Untitled Document
April 18, 2024 [GMT]
குழந்தைகளை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு 9 நாட்களாக காதலனுடன் இருந்த தாய்: - துடி துடிக்க இறந்த குழந்தை!
[Thursday 2016-12-08 07:00]

உக்கிரைனில் இரண்டு குழந்தைகளை 9 நாட்களாக வீட்டு அறையில் பூட்டி வைத்து விட்டு தாய் வெளியே சென்றதால் உணவின்றி ஒரு குழந்தை பரிதாபமாக இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உக்கிரைன் நாட்டின் Kiev தலைநகரைச் சேர்ந்தவர் Vladislava Podchapko( 20). இவர் அங்குள்ள பகுதியில் தன் காதலருடன் கடந்த ஒன்பது நாட்களாக வசித்து வந்துள்ளார்.இந்நிலையில் இவர் தன் குழந்தைகளான Daniil மற்றும் Anna வை தன்னுடைய வீட்டில் பூட்டி வைத்து விட்டு, அவர்கள் சாப்பிடுவதற்கு சிறிதளவு இனிப்பு வகை உணவுப்பொருட்கள் மற்றும் நொறுக்கு தீனிகள் போன்றவற்றை வைத்துச் சென்றுள்ளார்.

உக்கிரைனில் இரண்டு குழந்தைகளை 9 நாட்களாக வீட்டு அறையில் பூட்டி வைத்து விட்டு தாய் வெளியே சென்றதால் உணவின்றி ஒரு குழந்தை பரிதாபமாக இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உக்கிரைன் நாட்டின் Kiev தலைநகரைச் சேர்ந்தவர் Vladislava Podchapko( 20). இவர் அங்குள்ள பகுதியில் தன் காதலருடன் கடந்த ஒன்பது நாட்களாக வசித்து வந்துள்ளார்.இந்நிலையில் இவர் தன் குழந்தைகளான Daniil மற்றும் Anna வை தன்னுடைய வீட்டில் பூட்டி வைத்து விட்டு, அவர்கள் சாப்பிடுவதற்கு சிறிதளவு இனிப்பு வகை உணவுப்பொருட்கள் மற்றும் நொறுக்கு தீனிகள் போன்றவற்றை வைத்துச் சென்றுள்ளார்.

  

பின்னர் அவர் வீடு திரும்புகையில் Daniil 23 மாத குழந்தை பரிதாபமாக உணவின்றி இறந்துள்ளார். மற்றொரு குழந்தையான Anna வை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அக்குழந்தையும் அபாயகட்டத்தில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக பொலிசார் அங்கு சென்று சோதனை செய்ததில் சில உணர்ச்சிபூர்வமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அதில் குழந்தைகள் தங்களுடைய கை வண்ணத்தை அறையின் சுவற்றில் வரைந்துள்ளனர்.அதைத் தொடர்ந்து குழந்தைகள் தொடர்ந்து அழுதுள்ளனர். ஆனால் அருகில் இருந்த யாரும் இது தொடர்பாக எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை. குழந்தைகள் கதவுகளை உடைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அது பலன் அளிக்கவில்லை.தங்களால் முடிந்த அளவுக்கு அனைத்து முயற்சிகளையும் செய்துள்ளனர். ஆனால் எதுவும் பலன் அளிக்கவில்லை. அவர்கள் கடந்த ஆறு நாட்களாக அவர் தாயார் வைத்துச் சென்ற நொறுக்குத் தீனி உணவுப் பொருட்களை சாப்பிட்டு இருந்துள்ளனர்.

அதன் பின்னரே அவர்களுக்கு உணவு கிடைக்காமல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.இது குறித்து அவர் தாயார் கூறுகையில், தன் குழந்தை இறக்கும் என்று தான் எதிர்பார்க்க வில்லை என கூறியுள்ளார். குழந்தையை கவனிக்காமல் தன் காதலனுடன் சுற்றித் திரிந்ததால் பொலிசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் அவருக்கு இது தொடர்பாக எட்டு வருடங்கள் சிறை தண்டனை கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இவருக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்றுள்ளது என்றும் தற்போது புதிதாக ஒரு காதலனுடன் சுற்றித்திரிந்துள்ளதாகவும், கற்பமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.இதற்கிடையில் அவருடைய முதல் கணவர் தொடர்பான தகவல்கள் இன்னும் சரிவரத் தெரியவில்லை என்றும் முழு விசாரணையின் பின்னரே தெரியவரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



கனடாவில் ஆசிய மாணவரின் துணிச்சல்!
[Thursday 2024-04-18 06:00]

கனடாவில் கொள்ளை சம்பவத்தை தடுக்க முயன்று கத்தியால் தாக்கப்பட்ட ஆசிய மாணவரின் மருத்துவ கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது அவருக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. கனடாவுக்கு புதியவரான Meraj Ahmed என்ற மாணவர் DoorDash உணவு விநியோக நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் மெராஜ் அகமது மற்றும் சக ஊழியர் ஒருவரும் கத்தியால் தாக்கப்பட்டு காயமடைந்தனர்.



பிரித்தானியாவுடன் மொத்த உறவையும் முறித்துக்கொண்ட இளவரசர் ஹரி!
[Thursday 2024-04-18 06:00]

பிரித்தானியாவில் குடியிருக்கும் வகையில், இனி இளவரசர் ஹரி நாடு திரும்ப வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் வெளியான ஆவணம் ஒன்று அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவின் கலிபோர்னியாவுக்கு குடிபெயர்ந்த ஹரி, தற்போது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் அங்கே வசித்து வருகிறார்.



இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலில் உயிர் தப்பிய 50 பேர்கள் தற்கொலை!
[Thursday 2024-04-18 06:00]

இஸ்ரேல் எல்லையில், நோவா இசை விழா படுகொலையில் இருந்து தப்பியவர்களில் 50க்கும் மேற்பட்டவர்கள் அடுத்தடுத்த மாதங்களில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. பாராளுமன்ற விவகார கூட்டத்தில் பேசிய ஒருவர், இந்த எண்ணிக்கை உண்மையில் அதிகமாக இருக்கலாம் என்றும், உயிர் தப்பியவர்கள் தற்போதும் தத்தளித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.



வானில் இருந்து விழுந்த மர்மப்பொருள்: புளோரிடாவில் நிகழ்ந்த சம்பவத்திற்கு பதில் கூறிய நாசா!
[Wednesday 2024-04-17 15:00]

புளோரிடாவில் உள்ள ஒரு வீட்டின் மீது மோதிய கனமான அந்த பொருள், சர்வதேச விண்வெளி நிலையத்தின் (ISS) ஒரு பகுதி என்பதை அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா (NASA) உறுதிப்படுத்தியுள்ளது. கென்னடி விண்வெளி மையத்தில் மாதிரியை ஆய்வு செய்த பின்னர், வீட்டின் மேல் விழுந்த அந்த உலோகப் பொருள் மார்ச் 2021 இல் சுற்றுப்பாதை புறக்காவல் நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்டது என நாசா தெரிவித்துள்ளது.



அரசாங்க ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கனடா அரசாங்கம்!
[Wednesday 2024-04-17 15:00]

கனடாவில் அரசாங்க ஊழியர்களுக்கு அதிர்ச்சி தகவல் ஒன்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் நான்கு ஆண்டு காலப் பகுதியில் சுமார் ஐயாயிரம் அரசாங்க ஊழியர்கள் பணிகளை இழக்க நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்தில் இந்த ஆட்குறைப்பு குறித்த யோசனை முன்மொழியப்பட்டுள்ளது.



சூரிய ஒளி தான் குழந்தைக்கு உணவு: ரஷ்ய நபரின் அதிர்ச்சி செயல்!
[Wednesday 2024-04-17 15:00]

சூரிய ஒளியை மட்டுமே கொடுத்து குழந்தையை பட்டினி போட்டு கொலை செய்த பிரபல சமூக ஊடக influencer-க்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் பிரபல சமூக ஊடக இன்ஃப்ளூயன்சர்(influencer) மாக்சிம் லியுட்டி(Maxim Lyutyi), தனது ஒரு மாத வயது மகன் கொஸ்மோவின் (Kosmos) துன்பகரமான காரணமாக அமைந்துள்ளார்.



கனடாவில் 40 பில்லியனை தொடும் பாதீட்டுப் பற்றாக்குறை!
[Wednesday 2024-04-17 15:00]

கனடாவில் இந்த நிதியாண்டக்கான பாதீட்டுப் பற்றாக்குறை தொகை 39.2 பில்லியன் டொலர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கம் நேற்றைய தினம் பாதீட்டுத் திட்டத்தை சமர்ப்பித்திருந்து. நிதி அமைச்சர் கிறிஸ்டியா ப்ரீலாண்ட் சமர்ப்பித்திருந்தார்.



இஸ்ரேலுக்கு கடும் மிரட்டல் விடுத்த ஈரான்!
[Wednesday 2024-04-17 03:00]

பழி தீர்ப்பது உறுதி என்று இஸ்ரேல் அறிவித்துள்ள நிலையில், இதுவரை பயன்படுத்தாத ஆயுதங்களால் அடிப்போம் என்று ஈரானும் பதிலுக்கு மிரட்டல் விடுத்துள்ளது. ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு பழி தீர்ப்போம், விட்டுவிட மாட்டோம் என இஸ்ரேல் இன்று தெரிவித்துள்ளது. இதனால் எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலை மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ளது.



பேய் மழைக்கு மூழ்கிய துபாய்: சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!
[Wednesday 2024-04-17 03:00]

ஐக்கிய அரபு அமீரகத்தின் பெரும்பாலான பகுதிகளில் காலநிலை மோசமடைந்துள்ள நிலையில், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் தீவிரத்தன்மை கொண்ட அபாயகரமான காலநிலை முன்னறிவிக்கப்பட்டதை அடுத்து, குடியிருப்பாளர்களை மிகவும் விழிப்புடன் இருக்குமாறு அதிகார சபை கேட்டுக் கொண்டுள்ளது.



பிரித்தானியாவில் கடும் தட்டுப்பாடு வரலாம்: விரிவான பின்னணி!
[Wednesday 2024-04-17 03:00]

காலநிலை நெருக்கடியால் ஏற்படும் வெள்ளம் மற்றும் வறட்சியால் பிரித்தானியர்கள் உட்கொள்ளும் பல உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பெருவெள்ளம், வறட்சி உட்பட பல்வேறு காரணங்களால் உலகளாவிய உணவு உற்பத்தி என்பது சிக்கலில் உள்ளது. பிரித்தானியாவில் வாங்கப்பட்டு நுகரப்படும் பல பொருட்கள் சரிவடைந்த விநியோகம் மற்றும் விலை அதிகரிப்பு அபாயத்தில் உள்ளன.



போரை நிறுத்த சீனாவுக்கு மறைமுக அழுத்தம் கொடுத்த ஜேர்மனி!
[Tuesday 2024-04-16 18:00]

ஜேர்மன் சேன்ஸலர் சீனாவுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், உக்ரைன் போரை நிறுத்த அழுத்தம் கொடுக்குமாறு மறைமுகமாக கேட்டுக்கொண்டார். ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ் சீனாவுக்கு அரசு முறைப்பயணமாக சென்றுள்ளார். பீஜிங்கில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்தித்த அவர், உக்ரைனை ரஷ்யா ஊடுருவியுள்ள விடயம் உலக பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறியுள்ளார். அதாவது, போரை நிறுத்துமாறு தனது நட்பு நாடான ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்குமாறு அவர் சீன ஜனாதிபதியை மறைமுகமாக கேட்டுக்கொண்டுள்ளார்.



இஸ்ரேல் ஈரான் பிரச்சினையில் சுவிட்சர்லாந்தின் முக்கிய பங்கு!
[Tuesday 2024-04-16 18:00]

இஸ்ரேல் ஈரான் பிரச்சினையில் சுவிட்சர்லாந்துக்கு ஒரு மறைமுகப் பங்கு உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், பல ஆண்டுகளாக, ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் தூதரக உறவுகளை பகிர்ந்துகொள்ள சுவிட்சர்லாந்துதான் பாலமாக செயல்பட்டுவருகிறதாம். அதாவது, ஈரானும் அமெரிக்காவும் நேரடியாக பேசிக்கொள்வதில்லை. அதற்கு பின்னால் ஒரு பெரிய வரலாறே உள்ளது.



பதவியை ராஜினாமா செய்யும் சிங்கப்பூர் பிரதமர்?
[Tuesday 2024-04-16 18:00]

சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் அடுத்த மாதம்15ஆம் திகதி பதவி விலகப் போவதாக அறிவித்துள்ளார். சிங்கப்பூரின் 3வது பிரதமரான இவர், 2004 முதல் மக்கள் செயல் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். சிங்கப்பூரில் பிரதமர் லீ சியன் லூங் தலைமையிலான மக்கள் செயல் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.



கனடாவில் வீடுகள் தட்டுப்பாட்டுக்கு உண்மையான காரணம் என்ன?
[Tuesday 2024-04-16 18:00]

கனடாவில் வீடுகள் தட்டுப்பாட்டுக்கு புலம்பெயர்தல்தான் காரணம் என்பது போன்ற ஒரு தோற்றம் சமீப காலமாக உருவாக்கப்பட்டு வருவதை நாம் கவனித்துவருகிறோம். ஆக, புலம்பெயர்தல் கொள்கைகளை மறுசீரமைத்துவிட்டால் வீடுகள் தட்டுப்பாடு குறைந்துவிடுமா?



26 வருட மர்மம்: பிரித்தானியாவில் குழந்தை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பெண்!
[Tuesday 2024-04-16 05:00]

1998ஆம் ஆண்டில் வனப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட குழந்தையின் கொலை வழக்கில் பிரித்தானிய பெண் கைது செய்யப்பட்டார். கடந்த 1998ஆம் ஆண்டு மார்ச் மாதம், woodlandஇல் உள்ள Warrington பார்க்கிற்கு அருகில் அந்த குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குழந்தைக்கு அதிகாரிகள் "Callum" என்று செல்லப் பெயர் சூட்டினார்கள், இது தொடர்பாக கொலை வழக்கு விசாரணை தொடங்கப்பட்டாலும், பல ஆண்டுகளாக இந்த வழக்கு தீர்க்கப்படாமல் இருந்தது.



இஸ்ரேல் பதிலடிக்கு தயாரா? தெஹ்ரானில் விமானத் தடையை நீக்கியது ஈரான்!
[Tuesday 2024-04-16 05:00]

தலைநகர் தெஹ்ரான் மீதான விமானத் தடையை ஈரான் நீக்கியுள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு, ஈரான் 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்தி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.



பிரித்தானிய இளவரசர் ஹரிக்கு பின்னடைவு!
[Tuesday 2024-04-16 05:00]

பிரித்தானியாவில் தனிப்பட்ட பாதுகாப்பு தொடர்பான சட்டப் போராட்டத்தில் இளவரசர் ஹாரி பின்னடை அடைந்துள்ளார். பிரித்தானியாவில் தனிப்பட்ட பாதுகாப்பு தொடர்பான சட்டப் போராட்டத்தில் இளவரசர் ஹரி பின்னடை அடைந்துள்ளார். ஏப்ரல் 15, 2024 அன்று, இளவரசர் ஹரி மேற்கொண்ட மேன்முறையீட்டு கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக நீதித்துறை செய்தித் தொடர்பாளர் அறிவித்தார்.



அவுஸ்திரேலியாவில் மற்றுமொரு பயங்கரம்: தேவாலயத்தில் கத்திக்குத்து!
[Monday 2024-04-15 18:00]

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தில் பேராயர் ஒருவரும் மற்றுமொருவரும் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.



நாஸ்ட்ரடாமஸ் கணிப்பு பலித்தது: மூன்றாம் உலகப்போர் அச்சத்தில் மக்கள்!
[Monday 2024-04-15 18:00]

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, மூன்றாம் உலகப்போர் குறித்த நாஸ்ட்ரடாமஸின் கணிப்பு பலித்துள்ளதாக மக்கள் சமூக ஊடகங்களில் கருத்துக்கள் தெரிவிக்கத் துவங்கியுள்ளனர். புகழ் பெற்ற பிரெஞ்சு ஜோதிடக்கலை நிபுணரான Michel de Nostredame என்னும் நாஸ்ட்ரடாமஸ், 450 ஆண்டுகளுக்கு முன், தனது Les Prophéties என்னு புத்தகத்தில் உலகில் எதிர்காலத்தில் நிகழவிருக்கும் பல்வேறு விடயங்களை கணித்து எழுதியுள்ளார். ஹிட்லருடைய எழுச்சி, அமெரிக்க ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடி கொலை முதல், கோவிட் வரை அவர் கணித்த பல விடயங்கள் துல்லியமாக நிறைவேறியுள்ளன.



ரொறன்ரோவில் களவாடப்பட்ட 600 வாகனங்கள் மீட்பு!
[Monday 2024-04-15 18:00]

ரொறன்ரோவில் களவாடப்பட்ட 600 வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் களவாடப்பட்ட வாகனங்கள் இவ்வாறு மொன்றியல் துறைமுகத்திலிருந்து மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட வாகனங்களில் பெரும்பான்மையானவை கார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.


Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா