Untitled Document
April 23, 2024 [GMT]
வடமாகாணசபையின் மேலதிக ஆசன சர்ச்சை
[Friday 2017-08-04 18:00]


வட மாகாணசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைத்த  மேலதிக ஆசனத்துக்கு, ஜெயசேகரம் நியமிக்கப்பட்டமைக்கான சூழல் குறித்து  இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

வட மாகாணசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைத்த மேலதிக ஆசனத்துக்கு, ஜெயசேகரம் நியமிக்கப்பட்டமைக்கான சூழல் குறித்து இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

  

மேற்படி விடயத் தலைப்பிலான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் திரு.த.சித்தார்த்தன் அவர்கள் எமக்கும் ஏனையோருக்கும் பிரதியிட்டு தங்களுக்கு மின்னஞ்சல் மூலம் எழுதிய 2017.07.28ஆம் திகதி அனுப்பிய கடிதம் சார்பானது. இக் கடிதம் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

முதலிலே நாமோ இலங்கைத் தமிழரசுக் கட்சியோ, திரு. சித்தார்தன் அவர்களும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியும் எமக்கு வழங்கி வரும் ஒத்துழைப்பையும் ஆதரவையும் மதிக்கின்றோம் என்பதைக் கூறிக் கொள்ள விரும்புகிறோம்.

வடக்கு மாகாணசபைத் தேர்தல் முடிந்த பின்பு நடைபெற்ற கூட்டமைப்புக் கட்சிகளுக்கிடையில் நடைபெற்ற கலந்துரையாடல்களின் இறுதியில் மேலதிகமாகக் கிடைக்கப் பெற்ற (போனஸ்) ஆசனப் பகி;ர்வு தொடர்பாகப் பரிசீலிக்கப்பட்டு அதில் ஒரு ஆசனம் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கப்(முஸ்லீம்) பிரதிநிதிக்கு வழங்குவதென முடிவு செய்யப்பட்டது. அதில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் ஒத்துழைப்பு உதவியாகவிருந்தது.

எஞ்சிய இரண்டாவது ஆசனம் தொடர்பாக திரு.வீ.ஆனந்தசங்கரி அவர்களின் பெயர் முன்வைக்கப்பட்ட போது அது பற்றிய உடன்பாடு எட்டப்படாத நிலையில் திரு.ந.சிறிகாந்தா அவர்களின் ஆலோசனையின் பெயரில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிட்ட பெண் வேட்பாளர் திருமதி மேரி கமலா அவர்களை சுழற்சி முறையில் முதலாவதாக நியமிப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது. அவரது சமூகப் பின்புலத்தில் மாகாணசபை நிதியைப் பயன்படுத்த அவகாசம் தரவேண்டும் என்பதற்காக ஆறு மாதம் வரை உறுப்புரிமை நீடிக்கப்பட்டது. அதற்கு எல்லோரும் இணங்கியிருந்தனர்.

இதனையடுத்து ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் போட்டியிட்ட, வடக்கில் மலையகத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் திரு.எம்.பீ.நடராஜ் என்பவரை நியமிப்பது என்றும் தனக்கு ஒதுக்கப்பட்ட மாகாணசபை நிதியை பயன்படுத்தி முடிக்காத நிலையில் மேலும் மூன்று மாதமேனும் உறுப்பினராயிருக்கும் அவகாசம் தரக் கோரியதாலும்; மூன்று மாத அவகாசம் வழங்கப்பட்டது. அடுத்து 'ரெலோ'வுக்கு ஒரு வருடம் வழங்குவதென ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவாறு வழங்கப்பட்டது.

அந்தக்கால அவகாசத்தில் வன்னி மாநிலத்தில் திரு.கமலேஸ்வரனை நியமிக்கத் தீர்மானம் இருந்த பொழுது பொதுத் தேர்தலில் மருத்துவ கலாநிதி. சிவமோகன் வெற்றிபெற்றதால் திரு.கமலேஸ்வரன் மாகாணசபைக்குத் தெரிவு பெற்றதால் நாம் அவரை சுழற்சி முறையில் நியமிக்கத் தேவையிருக்கவில்லை.

அவ்வேளை திரு.சிவகரன் நியமிக்கப்பட எமது கட்சி நிர்வாகத்தினால் நடவடிக்கை எடுத்த பொழுதும் ஏற்கனவே தீர்மானித்;தது போல திரு. மயூரனுக்கே நியமனம் வழங்கப்பட்டது. இறுதி நியமனத்தில் முன்பே தீர்மானித்தவாறு திரு. சிவகரன் நியமிக்கப்படவிருந்த போது அந்த நியமனம் அவர்; மீது ஒழுங்கு நடவடிக்கை காரணமாக வழங்கப்பட்டிருக்கவில்லை. அப்பொழுதும் புளொட் எந்தக் கோரிக்கையையும் முன் வைக்கவில்லை.

இறுதியாக நியமிக்கப்படும் உறுப்பினருக்கு ஒன்றரை ஆண்டுகாலம் கொடுப்பது என்று ஏற்கனவே எடுத்த தீர்மானத்தின் படி தான் தமிழரசுக் கட்சிக்கு உரித்தான திரு.சிவகரன் இடத்திற்கு இறுதி நியமனத்திற்கு திரு.ஜெயசேகரம் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நீண்ட காலம் தமிழரசுக் கட்சிக்காரராகவும் வர்த்தக சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி மாகாணசபைத் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தபடியாலும் திரு.ஜெயசேகரம் தற்போது நியமிக்கப்;பட்டிருக்கின்றார்.

ஆக எஞ்சிய ஒன்றரை வருட காலத்திற்கு மன்னார் மாவட்டத்தின் தமிழரசுக் கட்சி வேட்பாளரை நியமிப்பது என்றுமே தீர்மானிக்கப்பட்டதேயன்றி நாமறிந்த வரையில் இறுதியான ஐந்தாவது வருடம் புளொட் அமைப்பிற்கு வழங்கப்படுவதாக முடிவெடுத்ததாகத் தெரியவில்லை. இதுவே உண்மை நிலையாகும்.

திரு.செ.மயூரனின் பதவிக்காலம் 01.07.2017 ஆம் திகதி நிறைவு பெறுவதாக இருந்த போதும் அவர் முழு ஜுலை மாதமும் உறுப்பினராக செயற்பட பேரவைத் தலைவரால் ஏற்பாடு செய்யப்பட்டது. திரு.மயூரன் உறுப்பினருக்கு அந்தச் சந்தர்ப்பம் தெரிந்தேயிருந்தது. வடக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதங்களுக்கும் உரித்துடையவரானார்.

இந்த ஆசனப் பங்கீட்டில் முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கு ஆசனம் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இதனடிப்படையிலேயே யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளர் திரு.இ.ஜெயசேகரனின் பெயர் முன்மொழியப்பட்டு 25.05.2017ஆம் திகதிய வர்த்தமானி பிரசுரம் மூலம் நியமிக்கப்பட்டிருக்கிறது.

திரு. ஜெயசேகரன் அவர்களுடைய குடும்பம் ஒரு பாரம்பரியம் வாய்ந்த தமிழரசுக் கட்சிக் குடும்பமாகும். அவரைத் தேர்தலில் நிறுத்துகையில் அவர் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் உறுப்பினராக இருக்கவில்லலை என்பதை அக்கட்சியினரே ஒப்புக் கொள்வர் . எனவே அந்தக் கட்சிக்கு இரண்டாவது ஆசனம் வழங்கப்படுகின்றது என்ற கருத்தப் பொருத்தமற்றது.

தேர்தலில் இவ்வாறான நிலை எழுதுவது சாதரணமாக காணப்படுகின்றது. உதாரணத்திற்கு தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் திரு பா. கஜதீபன், திரு சித்தார்தனுடன் உடன்பட்டவாறு பொதுவாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். முல்லைத்தீவில் திரு.கனகசுந்தரசாமி தமிழரசுக் கட்சியைச் சார்ந்தவராயினும் அவரை 'ரெலோ' தேர்ந்து தமக்குக் கிடைத்த வேட்பாளராக நியமித்தது. அவர் மறைந்த பொழுது 'ரெலோ'வின் தலைமை அடுத்து தங்கள் சார்பு வேட்பாளருக்கே இடம் தரவேண்டுமென வற்புறுத்தியது. இதனால் பிரச்சினைக்குத் தீர்வு காண இணக்கமில்லாததால் தமிழரசுக் கட்சிப் பொதுச் செயலாளர் 'ரெலோ'வுக்குச் சாதகமாக நியமனத்தைச் செய்யாமல் திரு.க. சிவநேசனை நியமிப்பதற்கு வழிவிட்டிருந்தார். இதனையும் வலிந்து குற்றமாகச் செல்லலாமா?

அடுத்து 'புளொட்' தலைமை தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவப் பண்புகள் தொடர்பிலும் விமர்சனத்துடன் கருத்துரைத்துள்ளது. நல்லவை நல்லதாக இருக்கட்டும். இவ் விமர்சனங்கள் பொருத்தமற்றவை ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. இச்சந்தர்ப்பத்தில் ஏனைய கூட்டமைப்புப் பங்காளிக் கட்சிகள் தலைமைப் பண்புகள் பற்றி நாம் தற்போது விமர்சிக்க விரும்பவில்லை.

முல்லைத்தீவில் வடமாகாண சபை அமைச்சராக வர வேண்டுமென மாகாணசபை உறுப்பினர்கள் திரு. ஜெகநாதனைப் பிரேரித்த போதும் அவர் காலமானதன் பின் அந்த இடம் தமிழரசுக் கட்சிக்குத்தான் வரவேண்டுமென தமிழரசுக் கட்சி வாதாடியிருக்கவில்லை என்பதையும் நினைவூட்டுகின்றோம்.

கூட்டமைப்புப் பதிவு செய்யும் விடயத்தில் பதிவுக்குப் பதிலாகப் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட இணங்கிய நான்கு கட்சிகளும் நடவடிக்கையெடுத்த பொழுது தமிழரசுக் கட்சி கைச்சாத்திட முன்வந்தபொழுதும் அதனை கூட்டுக் கட்சிகளே தாமதப்படுத்தி விட்டதால் அவ்வுடன்படிக்கை நடைமுறைக்கு வரவில்லை.இருப்பினும் இப்பொழுதும் அந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கை பொருத்தமானதாக இருக்கும் என நம்புகிறோம்.

எவ்வாறெனினும் 'புளாட்' தலைமையின் கோரிக்கைக்குத் தீர்வு காணும் வகையில் ஒரு புதிய அணுகல் முறையை கடைப்பிடிக்கலாம் என நம்புகிறோம். நாம் நேரில் சந்தித்துப் பேசுவதன் மூலம் முரண்பாடுகளிருப்பின் தீர்த்துக் கொள்ள முடியும் எனவும் நம்புகிறோம். வரலாற்றில் தமிழரசுக் கட்சி காத்து வந்திருக்கின்ற பொறுமை, தலைமையின் ஜனநாயகப் பண்புகள், பொறுப்புக்கள் பற்றியும் மக்கள் அறிவார்கள் என்பதையும் நினைவூட்ட விரும்புகிறோம்.

  
   Bookmark and Share Seithy.com



தையிட்டியில் தொடரும் திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம்! Top News
[Tuesday 2024-04-23 16:00]

யாழ்ப்பாணம் - தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் நேற்று ஆரம்பமாகி இன்றும் நடைபெறுகிறது.



பாக்கு நீரிணையை நீந்திக் கடக்க முயன்ற முதியவர் மாரடைப்பால் மரணம்!
[Tuesday 2024-04-23 16:00]

பாக்கு நீரிணையை கடக்க முயன்ற இந்தியாவைச் சேர்ந்த முதியவர் நடுக்கடலில் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்தார்.



வலம்புரி ஆசிரியரிடம் விசாரணை- யாழ்.ஊடக அமையம் கண்டனம்!
[Tuesday 2024-04-23 16:00]

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் முன்னணி நாளிதழ்களுள் ஒன்றான வலம்புரி நாளிதழது பிரதம ஆசிரியர் ந.விஜயசுந்தரம் வடக்கு ஆளுநரின் முறைப்பாட்டின் பேரில் இன்று திங்கட்கிழமை இலங்கை காவல்துறையின் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் யாழ்.ஊடக அமையம் தனது வன்மையான கண்டனங்களை பதிவு செய்துகொள்கின்றது.



சஜித் - அனுர விவாதம் - நாள் குறித்தது தேசிய மக்கள் சக்தி!
[Tuesday 2024-04-23 16:00]

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் நடைபெறவுள்ள விவாதத்திற்கான திகதிகளை தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.



தியத்தலாவ கார் பந்தய விபத்து - இராணுவ விசாரணைக்கு உத்தரவு!
[Tuesday 2024-04-23 16:00]

தியத்தலாவ ஃபொக்ஸ் ஹில் கார் பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்து தொடர்பில் விசாரணை நடத்த ஏழு பேர் கொண்ட குழுவொன்றை நியமிக்க இலங்கை இராணுவம் தீர்மானித்துள்ளது. மேஜர் ஜெனரல் ஒருவரின் தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்படவுள்ளதாக மேஜர் ஜெனரல் ரசிக குமார தெரிவித்துள்ளார்.



பதவி விலகுகிறார் மைத்திரி?
[Tuesday 2024-04-23 16:00]

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராஜினாமா செய்யத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.



ஆறுகால்மடத்தில் பட்டா வாகனம் மோதி முச்சக்கரவண்டி சேதம்! - சாரதி படுகாயம்.
[Tuesday 2024-04-23 16:00]

யாழ்ப்பாணம் - ஆறுகால்மடம் சந்தியில் இன்று முச்சக்கர வண்டி பட்டாரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.



புங்குடுதீவு கண்ணகியம்மனின் சேவை 16 இலட்சம் ரூபாவுக்கு ஏலம்!
[Tuesday 2024-04-23 16:00]

புங்குடுதீவு கண்ணகியம்மன் ஆலய தேர்த்திருவிழாவில், அம்மனின் சேலை 16 இலட்சம் ரூபாவுக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.



நிறுத்தாமல் சென்ற முச்சக்கரவண்டி மீது சூடு - இருவர் பலி!
[Tuesday 2024-04-23 16:00]

மொரகஹஹேன- மிரிஸ்வத்த பிரதேசத்தில் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற முச்சக்கர வண்டி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.



தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் ஒத்திவைப்பு!
[Tuesday 2024-04-23 05:00]

இன்று நடைபெறவிருந்த இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.



தியத்தலாவ விபத்து - இராணுவம் கவலை!
[Tuesday 2024-04-23 05:00]

தியத்தலாவை பொக்ஸ் ஹில் (fox hill 2024) பந்தய மைதானத்தில் இடம்பெற்ற விபத்து குறித்து இராணுவ ஊடகப் பிரிவு கவலை தெரிவித்துள்ளது.



5 ஆண்டுகளில் 25 ஆயிரம் பேர் இராணுவத்தை விட்டு ஓட்டம்!
[Tuesday 2024-04-23 05:00]

கடந்த ஐந்து வருட காலப் பகுதியில் சுமார் 25,000 பேர் இராணுவ சேவைக்கு சமூகமளிக்கவில்லை எனவும், விடுமுறை பெறாத நிலையிலேயே அவர்கள் சென்றுள்ளதாகவும் இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



நிரம்புகிறது திறைசேரி! - வரி, சுங்க வருவாய்கள் அதிகரிப்பு.
[Tuesday 2024-04-23 05:00]

2024 ஆம் ஆண்டின்முதல் காலாண்டில் எதிர்பார்த்த அரச வருமானத்தை விட அதிகமாக கிடைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.



ஊடகவியலாளர் சமுதித்த இன்று சிஐடி முன் ஆஜர்!
[Tuesday 2024-04-23 05:00]

மூத்த ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரம இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகவுள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு பிரச்சினை தொடர்பாக அவர் ஒளிபரப்பிய நிகழ்ச்சி ஒன்று தொடர்பிலேயே அவருக்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் அழைப்பாணை விடுத்துள்ளதாக சமுதித்த சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.



மொட்டுக்குத் துரோகம் - பதவி இழப்பார் விஜயதாச?
[Tuesday 2024-04-23 05:00]

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக பதவியேற்ற நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியலமைப்பின் பிரகாரம் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்தார்.



ரம்புக்வெல்லவின் பிணை மனு மீண்டும் நிராகரிப்பு!- மே 6 வரை விளக்கமறியல்.
[Tuesday 2024-04-23 05:00]

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 9 சந்தேகநபர்களும் எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போதே மாளிகாகந்த நீதிவான் லோசினி அபேவிக்ரம இந்த உத்தரவை பிறப்பித்தார்.



மார்ச்சில் பணவீக்கம் பாதியாக சரிவு!
[Tuesday 2024-04-23 05:00]

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் கடந்த மார்ச் மாதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



அடையாள அட்டை பெறுவதற்கான காலஅவகாசம் நீடிப்பு!
[Tuesday 2024-04-23 05:00]

பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் இதுவரை தேசிய அடையாள அட்டையைப் பெற முடியாத 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அதனை பெற்றுக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.



சுதந்திரக் கட்சித் தலைவர் பதவியை நிராகரிக்கிறார் சரத் பொன்சேகா!
[Tuesday 2024-04-23 05:00]

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவி தன்னிடம் வழங்கப்பட்டாலும் அதனைப் பொறுப்பேற்பதற்குத் தயாரில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.



வலம்புரி பிரதம ஆசிரியரிடம் பொலிசார் விசாரணை!
[Monday 2024-04-22 15:00]

வலம்புரி பத்திரிகையின் பிரதம ஆசிரியருக்கு எதிராக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸினால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டதையடுத்து வலம்புரியின் பிரதம ஆசிரியர் பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.


Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா