Untitled Document
April 18, 2024 [GMT]
எழுபதாயிரம் இளைஞர்களும் நினைத்தால் மாற்றத்தைக் கொண்டு வரலாம்: - சீமான்
[Tuesday 2017-04-04 12:00]


ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அ.தி.மு.கவின் இரு அணிகளும் பிரசாரத்தில் வேகத்தைக் கூட்டத் தொடங்கிவிட்டன. தி.மு.க முகாம்களில் பெரிதாக எந்த உற்சாகமும் இல்லை. ' மக்கள் மனதில் மாற்றம் உருவானால், மிகப் பெரிய திருப்புமுனையாக தேர்தல் நாள் அமையும். அதற்கு முன்னால், இந்த நோட்டாவுக்கு ஓட்டுப் போடுகிறவர்களின் மனநிலையிலும் மாற்றம் வர வேண்டும்' எனக் கொந்தளிக்கிறார் சீமான். அ.தி.மு.க அம்மா அணியின் வேட்பாளர் தினகரனும் அ.தி.மு.க புரட்சித் தலைவி அம்மா அணியின் வேட்பாளர் மதுசூதனனும் ஆர்.கே.நகரில் புழுதைக் கிளப்பிக் கொண்டு பிரசாரம் செய்கின்றனர். தெருவுக்குத் தெரு தொப்பி சின்னத்தைக் கொண்டு சேர்க்கும் பணியில் அ.தி.மு.க அமைச்சர்கள் வேகம் காட்டுகின்றனர். பூத் வாரியாக பணத்தை தண்ணீராக இறைக்கின்றனர் ஆளும்கட்சி அமைச்சர்கள். பன்னீர்செல்வம் தரப்பில் நிர்வாகிகள் பலம் இல்லாவிட்டாலும், ஜெயலலிதா மரணத்தை சாட்சியாக வைத்துக் கொண்டு தொகுதிக்குள் வலம் வருகின்றனர். தி.மு.க வேட்பாளர் மருது கணேஷ், பா.ஜ.கவின் கங்கை அமரன், சி.பி.எம் வேட்பாளர் லோகநாதன் உள்ளிட்டவர்களும் தீவிரமாக வலம் வருகின்றனர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அ.தி.மு.கவின் இரு அணிகளும் பிரசாரத்தில் வேகத்தைக் கூட்டத் தொடங்கிவிட்டன. தி.மு.க முகாம்களில் பெரிதாக எந்த உற்சாகமும் இல்லை. ' மக்கள் மனதில் மாற்றம் உருவானால், மிகப் பெரிய திருப்புமுனையாக தேர்தல் நாள் அமையும். அதற்கு முன்னால், இந்த நோட்டாவுக்கு ஓட்டுப் போடுகிறவர்களின் மனநிலையிலும் மாற்றம் வர வேண்டும்' எனக் கொந்தளிக்கிறார் சீமான். அ.தி.மு.க அம்மா அணியின் வேட்பாளர் தினகரனும் அ.தி.மு.க புரட்சித் தலைவி அம்மா அணியின் வேட்பாளர் மதுசூதனனும் ஆர்.கே.நகரில் புழுதைக் கிளப்பிக் கொண்டு பிரசாரம் செய்கின்றனர். தெருவுக்குத் தெரு தொப்பி சின்னத்தைக் கொண்டு சேர்க்கும் பணியில் அ.தி.மு.க அமைச்சர்கள் வேகம் காட்டுகின்றனர். பூத் வாரியாக பணத்தை தண்ணீராக இறைக்கின்றனர் ஆளும்கட்சி அமைச்சர்கள். பன்னீர்செல்வம் தரப்பில் நிர்வாகிகள் பலம் இல்லாவிட்டாலும், ஜெயலலிதா மரணத்தை சாட்சியாக வைத்துக் கொண்டு தொகுதிக்குள் வலம் வருகின்றனர். தி.மு.க வேட்பாளர் மருது கணேஷ், பா.ஜ.கவின் கங்கை அமரன், சி.பி.எம் வேட்பாளர் லோகநாதன் உள்ளிட்டவர்களும் தீவிரமாக வலம் வருகின்றனர். " இப்போது பிரசாரத்துக்காக தொகுதிக்குள் வந்திருக்கிறேன்.

  

எனக்கு முன்னால் தினகரன் பேசிக் கொண்டு போகிறார். மிகுந்த நெரிசலாக இருக்கிறது. குறுகலான தெருவுக்குள் வாக்காளர் பட்டியலுடன் சிலர் அமர்ந்து கொண்டு, பணத்தை விநியோகிக்கின்றனர். இந்தக் காட்சிகளைப் பார்க்கும்போதே அருவருப்பாக இருக்கிறது" எனக் கொந்தளிப்போடு பேசத் தொடங்கினார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். தொடர்ந்து நம்மிடம் பேசினார்." வழக்கத்துக்கு மாறாக பணப்புழக்கம் அதிகரித்துள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில் மழையைப் போலப் பணம் பொழிகிறது. இதையும் மீறி இளைஞர்கள் கூட்டம், எங்களை நம்பிக்கையோடு பார்க்கிறது. மாற்றத்துக்கான தொடக்கமாகவும் இந்தத் தேர்தல் அமையலாம். எழுபதாயிரம் இளைஞர் வாக்குகள் ஆர்.கே.நகரில் நிறைந்து இருக்கின்றன. இவர்கள் நினைத்தால் மாற்றத்தைக் கொண்டு வரலாம். எங்களைப்போல் வீடு வீடாகச் சென்று வாக்குகளைச் சேகரிக்கும் வேலையில் எந்த வேட்பாளரும் இறங்கவில்லை. பணம் கொடுப்பவர்களை அரசியலை விட்டே அப்புறப்படுத்த வேண்டும். மிகப் பெரிய புரட்சி வராமல், இவற்றையெல்லாம் ஒன்று செய்துவிட முடியாது. அதேபோல், நோட்டாவுக்குப் போடும் இளைஞர்களும் மாற வேண்டும். நோட்டாவுக்குப் போடுகின்றவர்கள் அரசியலுக்கு வரட்டும். நான் அவர்களுக்கு ஓட்டுப் போடுகிறேன். எதுவுமே சரியில்லை என்று சொல்லிக் கொண்டே இருந்தால், அது ஒரு பைத்தியக்கார மனநிலை. தவறைச் சரி செய்யக் களமிறங்குபவன் செயல்வீரன். வெறுமனே ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு எதுவும் சரியில்லை என்றால், எப்படிச் சரியாகும்?

2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, மதுரை செல்லும் விமானத்தில் என்னுடன் ஒருவர் பயணித்தார். அப்போது நாங்கள் தேர்தலில் போட்டியிடவில்லை. ' ஓட்டுப் போடுவதற்காக வந்திருக்கேன்' என்றார். 'பரவாயில்லை. இவ்வளவு பொறுப்பாக இருக்கிறாராரே' என மனதில் நினைத்துக் கொண்டு, 'யாருக்கு ஓட்டுப் போடப் போகிறீர்கள்?' என்றேன். 'நான் நோட்டாவுக்குத்தான் போடுவேன்' என்றார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்து, அரை மணி நேரம் அவருக்குப் பாடம் நடத்தினேன். யாருக்கும் போடாமல் இருப்பதும் நோட்டாவுக்குப் போடுவதும் ஒன்றுதான். நன்றாக சமைத்துவிட்டு அந்த உணவைக் குப்பையில் கொட்டுவதைப் போலத்தான் நோட்டாவுக்கு ஓட்டுப் போடுவதும். இதனால் என்ன நடந்துவிடப் போகிறது? இந்த நாட்டின் ஜனநாயகம், தேர்தல் முறை, வேட்பாளர் என யாரையும் பிடிக்கவில்லை என்றாலும், அந்த எதிர்பைக் களத்தில் நின்றுதான் பதிவு செய்ய வேண்டும்.

ஆர்.கே.நகரில் 61 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில் யாரையும் பிடிக்கவில்லையென்றால், என்ன மனநிலையில்தான் இந்த இளைஞர்கள் இருக்கிறார்கள்? வைக்கோலை நாயும் தின்னாது. தின்ன வரும் மாட்டையும் தின்ன விடாது என்பது போலத்தான் நோட்டா வாக்குகள் வீணாகின்றன. இதனால் எந்தப் பயனும் கிடையாது. அதிகப்படியான வாக்குகள் நோட்டாவுக்கு விழுந்தாலும், அதனால் யாருக்கு என்ன பலன் வந்துவிடப் போகிறது? நோட்டா என்பதே பயனற்றது. வேட்பாளர்களில் நல்லவர்களைத் தேர்ந்தெடுங்கள். இல்லாவிட்டால் நோட்டா என்ற பெயரிலேயே அமைப்பைத் தொடங்கி, நீங்களே தேர்தலில் நில்லுங்கள். உங்கள் கருத்தாக, எதையாவது வந்து சொல்லுங்கள். நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். 'என்ன காரணத்துக்காக நோட்டாவுக்குப் போட்டோம்?' என்பதைத் தெரிந்து கொள்ளவும் இங்கு வாய்ப்பில்லை. படித்த இளைஞர்கள்தான் இதுபோன்று செய்கின்றனர். முதலில் இவர்கள் மனதில் மாற்றம் வரட்டும்" என்றார் சீற்றத்தோடு. சட்டமன்றத் தேர்தலில் நோட்டாவுக்கு விழுந்த வாக்குகளால் தி.மு.க, மக்கள் நலக் கூட்டணி உள்பட பல கட்சிகளுக்கும் பெருத்த சரிவு ஏற்பட்டது. ' இளைஞர்களை மையப்படுத்தி பிரசாரம் செய்து வரும் சீமான், நோட்டா மீதுள்ள ஆதங்கத்தை பல இடங்களிலும் வெளிப்படுத்தி வருகிறார். தொகுதி இளைஞர்கள் நோட்டா பக்கம் திரும்பிவிடக் கூடாது என்பதற்காகத்தான் மாற்று அரசியலை முன்வைக்கிறார்' என்கின்றனர் நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள்.

  
   Bookmark and Share Seithy.com



ஓய்ந்தது பிரச்சாரம்: முடிவுக்கு வரும் தொழிலாளர் தட்டுப்பாடு!
[Thursday 2024-04-18 06:00]

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்தது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தினர்.



வாக்குப்பதிவு நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: மறுக்கப்பட்டால் புகார் தெரிவிக்கலாம்!
[Thursday 2024-04-18 06:00]

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தினர்.



வெயிலின் தாக்கம்: வாக்குச்சாவடி மையங்களில் சாமியானா பந்தல்!
[Thursday 2024-04-18 06:00]

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தினர்.



“பாஜகவினர் 180 இடங்களுக்கு மேல் வெற்றி பெற மாட்டார்கள்” - பிரியங்கா காந்தி!
[Wednesday 2024-04-17 15:00]

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.



“மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்காது” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!
[Wednesday 2024-04-17 15:00]

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.



“ஊழலின் நாயகன் பிரதமர் மோடி” - ராகுல் காந்தி விளாசல்!
[Wednesday 2024-04-17 15:00]

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.



திமுகவிலிருந்து சீமான் கட்சிக்கு போக இது தான் காரணம்: பிக்பாஸ் அசீம் வெளிப்படை!
[Wednesday 2024-04-17 15:00]

திமுகவிலிருந்து விலகிய பிக்பாஸ் அசீம் நாம் தமிழர் கட்சியின் ஶ்ரீபெரும்புதூர் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். ஶ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து பல்வேறு இடங்களில் அசீம் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார்.



'மீண்டும் சிக்கிய 4 கோடி'- பறக்கும் படை அதிரடி!
[Wednesday 2024-04-17 03:00]

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.



திடீர் திடீரென கரையொதுங்கும் மர்மப் பொருட்கள்: அதிர்ச்சியில் மீனவ கிராமம்!
[Wednesday 2024-04-17 03:00]

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று ஒதுங்கியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது கீழமூவர்க்கரை மீனவ கிராமம். இந்தக் கிராமத்தின் கடற்கரையை ஓட்டி சிவப்பு நிறத்தில் சுமார் 15 அடி உயரம் கொண்ட மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இதனைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் இது என்னவாக இருக்கும் என்ற அச்சத்தில் பூம்புகார் கடலோர காவல் குழும போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர்.



தேர்தல் விதிமுறையால் மந்தமான ஈரோடு ஜவுளி சந்தை!
[Wednesday 2024-04-17 03:00]

ஈரோடு கனி மார்க்கெட் பகுதியில் தினசரி கடை, வார சந்தை நடைபெற்று வருகிறது. திங்கட்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறும் வாரச்சந்தை தென்னிந்திய அளவில் மிகவும் புகழ் பெற்றது. இந்த ஜவுளி வார சந்தைக்காக கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து மொத்த விலையில் துணிகளைக் கொள்முதல் செய்வார்கள்.



வீங்கிய காலுடன் பிரச்சாரம் செய்யும் திருமாவளவன்!
[Tuesday 2024-04-16 18:00]

சிதம்பரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் திருமாவளவன் வீங்கிய காலுடன் பிரச்சாரம் செய்து வருகிறார். கடந்த 2019 -ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் தோல்வியின் விளிம்புக்கு சென்று திருமாவளவன் வெற்றி பெற்றார். அதேபோல இந்த ஆண்டும் கடும் சவால்கள் வரக்கூடாது என்பதற்காக வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் மற்றும், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பை ஒப்படைத்துள்ளார்.



விடுமுறையை கொண்டாட சென்ற பிள்ளைகள்: தந்தை அரங்கேற்றிய கொடூரம்!
[Tuesday 2024-04-16 18:00]

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் தந்தை ஒருவர் மூன்று பிள்ளைகளை கிணற்றில் வீசி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜல்னா மாவட்டத்தில் உள்ள கச்னர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் தக்வாலே. ஹொட்டல் ஒன்றில் தொழிலாளியாக இவர் வேலை பார்த்து வந்தார்.



பாஜக வந்தால் இது நடக்கும்: அதிமுக குற்றச்சாட்டு!
[Tuesday 2024-04-16 18:00]

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சம் ரூபாயாக உயரும் என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். தமிழகத்திற்கான மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 -ம் திகதி நடைபெறவிருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



அயோத்தி ராமர் கோயிலில் நாளை நிகழவுள்ள அபூர்வ நிகழ்வு!
[Tuesday 2024-04-16 18:00]

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ராமர் கோயிலில் நாளை அபூர்வ நிகழ்வு ஒன்று நிகழவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாத்தில் அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட்டு ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. கோயிலின் கருவறையில் 51 அங்குல குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்தார். இந்நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மிகப் பிரம்மாண்டமாக செய்யப்பட்டிருந்தது.



‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்!
[Tuesday 2024-04-16 05:00]

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது.



“தமிழ் கலாச்சாரம் மீது திமுக காங்கிரஸுக்கு வெறுப்பு உள்ளது” - பிரதமர் மோடி!
[Tuesday 2024-04-16 05:00]

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.



முன்னாள் அமைச்சர் இந்திராகுமாரி காலமானார்!
[Tuesday 2024-04-16 05:00]

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை பொறுப்பு வகித்து வந்தவர் இந்திராகுமாரி. இவருக்கு வழக்கறிஞர் பாபு என்ற கணவரும், லேகா சந்திரசேகர் என்ற மகளும் உள்ளனர். அதிமுகவில் இருந்த இந்திராகுமாரி அதன் பின்பு, கடந்த 2006 ஆம் ஆண்டில் திமுகவில் இந்திரா குமாரி தன்னை இணைத்துக்கொண்டார்.



“உச்சநீதிமன்ற தீர்ப்புக்காக எதிர்க்கட்சிகள் அனைவரும் வருந்துவார்கள்” - பிரதமர் மோடி!
[Monday 2024-04-15 18:00]

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.



பைஜூஸ் நிறுவனத்திற்கு ஏற்பட்ட அடுத்த சிக்கல்!
[Monday 2024-04-15 18:00]

இந்தியாவின் புகழ்பெற்ற நிறுவனம் பைஜூஸ். கேரளாவைச் சேர்ந்த பொறியாளரான ரவீந்திரன்(44) என்பவரால் தொடங்கப்பட்ட இந்தச் செயலியில் இணையதளம் வழியாக கல்வி மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி பெறலாம். கொரோனா காலத்தில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவரும் வீட்டில் இருந்து இணையதள வழியாக கல்வி கற்பதற்கு இந்த பைஜூஸ் பெரும் உதவியாக இருந்தது. இதன் மூலம், பைஜூஸ் பெரும் வருவாய் ஈட்டியது. மேலும், இதன் காரணமாக போர்ப்ஸ் பணக்கார பட்டியலில் பைஜூஸ் நிறுவனர் ரவீந்திரன் இடம்பிடித்தார்.



“பா.ஜ.கவின் தேர்தல் வாக்குறுதி தமிழகத்தில் எடுபடாது” - வைகோ!
[Monday 2024-04-15 18:00]

ஈரோடு பெரியார் நகரில் உள்ள மறைந்த கணேசமூர்த்தி எம்.பி. வீட்டிற்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரது மனைவி ரேணுகா தேவி ஆகியோர் சென்று கணேசமூர்த்தி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் கணேஷ்மூர்த்தியின் மகன், மகளுக்கு வைகோ மற்றும் அவரது மனைவி இருவரும் ஆறுதல் கூறினர்.


Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா