Untitled Document
March 29, 2024 [GMT]
முதல்வர் நிதியத்துக்காக திரட்டப்பட்ட நிதி - கனடிய தமிழர் சமூக அமையம் அறிக்கை! Top News
[Thursday 2017-06-22 18:00]

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கனடா பயணத்தின் போது முதல்வர் நிதியத்துக்காக திரட்டப்பட்ட நிதி தொடர்பாக உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியிடப்பட்டதாக கனடிய தமிழர் சமூக அமையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விளக்கமளித்துள்ள கனடிய தமிழர் சமூக அமையம், கணக்கு விவரம் குறித்த தகவல்களையும் வெளியிட்டுள்ளது.

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கனடா பயணத்தின் போது முதல்வர் நிதியத்துக்காக திரட்டப்பட்ட நிதி தொடர்பாக உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியிடப்பட்டதாக கனடிய தமிழர் சமூக அமையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விளக்கமளித்துள்ள கனடிய தமிழர் சமூக அமையம், கணக்கு விவரம் குறித்த தகவல்களையும் வெளியிட்டுள்ளது.

  

இது குறித்து கனடிய தமிழர் சமூக அமையத்தினால் ஊடக அறிக்கை ஒன்றும் நேற்று வெளியிட்டுள்ளது,குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்படுவதாவது-

கடந்த சில நாட்களாக ஊடகங்கள், இணையத்தளங்களில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் அவர்களது கனடா வருகையின் போது முதல்வர் நிதியத்திற்காகத் திரட்டப்பட்ட நிதி தொடர்பாக உண்மைக்கப் புறம்பான செய்திகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. முதலமைச்சரது கனடா வருகையை பல அமைப்புகளுடனும் சேர்ந்து முன்னெடுத்தவர்கள் என்கின்ற வகையிலும், பிரசுரிக்கப்பட்ட செய்திக் கட்டுரையில் கனடியத் தமிழர் சமூக அமையத்தினுடைய பெயர் குறிப்பிட்டதன் அடிப்படையிலும் இச்செய்தி தொடர்பான உண்மை நிலையை மக்கள் முன்வைக்க வேண்டியது எமது கடமையாகும்.

கனடாவுக்கான முதலமைச்சர் வருகையின்போது நடாத்தப்பட்ட முதல்வர் உதவித் திட்டத்திற்கான நிதி சேர் நிகழ்வின் கணக்கறிக்கையையும் அதனுடன் எமது ஊடக அறிக்கையையும் மே மாதம் 16 ஆம் திகதி 2017 இல் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்திருந்தோம். இக் கணக்கறிக்கையில் கையிருப்பலுள்ள பணம் மற்றும் வரவேண்டிய தொகை என்பன தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்தப் பணம் இது வரையிலும் யாரிடமும் கையளிக்கபடவில்லை.

ஏற்கனவே பேசப்பட்டதன் படி முதல்வரது உதவித்திட்ட அமைப்பில் கனடிய சட்டதிட்டங்களுக்கமையவும் மற்றும் நல்லாட்சிக்கான சில நிர்வாக நடைமுறைகளும் சீரமைக்கவேண்டியமையால் இப் பணத்தினை நாம் இன்னமும் அனுப்பி வைக்கவில்லை. அவ்விடயங்கள் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் உடனடியாக இப்பணம் முதல்வரது உதவித் திட்ட அமைப்புக்கு அனுப்பி வைக்கப்படும். நாம் முன்னர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த கணக்கறிக்கையையும், எமது ஊடக அறிக்கையையும் மீளவும் இத்துடன் இணைத்துள்ளோம்.

இச் செய்திகள் தொடர்பாக முதலமைச்சர் அலுவலகமும் தமது அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அனைத்து ஊடகங்கள் இணையத்தளங்களிடம் இவ் உண்மையான விபரங்களை மக்களுக்குத் தருமாறு வேண்டிக் கொள்கிறோம் என கனடிய தமிழர் சமூக அமையம் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு!
[Friday 2024-03-29 16:00]

இலங்கை எதிர்கொள்ளவுள்ள தேர்தல்களில் போட்டியிடவுள்ள அரசியல்வாதிகள் தேசிய இனப்பிரச்சினைக்கு முழுமையான நிரந்தரமான தீர்வை காணவேண்டும். குறிப்பாக 13வது திருத்தத்தையாவது உரிய முறையில் அமுல்படுத்தவேண்டும். - வடக்கு கிழக்கில் படையினர் ஆக்கிரமித்த பொதுமக்களின் காணிகளை மீள அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பன உட்பட பல நிபந்தனைகளை கொழும்பில் இடம்பெற்ற மார்ச் 12 இயக்கத்தின் மாநாட்டில் பேராசிரியர் அர்ஜூன பராக்கிரம முன்வைத்துள்ளார்.



தற்போது பொதுத்தேர்தல் இடம்பெற்றால் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது!
[Friday 2024-03-29 16:00]

நாட்டின் தற்போதைய நிலையில் பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கப்போவதில்லை. அவ்வாறான நிலை ஏற்பட்டால் நாடு மீண்டும் பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைவதுடன் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமல் போகும். அதனால் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதே பொருத்தமாகும் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார்.



பிளவை நோக்கி பொதுஜன பெரமுன!
[Friday 2024-03-29 16:00]

ஜனாதிபதி தேர்தலில் கட்சியின் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க வேண்டும் என மற்றைய தரப்பினரும் உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது.



நாடு முழுவதும் தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு!
[Friday 2024-03-29 16:00]

நாடளாவிய ரீதியில் உள்ள கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்றும், நாளை மறுதினமும் இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



எந்த தேர்தல் முதலில் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்!- பசில்
[Friday 2024-03-29 16:00]

எந்த தேர்தல் முதலில் நடைபெற வேண்டும் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள் என முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்றுக்குழுவிடம் தெரிவித்துள்ளார்.



முட்டை இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டது!
[Friday 2024-03-29 16:00]

முட்டை இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.



எந்த தேர்தலை எதிர்கொள்வதற்கும் மொட்டு தயார்!
[Friday 2024-03-29 16:00]

பொதுஜன பெரமுன எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள தயாராக உள்ளதாக பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம் சந்திரசேன தெரிவித்துள்ளார்.



அதிகாரப்பகிர்வு சரியான விதத்தில் இடம்பெற்றால் தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம்!
[Friday 2024-03-29 16:00]

அதிகாரப் பகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்து கொள்ளவேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார்.



எச்ஐவி தொற்றாளர் எண்ணிக்கை 14 வீதத்தினால் அதிகரிப்பு!
[Friday 2024-03-29 16:00]

நாட்டில் எச்ஐவி தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 14 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக இலங்கையின் தேசிய எயிட்ஸ் தடுப்பு திட்டத்தின் பணிப்பாளர் டாக்டர் ஜானகி விதானபத்திரன தெரிவித்துள்ளார்.20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் இந்த தொற்றால் பாதிக்கப்படும் ஆபத்தில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



சிறைக்குள் போனதும் சுகவீனம் - ஞானசார தேரர் வைத்தியசாலையில் அனுமதி!
[Friday 2024-03-29 16:00]

நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரர் சுகவீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



வாடகை குடியிருப்பாளர்களை பாதுகாக்க சட்டம்! - கனடியப் பிரதமர் அறிவிப்பு.
[Friday 2024-03-29 05:00]

கனடாவில வாடகைக் குடியிருப்பாளர் சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் வாடகைக் குடியிருப்பாளர்களை பாதுகாக்க கூடிய வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.



நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்குமாறு மைத்திரிக்கு உத்தரவு!
[Friday 2024-03-29 05:00]

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



நாமல் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட 10 வருடங்கள் காத்திருக்க வேண்டும்!
[Friday 2024-03-29 05:00]

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளர் இல்லை என்று கூறியுள்ள அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இன்னும் ஐந்து அல்லது பத்து வருட காலத்திற்குப் பின்னரே ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்ச போட்டியிட முடியும் என்று கூறினார்.



அம்பாந்தோட்டையில் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் - அவசரப்படுகிறது சினோபெக்!
[Friday 2024-03-29 05:00]

இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ள எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் நிர்மாணப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க சீனாவின் சினோபெக் நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது.



உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள 7 ஆலயங்களை விடுவிக்க நடவடிக்கை!
[Friday 2024-03-29 05:00]

யாழ்ப்பாணத்தில் அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.



வட்டுக்கோட்டை இளைஞன் கொலை -பகுப்பாய்வு அறிக்கைகளுக்கு உத்தரவு!
[Friday 2024-03-29 05:00]

வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.



அனுரவிடம் தமிழ் மக்களுக்கான தீர்வு இல்லை!
[Friday 2024-03-29 05:00]

தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமார திசாநாயக்கவிடம் தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வுகள் இல்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.



தேர்தலை தீர்மானிக்க பசில் தேர்தல் ஆணையாளர் அல்ல!
[Friday 2024-03-29 05:00]

பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தேர்தல் ஆணையாளரல்ல,எந்த தேர்தலை நடத்த வேண்டும் என்று அவர் தீர்மானிக்க வேண்டிய அவசியமில்லை.அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தெரிவித்தார்.



குளியல் காட்சிகளை படம் பிடித்தவர் கைது!
[Friday 2024-03-29 05:00]

யாழ்ப்பாணம் - கொழும்புத்துறையில் ஆண் ஒருவர் குளிப்பதை மறைந்திருந்து தொலைபேசியில் காணொலி எடுத்துக் கொண்டிருந்த நபரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.



சுங்கத்தில் சிக்கியுள்ள கீரி சம்பாவை விடுவிக்கவே தற்காலிக வரிக் குறைப்பு!
[Friday 2024-03-29 05:00]

அரிசி இறக்குமதியை அனுமதிப்பதற்காக அல்ல, தற்போது சுங்கத்தில் சிக்கியுள்ள அரிசியை அகற்றுவதற்காகவே அரிசி மீதான விஷேட பொருட்கள் வரி குறைக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா