Untitled Document
April 25, 2024 [GMT]
ஒற்றையாட்சிக்குள் தான் அதிகாரப்பகிர்வு! - ஐதேக செயற்குழுவில் தீர்மானம்
[Friday 2016-12-09 07:00]

ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரங்களைப் பகிரும், புதிய அரசியல் அமைப்பைத் தயாரிப்பதற்கு உறுதிபூண்டிருப்பதாக ஐதேகட்சி தெரிவித்துள்ளது.  கட்சியின் செயற்குழுக்கூட்டம் நேற்றுக்காலை அதன் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றபோது இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரங்களைப் பகிரும், புதிய அரசியல் அமைப்பைத் தயாரிப்பதற்கு உறுதிபூண்டிருப்பதாக ஐதேகட்சி தெரிவித்துள்ளது. கட்சியின் செயற்குழுக்கூட்டம் நேற்றுக்காலை அதன் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றபோது இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

  

பாராளுமன்றத்துக்குப் பொறுப்புக்கூறக் கூடிய பிரதமர் மற்றும் அமைச்சரவையின் ஆலோசனைகளின்படி ஜனாதிபதி அவரது அதிகாரங்களைச் செயற்படுத்துவதன் மூலம் பாராளுமன்றத்தின் உயர்தன்மையைப் பாதுகாக்கவும் தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வசமுள்ள விசேட அதிகாரங்களில் அவ்வாறே இடம்பெற முடியுமென்றும் செயற்குழு தீர்மானம் எடுத்துள்ளது.

இதற்குப் புறம்பாக விருப்பு வாக்குமுறையை ஒழித்து விகிதாசார மற்றும் தொகுதிவாரியான முறையின் கீழ் தேர்தல்களை நடத்துவதற்கு ஏற்றவகையில் புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கும் செயற்குழு இணக்கத் தீர்மானத்தை எட்டியுள்ளது. 2015இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின் போது மக்கள் முன் சமர்ப்பிக்கப்பட்ட 5 அம்ச வேலைத்திட்ட கொள்கையறிக்கையில் குறிப்பிடப்பட்ட அம்சங்களை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் பொருட்டு மேலும் சில தீர்மானங்கள் நேற்றைய செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தேர்தல் முறையில் உரிய மாற்றத்தைக் கொண்டுவரும் பொருட்டு தேவையான யோசனைகளை அரசியல் அமைப்பு சபைக்கு முன் வைப்பதற்காக ஆறு உப குழுக்களினதும் அறிக்ைககளையும் எதிர்காலத்தில் எடுக்கப்படக் கூடிய தீரமானங்களில் தெரிவிக்கப்படும் யோசனைகளையும் உள்வாங்கி மக்கள் ஆணைக்கு ஏற்ற விதத்தில் செயற்படுவதெனவும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐ. தே. கட்சியின்செயற்குழுக் கூட்டத்தில் நேற்று எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

1. 2015 பாராளுமன்றத் தேர்தலில் நாம் நாட்டு மக்களுக்கு முன்வைத்த 5 அம்ச வேலைத்திட்டம் கொள்கையறிக்கையின் பிரகாரம் நாட்டில் ஜனநாயகத்தை மேலும் வலுவடையச் செய்யும் பொருட்டு நல்லாட்சி அடிப்படையில் அரசதுறைக்கு மேலும் வலுச்சேர்க்கக் கூடிய வகையில் பிரதேச பிரதிநிதித்துவங்களை பலமடையச் செய்து பிரதேச மட்டத்தில் காணக்கூடிய சமச்சீரற்ற முறையை இல்லாதொழித்து மனித உரிமைகள் மேலும் வளமடையச் செய்து மக்கள் குழுக்களுக்கும் தனி நபர்களுக்குமிடையில் காணப்படுகின்ற சமச்சீரற்ற முறையை இல்லாதொழித்து சமநிலையை வலுவடையச் செய்யும் வகையில் புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் பொருட்டு அடுத்த பாராளுமன்ற அமர்வின் போது அனைத்துக் கட்சிகளுடனும் பேசுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

அந்தக் கொள்கையறிக்கையின்படி கிடைக்கப் பெற்ற மக்கள் ஆணையின் பிரகாரம் ஒற்றையாட்சியின் கீழ் அனைத்துத் தரப்பினரதும் இணக்கப்பாட்டுடன் செய்யக் கூடிய விதத்தில் உச்சகட்ட அதிகாரப் பரவலாக்கலை செய்வதற்கும் பாராளுமன்றத்துக்குப் பொறுப்புக் கூறக் கூடிய பிரதமர் மற்றும் அமைச்சரவையின் ஆலோசனைக்கமைய ஜனாதிபதி தமக்குரிய அதிகாரங்களை பயன்படுத்துவதன் மூலம் பாராளுமன்றத்தின் உன்னதத்தன்மையை பாதுகாத்துக் கொள்ளவும் தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பயன்படுத்தப்படும் விசேட அதிகாரங்களை அதே நிலையில் பயன்படுத்தவும், விருப்புவாக்கு முறையை முடிவுக்குக் கொண்டுவந்து விகிதாசார முறை மற்றும் தொகுதி அடிப்படையிலான தேர்தலை நடத்துவதற்குரிய விதத்தில் புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கான ஒத்துழைப்பை வழங்கவும் 6 உப குழுக்கள் முன்வைத்த அறி்க்கைகளையும் எதிர்காலத்தில் செயற்பாட்டுக் குழு முன் வைக்கும் அறிக்கையையும் கருத்தில் கொண்டு நாங்கள் பெற்றுக்கொண்ட மக்கள் ஆணைக்கு இயைவான விதத்தில் இணக்கப்பாடு தெரிவிக்கவும் முழுமையான அரசியல் அமைப்பு நகலை தயாரித்ததன் பின்னர் செயற் குழுவின் இணக்கப்பாட்டுடன் அதற்கு அனுமதியைப் பெற்றுக்கொடுப்பதெனத் தீர்மானிக்கப்பட்டது.

2. ஜனநாயகம் மனித உரிமைகள், சுதந்திரம், அடிப்படை உரிமைகள், மக்களிள் இறைமை மட்டுமன்றி பாராளுமன்ற அதிகாரத்தையும் காலில் போட்டு மிதித்து குடும்ப ஏகாதிபத்திய இருண்டயுகத்தை நோக்கி இழுத்துச் செல்லப்பட்ட எமது தாயகத்தை ஜனவரி 8ஆம் திகதி ஜனநாயகப் புரட்சியின் மூலம் மீட்டெடுத்து மீண்டும் உன்னத நிலைக்குக் கொண்டு செல்லும் சவால்மிக்க பணியொன்றுக்கு பங்களிப்புச் செய்த அனைத்து சமூகத்தவர்களுக்கும் எங்களுடைய நன்றியைத் மீண்டுமொரு தடவை சமர்ப்பித்துக் கொள்கிறோம்.

  
   Bookmark and Share Seithy.com



படுகொலைகளுக்குப் பின்னால் இருந்த கோட்டா!
[Thursday 2024-04-25 06:00]

2005 ஆம் ஆண்டு ஜோசப் பரராஜசிங்கம் எம்.பி.,படுகொலை, 2006 ஆம் ஆண்டு ரவிராஜ் எம்.பி.படுகொலை ,2009 ஆம் ஆண்டு இறுதி யுத்த படுகொலைகள், 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆகிய 4 சம்பவங்களின் பின்னாலும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ,முன்னாள் ஜனாதிபதியுமான கோட்டாபாய ராஜபக்‌ஷவே இருந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. யான சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.



புலிகளுக்கு எதிராக போரிட்ட இராணுவத்தினர் உக்ரைன் - ரஷ்யாவில் தங்களுக்குள் மோதுகின்றனர்!
[Thursday 2024-04-25 06:00]

விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிராக போராடிய இலங்கை இராணுவத்தினர் இன்று உக்ரைன் மற்றும் ரஷ்யா இராணுவத்தில் சேர்ந்து மோதிக் கொள்கிறார்கள். இராணுவ முகாம் உதவியாளர்களாக இலங்கையர்கள் அழைக்கப்பட்டு பலவந்தமான முறையில் யுத்த களத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். சட்டவிரோதமான முறையில் முன்னெடுக்கப்படும் இச்செயற்பாடுகள் குறித்து அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.



உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகளுக்கு உயர்ந்தபட்ச தண்டனை!
[Thursday 2024-04-25 06:00]

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் தமது அரசாங்கத்தில் விசேட விசாரணை ஆணைக்குழுவின் ஊடாக விசாரணைகளை முன்னெடுப்போம். ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கமைய வழக்கு விசாரணை மேற்கொள்ள விசேட நீதிமன்றம் அமைத்து, தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரையும் சட்டத்தின் முன் கொண்டு வருவதுடன், அவர்களுக்கு வழங்கக் கூடிய உயர்ந்தபட்ச தண்டனையை வழங்கவும் நடவடிக்கை எடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.



இழுபறியில் தமிழரசு - வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!
[Thursday 2024-04-25 06:00]

திருகோணமலை நீதவான் நீதிமன்றில் புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி நிர்வாகத் தெரிவு தொடர்பான வழக்கு எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.



தலைமன்னார் சிறுமி கொலை குற்றவாளி பொலிஸ் துணையுடன் இந்தியாவுக்கு தப்பியோட்டம்!
[Thursday 2024-04-25 06:00]

தலைமன்னாரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த சம்பவத்தில் கைதான சந்தேக நபரான அப்துல் ரகுமான் என்ற நபர் வவுனியா வைத்தியசாலையிலிருந்து தப்பித்து இந்தியாவுக்கு சென்றுள்ளார். பொலிஸாரின் பொறுப்பற்ற செயற்பாடுகள் அதிருப்திக்குரியன என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸவிடம் கேள்வி எழுப்பினார்.



சூல கொடிதுவக்குவுக்கும் சஹ்ரானுக்கும் என்ன தொடர்பு?
[Thursday 2024-04-25 06:00]

பயங்கரவாதி சஹ்ரானுக்கும் இராணுவ புலனாய்வு பிரிவின் அப்போதைய பணிப்பாளர் சூலா கொடித்துவக்கும் இடையிலான தொடர்பு என்ன? களனி கம பகுதியில் வெடிபொருட்கள் அடங்கிய லொறியை சோதனை செய்ய பொலிஸார் முற்படுகையில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் அதற்கு தடை விதித்து வாகனத்தை விடுவிக்க அறிவுறுத்தியது ஏன்? என ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யான காவிந்த ஜயவர்தன கேள்வி எழுப்பினார்.



ஈரான் - இலங்கை ஜனாதிபதிகள் சந்திப்பு - 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!
[Thursday 2024-04-25 05:00]

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்கும் இடையில் நேற்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.



வெடுக்குநாறி மலை விவகாரம் - தொடர்கிறது மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணை!
[Thursday 2024-04-25 05:00]

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் வவுனியா மனிதவுரிமை ஆணைக்குழுவினரால் நெடுங்கேணிப் பொலிசார் மற்றும் வனவளத் திணைக்கள அதிகாரிகளிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.



பொய்கூறும் கோட்டாவின் புத்தகம்!
[Thursday 2024-04-25 05:00]

தன்னை தமிழ், முஸ்லிம் மக்களே விரட்டியடித்தார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளமை முற்றிலும் பொய்யானது. அவர் இவ்வாறாக சிறுபான்மை மக்கள் மீது குற்றச்சாட்டை முன்வைத்து தனது பாவத்தை கழுவிக்கொள்ள முயற்சிக்கின்றார்என ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி கபீர் ஹாசீம் தெரிவித்தார்.



இறக்குமதி பால்மா விலை குறைகிறது!
[Thursday 2024-04-25 05:00]

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை இன்று முதல் குறைக்கப்படவுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் பால்மா பக்கட்டின் விலை 250 ரூபாயினால் குறைக்கப்படவுள்ளது. அத்துடன், 400 கிராம் பால்மா பக்கட்டின் விலை 100 ரூபாயினால் குறைக்கப்படவுள்ளது.



மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளில் முன்னேற்றம் இல்லை! - அமெரிக்கா குற்றச்சாட்டு.
[Wednesday 2024-04-24 16:00]

1983ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டுவரை இடம்பெற்ற மனித உரிமை துஸ்பிரயோகங்கள் தொடர்பிலான விசாரணைகளில் சிறிதளவு முன்னேற்றமும் இல்லை அதேபோல 1988-89 ஜேவிபி கிளர்ச்சிகாலத்தில் இடம்பெற்ற மனித உரிமை துஸ்பிரயோகங்கள் குறித்த விசாரணைகளிலும் எந்த முன்னேற்றமும் இல்லை என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.



ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக சஜித் அறிவிப்பு!
[Wednesday 2024-04-24 16:00]

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்தார்.



உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் திறந்து வைப்பு!
[Wednesday 2024-04-24 16:00]

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி ஆகியோரின் தலைமையில் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது .



கைது செய்யத் தயாராக இருந்த இன்டர்போல்! - இலங்கை வராமலேயே நழுவிய ஈரான் அமைச்சர்.
[Wednesday 2024-04-24 16:00]

1994ம் ஆண்டு அர்ஜென்டினாவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் தொடர்பில் இலங்கைக்கு ஈரான் ஜனாதிபதியுடன் விஜயம் மேற்கொள்ளவிருந்த ஈரானின் உள்துறை அமைச்சரை கைதுசெய்ய வேண்டும் என ஆர்ஜென்டினா வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவில்லை ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது.



மைத்திரி, விஜயதாச, துஷ்மந்தவுக்கு நீதிமன்றம் தடை!
[Wednesday 2024-04-24 16:00]

கடந்த 21ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராகவும் பதில் பொதுச் செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்ட அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் சாரதி துஷ்மந்த ஆகியோருக்கு கொழும்பு பிரதான மாவட்ட நீதவான் சந்துன்விதான இரண்டு தடை உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.



நீதிபதி இளஞ்செயழியனின் பாதுகாப்பு அதிகாரி கொலை - விசாரணை தொடங்கியது!
[Wednesday 2024-04-24 16:00]

மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் அவரது மெய்ப்பாதுகாவலாரான பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்தமை மற்றும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்த சம்பவம் தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.



படகு இயந்திரத்தின் காற்றாடியில் சிக்கி மீனவர் பலி!
[Wednesday 2024-04-24 16:00]

மன்னார் -முத்தரிப்புத்துறையில் இருந்து கடற் தொழிலுக்கு சென்றவேளை படகு இயந்திரத்தின் காற்றாடி வெட்டியதில் மூன்று பிள்ளைகளின் தந்தையான தேவராஜா பீரிஸ் மரணமடைந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் தற்போது சிலாவத்துறை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.



ஜனாதிபதி வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது!
[Wednesday 2024-04-24 16:00]

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்த வேட்பாளர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.



சுதந்திரக் கட்சியில் இணைந்தவர் மொட்டு கட்சியில் இருக்க முடியாது!
[Wednesday 2024-04-24 16:00]

அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ பொதுஜன பெரமுனவின் அங்கத்தவராக இருக்கும் நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்துவம் பெறுவது தொடர்பில் பொதுஜன பெரமுனவின் ஒழுக்காற்று சபை விசாரணை நடத்தும் என கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.



சுற்றுலாப் பயணிகள் வருகை மந்தம்!
[Wednesday 2024-04-24 15:00]

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்நிலையில், ஏப்ரல் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளது.


Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா