Untitled Document
April 20, 2024 [GMT]
இரவில் செய்யக்கூடாத பத்து விஷயங்கள்!
[Saturday 2017-04-08 17:00]

இரவு அற்புதமானது. உடலையும், மனதையும் சாந்தப்படுத்தி ஓய்வுக்கு வழிவகுக்கும் வகையில் இயற்கை தந்த வரம் தான் இரவு. காலையில் எழுவதும், இரவில் உறங்குவதும் தான் எப்போதும் நல்லது, தற்போது பலர் இரவு நேரத்தில் சரியாக உறங்குவது கிடையாது. இதனால் உடல் மற்றும் மன நலன் இரண்டிலும் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. நம்மில் பலர் இரவு நேரத்தில் பல்வேறு லைஃப்ஸ்டெயில் தவறுகளைச் செய்கிறோம். இவற்றை கண்டுணர்ந்து தேவையான நடவடிக்கைகளை எடுத்தால் எல்லா இரவும் இனிய இரவாக அமையும்.

இரவு அற்புதமானது. உடலையும், மனதையும் சாந்தப்படுத்தி ஓய்வுக்கு வழிவகுக்கும் வகையில் இயற்கை தந்த வரம் தான் இரவு. காலையில் எழுவதும், இரவில் உறங்குவதும் தான் எப்போதும் நல்லது, தற்போது பலர் இரவு நேரத்தில் சரியாக உறங்குவது கிடையாது. இதனால் உடல் மற்றும் மன நலன் இரண்டிலும் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. நம்மில் பலர் இரவு நேரத்தில் பல்வேறு லைஃப்ஸ்டெயில் தவறுகளைச் செய்கிறோம். இவற்றை கண்டுணர்ந்து தேவையான நடவடிக்கைகளை எடுத்தால் எல்லா இரவும் இனிய இரவாக அமையும்.

  

1. லேட் நைட் சாப்பாடு தவிர் :

இரவு நேரத்தில் சாப்பிட்டவுடன் படுக்கைக்குச் செல்வதை நிச்சயம் தவிர்க்க வேண்டும். நாம் சாப்பிடும் உணவானது இரைப்பையில் சராசரியாக 2-3 மணி நேரம் இருக்கும். சாப்பிட்டவுடன் படுக்கும்போது, இரைப்பையில் இருந்து சில நேரங்களில் சிலருக்கு உணவுக்குழாய்க்குள் உணவு மேலேறி வந்துவிடலாம். தொடர்ந்து நாட்கணக்கில் இப்படிச் சாப்பிட்டு வரும்போது எதுக்களித்தல் பிரச்னை ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. தவிர செரிமான மண்டலத்தின் செயல்பாட்டிலும் சுணக்கம் ஏற்படலாம்.

2. ஃபாஸ்ட்புட் வேண்டாம்:

இரவு நேரங்களில் தற்போது ஃப்ரைட் ரைஸ் மற்றும் நூடில்ஸ் போன்ற ஃபாஸ்ட்புட் உணவுகளைச் சாப்பிடும் வழக்கம் அதிகரித்து வருகிறது. சென்னை போன்ற இடங்களில் மிட்நைட் பிரியாணி ஃபேமஸாகி வருகிறது. இரவு நேரத்தில் எண்ணெய் அதிகம் சேர்க்கப்பட்ட, எண்ணெயில் பொறிக்கப்பட்ட, வறுக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த உணவுகள் செரிமானத்தை பாதிக்கும்போது, நமக்கு ஆழ்ந்த தூக்கம் கிடைக்காது. இட்லி, இடியாப்பம் முதலான எளிதில் செரிமானமாகும் உணவுகளைச் சாப்பிடுங்கள். அரிசி, கோதுமை, சிறுதானிய உணவுகளோடு, காய்கறிகள் அதிகம் சேர்க்கப்பட்ட கூட்டு, குருமா, தேங்காய் சட்னி, புதினா சட்னி ஆகியவற்றை சாப்பிடலாம். மைதாவால் செய்யப்பட்ட உணவுகள், கீரை வகைககள் தவிர்க்கவும். முட்டை, பால் முதலான அதிக புரதச் சத்து நிறைந்த உணவுகளை அளவாகச் சாப்பிடவும்.

3. சண்டை வேண்டாம் :

இரவு நேரத்தில் வீட்டில் சண்டை சச்சரவுகள் ஏற்படுத்தக்கூடிய விஷயங்களை பற்றி அதிகம் பேச வேண்டாம். இரவு நேரத்தில் குடும்பத்தோடு அமர்ந்து ஒன்றாகச் சாப்பிடுங்கள். குழந்தைகள் மற்றும் இணையுடன் அன்போடு பேசுங்கள். காலை முதல் மாலை வரை பல டென்ஷன்களை சந்தித்துவிட்டு, இரவிலும் டென்ஷன் தரக்கூடிய வாக்குவாதங்கள் வேண்டாம். ரிலாக்ஸ்சாக தூங்கச் செல்லுங்கள்.

4. நைட் ஷோ தடா!

இரண்டு மூன்று மாதங்களுக்கு எப்போதோ ஓரிருமுறை நைட் ஷோ செல்வதில் தவறில்லை. ஆனால் அடிக்கடி நைட் ஷோ செல்வதை தவிர்க்க வேண்டும். இரவு நேரத்தில் வன்முறை தெறிக்கும் படங்கள், திகில் படங்கள், மனதை கடுமையாக பாதிக்கும் படங்கள் போன்றவற்றை தவிருங்கள். பாசிட்டிவ் மனநிலையை ஏற்படுத்தக்கூடிய திரைப்படங்கள், நிகழ்ச்சிகளை பாருங்கள். பிடித்த இசையை கேட்பது, காமெடி சானல்கள் பார்ப்பது போன்றவற்றில் தவறில்லை.

5. டிஜிட்டல் சாதனங்களுக்கு லிமிட்:

இரவு எப்போது படுக்கைக்குச் செல்கிறீர்களா அதற்கு 1.5 -2 மணிநேரம் முன்பாக டிவி பார்ப்பதை நிறுத்தி விடுங்கள். தயவு செய்து மொபைல், லேப்டாப், டேப்லெட் போன்ற சாதனங்களை பயன்படுத்துவதை படுக்கைக்கு செல்லும் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக நிறுத்தி விடவும். படுக்கையில் படுத்திருக்கும் போது அவசர அவசியமின்றி மொபைலை பயன்படுத்த வேண்டாம். வாட்ஸ் அப், பேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றுக்கு சீக்கிரமே குட்பை சொல்லிவிட்டு படுக்கைக்குச் செல்லுங்கள்.

6. சுத்தம் வேண்டும்:

எங்கே படுத்து உறங்கப்போகீறீர்களோ அந்த இடத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். காற்றோட்டமான இடமாக அமையுங்கள். தலையணை, மெத்தை போன்றவை சுத்தமாக இருக்கட்டும். வாசனை திரவியங்களை அதிகமாக பயன்படுத்த வேண்டாம்.ஏசி அறையாக இருந்தால் 23-26 வெப்பநிலையில் வைத்து தூங்குங்கள். போர்வையை நன்றாக துவைத்துச் சுத்தமாக பயன்படுத்துங்கள்.

7. இரவு உடைகளில் ஜாக்கிரதை:

முடிந்தவரை எவ்வளவு குறைவான உடை அணிய முடியுமோ அப்படி அணிந்து உறங்குங்கள். இறுக்கமான பேண்ட், ஷார்ட்ஸ், உள்ளாடைகள் அணிய வேண்டாம். தளர்வான ஆடைகள் நல்லது. குளிர்காலத்தில் பிரத்யேக ஆடைகளை பயன்படுத்துங்கள்.சரியாக துவைக்காத ஆடைகளை இரவு நேரத்தில் அணிதல் வேண்டாம்.

8. சும்மா உறக்கம் வேண்டாம்!

இரவில் படுக்கையில் தூக்கம் வரவில்லையெனில் கஷ்டப்பட்டு தூக்கம் வரவைக்க முயற்சி செய்து புரண்டு புரண்டு படுக்க வேண்டாம். படுக்கையறையை விட்டு வெளிவந்து இன்னொரு அறையில் உங்களுக்கு பிடித்தமான வேலையை செய்யுங்கள், தூக்கம் வருவதாய் உணர்ந்தால் மட்டும் உடனே படுக்கை அறைக்குச் சென்று விடுங்கள். பிடித்தமான வேலை என்றால் உடனே மொபைலை எடுத்து நோண்ட வேண்டாம். புத்தகம் படிப்பது, எழுதுவது முதலான லேசான வேலைகளை செய்யவும்.

9. படுக்கை அறையில் வெளிச்சம் வேண்டாம் :

இரவு கும்மிருட்டில் தூங்குவது தான் நல்லது. கும்மிருட்டில் தூங்கினால் தான் ஹார்மோன்கள் சீராக சுரக்கும். அவசியம் விளக்கு வெளிச்சம் வேண்டும் என்பவர்கள் மிகக்குறைவான வெளிச்சம் தரும் ஸ்பெஷல் விளக்குகளை பயன்படுத்துங்கள். கடினமான மெத்தைகளுக்கு பதிலாக மென்மையான மெத்தைகளை பயன்படுத்துங்கள்.

10. தண்ணீரை தவிர்க்காதீர்கள் :

இரவு உறங்கச் செல்வதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னதாக தேவையான அளவு தண்ணீர் அருந்துங்கள். படுக்கைக்கு அருகில் எப்போதும் ஒரு பாட்டில் தண்ணீர் வைத்துக் கொள்ளுங்கள். படுக்கை அறையில் எப்போதுமே ஒரு முதலுதவி பெட்டியும் இருக்கட்டும்.

இந்த இரவு இனிய இரவாக இருக்கட்டும்!

  
   Bookmark and Share Seithy.com



தினமும் இரவில் குளித்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?
[Friday 2024-04-19 16:00]

காலையில் குளிப்பதை விட இரவில் தூங்கும் முன்பு குளித்தால் ஏற்படும் நன்மைகளை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். உடலின் பாகங்களை தூய்மையாக வைத்திருக்க தினமும் குளிப்பது மிகவும் அவசியமாகும். உடல் சூட்டையும் சரி செய்ய உதவுகின்றது. தினமும் தலைக்கு குளிப்பதால் சிலருக்கு தலைவலி மற்றும் சைனஸ் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். நாம் காலையில் குளிப்பதை விட இரவு நேரத்தில் குளித்தால் பல நன்மைகள் கிடைக்கும்.



ஆஸ்துமா ஏற்படுவதற்கான காரணம் என்னனு தெரியுமா?
[Thursday 2024-04-18 18:00]

ஆஸ்துமா நோய் எவ்வாறு ஏற்படுகிறது இதற்கான அறிகுறிகள் என்ன? இதை எவ்வாறு தடுக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். இந்த நோயை வீசிங் இளைப்பு போன்ற பெயர்களால் அழைப்பார்கள். இது சுவாசப் பாதைக்குள் காற்று நுழையும் போது காற்றில் உள்ள தூசிகள் போன்றவற்றை நமது நாசிகளுக்குள் உள்ள ரோமங்கள் தடுக்கின்றன.



கோடை காலத்தில் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?
[Wednesday 2024-04-17 15:00]

கோடை காலத்தில் தண்ணீர் எவ்வளவு பருக வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். நமது உடலில் ஏறத்தாழ 70 சதவீதம் அளவுக்கு நீர்ச்சத்து நிரம்பியுள்ளது. நம் உடலில் உள்ள நச்சுக்களை சிறுநீர் மூலமாகவும், வியர்வை மூலமாகவும் வெளியேற்றுவதற்கு இந்த நீர்ச்சத்து உதவியாக இருக்கின்றது. கோடை காலத்தில் அதிக வெயில் காரணமாக நீரிழப்பு ஏற்படுகின்றது. உடம்பில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டாமல் இருக்க அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.



காலை உணவாக சாதம் சாப்பிடலாமா?
[Tuesday 2024-04-16 18:00]

காலை உணவுக்கு அரிசி சாதம் சாப்பிடலாமா? என்ற கேள்விக்கு பதில் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இன்று பலரும் காலை உணவாக சாதம் எடுத்துக் கொள்ளும் நிலையில், இதனால் சுறுசுறுப்பாகவும் இருக்க முடியும். ஏனெனில் இதில் கார்போஹைட்ரேட் அதிகமாகவே இருக்கின்றது. பல நன்மைகளை நமக்கு அளித்தாலும் காலை உணவாக சாதம் சாப்பிடுவது நல்லதல்ல என்று கூறப்படுகின்றது. அப்படி சாப்பிட்டால் என்ன என்பதையும் தெரிந்து கொள்வோம்.



மாம்பழம் சாப்பிட்டால் தீங்கா?
[Monday 2024-04-15 18:00]

இயற்கை மற்றும் செயற்கை முறையில் பழுத்த மாம்பழங்களை எளிதாக கண்டுபிடிக்க சில டிப்ஸ்களை இங்கு தெரிந்து கொள்வோம். முக்கனிகளில் ஒன்றாக இருக்கும் மாம்பழத்தை பழங்களின் ராஜா என்றும் கூட அழைப்பார்கள். கோடை காலத்தில் மாம்பழத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் இன்று ரசாயனங்கள் தெளித்து பழுக்க வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.



கல்லீரலை சுத்தப்படுத்தும் கோவக்காய் குழம்பு!
[Sunday 2024-04-14 18:00]

கோவக்காய் ஒரு சிறந்த இயற்கை மருந்தாக காணப்படுகின்றது. இது கல்லீரலை பாதுகாப்பதில் முக்கியமாக ஒரு காயாக பார்க்கப்படுகின்றது. வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை உணவுகளில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் இருக்கும் கிருமிகள் மற்றும் நச்சுகள் வெளியேறி கல்லீரல் வீக்கம் குறைக்க பெரிதும் துணைப்புரிகின்றது. இரும்புச்சத்து, பொட்டாசியம், போன்ற தாதுக்கள் கோவக்காயில் அதிகமாக இருக்கிறது. இவை எலும்பு வளர்ச்சி, இதயம், ரத்தம் நரம்புகளின் சீரான இயக்கத்திற்கு உதவுகிறது.



செரிமான கோளாறுக்கு தீர்வு கொடுக்கும் பூண்டு ஊறுகாய்!
[Saturday 2024-04-13 18:00]

பொதுவாகவே அனைவரும் சமையலில் பயன்படுத்தும் பொருட்களில் இன்றியமையாத பொருளாக பூண்டு காணப்படுகின்றது. பூண்டு உடலுக்கு மிகவும் நல்லது. இதில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பல மருத்துவ குணங்கள் உள்ளமை அனைவரும் அறிந்ததே. பூண்டானது நிறைய மருத்துவ குணங்கள் நிறைந்தது. வாயுத் தொல்லை, நெஞ்சுக்குத்தல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத்தரும்.



சுண்டைக்காய்க்குள் மறைந்திருக்கும் ரகசியம்!
[Friday 2024-04-12 18:00]

காய்கறிகளுள் மிகவும் சிறிதான காய் சுண்டைக்காய். சுண்டைக்காயை நுண் ஊட்டச் சத்துக்களின் சேமிப்புக் கிடங்கு என்று சொன்னால் மிகையாகாது. கசப்பு சுவை கொண்ட இந்த சுண்டையில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.சுண்டை வயிற்றில் உள்ள வாயுக்களை அகற்றி உடலை கட்டுக்கோப்புடன் காத்துக்கொள்ள உதவுகிறது.



தொப்பை பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கும் கறிவேப்பிலை குழம்பு!
[Thursday 2024-04-11 16:00]

பொதுவாகவே அனைவருக்கும் உடல் எடையைக் குறைத்து, உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், என்னதான் முயற்சி செய்தாலும் பலருக்கு தொப்பையை குறைக்க முடியவில்லையே என்ற கவலை இருக்கத்ததான் செய்கின்றது. அப்படிப்பட்டவர்கள் ஆரோக்கியமாக முறையில் தொப்பையை குறைக்கம் கறிவேப்பிலை குழம்பு எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.



கொரியன் பெண்களின் அழகு ரகசியம் என்னனு தெரியுமா?
[Wednesday 2024-04-10 18:00]

சரும பராமரிப்பு என்பது இப்போது பரவலாக காணப்படுகின்றது. இந்த பராமரிப்பு ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாக பயன்படுத்தப்படுகின்றது. இந்த சரும அழகுக்குறிப்புக்களை கொரியன் பெண்கள் எந்த விதமாக பயன்படுத்துகிறார்கள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.



தினமும் ஒரு துளி எண்ணெய் தொப்புளில் விட்டால் என்ன பயன் தெரியுமா?
[Tuesday 2024-04-09 18:00]

நமது உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் நோய் வருவதற்கும் நாம் தான் காரணமாக இருக்கின்றோம். நமது உடலில் ஒரு பிரச்சனை வருவதற்கு முன்னர் அதை இல்லாமல் செய்வதற்கு நம்மிடம் இருக்கும் இயற்கையான விஷயங்களை செய்ய வேண்டும். அப்படியான ஒரு விஷயத்தை தான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம். தேங்காய் எண்ணெயை தொப்புளில் விடுவதால் என்ன நன்மை கிடைக்கின்றது என்பதை தெரிந்து கொள்ளலாம்.



அரிசி தண்ணீரை வைத்து இவ்வளவு விஷயங்கள் செய்யலாமா?
[Monday 2024-04-08 18:00]

பொதுவாகவே அனைவரும் வீட்டில் அரிசி கழுவிய தண்ணீரை கீழே ஊற்றிவிடுவோம். ஆனால் நம்மில் பலரும் அறியாத அளப்பரிய நன்மைகளை இந்த அரிசி கழுவிய தண்ணீர் கொண்டுள்ளது. கூந்தல், சருமம், முகம் ஆகிய அனைத்திற்கும் அழகு சேர்க்கும் ரகசியங்களை நாம் அன்றாடம் வீணாக்கும் அரிசி தண்ணீர் கொண்டுள்ளது. இதனை சரும பொலிவுக்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் எவ்வாறு பயன்படுத்தலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.



குழந்தைகளை ஏசி-அறையில் தூங்க வைக்கலாமா?
[Sunday 2024-04-07 16:00]

கோடை காலத்தில் குழந்தைகளுக்கு ஏசி போட்டு தூங்க வைக்கும் பெற்றோர்களுக்கான பதிவே இதுவாகும். கோடை காலம் நடந்து கொண்டிருப்பதால் வெயிலின் தாக்கமும் அதிகமாகவே இருந்து வருகின்றது. இதனை சமாளிக்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தவித்து வருகின்றனர்.



வெள்ளி கொலுசு அணிவதன் நன்மைகள்!
[Saturday 2024-04-06 16:00]

பொதுவாகவே நமது முன்னோர்கள் எதையும் காரணம் இல்லாமல் சொல்லி வைக்கவில்லை. அவர்களின் ஒவ்வொரு செயலுக்கும் துல்லியமான அறிவியல் காரணம் கட்டாயம் இருக்கும். அந்த வகையில் கலாசாரத்தில் பெண் குழந்தைகள் காலில் வெள்ளி கொலுசு அணியும் வழக்கம் பழங்காலத்திலிருந்தே இருந்து வருகிறது. எப்போதும் தங்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் தமிழர்கள் காலில் அணியும் கொலுசு வெள்ளியில் தான் அணிய வேண்டும் என கூறியமைக்கு என்ன காரணம் என சிந்தித்திருக்கின்றீர்களா? வெள்ளியில் கொலுசு அணிவதனால் ஏற்படும் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.



சரும பொலிவிற்கான அழகுக்குறிப்புக்கள்!
[Saturday 2024-04-06 07:00]

பெண்கள் அழகாக இருப்பதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் நேரத்தை செலவு செய்கின்றனர். செலவு செய்யும் அந்த நேரத்தை கொஞ்சம் பயனுள்ளதாக எப்படி மாற்றலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். இதற்காக நீங்கள் வீட்டில் காணப்படும் சமயலறை பொருட்களை உபயோகித்தால் போதும். இந்த வீட்டு அழகுக்கு பொருட்கள் மூலம் முகம் பளீச் என்று காணப்படுகின்றது.



நாவூரும் சுவையில் காரசாரமான நண்டு மசாலா குழம்பு!
[Thursday 2024-04-04 18:00]

பொதுவாகவே மனித பிறவிக்கு மாத்திரமே உணவை சமைத்து சாப்பிடும் வரம் கிடைக்கின்றது. உணவு என்றாலே அனைவர்க்கும் பிடித்த ஒன்று தான். அதிலும் அசைவ உணவு என்றால் சொல்லவே வேண்டாம் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அசைவத்தில் பலவித உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.அசைவத்தில் கோழி,மீன் ,இறால், நண்டு, என்று பெரிய பட்டியலே இருக்கின்றது.



பிரியாணியால் தீங்கு ஏற்படுமா?
[Wednesday 2024-04-03 18:00]

நம்மில் பெரும்பாலான நபர்கள் பிரியாணி அடிக்கடி சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ள நிலையில், இதனால் உடம்பிற்கு தீங்கு ஏற்படுமா என்பதை இந்த காட்சியில் தெரிந்து கொள்வோம். பிரியாணி சுவையான உணவு என்றாலும் அடிக்கடி சாப்பிட்டால் உடல் நலத்திற்கு தீங்கு ஏற்பட வாய்ப்புள்ளது. இதில் அதிக அளவு கலோரிகள், கொழுப்பு, சோடியம் உப்பு உள்ளதால் பல பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது.



கம கம வாசனையில் ஆளை தூக்கும் ஆம்பூர் பிரியாணி செய்வது எப்படி?
[Tuesday 2024-04-02 18:00]

பொதுவாகவே உலகளாவிய ரீதியில் மிகவும் பிரசித்தி பெற்ற உணவுகளில் பிரியாணி முக்கிய இடம் வகிக்கினறது. அந்த வகையில் தமிழகத்தில் மிகவும் பிரபல்யமான ஆம்பூர் பிரியாணியை வீட்டிலேயே எளிய செய்முறையில் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.



கைகளில் வியர்வை வர என்ன காரணம் தெரியுமா?
[Monday 2024-04-01 18:00]

எல்லோருக்கும் எதாவது ஒரு நோய் இருக்கும். அந்த நோய்கள் எல்லாம் வெவ்வேறு வகையாக காணப்படும். ஹைப்பர்ஹைட்ராசிஸ் என்பது சாதாரணமானது. இது குழந்தையிலிருந்தே மரபணு காரணமாகவோ, பருவ மாற்றம், பதட்டம், கோபம் போன்ற உணர்ச்சி நிலை, சுற்றுச்சூழல் இப்படி சில காரணங்களால் வியர்வை வரும்.



கொளுத்தும் வெயிலுக்கு புதினா தண்ணீர்!
[Sunday 2024-03-31 17:00]

கோடை கால வெயிலை சமாளிப்பதற்கு புதினா தண்ணீர் எப்படி உதவியாக இருக்கின்றது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். கோடை காலம் வந்துவிட்டாலே வெயிலின் தாக்கம் அதிகரித்து விடுகின்றது. இதனால் மக்கள் கடும் அவதியில் சிக்கிக் கொள்கின்றனர். தற்போது வெயில் என்பது அளவுக்கு அதிகமான இருந்து வரும் நிலையில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா