Untitled Document
April 25, 2024 [GMT]
ஆவிகளுடன் பேசுவது பெண்களை வசியம் செய்வது..: - பொலிஸையே அதிரவைத்த மந்திரவாதி!
[Saturday 2017-03-11 17:00]

பில்லி, சூனியம், மாந்திரீக வகுப்பு கற்றுக்கொடுப்பதற்காக  பெண்ணின் சடலத்தை பதப்படுத்தி பெட்டிக்குள் வைத்திருந்து பூஜை செய்த மந்திரவாதி கார்த்திக் உள்பட நான்கு பேரை பெரம்பலூர் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு நடந்ததை போன்று தற்போதும் இதேபோன்று நடந்துள்ள சம்பவம் பெரம்பலூர் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம், நகராட்சி அலுவலக பின்புறத்தில் உள்ள எம்.எம்.நகரில் ஒரு வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக வந்த தகவலின் பேரில் போலீஸார் அந்தவீட்டில் சோதனை நடத்தினர். அப்போது, பில்லி சூனியம் கற்றுகொடுப்பதற்காக வீட்டில் பெண்ணின் சடலத்தை பதப்படுத்தி வைத்திருந்து மாந்த்ரீகம் செய்தது தெரியவந்தது. அதன் பெயரில் நால்வரை கைது செய்ததுமட்டுமில்லாமல் இங்கு பெண் சடலம் எப்படி வந்தது, யார் இந்த பெண், என்ற பல கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர் போலீஸார்.

பில்லி, சூனியம், மாந்திரீக வகுப்பு கற்றுக்கொடுப்பதற்காக பெண்ணின் சடலத்தை பதப்படுத்தி பெட்டிக்குள் வைத்திருந்து பூஜை செய்த மந்திரவாதி கார்த்திக் உள்பட நான்கு பேரை பெரம்பலூர் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு நடந்ததை போன்று தற்போதும் இதேபோன்று நடந்துள்ள சம்பவம் பெரம்பலூர் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம், நகராட்சி அலுவலக பின்புறத்தில் உள்ள எம்.எம்.நகரில் ஒரு வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக வந்த தகவலின் பேரில் போலீஸார் அந்தவீட்டில் சோதனை நடத்தினர். அப்போது, பில்லி சூனியம் கற்றுகொடுப்பதற்காக வீட்டில் பெண்ணின் சடலத்தை பதப்படுத்தி வைத்திருந்து மாந்த்ரீகம் செய்தது தெரியவந்தது. அதன் பெயரில் நால்வரை கைது செய்ததுமட்டுமில்லாமல் இங்கு பெண் சடலம் எப்படி வந்தது, யார் இந்த பெண், என்ற பல கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர் போலீஸார்.

  

இது குறித்து போலீஸாருக்கு புகார் கொடுத்த குமார் என்பவருடன் பேசினோம். "பெரம்பலூர் கல்யாண் நகரைச்சேர்ந்த கார்த்திக். இவர் எம்.எம்.நகரிலுள்ள வாடகை வீட்டில் நான்கு வருடமாக வசித்து வருகிறார். இவர், ஆண்டவனோடு மட்டுமில்லாமல் இறந்து போனவர்களோடு பேசுவதாகவும் அதை கற்றுக்கொடுப்பதாகவும் பல சொல்லுவார்கள். இவரிடம் உள்ளூர் மக்கள் யாரும் பேசமாட்டார்கள். ஆனால், கேரளா, ஆந்திரா, கர்நாடகா என வெளிமாநிலத்திலிருந்து பலர் விலை உயர்ந்த கார்களில் கார்த்திக் வீட்டிற்கு வருவார்கள். காலையில் வந்தால் அடுத்தநாள் காலையில்தான் அவர்கள், அறையை விட்டுவெளியே வருவார்கள். எதற்கு வருகிறார்கள், என்ன செய்கிறார்கள் என்று எங்களுக்கு தெரியாது. நேற்று மதியம் கார்த்திக் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. இவர், ஏதோ செய்கிறார் என்ற சந்தேகத்தின் பெயரில்தான் போலீஸுக்கு தகவல் தெரிவித்தேன். போலீஸார் அந்த வீட்டிற்குள் சென்று பார்த்தபோதுதான் மண்டை ஓடு, எல்லையில் அமைந்திருக்கும் உக்கிரகாளியின் சிலைகள் அருகே பெண்ணின் உடல் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுமட்டுமில்லாமல், எலுமிச்சை பழங்கள், பில்லி சூனியத்துக்கு பயன்படுத்தும் கறுப்பு மை, நிறைய கிண்ணத்தில் கறுப்பு கறுப்பாக என்னென்னமோ இருந்தது. பிறகுதான் தெரிந்தது, வெளிமாநிலத்திலிருந்து வருபவர்கள் அந்த வீட்டில், பில்லி சூனியம், வகுப்பு கற்றுக்கொண்டுள்ளார்கள் மட்டுமில்லாமல், இறந்தவர்களின் ஆவிகளுடன் உறவினர்களை பேச வைப்பதற்கான பூஜைகளும் நடந்துள்ளது. அதற்குண்டான தடயங்களும் இருந்தது. இதைப்பார்த்த, போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். அதே போல் பெண்களையும், ஆண்களையும் வசியம் செய்வது மற்றும் பல்வேறு பிரச்னைகளை மந்திரம் மூலம் தீர்த்துவைப்பதாக கூறி தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் வருபவர்களுக்கு வகுப்பு எடுத்துள்ளது அவர், வைத்திருந்த கம்ப்யூட்டரில் இருந்தது. இந்த கம்ப்யூட்டரை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். கடந்த ஏப்ரல் 18ம் தேதி மந்திரவாதி கார்த்திக் கும்பல் ஒருமுறை போலீஸாரிடம் சிக்கியது.

பெரம்பலூர் அடுத்து நாரணமங்கலம் அருகே உள்ள மருதடி கிராமத்தில் இரவு நேரத்தில் நரபலி கொடுக்கிறார்கள் என்று பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரின் பாடாலூர் போலீஸார், அந்த கும்பல் அமைத்திருந்த குடிலுக்குள் சென்று சோதனை செய்ததில், நரபலி கொடுத்தது, மண்டை ஓடு, பன்றித்தலை போன்றவைகளை வைத்திருந்தார்கள். இந்த குற்றத்துக்காக மந்திரவாதி கார்த்திக் மற்றும் கூட்டாளிகள் சித்திக், சலீம், சாதிக், ராம்குமார் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இப்போது, நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கார்த்திக் உண்மையான மந்திரவாதியா, இல்லை மக்களை ஏமாற்றி பணம் பறிக்கிறாரா என்பதை முதலில் கண்டுப்பிடிக்க வேண்டும்.கடந்த ஆண்டு இந்த கும்பல் போலீஸாரிடம் சிக்கிக்கொண்ட பிறகும் மீண்டும் இந்த தொழில் செய்கிறார்கள் என்றால், இவர்களுக்கு யார் பின் புலமாக இருப்பது. இவர்களால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை போலீஸார் தெளிவுப்படுத்தவேண்டும். இவர்கள் இங்கு மட்டும்தான் இந்த தொழில் செய்துகொண்டிருக்கிறார்களா, இல்லை வேறு எங்கும் கிளைவைத்து நடத்தி மக்களை ஏமாற்றிகொண்டிருக்கிறார்களா என்று விசாரிக்கவேண்டும். இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் இவர்கள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்" என்று ஆவேசப்பட்டார் குமார்.

விசாரணை நடத்திவரும் போலீஸ் வட்டாரத்தில் பேசியபோது, "இவர்கள் புதிதாக சிக்கவில்லை. ஏற்கனவே மருதடி கிராமத்தில் நரபலி கொடுத்ததாக நாங்களே பிடித்தோம். இப்போது இரண்டாவது முறை சிக்கியிருக்கிறார்கள். கொலை செய்யப்பட்ட பெண் யார். அவர் எந்த ஊரை சேர்ந்தவர், இறந்த சடலம் நரபலி கொடுக்கப்பட்டதா அல்லது மருத்துவமனையில் இருந்து விலைக்கு வாங்கப்பட்டுள்ளதா என்ற கோணத்திலும், விசாரணை நடத்தி வருகின்றோம். இப்போதுதான், விசாரணை நடந்துக்கொண்ருக்கிறது. விசாரணை முடிந்த பிறகு பேசுகிறோம்" என்றார்கள்.

  
   Bookmark and Share Seithy.com



தமிழகத்தில் மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்!
[Thursday 2024-04-25 18:00]

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.



“தேர்தல் அறிக்கையை விளக்க வேண்டும்” - பிரதமரை சந்திக்க நேரம் கேட்ட கார்கே!
[Thursday 2024-04-25 18:00]

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.



தமிழகத்தை உலுக்கிய வழக்கில் நாளை தீர்ப்பு!
[Thursday 2024-04-25 18:00]

தமிழகத்தில் பேராசிரியை நிர்மலாதேவி, கல்லூரி மாணவிகளை தவறான வழியில் ஈடுபடுத்த முயன்ற வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாக உள்ளது. 2018 ஆண்டில் கல்லூரி மாணவிகள் சிலரை, ஆசைவார்த்தை கூறி பாலியல் ரீதியாக பயன்படுத்த முயன்றதாக பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார்.



பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு!
[Thursday 2024-04-25 18:00]

பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக எழுந்த புகாரினைத் தொடர்ந்து, விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் கடந்த 19ஆம் திகதி தொடங்கி, 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதற்கான பிரச்சாரங்களில் கட்சி பிரமுகர்கள் ஈடுபட்டு வருகின்றன.



“ஒரு கட்சி அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறை” - ராகுல் காந்தி!
[Thursday 2024-04-25 06:00]

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.



“வீரர்களுடைய மனைவிகளின் தாலியைப் பறித்தது யார்?” - டிம்பிள் யாதவ் கேள்வி!
[Thursday 2024-04-25 06:00]

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.



“ராகுல் காந்தி மாவோயிஸ்ட் தலைவர் என்று நினைக்கிறாரா?” - தேவகவுடா தாக்கு!
[Thursday 2024-04-25 06:00]

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.



தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியின் தோற்றத்தை வைத்து கிண்டல்: பெருகும் ஆதரவு!
[Wednesday 2024-04-24 18:00]

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியின் தோற்றத்தை வைத்து கிண்டல் செய்யும் நெட்டிசன்களுக்கு எதிரான கருத்துக்களை பலரும் தெரிவித்து வருகின்றனர். இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், சீதாபூரைச் சேர்ந்த மாணவி பிராச்சி நிகம் (Prachi Nigam). இவர், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 98.5 சதவிகித மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளார்.



உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சை மேற்கொண்ட இளைஞர் மரணம்!
[Wednesday 2024-04-24 18:00]

உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சைக்கு சென்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி முத்தியால்பேட்டை டி.வி. நகரைச் சேர்ந்தவர் செல்வநாதன். இவருக்கு, ஹேமசந்திரன், ஹேமராஜன் (26) என்று இரட்டை ஆண் மகன்கள் உள்ளனர். இதில் ஹேமசந்திரன் பி.எஸ்.சி. ஐ.டி. முடித்து டிசைனிங் பணியிலும், ஹேமராஜன் சித்தா பார்மசிஸ்ட் பணியிலும் இருந்தனர்.



பெற்றோர்களுக்கு தமிழக அரசு விடுத்துள்ள எச்சரிக்கை!
[Wednesday 2024-04-24 18:00]

குழந்தைகள் ஸ்மோக் பிஸ்கட் உட்கொள்ள வேண்டாம் எனவும், உயிருக்கு ஆபத்து எனவும் தமிழக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் ஸ்மோக் பிஸ்கட் உட்கொண்ட சிறுவன் ஒருவன் வலியால் துடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



மோடி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்: சீமான் ஆவேசம்!
[Wednesday 2024-04-24 18:00]

இசுலாமியப் பெருமக்கள் மீது வெறுப்பை உமிழும் பேச்சுக்கு பிரதமர் மோடி பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இது தொடர்பாக சீமான் வெளியிட்ட அறிக்கையில், "இராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பரப்புரையின்போது இசுலாமியப் பெருமக்களை இழிவுப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி பேசியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.



'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி!
[Wednesday 2024-04-24 06:00]

'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள்.



பாபநாசம் பட பாணியில் கொலை: போலீசாரே அதிர்ந்த சம்பவம்!
[Wednesday 2024-04-24 06:00]

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.



'பஞ்சுமிட்டாய் போல நைட்ரஜன் பிஸ்கட் தடை செய்யப்படுமா?
[Wednesday 2024-04-24 06:00]

நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் துடிதுடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் நைட்ரஜன் பிஸ்கட்டுக்கு எதிராக பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். அண்மையில் சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோ ஒன்றில் நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்தான். இது தொடர்பான தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதில் அந்தச் சிறுவன் உயிரிழந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.



பள்ளிக்கரணை ஆணவக்கொலை சம்பவத்தில் மீண்டும் அதிர்ச்சி!
[Tuesday 2024-04-23 18:00]

சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு காதல் திருமண எதிர்ப்பால் இளைஞர் ஒருவர் ஓட ஓட வெட்டி ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் கொலையான இளைஞனின் காதல் மனைவியும் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



4 கோடி ரூபாய் சிக்கிய விவகாரம்: விடுதி ஊழியர்கள் காவல் நிலையத்தில் ஆஜர்!
[Tuesday 2024-04-23 18:00]

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.



அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவிற்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!
[Tuesday 2024-04-23 18:00]

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த எம்.பி. சஞ்சய் சிங், சன்பிரீத் சிங் எனப் பலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.



ராமர் புகைப்படம் உள்ள பிளேட்டில் சிக்கன் பிரியாணி: சர்ச்சையில் சிக்கிய ஹொட்டல்!
[Tuesday 2024-04-23 18:00]

ராமர் புகைப்படம் பொறிக்கப்பட்ட பிளேட்டுகளில் சிக்கன் பிரியாணி விற்பனை செய்யப்பட்ட ஹொட்டலை இந்து அமைப்பை சேர்ந்த சிலர் அடித்து நொறுக்கியுள்ளனர். சமீப காலமாக கடவுள் ராமரை வைத்து சர்ச்சைகள் வந்தவண்ணம் உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் ராமரை பாஜக அடையாளப்படுத்துவது தான்.



தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்!
[Tuesday 2024-04-23 06:00]

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.



'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன்!
[Tuesday 2024-04-23 06:00]

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன. இந்நிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார்.


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா