது.


யாழ்-உதயன் பத்திரிகையின் ஞாயிறு பதிப்பில் வெளிவந்த பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது செவ்வி.
[Wednesday 2021-09-22 18:00]

"ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளரின் அறிக்கை ஏமாற்றத்தை தந்துள்ளது." எம்மைப் பொறுத்தவரை விடுதலைப்புலிகள் போர்குற்றம் புரியவில்லை என்பதனை நிருபிக்க நாங்கள் தயாராக இருப்பதோடு, சிறிலங்கா இனப்படுகொலையினை புரிந்த அரசு என்பதனையும் நிருபிக்க தயாராகவுள்ளோம்.”— பிரதமர் வி.உருத்திரகுமாரன்JAFFNA,


இலங்கை தமிழ் வானொலிகளின் இன்றையபோக்கு: -சிறிமதன்
[Thursday 2021-03-18 19:00]

தெற்காசியாவிலேயே மிகவும் புகழ்பெற்ற வானொலி சேவை இலங்கையில் தான் அன்று இருந்தது. தொலைக்காட்சி ஊடகம் தொடங்கப்படாத காலம் அது. வேறு எந்த கேளிக்கை மாசும் மனதில் படியாத வசந்த காலம் அது. அப்போது தமிழ் ரசிகர்கள் மனங்களில் முழுக்க முழுக்க ஆக்கிரமித்திருந்தது இலங்கை வானொலி ஒன்றுதான்.


இன அழிப்பின் உயிர்வாழும் ஆதாரங்கள்
[Monday 2020-10-19 21:00]

வைத்தியர் சி. யமுனானந்தா

செம்மொழி எனப் போற்றப்படும் தமிழ் மொழியின் சொந்தக்காரர்கள் வரலாற்றுக்காலம் முழுவதும் அந்நியரால்அழிக்கப்பட்டு வந்தனர். ஆனால், தமிழ் மொழியின் செழுமையோ அதன் பண்பாட்டுப் பரிமானமோ மாறாது இயற்கை உற்பவம் காத்து வந்தது. அவ்வாறே 2009இல் ஏற்பட்ட அழிவுகளையும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளத் தலைப்பட்டனர்.


முத்தையா முரளிதரனை நாம் அவரது வர்க்க குணாம்சத்தை வைத்தே அளவிட வேண்டும்:
[Sunday 2020-10-18 14:00]

முத்தையா முரளிதரனுடைய வாழ்க்கை வரலாற்றை படமாக்கப்படுவது தொடர்பாகவும் அதில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பது தொடர்பாகவும் கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவரும் வாதப் பிரதிவாதங்களை அவதானித்த பின்னர் சில குறிப்புகளை எழுதலாம் என்று எனக்குத் தோன்றுகிறது.


NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா