Untitled Document
April 24, 2024 [GMT]
நீண்ட காலம் வாழ உதவும் கோப்பி: - ஆய்வில் தகவல்
[Monday 2017-07-17 08:00]

நாளொன்றுக்கு மூன்று கப் காபி அருந்துவது நீங்கள் நீண்ட காலம் வாழ உதவலாம் என்று 10 ஐரோப்பிய நாடுகளில் ஏறத்தாழ அரை மில்லியன் மக்களிடையே நடத்தப்பட்ட ஆய்வு கூறுகிறது.
உள்மருந்துக்கான வருடாந்திர இதழில் பிரசுரிக்கப்பட்ட அந்த ஆய்வில், காஃபின் நீக்கப்பட்டிருந்தாலும் கூட, கூடுதலாக ஒரு கப் காபி, ஒருவரின் ஆயுளை அதிகரிக்கலாம் என யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளொன்றுக்கு மூன்று கப் காபி அருந்துவது நீங்கள் நீண்ட காலம் வாழ உதவலாம் என்று 10 ஐரோப்பிய நாடுகளில் ஏறத்தாழ அரை மில்லியன் மக்களிடையே நடத்தப்பட்ட ஆய்வு கூறுகிறது. உள்மருந்துக்கான வருடாந்திர இதழில் பிரசுரிக்கப்பட்ட அந்த ஆய்வில், காஃபின் நீக்கப்பட்டிருந்தாலும் கூட, கூடுதலாக ஒரு கப் காபி, ஒருவரின் ஆயுளை அதிகரிக்கலாம் என யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

  

ஆனால் அதை காபி அருந்துபவர்கள் கடைப்பிடிக்கும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை என்று கூறலாமே தவிர, காபியில் பாதுகாப்பு விளைவு உள்ளதாகக் குறிப்பிடுவது சாத்தியமற்றது என நிச்சயமாகக் கூறலாம் என்று சந்தேகத்துடன் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.எனவே, கூடுதலாக ஒரு கப் காபிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

புதிய ஆய்வு கூறுவது என்ன?

அதிகமாக காபி அருந்துவது, மரணம் நேருவதற்கான குறைந்த ஆபத்துடன் தொடர்புபடுத்தப்படுகிறது என்றும் குறிப்பாக இதய நோய்கள் மற்றும் குடல் நோய்களுடன் உள்ளவர்களுக்கு இது பொருந்தும் என்று புற்று நோய் ஆராய்ச்சிக்கான சர்வதேச முகமை மற்றும் லண்டன் இம்பீரியல் கல்லூரியின் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.ஐரோப்பிய யூனியனில் உள்ள பத்து நாடுகளைச் சேர்ந்த 35 வயதுக்கும் அதிகமான ஆரோக்கியமாக வாழும் மக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளின் தரவுக்கு பிறகு, இந்த முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்துள்ளனர்.

ஆய்வின் தொடக்கத்தில் எவ்வளவு காபி குடிக்கின்றனர் என்று அந்த மக்களிடம் ஆய்வாளர்கள் கேட்டனர். பிறகு, அவர்களில் சராசரியாக 16 ஆண்டுகளில் ஏற்பட்ட மரணங்களை அனுமானித்தனர்.பொதுமக்களால் உணரப்படும் ஆபத்து பற்றி ஆய்வு செய்த பிறகு, காபியால் மரணங்கள் குறைவதாக மதிப்பிட்டால், தினமும் கூடுதலாக காபி குடிப்பதால் ஒருவரின் ஆயுள் சுமார் மூன்று மாதங்களும் ஒரு பெண்ணின் ஆயுள் சராசரியாக ஒரு மாதமும் அதிகமாகலாம் என்கிறார் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர் சர் டேவிட் ஸ்பீக்ஹால்டர்.

ஆனால், இதுபோன்ற ஆய்வு அளவு கோல் இருந்தாலும், காபி கொட்டைகளை மாயாஜால மூலப்பொருள் என்பதை மிகச்சரியாக அர்த்தம் கொள்ள முடியாது. அதை நிரூபிக்கவும் இயலாது என்கிறார் அவர்.எதற்காக நீங்கள் அவசரப்பட்டு, அதிக காபியை வாங்க வேண்டும்?இந்த கண்பிடிப்புகள், அவை முதலில் தோன்றியது போல மிகத் தெளிவாக இல்லை என்பது காபி பிரியர்களை விரக்தியடையச் செய்யலாம்.

காபியின் விளைவுகள் மீது ஒருவரால் எந்த அளவுக்கு நிச்சயத்தன்மையுடன் இருக்க முடியும் போன்ற ஒவ்வொரு காரணியையும் கவனத்தில் கொள்ள ஆய்வுகளால் முடியவில்லை என்பது ஒரு காரணம்.உதாரணமாக, காபி அருந்தாதவர்களுடன் ஒப்பிடும்போது, காபி அருந்துபவர்கள் அடைந்த ஆதாயம் என்ன என்பதை அந்த ஆய்வு ஆராயவில்லை.நாளொன்றுக்கு மூன்று கப் காபி வாங்க முடிபவர் பணக்காரராக இருக்கலாம். மேலும், அந்த கூடுதல் பணம், சில வழியில் அவர்களின் சுகாதாரத்தை பாதுகாக்க உதவலாம்.

மூன்று கப் காபி அருந்துவோர், சமூக பழக்க வழக்கங்களுக்காக கூடுதல் நேரத்தை செலவிடலாம் மற்றும் அதன் பலனாக தங்கள் நலனை அவர்கள் மேம்படுத்திக் கொள்ளலாம். ஒருவேளை இதற்கு காபிதான் பொறுப்பு என்றும் அதனால் ஒவ்வொரு ஆபத்தும் மேம்படவில்லை என்றும் அவர்கள் நிச்சயமாக இருந்திருக்கலாம்.உதாரணமாக, அதிகமாக காபி அருந்துவது பெண்களிடையே கருப்பை புற்றுநோய் அதிகரிக்கும் விகிதத்துடன் தொடர்புபடுத்தப்படுவதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.இருப்பினும், ஆய்வில் ஏராளமானோர் உட்படுத்தப்பட்டிருந்தாலும், தொடக்கத்திலேயே நீரிழிவு நோயாளிகள், இதய நோயாளிகள் அல்லது மாரடைப்பு ஏற்பட்டவர்களை ஆராய்ச்சியாளர்கள் விலக்கி விட்டனர்.

எனவே, உடல் நலமில்லா மக்கள் காபி அருந்துவதால் ஏற்படும் ஆபத்துகளையும் பலன்களையும் பற்றி அந்த ஆய்வு பெரிதாகக் கூறவில்லை.அதனால் வழக்கமான பானங்களை அருந்தும்போது சில பேர் உடல் சுகவீனம் அடைந்திருக்கவும் வாய்ப்புள்ளது. காபி உங்களுக்கு நல்லதா?

முந்தைய ஆய்வுகள் முரண்பட்ட மற்றும் மாறுபட்ட முடிவுகளை தெரிவித்துள்ளன.காஃபின் கலந்த பானங்கள், தற்காலிகமாக தங்களை விழிப்புடன்உணரச் செய்வதாக பல பேருடைய அனுபவம் கூறுகிறது.ஆனால், காஃபின் பிறரை விட சில பேரை பாதிப்பதாகவும் அந்த பாதிப்பு ஒருவருக்கொருவர் வேறுபடுகிறது என்றும் ஆய்வு கூறுகிறது.தேசிய சுகாதார சேவை நிபுணர்கள், பொதுப்படையான மக்கள்தொகையில் எவ்வளவு காபி அருந்த வேண்டும் என்பதற்கான வரம்பை நிர்ணயிக்கவில்லை. ஆனால், கர்ப்பிணி பெண்கள் தினமும் 200 மில்லி கிராம் காஃபினுக்கு மேல் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என அவர்கள் கூறுகின்றனர்.

காபி அதிகமாக அருந்துவதால் குழந்தை சிறியதாக பிறக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்பதால் அவர்கள் இவ்வாறு கூறுகின்றனர்.அதிகப்படியான கேஃபைன், கருச்சிதைவுக்கான ஆபத்தை அதிகம் விளைவிக்கலாம் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். காஃபின் என்பது காபியில் மட்டுமல்ல. இரண்டு குவளை தேநீர் மற்றும் ஒரு கேன் கோலா அல்லது உதாரணமாக, இரண்டு கப் உடனடி காபி போன்றவற்றை அருந்துவதாலும், 200 மில்லி கிராம் கேஃபைன் அளவை நாம் எட்டி விட முடியும்.

அண்மையில் அமெரிக்காவை சேர்ந்த பருவ வயதுடைய ஒருவர், அளவுக்கு அதிகமான காஃபின் கலந்த பானங்களை வேகமாக அருந்தியதால் உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. காபியால் உங்களால் நீண்ட காலம் உயிர் வாழ முடியும் என நம்மால் எவ்வாறு நிச்சயமாக இருக்க முடியும்? உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான மக்களிடையே காபி அருந்துவதை கட்டாய வழக்கமாக்கியும், மேலும் சில ஆயிரக்கணக்கான மக்களை காபி அருந்துவதில் இருந்து தவிர்க்கச் செய்தும், காபியால் நீண்ட காலம் உயிர் வாழச் செய்ய முடியுமா என மிகக் கடுமையான அறிவியல் வழியில் ஆய்வு செய்ய வேண்டும். பிறகு ஒவ்வொருவரின் வாழ்வையும் விஞ்ஞானிகள் கண்காணிக்க வேண்டும்.

உதாரணமாக அவர்கள் என்ன சாப்பிட்டனர் மற்றும் குடித்தனர், அதனால் என்ன பலன் கிடைத்தது, எவ்வளவு உடற்பயிற்சி செய்தனர் போன்றவற்றை ஆராய வேண்டும். அத்தகைய ஆய்வு நடைபெறுவதற்கான சாத்தியமே இல்லை. எனவே, தற்போதைக்கு காபி குடிப்பதால் உங்களுக்கு நல்லது ஏற்படுமா என பந்தயம் கட்டுவதற்கு பதிலாக, உங்கள் ஆயுளை நீட்டிக்க - நீங்கள் காபி குடிக்கவோ அல்லது குடிக்காமல் இருப்பதற்காகவோ, அருகே உள்ள காபி கடை வரை விறுவிறுப்பான 20 நமிட நடை பயிற்சியை மேற்கொள்ளுங்கள்

  
   Bookmark and Share Seithy.com



தினமும் சக்கரை சாப்பிடுவதால் உடலில் நடக்கும் மாற்றம்!
[Wednesday 2024-04-24 18:00]

நாம் நமது வாழ்க்கையில் அறுசுவைள் சாப்பிட்டாலும் சக்கரையை கொஞ்சம் அதிகமாக தான் உண்கிறோம். இந்த சக்கரை உண்பது சரியா என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். சக்கரை அதிகமாக உண்பதால் உடல் எடை அதிகரிக்கிறது. இதற்கான காரணம் சக்கரையில் அதிகளவு கொழுப்பு இல்லாமல் இருந்தாலும் இதை உண்ணும் போது வேறு வழியில் நாம் நிறைய கலோரியான உணவுகளை உண்கிறோம்.



இட்லி, தோசை மாவு அரைக்கும் போது தயிர் சேர்த்து அரைத்துள்ளீர்களா?
[Tuesday 2024-04-23 18:00]

இட்லி, தோசை நாம் பொதுவாக காலையில் இலகுவாக செய்யும் ஒரு உணவு வகையாகும். இட்லி, தோசை மாவு அரைக்கும் போது அதில் நாம் ஏகப்பட்ட தானியங்களை சேர்க்கின்றோம். இதில் 65 கலோரிகள், 2 கிராம் புரோட்டீன், 2 கிராம் நார்ச்சத்து, 8 கிராம் கார்போஹைட்ரேட் இருக்கின்றன. இந்த உணவுகள் எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவு என்பதால் இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணலாம்.



சரியான தூக்கம் இல்லையா? இந்த பாதிப்புகள் ஏற்படுமாம்!
[Monday 2024-04-22 18:00]

தினமும் சரியான தூக்கம் இல்லாவிட்டால் என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். தூக்கமின்மை பிரச்சினை கவனம் செலுத்துவதற்கும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கும், தகவல்களை நினைவில் வைத்திருப்பதற்கும் கடினமாக்கும். எரிச்சல், மனச்சோர்வு மற்றும் பதட்டம் போன்ற மனநிலை மாற்றங்களுக்கு வழிவகுக்கும்.



மாம்பழத் தோல் டீ-ன் ஆரோக்கிய நன்மைகள்!
[Sunday 2024-04-21 18:00]

முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தின் சுவைக்கு அடிமையானவர்கள் பலர், நார்ச்சத்து அதிகம் நிறைந்த மாம்பழத்தில் பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளன. விட்டமின் ஏ, பி6, சி மற்றும் இ நிறையவே உள்ளன, இரும்புச்சத்து அதிகம் நிறைந்த இப்பழம் செரிமானத்திற்கு உகந்தது. மாம்பழத்தில் உள்ள தாமிரம் ரத்த சிவப்பு அணுக்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும்.



நினைவாற்றலை அதிகரிக்கும் வல்லாரைக் கீரை சட்னி!
[Saturday 2024-04-20 16:00]

பொதுவாகவே கீரையில் ஏகப்பட்ட சத்துக்கள் காணப்படுகின்றது. குறிப்பாக வல்லாரை இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்ச்சத்துகள், தாது உப்புக்களை கொண்டது. மூளையின் சிறப்பான செயல்பாட்டிற்கும், ஊட்டத்துக்கும் வல்லாரை பெரிதும் துணைப்புரிகின்றது. மனித மூளை நன்கு செயல்பட தேவையான அனைத்து சத்துக்களும் இந்த வல்லாரையில் செறிந்து காணப்படுகின்றது.



தினமும் இரவில் குளித்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?
[Friday 2024-04-19 16:00]

காலையில் குளிப்பதை விட இரவில் தூங்கும் முன்பு குளித்தால் ஏற்படும் நன்மைகளை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். உடலின் பாகங்களை தூய்மையாக வைத்திருக்க தினமும் குளிப்பது மிகவும் அவசியமாகும். உடல் சூட்டையும் சரி செய்ய உதவுகின்றது. தினமும் தலைக்கு குளிப்பதால் சிலருக்கு தலைவலி மற்றும் சைனஸ் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். நாம் காலையில் குளிப்பதை விட இரவு நேரத்தில் குளித்தால் பல நன்மைகள் கிடைக்கும்.



ஆஸ்துமா ஏற்படுவதற்கான காரணம் என்னனு தெரியுமா?
[Thursday 2024-04-18 18:00]

ஆஸ்துமா நோய் எவ்வாறு ஏற்படுகிறது இதற்கான அறிகுறிகள் என்ன? இதை எவ்வாறு தடுக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். இந்த நோயை வீசிங் இளைப்பு போன்ற பெயர்களால் அழைப்பார்கள். இது சுவாசப் பாதைக்குள் காற்று நுழையும் போது காற்றில் உள்ள தூசிகள் போன்றவற்றை நமது நாசிகளுக்குள் உள்ள ரோமங்கள் தடுக்கின்றன.



கோடை காலத்தில் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?
[Wednesday 2024-04-17 15:00]

கோடை காலத்தில் தண்ணீர் எவ்வளவு பருக வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். நமது உடலில் ஏறத்தாழ 70 சதவீதம் அளவுக்கு நீர்ச்சத்து நிரம்பியுள்ளது. நம் உடலில் உள்ள நச்சுக்களை சிறுநீர் மூலமாகவும், வியர்வை மூலமாகவும் வெளியேற்றுவதற்கு இந்த நீர்ச்சத்து உதவியாக இருக்கின்றது. கோடை காலத்தில் அதிக வெயில் காரணமாக நீரிழப்பு ஏற்படுகின்றது. உடம்பில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டாமல் இருக்க அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.



காலை உணவாக சாதம் சாப்பிடலாமா?
[Tuesday 2024-04-16 18:00]

காலை உணவுக்கு அரிசி சாதம் சாப்பிடலாமா? என்ற கேள்விக்கு பதில் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இன்று பலரும் காலை உணவாக சாதம் எடுத்துக் கொள்ளும் நிலையில், இதனால் சுறுசுறுப்பாகவும் இருக்க முடியும். ஏனெனில் இதில் கார்போஹைட்ரேட் அதிகமாகவே இருக்கின்றது. பல நன்மைகளை நமக்கு அளித்தாலும் காலை உணவாக சாதம் சாப்பிடுவது நல்லதல்ல என்று கூறப்படுகின்றது. அப்படி சாப்பிட்டால் என்ன என்பதையும் தெரிந்து கொள்வோம்.



மாம்பழம் சாப்பிட்டால் தீங்கா?
[Monday 2024-04-15 18:00]

இயற்கை மற்றும் செயற்கை முறையில் பழுத்த மாம்பழங்களை எளிதாக கண்டுபிடிக்க சில டிப்ஸ்களை இங்கு தெரிந்து கொள்வோம். முக்கனிகளில் ஒன்றாக இருக்கும் மாம்பழத்தை பழங்களின் ராஜா என்றும் கூட அழைப்பார்கள். கோடை காலத்தில் மாம்பழத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் இன்று ரசாயனங்கள் தெளித்து பழுக்க வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.



கல்லீரலை சுத்தப்படுத்தும் கோவக்காய் குழம்பு!
[Sunday 2024-04-14 18:00]

கோவக்காய் ஒரு சிறந்த இயற்கை மருந்தாக காணப்படுகின்றது. இது கல்லீரலை பாதுகாப்பதில் முக்கியமாக ஒரு காயாக பார்க்கப்படுகின்றது. வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை உணவுகளில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் இருக்கும் கிருமிகள் மற்றும் நச்சுகள் வெளியேறி கல்லீரல் வீக்கம் குறைக்க பெரிதும் துணைப்புரிகின்றது. இரும்புச்சத்து, பொட்டாசியம், போன்ற தாதுக்கள் கோவக்காயில் அதிகமாக இருக்கிறது. இவை எலும்பு வளர்ச்சி, இதயம், ரத்தம் நரம்புகளின் சீரான இயக்கத்திற்கு உதவுகிறது.



செரிமான கோளாறுக்கு தீர்வு கொடுக்கும் பூண்டு ஊறுகாய்!
[Saturday 2024-04-13 18:00]

பொதுவாகவே அனைவரும் சமையலில் பயன்படுத்தும் பொருட்களில் இன்றியமையாத பொருளாக பூண்டு காணப்படுகின்றது. பூண்டு உடலுக்கு மிகவும் நல்லது. இதில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பல மருத்துவ குணங்கள் உள்ளமை அனைவரும் அறிந்ததே. பூண்டானது நிறைய மருத்துவ குணங்கள் நிறைந்தது. வாயுத் தொல்லை, நெஞ்சுக்குத்தல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத்தரும்.



சுண்டைக்காய்க்குள் மறைந்திருக்கும் ரகசியம்!
[Friday 2024-04-12 18:00]

காய்கறிகளுள் மிகவும் சிறிதான காய் சுண்டைக்காய். சுண்டைக்காயை நுண் ஊட்டச் சத்துக்களின் சேமிப்புக் கிடங்கு என்று சொன்னால் மிகையாகாது. கசப்பு சுவை கொண்ட இந்த சுண்டையில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.சுண்டை வயிற்றில் உள்ள வாயுக்களை அகற்றி உடலை கட்டுக்கோப்புடன் காத்துக்கொள்ள உதவுகிறது.



தொப்பை பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கும் கறிவேப்பிலை குழம்பு!
[Thursday 2024-04-11 16:00]

பொதுவாகவே அனைவருக்கும் உடல் எடையைக் குறைத்து, உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், என்னதான் முயற்சி செய்தாலும் பலருக்கு தொப்பையை குறைக்க முடியவில்லையே என்ற கவலை இருக்கத்ததான் செய்கின்றது. அப்படிப்பட்டவர்கள் ஆரோக்கியமாக முறையில் தொப்பையை குறைக்கம் கறிவேப்பிலை குழம்பு எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.



கொரியன் பெண்களின் அழகு ரகசியம் என்னனு தெரியுமா?
[Wednesday 2024-04-10 18:00]

சரும பராமரிப்பு என்பது இப்போது பரவலாக காணப்படுகின்றது. இந்த பராமரிப்பு ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாக பயன்படுத்தப்படுகின்றது. இந்த சரும அழகுக்குறிப்புக்களை கொரியன் பெண்கள் எந்த விதமாக பயன்படுத்துகிறார்கள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.



தினமும் ஒரு துளி எண்ணெய் தொப்புளில் விட்டால் என்ன பயன் தெரியுமா?
[Tuesday 2024-04-09 18:00]

நமது உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் நோய் வருவதற்கும் நாம் தான் காரணமாக இருக்கின்றோம். நமது உடலில் ஒரு பிரச்சனை வருவதற்கு முன்னர் அதை இல்லாமல் செய்வதற்கு நம்மிடம் இருக்கும் இயற்கையான விஷயங்களை செய்ய வேண்டும். அப்படியான ஒரு விஷயத்தை தான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம். தேங்காய் எண்ணெயை தொப்புளில் விடுவதால் என்ன நன்மை கிடைக்கின்றது என்பதை தெரிந்து கொள்ளலாம்.



அரிசி தண்ணீரை வைத்து இவ்வளவு விஷயங்கள் செய்யலாமா?
[Monday 2024-04-08 18:00]

பொதுவாகவே அனைவரும் வீட்டில் அரிசி கழுவிய தண்ணீரை கீழே ஊற்றிவிடுவோம். ஆனால் நம்மில் பலரும் அறியாத அளப்பரிய நன்மைகளை இந்த அரிசி கழுவிய தண்ணீர் கொண்டுள்ளது. கூந்தல், சருமம், முகம் ஆகிய அனைத்திற்கும் அழகு சேர்க்கும் ரகசியங்களை நாம் அன்றாடம் வீணாக்கும் அரிசி தண்ணீர் கொண்டுள்ளது. இதனை சரும பொலிவுக்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் எவ்வாறு பயன்படுத்தலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.



குழந்தைகளை ஏசி-அறையில் தூங்க வைக்கலாமா?
[Sunday 2024-04-07 16:00]

கோடை காலத்தில் குழந்தைகளுக்கு ஏசி போட்டு தூங்க வைக்கும் பெற்றோர்களுக்கான பதிவே இதுவாகும். கோடை காலம் நடந்து கொண்டிருப்பதால் வெயிலின் தாக்கமும் அதிகமாகவே இருந்து வருகின்றது. இதனை சமாளிக்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தவித்து வருகின்றனர்.



வெள்ளி கொலுசு அணிவதன் நன்மைகள்!
[Saturday 2024-04-06 16:00]

பொதுவாகவே நமது முன்னோர்கள் எதையும் காரணம் இல்லாமல் சொல்லி வைக்கவில்லை. அவர்களின் ஒவ்வொரு செயலுக்கும் துல்லியமான அறிவியல் காரணம் கட்டாயம் இருக்கும். அந்த வகையில் கலாசாரத்தில் பெண் குழந்தைகள் காலில் வெள்ளி கொலுசு அணியும் வழக்கம் பழங்காலத்திலிருந்தே இருந்து வருகிறது. எப்போதும் தங்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் தமிழர்கள் காலில் அணியும் கொலுசு வெள்ளியில் தான் அணிய வேண்டும் என கூறியமைக்கு என்ன காரணம் என சிந்தித்திருக்கின்றீர்களா? வெள்ளியில் கொலுசு அணிவதனால் ஏற்படும் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.



சரும பொலிவிற்கான அழகுக்குறிப்புக்கள்!
[Saturday 2024-04-06 07:00]

பெண்கள் அழகாக இருப்பதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் நேரத்தை செலவு செய்கின்றனர். செலவு செய்யும் அந்த நேரத்தை கொஞ்சம் பயனுள்ளதாக எப்படி மாற்றலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். இதற்காக நீங்கள் வீட்டில் காணப்படும் சமயலறை பொருட்களை உபயோகித்தால் போதும். இந்த வீட்டு அழகுக்கு பொருட்கள் மூலம் முகம் பளீச் என்று காணப்படுகின்றது.


Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா