Untitled Document
April 25, 2024 [GMT]
சிவராம் படுகொலை பற்றிய உண்மைகளைக் கண்டறிய வேண்டும்! - சம்பந்தன் Top News
[Sunday 2017-04-30 09:00]

சிவராமின் படுகொலை சம்பந்தமான  உண்மைகள் இன்னும் கண்டறியப்படவில்லை. அந்த உண்மைகள் அறியப்பட வேண்டியது தான் அவசியம் என்று எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளார் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில் நேற்று சிரேஷ்ட ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் 12ஆவது நினைவேந்தல் நிகழ்வு நடைப்பெற்றது.

சிவராமின் படுகொலை சம்பந்தமான உண்மைகள் இன்னும் கண்டறியப்படவில்லை. அந்த உண்மைகள் அறியப்பட வேண்டியது தான் அவசியம் என்று எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளார் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில் நேற்று சிரேஷ்ட ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் 12ஆவது நினைவேந்தல் நிகழ்வு நடைப்பெற்றது.

  

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், சிவராம் பல விடயங்களைப்பற்றி எழுதியிருந்த போது அவருடைய சிந்தனையினுடைய கூர்மையை அன்று எழுத்துக்களால் காட்டினார். அவரின் எழுத்தின் கூர்மையை அவரால் எழுதப்பட்ட கட்டுரையால் எல்லோரும் அவதானித்தார்கள். அதை எல்லோரும் புகழ்ந்து பேசினார்கள். சிவராமின் எழுத்துத்திறமையை பல பெரியார்கள், புத்திஜீவிகள் புகழ்ந்து பேசியதை நான் காதால் கேட்டிருக்கின்றேன்.

அவருடன் தனிப்பட்ட ரீதியில் பேசும் போதும், கருத்துக்களை, சிந்தனையை பரிமாறிக் கொள்ளும் போதும் அவர் சொல்கின்ற கருத்துக்களிலிருந்து, அவருடைய சிந்தனையுடைய ஆழம், அழுத்தம், அதனுடைய சரிவு எல்லாம் புலப்படும். சிவராம் சாதாரண மனிதரல்ல. அவர் திறமைசாலி. அவர் உயிரோடு இருந்திருந்தால் ஊடகத்துறையில் பெரியதொரு இடத்தைப் பிடித்திருப்பார்.அதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை. நாங்கள், எங்கள் சமுதாயம் பல ஊடகவியலாளர்களை இழந்திருக்கின்றது. சிவராம், நடேசன், சுகிர்தராஜன் போன்றவர்களை இழந்திருக்கின்றது.

பல்வேறு காரணங்களின் நிமித்தம் சமூகம் சம்பந்தமாக சமூகத்தில் பிரபல சம்பவங்கள் நிகழ்ந்த போது அந்த சம்பவங்களை வெளிக் கொண்டு வருவதற்காக, அந்த சம்பவங்களின் உண்மைகளை மறைக்காமல் இருப்பதற்காக அவர் பல உண்மைகளை எழுதியதன் மூலம் அவர் கொலை செய்யப்பட்டார். திருகோணமலையில் 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஐந்து மாணவர்கள் கொலை செய்யப்பட்ட போது அக்கொலைச் சம்பவத்தை மூடிமறைப்பதற்காக பல முயற்சிகள் நடைபெற்றது. அந்த மாணவர்கள் தன்வசம் வைத்திருந்த குண்டுகளின் நிமித்தம் கொலை செய்யப்பட்டார்கள் எனும் சம்பவத்தை மாற்றியமைக்க முனைந்தார்கள்.அப்பாவி மாணவர்களை சுட்டுக் கொன்ற விடயங்கள் பத்திரிகை மூலம் வெளிக்கொண்டு வந்தார்கள். இதன் நிமித்தம் சுகிர்தராஜன் கொலை செய்யப்பட்டார்.

சிவராமின் கொலை சம்பந்தமாக இன்னும் உண்மைகள் அறியப்படவில்லை. உண்மைகள் அறியப்பட வேண்டியது தான் என்று நான் அவசியமாக நினைக்கின்றேன். ஏனென்றால் பல்வேறு விதமான திறமையான ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டிருந்த போது அவர்கள் ஏன் கொலை செய்யப்பட்டனர்? எதற்காக கொலை செய்தார்கள்? அவை வெளிவர வேண்டியது சமூகத்தில் உள்ள அத்தியாவசியமான தேவையாகும் என்று நான் கருதுகின்றேன்.

இவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் இந்த நாட்டில் இடம்பெற கூடாது. ஏனென்றால் இவ்வாறான ஊடகவியலாளர்களின் கொலைகள் தொடர்பான உண்மைத்தன்மை வெளி கொண்டு வரப்பட வேண்டும் என்று கருதுகின்றேன். லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டார். எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டார். இந்த சம்பவங்களின் விசாரணைகள் இன்று நடைபெறுகின்றது. அவர்களின் பிரேதங்கள் தோண்டியெடுக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்றது. சில புது முடிவுகளுக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஒரு காலகட்டத்தில் இந்தநாட்டில் யாரும் சுதந்திரமாக சிந்திக்கவில்லை. சுதந்திரமாக செயற்பட முடியாது.

சுதந்திரமாக எழுத முடியாத நிலமை இருந்தது. இன்று அந்த நிலைமை மாறியிருக்கின்றது. சிவராம் நாட்டில் இன்று உயிரோடு இருந்திருந்தால் இன்றைய அரசியல் சூழ்நிலையில் அவர் பாரிய பங்களிப்பை செய்திருப்பார். புதிய அரசியல் சாசனத்தை உருவாக்குவதில் பல முயற்சிகள் செய்து வருகின்றோம். பல விடயங்களை பல கோணங்களில் விடயங்களை ஆராய்ந்து அவருடைய எழுத்துக்கள் மூலமாக இவ்வூடகப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு உதவியாக பாரிய பங்களிப்பை செய்திருப்பார். அந்தவகையில் சிவராமின் இறப்பை பெரும் இழப்பாக கருதுகின்றேன்.

ஒரு நாட்டின் சமுதாயத்திற்கு ஊடகவியலாளர் பாரிய பங்களிப்பை செய்திருந்தார்கள். அந்த நாட்டின் ஜனநாயகம் பாதுகாக்கப்படுவது, ஜனநாயகம் பலமாக இருப்பது, ஜனநாயகம் ஆட்சியில் அடிப்படையாக இருப்பது, ஒரு நாட்டின் செயற்படுகின்ற ஊடகவியலாளரின் சுதந்திரத்தில் தங்கியிருக்கின்றது. அவர்கள் உண்மையை எழுத வேண்டும். உண்மையான விடயங்களை கூற வேண்டும். உண்மை வெளிவர வேண்டும். உண்மை சாதாரண மக்களுக்கு தெரிய வேண்டும். இவ்விதமாக தெரியப்பட்டால் தான் அந்த நாட்டின் ஜனநாயகம் பாதுகாக்கப்படலாம். அது உறுதியாக பாதுகாக்கப்படலாம்.

ஆனால் ஊடகவியலாளர்கள் உங்களுடைய மூத்த ஊடகவியலாளர் சிவராமின் நினைவு தினத்தை நடத்தி மரியாதை செலுத்தியுள்ளீர்கள். ஊடகவியலாளர்கள் பலமாக இருக்க வேண்டும். ஊடகப்பணியை துணிவாக ஆற்ற வேண்டும். எம்மைப் பொருத்தளவில் ஊடகவியலாளர்கள் மீது அதிக மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கின்றோம். நீங்கள் சுதந்திரமாக செயற்படுவதற்கு நாங்கள் எவ்விதமாக உதவலாமோ அவ்வாறு உங்களுக்கு உதவுவதற்கு நாங்கள் பின்நிற்க மாட்டோம். அதனை உறுதியாக கூறிவைக்கின்றோம் என இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் எதிர்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், ஞா.ஸ்ரீநேசன், சீ.யோகஸ்வரன், வியாளேந்திரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன், பொன்.செல்வராசா, கிழக்கு மாகாண பிரதி தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா, மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், இ.சாணக்கியன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

  
   Bookmark and Share Seithy.com



ஈரான் ஜனாதிபதியின் விமானத்துக்கு முன்னால் புறப்பட்ட இஸ்ரேலிய விமானம்!
[Thursday 2024-04-25 16:00]

இலங்கையிலிருந்து ஈரான் ஜனாதிபதியின் விமானம் புறப்படுவதற்கு முன்னர் இஸ்ரேலிய விமானமொன்று அங்கிருந்து புறப்பட்டது என விமானங்களின் பயணங்களை கண்காணிக்கும் பிளைட்ராடர் 24 .கொம் தகவல் வெளியிட்டுள்ளது.



பொய் சொல்கிறார் பேராயர்! - கோட்டா கடும் தாக்கு.
[Thursday 2024-04-25 16:00]

பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவரை கடுமையாக சாடியுள்ளார்.



சம்பந்தனுக்கு 3 மாத விடுமுறை!
[Thursday 2024-04-25 16:00]

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தனுக்கு சம்பளத்துடன் கூடிய மூன்று மாத கால விடுமுறை வழங்க நாடாளுமன்றம் இன்று அனுமதி வழங்கியது.



பசில்- ரணில் பேச்சில் இணக்கம் - பரந்துபட்ட கூட்டணிக்கு தயார்!
[Thursday 2024-04-25 16:00]

பரந்த அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கான அதன் முதல் நடவடிக்கையாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர் பசில் ராஜபக்ஷ மற்றும் ஏனைய கட்சிகள் மற்றும் குழுக்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியதுடன் மே தினத்திற்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலை கருத்தில் கொண்டு அரசியல் பணிகளை துரிதப்படுத்த தீர்மானித்துள்ளார்.



சஜித்துடன் சீன உயர்மட்டக் குழு சந்திப்பு!
[Thursday 2024-04-25 16:00]

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச உறவுகள் திணைக்களத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவினர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியின் பிரதிநிதிகளை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து புதன்கிழமை பிற்பகல் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர் .



தமிழரசுக் கட்சி வழக்கு -ஜூனுக்கு ஒத்திவைப்பு!
[Thursday 2024-04-25 16:00]

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.



சாதாரண தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு 30 ஆம் திகதி முதல் தடை!
[Thursday 2024-04-25 16:00]

எதிர்வரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை இலக்காகக் கொண்டு இடம்பெறும் மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் எதிர்வரும் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் இடைநிறுத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.



மஹிந்தவிடம் 1000 மில்லியன் ரூபா கேட்கிறார் மைத்திரி!
[Thursday 2024-04-25 16:00]

ஊடகங்கள் ஊடாக வெளியிட்ட அறிக்கையினால் ஏற்பட்ட அவமதிப்புக்காக தனக்கு இழப்பீடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு சட்டத்தரணி ஊடாக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். மைத்திரிபால சிறிசேனவுக்கு 1,000 மில்லியன் ரூபா இழப்பீட்டுத் தொகையை 14 நாட்களுக்குள் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.



மொட்டுவில் பொருத்தமான பல வேட்பாளர்கள்!
[Thursday 2024-04-25 16:00]

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமது கட்சியிலிருந்து பொருத்தமான வேட்பாளர் நிறுத்தப்படுவார் என, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமது கட்சியில் பல வேட்பாளர்கள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



படுகொலைகளுக்குப் பின்னால் இருந்த கோட்டா!
[Thursday 2024-04-25 06:00]

2005 ஆம் ஆண்டு ஜோசப் பரராஜசிங்கம் எம்.பி.,படுகொலை, 2006 ஆம் ஆண்டு ரவிராஜ் எம்.பி.படுகொலை ,2009 ஆம் ஆண்டு இறுதி யுத்த படுகொலைகள், 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆகிய 4 சம்பவங்களின் பின்னாலும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ,முன்னாள் ஜனாதிபதியுமான கோட்டாபாய ராஜபக்‌ஷவே இருந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. யான சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.



புலிகளுக்கு எதிராக போரிட்ட இராணுவத்தினர் உக்ரைன் - ரஷ்யாவில் தங்களுக்குள் மோதுகின்றனர்!
[Thursday 2024-04-25 06:00]

விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிராக போராடிய இலங்கை இராணுவத்தினர் இன்று உக்ரைன் மற்றும் ரஷ்யா இராணுவத்தில் சேர்ந்து மோதிக் கொள்கிறார்கள். இராணுவ முகாம் உதவியாளர்களாக இலங்கையர்கள் அழைக்கப்பட்டு பலவந்தமான முறையில் யுத்த களத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். சட்டவிரோதமான முறையில் முன்னெடுக்கப்படும் இச்செயற்பாடுகள் குறித்து அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.



உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகளுக்கு உயர்ந்தபட்ச தண்டனை!
[Thursday 2024-04-25 06:00]

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் தமது அரசாங்கத்தில் விசேட விசாரணை ஆணைக்குழுவின் ஊடாக விசாரணைகளை முன்னெடுப்போம். ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கமைய வழக்கு விசாரணை மேற்கொள்ள விசேட நீதிமன்றம் அமைத்து, தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரையும் சட்டத்தின் முன் கொண்டு வருவதுடன், அவர்களுக்கு வழங்கக் கூடிய உயர்ந்தபட்ச தண்டனையை வழங்கவும் நடவடிக்கை எடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.



இழுபறியில் தமிழரசு - வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!
[Thursday 2024-04-25 06:00]

திருகோணமலை நீதவான் நீதிமன்றில் புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி நிர்வாகத் தெரிவு தொடர்பான வழக்கு எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.



தலைமன்னார் சிறுமி கொலை குற்றவாளி பொலிஸ் துணையுடன் இந்தியாவுக்கு தப்பியோட்டம்!
[Thursday 2024-04-25 06:00]

தலைமன்னாரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த சம்பவத்தில் கைதான சந்தேக நபரான அப்துல் ரகுமான் என்ற நபர் வவுனியா வைத்தியசாலையிலிருந்து தப்பித்து இந்தியாவுக்கு சென்றுள்ளார். பொலிஸாரின் பொறுப்பற்ற செயற்பாடுகள் அதிருப்திக்குரியன என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸவிடம் கேள்வி எழுப்பினார்.



சூல கொடிதுவக்குவுக்கும் சஹ்ரானுக்கும் என்ன தொடர்பு?
[Thursday 2024-04-25 06:00]

பயங்கரவாதி சஹ்ரானுக்கும் இராணுவ புலனாய்வு பிரிவின் அப்போதைய பணிப்பாளர் சூலா கொடித்துவக்கும் இடையிலான தொடர்பு என்ன? களனி கம பகுதியில் வெடிபொருட்கள் அடங்கிய லொறியை சோதனை செய்ய பொலிஸார் முற்படுகையில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் அதற்கு தடை விதித்து வாகனத்தை விடுவிக்க அறிவுறுத்தியது ஏன்? என ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யான காவிந்த ஜயவர்தன கேள்வி எழுப்பினார்.



ஈரான் - இலங்கை ஜனாதிபதிகள் சந்திப்பு - 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!
[Thursday 2024-04-25 05:00]

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்கும் இடையில் நேற்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.



வெடுக்குநாறி மலை விவகாரம் - தொடர்கிறது மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணை!
[Thursday 2024-04-25 05:00]

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் வவுனியா மனிதவுரிமை ஆணைக்குழுவினரால் நெடுங்கேணிப் பொலிசார் மற்றும் வனவளத் திணைக்கள அதிகாரிகளிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.



பொய்கூறும் கோட்டாவின் புத்தகம்!
[Thursday 2024-04-25 05:00]

தன்னை தமிழ், முஸ்லிம் மக்களே விரட்டியடித்தார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளமை முற்றிலும் பொய்யானது. அவர் இவ்வாறாக சிறுபான்மை மக்கள் மீது குற்றச்சாட்டை முன்வைத்து தனது பாவத்தை கழுவிக்கொள்ள முயற்சிக்கின்றார்என ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி கபீர் ஹாசீம் தெரிவித்தார்.



இறக்குமதி பால்மா விலை குறைகிறது!
[Thursday 2024-04-25 05:00]

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை இன்று முதல் குறைக்கப்படவுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் பால்மா பக்கட்டின் விலை 250 ரூபாயினால் குறைக்கப்படவுள்ளது. அத்துடன், 400 கிராம் பால்மா பக்கட்டின் விலை 100 ரூபாயினால் குறைக்கப்படவுள்ளது.



மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளில் முன்னேற்றம் இல்லை! - அமெரிக்கா குற்றச்சாட்டு.
[Wednesday 2024-04-24 16:00]

1983ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டுவரை இடம்பெற்ற மனித உரிமை துஸ்பிரயோகங்கள் தொடர்பிலான விசாரணைகளில் சிறிதளவு முன்னேற்றமும் இல்லை அதேபோல 1988-89 ஜேவிபி கிளர்ச்சிகாலத்தில் இடம்பெற்ற மனித உரிமை துஸ்பிரயோகங்கள் குறித்த விசாரணைகளிலும் எந்த முன்னேற்றமும் இல்லை என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.


Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா