Untitled Document
April 25, 2024 [GMT]
லசந்த படுகொலைக்கு கோத்தாவே பொறுப்பு! - மகள் சாட்சியம்
[Tuesday 2017-01-17 18:00]

'சண்டே லீடர்' ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்கு முன்னாள் பாதுகாப்புச்செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவே பொறுப்புக் கூற வேண்டும் என அவுஸ்திரேலியாவில் உள்ள லசந்த விக்ரமதுங்கவின் மகள் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

'சண்டே லீடர்' ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்கு முன்னாள் பாதுகாப்புச்செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவே பொறுப்புக் கூற வேண்டும் என அவுஸ்திரேலியாவில் உள்ள லசந்த விக்ரமதுங்கவின் மகள் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

  

கொலை இடம்பெற சில தினங்களுக்கு முன்னர் தனது தந்தை தன்னிடம் தெரிவித்த விடயங்களை வெளிப்படுத்தியே அவுஸ்திரேலியாவில் வைத்து அவர் இவ்வாறு தமது விசாரணையாளர்களிடம் வாக்கு மூலம் வழங்கியதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்பு விசாரணை அதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நிசாந்த டி சில்வா கல்கிசை நீதிவான் நீதிமன்றுக்கு நேற்று அறிவித்தார்.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை வழக்கு நேற்றைய தினம் கல்கிசை பிரதான நீதிவான் மொஹம்மட் மிஹால் முன்னிலையில் நேற்று இடம்பெற்றது. இதன் போது லசந்தவின் கொலை வழக்குடன் இணைந்த சம்பவமான லசந்தவின் சாரதியை கடத்திச் சென்று மரண அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்பட்டு கைது செய்யப்பட்டு பிணையில் உள்ள இராணுவ புலனாயவுப் பிரிவின் சார்ஜன்ட் மேஜர் பிரேமானந்த உடலகம மன்றில் ஆஜராகியிருந்தார். அவர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி யுரான் லியனகே மன்றில் ஆஜராகியிருந்த நிலையில் பாதிக்கப்பட்ட தரப்பான லசந்த விக்ரமதுங்க குடும்பத்தினர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ். ரணகல பிரசன்னமானார்.

இந் நிலையில் மன்றுக்கு மேலதிக விசாரணை அறிக்கையுடன் முன்னிலையான விசாரணை அதிகாரியான சிறப்பு விசாரணையாளர் பொலிஸ் பரிசோதகர் நிசாந்த டி சில்வா, அவ்வறிக்கையை நீதிவான் மொஹம்மட் மிஹாலுக்கு சமர்பித்து பின் வருமாறு கருத்துக்களை முன் வைத்தார்.

,லசந்த விக்ரமதுங்கவின் படுகொலையின் போது பயன்படுத்தப்பட்ட தொலைபேசிகள் தொடர்பில் நாம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றோம். இதில் அக்கொலையுடன் தொடர்புடைய 5 சிம் அட்டைகள் தொடர்பில் நாம் தகவல்களை வெளிப்படுத்தினோம். இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில் அந்த சிம் அட்டைகள் புறக் கோட்டையில் உள்ள ஒரு விற்பனை நிலையத்தில் இருந்தே பெறப்பட்டுள்ளமையை நாம் உறுதி செய்தோம். அத்துடன் அந்த சிம் அட்டைகளுடன் பயன்படுத்திய தொலைபேசிகளையும் நாம் அடையாளம் கண்டுள்ளோம். பிரபல தொலைபேசி இறக்குமதி நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்ப்ட்டு விநியோகிக்கப்பட்டுள்ள நோக்கியா 1200 ரக தொலைபேசிகளே இக்கொலைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.

அந்த தொலைபேசிகளை விற்பனைச் செய்த விற்பனை நிலையத்தை கண்டறிய தொடர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளோம். தற்போது 50 விற்பனை நிலையங்கள் தொடர்பில் நாம் அவதானம் செலுத்தியுள்ளோம். இது தொடர்பில் இதுவரை 34 பேரிடம் வாக்கு மூலங்களைப் பதிவு செய்துள்ளோம். அத்துடன் லசந்தவின் கொலையின் பின்னர் அவரது கையடக்கத் தொலைபேசி காணாமல் போனது. அதனை சுதத் பெரேரா என்பவர் திருடியிருந்த நிலையில் கண்டுபிடித்தோம். அவரிடம் அது தொடர்பில் வாக்கு மூலம் பெற்றுள்ளோம். அவரது கை விரல் ரேகையைப் பெற்று, லசந்தவின் காரில் இருந்த கொலையாளியினுடையது என சந்தேகிக்கும் கைவிரல் ரேகையுடன் ஒப்பீடுச் செய்தோம். எனினும் அது பொருந்தவில்லை என எமக்கு அறிக்கை கிடைத்துள்ளது.

இதனைவிட ஏற்கனவே மன்றின் அனுமதியுடன் பெறப்பட்ட 266 இராணுவ வீரர்களின் கைவிரல் ரேகைகளை நாம் அந்த காரில் இருந்த ரேகையுடன் ஒப்பீடு செய்தோம். அதில் எதுவும் பொருந்திப் போகவில்லை என எமக்கு அறிக்கை கிடைத்தது. இந் நிலையில் மேலும் 326 இராணுவ வீரர்களின் கைவிரல் ரேகைகளை பரிசீலிக்க வேண்டியுள்ளது. இதனைவிட, லசந்த கொலை செய்யப்பட்ட பின்னர் அது குறித்த விசாரணைகளை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவே முதலில் முன்னெடுத்தது. இதன் போது பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளராக பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்ரா வாகிஸ்ட இருந்தார். இதன் போது முதலில் 17 இராணுவ புலனாயவாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இது தொடர்பில் நாம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்ரா வாகிஸ்டவிடம் விசாரணை செய்த போது, தனது விசாரணையில் அவர்கள் கைது செய்யப்படவில்லை எனவும் அவர்களை இராணுவமே அனுப்பி வைத்ததாகவும் கூறினார். இதனைத் தொடர்ந்து நாம் இராணுவத்திடம் அது குறித்து விளக்கம் கோரினோம். அதற்கு இராணுவம் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் அறிவித்தலை தொடர்ந்தே அந்த 17 பேரையும் அனுப்பியதாக குறிப்பிட்டனர்.

இதில் இருந்து பயங்கரவாத புலனாயவுப் பிரிவு அப்போது செய்த விசாரணை ஒரு கண் துடைப்பு வேலை என்பது புலனாகிறது. இந் நிலையில் நாம் அவுஸ்திரேலியாவில் உள்ள, லசந்த விக்ரமதுங்கவின் மகளிடம் அங்கு சென்று வாககு மூலம் ஒன்றினை பதிவு செய்தோம். அதில், தனது தந்தை இறப்பதுக்கு சில தினங்களுக்கு முன்னர் கூறியிருந்த விடயங்களை அவர் வெளிப்படுத்தினார்.

அப்போது தனது தந்தை மிக் விமான கொள்வனவு தொடர்பில் தனக்கு ஆபத்து வரலாம் என தெரிவித்ததாகவும் அவ்வாறு ஆபத்து ஏற்படின் அதற்கு அப்போதைய பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷவே பொறுப்புக் கூறவேண்டும் என சுட்டிக்காட்டியதாகவும் தெரிவித்தார்.

இதனைவிட லசந்தவின் சாரதி டயஸ் கடத்தப்பட்டமை தொடர்பில் நாம் சந்தேக நபராக உடலகமவை கைது செய்தோம். லசந்த கொலைக்கு கோத்தாவே காரணம் என டயஸ் சில இடங்களில் கூறியதனாலேயே அவர் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக எமது விசாரணைகளில் தெரியவந்தது. எனவே இவ்விடயத்துக்கும் லசந்தவின் மகளின் வாக்கு மூலத்துக்கும் இடையே வேறுபாடுகள் இல்லை என தெரிவித்தார்.

அதன் பின்னர் சந்தேக நபர் சார்பிலோ பாதிக்கப்பட்ட தரப்பு சார்பிலோ எந்த கருத்துக்களும் முன் வைக்கப்படாத நிலையில் வழக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிவான் மொஹம்மட் மிஹால் அறிவித்தார்.

  
   Bookmark and Share Seithy.com



படுகொலைகளுக்குப் பின்னால் இருந்த கோட்டா!
[Thursday 2024-04-25 06:00]

2005 ஆம் ஆண்டு ஜோசப் பரராஜசிங்கம் எம்.பி.,படுகொலை, 2006 ஆம் ஆண்டு ரவிராஜ் எம்.பி.படுகொலை ,2009 ஆம் ஆண்டு இறுதி யுத்த படுகொலைகள், 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆகிய 4 சம்பவங்களின் பின்னாலும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ,முன்னாள் ஜனாதிபதியுமான கோட்டாபாய ராஜபக்‌ஷவே இருந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. யான சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.



புலிகளுக்கு எதிராக போரிட்ட இராணுவத்தினர் உக்ரைன் - ரஷ்யாவில் தங்களுக்குள் மோதுகின்றனர்!
[Thursday 2024-04-25 06:00]

விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிராக போராடிய இலங்கை இராணுவத்தினர் இன்று உக்ரைன் மற்றும் ரஷ்யா இராணுவத்தில் சேர்ந்து மோதிக் கொள்கிறார்கள். இராணுவ முகாம் உதவியாளர்களாக இலங்கையர்கள் அழைக்கப்பட்டு பலவந்தமான முறையில் யுத்த களத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். சட்டவிரோதமான முறையில் முன்னெடுக்கப்படும் இச்செயற்பாடுகள் குறித்து அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.



உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகளுக்கு உயர்ந்தபட்ச தண்டனை!
[Thursday 2024-04-25 06:00]

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் தமது அரசாங்கத்தில் விசேட விசாரணை ஆணைக்குழுவின் ஊடாக விசாரணைகளை முன்னெடுப்போம். ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கமைய வழக்கு விசாரணை மேற்கொள்ள விசேட நீதிமன்றம் அமைத்து, தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரையும் சட்டத்தின் முன் கொண்டு வருவதுடன், அவர்களுக்கு வழங்கக் கூடிய உயர்ந்தபட்ச தண்டனையை வழங்கவும் நடவடிக்கை எடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.



இழுபறியில் தமிழரசு - வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!
[Thursday 2024-04-25 06:00]

திருகோணமலை நீதவான் நீதிமன்றில் புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி நிர்வாகத் தெரிவு தொடர்பான வழக்கு எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.



தலைமன்னார் சிறுமி கொலை குற்றவாளி பொலிஸ் துணையுடன் இந்தியாவுக்கு தப்பியோட்டம்!
[Thursday 2024-04-25 06:00]

தலைமன்னாரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த சம்பவத்தில் கைதான சந்தேக நபரான அப்துல் ரகுமான் என்ற நபர் வவுனியா வைத்தியசாலையிலிருந்து தப்பித்து இந்தியாவுக்கு சென்றுள்ளார். பொலிஸாரின் பொறுப்பற்ற செயற்பாடுகள் அதிருப்திக்குரியன என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸவிடம் கேள்வி எழுப்பினார்.



சூல கொடிதுவக்குவுக்கும் சஹ்ரானுக்கும் என்ன தொடர்பு?
[Thursday 2024-04-25 06:00]

பயங்கரவாதி சஹ்ரானுக்கும் இராணுவ புலனாய்வு பிரிவின் அப்போதைய பணிப்பாளர் சூலா கொடித்துவக்கும் இடையிலான தொடர்பு என்ன? களனி கம பகுதியில் வெடிபொருட்கள் அடங்கிய லொறியை சோதனை செய்ய பொலிஸார் முற்படுகையில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் அதற்கு தடை விதித்து வாகனத்தை விடுவிக்க அறிவுறுத்தியது ஏன்? என ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யான காவிந்த ஜயவர்தன கேள்வி எழுப்பினார்.



ஈரான் - இலங்கை ஜனாதிபதிகள் சந்திப்பு - 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!
[Thursday 2024-04-25 05:00]

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்கும் இடையில் நேற்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.



வெடுக்குநாறி மலை விவகாரம் - தொடர்கிறது மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணை!
[Thursday 2024-04-25 05:00]

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் வவுனியா மனிதவுரிமை ஆணைக்குழுவினரால் நெடுங்கேணிப் பொலிசார் மற்றும் வனவளத் திணைக்கள அதிகாரிகளிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.



பொய்கூறும் கோட்டாவின் புத்தகம்!
[Thursday 2024-04-25 05:00]

தன்னை தமிழ், முஸ்லிம் மக்களே விரட்டியடித்தார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளமை முற்றிலும் பொய்யானது. அவர் இவ்வாறாக சிறுபான்மை மக்கள் மீது குற்றச்சாட்டை முன்வைத்து தனது பாவத்தை கழுவிக்கொள்ள முயற்சிக்கின்றார்என ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி கபீர் ஹாசீம் தெரிவித்தார்.



இறக்குமதி பால்மா விலை குறைகிறது!
[Thursday 2024-04-25 05:00]

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை இன்று முதல் குறைக்கப்படவுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் பால்மா பக்கட்டின் விலை 250 ரூபாயினால் குறைக்கப்படவுள்ளது. அத்துடன், 400 கிராம் பால்மா பக்கட்டின் விலை 100 ரூபாயினால் குறைக்கப்படவுள்ளது.



மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளில் முன்னேற்றம் இல்லை! - அமெரிக்கா குற்றச்சாட்டு.
[Wednesday 2024-04-24 16:00]

1983ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டுவரை இடம்பெற்ற மனித உரிமை துஸ்பிரயோகங்கள் தொடர்பிலான விசாரணைகளில் சிறிதளவு முன்னேற்றமும் இல்லை அதேபோல 1988-89 ஜேவிபி கிளர்ச்சிகாலத்தில் இடம்பெற்ற மனித உரிமை துஸ்பிரயோகங்கள் குறித்த விசாரணைகளிலும் எந்த முன்னேற்றமும் இல்லை என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.



ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக சஜித் அறிவிப்பு!
[Wednesday 2024-04-24 16:00]

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்தார்.



உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் திறந்து வைப்பு!
[Wednesday 2024-04-24 16:00]

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி ஆகியோரின் தலைமையில் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது .



கைது செய்யத் தயாராக இருந்த இன்டர்போல்! - இலங்கை வராமலேயே நழுவிய ஈரான் அமைச்சர்.
[Wednesday 2024-04-24 16:00]

1994ம் ஆண்டு அர்ஜென்டினாவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் தொடர்பில் இலங்கைக்கு ஈரான் ஜனாதிபதியுடன் விஜயம் மேற்கொள்ளவிருந்த ஈரானின் உள்துறை அமைச்சரை கைதுசெய்ய வேண்டும் என ஆர்ஜென்டினா வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவில்லை ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது.



மைத்திரி, விஜயதாச, துஷ்மந்தவுக்கு நீதிமன்றம் தடை!
[Wednesday 2024-04-24 16:00]

கடந்த 21ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராகவும் பதில் பொதுச் செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்ட அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் சாரதி துஷ்மந்த ஆகியோருக்கு கொழும்பு பிரதான மாவட்ட நீதவான் சந்துன்விதான இரண்டு தடை உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.



நீதிபதி இளஞ்செயழியனின் பாதுகாப்பு அதிகாரி கொலை - விசாரணை தொடங்கியது!
[Wednesday 2024-04-24 16:00]

மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் அவரது மெய்ப்பாதுகாவலாரான பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்தமை மற்றும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்த சம்பவம் தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.



படகு இயந்திரத்தின் காற்றாடியில் சிக்கி மீனவர் பலி!
[Wednesday 2024-04-24 16:00]

மன்னார் -முத்தரிப்புத்துறையில் இருந்து கடற் தொழிலுக்கு சென்றவேளை படகு இயந்திரத்தின் காற்றாடி வெட்டியதில் மூன்று பிள்ளைகளின் தந்தையான தேவராஜா பீரிஸ் மரணமடைந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் தற்போது சிலாவத்துறை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.



ஜனாதிபதி வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது!
[Wednesday 2024-04-24 16:00]

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்த வேட்பாளர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.



சுதந்திரக் கட்சியில் இணைந்தவர் மொட்டு கட்சியில் இருக்க முடியாது!
[Wednesday 2024-04-24 16:00]

அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ பொதுஜன பெரமுனவின் அங்கத்தவராக இருக்கும் நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்துவம் பெறுவது தொடர்பில் பொதுஜன பெரமுனவின் ஒழுக்காற்று சபை விசாரணை நடத்தும் என கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.



சுற்றுலாப் பயணிகள் வருகை மந்தம்!
[Wednesday 2024-04-24 15:00]

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்நிலையில், ஏப்ரல் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளது.


Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா