|
|
[Saturday 2017-04-22 17:00]
|
மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின், ஏற்பாட்டில்,
|
வவுனியா வாடி வீட்டில் இன்று காலை மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தலைவர் எஸ்.சிவகரன் தலைமையில் ஆரம்பமான இந்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அப்போஸ்தக பரிபாலகர் கலாநிதி கிங்சிலி சுவாம்பிள்ளை, புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், ஈ.பி.ஆர்.எல். எப். கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரும்,
தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, வட மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா, வட மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன், எம்.கே.சிவாஜிலிங்கம், எம்.தியாகராசா, முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், வன்னி மாவட்ட கிறிஸ்தவ மத விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளர் எஸ்.சந்திரகுமார் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த நிகழ்வை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த அரசியல் தலைவர்கள் சிலர் புறக்கணித்தனர்.
அடுத்து என்ன செய்வது என்பதனை தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளதுடன் புதிய தலைமை தொடர்பிலும் நகரவேண்டும் என,இந்தக் கருத்தரங்கில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. தற்போதைய தமிழ் தலைமைகள், தமிழ் மக்களின் விருப்புகளை அறிந்து செயற்படும் தன்மையில் இல்லை என்ற கருத்தோட்டத்துடன், அரசாங்கத்தை குற்றம் சாட்டும் நிலையிலும் தமிழ் தலைமைகள் காணப்படவில்லை எனவும் குற்றம்சாட்டப்பட்டது.
இதேவேளை, புதிய அரசியல் அமைப்பு திருத்தத்தில் எவ்வாறான உள்ளடக்கங்களை இணைத்துக்கொள்வது தொடர்பிலும் தெளிவான நிலைப்பாடுகள் காணப்படவில்லை எனவும் தற்போது மக்கள் ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுக்க முற்பட்டுள்ள நிலையில், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அதிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இராணுவத்தரப்புடன் கலந்துரையாடும் நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித்தலைவராக உள்ள ஒருவர் இராணுவத்தளபதியை அழைத்து பேச கூடிய நிலையில் இல்லாது, இராணுவ தரப்பிடம் சென்று பேசும் நிலை சிறந்தபோக்காக காணப்படவில்லை எனவும் கருத்து தெரிவிக்கப்பட்டது. ஐ.நா மனித உரிமை பேரவையில் கூட்டமைப்பு தலைமை நடந்து கொண்ட விடங்களும் விமர்சனத்திற்குள்ளாகியிருந்தது.
இதேவேளை, தமிழ் தலைமைகள் அரசுடன் பேச்சுக்கள் நடத்துகின்றதா என்பதற்குமப்பால் தமிழர்களின் பிரச்சனைகளை வேறு நாடுகளுடன் கலந்துரையாடியுள்ளதா என்பது கேள்விக்குள்ளாகியே உள்ளது. இதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எக்காத நிலையில் கூட்டமைப்புக்குள் காணப்படும் முரண்பாடான நிலைமைகள் தமிழர்களுக்கான எதிர்கால அரசியல் நிலைப்பாட்டுக்குச் சாதகமாக இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டதுடன் மாற்று தலைமையொன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் சிறந்த கருத்தியலோடு உருவாக்கப்படவேண்டும் என்ற கருத்துக்களும் முன்வைக்கப்பட்டிருந்தன.
|
|
|
|
இலங்கைக்கு முதல் தங்கப் பதக்கத்தை பெற்றுக்கொடுத்த எதிர்வீரசிங்கம் காலமானார்!
[Saturday 2024-04-20 06:00]
|
இலங்கையின் முன்னாள் மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் தனது 91 ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார்.உயரம் பாய்தல் வீரரான நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் 1952 மற்றும் 1956 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை சார்பாக பங்கேற்ற பெருமையை பெற்றுள்ளார்.
|
|
|
கிளிநொச்சியில் அன்னை பூபதி நினைவேந்தல்!
[Saturday 2024-04-20 06:00]
|
தமிழரசு கட்சி ஏற்பாட்டில் கிளிநொச்சி பொது சேவை சந்தை முன்பாக நேற்று அன்னை பூபதியின் நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது.
|
|
|
ஈரானிய ஜனாதிபதியின் வருகைக்கு அமெரிக்கா எதிர்ப்பு!
[Saturday 2024-04-20 06:00]
|
ஈரானிய ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் வெளிவிவகார அமைச்சிடம் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருப்பதாக சிங்கள நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
|
|
|
யாழ். பல்கலைக்கழக நிதியாளருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!
[Saturday 2024-04-20 06:00]
|
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிதியாளருக்கு எதிராகப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
|
|
|
ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையும் சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள்!
[Saturday 2024-04-20 06:00]
|
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆதரவாளர்கள் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியுடன் வேகமாக இணைந்து கொண்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.
|
|
|
ஒட்டாவா கொலைகளுடன் தொடர்புடைய இளைஞன் பிணை கோரவில்லை!
[Saturday 2024-04-20 06:00]
|
கனடா- ஒட்டாவாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட இலங்கை இளைஞன் பிணை கோருவதை எதிர்பார்க்கவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
19 வயதான குறித்த இளைஞன் கடந்த மார்ச் மாத ஆரம்பத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மீது ஆறு கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
|
|
|
சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குளம் மக்கள் போராட்டம்!
[Saturday 2024-04-20 06:00]
|
அண்மையில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி நேற்று வவுனியா தரணிக்குளம் கிராம மக்கள் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
|
|
|
ஜேவிபி- பேராயர் சந்திப்பு குறித்து சந்தேகம் கிளப்புகிறது ஐதேக!
[Saturday 2024-04-20 06:00]
|
ஜனாதிபதி தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் மக்கள் விடுதலை முன்னியினர், கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையுடன் இணைவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரண்கே பண்டார தெரிவித்துள்ளார்.
|
|
|
சுற்றுலாவிகள் கூடும் இடங்களில் சுற்றிவளைப்புகள்!
[Saturday 2024-04-20 06:00]
|
சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் இடங்களில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நுகர்வோர் அதிகார சபை பணிப்பாளர் சஞ்சய் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
|
|
|
ஐஸ் போதைப்பொருளுடன் கடற்படை அதிகாரிகள் கைது!
[Saturday 2024-04-20 06:00]
|
முல்லேரிய பிரதேசத்தில் சுமார் 7.5 மில்லியன் ரூபா பெறுமதியான 510 கிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இலங்கை கடற்படையின் இரண்டு லெப்டினன்ட் கமாண்டர்களும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
|
|
|
கச்சதீவு விடயத்திலும் ஈழத்தமிழர்கள் பார்வையாளர்கள்.
[Friday 2024-04-19 20:00]
|
இந்து சமுத்திரத்தைக் கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும், நிர்வகிக்கவும்வல்ல கேந்திர மையத்தில்இந்தியாவும் இலங்கைத் தீவும் அமைந்திருப்பதனால் இன்றைய சர்வதேச ஒழுங்கு மாற்றத்தில் இந்தபிராந்தியம் முக்கியத்துவம் பெற்றதாக விளங்குகிறது. இந்த நிலையில் இந்தியாவிலும் இலங்கையிலும்தேர்தல்கள் நெருங்கி வரும் வேளையில் பாக்கு நீரிணை சார்ந்தும், கச்சதீவு சார்ந்தும் இரு நாடுகளிலும் தேர்தல் அரசியல் நலன்களுக்காக செயற்கையான ஒரு முறுகல்நிலை தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது.
|
|
|
யாழ்ப்பாணத்தில் அன்னை பூபதியின் நினைவேந்தல்!
[Friday 2024-04-19 16:00]
|
மட்டக்களப்பில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
|
|
|
திருகோணமலையில் நினைவுகூரப்பட்ட அன்னை பூபதி!
[Friday 2024-04-19 16:00]
|
மட்டக்களப்பில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின் 36ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருக்கோணமலை மாவட்ட பணிமனையில் இன்றையதினம் இடம்பெற்றது.
|
|
|
செம்மணியின் அயல் கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ஆபத்து! - ஐங்கரநேசன் எச்சரிக்கை.
[Friday 2024-04-19 16:00]
|
செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைக்கப்படுமாயின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படும் என தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
|
|
|
சுதந்திரக் கட்சி பிரச்சினையில் தலையிட முடியாது! - கைவிரித்தது தேர்தல் ஆணைக்குழு.
[Friday 2024-04-19 16:00]
|
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் நிலவும் உட்பூசல் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தமது ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
|
|
|
ஈரானிய ஜனாதிபதிக்கு உயர் பாதுகாப்பு!
[Friday 2024-04-19 16:00]
|
ஈரான் - இஸ்ரேலுக்கு இடையில் எந்த நேரத்திலும் மோதல் நிலைமை ஏற்படலாம் என்ற பரபரப்புக்கு மத்தியில், ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
|
|
|
புங்குடுதீவில் மனித எலும்பு எச்சங்கள் மீட்பு!
[Friday 2024-04-19 16:00]
|
யாழ். புங்குடுதீவில் கட்டடம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் இருந்து மனித எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது.
|
|
|
ஈரான் ஜனாதிபதியின் பயணம் கடைசி நேரத்தில் ரத்தாகலாம்!
[Friday 2024-04-19 16:00]
|
ஈரான் ஜனாதிபதியின் இலங்கைக்கான பயணம் கடைசி நேரத்தில் இரத்துச் செய்யப்பட வாய்ப்புண்டு என்று நாடாளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
|
|
|
சஜித்துக்கு ஆதரவளித்தால் ரணிலுக்கு பதவி! - தூண்டில் போடுகிறது ஐக்கிய மக்கள் சக்தி.
[Friday 2024-04-19 16:00]
|
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி, சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் பட்சத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பதவி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க குறிப்பிட்டுள்ளார்.
|
|
|
அருட்தந்தை சிறில் காமினி வாக்குமூலம்!
[Friday 2024-04-19 16:00]
|
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் விசாரிப்பதற்காக 'ஞானார்த்த பிரதிபய' கத்தோலிக்க பத்திரிகையின் பிரதம ஆசிரியர் அருட்தந்தை சிறில் காமினி இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
|
|
|