Untitled Document
March 28, 2024 [GMT]
பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் செய்தி என்ன?
[Thursday 2017-05-18 20:00]

முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்கும் சிறிலங்கா அரசின் தொடரும் இனஅழிபு;பத் திட்டத்துக்கும் எதிராக வழங்கப்படக்கூடிய பரிகாரநீதியாக ஈழத்தமிழ் மக்கள் ஒரு தேசம் என அங்கீகாரம் வழங்கப்படுவதும், சுயநிர்ண உரிமையின் அடிப்படையில் ஒரு தீர்வை எட்டிக் கொள்வது மட்டுமே அமைய முடியும்.
இவ்வாறு மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் செய்தியில் தெரிவித்தள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், ஐனநாயக வழியில் இத தீர்வினை எட்டிக் கொள்ள தனிநாடு உள்ளடக்கிய மக்கள் பொதுவாக்கெடுப்பு நடாத்தப்படுவதே தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் தமது உயிரை ஈகம் செய்த அனைவருக்கும் வழங்கப்படக்கூடிய நீதியாக இருக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்கும் சிறிலங்கா அரசின் தொடரும் இனஅழிபு;பத் திட்டத்துக்கும் எதிராக வழங்கப்படக்கூடிய பரிகாரநீதியாக ஈழத்தமிழ் மக்கள் ஒரு தேசம் என அங்கீகாரம் வழங்கப்படுவதும், சுயநிர்ண உரிமையின் அடிப்படையில் ஒரு தீர்வை எட்டிக் கொள்வது மட்டுமே அமைய முடியும். இவ்வாறு மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் செய்தியில் தெரிவித்தள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், ஐனநாயக வழியில் இத தீர்வினை எட்டிக் கொள்ள தனிநாடு உள்ளடக்கிய மக்கள் பொதுவாக்கெடுப்பு நடாத்தப்படுவதே தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் தமது உயிரை ஈகம் செய்த அனைவருக்கும் வழங்கப்படக்கூடிய நீதியாக இருக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

  

நா.தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் பணிமனையினால் விடுக்கப்பட்டுள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது தமிழீழத் தேசிய துக்க நாளின் முழுமையான அறிக்கை :

இன்று தமிழீழத் தேசிய துக்கநாள்.

இற்றைக்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழீழத் தாயகத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியிலும் ஏனைய வன்னிப்பெருநிலப்பரப்பெங்கும் தமிழீழ மக்கள் மீது சிங்களப் பேரினவாதப்பூதம் நடத்திய இனப்படுகொலையின் நினைவு நாள். தமிழர்களாகப் பிறந்து விட்ட காரணத்தால், தமிழ் மொழியைப் பேசிய காரணத்தால், தமிழர்களின் நடைமுறையரசின் கீழ் வாழ்ந்து வந்த காரணத்தால் எமது மக்கள் சிங்களத்தால் கூட்டாகத் தண்டனைக்குள்ளாக்கப்பட்ட பெரும் கொடுமையின் நினைவு நாள்.

மக்கள் கொத்துக் கொத்தாய் கொல்லப்பட்டபோது அதனைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பைக் கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் சபை உள்ளடங்கலான அனைத்துலக சமூகம் மக்கள் நலனைப் புறந்தள்ளி அரசுகளின் அவையாக அரசுகளின் நலன்களின் பேணும் வகையில் செயற்பட்டு தமிழினப்படுகொலைக்குத் துணை நின்ற கறைபடிந்ந நாட்களின் நினைவு நாள்.

என்ன குற்றம் செய்தார்கள் நமது மக்கள்? அவர்களின் குரல்வளை கோரமாக நசுக்கப்பட்டதன் காரணம் என்ன? குருதியாற்றில் அவர்கள் மூழ்கடிக்கப்பட்டதற்கான நியாயம்தான் என்ன?

உலகப்பந்தில் ஒடுக்கப்பட்ட மக்களாக அல்லாது உரிமைகள் பெற்ற மக்களாக, சமத்துவமாக, பாதுகாப்பாக, கௌரவமாக, இனஅழிப்புக்கு உட்படாது நமது மக்கள் வாழ நினைத்தது தவறா?

தமது மக்களையும் மண்ணையும் பாதுகாக்க தாய்நிலம் பிழந்து போர்க்களத்துக்கு சென்ற நம் மண்ணின் புதல்வவர்களைத் தாங்கி நின்றது எம் மக்கள் செய்த தவறா?

தனது நாட்டுக்காகத் தேசத்துக்காகப் போரிட்ட ஒவ்வொரு வீரனையும் உலகின் அனைத்து நாடுகளும் தலையில் வைத்துக் கொண்டாடுகின்றனவே? எமது மக்களுக்கு அந்த உரிமை கிடையாதா?

எமது வீர்களுக்கு ஏன் பயங்கரவாதப் பட்டம்? இப் பட்டம் சூட்டும் அரசுகள் செய்யாத பயங்கரவாதமா? ஒரு புறம் மனித உரிமைகளைப் பேசிக் கொண்டு மறுபுறம் மிக மோசமான யுத்தங்களை ஏவிவிடுவதும் மனித உரிமை மீறல்களுக்குக் காரணமாக இருப்பதுவும் இப்பட்டம் சூட்டும் அரசுகள்தானே, ஏந்தத்தார்மீக உரிமையின்பாற்பட்டு உரிமைகளுக்காகப் போராடும் போராளிகளுக்கு இப் பட்டத்தை அரசுகள் சூட்டுகின்றன?

2001 செப்டம்பர் 11ருக்கு பின்னர் பயங்கரவாதப்பட்டம் என்பது அரசியல் ஆயுதமாக்கப்பட்டிருக்கிறது. தமக்கு விரும்பாத அல்லது தமது நலன்களுடன் ஒத்துப் போகாத பேராட்ட அமைப்புகளைப் போராட்டக் களத்தில் இருந்து அகற்றுவதற்கு இப் பட்டம் பயன்படுத்தப்படுகிறது.

சிறிலங்கா அரசினைப் பொறுத்தவரையில் தனது தமிழன அழிப்புக் கொள்கையின நடைமுறைப்படுத்த விடுதலைப்புலிகள் அமைப்பினைப் போராட்டக்களத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். அனைத்துலக அரசுகளைப் பொறுத்வரை இலங்கைத்தீவின் புவிசார் அரசியலுக்குள் விடுதலைப்புலிகள் எனும் புதியதோர் அதிகார மையம் புகுந்து வளர்ச்சியடைந்து வருவதனை விரும்பவில்லை.

இவ்வாறு புதிய அரசியல் மையம் வளர்ச்சியடைவது தமது நலன்கள் அடிப்படையிலான சமன்பாட்டை சிக்கலாக்கும் என அவர்கள் கருதினார்கள்.

இதனால் விடுதலைப்புலிகள் அமைப்பை அங்கீகரித்து புதிய அதிகாரமையத்தை உருவாக்காது விடுதலைப்புலிகள் அமைப்பைப் பேராட்டக்களத்தில் இருந்து அகற்ற அவர்களும் விரும்பினார்கள். அவ்விடத்தில் சிறிலங்கா அரசின் நலனும் அனைத்துலக அரசுகளது நலனும் ஓர் புள்ளியில் சந்தித்துக் கொண்டன.

இதன் விளைவாகத்தான் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பும் மனிதப் பேரவலமும் ஊற்றெடுத்தன. இவர்களின் அரசியல் நலன்களே எமது மக்களைக் கொன்று தீர்த்தன. நாம் இவற்றை இங்கு குறிப்பிடுவது அனைத்துலகச் சமூகத்தின் பாத்திரத்தை நிராகரிப்பதற்கும் நோக்கத்துக்காக அல்ல. மாறாக அனைத்துலச சமூகம் தார்மீக நேர்மையுடனும் பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும் என்பதனை வலியுறுத்தவே இதனைக் கூறுகிறோம்.

சிங்களத்தின் தமிழன அழிப்பு தமிழர் தேசத்துக்குத் தந்து பெருந்துயரை வெளிப்படுத்தும் வகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், மே18ம் நாளைத் தமிழீழ தேசிய துக்க நாளைப் பிரகடனப் படுத்தியிருக்கிறது.

தேசிய துக்கம் என்பதும் ஆறாப் பெருந்துயர்; என்பதும் எமது மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடுகள். முள்ளிவாய்க்கால் நினைவுகள் எமக்குள் முதலில் ஏற்படுத்துவது ஆறாப் பெருந்துயரைத்தான்.

இத் துயரில் இருந்து கடும் சினமும் கனலும் எம்முள் எழுகின்றன. இன அழிப்பின் துயர நினைவுகள் ஆறாக் கொடுஞ் சினமாக நமது கூட்டு நினைவுகளில் நெருப்பாகத் தகிக்கின்றன.

இந் நெருப்பு என்றும் உலகத் தமிழர் மக்கள் மத்தியில் கனன்று கொண்டுதான் இருக்கும். எந்தவித அரசியல் சரணாகதியையும் அது சுட்டெரிக்கும். தமிழீழ மக்களின் விடுதலை மட்டுமே கனலும் இந் நெருப்பை ஆற்றுப்படுத்த உதவும்.

முள்ளிவாயக்கால் இனஅழிப்பை நினைவுகூரும் இத் தருணத்தில் முள்ளிவாய்க்காலிலும் தமிழீழத்தின் அனைத்து நிலப்பரப்பெங்கும் கொல்லப்பட்ட மக்களுக்கு எமது வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்வோம்

சிங்கள இராணுவத்தின் தமிழன அழிப்பை எதிர்த்து நின்று பெரும் வீரத்துடன் போராடி, தமிழீழ நிலப்பரப்பின் ஒவ்வொரு அங்குலத்தையும் சிங்கள ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்கச் சமர் புரிந்து, தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தி அவர்களை நமது நெஞ்சக்கூட்டினுள் இருத்திக் கொள்வோம்.

அன்பான மக்களே!

முள்ளிவாயக்கால் தமிழன அழிப்புத் தொடர்பாக அனைத்துலக விசாரணைகளை நடாத்தி சிறிலங்காவைக் குற்றவாளிக்கூண்டில் ஏற்றுமாறு தமிழ் மக்கள் கோருகிறார்கள்.

தமிழ்நாட்டின் சட்டப்பேரவையும் இக் கோரிகை;கையை ஏகமனதான தீர்மானமாக நிறைவேற்றியருக்கிறது. சுpறிலங்காவின் வடக்கு மகாணசபையும் இத்தகைய தீர்மானமொன்றை நிறைவேற்றியிருக்கிறது. இத் தீர்மானங்கள் முள்ளிவாக்காலுக்கு நீதி கோரும் வகையிலான தீர்மானங்களே!

நாமும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் மக்கள் அமைப்புகளின் துணையுடன் தமிழன அழிப்புக் குற்றச்சாட்டின் கீழ் சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தில் அல்லது அதற்கு நிகரான நீதிமன்றில் நிறுத்துமாறு கோரி ஒரு மில்லியன் கையெழுத்து இயக்கமொன்றை நடத்தி 1.6 மில்லியன் கையெழுத்துக்களுடன் இக் கோரிக்கையை ஐக்கிய நாடுகள் சபையிடம் சமப்ப்பித்திருந்தோம்.

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களதும் மனித உரிமை அமைப்புகளதும் வலுவான கோரிக்கiயாக சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தில் நிறுத்தும் கோரிக்கை இருக்கிறது. இருந்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவை இவ் விடயத்தில் காத்திரமான நடவடிக்ககைகளை இதுவரை எடுக்கவில்லை. சிறிலங்கா அரசின் காலந்தாழ்த்தும் நடவடிக்ககைளுக்கு துணைபோகும் வகையில்தான் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவை செயற்பட்டு வருகிறது.

மனித உரிமைப் பேரவை அரசுகளின் அமைப்பாக இருப்பது இதற்கு முக்கிய காரணம். அரசுகளின் முடிவுகளில் நீதியும் மனித உரிமை அக்கறையும் முதன்மைப்பங்கு வகிக்காமல் அரசுகளின் பரஸ்பர நலன்களே முதன்மைப்பாத்திரம் வகிக்கும் நிலை இருப்பது கவலைக்குரியது.

இன்றைய அரசியல் உலக ஒழுங்கு நீதியினதும் தர்மத்தினதும் அச்சுகளில் சுழலாமல் நலன்களின் அச்சில் உழல்வது குறித்து தேசியத் தலைவர் அவர்களும் முன்னர் பல தடவைகள் சுட்டிக் காட்டியிருக்கிறார் என்பதும் இங்கு கவனத்துக்குரியது. மனித உரிமைப்பேரவையில் பலமிக்க அரசுகள் சிறிலங்கா அரசைப் பாதுகாக்க விரும்புகின்றன. சிறிலங்காவின் தற்போதய ஆட்சி இவ் அரசுகளினால் உருவாக்கப்பட்ட ஆட்சியாக இருக்கிறது.

மனித உரிமைப்பேரவையின் எந்த நடவடிக்கைiயும் தற்போதய சிறிலங்கா அரசாங்கத்தைப் பாதிக்காத, பலவீனப்படுத்தாத வகையில் இருப்பதனையே இவ் அரசுகள் விரும்புகின்றன.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மனித உரிமைப் பேரவை அமர்வில் சிறிலங்காவுக்கு மேலும் இரண்டு வருடகால அவகாசம் வழங்கப்பட்டமை சிறிலங்கா அரசாங்கத்தின் சமநிலையை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்iயாகவே இருக்கிறது. அரசுகளின் ஓர் அவையில் அரசற்ற மக்கள் கூட்டம் தமக்கான நீதியினை வென்றெடுப்பதற்கு செயற்பட வேண்டிய மார்க்கம் குறித்தே நாம் சிந்திக்க வேண்டும்.

சிறிலங்கா அரசு தனது ஆட்சியாளர்களை மாற்றிக் கொள்வதன் மூலம் தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது. பலம் மிக்க அரசுகளின் நலன்களுடன் தமது நலன்களை இணைப்பதில் சிறிலங்காவின் புதிய ஆட்சியாளர்கள் கவனமாக நடந்து கொள்கிறார்கள். இதுவே அரசுகளின் ஆதரவை சிறிலங்கா பெற்றுக் கொள்வதற்குக் காரணமாக இருக்கிறது. ஆனால் இந்த வித்தையினை மனித உரிமைப் பேரவையில் உள்ள அரசுகளும் சிறிலங்காவும் தொடர்ச்சியாகக் செய்து கொண்டிருக்க முடியாது.

நாம் எமது தொடர்ச்சியான செயற்பாடுகள் மூலம் சிறிலங்கா அரசு நீதி மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களில் சிறிலங்காவின் இறுக்கமான இனவாத அரச கட்டமைப்பு இடமளிக்காது என்ற கருத்துருவாக்கத்தினை அனைத்துலக அரங்கில் செய்து வருகிறோம்.

நடந்த முடிந்த மனித உரிமைப் பேரவைக்கூட்டத்தொடரிலும் சிறிலங்கா மீதான அனைத்துலுக விசாரணை தேவை என்ற கருத்து மனித உரிமை அமைப்புகளிடையே வலுவாகக் காணப்பட்டது. சிறிலங்கா அரசைக் குற்றவாளிக்கூண்டில் ஏற்றும்வரை நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டம் தொடரந்து கொண்டே இருக்கும்.

தமிழ் மக்கள் தமது நீதிக்கான போராட்டத்தில் ஒதுங்கியிருந்து பார்வையாளர்களாய் பார்த்துக் கொண்டிருக்கப் போவதில்லை. அவர்கள் தமது போராட்டத்தை தமது கையில் எடுத்து நீதிக்காகக் குரல் கொடுக்கும் அனைத்துலக மக்களுடன் இணைந்து செயற்படுவார்கள். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இந்தச் செயற்பாடுகளை வலுப்படுத்த உறுதி பூண்டுள்ளது.

மனித உரிமைப்பேரவை எமது நீதிக்கான போராட்டத்தில் ஓர் அரங்கு மட்டுமே. இப் போராட்டத்தை நாம் நாடுகள் தழுவியரீதியில் விரிவாக்கம் செய்வோம்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் திட்டங்களில் இரண்டினை இவ்விடத்தில் குறிப்பிடப்பட விரும்புகிறேன். சிறிலங்கா அரசின் செயற்பாடுகளைக் கண்காணித்து அனைத்துலக அரங்கில் அம்பலப்படுத்தவதற்காக அமைக்கப்பட்ட அனைத்துலக கண்கானிப்புக்குழுவின் காலத்தை மேலும் இரண்டு வருடங்களுக்கு நாம் நீடித்துள்ளோம்.

சட்டத்தரணிகள், விசாரைணயாளர்கள், செயற்பாட்டாளர்களைக் கொண்ட செயலணியொன்றினை அமைத்து சிறிலங்கா தரப்பில் இனஅழிப்பு நடவடிக்கைளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக ஆதாரங்களுடனான சட்ட நடவடிக்கைளில் மேற்குலக நாடுகளில் ஈடுபட இருக்கிறோம்.

நாம் இவற்றைச் செய்து கொண்டிருக்கும்போது சிறிலங்காவால் குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக எதுவித நடவடிக்கையும் எடுக்கப்டவில்லை என்பதுவும் அம்பலமாகும். இது சிறிலங்கா மீது அனைத்துலக நடவடிக்கை தேவை என்ற நிலைப்பாட்டை வலுப்படுத்த உதவும். சிறிலங்கா அரசு தான் இழைத்த குற்றத்தில் இருந்து தப்பித்துப்போகத் தமிழ் மக்கள் இடம் கொடுக்கப் போதில்லை.

நாம் இத் தருணத்தில் அனைத்துலக சமூகத்துக்கு ஒரு விடயத்தை வலியுறுத்திக் கூற விரும்புகிறோம். இரண்டு வருடங்கள் என்ன இருபது வருடங்கள் காலஅவகாசம் கொடுத்தாலும் சிறிலங்காவின் எந்த ஆட்சியாளர்களும் எந்தவிதமான நடவடிக்கையினையும் இவ் விடயத்தில் எடுக்கப்போவதில்லை.

மகிந்த இராஜபக்ச அரசாங்கமோ அல்லது தற்போதய மைத்ரி - ரணில் - சந்திரிகா அரசாங்கமோ

  
   Bookmark and Share Seithy.com



ஞானசார தேரருக்கு 4 வருட கடூழியச் சிறைத்தண்டனை! Top News
[Thursday 2024-03-28 16:00]

குரகல விகாரையில் இஸ்லாமிய மதத்திற்கு எதிராக வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக பொதுபல சேனா பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.



முன்னாள் போராளி பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது!
[Thursday 2024-03-28 16:00]

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்த குற்றச்சாட்டின் பேரில் வவுனியாவைச் சேர்ந்த அரவிந்தன் என்ற முன்னாள் போராளி பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.



இலங்கை நாணயத்தின் மதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு!
[Thursday 2024-03-28 16:00]

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295 ரூபாய் 54 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 305 ரூபாய் 33 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.



இலங்கையின் ஆட்சி முறையில் மாற்றங்கள் வேண்டும்!
[Thursday 2024-03-28 16:00]

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வை காண்பதற்கு இலங்கையின் ஆட்சி முறையில் மாற்றங்கள் இடம்பெறவேண்டும் என இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை தெரிவித்துள்ளது.



சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவன் விபத்தில் பலி!
[Thursday 2024-03-28 16:00]

மட்டக்களப்பு - பெரியகல்லாறு பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில், இம்முறை சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.



அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!
[Thursday 2024-03-28 16:00]

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐந்து பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



புன்னாலைக்கட்டுவன் விபத்தில் முதியவர் பலி!
[Thursday 2024-03-28 16:00]

யாழ்ப்பாணம் -புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நேற்று மாலை இடம் பெற்ற வீதி விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிறிய ரக உழவு இயந்திரமொன்றில் புல் ஏற்றுக் கொண்டிருந்த போது லொறி ஒன்று மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பாக சுன்னாகம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



ஜனாதிபதி ரணிலுக்கு மக்களாணை இல்லை!
[Thursday 2024-03-28 16:00]

நாடாளுமன்றத்தின் ஊடாக அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதிக்கு மக்களாணை கிடையாது என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.



பணவீக்கம் சடுதியாக குறைந்தது!
[Thursday 2024-03-28 16:00]

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையில் இலங்கையின் பணவீக்கம் மார்ச் மாதத்தில் 0.9 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது முந்தைய மாதத்தில் 5.9 சதவீதமாக பதிவாகியிருந்தது.



வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட யுவதி!
[Thursday 2024-03-28 16:00]

வவுனியா, சமனங்குளம் பகுதியில் இருந்து 23 வயது யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம் பொலிஸார் இன்று தெரிவித்தனர்.



தனிநபரின் மாதாந்த செலவு அதிகரிப்பு!
[Thursday 2024-03-28 16:00]

தனிநபர் ஒருவரின் மாதாந்த செலவு அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.



பசிலின் பதவி நாமல் வசமானது!
[Thursday 2024-03-28 16:00]

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார். அக்கட்சியின் நிறைவேற்று சபை கூட்டம் நேற்று பிற்பகல் கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க இதை தெரிவித்தார்.



முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் விபத்தில் பலி!
[Thursday 2024-03-28 16:00]

வவுனியா, ஓமந்தையில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் மரணமடைந்துள்ளார்.



அரிசி, பெரிய வெங்காயத்திற்கான விசேட பண்ட வரி குறைப்பு!
[Thursday 2024-03-28 16:00]

அரிசி மற்றும் பெரிய வெங்காயத்திற்கான விசேட பண்ட வரி இன்று முதல் குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி ஒரு கிலோ கிராம் அரிசிக்கு 65 ரூபாவாக இருந்த விசேட பண்ட வரி நேற்று முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதி வரை ஒரு ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.



இந்திய மீனவர்கள் மூவருக்கு சிறைத்தண்டனை!
[Thursday 2024-03-28 16:00]

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 36 தமிழக கடற்தொழிலாளர்ககளில் மூவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் , ஏனைய 33 பேருக்கும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.



வட, கிழக்கில் வழிபாட்டுத்தலங்களை இலக்கு வைத்த காணி அபகரிப்புகளால் பதற்றம் அதிகரிப்பு!
[Tuesday 2024-03-26 18:00]

இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்ந்தும் கரிசனைக்குரியதாகவே காணப்படுகின்றது. நாட்டின் வட, கிழக்கு மாகாணங்களில் காணி அபகரிப்புக்கள் அதிகரித்து வருவதுடன், சிலவேளைகளில் அவை மத வழிபாட்டுத்தலங்களை இலக்கு வைத்தவையாகக் காணப்படுகின்றன. இவ்வாறான செயற்பாடுகள் சமூகங்களுக்கு இடையில் பதற்றத்தைத் தோற்றுவித்துள்ளன என்று பிரிட்டனின் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம் தெரிவித்துள்ளது.



கீரிமலையில் காணி அபகரிப்பு முயற்சி - உரிமையாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் அளவீடு இடைநிறுத்தம்! Top News
[Tuesday 2024-03-26 18:00]

யாழ்ப்பாணம் - கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி நடவடிக்கைக்காக சுவீகரிக்கும் அடிப்படையில் அளவீடு செய்வதற்கு நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் இன்று காலை 10 மணியளவில் வருகை தந்திருந்தனர்.



இலங்கை நோக்கி புறப்பட்ட “டாலி“யே அமெரிக்க பாலத்தை தகர்த்தது!
[Tuesday 2024-03-26 18:00]

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் அமைந்துள்ள பால்டிமோர் பாலம் மீது சரக்கு கப்பல் ஒன்று ​மோதியதில் குறித்த பாலம் இடிந்து வீழ்ந்துள்ளது. குறித்த சரக்கு கப்பல் இலங்கை நோக்கிச் சென்ற கப்பல் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.



அக்குபஞ்சர் சிகிச்சை பெற்றவர் கிருமித் தொற்று ஏற்பட்டு மரணம்!
[Tuesday 2024-03-26 18:00]

அக்குபஞ்சர் சிகிச்சை பெற்றுக்கொண்ட யாழ் அச்சுவேலி கிழக்கு பகுதியை சேர்ந்த மாணிக்கம் சற்குணராஜா (வயது 64) என்பவர் கிருமித் தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.



மைத்திரியின் வாக்குமூலம் - பொய்த்தகவல்கள் பரவுவதாக சுதந்திரக் கட்சி குற்றச்சாட்டு!
[Tuesday 2024-03-26 18:00]

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு வழங்கிய வாக்குமூலம் தொடர்பில் பிரதான ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பொய்யான மற்றும் திரிபுபடுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகி வருவதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. இது போன்ற தவறான மற்றும் திரிபுபடுத்தப்பட்ட அறிக்கைகளை கண்டிப்பதாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.


NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா