Untitled Document
March 28, 2024 [GMT]
டெனீஸ்வரனை கட்சியில் இருந்து இடைநிறுத்தியது ரெலோ! - முதலமைச்சருக்கு எதிராக செயற்பட்டதால் நடவடிக்கை
[Monday 2017-08-21 07:00]

வடக்கு மாகாண  முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக செயற்பட்ட, அமைச்சர் டெனீஸ்வரன் கட்சியின் அடிப்படை உறுப்புரிமையில் இருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரெலோவின் பொதுச்செயலாளர் சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக செயற்பட்ட, அமைச்சர் டெனீஸ்வரன் கட்சியின் அடிப்படை உறுப்புரிமையில் இருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரெலோவின் பொதுச்செயலாளர் சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.

  

வவுனியாவில் அமைந்துள்ள ரெலோ காரியாலயத்தில் வடக்கு மாகாண அமைச்சர் நியமனம் மற்றும் டெனீஸ்வரன் விவகாரம் தொடர்பான நேற்று மதியம் 2.30 தொடக்கம் இரவு 10 மணி வரை கலந்துரையாடல் நடைபெற்றது. ரெலோ தலைமைக்குழுக் கூட்டத்தின் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே ரெலோ அமைப்பின் செயலாளர் சிறிகாந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ரெலோ இயக்கத்தின் தலைமைக்குழு நேற்று கூடி விவாதித்து எங்கள் கட்சி சார்பில் வடமாகாண சபை அமைச்சரவையில் டெனீஸ்வரன் தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுத்திருக்கின்றது. ஏற்கனவே, அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஏன் அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கு காரணம் இருந்தால் தெரிவிக்குமாறு அவரிடம் கோரப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த வாரம் தலைமைக்குழு கூட்டத்திற்கு அவர் அழைக்கப்பட்ட நிலையில் வருகை தந்திருந்தார். கட்சி கட்டுப்பாட்டை மீறி அதாவது கட்சியின் அனுமதி பெறாமலும், அங்கீகாரம் பெறாமலும், கட்சியுடன் ஆலோசிக்காமலும், தன்னிச்சையாக வடமாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பம் இட்டதன் மூலம் அவர் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறியிருந்தார். இது தொடர்பில் அவருக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்ற கேள்விக்கும் அவர் பதிலளித்திருந்தார்.

நாங்கள் கருத்து பரிமாற்றங்களுக்கு பின்னர் அவருக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கினோம். ஏற்கனவே கூட்டமைப்பின் நான்கு கட்சித் தலைவர்களும், முதலமைச்சர் விக்னேஸ்வரனும், கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தனும் யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடியுள்ளனர். இதன்பின்னர் எடுத்துக் கொண்ட முடிவின் பிரகாரம் வடமாகாண முதலமைச்சர் தனது தலைமையிலான மந்திரி சபையை மீள அமைப்பதற்கு ஏதுவாக டெனீஸ்வரன் இராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு கட்சியின் தீர்மானத்திற்கு அமைவாக இராஜினாமா செய்தால் அவருக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கையை இலகுவாக கொண்டு வரப்படும் என்றும் முடிவு எடுக்கப்பட்டு அவருக்கு தெரியப்படுத்தப்பட்டது.

இதற்கான கால அவகாசமும் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. அடுத்து வரும் ஒரு நாளில் அந்த முடிவை அறிவிக்குமாறும் கோரப்பட்டிருந்தார். அதற்கு அமைவாக மறுநாள் இரவு கட்சியினுடைய தலைவர் செல்வம் அடைக்கலநாதனுடன் தொடர்பு கொண்டு தான் இராஜினாமா செய்யும் நிலைப்பாட்டில் இல்லை என்பதை தெரிவித்திருந்தார். பின்னர் பத்திரிகை மாநாட்டை நடத்தியும் அதனை தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மீண்டும் கட்சியின் தலைமைக் குழு கூடியது.

அவர் தொடர்பான ஒழுங்கு விவகார நடவடிக்கையை விரிவாக ஆராய்ந்து ஈற்றிலே ஒரு முடிவுக்கு வந்திருக்கின்றோம். எதிர்வரும் ஆறு மாதங்களுக்கு டெனீஸ்வரன் கட்சியின் அடிப்படை உறுப்புரிமையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். இந்த ஆறு மாத காலம் அவருக்கு இடைக்கால தடை நடைமுறையில் இருக்கும். ஆறு மாத கால முடிவில் கட்சி மீண்டும் அவருடைய விவகாரத்தை எடுத்து இறுதி தீர்மானம் ஒன்றினை எடுக்கும்.

ஆகவே அவருக்கு எதிராக கட்சியினால் தீர்மானிக்கப்பட்டிருக்கும் கட்சியின் அடிப்படை உறுப்புரிமையில் இருந்து இடைநிறுத்தும் முடிவு ஆறு மாதகாலம் நடைமுறையில் இருக்கும் என கூறினார்.

இந்தச் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண சபை உறுப்பினர்களான விந்தன் கனகரட்ணம், குணசீலன், சிவாஜிலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோதரராதலிங்கம், கட்சி தலைமைக் குழு உறுப்பினர்களான ஹென்றி மகேந்திரன், சிறீகாந்தா, கிரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

  
   Bookmark and Share Seithy.com



ஞானசார தேரருக்கு 4 வருட கடூழியச் சிறைத்தண்டனை! Top News
[Thursday 2024-03-28 16:00]

குரகல விகாரையில் இஸ்லாமிய மதத்திற்கு எதிராக வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக பொதுபல சேனா பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.



முன்னாள் போராளி பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது!
[Thursday 2024-03-28 16:00]

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்த குற்றச்சாட்டின் பேரில் வவுனியாவைச் சேர்ந்த அரவிந்தன் என்ற முன்னாள் போராளி பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.



இலங்கை நாணயத்தின் மதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு!
[Thursday 2024-03-28 16:00]

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295 ரூபாய் 54 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 305 ரூபாய் 33 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.



இலங்கையின் ஆட்சி முறையில் மாற்றங்கள் வேண்டும்!
[Thursday 2024-03-28 16:00]

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வை காண்பதற்கு இலங்கையின் ஆட்சி முறையில் மாற்றங்கள் இடம்பெறவேண்டும் என இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை தெரிவித்துள்ளது.



சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவன் விபத்தில் பலி!
[Thursday 2024-03-28 16:00]

மட்டக்களப்பு - பெரியகல்லாறு பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில், இம்முறை சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.



அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!
[Thursday 2024-03-28 16:00]

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐந்து பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



புன்னாலைக்கட்டுவன் விபத்தில் முதியவர் பலி!
[Thursday 2024-03-28 16:00]

யாழ்ப்பாணம் -புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நேற்று மாலை இடம் பெற்ற வீதி விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிறிய ரக உழவு இயந்திரமொன்றில் புல் ஏற்றுக் கொண்டிருந்த போது லொறி ஒன்று மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பாக சுன்னாகம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



ஜனாதிபதி ரணிலுக்கு மக்களாணை இல்லை!
[Thursday 2024-03-28 16:00]

நாடாளுமன்றத்தின் ஊடாக அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதிக்கு மக்களாணை கிடையாது என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.



பணவீக்கம் சடுதியாக குறைந்தது!
[Thursday 2024-03-28 16:00]

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையில் இலங்கையின் பணவீக்கம் மார்ச் மாதத்தில் 0.9 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது முந்தைய மாதத்தில் 5.9 சதவீதமாக பதிவாகியிருந்தது.



வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட யுவதி!
[Thursday 2024-03-28 16:00]

வவுனியா, சமனங்குளம் பகுதியில் இருந்து 23 வயது யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம் பொலிஸார் இன்று தெரிவித்தனர்.



தனிநபரின் மாதாந்த செலவு அதிகரிப்பு!
[Thursday 2024-03-28 16:00]

தனிநபர் ஒருவரின் மாதாந்த செலவு அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.



பசிலின் பதவி நாமல் வசமானது!
[Thursday 2024-03-28 16:00]

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார். அக்கட்சியின் நிறைவேற்று சபை கூட்டம் நேற்று பிற்பகல் கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க இதை தெரிவித்தார்.



முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் விபத்தில் பலி!
[Thursday 2024-03-28 16:00]

வவுனியா, ஓமந்தையில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் மரணமடைந்துள்ளார்.



அரிசி, பெரிய வெங்காயத்திற்கான விசேட பண்ட வரி குறைப்பு!
[Thursday 2024-03-28 16:00]

அரிசி மற்றும் பெரிய வெங்காயத்திற்கான விசேட பண்ட வரி இன்று முதல் குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி ஒரு கிலோ கிராம் அரிசிக்கு 65 ரூபாவாக இருந்த விசேட பண்ட வரி நேற்று முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதி வரை ஒரு ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.



இந்திய மீனவர்கள் மூவருக்கு சிறைத்தண்டனை!
[Thursday 2024-03-28 16:00]

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 36 தமிழக கடற்தொழிலாளர்ககளில் மூவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் , ஏனைய 33 பேருக்கும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.



வட, கிழக்கில் வழிபாட்டுத்தலங்களை இலக்கு வைத்த காணி அபகரிப்புகளால் பதற்றம் அதிகரிப்பு!
[Tuesday 2024-03-26 18:00]

இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்ந்தும் கரிசனைக்குரியதாகவே காணப்படுகின்றது. நாட்டின் வட, கிழக்கு மாகாணங்களில் காணி அபகரிப்புக்கள் அதிகரித்து வருவதுடன், சிலவேளைகளில் அவை மத வழிபாட்டுத்தலங்களை இலக்கு வைத்தவையாகக் காணப்படுகின்றன. இவ்வாறான செயற்பாடுகள் சமூகங்களுக்கு இடையில் பதற்றத்தைத் தோற்றுவித்துள்ளன என்று பிரிட்டனின் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம் தெரிவித்துள்ளது.



கீரிமலையில் காணி அபகரிப்பு முயற்சி - உரிமையாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் அளவீடு இடைநிறுத்தம்! Top News
[Tuesday 2024-03-26 18:00]

யாழ்ப்பாணம் - கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி நடவடிக்கைக்காக சுவீகரிக்கும் அடிப்படையில் அளவீடு செய்வதற்கு நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் இன்று காலை 10 மணியளவில் வருகை தந்திருந்தனர்.



இலங்கை நோக்கி புறப்பட்ட “டாலி“யே அமெரிக்க பாலத்தை தகர்த்தது!
[Tuesday 2024-03-26 18:00]

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் அமைந்துள்ள பால்டிமோர் பாலம் மீது சரக்கு கப்பல் ஒன்று ​மோதியதில் குறித்த பாலம் இடிந்து வீழ்ந்துள்ளது. குறித்த சரக்கு கப்பல் இலங்கை நோக்கிச் சென்ற கப்பல் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.



அக்குபஞ்சர் சிகிச்சை பெற்றவர் கிருமித் தொற்று ஏற்பட்டு மரணம்!
[Tuesday 2024-03-26 18:00]

அக்குபஞ்சர் சிகிச்சை பெற்றுக்கொண்ட யாழ் அச்சுவேலி கிழக்கு பகுதியை சேர்ந்த மாணிக்கம் சற்குணராஜா (வயது 64) என்பவர் கிருமித் தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.



மைத்திரியின் வாக்குமூலம் - பொய்த்தகவல்கள் பரவுவதாக சுதந்திரக் கட்சி குற்றச்சாட்டு!
[Tuesday 2024-03-26 18:00]

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு வழங்கிய வாக்குமூலம் தொடர்பில் பிரதான ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பொய்யான மற்றும் திரிபுபடுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகி வருவதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. இது போன்ற தவறான மற்றும் திரிபுபடுத்தப்பட்ட அறிக்கைகளை கண்டிப்பதாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.


Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா