Untitled Document
April 23, 2024 [GMT]
முதலமைச்சருக்கு சவால் விடும் டெனீஸ்வரன்!
[Wednesday 2017-08-16 07:00]

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக செயற்படப் போகின்றாரா? அல்லது ஆளுநரின் காலில் மண்டியிடப் போகின்றாரா? என்று வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரனால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக செயற்படப் போகின்றாரா? அல்லது ஆளுநரின் காலில் மண்டியிடப் போகின்றாரா? என்று வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரனால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

  

'மாகாண சபை என்பது தமிழ் மக்களுக்கான தீர்வல்ல, இருந்தும் 2009 ம் ஆண்டு ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர், மாகாண சபை அலகையாவது எடுத்து வேலைத்திட்டங்களை நகர்த்த வேண்டிய கட்டாய தேவை காணப்பட்டதனாலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிட்டு, வடமாகாண சபையை உருவாக்கியிருந்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக வடமாகாண சபையில் நிலவிவரும் அரசியல் அசாதாரண சூழ்நிலைகளானது எமது மக்களின் சாதாரண இயல்பு வாழ்கையினை பாதிப்படையச் செய்ததோடு எதிர்கால அபிவிருத்திகளையும் வெகுவாக பாதிக்கும்.

அதேநேரம் ஒரு மாகாண சபையை சரியாக கொண்டு இயக்குவதற்கு அரசியல் அமைப்பின் 13வது திருத்தச் சட்டமும் மாகாண சபைகள் சட்டமுமே அச்சாணிகளாக காணப்படுகின்றது. குறிப்பாக மாகாண சபையில் பெரும்பான்மை ஆதரவினை பெற்ற ஒருவரை ஆளுநர், முதலமைச்சராக நியமிக்க முடியும், இவ்வாறே எமது தற்போதைய முதலமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார், அவ்வாறு நியமிக்கப்பட்ட முதலமைச்சர் தனக்கு விரும்பிய நான்கு அமைச்சர்களை மாகாண சபை உறுப்பினர்களிடமிருந்து தெரிவு செய்து அவர்களை அமைச்சுப் பொறுப்புக்கு நியமிக்குமாறு சிபாரிசு செய்து ஆளுநருக்கு அனுப்பி வைக்கவும் முடியும்.

அவ்வாறு அனுப்பி வைக்கப்படும் பொழுது ஆளுநரும் அதற்குரிய சத்தியப்பிரமாணங்கள் ஊடாக குறித்த நபர்களை அமைச்சர்களாக நியமிக்க கடமைப்பட்டுள்ளார். இங்கு அவ்வாறு நியமிக்கப்பட்ட அமைச்சர் தனது அமைச்சுப் பொறுப்பை எந்தெந்த சந்தர்ப்பங்களில் வறிதாக்க முடியும் என்பது பின்வரும் மூன்று விதமாக காணப்படுகின்றது.

1. குறித்த அமைச்சர் தனது சுயவிருப்பின் பேரில் அமைச்சு பதவியை இராஜினாமா கடிதத்தின் ஊடாக வறிதாக்க முடியும்.

2. குறித்த தேர்தலில் அவர் போட்டியிட்ட கட்சியானது சம்மந்தப்பட்ட அமைச்சரின் அடிப்படை மாகாணசபை உறுப்புரிமையினை ரத்து செய்கின்ற சந்தர்ப்பத்திலும் அவ் அமைச்சுப் பதவி வறிதாக்கப்படும். இது தவிர்ந்து,

3. முதலமைச்சர் குறித்த அமைச்சரை பதவியிலிருந்து நீக்குவதாயின், தகுந்த நியாயமான காரணங்களோடு மாகாண சபையில் பெரும்பான்மை ஆதரவோடு தனது சிபாரிசினை ஆளுநருக்கு அனுப்பி வைக்கின்ற சந்தர்ப்பத்தில் ஆளுநர் அக்கோரிக்கையை ஏற்று உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறான ஏற்பாடுகளே தற்பொழுது இருக்கின்ற அரசியல் அமைப்பு ரீதியாகவும், மாகாண சபைகள் சட்டத்தின் ஊடாகவும் அங்கீகரிக்கப்பட்ட சட்ட ஏற்பாடுகளாக இருக்கின்றது. தமிழரசுக் கட்சியின் செயலாளர் வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சரை கட்சியின் அடிப்படை உறுப்புரிமையில் இருந்து நீக்குவதாக தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றினை அனுப்பிவைக்கின்ற சந்தர்ப்பத்தில் அவரது பதவியானது வறிதாக்கப்படும்.அவ்வாறு தமிழரசுக் கட்சியினர் குறித்த நிலைப்பாட்டினை எடுப்பார்களா? என்ற கேள்வி இங்கு எழுகின்றது.

இவை இரண்டும் சாத்தியப்படாத சந்தர்ப்பத்தில் முதலமைச்சர் தகுந்த நியாயமான காரணத்தினை காட்டி மாகாண சபையில் பெரும்பான்மை ஆதரவினைப் பெற்று பதவியில் இருந்து நீக்குவாரா? என்ற கேள்வியும் எழுகின்றது. ஆகவே, இருக்கின்ற சட்ட ஏற்பாடுகளை நீதியரசராகிய முதலமைச்சர் அதற்கு அமைவாக நடக்கப் போகின்றாரா? அல்லது சட்ட முரணாக செயற்படப் போகின்றாரா? என்று பொறுத்திருந்து அவதானிக்க வேண்டியிருக்கின்றது.

அதே நேரம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வடமாகாண சபையில் முதலமைச்சரின் செயற்பாட்டில் அதிருப்தியுற்றவர்கள் அவரை நீக்குமாறு ஆளுநரிடம் சென்ற போது, ஆளுநரும் முதலமைச்சரினை நீக்குவதென்று சொன்னால் தகுந்த காரணங்களோடு மாகாண சபையில் பெரும்பான்மை ஆதரவினை நிரூபிக்குமாறும் கோரியிருந்தார். அவ்வாறானதொரு சூழ்நிலையே தற்பொழுது இங்கு காணப்படுகின்றது, இதற்கு அப்பால் அக் காலப்பகுதியில் ஒருசிலரினால் முதலமைச்சரை பின்கதவால் அனுப்புவதற்கு தென்பகுதி சிங்கள ஆளுநரோடு சிலர் கைகோர்த்துள்ளர்கள் என்ற பாரிய குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டிருந்தது.

தற்பொழுது முதலமைச்சர் இத்தகையதொரு இக்கட்டான சூழ்நிலையில், சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக செய்யப் போகின்றாரா? அல்லது ஆளுநரின் காலில் மண்டியிடப் போகின்றாரா? என்ற கேள்வியும் எழுகின்றது. ஆகவே தற்போதுள்ள இவ் அரசியல் அசாதாரண சூழ்நிலைகளை நீக்குவதற்கு முதலமைச்சர் சரியாக, நேர்த்தியாக சிந்தித்து, ஏனைய சுயநலத்தோடு வருகின்றவர்கள் மட்டில் விழிப்பாக இருந்து செயற்பட வேண்டும்.

அத்தோடு, எமது மாகாண சபையினை வினைத்திறனாக கொண்டு நடத்துவதற்கு இங்கு காணப்படும் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையினை புத்தி சாதுரியமானதாகவும், சட்டத்துக்கு அமைவாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிளவுபடாத வகையில் வெளிப்படையாகவும் எவ்வாறு கையாள்வார் என்பதில் தான் எதிர்கால வடமாகாண சபையின் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் மக்களின் அபிவிருத்தியும் தங்கியுள்ளது. அரசியலமைப்பின் 13ம் திருத்தச் சட்டம் மற்றும் மாகாண சபைகள் சட்டம் தொடர்பான மேலதிக பல ஏற்பாடுகள் அவ்வப்போது அமைச்சரினால் மக்களுக்கு தெளிவுபடுத்தப்படும் எனவும் குறித்த அறிக்யைில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



தையிட்டியில் தொடரும் திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம்! Top News
[Tuesday 2024-04-23 16:00]

யாழ்ப்பாணம் - தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் நேற்று ஆரம்பமாகி இன்றும் நடைபெறுகிறது.



பாக்கு நீரிணையை நீந்திக் கடக்க முயன்ற முதியவர் மாரடைப்பால் மரணம்!
[Tuesday 2024-04-23 16:00]

பாக்கு நீரிணையை கடக்க முயன்ற இந்தியாவைச் சேர்ந்த முதியவர் நடுக்கடலில் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்தார்.



வலம்புரி ஆசிரியரிடம் விசாரணை- யாழ்.ஊடக அமையம் கண்டனம்!
[Tuesday 2024-04-23 16:00]

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் முன்னணி நாளிதழ்களுள் ஒன்றான வலம்புரி நாளிதழது பிரதம ஆசிரியர் ந.விஜயசுந்தரம் வடக்கு ஆளுநரின் முறைப்பாட்டின் பேரில் இன்று திங்கட்கிழமை இலங்கை காவல்துறையின் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் யாழ்.ஊடக அமையம் தனது வன்மையான கண்டனங்களை பதிவு செய்துகொள்கின்றது.



சஜித் - அனுர விவாதம் - நாள் குறித்தது தேசிய மக்கள் சக்தி!
[Tuesday 2024-04-23 16:00]

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் நடைபெறவுள்ள விவாதத்திற்கான திகதிகளை தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.



தியத்தலாவ கார் பந்தய விபத்து - இராணுவ விசாரணைக்கு உத்தரவு!
[Tuesday 2024-04-23 16:00]

தியத்தலாவ ஃபொக்ஸ் ஹில் கார் பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்து தொடர்பில் விசாரணை நடத்த ஏழு பேர் கொண்ட குழுவொன்றை நியமிக்க இலங்கை இராணுவம் தீர்மானித்துள்ளது. மேஜர் ஜெனரல் ஒருவரின் தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்படவுள்ளதாக மேஜர் ஜெனரல் ரசிக குமார தெரிவித்துள்ளார்.



பதவி விலகுகிறார் மைத்திரி?
[Tuesday 2024-04-23 16:00]

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராஜினாமா செய்யத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.



ஆறுகால்மடத்தில் பட்டா வாகனம் மோதி முச்சக்கரவண்டி சேதம்! - சாரதி படுகாயம்.
[Tuesday 2024-04-23 16:00]

யாழ்ப்பாணம் - ஆறுகால்மடம் சந்தியில் இன்று முச்சக்கர வண்டி பட்டாரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.



புங்குடுதீவு கண்ணகியம்மனின் சேவை 16 இலட்சம் ரூபாவுக்கு ஏலம்!
[Tuesday 2024-04-23 16:00]

புங்குடுதீவு கண்ணகியம்மன் ஆலய தேர்த்திருவிழாவில், அம்மனின் சேலை 16 இலட்சம் ரூபாவுக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.



நிறுத்தாமல் சென்ற முச்சக்கரவண்டி மீது சூடு - இருவர் பலி!
[Tuesday 2024-04-23 16:00]

மொரகஹஹேன- மிரிஸ்வத்த பிரதேசத்தில் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற முச்சக்கர வண்டி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.



தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் ஒத்திவைப்பு!
[Tuesday 2024-04-23 05:00]

இன்று நடைபெறவிருந்த இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.



தியத்தலாவ விபத்து - இராணுவம் கவலை!
[Tuesday 2024-04-23 05:00]

தியத்தலாவை பொக்ஸ் ஹில் (fox hill 2024) பந்தய மைதானத்தில் இடம்பெற்ற விபத்து குறித்து இராணுவ ஊடகப் பிரிவு கவலை தெரிவித்துள்ளது.



5 ஆண்டுகளில் 25 ஆயிரம் பேர் இராணுவத்தை விட்டு ஓட்டம்!
[Tuesday 2024-04-23 05:00]

கடந்த ஐந்து வருட காலப் பகுதியில் சுமார் 25,000 பேர் இராணுவ சேவைக்கு சமூகமளிக்கவில்லை எனவும், விடுமுறை பெறாத நிலையிலேயே அவர்கள் சென்றுள்ளதாகவும் இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



நிரம்புகிறது திறைசேரி! - வரி, சுங்க வருவாய்கள் அதிகரிப்பு.
[Tuesday 2024-04-23 05:00]

2024 ஆம் ஆண்டின்முதல் காலாண்டில் எதிர்பார்த்த அரச வருமானத்தை விட அதிகமாக கிடைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.



ஊடகவியலாளர் சமுதித்த இன்று சிஐடி முன் ஆஜர்!
[Tuesday 2024-04-23 05:00]

மூத்த ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரம இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகவுள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு பிரச்சினை தொடர்பாக அவர் ஒளிபரப்பிய நிகழ்ச்சி ஒன்று தொடர்பிலேயே அவருக்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் அழைப்பாணை விடுத்துள்ளதாக சமுதித்த சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.



மொட்டுக்குத் துரோகம் - பதவி இழப்பார் விஜயதாச?
[Tuesday 2024-04-23 05:00]

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக பதவியேற்ற நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியலமைப்பின் பிரகாரம் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்தார்.



ரம்புக்வெல்லவின் பிணை மனு மீண்டும் நிராகரிப்பு!- மே 6 வரை விளக்கமறியல்.
[Tuesday 2024-04-23 05:00]

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 9 சந்தேகநபர்களும் எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போதே மாளிகாகந்த நீதிவான் லோசினி அபேவிக்ரம இந்த உத்தரவை பிறப்பித்தார்.



மார்ச்சில் பணவீக்கம் பாதியாக சரிவு!
[Tuesday 2024-04-23 05:00]

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் கடந்த மார்ச் மாதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



அடையாள அட்டை பெறுவதற்கான காலஅவகாசம் நீடிப்பு!
[Tuesday 2024-04-23 05:00]

பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் இதுவரை தேசிய அடையாள அட்டையைப் பெற முடியாத 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அதனை பெற்றுக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.



சுதந்திரக் கட்சித் தலைவர் பதவியை நிராகரிக்கிறார் சரத் பொன்சேகா!
[Tuesday 2024-04-23 05:00]

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவி தன்னிடம் வழங்கப்பட்டாலும் அதனைப் பொறுப்பேற்பதற்குத் தயாரில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.



வலம்புரி பிரதம ஆசிரியரிடம் பொலிசார் விசாரணை!
[Monday 2024-04-22 15:00]

வலம்புரி பத்திரிகையின் பிரதம ஆசிரியருக்கு எதிராக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸினால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டதையடுத்து வலம்புரியின் பிரதம ஆசிரியர் பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.


NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா