Untitled Document
March 29, 2024 [GMT]
மீண்டும் இரத்த ஆறு ஓடும்! - எச்சரிக்கும் பொது பலசேனா
[Tuesday 2017-06-13 09:00]

 ஞானசார தேரருக்கு ஏதேனும் நடந்தால் நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓடும் என்று பொது பலசேனா அமைப்பின்  நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலாந்த வித்தானகே எச்சரித்துள்ளார். பொதுபலசேனா அமைப்பின் ஊடகவியலாளர் மாநாடு நேற்றுப் பகல் கொழும்பிலுள்ள அவ்வமைப்பின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.

ஞானசார தேரருக்கு ஏதேனும் நடந்தால் நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓடும் என்று பொது பலசேனா அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலாந்த வித்தானகே எச்சரித்துள்ளார். பொதுபலசேனா அமைப்பின் ஊடகவியலாளர் மாநாடு நேற்றுப் பகல் கொழும்பிலுள்ள அவ்வமைப்பின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.

  

சிறைக்குள் செல்வதற்கோ, பொலிஸ்நிலையம் போவதற்கோ ஞானசார தேரர் உள்ளிட்ட தேரர்கள் அச்சப்படவில்லை. அநீதி இழைக்கப்பட்டிருப்பின் சிறைவாசம் செல்வதற்கு ஆயிரக்கணக்கான பிக்குகளும், இளைஞர்களும் தயார்நிலையிலேயே இருக்கின்றனர். ஆனால், அதற்குரிய வழிமுறைகள் உரிய வகையில் இடம்பெறவேண்டும். நீதிமன்றத்தில் ஏன் ஆஜராகவில்லை என்பதற்குரிய காரணங்கள் நீதிமன்றத்தில் எமது சட்டத்தரணியால் தெளிவுபடுத்தப்பட்டது.

ஞானசார தேரருக்கு உயிர் அச்சுறுத்தல் இருக்கின்றது எனப் பொலிஸ்மா அதிபரிடம்கடந்த 24ம் திகதி சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில்தான் அவருக்கு நோயும் ஏற்பட்டது. இது திடீரென ஏற்பட்ட நோய் அல்ல. தொடர்ச்சியாக அவர்சிகிச்சை பெற்று வருகின்றார். இதற்கு முன்னர் கொரியாவிலும், இலங்கையிலும்அவருக்கு சத்திரசிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. மற்றுமொரு சத்திரசிகிச்சைக்கும்அவர் உட்படுத்தப்படவுள்ளார்.

இப்படி முடியாத கட்டத்திலும் தன் இனத்துக்காக அவர் குரல் கொடுத்து வருகின்றார். தன்னைக் கொலை செய்து விடுவார்கள் என்ற அச்சத்தால் ஞானசார தேரர் ஓடி ஒழியவில்லை. அப்படி அச்ச நிலை அவரிடம் இருந்திருக்குமானால் இந்த அமைப்பை வழிநடத்தியிருக்கமாட்டார். ஐ.எஸ். அமைப்பின் ஊடாக ஞானசார தேரரைக் கொலை செய்யும் சூழ்ச்சி தீட்டப்பட்டுள்ளது. எனவே, ஞானசார தேரருக்கு ஏதேனும் நடந்தால் நாட்டில் இரத்தஆறு ஓடும்.

ஆகவே, நாட்டின் சமாதானத்துக்கு பங்கம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் அவர் ஆஜராகாமல் இருக்கின்றார். மாறாக, தனக்கு உயிர்அச்சுறுத்தல் என்பதற்காக அல்ல. சிறைச்சாலைக்குள் வைத்தே கைதிகள் கொல்லப்படுகின்றனர். சிறைச்சாலை வாகனங்கள்மீது சூடு நடத்தப்படுகின்றது. இப்படியான அபாயநிலை இருக்கின்றது.

அதேவேளை, முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீது தீவைத்த சம்பவத்துடன்தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுள்ள நபர்பொது பலசேனா அமைப்பின் உறுப்பினர் எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்குறிப்பிட்டுள்ளார். அந்தக் கூற்றை நிராகரிக்கின்றோம்.

அமைப்பின் உறுப்பினர் என்றால் அடையாள அட்டை இருக்கவேண்டும். அப்படி எதுவும்அவரிடமில்லை. எமது அலுவலகத்துக்கு வருபவர்களெல்லாம் அமைப்பு உறுப்பினர்கள்அல்லர்.கடந்த 5 வருடங்களில் பொதுபலசேனா அமைப்பு எந்தவொரு வன்முறையையும் தூண்டவில்லை.எனவே, கூட்டத்தில் பங்கேற்றார் என்பதற்காக அவரை எமது அமைப்புடன்தொடர்புபடுத்த முடியாது என்றார்.

  
   Bookmark and Share Seithy.com



பிளவை நோக்கி பொதுஜன பெரமுன!
[Friday 2024-03-29 16:00]

ஜனாதிபதி தேர்தலில் கட்சியின் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க வேண்டும் என மற்றைய தரப்பினரும் உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது.



நாடு முழுவதும் தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு!
[Friday 2024-03-29 16:00]

நாடளாவிய ரீதியில் உள்ள கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்றும், நாளை மறுதினமும் இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



எந்த தேர்தல் முதலில் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்!- பசில்
[Friday 2024-03-29 16:00]

எந்த தேர்தல் முதலில் நடைபெற வேண்டும் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள் என முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்றுக்குழுவிடம் தெரிவித்துள்ளார்.



முட்டை இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டது!
[Friday 2024-03-29 16:00]

முட்டை இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.



எந்த தேர்தலை எதிர்கொள்வதற்கும் மொட்டு தயார்!
[Friday 2024-03-29 16:00]

பொதுஜன பெரமுன எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள தயாராக உள்ளதாக பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம் சந்திரசேன தெரிவித்துள்ளார்.



எச்ஐவி தொற்றாளர் எண்ணிக்கை 14 வீதத்தினால் அதிகரிப்பு!
[Friday 2024-03-29 16:00]

நாட்டில் எச்ஐவி தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 14 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக இலங்கையின் தேசிய எயிட்ஸ் தடுப்பு திட்டத்தின் பணிப்பாளர் டாக்டர் ஜானகி விதானபத்திரன தெரிவித்துள்ளார்.20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் இந்த தொற்றால் பாதிக்கப்படும் ஆபத்தில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



வாடகை குடியிருப்பாளர்களை பாதுகாக்க சட்டம்! - கனடியப் பிரதமர் அறிவிப்பு.
[Friday 2024-03-29 05:00]

கனடாவில வாடகைக் குடியிருப்பாளர் சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் வாடகைக் குடியிருப்பாளர்களை பாதுகாக்க கூடிய வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.



நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்குமாறு மைத்திரிக்கு உத்தரவு!
[Friday 2024-03-29 05:00]

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



நாமல் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட 10 வருடங்கள் காத்திருக்க வேண்டும்!
[Friday 2024-03-29 05:00]

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளர் இல்லை என்று கூறியுள்ள அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இன்னும் ஐந்து அல்லது பத்து வருட காலத்திற்குப் பின்னரே ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்ச போட்டியிட முடியும் என்று கூறினார்.



அம்பாந்தோட்டையில் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் - அவசரப்படுகிறது சினோபெக்!
[Friday 2024-03-29 05:00]

இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ள எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் நிர்மாணப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க சீனாவின் சினோபெக் நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது.



உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள 7 ஆலயங்களை விடுவிக்க நடவடிக்கை!
[Friday 2024-03-29 05:00]

யாழ்ப்பாணத்தில் அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.



வட்டுக்கோட்டை இளைஞன் கொலை -பகுப்பாய்வு அறிக்கைகளுக்கு உத்தரவு!
[Friday 2024-03-29 05:00]

வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.



அனுரவிடம் தமிழ் மக்களுக்கான தீர்வு இல்லை!
[Friday 2024-03-29 05:00]

தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமார திசாநாயக்கவிடம் தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வுகள் இல்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.



தேர்தலை தீர்மானிக்க பசில் தேர்தல் ஆணையாளர் அல்ல!
[Friday 2024-03-29 05:00]

பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தேர்தல் ஆணையாளரல்ல,எந்த தேர்தலை நடத்த வேண்டும் என்று அவர் தீர்மானிக்க வேண்டிய அவசியமில்லை.அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தெரிவித்தார்.



குளியல் காட்சிகளை படம் பிடித்தவர் கைது!
[Friday 2024-03-29 05:00]

யாழ்ப்பாணம் - கொழும்புத்துறையில் ஆண் ஒருவர் குளிப்பதை மறைந்திருந்து தொலைபேசியில் காணொலி எடுத்துக் கொண்டிருந்த நபரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.



சுங்கத்தில் சிக்கியுள்ள கீரி சம்பாவை விடுவிக்கவே தற்காலிக வரிக் குறைப்பு!
[Friday 2024-03-29 05:00]

அரிசி இறக்குமதியை அனுமதிப்பதற்காக அல்ல, தற்போது சுங்கத்தில் சிக்கியுள்ள அரிசியை அகற்றுவதற்காகவே அரிசி மீதான விஷேட பொருட்கள் வரி குறைக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.



ஞானசார தேரருக்கு 4 வருட கடூழியச் சிறைத்தண்டனை! Top News
[Thursday 2024-03-28 16:00]

குரகல விகாரையில் இஸ்லாமிய மதத்திற்கு எதிராக வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக பொதுபல சேனா பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.



முன்னாள் போராளி பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது!
[Thursday 2024-03-28 16:00]

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்த குற்றச்சாட்டின் பேரில் வவுனியாவைச் சேர்ந்த அரவிந்தன் என்ற முன்னாள் போராளி பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.



இலங்கை நாணயத்தின் மதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு!
[Thursday 2024-03-28 16:00]

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295 ரூபாய் 54 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 305 ரூபாய் 33 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.



இலங்கையின் ஆட்சி முறையில் மாற்றங்கள் வேண்டும்!
[Thursday 2024-03-28 16:00]

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வை காண்பதற்கு இலங்கையின் ஆட்சி முறையில் மாற்றங்கள் இடம்பெறவேண்டும் என இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை தெரிவித்துள்ளது.


Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா