Untitled Document
April 19, 2024 [GMT]
பிரித்தானியா பெண்மணிக்கு 9 மாதத்தில் 4 குழந்தைகள்: - ஆச்சரிய சம்பவம்
[Wednesday 2017-01-11 18:00]

 
பிரித்தானியாவை சேர்ந்த பெண்மணி ஒருவருக்கு 9 மாதத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.நாட்டிங்காமில் வசித்து வந்த Lytina Kaur என்பவருக்கு கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அதன் பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ள முயற்சி செய்த இவருக்கு 17 முறை கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது.இதற்காக இவர் பலமுறை முயன்றும் கருதங்கவில்லை. ஏனெனில் இவருக்கு 17 வயது இருக்கும்போது myeloid leukaemia எனும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.மனிதர்களின் bone Marrow மற்றும் இரத்தம் ஆகியவற்றில் தான் இதன் தாக்கம் ஏற்படும். இந்நிலையில் இவருக்கு bone Marrow மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

பிரித்தானியாவை சேர்ந்த பெண்மணி ஒருவருக்கு 9 மாதத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.நாட்டிங்காமில் வசித்து வந்த Lytina Kaur என்பவருக்கு கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அதன் பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ள முயற்சி செய்த இவருக்கு 17 முறை கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது.இதற்காக இவர் பலமுறை முயன்றும் கருதங்கவில்லை. ஏனெனில் இவருக்கு 17 வயது இருக்கும்போது myeloid leukaemia எனும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.மனிதர்களின் bone Marrow மற்றும் இரத்தம் ஆகியவற்றில் தான் இதன் தாக்கம் ஏற்படும். இந்நிலையில் இவருக்கு bone Marrow மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

  

இந்த நோயின் தாக்கத்தின் போது இவரது உடலில் உள்ள வெள்ளை அனுக்கள் குறைந்ததன் காரணமாக நோயெதிர்ப் சக்தியை எதிர்கொள்ளும் ஆற்றல் குறைந்தது.இந்த காரணத்தினாலேயே இவருக்கு கருத்தரித்தல் என்பது அவ்வளவு எளிதில் நடக்கும் என கூறிவிட முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இதனால், ஏதேனும் ஒரு குழந்தையை தத்தெடுக்கலாம் என முயற்சி செய்த இவர், அதன் பின்னர் 2013 ஆம் ஆண்டு இந்தியாவை சேர்ந்த தம்பதியினரின் உதவியோடு குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்தனர். இதில் 2015 ஆம் ஆண்டு நவம்பர் இந்திய பெண்ணுக்கு இரண்டு பெண் குழந்தைகள்பிறந்தனர்.இந்தியப்பெண் கருவுற்றிருந்த நேரத்தில், Lytina செயற்கை கருத்தரித்தல் சிகிச்சையை மேற்கொண்ட காரணத்தினால் இவர் கருவுற்றுள்ளார். இதில், 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆக மொத்தத்தில் 3 குழந்தைகள் என்று ஆகிவிட்ட நிலையில், Lytina இயற்கையான முறையில் மீண்டும் கருத்தரித்துள்ளார்.

இந்த குழந்தையானது 2016 ஆம் ஆண்டு யூன் மாதம் 28 வாரத்திற்குள் குறைமாத குழந்தையாக பிறந்துவிட்டது. 9 மாதத்திற்குள் 4 குழந்தைகளுக்கு தாயான சந்தோஷத்தில் இவர் இருக்கிறார்.இதுகுறித்து இவர் கூறியதாவது, நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன், எந்நேரமும் குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் பொறுப்பில் இருப்பதால் மிகவும் பிசியானா தாய் நான் என கூறியுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



ரொறன்ரோவை விட்டு வெளியேற முயற்சிக்கும் மக்கள்!
[Friday 2024-04-19 16:00]

ரொறன்ரோ மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வசிக்கும் பலர் வேறும் இடங்களுக்கு செல்ல முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வீட்டு வாடகைப் பிரச்சினையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ரொறன்ரோவில் இரண்டு படுக்கை அறைகளைக் கொண்ட வீடு ஒன்றின் சராசரி வாடகைத் தொகை மூவாயிரம் டொலர்களாகும்.



இஸ்ரேலுக்கு தொழில்நுட்ப உதவி வழங்குவதை எதிர்த்து போராட்டம்!
[Friday 2024-04-19 16:00]

கலிபோர்னியாவில் உள்ள கூகுள் நிறுவனத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி 28 ஊழியர்களை கூகுள் நிறுவனம் பணி நீக்கம் செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கூகுள் மற்றும் அமேசான் நிறுவனம் இஸ்ரேல் அரசுக்கு ஏஐ மற்றும் கிளவுட் தொழில்நுட்ப சேவை வழங்குவது தொடர்பாக 1.2 பில்லியன் டாலருக்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.



பிரேசிலில் இறந்த தந்தையை வங்கிக்கு அழைத்துச்சென்ற மகள்: வெளியான அதிர்ச்சியூட்டும் காரணம்!
[Friday 2024-04-19 16:00]

பிரேசில் நாட்டில் மரணித்த ஒருரை வங்கிக்கு அழைத்து சென்று கடன் பெற முயற்சித்த பெண்ணை நிதி மோசடியில் பிரேசில் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பிரேசிலில் அமைந்துள்ள ரியோ டீ செனிடியோ வங்கியில் கடந்த ஒருவாராமாக வங்கி கடனை பெருவதற்காக முயற்சித்து வந்துள்ளார். குறித்த பெண் அவரின் தந்தையின் பெயரிலேயே கடன் பெற முயற்சித்துள்ளார்.



அவுஸ்திரேலியர்கள் உடனடியாக வெளியேறுங்கள்: இஸ்ரேல் குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
[Friday 2024-04-19 16:00]

இஸ்ரேலின் பாதுகாப்பு நிலவரம் மிக வேகமானதாக மோசமானதாக மாறலாம் என்பதால் இஸ்ரேலில் உள்ள தனதுஅனைத்து பிரஜைகளையும் உடனடியாக வெளியேறுமாறு அவுஸ்திரேலியா வேண்டுகோள் விடுத்துள்ளது. வெளியேறுவது பாதுகாப்பான விடயம் என்றால் உடனடியாக வெளியேறுங்கள் என அவுஸ்திரேலியா வேண்டுகோள் விடுத்துள்ளது.



உக்ரைன் மீதான வெற்றிக்கு பிறகு ரஷ்யாவின் இலக்கு இந்த நாடு!
[Friday 2024-04-19 07:00]

உக்ரைன் மீது ரஷ்யா வெற்றியை பதிவு செய்தால், அதன் பின்னர் பால்டிக் நாடுகள் மீது விளாடிமிர் புடின் குறி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்கும் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை வரும் என தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் வீழ்ந்தால் ரஷ்யாவுடன் நேட்டோவின் கிழக்குப் பகுதி கடுமையான ஆபத்தில் சிக்கும் என்றே நிபுணர்கள் கருத்தாக உள்ளது.



ஈரானுக்கு எதிரான பதிலடியை கைவிடும் இஸ்ரேல்!
[Friday 2024-04-19 07:00]

ஈரான் தொடுத்த ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு கட்டாயம் பதிலடி உண்டு என கூறி வந்த இஸ்ரேல், தற்போது அதை கைவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானுக்கு எதிரான நடவடிக்கையை கைவிட்டதற்கு பரிசாக காஸா பகுதியில் ஹமாஸ் படைகளை மொத்தமாக அழிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



பரபரப்பான லண்டன் சாலையில் நடந்த பயங்கரம்!
[Friday 2024-04-19 07:00]

லண்டனில் பட்டப்பகலில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு பொதுமக்களிடையே ஒருவர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பதறவைத்துள்ள இந்த சம்பவத்தை அடுத்து, உயிருக்கு அஞ்சிய மக்கள் வாகனங்களில் பதுங்கியுள்ளதும் Tottenham பகுதியில் கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ளது.



1.3 மில்லியன் அமெரிக்கர்களை ஏமாற்றிய கனேடியர்!
[Thursday 2024-04-18 18:00]

கனேடியர் ஒருவருக்கு அமெரிக்க சிறையில் 10 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நீதிமன்றம் பல தசாப்தங்களாக நடந்த மோசடி வழக்கில், கனடா நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை இந்த வார தொடக்கத்தில் விதிக்கப்பட்டுள்ளது. 57 வயதான Patrice Runner என்ற நபர், 1994 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில், 1.3 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்களிடம் இருந்து சுமார் 17.5 கோடி($175 மில்லியன்) அமெரிக்க டொலர்களை மோசடி செய்த குற்றத்திற்காக தண்டனை பெற்றுள்ளார்.



2024 ஆம் ஆண்டின் உலகின் சிறந்த விமான நிலையங்கள்!
[Thursday 2024-04-18 18:00]

உலகின் சிறந்த விமான நிலையமாக தோஹாவின் ஹமாத் சர்வதேச விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பல வருடங்களாக உலகின் சிறந்த விமான நிலையம் என்ற அந்தஸ்தை தக்க வைத்திருந்த சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் அந்த அந்தஸ்தை இழந்திருக்கிறது. தற்போது இது உலகின் இரண்டாவது சிறந்த விமான நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த விமானத் துறை ஆலோசனை நிறுவனமான Skytrax நேற்று (17 ஏப்ரல்) ஜெர்மனியின் பிராங்ஃபர்ட்டில் (Frankfurt) நடந்த நிகழ்ச்சியில் இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.



கனடாவில் நிகழ்ந்த திரைப்படத்தை மிஞ்சிய திருட்டு சம்பவம்!
[Thursday 2024-04-18 18:00]

கனடா வரலாற்றிலேயே மிகப்பெரிய தங்கத் திருட்டு சம்பவம் என அழைக்கப்படும் சம்பவம் தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கனடா பொலிசார் தெரிவித்துள்ளனர். 2023ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி, சுவிட்சர்லாந்தின் சூரிச்சிலுள்ள வங்கி ஒன்றிலிருந்து கனடாவின் ரொரன்றோவுக்கு இரண்டு பார்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன.



ஈரானுக்கு பதிலடி கொடுக்க தயாராகும் இஸ்ரேல்!
[Thursday 2024-04-18 18:00]

ஈரானின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிடகமரூன் தெரிவித்துள்ளார். ஜெரூசலேத்திற்கான விஜயத்தின்போது வெளிவிவகார அமைச்சர் டேவிடகமரூன் இதனை தெரிவித்துள்ளார்.



கனடாவில் ஆசிய மாணவரின் துணிச்சல்!
[Thursday 2024-04-18 06:00]

கனடாவில் கொள்ளை சம்பவத்தை தடுக்க முயன்று கத்தியால் தாக்கப்பட்ட ஆசிய மாணவரின் மருத்துவ கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது அவருக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. கனடாவுக்கு புதியவரான Meraj Ahmed என்ற மாணவர் DoorDash உணவு விநியோக நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் மெராஜ் அகமது மற்றும் சக ஊழியர் ஒருவரும் கத்தியால் தாக்கப்பட்டு காயமடைந்தனர்.



பிரித்தானியாவுடன் மொத்த உறவையும் முறித்துக்கொண்ட இளவரசர் ஹரி!
[Thursday 2024-04-18 06:00]

பிரித்தானியாவில் குடியிருக்கும் வகையில், இனி இளவரசர் ஹரி நாடு திரும்ப வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் வெளியான ஆவணம் ஒன்று அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவின் கலிபோர்னியாவுக்கு குடிபெயர்ந்த ஹரி, தற்போது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் அங்கே வசித்து வருகிறார்.



இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலில் உயிர் தப்பிய 50 பேர்கள் தற்கொலை!
[Thursday 2024-04-18 06:00]

இஸ்ரேல் எல்லையில், நோவா இசை விழா படுகொலையில் இருந்து தப்பியவர்களில் 50க்கும் மேற்பட்டவர்கள் அடுத்தடுத்த மாதங்களில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. பாராளுமன்ற விவகார கூட்டத்தில் பேசிய ஒருவர், இந்த எண்ணிக்கை உண்மையில் அதிகமாக இருக்கலாம் என்றும், உயிர் தப்பியவர்கள் தற்போதும் தத்தளித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.



வானில் இருந்து விழுந்த மர்மப்பொருள்: புளோரிடாவில் நிகழ்ந்த சம்பவத்திற்கு பதில் கூறிய நாசா!
[Wednesday 2024-04-17 15:00]

புளோரிடாவில் உள்ள ஒரு வீட்டின் மீது மோதிய கனமான அந்த பொருள், சர்வதேச விண்வெளி நிலையத்தின் (ISS) ஒரு பகுதி என்பதை அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா (NASA) உறுதிப்படுத்தியுள்ளது. கென்னடி விண்வெளி மையத்தில் மாதிரியை ஆய்வு செய்த பின்னர், வீட்டின் மேல் விழுந்த அந்த உலோகப் பொருள் மார்ச் 2021 இல் சுற்றுப்பாதை புறக்காவல் நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்டது என நாசா தெரிவித்துள்ளது.



அரசாங்க ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கனடா அரசாங்கம்!
[Wednesday 2024-04-17 15:00]

கனடாவில் அரசாங்க ஊழியர்களுக்கு அதிர்ச்சி தகவல் ஒன்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் நான்கு ஆண்டு காலப் பகுதியில் சுமார் ஐயாயிரம் அரசாங்க ஊழியர்கள் பணிகளை இழக்க நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்தில் இந்த ஆட்குறைப்பு குறித்த யோசனை முன்மொழியப்பட்டுள்ளது.



சூரிய ஒளி தான் குழந்தைக்கு உணவு: ரஷ்ய நபரின் அதிர்ச்சி செயல்!
[Wednesday 2024-04-17 15:00]

சூரிய ஒளியை மட்டுமே கொடுத்து குழந்தையை பட்டினி போட்டு கொலை செய்த பிரபல சமூக ஊடக influencer-க்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் பிரபல சமூக ஊடக இன்ஃப்ளூயன்சர்(influencer) மாக்சிம் லியுட்டி(Maxim Lyutyi), தனது ஒரு மாத வயது மகன் கொஸ்மோவின் (Kosmos) துன்பகரமான காரணமாக அமைந்துள்ளார்.



கனடாவில் 40 பில்லியனை தொடும் பாதீட்டுப் பற்றாக்குறை!
[Wednesday 2024-04-17 15:00]

கனடாவில் இந்த நிதியாண்டக்கான பாதீட்டுப் பற்றாக்குறை தொகை 39.2 பில்லியன் டொலர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கம் நேற்றைய தினம் பாதீட்டுத் திட்டத்தை சமர்ப்பித்திருந்து. நிதி அமைச்சர் கிறிஸ்டியா ப்ரீலாண்ட் சமர்ப்பித்திருந்தார்.



இஸ்ரேலுக்கு கடும் மிரட்டல் விடுத்த ஈரான்!
[Wednesday 2024-04-17 03:00]

பழி தீர்ப்பது உறுதி என்று இஸ்ரேல் அறிவித்துள்ள நிலையில், இதுவரை பயன்படுத்தாத ஆயுதங்களால் அடிப்போம் என்று ஈரானும் பதிலுக்கு மிரட்டல் விடுத்துள்ளது. ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு பழி தீர்ப்போம், விட்டுவிட மாட்டோம் என இஸ்ரேல் இன்று தெரிவித்துள்ளது. இதனால் எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலை மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ளது.



பேய் மழைக்கு மூழ்கிய துபாய்: சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!
[Wednesday 2024-04-17 03:00]

ஐக்கிய அரபு அமீரகத்தின் பெரும்பாலான பகுதிகளில் காலநிலை மோசமடைந்துள்ள நிலையில், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் தீவிரத்தன்மை கொண்ட அபாயகரமான காலநிலை முன்னறிவிக்கப்பட்டதை அடுத்து, குடியிருப்பாளர்களை மிகவும் விழிப்புடன் இருக்குமாறு அதிகார சபை கேட்டுக் கொண்டுள்ளது.


Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா