Untitled Document
April 18, 2024 [GMT]
தென் சீனக் கடலுக்கு அடியில் இருந்து எரியும் பனி கண்டுபிடிப்பு: - சீனா தகவல்
[Monday 2017-05-22 18:00]

முதன்முறையாக தென் சீனக் கடலுக்கு அடியில் இருந்து ஐஸ் கட்டி போன்ற பொருளிலிருந்து எரிவாயுவை பிரித்தெடுத்திருப்பதாக சீனா கூறியுள்ளது., எதிர்காலத்தின் உலக எரிபொருள் தேவைக்கான முக்கிய ஆதார மையமாக இது விளங்கும் என்று கருதப்படுகிறது..இந்த வெற்றியை ஒரு மிகப்பெரிய கண்டுபிடிப்பு என சீன அதிகாரிகள் விவரித்துள்ளனர்.

முதன்முறையாக தென் சீனக் கடலுக்கு அடியில் இருந்து ஐஸ் கட்டி போன்ற பொருளிலிருந்து எரிவாயுவை பிரித்தெடுத்திருப்பதாக சீனா கூறியுள்ளது., எதிர்காலத்தின் உலக எரிபொருள் தேவைக்கான முக்கிய ஆதார மையமாக இது விளங்கும் என்று கருதப்படுகிறது..இந்த வெற்றியை ஒரு மிகப்பெரிய கண்டுபிடிப்பு என சீன அதிகாரிகள் விவரித்துள்ளனர். "எரியும் ஐஸ்" என்று அழைக்கப்படும் மீத்தேன் ஹைடிரேட் பெருமளவு இயற்கை எரிவாயு கொண்ட ஆதாரமாக உள்ளது. அமெரிக்கா மற்றும் ஜப்பான் உட்பட பல்வேறு நாடுகள் அந்த படிமங்களை எப்படி தோண்டுவது மற்றும் பிரித்தெடுப்பது என்ற ஆய்வில் ஈடுபட்டுள்ளன.

  

தீப்பற்றக்கூடிய பனி என்றால் என்ன?

நீர் மற்றும் வாயு ஆகியவற்றின் உறைநிலை கலவையே தீப்பற்றிக் கொள்ளக் கூடிய பனி. "அது ஒரு பனி துகள்களை போன்று இருக்கும். அதைப் பெரிதுபடுத்திப் பார்த்தால் நீரின் மூலக்கூறால் மீத்தேன் மூலக்கூறுகள் சூழப்பட்டு கிடப்பதைக் காண முடியும்" என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் ரசாயன உயிரியல் மூலக்கூறு பொறியியல் துறையின் பேராசிரியர் பிரவீன் லிங்கா தெரிவித்தார்.மீத்தேன் கிளாத்ரேட்ஸ் அல்லது ஹைடிரேட்ஸ் என்று அழைக்கப்படும் இவை மிகக் குறைவான வெப்பநிலையிலும், அதிக அழுத்தத்தாலும் உருவாகிறது.

பெருங்கடலின் அடியில் இருக்கும் படிமங்களிலும், நிலத்திற்கு அடியில் உறை பனிக்கட்டி நிலையிலும் அவை கிடைக்கும். குறைந்த வெப்பநிலையிலும் இந்த ஹைடிரேட்டுகள் தீப்பற்றி எரியக்கூடியவை; ஒரு லைட்டரை அதன் அருகில் கொண்டு சென்றால், அதனுள்ளே அடைப்பட்டு இருக்கும் வாயுவானது தீப்பற்றிக் கொள்ளும். ஆகையால் அது "எரியும் பனி" என்றும் "நெருப்புப் பனி" என்றும் அழைக்கப்படுகிறது.அழுத்தம் அல்லது வெப்பநிலையை அதிகரிப்பது அல்லது குறைப்பதன் மூலம் இந்த ஹைடிரேட்டுகள் நீர் அல்லது அதிகப்படியான மீத்தேனாக உடைகிறது.ஒரு க்யூபிக் மீட்டர் கலவை, 160 க்யூபிக் மீட்டர் வாயுவை வெளியேற்றுவதால் அது அதிக ஆற்றல் கொண்ட தீவிர எரிபொருளாக மாறுகிறது.முக்கியமாக கருதப்படக்கூடிய விஷயம் என்னவென்றால் இந்த வாயுவை பிரித்தெடுப்பது கடினம்; மேலும் இதற்கு அதிக ஆற்றல் தேவைப்படும்.இந்த மீத்தேன் ஹைட்ரேடுகள் ரஷியாவில் 1960களில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் கடல் வண்டலிலிருந்து வாயுவை எவ்வாறு பிரித்தெடுப்பது என்பது குறித்த ஆராய்ச்சி 10-15 வருடங்களாக நடைபெற்று வருகிறது.இயற்கை எரிவாயு எதுவும் இல்லாத காரணத்தால் இந்த துறையில் ஜப்பான் முதலாவதாக உள்ளது. மேலும் இந்தியா அல்லது தென் கொரியா போன்ற நாடுகளில் சொந்த எண்ணெய் சுரங்கங்கள் இல்லை என்பதால் அவை இதில் முன்னிலை வகிக்கின்றனர்.அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளும் இந்த துறையில் அதிக பணிகளை மேற்கொண்டு வருகிறது; மேலும் அலாஸ்கா மற்றும் கனடாவில் உள்ள நிரந்தர பனிக்கு அடியில் இருக்கும் ஹைடிரேடுகளில் அது கவனம் செலுத்தி வருகிறது.மீத்தேன் ஹைடிரேட்ஸ் எதிர்கால எரிசக்தி தேவையாகவும் - உலகின் கடைசி கார்பன் சார்ந்த எரிப்பொருளாகவும் இருக்கும். உலகம் முழுவதும் பெருங்கடல்களில் பல படிமங்கள் இருக்கின்றன. குறிப்பாக பள்ளமான பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது.

திருப்புமுனை

இந்த பிரித்தெடுத்தல் முறை பாதுகாப்பாகவும் லாபகரமானதாகவும் இருக்க நாடுகள் போராடி வருகின்றன. சமீபத்திய முடிவை சீனா ஒரு திருப்புமுனையாக பார்க்கிறது என பேராசிரியர் லிங்கா ஒப்புக் கொள்கிறார்.ஜப்பானின் ஆராய்ச்சியில் கண்ட விளைவுகளை காட்டிலும், அதிக வாயுவை பிரித்தெடுக்க சீன விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றனர். எனவே மீத்தேன்ஹைடிரேட்டுகளிலிருந்து வாயுவை பிரித்தெடுப்பதற்கான முக்கிய முயற்சியாக இது கருதப்படுகிறது.ஷெல் வாயுவைக் காட்டிலும் மீத்தேனில் 10 மடங்கு அதிகமாக எரிவாயு உள்ளது என கூறப்படுகிறது.சீனா இந்த தீப்பற்றிக் கொள்ளும் பனியை தென் சீனக் கடலில் 2007 ஆம் ஆண்டு கண்டுபிடித்தது.

சர்ச்சைக்குரிய தென் சீனக்கடல்

சீனா, வியட்நாம் மற்றும் பிலிப்பின்ஸ் என பரவிக் கிடக்கும் தென் சீனக் கடலை, சமீப வருடங்களாக சீனா உரிமை கொண்டாடி வருவதால் சர்ச்சையில் இருந்து வருகிறது; எனவே இந்த வளங்களும் இந்த சர்ச்சைக்கு அடியில் சிக்கிக் கொண்டுள்ளன.

அடுத்து என்ன?

இது ஒரு திருப்புமுனையாக இருந்த போதிலும், சீனாவின் நீண்ட வெற்றிப்பாதையில் இது ஓர் அடி மட்டுமே."உற்பத்தி விகிதம் அதிகப்படியானதாக உள்ள போதிலும் 2025 ஆம் ஆண்டில்தான் வர்த்தக ரீதியான லாபங்களை எதிர்பார்க்க முடியும்" என கூறுகிறார் லிங்கா.தென் சீன கடலின் சன்குவா பகுதியிலிருந்து தினமும் சராசரியாக 16,000 க்யூபிக் மீட்டர் சுத்தமான வாயுவை எடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.மீத்தேன் வாயு, புவி வெப்பமயமாதலில் முக்கிய காரணியாக இருப்பதால் இதை மிகவும் கவனத்துடன் கையாளவேண்டும் என்றும் தெரிவிக்கிறார்கள்.

  
   Bookmark and Share Seithy.com



வானில் இருந்து விழுந்த மர்மப்பொருள்: புளோரிடாவில் நிகழ்ந்த சம்பவத்திற்கு பதில் கூறிய நாசா!
[Wednesday 2024-04-17 15:00]

புளோரிடாவில் உள்ள ஒரு வீட்டின் மீது மோதிய கனமான அந்த பொருள், சர்வதேச விண்வெளி நிலையத்தின் (ISS) ஒரு பகுதி என்பதை அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா (NASA) உறுதிப்படுத்தியுள்ளது. கென்னடி விண்வெளி மையத்தில் மாதிரியை ஆய்வு செய்த பின்னர், வீட்டின் மேல் விழுந்த அந்த உலோகப் பொருள் மார்ச் 2021 இல் சுற்றுப்பாதை புறக்காவல் நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்டது என நாசா தெரிவித்துள்ளது.



அரசாங்க ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கனடா அரசாங்கம்!
[Wednesday 2024-04-17 15:00]

கனடாவில் அரசாங்க ஊழியர்களுக்கு அதிர்ச்சி தகவல் ஒன்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் நான்கு ஆண்டு காலப் பகுதியில் சுமார் ஐயாயிரம் அரசாங்க ஊழியர்கள் பணிகளை இழக்க நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்தில் இந்த ஆட்குறைப்பு குறித்த யோசனை முன்மொழியப்பட்டுள்ளது.



சூரிய ஒளி தான் குழந்தைக்கு உணவு: ரஷ்ய நபரின் அதிர்ச்சி செயல்!
[Wednesday 2024-04-17 15:00]

சூரிய ஒளியை மட்டுமே கொடுத்து குழந்தையை பட்டினி போட்டு கொலை செய்த பிரபல சமூக ஊடக influencer-க்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் பிரபல சமூக ஊடக இன்ஃப்ளூயன்சர்(influencer) மாக்சிம் லியுட்டி(Maxim Lyutyi), தனது ஒரு மாத வயது மகன் கொஸ்மோவின் (Kosmos) துன்பகரமான காரணமாக அமைந்துள்ளார்.



கனடாவில் 40 பில்லியனை தொடும் பாதீட்டுப் பற்றாக்குறை!
[Wednesday 2024-04-17 15:00]

கனடாவில் இந்த நிதியாண்டக்கான பாதீட்டுப் பற்றாக்குறை தொகை 39.2 பில்லியன் டொலர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கம் நேற்றைய தினம் பாதீட்டுத் திட்டத்தை சமர்ப்பித்திருந்து. நிதி அமைச்சர் கிறிஸ்டியா ப்ரீலாண்ட் சமர்ப்பித்திருந்தார்.



இஸ்ரேலுக்கு கடும் மிரட்டல் விடுத்த ஈரான்!
[Wednesday 2024-04-17 03:00]

பழி தீர்ப்பது உறுதி என்று இஸ்ரேல் அறிவித்துள்ள நிலையில், இதுவரை பயன்படுத்தாத ஆயுதங்களால் அடிப்போம் என்று ஈரானும் பதிலுக்கு மிரட்டல் விடுத்துள்ளது. ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு பழி தீர்ப்போம், விட்டுவிட மாட்டோம் என இஸ்ரேல் இன்று தெரிவித்துள்ளது. இதனால் எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலை மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ளது.



பேய் மழைக்கு மூழ்கிய துபாய்: சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!
[Wednesday 2024-04-17 03:00]

ஐக்கிய அரபு அமீரகத்தின் பெரும்பாலான பகுதிகளில் காலநிலை மோசமடைந்துள்ள நிலையில், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் தீவிரத்தன்மை கொண்ட அபாயகரமான காலநிலை முன்னறிவிக்கப்பட்டதை அடுத்து, குடியிருப்பாளர்களை மிகவும் விழிப்புடன் இருக்குமாறு அதிகார சபை கேட்டுக் கொண்டுள்ளது.



பிரித்தானியாவில் கடும் தட்டுப்பாடு வரலாம்: விரிவான பின்னணி!
[Wednesday 2024-04-17 03:00]

காலநிலை நெருக்கடியால் ஏற்படும் வெள்ளம் மற்றும் வறட்சியால் பிரித்தானியர்கள் உட்கொள்ளும் பல உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பெருவெள்ளம், வறட்சி உட்பட பல்வேறு காரணங்களால் உலகளாவிய உணவு உற்பத்தி என்பது சிக்கலில் உள்ளது. பிரித்தானியாவில் வாங்கப்பட்டு நுகரப்படும் பல பொருட்கள் சரிவடைந்த விநியோகம் மற்றும் விலை அதிகரிப்பு அபாயத்தில் உள்ளன.



போரை நிறுத்த சீனாவுக்கு மறைமுக அழுத்தம் கொடுத்த ஜேர்மனி!
[Tuesday 2024-04-16 18:00]

ஜேர்மன் சேன்ஸலர் சீனாவுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், உக்ரைன் போரை நிறுத்த அழுத்தம் கொடுக்குமாறு மறைமுகமாக கேட்டுக்கொண்டார். ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ் சீனாவுக்கு அரசு முறைப்பயணமாக சென்றுள்ளார். பீஜிங்கில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்தித்த அவர், உக்ரைனை ரஷ்யா ஊடுருவியுள்ள விடயம் உலக பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறியுள்ளார். அதாவது, போரை நிறுத்துமாறு தனது நட்பு நாடான ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்குமாறு அவர் சீன ஜனாதிபதியை மறைமுகமாக கேட்டுக்கொண்டுள்ளார்.



இஸ்ரேல் ஈரான் பிரச்சினையில் சுவிட்சர்லாந்தின் முக்கிய பங்கு!
[Tuesday 2024-04-16 18:00]

இஸ்ரேல் ஈரான் பிரச்சினையில் சுவிட்சர்லாந்துக்கு ஒரு மறைமுகப் பங்கு உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், பல ஆண்டுகளாக, ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் தூதரக உறவுகளை பகிர்ந்துகொள்ள சுவிட்சர்லாந்துதான் பாலமாக செயல்பட்டுவருகிறதாம். அதாவது, ஈரானும் அமெரிக்காவும் நேரடியாக பேசிக்கொள்வதில்லை. அதற்கு பின்னால் ஒரு பெரிய வரலாறே உள்ளது.



பதவியை ராஜினாமா செய்யும் சிங்கப்பூர் பிரதமர்?
[Tuesday 2024-04-16 18:00]

சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் அடுத்த மாதம்15ஆம் திகதி பதவி விலகப் போவதாக அறிவித்துள்ளார். சிங்கப்பூரின் 3வது பிரதமரான இவர், 2004 முதல் மக்கள் செயல் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். சிங்கப்பூரில் பிரதமர் லீ சியன் லூங் தலைமையிலான மக்கள் செயல் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.



கனடாவில் வீடுகள் தட்டுப்பாட்டுக்கு உண்மையான காரணம் என்ன?
[Tuesday 2024-04-16 18:00]

கனடாவில் வீடுகள் தட்டுப்பாட்டுக்கு புலம்பெயர்தல்தான் காரணம் என்பது போன்ற ஒரு தோற்றம் சமீப காலமாக உருவாக்கப்பட்டு வருவதை நாம் கவனித்துவருகிறோம். ஆக, புலம்பெயர்தல் கொள்கைகளை மறுசீரமைத்துவிட்டால் வீடுகள் தட்டுப்பாடு குறைந்துவிடுமா?



26 வருட மர்மம்: பிரித்தானியாவில் குழந்தை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பெண்!
[Tuesday 2024-04-16 05:00]

1998ஆம் ஆண்டில் வனப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட குழந்தையின் கொலை வழக்கில் பிரித்தானிய பெண் கைது செய்யப்பட்டார். கடந்த 1998ஆம் ஆண்டு மார்ச் மாதம், woodlandஇல் உள்ள Warrington பார்க்கிற்கு அருகில் அந்த குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குழந்தைக்கு அதிகாரிகள் "Callum" என்று செல்லப் பெயர் சூட்டினார்கள், இது தொடர்பாக கொலை வழக்கு விசாரணை தொடங்கப்பட்டாலும், பல ஆண்டுகளாக இந்த வழக்கு தீர்க்கப்படாமல் இருந்தது.



இஸ்ரேல் பதிலடிக்கு தயாரா? தெஹ்ரானில் விமானத் தடையை நீக்கியது ஈரான்!
[Tuesday 2024-04-16 05:00]

தலைநகர் தெஹ்ரான் மீதான விமானத் தடையை ஈரான் நீக்கியுள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு, ஈரான் 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்தி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.



பிரித்தானிய இளவரசர் ஹரிக்கு பின்னடைவு!
[Tuesday 2024-04-16 05:00]

பிரித்தானியாவில் தனிப்பட்ட பாதுகாப்பு தொடர்பான சட்டப் போராட்டத்தில் இளவரசர் ஹாரி பின்னடை அடைந்துள்ளார். பிரித்தானியாவில் தனிப்பட்ட பாதுகாப்பு தொடர்பான சட்டப் போராட்டத்தில் இளவரசர் ஹரி பின்னடை அடைந்துள்ளார். ஏப்ரல் 15, 2024 அன்று, இளவரசர் ஹரி மேற்கொண்ட மேன்முறையீட்டு கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக நீதித்துறை செய்தித் தொடர்பாளர் அறிவித்தார்.



அவுஸ்திரேலியாவில் மற்றுமொரு பயங்கரம்: தேவாலயத்தில் கத்திக்குத்து!
[Monday 2024-04-15 18:00]

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தில் பேராயர் ஒருவரும் மற்றுமொருவரும் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.



நாஸ்ட்ரடாமஸ் கணிப்பு பலித்தது: மூன்றாம் உலகப்போர் அச்சத்தில் மக்கள்!
[Monday 2024-04-15 18:00]

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, மூன்றாம் உலகப்போர் குறித்த நாஸ்ட்ரடாமஸின் கணிப்பு பலித்துள்ளதாக மக்கள் சமூக ஊடகங்களில் கருத்துக்கள் தெரிவிக்கத் துவங்கியுள்ளனர். புகழ் பெற்ற பிரெஞ்சு ஜோதிடக்கலை நிபுணரான Michel de Nostredame என்னும் நாஸ்ட்ரடாமஸ், 450 ஆண்டுகளுக்கு முன், தனது Les Prophéties என்னு புத்தகத்தில் உலகில் எதிர்காலத்தில் நிகழவிருக்கும் பல்வேறு விடயங்களை கணித்து எழுதியுள்ளார். ஹிட்லருடைய எழுச்சி, அமெரிக்க ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடி கொலை முதல், கோவிட் வரை அவர் கணித்த பல விடயங்கள் துல்லியமாக நிறைவேறியுள்ளன.



ரொறன்ரோவில் களவாடப்பட்ட 600 வாகனங்கள் மீட்பு!
[Monday 2024-04-15 18:00]

ரொறன்ரோவில் களவாடப்பட்ட 600 வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் களவாடப்பட்ட வாகனங்கள் இவ்வாறு மொன்றியல் துறைமுகத்திலிருந்து மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட வாகனங்களில் பெரும்பான்மையானவை கார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.



"ஈரான் மீது தாக்குதல் நடத்த மாட்டோம்" - ஜோ பைடன் உறுதி!
[Monday 2024-04-15 18:00]

ஈரான் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீது எந்தவிதமான எதிர் தாக்குதல் நடவடிக்கையிலும் அமெரிக்கா ஈடுபடாது என அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.



"புலம்பெயர் மக்களை நாடு கடத்தும் ருவாண்டா விமானம் விரைவில் புறப்படும்" - கேபினட் அமைச்சர் அறிவிப்பு!
[Monday 2024-04-15 06:00]

சட்ட விரோத புலம்பெயர் மக்களை நாடு கடத்தும் ருவாண்டா விமானம் இன்னும் சில வாரங்களில் புறப்படும் என சுகாதார செயலர் அறிவித்துள்ளார். பிரித்தானியாவின் சுகாதார செயலர் Victoria Atkins தெரிவிக்கையில், உள்விவகாரத்துறை தொடர்புடைய திட்டத்தை முன்னெடுத்து செல்ல தயாராக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.



ஈரான் தாக்குதலுக்கு பதிலடி: இஸ்ரேலிய அமைச்சரவை முடிவு!
[Monday 2024-04-15 06:00]

ட்ரோன்கள் மற்றும் ஏவுகணையால் அதிரடி தாக்குதலை முன்னெடுத்த ஈரானுக்கு பதிலடி அளிக்க இஸ்ரேலிய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தாக்குதலை முன்னெடுக்க உரிய நேரம் மற்றும் அதன் அளவு தொடர்பில் அமைச்சரவையில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்றே கூறப்படுகிறது.


 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா