Untitled Document
April 24, 2024 [GMT]
அமைச்சர்கள் விவகாரம் - பரபரப்பான சூழலில் வடக்கு மாகாணசபையில் இன்று விவாதம்!
[Wednesday 2017-06-14 06:00]

வடமாகாண சபையின் நான்கு அமைச்சர்களையும் பதவி விலக்க வேண்டுமென வடமாகாண சபை உறுப்பினர்கள் பலர் வலியுறுத்தியுள்ள நிலையில், ஊழல் மோசடிக் குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் வடமாகாணசபை அமைச்சர்கள் இருவர் தொடர்பாக இன்று மாகாண சபையில் விவாதிக்கப்படுகிறது.
குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள இரு அமைச்சர்களான குருகுலராஜா மற்றும் ஐங்கரநேசன் ஆகியோர் இன்று சபையில் தன்னிலை விளக்கம் அளிக்கவுள்ளனர்.

வடமாகாண சபையின் நான்கு அமைச்சர்களையும் பதவி விலக்க வேண்டுமென வடமாகாண சபை உறுப்பினர்கள் பலர் வலியுறுத்தியுள்ள நிலையில், ஊழல் மோசடிக் குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் வடமாகாணசபை அமைச்சர்கள் இருவர் தொடர்பாக இன்று மாகாண சபையில் விவாதிக்கப்படுகிறது. குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள இரு அமைச்சர்களான குருகுலராஜா மற்றும் ஐங்கரநேசன் ஆகியோர் இன்று சபையில் தன்னிலை விளக்கம் அளிக்கவுள்ளனர்.

  

வடமாகாண சபை அமைச்சர்களுக்கு எதிரான மோசடி குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிப்பதற்கு முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு முன்வைத்த அறிக்கையில், அமைச்சர்கள் இருவரையும் பதவி விலக்க வேண்டும் என பரிந்துரைத்திருந்தது. இந்த விவகாரம் குறித்து இன்று வடமாகாண சபையில் விசேட விவாதம் நடைபெறவிருப்பதுடன், அமைச்சர்களின் விளக்கங்கள் மற்றும் ஏனைய மாகாணசபை உறுப்பினர்களின் கருத்துக்களையும் முதலமைச்சர் கேட்டறியவுள்ளார்.

நான்கு அமைச்சர்களையும் பதவி விலக்க வேண்டுமென தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய பங்காளிக் கட்சிகள் வலியுறுத்தியுள்ள நிலையில் இன்று நடைபெறும் விவாதத்தின் பின்னர் இவ்விடயத்தில் முதலமைச்சர் முடிவெடுக்கவுள்ளார்.

இருந்தபோதும், நான்கு அமைச்சர்களையும் ஒரே நேரத்தில் பதவி விலக்குவதற்கு தமிழரசுக் கட்சி கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. நேற்றுமுன்தினம் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற கூட்டமொன்றில் இது விடயம் குறித்து கடுமையாக விவாதிக்கப்பட்டுள்ளது. நான்கு அமைச்சர்களையும் ஒரே நேரத்தில் பதவி விலக்கத் தேவையில்லையென இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மாகாணசபை அமைச்சர்கள் நால்வரையும் பதவி விலக்க வேண்டும் என மாகாண சபை உறுப்பினர்கள் 16 பேர் கடந்த வருடமே கையெழுத்திட்டு முதலமைச்சரிடம் கடிதமொன்றை கையளித்திருந்தனர். அதன் பின்னரே விசாரணைக்கான குழுவை முதலமைச்சர் நியமித்திருந்தார். இந்தக் குழுவின் பரிந்துரையில் இரு அமைச்சர்கள் பதவி விலக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட இரு அமைச்சர்களையும் இன்றைய விவாதத்துக்கு முன்னர் எழுத்துமூல விளக்கமளிக்குமாறு கடந்த அமர்வில் முதலமைச்சர் கோரியிருந்தார். எனினும், அவர்கள் நேற்று மாலை வரை தமது விளக்கத்தை கையளித்திருக்கவில்லை. இன்று அவர்கள் சபையில் வாய்மூலம் தன்னிலை விளக்கம் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம், நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருந்த ஜனாதிபதியை சந்தித்த மாகாணசபை அமைச்சர் ஒருவர், நான்கு அமைச்சர்களையும் மாற்றும் விடயத்தை தடுக்கும் வகையில் செயற்படுமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக் கொண்டதாகத் தெரியவருகிறது.

எனினும், நான்கு அமைச்சர்களையும் பதவி நீக்குவது குறித்து கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும், முறைப்பாடு கையளித்திருந்த உறுப்பினர்களை முதலமைச்சர் தனித்தனியோ தொலைபேசிமூலம் தொடர்புகொண்டு அவர்களின் கருத்துக்களை கெட்டறிந்துள்ளார். . இவற்றை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது தற்போதுள்ள மாகாணசபை அமைச்சர்கள் நான்கு பேரையும் பதவி விலக்குவது பற்றிய தீர்மானமொன்றுக்கு முதலமைச்சர் செல்வதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம் காணப்படுவதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

  
   Bookmark and Share Seithy.com



சீன அமைச்சர் தலைமையிலான உயர்மட்டக்குழு அனுரவுடன் சந்திப்பு!
[Wednesday 2024-04-24 05:00]

சர்வதேசத் திணைக்களத்தின் பிரதி அமைச்சர் சன் ஹையன் தலைமையிலான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழு நேற்று ஜே.வி.பி தலைமை அலுவலகத்தில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்தது.



ஈரானிய ஜனாதிபதிக்கு விசேட பாதுகாப்பு!
[Wednesday 2024-04-24 05:00]

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.



கனேடியத் தமிழர் பேரவையின் தலைவர் பதவியில் இருந்து விலகினார் ரவீனா ராஜசிங்கம்!
[Wednesday 2024-04-24 05:00]

கனேடியத் தமிழர் பேரவை'யின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகுவதாக ரவீனா ராஜசிங்கம் அறிவித்துள்ளார். முழு நேர அரசியல் செயற்பாடுகளில் கவனம் செலுத்தும் முகமாக இம்முடிவை எடுத்ததாக அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.



ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று மீண்டும் விவாதம்!
[Wednesday 2024-04-24 05:00]

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற அமர்வு இன்று இடம்பெறவுள்ளது. எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் மூன்று நாட்களுக்கு நடத்தப்படவுள்ளது.



சுதந்திரக் கட்சியை 100 மில்லியன் ரூபாவுக்கு பேரம் பேசிய மைத்திரி!
[Wednesday 2024-04-24 05:00]

ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கவுள்ளதாக அறிவித்துள்ள பிரபல வர்த்தகர் ஒருவரிடம், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை ஏலம் விடுவதற்கு 100 மில்லியன் ரூபா பேரம் பேசியுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர குற்றஞ்சுமத்தினார்.



அனுரவுடன் விவாதம் - மாற்றுத் திகதிகளை முன்மொழித்த சஜித்!
[Wednesday 2024-04-24 05:00]

அரசியல் விவாதம் ஒன்றுக்காக தேசிய மக்கள் சக்தி முன்மொழிந்துள்ள நாட்களில் சஜித் பிரேமதாசவுக்கு வேறு அலுவல்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



பெண்ணுக்கு போதை மருந்து கொடுத்து தவறான செயற்பாட்டில் ஈடுபடுத்திய கும்பல்!
[Wednesday 2024-04-24 05:00]

யாழ்ப்பாணத்தில் போதை ஊசி செலுத்தி பெண்ணொருவரை கும்பல் ஒன்று தவறான செயற்பாட்டில் ஈடுபடுத்தியுள்ளதாக பருத்தித்துறை காவல்துறையினருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.



அரகலயவின் அமைப்பு மாற்றத்தை கட்சியில் இருந்து தொடங்கும் நாமல்!
[Wednesday 2024-04-24 05:00]

அரகலய போராட்டத்தின் போது கோஷமாக மாறிய அமைப்பு மாற்றத்தை ஏற்படுத்துதலை எமது கட்சியில் இருந்தே ஆரம்பிக்க தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.



பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பம்!
[Wednesday 2024-04-24 05:00]

2024 ஆம் ஆண்டுக்கான முதல் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளதோடு மே 06 ஆம் திகதி முடிவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.



ஆர்ப்பாட்டம் நடத்த தடை!
[Wednesday 2024-04-24 05:00]

நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் இன்று (24) நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. வெலிக்கடை பொலிஸார் விடுத்த கோரிக்கையை பரிசீலித்ததன் பின்னர் இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



தையிட்டியில் தொடரும் திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம்! Top News
[Tuesday 2024-04-23 16:00]

யாழ்ப்பாணம் - தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் நேற்று ஆரம்பமாகி இன்றும் நடைபெறுகிறது.



பாக்கு நீரிணையை நீந்திக் கடக்க முயன்ற முதியவர் மாரடைப்பால் மரணம்!
[Tuesday 2024-04-23 16:00]

பாக்கு நீரிணையை கடக்க முயன்ற இந்தியாவைச் சேர்ந்த முதியவர் நடுக்கடலில் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்தார்.



வலம்புரி ஆசிரியரிடம் விசாரணை- யாழ்.ஊடக அமையம் கண்டனம்!
[Tuesday 2024-04-23 16:00]

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் முன்னணி நாளிதழ்களுள் ஒன்றான வலம்புரி நாளிதழது பிரதம ஆசிரியர் ந.விஜயசுந்தரம் வடக்கு ஆளுநரின் முறைப்பாட்டின் பேரில் இன்று திங்கட்கிழமை இலங்கை காவல்துறையின் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் யாழ்.ஊடக அமையம் தனது வன்மையான கண்டனங்களை பதிவு செய்துகொள்கின்றது.



சஜித் - அனுர விவாதம் - நாள் குறித்தது தேசிய மக்கள் சக்தி!
[Tuesday 2024-04-23 16:00]

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் நடைபெறவுள்ள விவாதத்திற்கான திகதிகளை தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.



தியத்தலாவ கார் பந்தய விபத்து - இராணுவ விசாரணைக்கு உத்தரவு!
[Tuesday 2024-04-23 16:00]

தியத்தலாவ ஃபொக்ஸ் ஹில் கார் பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்து தொடர்பில் விசாரணை நடத்த ஏழு பேர் கொண்ட குழுவொன்றை நியமிக்க இலங்கை இராணுவம் தீர்மானித்துள்ளது. மேஜர் ஜெனரல் ஒருவரின் தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்படவுள்ளதாக மேஜர் ஜெனரல் ரசிக குமார தெரிவித்துள்ளார்.



பதவி விலகுகிறார் மைத்திரி?
[Tuesday 2024-04-23 16:00]

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராஜினாமா செய்யத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.



ஆறுகால்மடத்தில் பட்டா வாகனம் மோதி முச்சக்கரவண்டி சேதம்! - சாரதி படுகாயம்.
[Tuesday 2024-04-23 16:00]

யாழ்ப்பாணம் - ஆறுகால்மடம் சந்தியில் இன்று முச்சக்கர வண்டி பட்டாரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.



புங்குடுதீவு கண்ணகியம்மனின் சேவை 16 இலட்சம் ரூபாவுக்கு ஏலம்!
[Tuesday 2024-04-23 16:00]

புங்குடுதீவு கண்ணகியம்மன் ஆலய தேர்த்திருவிழாவில், அம்மனின் சேலை 16 இலட்சம் ரூபாவுக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.



நிறுத்தாமல் சென்ற முச்சக்கரவண்டி மீது சூடு - இருவர் பலி!
[Tuesday 2024-04-23 16:00]

மொரகஹஹேன- மிரிஸ்வத்த பிரதேசத்தில் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற முச்சக்கர வண்டி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.



தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் ஒத்திவைப்பு!
[Tuesday 2024-04-23 05:00]

இன்று நடைபெறவிருந்த இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா