Untitled Document
March 28, 2024 [GMT]
எம்.ஜி.ஆர் அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு செயல்பூர்வமான ஆதரவைத் தமிழகம் வழங்க வேண்டும்!
[Tuesday 2017-01-17 18:00]

பிரபல திரைப்பட நடிகரும்> அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினை நிறுவியவரும்;> முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சருமாக விளங்கிய மக்கள் திலகம் எம்.ஜி. இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) அவர்களது நூறாவது பிறந்தநாளை (17.01.2017) கொண்டாடும் உலகளாவிய தமிழ் மக்களுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தன்னையும் இணைத்துக் கொள்வதால் மகிழ்வடைகிறது.
தமிழக மக்கள் மத்தியில் மட்டுல்ல> ஈழத் தமிழ் மக்கள் மத்தியிலும் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு நீங்காத இடம் உண்டு. எம்.ஜி.ஆர் அவர்கள் ஒரு திரைப்பட நடிகராக ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் பிரபல்யம் பெற்றிருந்தாலும்  அவர் அனைத்து தமிழீழ மக்களின் நெஞ்சங்களிலும் குடி கொண்டமைக்கு முக்கிய காரணங்களாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மீதும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் மீதும் அவர் கொண்டிருந்த> காட்டிய அன்பும் ஆதரவுமே அமைந்தவை.

பிரபல திரைப்பட நடிகரும்> அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினை நிறுவியவரும்;> முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சருமாக விளங்கிய மக்கள் திலகம் எம்.ஜி. இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) அவர்களது நூறாவது பிறந்தநாளை (17.01.2017) கொண்டாடும் உலகளாவிய தமிழ் மக்களுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தன்னையும் இணைத்துக் கொள்வதால் மகிழ்வடைகிறது. தமிழக மக்கள் மத்தியில் மட்டுல்ல> ஈழத் தமிழ் மக்கள் மத்தியிலும் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு நீங்காத இடம் உண்டு. எம்.ஜி.ஆர் அவர்கள் ஒரு திரைப்பட நடிகராக ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் பிரபல்யம் பெற்றிருந்தாலும் அவர் அனைத்து தமிழீழ மக்களின் நெஞ்சங்களிலும் குடி கொண்டமைக்கு முக்கிய காரணங்களாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மீதும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் மீதும் அவர் கொண்டிருந்த> காட்டிய அன்பும் ஆதரவுமே அமைந்தவை.

  

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சிக்கு எம்.ஜி.ஆர் அவர்கள் காத்திரமான பங்களிப்பை வழங்கியிருந்தார்கள். தேசத்தின் குரல் அன்ரன்; பாலசிங்கம் அவர்கள் தான் எழுதிய நூல்களில் எம்.ஜி.ஆர் அவர்கள் ஆற்றிய பங்களிப்பை விதந்துரைத்திருந்தமை இங்கு குறிப்பிடத்துக்கது.

இந்திய அரசியற் சூழலில் ஈழத் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் தொடர்பாக தமிழ்நாடு மாநில அரசாங்கம் ஆற்றக்கூடிய பங்கு இந்திய மத்திய அரசின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டு அமைவதே யதார்த்தமாக இருந்து வருகிறது. எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் இத்தகைய சூழலுக்கு உட்பட்டு நடக்க வேண்டிய நிலை இருந்த போதும் அவர் தனது துணிச்சலான நடவடிக்கைகளாலும்> தனது உதவி செய்யும் பண்பாலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் உறுதுணையாக இருந்திருக்கிறார்.

தான் முதலமைச்சராக இருந்த போது தனக்கு உடன்பாடில்லாத விடயங்களுக்குத் துணச்சலான விதத்தில் கண்டனங்களையும் தெரிவித்திருக்கிறார். தியாக தீபம் திலீபன் அறப்போராட்டத்தில் ஆகுதியாகியபோது அமெரிக்காவின் புருக்லின் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த எம்.ஜி.ஆர் அவர்கள்; ஆழ்ந்த வேதனை அடைந்ததோடு தமிழ்நாடு மக்கள் சார்பாகத் தனது அஞ்சலியையும் தெரிவித்திருந்தார்;. தளபதிகள் குமரப்பா> புலேந்திரன் உட்பட்ட போராளிகளின் உயிரிழப்பு நடைபெற்ற போது தனது கண்டனத்தையும் வெளிப்படுத்தியிருந்தார். எம்.ஜி.ஆர் அவர்கள் இன்னும் கூடுதலான காலம் உயிர் வாழ்ந்திருந்தால் தமிழீழ மக்களின் தேசிய சுயநிர்ணய உரிமைப் போராட்டத்துக்கும் ஈழத் தமிழ் மக்களுக்கும் ஒரு காப்பரணாக இருந்திருப்பார் என்ற எண்ணம் தமிழ் மக்கள் பலரிடம் உண்டு.

தற்போதய காலகட்டத்தில் தமிழீழ மக்களுக்குத் தமிழக மக்களின் செயல்ரீதியான அரசியல் ஆதரவு தேவைப்படுகிறது. நல்லாட்சி என்று கூறிக்கொண்டு மாயமான் வேடமிட்டு உலவும் தற்போதய சிறிலங்கா ஆட்சியாளர்கள் மீது தமிழ் மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டிய இக் காலகட்டத்தில்;> சிறிலங்காவின் சூழ்ச்சித்தனமான செயற்பாடுகளை முறியடிக்க வேண்டிய இத் தருணத்தில் தமிழக அரசினதும் அரசியற்கட்சிகளதும் தமிழ் மக்களதும் செயற்பூர்வமான பங்களிப்பு அத்தியாவசியமானது.

திரு எம்.ஜி.ஆர் அவர்களது ஆதரவும் பங்களிப்பும் எப்போதுமே செயல்வடிவம் கொண்டிருந்தன. எம்.ஜி.ஆர் அவர்களின் நூறாவது பிறந்தநாளைக் கொண்டாடும் இவ் வேளையில்> அவரது செயல்பூர்வமான பங்களிப்பை முன்னுதாரணமாகக் கொண்டு தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவாக அவர் ஆற்றிய பங்கினைப் போன்ற பங்கினை முன்னெடுக்க வருமாறு எம்.ஜி.ஆர் அவர்களால் உருவாக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திடமும் தமிழ்நாடு மாநில அரசாங்கத்திடமும் நாம் வேண்டுகோள் விடுக்கிறோம்.

எம்.ஜி.ஆர் அவர்களை நேசிக்கும்> மதிக்கும் அனைத்து அரசியற் தலைவர்களும் அவரை முன்மாதிரியாகக் கொண்டு ஈழத் தமிழ் மக்களின் விடுதலைக்குச் செயல்வடிவம் கொண்ட பங்களிப்பை வழங்க வேண்டும் எனக் கோருகிறோம். எம்.ஜி.ஆர் அவர்கள் மீது மாறாத அன்பு கொண்ட மக்கள் எல்லோரும் ஈழத் தமிழ் மக்கள் மீது என்றும் பாசமும் தோழமையுணர்வும் கொண்டிருப்பார்கள் என்பதும் தமிழகத்தின் பங்களிப்புக்கு எப்போதும் அடித்தளமாக இருப்பார்கள் என்பதும் நமது நம்பிக்கை.

எம்.ஜி.ஆர் அவர்கள் புகழ் ஓங்குக! நாளை நமதே!!

தமிழரின் தாகம்! தமிழீழத் தாயகம்!

விசுவநாதன் ருத்திரகுமாரன்

பிரதமர்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

  
   Bookmark and Share Seithy.com



ஞானசார தேரருக்கு 4 வருட கடூழியச் சிறைத்தண்டனை! Top News
[Thursday 2024-03-28 16:00]

குரகல விகாரையில் இஸ்லாமிய மதத்திற்கு எதிராக வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக பொதுபல சேனா பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.



முன்னாள் போராளி பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது!
[Thursday 2024-03-28 16:00]

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்த குற்றச்சாட்டின் பேரில் வவுனியாவைச் சேர்ந்த அரவிந்தன் என்ற முன்னாள் போராளி பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.



இலங்கை நாணயத்தின் மதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு!
[Thursday 2024-03-28 16:00]

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295 ரூபாய் 54 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 305 ரூபாய் 33 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.



இலங்கையின் ஆட்சி முறையில் மாற்றங்கள் வேண்டும்!
[Thursday 2024-03-28 16:00]

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வை காண்பதற்கு இலங்கையின் ஆட்சி முறையில் மாற்றங்கள் இடம்பெறவேண்டும் என இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை தெரிவித்துள்ளது.



சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவன் விபத்தில் பலி!
[Thursday 2024-03-28 16:00]

மட்டக்களப்பு - பெரியகல்லாறு பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில், இம்முறை சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.



அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!
[Thursday 2024-03-28 16:00]

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐந்து பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



புன்னாலைக்கட்டுவன் விபத்தில் முதியவர் பலி!
[Thursday 2024-03-28 16:00]

யாழ்ப்பாணம் -புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நேற்று மாலை இடம் பெற்ற வீதி விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிறிய ரக உழவு இயந்திரமொன்றில் புல் ஏற்றுக் கொண்டிருந்த போது லொறி ஒன்று மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பாக சுன்னாகம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



ஜனாதிபதி ரணிலுக்கு மக்களாணை இல்லை!
[Thursday 2024-03-28 16:00]

நாடாளுமன்றத்தின் ஊடாக அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதிக்கு மக்களாணை கிடையாது என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.



பணவீக்கம் சடுதியாக குறைந்தது!
[Thursday 2024-03-28 16:00]

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையில் இலங்கையின் பணவீக்கம் மார்ச் மாதத்தில் 0.9 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது முந்தைய மாதத்தில் 5.9 சதவீதமாக பதிவாகியிருந்தது.



வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட யுவதி!
[Thursday 2024-03-28 16:00]

வவுனியா, சமனங்குளம் பகுதியில் இருந்து 23 வயது யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம் பொலிஸார் இன்று தெரிவித்தனர்.



தனிநபரின் மாதாந்த செலவு அதிகரிப்பு!
[Thursday 2024-03-28 16:00]

தனிநபர் ஒருவரின் மாதாந்த செலவு அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.



பசிலின் பதவி நாமல் வசமானது!
[Thursday 2024-03-28 16:00]

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார். அக்கட்சியின் நிறைவேற்று சபை கூட்டம் நேற்று பிற்பகல் கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க இதை தெரிவித்தார்.



முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் விபத்தில் பலி!
[Thursday 2024-03-28 16:00]

வவுனியா, ஓமந்தையில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் மரணமடைந்துள்ளார்.



அரிசி, பெரிய வெங்காயத்திற்கான விசேட பண்ட வரி குறைப்பு!
[Thursday 2024-03-28 16:00]

அரிசி மற்றும் பெரிய வெங்காயத்திற்கான விசேட பண்ட வரி இன்று முதல் குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி ஒரு கிலோ கிராம் அரிசிக்கு 65 ரூபாவாக இருந்த விசேட பண்ட வரி நேற்று முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதி வரை ஒரு ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.



இந்திய மீனவர்கள் மூவருக்கு சிறைத்தண்டனை!
[Thursday 2024-03-28 16:00]

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 36 தமிழக கடற்தொழிலாளர்ககளில் மூவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் , ஏனைய 33 பேருக்கும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.



வட, கிழக்கில் வழிபாட்டுத்தலங்களை இலக்கு வைத்த காணி அபகரிப்புகளால் பதற்றம் அதிகரிப்பு!
[Tuesday 2024-03-26 18:00]

இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்ந்தும் கரிசனைக்குரியதாகவே காணப்படுகின்றது. நாட்டின் வட, கிழக்கு மாகாணங்களில் காணி அபகரிப்புக்கள் அதிகரித்து வருவதுடன், சிலவேளைகளில் அவை மத வழிபாட்டுத்தலங்களை இலக்கு வைத்தவையாகக் காணப்படுகின்றன. இவ்வாறான செயற்பாடுகள் சமூகங்களுக்கு இடையில் பதற்றத்தைத் தோற்றுவித்துள்ளன என்று பிரிட்டனின் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம் தெரிவித்துள்ளது.



கீரிமலையில் காணி அபகரிப்பு முயற்சி - உரிமையாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் அளவீடு இடைநிறுத்தம்! Top News
[Tuesday 2024-03-26 18:00]

யாழ்ப்பாணம் - கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி நடவடிக்கைக்காக சுவீகரிக்கும் அடிப்படையில் அளவீடு செய்வதற்கு நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் இன்று காலை 10 மணியளவில் வருகை தந்திருந்தனர்.



இலங்கை நோக்கி புறப்பட்ட “டாலி“யே அமெரிக்க பாலத்தை தகர்த்தது!
[Tuesday 2024-03-26 18:00]

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் அமைந்துள்ள பால்டிமோர் பாலம் மீது சரக்கு கப்பல் ஒன்று ​மோதியதில் குறித்த பாலம் இடிந்து வீழ்ந்துள்ளது. குறித்த சரக்கு கப்பல் இலங்கை நோக்கிச் சென்ற கப்பல் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.



அக்குபஞ்சர் சிகிச்சை பெற்றவர் கிருமித் தொற்று ஏற்பட்டு மரணம்!
[Tuesday 2024-03-26 18:00]

அக்குபஞ்சர் சிகிச்சை பெற்றுக்கொண்ட யாழ் அச்சுவேலி கிழக்கு பகுதியை சேர்ந்த மாணிக்கம் சற்குணராஜா (வயது 64) என்பவர் கிருமித் தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.



மைத்திரியின் வாக்குமூலம் - பொய்த்தகவல்கள் பரவுவதாக சுதந்திரக் கட்சி குற்றச்சாட்டு!
[Tuesday 2024-03-26 18:00]

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு வழங்கிய வாக்குமூலம் தொடர்பில் பிரதான ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பொய்யான மற்றும் திரிபுபடுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகி வருவதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. இது போன்ற தவறான மற்றும் திரிபுபடுத்தப்பட்ட அறிக்கைகளை கண்டிப்பதாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.


Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா