Untitled Document
April 16, 2024 [GMT]
கறுப்பு ஜூலை வன்முறைகளின் 34 ஆவது ஆண்டு நிறைவையொட்டி லண்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்! Top News
[Monday 2017-07-24 08:00]

உலகை உலுப்பிய - ஈழத்தமிழர்களுக்கு எதிரான - கறுப்பு ஜூலை வன்முறைகளின் 34 ஆவது ஆண்டு நிறைவையொட்டி 23 ஆம் திகதி மாலை 5 மணி தொடக்கம், லண்டன், டவுனிங் வீதியில் உள்ள இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தின் முன் பிரித்தானியாவில் வாழும் தமிழ் உறவுகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

உலகை உலுப்பிய - ஈழத்தமிழர்களுக்கு எதிரான - கறுப்பு ஜூலை வன்முறைகளின் 34 ஆவது ஆண்டு நிறைவையொட்டி 23 ஆம் திகதி மாலை 5 மணி தொடக்கம், லண்டன், டவுனிங் வீதியில் உள்ள இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தின் முன் பிரித்தானியாவில் வாழும் தமிழ் உறவுகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

  

தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்போராட்டமானது-

இலங்கை அரசாங்கத்தின் தமிழின அழிப்பிற்கான சர்வதேச விசாரணை உறுதி செய்யப்பட வேண்டும்

இலங்கை இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் மீள கையளிக்கப்பட வேண்டும்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான உண்மை நிலை உறுதி செய்யப்பட வேண்டும்

தமிழர் தாயகம் தேசியம் தன்னாட்சி உரிமை ஆகியவற்றின் அடிப்படையிலேயே தமிழர்களுக்கான தீர்வு அமைய வேண்டும்

போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த ஆர்ப்பாட்டமானது நடைபெற்றுள்ளது.

இலங்கைத்தீவில் இரு இனங்களுக்கு இடையே என்ன நடக்கிறது என்று இந்த உலகம் புரிந்திராத, அறிந்திராத காலத்தே பௌத்த சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களால், தமிழ் இனத்திற்கு எதிராக நடத்தி முடிக்கப்பட்ட கொடூரமான இனச்சங்காரமே கறுப்பு ஜூலை. தலைநகர் கொழும்பு மற்றும் நாட்டின் தென்பகுதி நகரங்களில் தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் அடித்துநொறுக்கப்பட்டன. தமிழர்களுக்குச் சொந்தமான ஏராளமான வீடுகள், கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டன.

நகரப்பகுதிகளில் மட்டுமல்லாமல் கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளான குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உள்ளிட்ட 53 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். பின்னாளில் பல அரசியல் திருப்பங்களுக்கு வித்திட்டிருந்த இந்த வன்முறைகளில் சம்பந்தப்பட்டவர்கள் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நிவாரணமும் வழங்கப்படவில்லை என்றே பாதிக்கப்பட்ட பலரும் கூறுகின்றார்கள்.

இந்த வன்செயல்கள் காரணமாக சிங்களவர்கள் மற்றும் தமிழர்களுக்கிடையில் இனரீதியாக ஏற்பட்டிருந்த பிளவை சீர்செய்வதற்குரிய ஆக்கபூர்வமான நடவடிக்கைககளும் பின்னர் வந்த அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்படவில்லை என்கிற விமர்சனங்கள் இன்றளவும் இருக்கின்றன. முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற இந்த வன்முறைகள் குறிப்பிட்ட ஓர் இனத்திற்கு எதிரான அழிப்பு நடவடிக்ககையாகவே இலங்கைத் தமிழ் மக்களால் கருதப்படுகிறது.

இராணுவ முற்றுகைக்குள் தமிழர் தாயகத்தை வைத்தபடி, தமிழ் மக்களின் மொழி, கலை, பண்பாட்டு விழுமியங்களில் கை வைத்துள்ளது சிங்கள அரசு. பௌத்த மதத்திணிப்பை தீவிரமாய் மேற்கொண்டுள்ளது. சிங்களக் குடியேற்றங்களைத் தாராளமாய் மேற்கொண்டு வருகின்றது.

கறுப்பு ஜூலைகள் மீண்டும் இடம்பெறாமலும், முள்ளிவாய்க்கால்கள் தொடராமலும், தமிழர் தாயகத்தில், தமிழினம், தன் அடையாளங்களுடன், சுதந்திரமாக வாழுகின்ற ஒரு நிலைமையை உருவாக்குகின்ற ஒரு காலமாக இனி வரும் காலம் அமைய புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் தீவிரமாய் உழைக்க வேண்டிய காலம் இது.

  
   Bookmark and Share Seithy.com



பொதுவேட்பாளராக வேலன் சுவாமிகள்! - பதிலளிக்க காலஅவகாசம் கோரினார்.
[Tuesday 2024-04-16 15:00]

ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன், விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு தவத்திரு வேலன் சுவாமிகள் கால அவகாசம் கோரியுள்ளார்.



வெள்ளியன்று வவுனியாவில் கூடுகிறது தமிழரசின் மத்திய செயற்குழு!
[Tuesday 2024-04-16 15:00]

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் எதிர்வரும் 19ஆம் திகதி வவுனியாவில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் கட்சி முகங்கொடுத்துள்ள வழக்குகள் தொடர்பிலும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் கட்சிகளால் முன்மொழியப்பட்டுள்ள பொதுவேட்பாளர் விடயம் சம்பந்தமாகவும் ஆராயப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் - பிரதமரை தலையிடுமாறு கஜேந்திரன் கடிதம் !
[Tuesday 2024-04-16 15:00]

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.



தமிழர்களை பயங்கரவாதிகளாக அடையாளப்படுத்துவது எதிர்காலத்தை அழிவுக்குள் தள்ளும்!
[Tuesday 2024-04-16 15:00]

தமிழர்களை தொடர்ந்தும் பயங்கரவாதிகள் என அடையாளப்படுத்தி செய்ய முற்படும் அரசியல் நாட்டின் எதிர்காலத்தை மேலும் அழிவுக்குள்ளேயே தள்ளும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார்.



காதலியையும் தாயையும் வெட்டி விட்டு இளைஞன் உயிரை மாய்ப்பு!
[Tuesday 2024-04-16 15:00]

யாழ்ப்பாணம் - பண்டத்தரிப்பு , பனிப்புலம் பகுதியில் இன்று அதிகாலை தனது காதலியையும், காதலியின் தாயையும் கூரிய ஆயுதத்தால் வெட்டிய இளைஞன் ஒருவர், தனது உயிரை மாய்த்துள்ளார் .



இராஜாங்க அமைச்சருடன் சென்ற கார் தீப்பற்றி எரிந்தது!
[Tuesday 2024-04-16 15:00]

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க பயணித்த கார் பண்டாரவளை - ஹல்பே பகுதியில் வைத்து இன்று அதிகாலை 12.45 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.



ரஷ்ய போரில் இலங்கை இராணுவத்தினர் - விபரங்களை கோருகிறார் இலங்கை தூதுவர்!
[Tuesday 2024-04-16 15:00]

ரஷ்ய இராணுவத்தில் இலங்கையின் முன்னாள் இராணுவத்தினர் இணைந்திருந்தால் அவர்கள் பற்றிய விவரங்களை தருமாறு மொஸ்கோவிலுள்ள இலங்கைத் தூதுவர் பேராசிரியர் ஜனிதா லியனகே, கேட்டுள்ளார்.



ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விஜயதாசவுக்கும் அழைப்பு!
[Tuesday 2024-04-16 15:00]

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு தமக்கு பல தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளதாக நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.



யாழ்ப்பாணத்தில் இரண்டரை கோடி ரூபாவை சுருட்டிக் கொண்டு தலைமறைவாக இருந்த பெண் கைது!
[Tuesday 2024-04-16 15:00]

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களிடம் சுமார் 2 கோடி 50 இலட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்து, கொழும்பில் தலைமறைவாகி இருந்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.



திருமணம் செய்வதாக சுவிஸ் பெண்ணை ஏமாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் மீது முறைப்பாடு!
[Tuesday 2024-04-16 15:00]

சுவிஸ் நாட்டில் வசிக்கும் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி சுமார் 50 இலட்ச ரூபாயை மோசடி செய்ததாக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.



போர்ப் பதற்றத்துக்கு மத்தியில் கொழும்பு வருகிறார் ஈரானிய ஜனாதிபதி!
[Tuesday 2024-04-16 05:00]

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது. இந்த திட்டத்தை திறந்து வைப்பதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் என நீர்ப்பாசன மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ தெரிவித்தார்.



கடன் மறுசீரமைப்பு பேச்சு தோல்வி!
[Tuesday 2024-04-16 05:00]

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை என ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.



யாழ்ப்பாணத்தில் கோவிட் மரணம் - யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் விளக்கம்!
[Tuesday 2024-04-16 05:00]

கொரோனா தொற்று பற்றிய உலக சுகாதார நிறுவனம் மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் ஆலோசனைகள் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெளிவுபடுத்தியுள்ளார்.



ரணில் - மகிந்த விசேட சந்திப்பு- அடுத்த வாரம் நடக்கிறது!
[Tuesday 2024-04-16 05:00]

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.



இலங்கைக்கு பெரிய வெங்காயம் - தடையை தளர்த்தியது இந்தியா!
[Tuesday 2024-04-16 05:00]

இலங்கைக்கு மட்டும் பெரிய வெங்காயம் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க இந்தியா தீர்மானித்துள்ளது. இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது



பொது வேட்பாளர் சாத்தியமில்லை என்று தமிழர்கள் முடிவெடுப்பார்கள்!
[Tuesday 2024-04-16 05:00]

தமிழர்கள் தமிழ் கட்சிகள் மற்றும் அரசியல் அனுபவம் வாய்ந்தவர்கள் புத்திஜீவிகள் என எல்லோரும் ஒன்றிணைந்து ஜனாதிபதி தேர்தலுக்கான தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது சாத்தியம் இல்லை என்ற முடிவினை எடுப்பார்கள் என எண்ணுகின்றேன் என கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் கே.மஸ்தான் தெரிவித்தார்.



இசை நிகழ்ச்சியில் குழப்பம் விளைவித்த போதைக் கும்பல் கைது!
[Tuesday 2024-04-16 05:00]

யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை போதையில் குழப்பங்களை ஏற்படுத்தி மோதலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 7 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.



வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து ஆராய்வு!
[Tuesday 2024-04-16 05:00]

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து ஆராய்வதற்காக குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.



ஒவ்வொரு மாதமும் 30 இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்!
[Tuesday 2024-04-16 05:00]

இலங்கையில் ஒவ்வொரு மாதமும் 25 முதல் 30 இணையத்தளங்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாவதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றம் தெரிவித்துள்ளது. இதன் பிரதம தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த இதனைத் தெரிவித்துள்ளார்.



போதைப் பொருளுக்காக திருட்டில் ஈடுபட்ட இளைஞன் கைது!
[Tuesday 2024-04-16 05:00]

யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் போதைப்பொருள் பாவனைக்காகத் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார். யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.


Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா