Untitled Document
March 29, 2024 [GMT]
யாழ். ஆயரின் காலனித்துவக் கண்ணோட்டத்தைச் சிவசேனை வன்மையாகக் கண்டிக்கிறது! மறவன்புலவு க. சச்சிதானந்தன்
[Saturday 2017-05-13 18:00]

இணுவில் கந்தசாமி கோயில் அறங்காவலர் என்பதால் பேரா. விக்கினேசுவரன், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகவில்லை. சைவ சமயத்தவர் என்பதால் பேரா. விக்கினேசுவரன், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகவில்லை. புலமையாளர் மூவரின் பெயரைக் குடியரசுத் தலைவருக்கு விதந்துரைப்பது பல்கலைக்கழக அவையின் மரபு, உரிமை. யாழ் பல்கலைக் கழகம் இவ்வழியைப் பின்பற்றியது.

இணுவில் கந்தசாமி கோயில் அறங்காவலர் என்பதால் பேரா. விக்கினேசுவரன், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகவில்லை. சைவ சமயத்தவர் என்பதால் பேரா. விக்கினேசுவரன், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகவில்லை. புலமையாளர் மூவரின் பெயரைக் குடியரசுத் தலைவருக்கு விதந்துரைப்பது பல்கலைக்கழக அவையின் மரபு, உரிமை. யாழ் பல்கலைக் கழகம் இவ்வழியைப் பின்பற்றியது.

  

மூவருள் முதலாமவர், இரண்டாமவர், மூன்றாமவர் என்ற வரிசையையும் கூறியிருந்தது. மூன்று பேரைப் பரிந்துரைக்காமல் முதலாமவரை மட்டுமே பரிந்துரைத்திருந்தால் பேரா. விக்கினேசுவரன், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகார். யாராவது ஒருவரைத் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதைப் பல்கலைக்கழக அவையினர் அறிந்திருந்தனர், பட்டியலில் உள்ள மூவரும் தெரிந்திருந்தனர்.

இத மூவருக்கும் அப்பால் வேறொருவரைத் துணைவேந்தராக்கினால் கூக்குரலிடலாம். அவ்வாறு பதவியிலமர்த்தவும் குடியரசுத் தலைவருக்குத் துணிபு உண்டு. அவ்வாறு நடைபெறவில்லை. பேரா. விக்கினேசுவரன், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராவதைக் கேட்ட கத்தோலிக்க ஆயர் கூக்குரலிடுகிறார். சைவ சமயத்தவர் மட்டுமன்று, இணுவில் கநதேசாமி கோயில் அறங்காவலருமல்லவா?

கத்தோலிக்க ஆயருக்குப் பொறுக்கவில்லை. 400 ஆண்டுகளாகக் கிறித்தவ மேலாதிக்கம் ஓங்கியிருந்த நிலையை ஆயர் மறக்கவில்லை. தகுதிகளுக்கு அப்பால், கிறித்தவரோ, கிறித்தவ அடிவருடிகளோ, மேலாதிக்கம் பெறுவதைப் போர்த்துக்கேய, ஒல்லாந்த, ஆங்கிலேய காலத்தில் அநுபவித்தவர்கள், ஆழ்ந்த ஈடுபாடுடைய சைவ சமயத்தவர் துணைவேந்தராவதை விரும்பாமை வியப்பல்ல. செல்லத்துரையின் பெயர் நெவின்சு செல்லத்துரை என்பதால் கல்வி கற்க ஏற்றவர்கள், வில்லியம் விக்கினேசுவரன் எனப் பெயர் மாற்றியிருந்தால் மனமுவந்து துணைவேந்தரே வருக என வரவேற்றிருப்பர்.

பேரா. விக்கினேசுவரன், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர். தகுதி வாய்ந்தவர் என்பதால் பல்கலைக்கழக அவை விதந்துரைத்தது. புலமையாளர் நடுவே அவரைப் போற்றுவர், பாராட்டுவர், புகழ்வர், வாழ்த்துவர்.

கத்தோலிக்க ஆயரே, அரசியலமைப்பில் புத்த சமயத்துக்கு முன்னுரிமை கொடுப்பதே முறை எனக் கருதினால் மல்க்காம் இரஞ்சித்தார் கருதியுள்ளார், கூறியுள்ளார், நீங்கள் ஏற்றுக் கொண்டு அவரின் கீழ் ஆயராக உள்ளீர்கள். தமிழ் மக்கள் ஒருபொழுதும் அரசியல் அமைப்பில் புத்த சமயத்துக்கு முன்னுரிமை கொடுப்பதை ஏற்கமாட்டார்கள். அரசியல் அரங்கில் இது தெளிந்த நிலை. கத்தோலிக்கர் புத்த முன்னுரிமை கொண்ட அரசியலமைப்பை ஏற்கிறார்கள் எனில் நீங்கள் தமிழரா இல்லையா என்பதைத் தீர்மானியுங்கள்.

விடுதலைப் புலிகள் காலத்தில் அவர்களுக்கு அடிவருடிய கத்தோலிக்க ஆயர் மற்றும் பாதிரியார்கள், இராசபக்சா வென்றதும் அவருக்கும் சார்ந்தவருக்கும் அடிவருடிய கத்தோலிக்க ஆயர் மற்றும் பாதிரியார்கள், தாம் செய்வதையே மற்றவரும் செய்வார் என்ற அதீத கற்பனையில் அரசியல்வாதிகள் காலில் வீழ்ந்து துணைவேந்தர் பதவி பெற்றதாகக் கூக்குரலிடுகின்றனர்.

மன்னாரில் ஆயராக வரவேண்டிய மூத்த கத்தோலிக்கரான நெடுந்தீவுப் பெருமகனாரைப் புறந்தள்ளிய கத்தோலிக்க திருச்சபை, துணைவேந்தர் வரிசையையும் தேர்வையும் பேசுவது வெட்கக்கேடானது. கண்ணாடி வீட்டிலிருந்து கல்வீட்டிற்குக் கல்லெறியாதீர் கத்தோலிக்க ஆயரே.

ஆயிரம் முறைகேடுகள் கத்தோலிக்கத் திருச்சபைக்குள் நடைபெறுவதற்குத் தலைமை தாங்கும் கத்தோலிக்க ஆயர், முறையான பதவி வழங்கல்வழி ஆழ்ந்த சைவ சமயத்தவர் பெற்றதால் மனம் புழுங்கி, வேதனை விறுவிறுக்க, நெஞ்சம் பதைக்க, பொறாமை பெருக்கெடுக்கக் காலனித்துவக் கண்ணோட்டத்துடன் கூக்குரலிடுவதைச் சிவ சேனை வன்மையாகக் கண்டிக்கிறது.

  
   Bookmark and Share Seithy.com



பிளவை நோக்கி பொதுஜன பெரமுன!
[Friday 2024-03-29 16:00]

ஜனாதிபதி தேர்தலில் கட்சியின் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க வேண்டும் என மற்றைய தரப்பினரும் உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது.



நாடு முழுவதும் தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு!
[Friday 2024-03-29 16:00]

நாடளாவிய ரீதியில் உள்ள கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்றும், நாளை மறுதினமும் இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



எந்த தேர்தல் முதலில் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்!- பசில்
[Friday 2024-03-29 16:00]

எந்த தேர்தல் முதலில் நடைபெற வேண்டும் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள் என முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்றுக்குழுவிடம் தெரிவித்துள்ளார்.



முட்டை இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டது!
[Friday 2024-03-29 16:00]

முட்டை இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.



எந்த தேர்தலை எதிர்கொள்வதற்கும் மொட்டு தயார்!
[Friday 2024-03-29 16:00]

பொதுஜன பெரமுன எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள தயாராக உள்ளதாக பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம் சந்திரசேன தெரிவித்துள்ளார்.



எச்ஐவி தொற்றாளர் எண்ணிக்கை 14 வீதத்தினால் அதிகரிப்பு!
[Friday 2024-03-29 16:00]

நாட்டில் எச்ஐவி தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 14 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக இலங்கையின் தேசிய எயிட்ஸ் தடுப்பு திட்டத்தின் பணிப்பாளர் டாக்டர் ஜானகி விதானபத்திரன தெரிவித்துள்ளார்.20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் இந்த தொற்றால் பாதிக்கப்படும் ஆபத்தில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



வாடகை குடியிருப்பாளர்களை பாதுகாக்க சட்டம்! - கனடியப் பிரதமர் அறிவிப்பு.
[Friday 2024-03-29 05:00]

கனடாவில வாடகைக் குடியிருப்பாளர் சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் வாடகைக் குடியிருப்பாளர்களை பாதுகாக்க கூடிய வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.



நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்குமாறு மைத்திரிக்கு உத்தரவு!
[Friday 2024-03-29 05:00]

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



நாமல் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட 10 வருடங்கள் காத்திருக்க வேண்டும்!
[Friday 2024-03-29 05:00]

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளர் இல்லை என்று கூறியுள்ள அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இன்னும் ஐந்து அல்லது பத்து வருட காலத்திற்குப் பின்னரே ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்ச போட்டியிட முடியும் என்று கூறினார்.



அம்பாந்தோட்டையில் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் - அவசரப்படுகிறது சினோபெக்!
[Friday 2024-03-29 05:00]

இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ள எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் நிர்மாணப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க சீனாவின் சினோபெக் நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது.



உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள 7 ஆலயங்களை விடுவிக்க நடவடிக்கை!
[Friday 2024-03-29 05:00]

யாழ்ப்பாணத்தில் அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.



வட்டுக்கோட்டை இளைஞன் கொலை -பகுப்பாய்வு அறிக்கைகளுக்கு உத்தரவு!
[Friday 2024-03-29 05:00]

வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.



அனுரவிடம் தமிழ் மக்களுக்கான தீர்வு இல்லை!
[Friday 2024-03-29 05:00]

தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமார திசாநாயக்கவிடம் தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வுகள் இல்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.



தேர்தலை தீர்மானிக்க பசில் தேர்தல் ஆணையாளர் அல்ல!
[Friday 2024-03-29 05:00]

பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தேர்தல் ஆணையாளரல்ல,எந்த தேர்தலை நடத்த வேண்டும் என்று அவர் தீர்மானிக்க வேண்டிய அவசியமில்லை.அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தெரிவித்தார்.



குளியல் காட்சிகளை படம் பிடித்தவர் கைது!
[Friday 2024-03-29 05:00]

யாழ்ப்பாணம் - கொழும்புத்துறையில் ஆண் ஒருவர் குளிப்பதை மறைந்திருந்து தொலைபேசியில் காணொலி எடுத்துக் கொண்டிருந்த நபரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.



சுங்கத்தில் சிக்கியுள்ள கீரி சம்பாவை விடுவிக்கவே தற்காலிக வரிக் குறைப்பு!
[Friday 2024-03-29 05:00]

அரிசி இறக்குமதியை அனுமதிப்பதற்காக அல்ல, தற்போது சுங்கத்தில் சிக்கியுள்ள அரிசியை அகற்றுவதற்காகவே அரிசி மீதான விஷேட பொருட்கள் வரி குறைக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.



ஞானசார தேரருக்கு 4 வருட கடூழியச் சிறைத்தண்டனை! Top News
[Thursday 2024-03-28 16:00]

குரகல விகாரையில் இஸ்லாமிய மதத்திற்கு எதிராக வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக பொதுபல சேனா பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.



முன்னாள் போராளி பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது!
[Thursday 2024-03-28 16:00]

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்த குற்றச்சாட்டின் பேரில் வவுனியாவைச் சேர்ந்த அரவிந்தன் என்ற முன்னாள் போராளி பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.



இலங்கை நாணயத்தின் மதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு!
[Thursday 2024-03-28 16:00]

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295 ரூபாய் 54 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 305 ரூபாய் 33 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.



இலங்கையின் ஆட்சி முறையில் மாற்றங்கள் வேண்டும்!
[Thursday 2024-03-28 16:00]

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வை காண்பதற்கு இலங்கையின் ஆட்சி முறையில் மாற்றங்கள் இடம்பெறவேண்டும் என இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை தெரிவித்துள்ளது.


Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா