Untitled Document
April 19, 2024 [GMT]
தமிழர் தாயகத்தில் நாளை பூரண ஹர்த்தால் : தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை தார்மீக ஆதரவு.
[Wednesday 2017-04-26 18:00]

நாளைய தினம் வட கிழக்கு தமிழர் தாயகத்தில் இடம் பெற இருக்கும் பூரண ஹர்த்தாலுக்கு தமிழ் தேசிய பண்பாட்டு பேரவை தார்மீக ஆதரவை வழங்குவதுடன் அனைத்து தரப்பினரையும் ஒத்துழைக்குமாறும் பகிங்க அழைப்பையும் விடுகின்றது.

*காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டறிவதற்கான போராட்டம்.

*சொந்த நிலத்தை மீட்பதற்கானபோராட்டம்.

*அரசியல் கைதிகளின் விடுதலைக்கான போராட்டம்

எமது இனத்தின் விடியலுக்காய் எம் தாயக மண்ணில் கொடுக்கப்பட்ட விலைமதிக்க முடியாத இழப்புக்கள் ஏராளம்.குறிப்பாக எண்ணிலடங்கா உயிர்களை எம் மண்ணின் விடிவுக்காகவும்,இனத்தின் உரிமைக்காகவும் விதைத்துள்ளோம்.

நாளைய தினம் வட கிழக்கு தமிழர் தாயகத்தில் இடம் பெற இருக்கும் பூரண ஹர்த்தாலுக்கு தமிழ் தேசிய பண்பாட்டு பேரவை தார்மீக ஆதரவை வழங்குவதுடன் அனைத்து தரப்பினரையும் ஒத்துழைக்குமாறும் பகிங்க அழைப்பையும் விடுகின்றது.
*காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டறிவதற்கான போராட்டம்.
*சொந்த நிலத்தை மீட்பதற்கானபோராட்டம்.
*அரசியல் கைதிகளின் விடுதலைக்கான போராட்டம்
எமது இனத்தின் விடியலுக்காய் எம் தாயக மண்ணில் கொடுக்கப்பட்ட விலைமதிக்க முடியாத இழப்புக்கள் ஏராளம்.குறிப்பாக எண்ணிலடங்கா உயிர்களை எம் மண்ணின் விடிவுக்காகவும்,இனத்தின் உரிமைக்காகவும் விதைத்துள்ளோம்.

  

யுத்தம் மௌனிக்கப்பட்டு 8 ஆண்டுகளை தொட்டுவிட்ட நிலையில் மிலேச்சத்தனமான போரின் வலிகளும், காயங்களும் எம்மக்கள் மனதைவிட்டு மாறவில்லை.

மூன்று தசாப்தத்திற்கு மேலாக எம் ஈழமண்ணில் இடம்பெற்ற யுத்தம் பல அவலங்களையும்,அத்தியாயங்களையும்,எமது வாழ்க்கைக்கு தந்துவிட்டு சென்றுவிட்டது. இந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வலியோடும் வேதனையோடும் நாளாந்தம் வீதியிலே படுத்துறங்கி சுழற்சி முறையில் உண்ணா நோன்பிருந்து கடந்த 60நாட்களுக்கு மேலாக அகிம்சை வழியில் போராடிக்கொண்டிருக்கிறார்கள். கேப்பாபுலவு மக்கள் 54 நாட்களாகவும், கிளிநொச்சி பன்னங்கட்டி மக்கள் 37 நாட்களாகவும் முள்ளிக்குளத்தில் படையினர் வசம் இருக்கும் காணிகளை விடுவிக்க கோரி 34 நாட்களாகவும் மறிச்சுக்கட்டியில் 29 நாட்களாகவும் அகிம்சை வழியில் தமது நியாயமான உரிமைகளுக்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள். எமது தாயக பகுதிகளில் தொடர்ச்சியான போராட்டங்கள் வெடித்துக்கொண்டிருக்கிற நிலையில் மக்கள் அகிம்சை வழியில் மாதக்கணக்கில் நடைபெறும் இப்போராட்டத்தை நல்லாட்சி அரசாங்கம் கண்டு கொள்ளாது அலட்சிய போக்கில் மௌனம் காத்து வருகின்றது.

எமது நியாயமான போராட்டங்களுக்கு வலுச்சேர்க்க வேண்டுமெனில் தமிழர்கள் அனைவரும் ஒன்றினைந்து ஜனநாயக ரீதியாக போராட வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது. எனவே சிறுபான்மை மக்களின் வாக்குகளில் மூலம் நல்லாட்சி அரசானது ஆட்சி நடாத்துகின்ற போதிலும் சிறுபான்மை மக்களது நியாயமான கோரிக்கைகளை செவிசாய்ப்பது நல்லாட்சியின் தார்மீக கடமையாகும்.

கௌரவ ஜனாதிபதி அவர்களும்,கௌரவ பிரதமர் அவர்களும் உடனடியாக காலம் தாழ்த்தாது உரிய தீர்வை பெற்றுத்தர முன்வருதல் வேண்டும்.

அந்தவகையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளாலும் ,காணி மீட்புக்காக போராடும் எமது உறவுகளாலும் நாளைய தினம் 27ம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள கடையடைப்பு,மற்றும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தமிழ் தேசிய பண்பாட்டு பேரவை பூரண ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்குவதோடு இப்போராட்டத்திற்கு எமது தாயக அனைத்து மக்களையும், வர்த்தகசங்கத்தினரையும்,பொது அமைப்பினரும்,போக்குவரத்து தரப்பினரும் தமது பூரண ஆதரவினை வழங்கி மேற்படி இவ் அகிம்சை வழி போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமாறு அன்பாக கேட்டுக்கொள்கின்றோம்.

"வலுச்சேர்போம் எமது உரிமைக்காக குரல் கொடுப்போம்..".

Dr.நிஷாந்தன்

தலைவர்

தமிழ் தேசிய பண்பாட்டு பேரவை.

  
   Bookmark and Share Seithy.com



யாழ்ப்பாணத்தில் இருந்து நள்ளிரவில் கடத்தப்படும் சுண்ணக்கற்கள்!
[Friday 2024-04-19 05:00]

யாழ்ப்பாணத்தில் இருந்து நள்ளிரவு வேளை சுண்ணக்கற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு திருகோணமலைக்கு கொண்டு செல்லப்படுவதாக மக்கள் என்னிடம் முறையிட்டுள்ளார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.



வவுனியாவில் இன்று கூடுகிறது தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு!
[Friday 2024-04-19 05:00]

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று வவுனியாவில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. கட்சி முகம்கொடுத்துள்ள வழக்குகள், ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக இதில் ஆராயப்படவுள்ளது.



கனடாவின் இனஅழிப்புக் குற்றச்சாட்டு - இலங்கை அரசின் தோல்வி!
[Friday 2024-04-19 05:00]

தமிழ் இன அழிப்புத் தொடர்பில் கனடாவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் நினைவுச் சின்னத்தை இலங்கையால் தடுத்து நிறுத்த முடியவில்லை என இராஜதந்திர அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.



மேதினத்தில் பலத்தை நிரூபிப்போம்!
[Friday 2024-04-19 05:00]

மே தினத்தின் பின்னர் பொதுஜன பெரமுன கட்சிக்குள் பாரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.



மாரடைப்பால் கணவன் மரணம், உயிரை மாய்த்தார் மனைவி! - இரு பெண் பிள்ளைகள் நிர்க்கதி.
[Friday 2024-04-19 05:00]

நெடுங்கேணியில் மாரடைப்பு காரணமாக கணவன் இறந்ததும், கணவனின் இழப்பை தாங்க முடியாத மனைவி தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். நேற்று மதியம் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.



சுற்றுலாவியிடம் உளுந்து வடை, தேனீருக்கு 800 ரூபாய் கறந்தவர் கைது!
[Friday 2024-04-19 05:00]

வெளிநாட்டு சுற்றுலா பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் கடையில் இருக்கும் நபர் களுத்துறை சுற்றுலா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.



14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாவிகள் இலங்கை வருகை!
[Friday 2024-04-19 05:00]

இந்த வருடத்தின் முதல் 14 வாரங்களில் 700, 000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது



இதய சத்திர சிகிச்சையில் தவறு - உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் குற்றச்சாட்டு!
[Friday 2024-04-19 05:00]

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக, உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.



கிணற்றில் தவறி விழுந்து பெண் மரணம்!
[Friday 2024-04-19 05:00]

வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை உயிரிழந்துள்ளார். மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



கனடா 400 கிலோ தங்க கொள்ளை - பிரசாத் பரமலிங்கம் உள்ளிட்ட 6 பேர் கைது!
[Thursday 2024-04-18 16:00]

கனடாவில் இடம்பெற்ற மிகப் பெரிய தங்கக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஏர் கனடா விமான சேவையின் இரண்டு பணியாளர்களும், பிரசாத் பரமலிங்கம் என்ற தமிழரும் அடங்குவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.



ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகளுக்கு எமது ஆட்சியில் தண்டனை! - தேசிய மக்கள் சக்தி வாக்குறுதி.
[Thursday 2024-04-18 16:00]

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் சூத்திரதாரிகளுக்கும் குற்றவாளிகளுக்கும் எமது ஆட்சியில் தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.



அதிகளவு உயிரிழப்புகளுக்கு மாரடைப்பே பிரதான காரணம்!
[Thursday 2024-04-18 16:00]

கடந்த வருடங்களில் அதிகளவில் உயிரிழப்புக்கள் ஏற்பட்டமைக்கு பிரதான காரணம் மாரடைப்பு என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அத்தோடு, 2010 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலும் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு பிரதான காரணமும் மாரடைப்பு என்று சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.



மைத்திரிக்கு தடை உத்தரவு நீடிப்பு!
[Thursday 2024-04-18 16:00]

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.



உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் - ஞாயிறன்று இரண்டு நிமிட மௌன அஞ்சலி!
[Thursday 2024-04-18 16:00]

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் ஐந்தாண்டுகளை நினைவுகூரும் வகையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (21) காலை 8.45 மணியளவில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு அனைவரையும் கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் கேட்டுக் கொண்டார்.



நயினாதீவில் பெண்ணுக்கு நடுக்கடலில் பிரசவம்!
[Thursday 2024-04-18 16:00]

யாழ்ப்பாணம் - நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ளார்.



வாக்குறுதி கொடுத்து ஏமாற்றினார் கோட்டா!
[Thursday 2024-04-18 16:00]

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வாக்குறுதியினால் தான் ஏமாற்றப்பட்டதாக, கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.



தேவிபுரத்தில் கட்டுத்துவக்கு வெடித்து குடும்பஸ்தர் காயம்!
[Thursday 2024-04-18 16:00]

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் இன்று பிற்பகல் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



ஆரையம்பதியில் கரையொதுங்கிய பெண்ணின் சடலம்!
[Thursday 2024-04-18 16:00]

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் இன்று கரை ஒதுங்கியதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர் . குறித்த சடலம் 55 வயது மதிக்கத்தக்க பெண்ணுடைய சடலம் எனவும் இது வரை சடலம் அடையாளம் காணப்படவில்லை எனவும் எனவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர் .



ரஷ்ய இராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு - இராணுவ மேஜர் கைது!
[Thursday 2024-04-18 16:00]

ரஷ்ய இராணுவத்தில் பணியாற்ற அனுப்புவதாக கூறி பணம் பெற்ற இருவர் கைது செய்யப்பட்டதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. சந்தேக நபர்களில் ஒருவர் ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் என தெரிவிக்கப்படுகின்றது.



ஓமான் வளைகுடாவில் மூழ்கிய கப்பல் - 21 இலங்கை மாலுமிகள் மீட்பு!
[Thursday 2024-04-18 05:00]

ஓமான் வளைகுடாவில், கடும் புயலில் சிக்கி கவிழ்ந்த கப்பலில் இருந்த 21 இலங்கை பணியாளர்களை ஈரானிய அவசர சேவைகள் பிரிவு காப்பாற்றியுள்ளதாக ஈரானிய அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா