Untitled Document
April 19, 2024 [GMT]
தண்ணீரில் மூழ்கிய மகளை காப்பாற்றி விட்டு உயிரை விட்ட தந்தை!
[Saturday 2017-08-05 09:00]

தண்ணீரில் மூழ்கிய தனது மகளை காப்பாற்றும் முயற்சியில் தந்தை உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பிரபல தொழிலதிபராக இருப்பவர் Simon Pearson (47), இவர் மனைவி Emma (43). இவர்களுக்கு Lily (10) என்ற மகளும் Monty (6) என்ற மகனும் உள்ளனர்.விடுமுறையை மகிழ்ச்சியாக கழிக்கும் நோக்கில் Simon தனது குடும்பத்தினரை அழைத்து கொண்டு தெற்கு இத்தாலிக்கு சென்றுள்ளனர்.

தண்ணீரில் மூழ்கிய தனது மகளை காப்பாற்றும் முயற்சியில் தந்தை உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பிரபல தொழிலதிபராக இருப்பவர் Simon Pearson (47), இவர் மனைவி Emma (43). இவர்களுக்கு Lily (10) என்ற மகளும் Monty (6) என்ற மகனும் உள்ளனர்.விடுமுறையை மகிழ்ச்சியாக கழிக்கும் நோக்கில் Simon தனது குடும்பத்தினரை அழைத்து கொண்டு தெற்கு இத்தாலிக்கு சென்றுள்ளனர்.

  

இவர்களுடன் Simon-ன் மாமனார் Anthony McGregor-ம் உடன் சென்றுள்ளார்.அங்குள்ள கடலில் Simon, Lily, Anthony ஆகிய மூன்று பேரும் சேர்ந்து குளித்துள்ளனர்.அப்போது திடீரென மூவரும் கடலில் மூழ்க தொடங்கினார்கள். Anthony சாமர்த்தியமாக தண்ணீரில் நீந்தி வெளியேறினார்.Simon-க்கு நீச்சல் தெரிந்திருந்த நிலையில் தனது மகள் Lily-ஐ காப்பாற்றும் முயற்சியில் அவர் ஈடுபட்டார்.தண்ணீரில் தத்தளித்த நிலையில் தனது கையை கெட்டியாக பிடித்து கொள் என மகளிடம் Simon கூறியுள்ளார்.அந்த சமயத்தில் அங்கிருந்த ஒருவர் Simon மற்றும் Lily-ஐ காப்பாற்ற நீரில் குதித்துள்ளார்.

ஆனால் அவரால் Lily-ஐ மட்டுமே காப்பாற்ற முடிந்தது. தண்ணீரின் வேகத்தை ஈடு கொடுக்க முடியாமல் Simon நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.சம்பவம் குறித்து Simon மனைவி Emma கூறுகையில், தனது உயிரை காட்டிலும் தனது மகளின் உயிரை காப்பாற்றவே இறுதி வரை Simon போராடியதாகவும், அன்பான கணவர் எனவும் தெரிவித்துள்ளார்.Simon-ன் பிரேத பரிசோதனை முடிவில் அவர் நுரையீரலில் அதிகளவு தண்ணீர் போயுள்ளது தெரியவந்துள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



அவுஸ்திரேலியர்கள் உடனடியாக வெளியேறுங்கள்: இஸ்ரேல் குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
[Friday 2024-04-19 16:00]

இஸ்ரேலின் பாதுகாப்பு நிலவரம் மிக வேகமானதாக மோசமானதாக மாறலாம் என்பதால் இஸ்ரேலில் உள்ள தனதுஅனைத்து பிரஜைகளையும் உடனடியாக வெளியேறுமாறு அவுஸ்திரேலியா வேண்டுகோள் விடுத்துள்ளது. வெளியேறுவது பாதுகாப்பான விடயம் என்றால் உடனடியாக வெளியேறுங்கள் என அவுஸ்திரேலியா வேண்டுகோள் விடுத்துள்ளது.



உக்ரைன் மீதான வெற்றிக்கு பிறகு ரஷ்யாவின் இலக்கு இந்த நாடு!
[Friday 2024-04-19 07:00]

உக்ரைன் மீது ரஷ்யா வெற்றியை பதிவு செய்தால், அதன் பின்னர் பால்டிக் நாடுகள் மீது விளாடிமிர் புடின் குறி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்கும் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை வரும் என தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் வீழ்ந்தால் ரஷ்யாவுடன் நேட்டோவின் கிழக்குப் பகுதி கடுமையான ஆபத்தில் சிக்கும் என்றே நிபுணர்கள் கருத்தாக உள்ளது.



ஈரானுக்கு எதிரான பதிலடியை கைவிடும் இஸ்ரேல்!
[Friday 2024-04-19 07:00]

ஈரான் தொடுத்த ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு கட்டாயம் பதிலடி உண்டு என கூறி வந்த இஸ்ரேல், தற்போது அதை கைவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானுக்கு எதிரான நடவடிக்கையை கைவிட்டதற்கு பரிசாக காஸா பகுதியில் ஹமாஸ் படைகளை மொத்தமாக அழிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



பரபரப்பான லண்டன் சாலையில் நடந்த பயங்கரம்!
[Friday 2024-04-19 07:00]

லண்டனில் பட்டப்பகலில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு பொதுமக்களிடையே ஒருவர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பதறவைத்துள்ள இந்த சம்பவத்தை அடுத்து, உயிருக்கு அஞ்சிய மக்கள் வாகனங்களில் பதுங்கியுள்ளதும் Tottenham பகுதியில் கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ளது.



1.3 மில்லியன் அமெரிக்கர்களை ஏமாற்றிய கனேடியர்!
[Thursday 2024-04-18 18:00]

கனேடியர் ஒருவருக்கு அமெரிக்க சிறையில் 10 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நீதிமன்றம் பல தசாப்தங்களாக நடந்த மோசடி வழக்கில், கனடா நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை இந்த வார தொடக்கத்தில் விதிக்கப்பட்டுள்ளது. 57 வயதான Patrice Runner என்ற நபர், 1994 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில், 1.3 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்களிடம் இருந்து சுமார் 17.5 கோடி($175 மில்லியன்) அமெரிக்க டொலர்களை மோசடி செய்த குற்றத்திற்காக தண்டனை பெற்றுள்ளார்.



2024 ஆம் ஆண்டின் உலகின் சிறந்த விமான நிலையங்கள்!
[Thursday 2024-04-18 18:00]

உலகின் சிறந்த விமான நிலையமாக தோஹாவின் ஹமாத் சர்வதேச விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பல வருடங்களாக உலகின் சிறந்த விமான நிலையம் என்ற அந்தஸ்தை தக்க வைத்திருந்த சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் அந்த அந்தஸ்தை இழந்திருக்கிறது. தற்போது இது உலகின் இரண்டாவது சிறந்த விமான நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த விமானத் துறை ஆலோசனை நிறுவனமான Skytrax நேற்று (17 ஏப்ரல்) ஜெர்மனியின் பிராங்ஃபர்ட்டில் (Frankfurt) நடந்த நிகழ்ச்சியில் இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.



கனடாவில் நிகழ்ந்த திரைப்படத்தை மிஞ்சிய திருட்டு சம்பவம்!
[Thursday 2024-04-18 18:00]

கனடா வரலாற்றிலேயே மிகப்பெரிய தங்கத் திருட்டு சம்பவம் என அழைக்கப்படும் சம்பவம் தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கனடா பொலிசார் தெரிவித்துள்ளனர். 2023ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி, சுவிட்சர்லாந்தின் சூரிச்சிலுள்ள வங்கி ஒன்றிலிருந்து கனடாவின் ரொரன்றோவுக்கு இரண்டு பார்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன.



ஈரானுக்கு பதிலடி கொடுக்க தயாராகும் இஸ்ரேல்!
[Thursday 2024-04-18 18:00]

ஈரானின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிடகமரூன் தெரிவித்துள்ளார். ஜெரூசலேத்திற்கான விஜயத்தின்போது வெளிவிவகார அமைச்சர் டேவிடகமரூன் இதனை தெரிவித்துள்ளார்.



கனடாவில் ஆசிய மாணவரின் துணிச்சல்!
[Thursday 2024-04-18 06:00]

கனடாவில் கொள்ளை சம்பவத்தை தடுக்க முயன்று கத்தியால் தாக்கப்பட்ட ஆசிய மாணவரின் மருத்துவ கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது அவருக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. கனடாவுக்கு புதியவரான Meraj Ahmed என்ற மாணவர் DoorDash உணவு விநியோக நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் மெராஜ் அகமது மற்றும் சக ஊழியர் ஒருவரும் கத்தியால் தாக்கப்பட்டு காயமடைந்தனர்.



பிரித்தானியாவுடன் மொத்த உறவையும் முறித்துக்கொண்ட இளவரசர் ஹரி!
[Thursday 2024-04-18 06:00]

பிரித்தானியாவில் குடியிருக்கும் வகையில், இனி இளவரசர் ஹரி நாடு திரும்ப வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் வெளியான ஆவணம் ஒன்று அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவின் கலிபோர்னியாவுக்கு குடிபெயர்ந்த ஹரி, தற்போது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் அங்கே வசித்து வருகிறார்.



இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலில் உயிர் தப்பிய 50 பேர்கள் தற்கொலை!
[Thursday 2024-04-18 06:00]

இஸ்ரேல் எல்லையில், நோவா இசை விழா படுகொலையில் இருந்து தப்பியவர்களில் 50க்கும் மேற்பட்டவர்கள் அடுத்தடுத்த மாதங்களில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. பாராளுமன்ற விவகார கூட்டத்தில் பேசிய ஒருவர், இந்த எண்ணிக்கை உண்மையில் அதிகமாக இருக்கலாம் என்றும், உயிர் தப்பியவர்கள் தற்போதும் தத்தளித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.



வானில் இருந்து விழுந்த மர்மப்பொருள்: புளோரிடாவில் நிகழ்ந்த சம்பவத்திற்கு பதில் கூறிய நாசா!
[Wednesday 2024-04-17 15:00]

புளோரிடாவில் உள்ள ஒரு வீட்டின் மீது மோதிய கனமான அந்த பொருள், சர்வதேச விண்வெளி நிலையத்தின் (ISS) ஒரு பகுதி என்பதை அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா (NASA) உறுதிப்படுத்தியுள்ளது. கென்னடி விண்வெளி மையத்தில் மாதிரியை ஆய்வு செய்த பின்னர், வீட்டின் மேல் விழுந்த அந்த உலோகப் பொருள் மார்ச் 2021 இல் சுற்றுப்பாதை புறக்காவல் நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்டது என நாசா தெரிவித்துள்ளது.



அரசாங்க ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கனடா அரசாங்கம்!
[Wednesday 2024-04-17 15:00]

கனடாவில் அரசாங்க ஊழியர்களுக்கு அதிர்ச்சி தகவல் ஒன்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் நான்கு ஆண்டு காலப் பகுதியில் சுமார் ஐயாயிரம் அரசாங்க ஊழியர்கள் பணிகளை இழக்க நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்தில் இந்த ஆட்குறைப்பு குறித்த யோசனை முன்மொழியப்பட்டுள்ளது.



சூரிய ஒளி தான் குழந்தைக்கு உணவு: ரஷ்ய நபரின் அதிர்ச்சி செயல்!
[Wednesday 2024-04-17 15:00]

சூரிய ஒளியை மட்டுமே கொடுத்து குழந்தையை பட்டினி போட்டு கொலை செய்த பிரபல சமூக ஊடக influencer-க்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் பிரபல சமூக ஊடக இன்ஃப்ளூயன்சர்(influencer) மாக்சிம் லியுட்டி(Maxim Lyutyi), தனது ஒரு மாத வயது மகன் கொஸ்மோவின் (Kosmos) துன்பகரமான காரணமாக அமைந்துள்ளார்.



கனடாவில் 40 பில்லியனை தொடும் பாதீட்டுப் பற்றாக்குறை!
[Wednesday 2024-04-17 15:00]

கனடாவில் இந்த நிதியாண்டக்கான பாதீட்டுப் பற்றாக்குறை தொகை 39.2 பில்லியன் டொலர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கம் நேற்றைய தினம் பாதீட்டுத் திட்டத்தை சமர்ப்பித்திருந்து. நிதி அமைச்சர் கிறிஸ்டியா ப்ரீலாண்ட் சமர்ப்பித்திருந்தார்.



இஸ்ரேலுக்கு கடும் மிரட்டல் விடுத்த ஈரான்!
[Wednesday 2024-04-17 03:00]

பழி தீர்ப்பது உறுதி என்று இஸ்ரேல் அறிவித்துள்ள நிலையில், இதுவரை பயன்படுத்தாத ஆயுதங்களால் அடிப்போம் என்று ஈரானும் பதிலுக்கு மிரட்டல் விடுத்துள்ளது. ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு பழி தீர்ப்போம், விட்டுவிட மாட்டோம் என இஸ்ரேல் இன்று தெரிவித்துள்ளது. இதனால் எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலை மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ளது.



பேய் மழைக்கு மூழ்கிய துபாய்: சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!
[Wednesday 2024-04-17 03:00]

ஐக்கிய அரபு அமீரகத்தின் பெரும்பாலான பகுதிகளில் காலநிலை மோசமடைந்துள்ள நிலையில், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் தீவிரத்தன்மை கொண்ட அபாயகரமான காலநிலை முன்னறிவிக்கப்பட்டதை அடுத்து, குடியிருப்பாளர்களை மிகவும் விழிப்புடன் இருக்குமாறு அதிகார சபை கேட்டுக் கொண்டுள்ளது.



பிரித்தானியாவில் கடும் தட்டுப்பாடு வரலாம்: விரிவான பின்னணி!
[Wednesday 2024-04-17 03:00]

காலநிலை நெருக்கடியால் ஏற்படும் வெள்ளம் மற்றும் வறட்சியால் பிரித்தானியர்கள் உட்கொள்ளும் பல உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பெருவெள்ளம், வறட்சி உட்பட பல்வேறு காரணங்களால் உலகளாவிய உணவு உற்பத்தி என்பது சிக்கலில் உள்ளது. பிரித்தானியாவில் வாங்கப்பட்டு நுகரப்படும் பல பொருட்கள் சரிவடைந்த விநியோகம் மற்றும் விலை அதிகரிப்பு அபாயத்தில் உள்ளன.



போரை நிறுத்த சீனாவுக்கு மறைமுக அழுத்தம் கொடுத்த ஜேர்மனி!
[Tuesday 2024-04-16 18:00]

ஜேர்மன் சேன்ஸலர் சீனாவுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், உக்ரைன் போரை நிறுத்த அழுத்தம் கொடுக்குமாறு மறைமுகமாக கேட்டுக்கொண்டார். ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ் சீனாவுக்கு அரசு முறைப்பயணமாக சென்றுள்ளார். பீஜிங்கில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்தித்த அவர், உக்ரைனை ரஷ்யா ஊடுருவியுள்ள விடயம் உலக பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறியுள்ளார். அதாவது, போரை நிறுத்துமாறு தனது நட்பு நாடான ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்குமாறு அவர் சீன ஜனாதிபதியை மறைமுகமாக கேட்டுக்கொண்டுள்ளார்.



இஸ்ரேல் ஈரான் பிரச்சினையில் சுவிட்சர்லாந்தின் முக்கிய பங்கு!
[Tuesday 2024-04-16 18:00]

இஸ்ரேல் ஈரான் பிரச்சினையில் சுவிட்சர்லாந்துக்கு ஒரு மறைமுகப் பங்கு உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், பல ஆண்டுகளாக, ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் தூதரக உறவுகளை பகிர்ந்துகொள்ள சுவிட்சர்லாந்துதான் பாலமாக செயல்பட்டுவருகிறதாம். அதாவது, ஈரானும் அமெரிக்காவும் நேரடியாக பேசிக்கொள்வதில்லை. அதற்கு பின்னால் ஒரு பெரிய வரலாறே உள்ளது.


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா