Untitled Document
March 29, 2024 [GMT]
குற்றஒப்புதல் வாக்குமூல விவகாரம் - சட்டமா அதிபரின் மனுவுக்கு எதிராக கடும் எதிர்ப்பு!
[Sunday 2017-06-18 09:00]

யாழ். மேல் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை கொழும்பு மேல் நீதிமன்றில் மீளாய்வு செய்யக் கோரி, சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கை விசாரணை செய்வதற்கு சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி தவராசா கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.

யாழ். மேல் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை கொழும்பு மேல் நீதிமன்றில் மீளாய்வு செய்யக் கோரி, சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கை விசாரணை செய்வதற்கு சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி தவராசா கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.

  

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச, சரத் பொன்சேகா ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக 2009ம் ஆண்டு பயங்கரவாதத் தடைப்பிரிவினரால் கைது செய்யப்பட்ட கனகரட்னம் ஆதித்தனுக்கு எதிராக சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இவ் வழக்கு கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளையில், இந்த வழக்கை விசாரணை செய்வதற்கு கடும் ஆட்சேபனையை சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி தவராசா முன்வைத்துள்ளார்.

கனகரெட்னம் ஆதித்தனால் சுய விருப்பில் உதவிப் பொலிஸ் அத்தியட்சருக்கு வழங்கியதாக கூறப்படும் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை மட்டும் அரச சாட்சியமாக கொண்டு கொழும்பு மேல் நீதிமன்றில் இரண்டு வழக்குகளும் யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் ஒரு வழக்குமாக மூன்று வழக்குகள் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மூன்று வழக்குகளிலும் கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, இராணுவத்தளபதி சரத் பொன்சேகா ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக ஒரு குற்றச்சாட்டுப் பத்திரமும் தாக்கல் செய்யப்பட்டது.

அதேபோன்று கடந்த 2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் திகதி பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் பசீர்அலி மொகமட் என்பவரின் மரணத்தை விளைவிப்பதற்கு உடந்தையாய் செயல்பட்டதாக ஒரு குற்றச்சாட்டுப் பத்திரமும் யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் 1995ம் ஆண்டு எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தில் இணைந்து கிளிநொச்சியில் ஆயுதப் பயிற்சி பெற்றதாக ஒரு குற்றச்சாட்டுப் பத்திரமும் தாக்கல் செய்யப்பட்டது.

யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பொழுது அரச சட்டத்தரணியால் அரசதரப்பு சான்றாக முன்வைக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் எதிரியினால் சுயமாக வழங்கப்படவில்லையென யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் 29-07-2015ல் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை நிராகரித்தார்.

மீண்டும் இந்த வழக்கு மேலதிக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளையில் வழக்கைத் தொடர்ந்து நடாத்த வேறு சாட்சியங்கள் இல்லையென அரச சட்டத்தரணி நீதிமன்றிற்கு தெரியப்படுத்தியதையடுத்து எதிரி 17-09-2015ல் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டார்.

அரசியல் கைதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால் ஒரு குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை மட்டும் சான்றாகக் கொண்டு நாட்டிலுள்ள பல மேல் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் ஒரு மேல் நீதிமன்றம், அரச தரப்பு சான்றாக முன்வைக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை சான்றாக ஏற்க மறுத்து எதிரியை விடுதலை செய்திருந்தால், மற்றைய மேல் நீதிமன்றங்களில் எதிரிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை சட்டமா அதிபர் திணைக்களம் மீளப்பெறுவதே 1979ம் ஆண்டு பயங்கரவாதத் தடைச்சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட நாளிலிருந்து கடந்த 35 ஆண்டுகளாக நடைமுறையாக இருந்தது.

ஆனால் சட்டமா அதிபர் இந்த நீதிமன்றில் தாக்கல் செய்த இரண்டு வழக்குகளையும் மீளப் பெறாமல் அரச சட்டத்தரணி யாழப்பாண மேல் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை மீண்டும் இந்த வழக்கில் உண்மை விளம்பல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமென கோரிக்கையை முன்வைப்பதை நான் கடுமையாக ஆட்சேபிக்கின்றேன். பயங்கரவாதத் தடைச் சட்டம் 1979ம் ஆண்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டு முதல் வழக்காக 1982ம் ஆண்டு குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் நான் கனிஸ்ட சட்டத்தரணியாக ஆஜராகியதிலிருந்து இன்று வரை கடந்த 35 ஆண்டுகளாக அரசியல் கைதிகளுக்காக ஆயிரக்கணக்கான வழக்குகளில ஆஜராகியுள்ளேன். யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பால் அரச தரப்பு அதிருப்தியடைந்திருந்தால் அந்தத் தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் மீளாய்வு மனுவையோ அல்லது மேன்முறையீட்டையோ தாக்கல் செய்யவேண்டும். ஆனால் யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்யவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச, சரத் பொன்சேகா ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை நடத்த யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை தவிர வேறு எந்தச் சான்றுமில்லையென்பதை அரச சட்டத்தரணி தனது சமர்ப்பணத்தில் ஏற்றுக்கொண்டது.

எனினும் யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்த நீதிமன்றத்தை கட்டுப்படுத்தாதெனவும் இந்த வழக்கை இந் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமெனவும் தனது வாதத்தில் குறிப்பிட்ட போது சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி தவராசா தனது வாதத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச, சரத் பொன்சேகா ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கும் 2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் திகதி பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் பசீர்அலி மொகமட் என்பவரின் மரணத்தை விளைவிப்பதற்கு உடந்தையாய் செயல்பட்டதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கும் மிகவும் பாரதுரமான வழக்குகள் என்பதே சட்டமா அதிபர் திணைக்களத்தின் நிலைப்பாடாகும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

இந்த நாட்டின் அரசியலமைப்பின்படி சட்டத்தின் முன் யாவரும் சமம் என்பதற்கான வரைவிலக்கணத்தை புரிந்து கொள்ள முடியவில்லை என தனது வாதத்தில் தெரிவித்த பொழுது மேல் நீதிமன்ற நீதிபதி சட்டமா அதிபர் வழக்கை மீளப் பெறவில்லையெனில் வழக்கை நடாத்த வேண்டும் என ஆடி மாதம் 4ம் திகதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார். இதேவேளை, இவ்வழக்கு எதிர்வரும் 4ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.com



வாடகை குடியிருப்பாளர்களை பாதுகாக்க சட்டம்! - கனடியப் பிரதமர் அறிவிப்பு.
[Friday 2024-03-29 05:00]

கனடாவில வாடகைக் குடியிருப்பாளர் சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் வாடகைக் குடியிருப்பாளர்களை பாதுகாக்க கூடிய வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.



நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்குமாறு மைத்திரிக்கு உத்தரவு!
[Friday 2024-03-29 05:00]

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



நாமல் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட 10 வருடங்கள் காத்திருக்க வேண்டும்!
[Friday 2024-03-29 05:00]

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளர் இல்லை என்று கூறியுள்ள அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இன்னும் ஐந்து அல்லது பத்து வருட காலத்திற்குப் பின்னரே ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்ச போட்டியிட முடியும் என்று கூறினார்.



அம்பாந்தோட்டையில் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் - அவசரப்படுகிறது சினோபெக்!
[Friday 2024-03-29 05:00]

இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ள எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் நிர்மாணப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க சீனாவின் சினோபெக் நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது.



உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள 7 ஆலயங்களை விடுவிக்க நடவடிக்கை!
[Friday 2024-03-29 05:00]

யாழ்ப்பாணத்தில் அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.



வட்டுக்கோட்டை இளைஞன் கொலை -பகுப்பாய்வு அறிக்கைகளுக்கு உத்தரவு!
[Friday 2024-03-29 05:00]

வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.



அனுரவிடம் தமிழ் மக்களுக்கான தீர்வு இல்லை!
[Friday 2024-03-29 05:00]

தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமார திசாநாயக்கவிடம் தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வுகள் இல்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.



தேர்தலை தீர்மானிக்க பசில் தேர்தல் ஆணையாளர் அல்ல!
[Friday 2024-03-29 05:00]

பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தேர்தல் ஆணையாளரல்ல,எந்த தேர்தலை நடத்த வேண்டும் என்று அவர் தீர்மானிக்க வேண்டிய அவசியமில்லை.அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தெரிவித்தார்.



குளியல் காட்சிகளை படம் பிடித்தவர் கைது!
[Friday 2024-03-29 05:00]

யாழ்ப்பாணம் - கொழும்புத்துறையில் ஆண் ஒருவர் குளிப்பதை மறைந்திருந்து தொலைபேசியில் காணொலி எடுத்துக் கொண்டிருந்த நபரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.



சுங்கத்தில் சிக்கியுள்ள கீரி சம்பாவை விடுவிக்கவே தற்காலிக வரிக் குறைப்பு!
[Friday 2024-03-29 05:00]

அரிசி இறக்குமதியை அனுமதிப்பதற்காக அல்ல, தற்போது சுங்கத்தில் சிக்கியுள்ள அரிசியை அகற்றுவதற்காகவே அரிசி மீதான விஷேட பொருட்கள் வரி குறைக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.



ஞானசார தேரருக்கு 4 வருட கடூழியச் சிறைத்தண்டனை! Top News
[Thursday 2024-03-28 16:00]

குரகல விகாரையில் இஸ்லாமிய மதத்திற்கு எதிராக வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக பொதுபல சேனா பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.



முன்னாள் போராளி பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது!
[Thursday 2024-03-28 16:00]

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்த குற்றச்சாட்டின் பேரில் வவுனியாவைச் சேர்ந்த அரவிந்தன் என்ற முன்னாள் போராளி பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.



இலங்கை நாணயத்தின் மதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு!
[Thursday 2024-03-28 16:00]

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295 ரூபாய் 54 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 305 ரூபாய் 33 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.



இலங்கையின் ஆட்சி முறையில் மாற்றங்கள் வேண்டும்!
[Thursday 2024-03-28 16:00]

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வை காண்பதற்கு இலங்கையின் ஆட்சி முறையில் மாற்றங்கள் இடம்பெறவேண்டும் என இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை தெரிவித்துள்ளது.



சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவன் விபத்தில் பலி!
[Thursday 2024-03-28 16:00]

மட்டக்களப்பு - பெரியகல்லாறு பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில், இம்முறை சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.



அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!
[Thursday 2024-03-28 16:00]

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐந்து பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



புன்னாலைக்கட்டுவன் விபத்தில் முதியவர் பலி!
[Thursday 2024-03-28 16:00]

யாழ்ப்பாணம் -புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நேற்று மாலை இடம் பெற்ற வீதி விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிறிய ரக உழவு இயந்திரமொன்றில் புல் ஏற்றுக் கொண்டிருந்த போது லொறி ஒன்று மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பாக சுன்னாகம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



ஜனாதிபதி ரணிலுக்கு மக்களாணை இல்லை!
[Thursday 2024-03-28 16:00]

நாடாளுமன்றத்தின் ஊடாக அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதிக்கு மக்களாணை கிடையாது என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.



பணவீக்கம் சடுதியாக குறைந்தது!
[Thursday 2024-03-28 16:00]

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையில் இலங்கையின் பணவீக்கம் மார்ச் மாதத்தில் 0.9 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது முந்தைய மாதத்தில் 5.9 சதவீதமாக பதிவாகியிருந்தது.



வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட யுவதி!
[Thursday 2024-03-28 16:00]

வவுனியா, சமனங்குளம் பகுதியில் இருந்து 23 வயது யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம் பொலிஸார் இன்று தெரிவித்தனர்.


 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா