Untitled Document
April 25, 2024 [GMT]
கணவரை ஆச்சரியப்படுத்த தன் திருமணத்துக்கு ஹெலிகாப்டரில் வந்த மணமகள் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பலி!
[Tuesday 2016-12-06 01:00]

தன் வருங்கால கணவரை ஆச்சரியப்படுத்தும் நோக்கில் தன் திருமணத்துக்கு ஹெலிகாப்டரில் வந்த மணமகள் அந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டை சேர்ந்தவர் Udirley Damasceno, இவருக்கும் Rosemere do Nascimento Silva (32) என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. திருமண நாளில் தனது வருங்கால கணவர் Udirleyவுக்கும், அவரின் உறவினர்களுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்க Rosemere ஒரு விடயத்தை செய்ய நினைத்தார். அதன் படி நான்கு பேர் பயணிக்கும் ஒரு ஹெலிகாப்டரில் திருமணம் நடைபெறும் இடத்துக்கு போக முடிவு செய்தார்.

தன் வருங்கால கணவரை ஆச்சரியப்படுத்தும் நோக்கில் தன் திருமணத்துக்கு ஹெலிகாப்டரில் வந்த மணமகள் அந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டை சேர்ந்தவர் Udirley Damasceno, இவருக்கும் Rosemere do Nascimento Silva (32) என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. திருமண நாளில் தனது வருங்கால கணவர் Udirleyவுக்கும், அவரின் உறவினர்களுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்க Rosemere ஒரு விடயத்தை செய்ய நினைத்தார். அதன் படி நான்கு பேர் பயணிக்கும் ஒரு ஹெலிகாப்டரில் திருமணம் நடைபெறும் இடத்துக்கு போக முடிவு செய்தார்.

  

அதன் படி Rosemere அவர் சகோதரர் Peterson மற்றும் அவரின் குடும்ப நண்பரும் சேர்ந்து ஹெலிகாப்டரில் பயணிக்க தயாரானார்கள், ஹெலிகாப்டரை Peterson இயக்கினார். வானில் போய் கொண்டிருந்த ஹெலிகாப்டரானது பைலட் கட்டுப்பாட்டை இழந்து திடீரென கீழே விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே மணமகள் Rosemere உட்பட அனைவரும் உயிரிழந்தார்கள்.

இந்த விபத்து குறித்து பொலிசார் கூறுகையில், ஹெலிகாப்டர் வானில் போய் கொண்டிருக்கும் போது மழை பெய்துள்ளது. இதனால் செய்வதறியாது திகைத்த பைலட் மரத்தில் மோதியதால் இந்த விபத்து நேர்ந்திருக்கும் என தாங்கள் கருதுவதாக கூறியுள்ளனர். எனினும் தடயவியல் நிபுணர்கள் பரிசோதனை செய்த பின்னரே விபத்துக்கான சரியான காரணம் வெளியில் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.com



பிரித்தானியாவுக்குள்ளிருந்து வேறொரு நாட்டுக்குள் பெருமளவில் நுழையும் புகலிடக்கோரிக்கையாளர்கள்!
[Thursday 2024-04-25 18:00]

பிரித்தானியா புலம்பெயர்ந்தோரையும் புகலிடக்கோரிக்கையாளர்களையும் ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவுக்கு நாடுகடத்த தீவிரமாக திட்டமிட்டுவரும் நிலையில், பிரித்தானியாவுக்குளிருந்து புகலிடக்கோரிகையாளர்கள் அயர்லாந்துக் குடியரசுக்குள் நுழைந்துவருவதாக அந்நாட்டின் நீதித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.



"ஆயுதங்களை கைவிட தயார்" - இரண்டு நிபந்தனைகள் முன்வைத்த ஹமாஸ் படைகள்!
[Thursday 2024-04-25 18:00]

பாலஸ்தீனிய ஹமாஸ் படைகள் இஸ்ரேலுடன் ஐந்து வருடங்கள் அல்லது அதற்கும் மேலான போர்நிறுத்தத்திற்கு உடன்படத் தயாராக உள்ளது என்று அந்த குழுவினரின் மூத்தல் அரசியல் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். 1967 க்கு முந்தைய எல்லைகளுடன் ஒரு சுதந்திர பாலஸ்தீனிய அரசு நிறுவப்பட்டால் ஆயுதங்களைக் கைவிடவும் அரசியல் கட்சியாகவும் மாற ஹமாஸ் படைகள் தயார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



பண்டைய கால விசித்திர விலங்கை பார்த்த கனடிய குடும்பம்?
[Thursday 2024-04-25 18:00]

பண்டைய கால புராணங்களில் குறிப்பிடப்படம் விசித்திர விலங்கு ஒன்றை கண்டதாக கனடிய தம்பதியினர் தெரிவிக்கின்றனர். இராட்சத விலங்கினமாக கருதப்படும் லோச் நெஸ் எனப்படும் விலங்கு ஒன்றை கண்டதாக கனடாவைச் சேர்ந்த பெரி பால்ம் மற்றும் செனன் வைஸ்மேன் ஆகியோரே இவ்வாறு குறித்த விசித்திர விலங்கினை கண்டதாக தெரிவிக்கின்றனர்.



அமெரிக்காவை தொடர்ந்து அவுஸ்திரேலியாவிலும் வெடித்த போராட்டம்!
[Thursday 2024-04-25 18:00]

அமெரிக்க பல்கலைகழகங்களில் பாலஸ்தீன ஆதரவு மாணவர்கள் போராட்டங்களை நடத்திவரும் நிலையில் அவுஸ்திரேலிய மாணவர்களும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அமெரிக்க பல்கலைகழகங்களை சூழவுள்ள பகுதிகளில்கூடாரங்களை அமைத்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.



"தாக்குதலை தடுக்க தவறிவிட்டேன்" - பதவியை ராஜினாமா செய்த மூத்த இஸ்ரேல் அதிகாரி!
[Thursday 2024-04-25 06:00]

ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலுக்கு பிறகு, இஸ்ரேலிய இராணுவ புலனாய்வு தலைவர் ராஜினாமா செய்துள்ளார். கடந்த ஆண்டு 7ம் திகதி பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் இஸ்ரேலியர்கள் மற்றும் வெளிநாட்டு குடிமக்கள் என 1200 பேர் கொல்லப்பட்டனர்.



ஆங்கிலேய கால்வாயில் பரிதாபம்: 5 பேர் பலியான சம்பவத்தில் 3 பேர் கைது!
[Thursday 2024-04-25 06:00]

ஆங்கில கால்வாயில் குழந்தை உட்பட ஐந்து பேர் உயிரிழந்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆங்கிலேய கால்வாயைக் கடக்க முயன்ற போது சிறுமி ஒருவர் உள்பட ஐந்து குடியேற்றத் தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேரை பிரித்தானிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.



பாரிஸ் ஒலிம்பிக்கில் தாக்குதலுக்கு திட்டமா? - 16 வயது சிறுவன் கைது!
[Thursday 2024-04-25 06:00]

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் "வீர மரணம் அடைய விரும்புகிறேன்" என்று கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறப்படும் 16 வயது சிறுவனை பிரான்ஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஜூலை 21ம் திகதி நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் "வீர மரணம் அடைய விரும்புகிறேன்" என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக கூறப்படும் 16 வயது சிறுவனை பிரான்ஸ் நாட்டின் பயங்கரவாத எதிர்ப்பு காவல்துறை கைது செய்துள்ளது.



இரத்தம் சொட்ட பக்கிங்ஹாம் அரண்மனை அருகில் பாய்ந்து சென்ற குதிரைகளால் பரபரப்பு!
[Wednesday 2024-04-24 18:00]

மத்திய லண்டனில் சாலை நடுவே ரத்தம் சொட்ட ஐந்து குதிரைப்படை குதிரைகள் சாரதி இல்லாமல் பாய்ந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குதிரைகளின் ஒரு சாரதிக்கு காயம்பட்டிருக்கலாம் என்றே முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மத்திய லண்டனின் தெருக்களில் ஒரு ஜோடி குதிரைகள், பீதியடைந்து, அவற்றில் ஒன்று ரத்தத்தில் நனைந்தபடி பாய்ந்து சென்றுள்ளது.



ஈரானுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட நாடொன்றிற்கு அமெரிக்கா எச்சரிக்கை!
[Wednesday 2024-04-24 18:00]

ஈரானுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட பாகிஸ்தான், தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. ஈரான் ஜனாதிபதியான Ebrahim Raisi, மூன்று நாட்கள் அரசுமுறைப் பயணமாக பாகிஸ்தான் சென்றிருந்தார். ஏப்ரல் 22ஆம் திகதி ஈரான் ஜனாதிபதியும், அவரது மனைவியும், வெளியுறவு அமைச்சர் முதலான சில அமைச்சர்களும், மூத்த அதிகாரிகளும் பாகிஸ்தான் சென்றார்கள். தற்போது அவர்கள் ஈரான் திரும்பிவிட்டனர்.



காட்டுத்தீ அபாயத்தில் கனடா!
[Wednesday 2024-04-24 18:00]

வழக்கத்துக்கு மாறாக, குளிர்காலத்தில் உஷ்ணம், அதிகரித்து வரும் வறட்சி மற்றும் எதிர்வரும் மாதங்களில் வழக்கத்தைவிட வெப்பம் அதிகமாக இருக்கும் என எச்சரித்துள்ள வானிலை ஆராய்ச்சி மையம் என பல காரணங்களால், மீண்டும் ஒரு பயங்கர அழிவை ஏற்படுத்தும் காட்டுத்தீ சூழலை கனடா எதிர்கொள்ளும் அபாயம் உள்ளதாக பெடரல் அரசு எச்சரித்துள்ளது.



இங்கிலாந்து சிறுவனின் கையில் கிடைத்த அபூர்வ வளையல்!
[Wednesday 2024-04-24 18:00]

சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான வளையல் இங்கிலாந்து சிறுவன் ஒருவர் கையில் கிடைத்துள்ள சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த ரோவன் என்ற 12 வயது சிறுவன் தனது செல்லப்பிராணியுடன் அப்பகுதியில் நடைப்பயிற்சி சென்றுள்ளான். அப்போது தரையில் ஒரு வினோதமான பொருள் தட்டுப்பட்டுள்ளது.



கனடாவின் தேடப்படும் குற்றவாளி: தகவலுக்கு $100,000 சன்மானம்!
[Wednesday 2024-04-24 06:00]

டொராண்டோ பொறியாளரின் துப்பாக்கி சூடு கொலை வழக்கில் கனடாவின் தேடப்படும் குற்றவாளியான நபர் தொடர்பான தகவலுக்கு $100,000 சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது. “கடின உழைப்பாளி" என்று குடும்பத்தினர் விவரித்த டொராண்டோ பொறியாளர் Shamar Powell 2023 ஜூலை மாதத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு பரிதாபமாக கொல்லப்பட்டார்.



லண்டனில் புனித ஜார்ஜ் விழாவில் பரபரப்பு!
[Wednesday 2024-04-24 06:00]

லண்டனின் மையப்பகுதியில் நடைபெற்ற புனித ஜார்ஜ் விழாக் கொண்டாட்டத்தில் வன்முறை வெடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் லண்டனின் மையப்பகுதியில் நடைபெற்ற புனித ஜார்ஜ் விழாக் கொண்டாட்டத்தில் வன்முறை வெடித்தது.



லண்டன் வாழ் தமிழர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
[Wednesday 2024-04-24 06:00]

பிரித்தானியாவில் தமிழர்களை இலக்கு வைத்து கொள்ளை கும்பல் ஒன்று செயற்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் லண்டன் சவுத்ஹோல் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் 25 ஆயிரம் பவுண்ட்ஸ் பெறுமதியான தங்க நகைகளை பறி கொடுத்துள்ளார். குறித்த பெண்மணி அந்தப் பகுதியிலுள்ள மெற்றோ வங்கிக்கு சென்று அங்குள்ள பெட்டகத்தில் வைத்திருந்த தங்க நகைககளை எடுத்து வந்துள்ளார்.



ஈரானின் பலம் கண்டு அதிர்ச்சியடைந்த அமெரிக்க கட்டளை மையம்!
[Tuesday 2024-04-23 18:00]

இஸ்ரேலை பொறுத்த வரை ஈரான் விடயத்திலும், ஈரான் உருவாக்கி வைத்துள்ள துணை படைகளை பொறுத்தளவிலும் இரண்டு தெரிவுகள் தான் இருகின்றது. ஈரான் உருவாக்கி வைத்துள்ள பிரச்சினையை இஸ்ரேல் முடிக்கப் போகிறதா அல்லது சமாளித்துக்கொண்டு இருக்க போகிறதா? ஈரான் பிரச்சினையை நிரந்தரமான முடித்து வைக்கும் முடிவை நோக்கி தான் இஸ்ரேல் சென்றுக் கொண்டு இருக்கிறது என்பது களநகர்வுகளை பார்க்கும் போதும் ஊகிக்கக் கூடியதாக இருக்கிறது.



சீனாவுக்காக உளவு பார்த்ததாக ஜேர்மன் நாடாளுமன்ற உறுப்பினரின் உதவியாளர் கைது!
[Tuesday 2024-04-23 18:00]

சீனாவுக்காக உளவு பார்த்ததாக, ஜேர்மன் நாடாளுமன்ற உறுப்பினரின் உதவியாளர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியின் வலதுசாரிக் கட்சியான Alternative for Deutschland (AfD) கட்சி நாடாளுமன்ற உறுப்பினர், Maximilian Krah. இவரது உதவியாளரான Jian G என்று ஊடகங்கள் குறிப்பிட்டுள்ள Jian Guo என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.



இஸ்ரேல் ராணுவ தலைமையகம் மீது ஹிஸ்புல்லா இயக்கம் தாக்குதல்!
[Tuesday 2024-04-23 18:00]

லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அடிக்கடி இஸ்ரேலைத் தாக்குகிற நிலையில் இஸ்ரேலும் பதிலடி கொடுத்த வடக்கு இஸ்ரேலில் உள்ள இராணுவ தலைமையகம் மீது ராக்கெட்டுகளை வீசியதாக ஹிஸ்புல்லா கூறினார்.



கனேடிய நகரமொன்றில் பற்றியெரிந்தபடி பயணித்த ரயில்!
[Tuesday 2024-04-23 18:00]

கனேடிய நகரமொன்றில், பற்றியெரிந்தபடி ரயில் ஒன்று பயணிக்கும் காட்சிகள் வெளியாகி மனதை பதைபதைக்கச் செய்துள்ளன. ஞாயிற்றுக்கிழமை இரவு, 10.49 மணியளவில், கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள லண்டனில், பற்றியெரிந்தபடி பயணித்த ரயில் ஒன்றைக் கண்ட பலர் அவசர உதவியை அழைத்தனர்.



பலவீனமாக உள்ள நாணயம்: தங்கத்தை வாங்கி குவிக்கும் சீன மக்கள்!
[Tuesday 2024-04-23 06:00]

உலக அளவில் தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில் சீன மக்கள் தொடர்ச்சியாக தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்கத்தை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றான சீனா, தற்போது அதிகம் வாங்கும் நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது. சீனாவும் இந்தியாவும் பொதுவாக உலகின் மிகப்பெரிய தங்கம் வாங்கும் நாடுகள் என்றே அறியப்படுகிறது.



லண்டனில் உயிருடன் தீயில் கருகிய இருவர்!
[Tuesday 2024-04-23 06:00]

வடக்கு லண்டனில் Walthamstow பகுதியில் குடியிருப்பு ஒன்று தீக்கிரையான சம்பவத்தில், அக்கம் பக்கத்தினர் அலறல் சத்தம் கேட்டதாகவும், பலியான இருவரும் உயிருடன் எரிந்திருக்கலாம் என்றே அஞ்சப்படுகிறது. தொடர்புடைய கோர சம்பவம் ஞாயிறன்று இரவு சுமார் 10.25 மணியளவில் நடந்துள்ளது. தகவலையடுத்து 6 தீயணைக்கும் வாகனங்கள் சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளது.


NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா