கனேடிய தமிழர் மரபுரிமை மாதமும், மரபுரிமை குழுவினரது கொடி திணிப்பும். - மக்களது விமர்சனம் | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
April 20, 2024 [GMT]

கனேடிய தமிழர் மரபுரிமை மாதமும், மரபுரிமை குழுவினரது கொடி திணிப்பும். - மக்களது விமர்சனம் Top News
[Wednesday 2018-01-17 18:00]

கடந்த 16ம் திகதி அவசர ஆந்தரமாக ஆரவாரமின்றி முறைக்கு மாறாக Canadian Tamil Heritage Society வெளிவிட்ட தமிழர் மரபுரிமை கொடியும் அதனது வடிவமைப்பில் உள்ள குறைபாடுகளும் உள்ளடங்கி சமூக நலன் விரும்பிகளது பல்வேறுபட்ட எடுத்தியம்பல்களுடன் சர்வதேச தமிழர்களது பார்வைக்காக கீழ்வரும் விமர்சன வரைபு தரப்படுகிறது. இந்த வரைபு முற்றிலும் சமூகநலன் சார்ந்த கருத்துக்களே தவிர வேறு எந்த நோக்கங்களும் கொண்டதல்ல என்பதை கூறி விடயத்துக்கு வருகிறோம்.


  

நீங்கள் வடிவமைத்துள்ள இந்த Canadian Tamil Heritage கொடியில் நிறையவே குறைபாடுகள் உள்ளது.. இக்கொடியை வடிவமைப்பது Canadian Tamil Heritage Society யினது தனிப்பட்ட வேலையல்ல பொதுவாக பகிரங்க அறிவித்தல் செய்து எமது சமூகத்திலுள்ள திறமை வாய்ந்த கலை வல்லுனர்களது கொடி வடிவமைப்புகளை பெற்று அவற்றுள் ஒன்றை தெரிவு செய்து சமூகத்தினுடைய வரலாற்று ரீதியிலான பாவனைக்கு விடவேண்டும்.

அதுவும் பகிரங்க கூட்டமொன்றில் ஊடகங்கள் முன்னிலையில் பொதுமக்கள் முன்னிலையில் சிறப்புற வெளியிடவேண்டும். Canadian Tamil Heritage கொடியில் நீங்கள் முக்கியத்துவம் கொடுக்கவேண்டியது பறை மேளத்துக்கோ அல்லது நீங்கள் கூறும் முரசு வாத்திய கருவியே அல்ல - மாறாக தை மாதம் முழுவதும் பல பிரதேசங்களிலும் ஏற்றப்படவுள்ள இவ் வரலாறுக்கொடியில் தைப்பொங்கலோடு சம்பந்தப்பட்ட குறியீடுகளில் ஒன்றை அல்லது போதுவாக வள்ளுவர் பெருமானாரது உருவம் கொடியின் நடுவில் நிலை நிறுத்தப் படவேண்டும் என்பது சமூகத்திலுள்ள பலரது சுட்டிக் காடுத்தலாகவும். வேண்டுதலாகவும் உள்ளது.

அனைத்தும் நிறைந்து இப்படியும் வடிவமைக்கலாம் வேறு வேறு விதமாகவும் உயிரோட்டமாக வடிவமைக்கலாம்.

தை முதலாம் திகதி அதாவது ஜனவரி 1 ஆரம்பமாகும் Canadian Tamil Heritage நிகழ்வுகள் பல நடைபெற்றுள்ள நிலையில் நீங்கள் ஜனவரி 16ம் திகதி இக்கொடியை இரகசியமாக மக்கள் மத்தியில் திணிப்பதன் நோக்கம் என்ன? Canadian Tamil Heritage Society எனப்படும் நீங்கள் ஒளித்துப் பிடித்து விளையாடும் சிறுபிள்ளைத்தனமல்ல Canadian Tamil Heritage நிகழ்வுகளும் அதுசார்ந்த வரலாற்று பாதை வகுப்புகளும் என்பதை முதலில் நினைவில் கொள்ளுங்கள். தவறுகளையும் குறை நிறைகளையும் சுட்டிக் காட்டவேண்டியது சமூக அக்கறையுள்ள ஊடகங்களதும் சமூக நலன் சார்ந்து வாழும் ஒவ்வொரு தனி மனிதனதும் கடமையாகும்.

பொதுவான அமைப்புகளில் தற்காலிக பதவிகளில் உள்ள உங்களில் சிலர் தமது பதவிக் காலத்தில் உங்களது பெயர் புகழுக்காக அவசர அந்தரப்பட்டு எதையாவது செய்துவிட்டுப்போக நினைக்கிறீர்கள். அது பொதுவான ஆசைதான் ஆனாலும் பொதுப்பணி என்ற பெயரில் நீங்கள் முறை தவறிச் செய்யும் சில வரலாறு சார்ந்த சேவைகள் எமது எதிர்காலச் சந்ததியினரது. வரலாறு பற்றிய அறிதலை மாற்றியமைத்து எமது பாரம்பரிய வரலாறு மாறுபட்டு போகுமென்பதை உணருங்கள்.

இக்கொடி வடிவமைப்பில் தமிழை கற்றுக்கொடுக்கும் தமிழ் பாடசாலை ( சர்வதேச ரீதியாக கிளைகளைக்கொண்டது) ஒன்றின் ஆசிரியர்கள் உள்ளடங்கலாக ஒருசில மேலதிகாரிகளும் சம்பந்தப்பட்டுள்ளதாக அறிகிறோம். உங்களில் பல ஆசிரியர்களுக்கும் உங்களிடம் கல்விகற்று முதன்மை மாணவர்களாக வெளியேறி ஏனைய சிறார் மாணவர்களை வளி நடாத்தும் சில மாணவர்களுக்கும் இந்த Tamil Heritage நிகழ்வுகளில் காடசிப் படுத்தப் படும் பொங்கல் விழாவோடு சம்பந்தப்பட்ட பாத்திரப் பொருட்களுள் உள்ள அகப்பைக்கும் மோர் கடையும் மத்துக்கும் வித்தியாசம் தெரியவில்லை.

பொங்கல் பானையோடு அகப்பைக்கு பதில் மத்தை வைத்து வரலாறு கற்ப்பிக்கும் எமது சமூகத்துக்கு வரலாற்று பதிவாக்கப் படவேண்டிய பொதுக்கொடி ஒற்றை தயாரிக்கும் முறையை தகுதிவாய்ந்த வல்லுநர்கள் வடிவமைப்பாளர்களிடமிருந்து பெற்று அதில் ஒன்றை ஏன் தெரிவு செய்யக் கூடாது? அவ்வாறு தெரிவு செய்யப்பட்டும் கொடியை முறைப்படி நீங்கள் ஏன் வெளியிட்டு அங்குரார்ப்பணம் செய்து மக்களிடம் அறிமுகப்படுத்தக் கூடாது? இவை அனைத்துக்கும் மாறாக அவசர அவசரமாக முறைதவறி Canadian Tamil Heritage Society என்ற பெயரில் உங்களுக்கு விரும்பிய இடங்களில் மட்டும் காலம் தாழ்த்தி இக்கொடியை ஏற்றவிளைந்ததன் நோக்கம் என்ன? கொடி பற்றிய சர்ச்சை 2016ல் முதலில் எழுந்தது.. மீண்டும் மறு வடிவமைப்பில் 2018 தை 16ம் திகதி கொடியின் மாதிரி வரைபு வெளிவந்தபோது எழுந்த கேள்விகளுக்கு பதிலளிக்கு முகமாக - இந்தக் கொடியில் நடுவில் இருப்பது வீரத்தை பறை சாற்றும் முரசு என கூறி கவி எழுதும் ஒருவரை பிடித்து அதிலுள்ள ஏட்டுச் சுவடுக்கும் முரசுக்கும் உலக வரை படத்துக்கும் அதன் நிறத்துக்கும் விளக்க கோவை வேறு எழுதியுள்ளீர்கள். கொடியில் நடுவில் இருப்பது முரசுதானா என பாருங்கள்.. அது முரசே கிடையாது. முரசின் தோற்றமும் கிடையாது..

தமிழர் மரபுரிமை கொடிக்கு தகுதியானது எது??

சமூகத்திலிருந்து எழும் கேள்விகளுக்கும் கோரிக்கைகளுக்கும் வெளிப்படையான பதிலளிக்க விளக்கமளிக்க முடியாத நீங்கள் இந்த வரலாறு சார்ந்த கட்டமைப்புகளில் இருந்துகொண்டு உங்களது மறுபக்கங்களை சிலர் திரும்பிப் பார்ப்பது நல்லது.

அதைவிடுத்து உங்களை நோக்கி பொதுநலன் சார்ந்து கேள்விகளை கேட்ப்போரையும் விளக்கம் கேட்ப்போரையும் - அவர் தேசியத்துக்கு எதிரானவர்போல கிடக்குது.. அவர் இப்ப பக்கம் மாறிவிட்டார் போலகிடக்குது. துரோகம் செய்கிறாற்போல கிடக்குது என்று பல்லவி கூறி நீங்கள் செய்யும் காரியங்களை நியாயப் படுத்திவிட்டு போகலாம் என தயவுசெய்து எண்ணாதீர்கள்.

இந்தக் கொடி முறைப்படி மறு சீரமைப்பு செய்யப்பட்டு தை மரபுத்திங்கள் பொங்கல் விழா சார்ந்த சின்னங்கள் தாங்கி தை மாத மரபு தாங்கி வராத வரையில் முழுமனதோடு தொன்மை போற்றும் தமிழர்களால் அங்கீகரிக்கப்படாது என்பது கவலைதரும் விடயமே. சர்வதேச அளவில் இதை நீங்கள் நடைமுறைப்படுத்துவதென்பது. சாத்தியமல்ல என பலரும் கருத்துக்களை கூறிவருவது நாமறிந்ததே. காலம் பதில் சொல்லும் பொறுத்திருந்து பார்ப்போம்.

தமிழர் சமூக நலன் விரும்பிகள்.

கனடா.

  
   Bookmark and Share Seithy.com


இமாலயப் பிரகடனம் யாருக்குச் சேவகம் செய்யும்....? Top News
[Friday 2023-12-29 01:00]

இமாலயப் பிரகடனத்தைச் செய்ததன் மூலம், உலகத் தமிழர் பேரவை புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் மத்தியில் பெருமளவுக்குத் தனிமைப்படுத்தப்பட்டு விட்டது. அந்த அமைப்புடன் இணைந்து மகிந்தவைச் சந்தித்த கனேடியத் தமிழ்க் காங்கிரஸின் சில உறுப்பினர்கள் கனடாவில் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றார்கள்.


ஏழ்மையைக் கண்டு ஒதுங்குவதும் துன்பத்தைக் கண்டு விலகுவதும் மனித பண்பல்ல என்றனர் ஆன்றோர். Top News
[Friday 2023-09-29 20:00]

எமது தாயகத்திலே அரவணைப்போர் என்று எவரும் இன்றி அனாதரவாகவும் நிற்கதியாகவும் போரின் வடுக்களுக்களைச் சுமந்தவாறும் பொருளாதார வெறுமையில் சிக்கித் தவித்த வாறும் உடலியல் உழவியல் என்ற வகையிலும் சொல்லொணா உபாதைகளுக்கு உள்ளாகி எவரேனும் மனமிரங்கி கை தூக்க வாராரோ எனும் அங்கலாய்ப்புடனும் ஏக்கங்களுடனும் அன்றாடம் துயருற்றிருக்கும் எம் பிறந்த மண் உடன் பிறப்புக்களோ எண்ணற்றவை.


இலங்கையில் சர்வாதிகார சனாதிபதிக்குப் பதிலாக ஒரு கொடுங்கோலன் நியமனம்!
[Saturday 2022-08-27 08:00]

பல ஆண்டுகளாக எண்பித்துக் காட்டியது போல், தற்போதைய அரசியல்வாதிகளுக்கு, வாக்காளர்கள் மற்றும் நாட்டின் நலனில் அக்கறை இல்லை. எவரும் நாட்டை முதன்மைப் படுத்துவதாகத் தெரியவில்லை. சரியான திட்டமிடல் மற்றும் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும், அதற்கு ஆதரவான சட்டத்தைக் கொண்டு வருவதற்கும் பதிலாக, இளைஞர்கள் மற்றும் வயதான அரசியல்வாதிகள் திட்டமிட்ட முறையில் இன மற்றும் மதப் பிளவுகளையும் குழுக்களுக்குள் விரோதங்களையும் சுயலாபத்திற்காக திசைதிருப்பும் தந்திரோபாயங்களாக ஊக்குவித்தார்கள்.


அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை- நிரந்தர எதிரிகளும் இல்லை! - கனடா நக்கீரன்
[Friday 2022-07-22 22:00]

கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சுக் கொண்டு கொடுக்குமாம். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சனாதிபதி இரணில் விக்கிரமசிங்க அவர்களைப் பொறுத்தளவில் வியாழன் பட்டையிலும் வெள்ளி துலாவிலும் இருக்கின்றன.


13வது திருத்த சட்டம் யாருக்கு தேவை? ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்
[Saturday 2022-01-29 18:00]

மிக அண்மையில் ஓர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற காணோளியை பார்வையிட்டடேன். அதில் ஓரு பேச்சாளர், ‘யார் மக்களின் சமூக பொருளதார நலன்களில் அக்கறை கொண்டவர்களென்ற’வினாவை முன்வைத்து உரையாற்றினார். இவரின் உரையின் பிரகாரம், அரசியல்வாதிகள் என்பவர்கள் தினமும் தமது அடுத்த தேர்தலை பற்றிய சிந்தனை கொண்டவர்ளே தவிர, மக்களின் நலன்களிலோ எதிர்காலத்திலோ அக்கறை கொண்டவர்கள் அல்ல என்ற விடயத்தை முன்வைத்தார்.


‘ரொறோண்டோ சமர்’ | பின்னடி விமர்சனம்!
[Tuesday 2021-11-23 13:00]

கடந்த சனியன்று (நவம்பர் 20) ரொறோண்டோவில் நடைபெற்ற சுமந்திரனெதிர்ப்புப் போராட்டம் இப்போது ஒரு உலக சமாச்சாரம். விடுதலைப் புலி ஆதரவாளர்களையும், பொதுவாக ஈழத்தமிழர் சமூகத்தையும் நகைப்பிற்கிடமாக்கிய இச் சம்பவம் ஒருவகையில் இலங்கையில் அரசியல் தீர்வொன்றுக்காகப் போராடிவரும் சக்திகளுக்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது.


யாழ்-உதயன் பத்திரிகையின் ஞாயிறு பதிப்பில் வெளிவந்த பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது செவ்வி.
[Wednesday 2021-09-22 18:00]

"ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளரின் அறிக்கை ஏமாற்றத்தை தந்துள்ளது." எம்மைப் பொறுத்தவரை விடுதலைப்புலிகள் போர்குற்றம் புரியவில்லை என்பதனை நிருபிக்க நாங்கள் தயாராக இருப்பதோடு, சிறிலங்கா இனப்படுகொலையினை புரிந்த அரசு என்பதனையும் நிருபிக்க தயாராகவுள்ளோம்.”— பிரதமர் வி.உருத்திரகுமாரன்JAFFNA,


இலங்கை தமிழ் வானொலிகளின் இன்றையபோக்கு: -சிறிமதன்
[Thursday 2021-03-18 19:00]

தெற்காசியாவிலேயே மிகவும் புகழ்பெற்ற வானொலி சேவை இலங்கையில் தான் அன்று இருந்தது. தொலைக்காட்சி ஊடகம் தொடங்கப்படாத காலம் அது. வேறு எந்த கேளிக்கை மாசும் மனதில் படியாத வசந்த காலம் அது. அப்போது தமிழ் ரசிகர்கள் மனங்களில் முழுக்க முழுக்க ஆக்கிரமித்திருந்தது இலங்கை வானொலி ஒன்றுதான்.


இன அழிப்பின் உயிர்வாழும் ஆதாரங்கள்
[Monday 2020-10-19 21:00]

வைத்தியர் சி. யமுனானந்தா

செம்மொழி எனப் போற்றப்படும் தமிழ் மொழியின் சொந்தக்காரர்கள் வரலாற்றுக்காலம் முழுவதும் அந்நியரால்அழிக்கப்பட்டு வந்தனர். ஆனால், தமிழ் மொழியின் செழுமையோ அதன் பண்பாட்டுப் பரிமானமோ மாறாது இயற்கை உற்பவம் காத்து வந்தது. அவ்வாறே 2009இல் ஏற்பட்ட அழிவுகளையும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளத் தலைப்பட்டனர்.


முத்தையா முரளிதரனை நாம் அவரது வர்க்க குணாம்சத்தை வைத்தே அளவிட வேண்டும்:
[Sunday 2020-10-18 14:00]

முத்தையா முரளிதரனுடைய வாழ்க்கை வரலாற்றை படமாக்கப்படுவது தொடர்பாகவும் அதில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பது தொடர்பாகவும் கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவரும் வாதப் பிரதிவாதங்களை அவதானித்த பின்னர் சில குறிப்புகளை எழுதலாம் என்று எனக்குத் தோன்றுகிறது.


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா