Untitled Document
March 29, 2024 [GMT]
முதலமைச்சரை அகற்றும் செயற்பாடுகளை தடுக்க அணி திரளக் கோருகிறார் கஜேந்திரகுமார்!
[Thursday 2017-06-15 18:00]

தமிழ் மக்களின் தேசிய கொள்கையுடன் செயற்பட்ட வடமாகாண முதலமைச்சரை பதவியில் இருந்து அகற்றுவதற்கு அரசாங்கத்துடன் இணைந்து தமிழரசு கட்சி  செயற்படுவதனை தடுக்க தமிழ் மக்கள் அனைவரும் அணிதிரள வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.

தமிழ் மக்களின் தேசிய கொள்கையுடன் செயற்பட்ட வடமாகாண முதலமைச்சரை பதவியில் இருந்து அகற்றுவதற்கு அரசாங்கத்துடன் இணைந்து தமிழரசு கட்சி செயற்படுவதனை தடுக்க தமிழ் மக்கள் அனைவரும் அணிதிரள வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.

  

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். ' வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்களின் தேசிய கொள்கைக்காக தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தார். அவரின் கொள்கைகளை அகற்றுவதற்கு தமிழரசு கட்சி ஈ.பி.டி.பி மற்றும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகிறது. திருடர்களை காப்பாற்றுவதற்கு தமிழரசு கட்சி செயற்பட்டு கொண்டிருக்கின்றது. திருடர்களின் குகையாக தமிழரசுக்கட்சி மாறியுள்ளது.

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் கொள்கைப்பற்று பாதையை தோற்கடிப்பதற்காக ஈ.பி.டி.பி மற்றும் அரசாங்கம் மற்றும் தமிழ் இனத்தினைக் காட்டிக் கொடுத்த தரப்பினருடன் இணைந்து கொண்டுள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகள் துணை போகவில்லை. முதலமைச்சருக்கு எதிரான இந்த சதிக்குப் பின்னால், அரசாங்கம் துணை நிற்கின்றது.

03 வாரங்களுக்கு முன்னர் சரத் பொன்சேகா வடமாகாண முதலமைச்சரின் பதவிக்காலம் மிக விரைவில் நிறைவடையுமென தெரிவித்திருந்தார் . ஒற்றையாட்சிக்குள் கொண்டு வருதவற்கு திட்டமிட்டு செயற்படும் அரசாங்கத்துடன் இணைந்து தமிழரசுக் கட்சி செயற்படுகின்றதென்பதனை எமது மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். தந்தை செல்வாவின் கோரிக்கைகளை அழிப்பதற்கு தமிழரசுக்கட்சி செயற்பட்டு கொண்டிருக்கின்றது. மாகாண சபையில் இடம்பெற்ற அனைத்து விடயங்களும் வெறுமனவே ஊழல் சம்பந்தப்பட்ட விடயங்கள் அல்ல. இவை அனைத்தும் தமிழ் மக்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட விடயம் என்பதனை எமது மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

தமிழ் தேசத்தின் வாழ்வா? சாவா என்ற இந்த நிலையில் தமிழ் மக்கள் அணிதிரள வேண்டும். வடமாகாண முதலமைச்சருக்கு எதிரான சதியை முறியடிக்க தமிழ் மக்கள் முன்வர வேண்டும். தமிழ் மக்கள் பேரவை உறுப்பினர்கள் மற்றும் சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து செயற்படுமென்பதுடன், தமிழ் மக்கள் பேரவையின் முடிவுகளுக்கு அப்பால், தமிழ் மக்கள் இந்த சதியினை முறியடிக்க அனைவரும் அணிதிரள வேண்டுமென்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



வாடகை குடியிருப்பாளர்களை பாதுகாக்க சட்டம்! - கனடியப் பிரதமர் அறிவிப்பு.
[Friday 2024-03-29 05:00]

கனடாவில வாடகைக் குடியிருப்பாளர் சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் வாடகைக் குடியிருப்பாளர்களை பாதுகாக்க கூடிய வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.



நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்குமாறு மைத்திரிக்கு உத்தரவு!
[Friday 2024-03-29 05:00]

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



நாமல் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட 10 வருடங்கள் காத்திருக்க வேண்டும்!
[Friday 2024-03-29 05:00]

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளர் இல்லை என்று கூறியுள்ள அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இன்னும் ஐந்து அல்லது பத்து வருட காலத்திற்குப் பின்னரே ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்ச போட்டியிட முடியும் என்று கூறினார்.



அம்பாந்தோட்டையில் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் - அவசரப்படுகிறது சினோபெக்!
[Friday 2024-03-29 05:00]

இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ள எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் நிர்மாணப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க சீனாவின் சினோபெக் நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது.



உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள 7 ஆலயங்களை விடுவிக்க நடவடிக்கை!
[Friday 2024-03-29 05:00]

யாழ்ப்பாணத்தில் அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.



வட்டுக்கோட்டை இளைஞன் கொலை -பகுப்பாய்வு அறிக்கைகளுக்கு உத்தரவு!
[Friday 2024-03-29 05:00]

வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.



அனுரவிடம் தமிழ் மக்களுக்கான தீர்வு இல்லை!
[Friday 2024-03-29 05:00]

தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமார திசாநாயக்கவிடம் தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வுகள் இல்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.



தேர்தலை தீர்மானிக்க பசில் தேர்தல் ஆணையாளர் அல்ல!
[Friday 2024-03-29 05:00]

பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தேர்தல் ஆணையாளரல்ல,எந்த தேர்தலை நடத்த வேண்டும் என்று அவர் தீர்மானிக்க வேண்டிய அவசியமில்லை.அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தெரிவித்தார்.



குளியல் காட்சிகளை படம் பிடித்தவர் கைது!
[Friday 2024-03-29 05:00]

யாழ்ப்பாணம் - கொழும்புத்துறையில் ஆண் ஒருவர் குளிப்பதை மறைந்திருந்து தொலைபேசியில் காணொலி எடுத்துக் கொண்டிருந்த நபரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.



சுங்கத்தில் சிக்கியுள்ள கீரி சம்பாவை விடுவிக்கவே தற்காலிக வரிக் குறைப்பு!
[Friday 2024-03-29 05:00]

அரிசி இறக்குமதியை அனுமதிப்பதற்காக அல்ல, தற்போது சுங்கத்தில் சிக்கியுள்ள அரிசியை அகற்றுவதற்காகவே அரிசி மீதான விஷேட பொருட்கள் வரி குறைக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.



ஞானசார தேரருக்கு 4 வருட கடூழியச் சிறைத்தண்டனை! Top News
[Thursday 2024-03-28 16:00]

குரகல விகாரையில் இஸ்லாமிய மதத்திற்கு எதிராக வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக பொதுபல சேனா பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.



முன்னாள் போராளி பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது!
[Thursday 2024-03-28 16:00]

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்த குற்றச்சாட்டின் பேரில் வவுனியாவைச் சேர்ந்த அரவிந்தன் என்ற முன்னாள் போராளி பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.



இலங்கை நாணயத்தின் மதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு!
[Thursday 2024-03-28 16:00]

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295 ரூபாய் 54 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 305 ரூபாய் 33 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.



இலங்கையின் ஆட்சி முறையில் மாற்றங்கள் வேண்டும்!
[Thursday 2024-03-28 16:00]

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வை காண்பதற்கு இலங்கையின் ஆட்சி முறையில் மாற்றங்கள் இடம்பெறவேண்டும் என இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை தெரிவித்துள்ளது.



சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவன் விபத்தில் பலி!
[Thursday 2024-03-28 16:00]

மட்டக்களப்பு - பெரியகல்லாறு பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில், இம்முறை சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.



அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!
[Thursday 2024-03-28 16:00]

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐந்து பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



புன்னாலைக்கட்டுவன் விபத்தில் முதியவர் பலி!
[Thursday 2024-03-28 16:00]

யாழ்ப்பாணம் -புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நேற்று மாலை இடம் பெற்ற வீதி விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிறிய ரக உழவு இயந்திரமொன்றில் புல் ஏற்றுக் கொண்டிருந்த போது லொறி ஒன்று மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பாக சுன்னாகம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



ஜனாதிபதி ரணிலுக்கு மக்களாணை இல்லை!
[Thursday 2024-03-28 16:00]

நாடாளுமன்றத்தின் ஊடாக அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதிக்கு மக்களாணை கிடையாது என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.



பணவீக்கம் சடுதியாக குறைந்தது!
[Thursday 2024-03-28 16:00]

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையில் இலங்கையின் பணவீக்கம் மார்ச் மாதத்தில் 0.9 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது முந்தைய மாதத்தில் 5.9 சதவீதமாக பதிவாகியிருந்தது.



வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட யுவதி!
[Thursday 2024-03-28 16:00]

வவுனியா, சமனங்குளம் பகுதியில் இருந்து 23 வயது யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம் பொலிஸார் இன்று தெரிவித்தனர்.


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா