Untitled Document
April 24, 2024 [GMT]
என் வலிகளை பறை மூலமாக கடக்கிறேன்: - சங்கர் தனிப்பயிற்சி மையம் தொடங்கியிருக்கும் கெளசல்யா
[Tuesday 2017-08-29 17:00]


ஆணவப் படுகொலையால் தன் வாழ்க்கையை இழந்த கௌசல்யா, இப்போது புது வாழ்வைப் பெற்று அர்த்தமுள்ள பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார். அவரின் சமீபத்திய முயற்சி, 'சங்கர் தனிப்பயிற்சி மையம்'. உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த கெளசல்யாவும் சங்கரும் காதலித்தனர். சங்கர் அட்டவணைப்பிரிவைச் சேர்ந்தவர் என்பதால், இவர்களின் காதலை கௌளசல்யாவின் பெற்றோர் எதிர்த்தனர். அதையும் மீறி  திருமணம் செய்துகொண்டு, தங்கள் வாழ்க்கைப் பயணத்தை மகிழ்வுடன் தொடங்கிய இந்த ஜோடியை சாதி அரக்கன் விடவில்லை.

ஆணவப் படுகொலையால் தன் வாழ்க்கையை இழந்த கௌசல்யா, இப்போது புது வாழ்வைப் பெற்று அர்த்தமுள்ள பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார். அவரின் சமீபத்திய முயற்சி, 'சங்கர் தனிப்பயிற்சி மையம்'. உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த கெளசல்யாவும் சங்கரும் காதலித்தனர். சங்கர் அட்டவணைப்பிரிவைச் சேர்ந்தவர் என்பதால், இவர்களின் காதலை கௌளசல்யாவின் பெற்றோர் எதிர்த்தனர். அதையும் மீறி திருமணம் செய்துகொண்டு, தங்கள் வாழ்க்கைப் பயணத்தை மகிழ்வுடன் தொடங்கிய இந்த ஜோடியை சாதி அரக்கன் விடவில்லை.

  

சென்ற ஆண்டு மார்ச் மாதம் 13-ம் நாள் நடுவீதியில் வைத்து சங்கர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். கெளசல்யா பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். மக்கள் பலரும் சூழ்ந்திருக்க நடந்த இந்தப் படுகொலை, தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கெளசல்யா உறவினர்கள் சிலர் கைது செய்யப்பட்டு வழக்கு நடைபெற்றுவருகிறது.

சங்கர் தனிப்பயிற்சி மையம்

கணவரின் இழப்பில் இருந்து மீண்டு வந்த கௌசல்யா, தன் கணவரை பலி வாங்கிய சாதிக்கு எதிரான போராட்டங்களில் தன்னை இணைத்துக்கொண்டு செயல்பட ஆரம்பித்தார். கெளசல்யா தலைமையில் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்ள பல இளம் ஜோடிகள் ஆர்வம் கொண்டனர். முற்போக்கு கருத்துகொண்டோர், கெளசல்யாவை தங்கள் குடும்பத்தில் ஒருவராக ஏற்று அரவணைத்தார்கள். இந்த இணைந்த கைகள் தரும் பலத்தால், துணிவோடு களத்தில் நிற்கும் கெளசல்யா, பொதுவெளியில் சாதிக்கு எதிரான தனது கருத்துகளைப் பதிவுசெய்து, பலருக்கும் ஊக்க சக்தியாக இருக்கிறார்.

''நான் தற்கொலை எண்ணத்தில் இருந்த நாள்களும் உண்டு. அதையெல்லாம் கடந்து வந்து இன்னைக்கு தன்னம்பிக்கையோட வாழ பலருக்கும் வழிகாட்டியா இருக்கிறது மனசுக்கு நிறைவா இருக்கு. 'சாதி ஒழிப்புப் போராளி' என்பதை என் அடையாளமா நினைக்கிறேன். அந்தப் பொறுப்பையும் உணர்ந்திருக்கிறேன். அதன் ஓர் அங்கமாதான், என் கணவரோட பெயர்ல 'சங்கர் தனிப்பயிற்சி மையம்' என்ற பயிற்சிப் பள்ளியைத் திறந்திருக்கேன். என் கணவரோட சொந்த ஊரான கொமரலிங்கம் என்கிற கிராமத்தில் இப்பயிற்சி மையத்தை நிறுவியிருக்கேன். இனிமே அந்த ஊரில் இருந்து சங்கர்கள் இழக்கிறதுக்கு இல்ல, எழுறதுக்கு கிளம்பி வரணும்.

நான் ஒரு ஊர்க்கார பெண்ணாதான் வளர்ந்தேன். பெரியார், அம்பேத்கரோட அரசியல், அவங்களோட கொள்கைகள் எல்லாம் சங்கரை இழந்ததுக்கு அப்புறம்தான் படிச்சு தெரிஞ்சுக்கிட்டேன். சாதி அரசியல் பற்றின விஷயங்களை ஒவ்வொண்ணா கத்துக்க ஆரம்பிச்சேன். பறை மூலமா என்னோட வலி அனைத்தையும் கடந்து வர முடியும்னு உணர்ந்தேன். சாதிதான் முக்கியம்னு நினைக்குறவங்களுக்கு எதிரா என்னோட பறை ஒலிக்க ஆரம்பிச்சது. என்னை மாதிரி, சாதியால் பாதிக்கப்பட்டதுக்கு அப்புறம்தான் சாதிக்கு எதிரா குரல் கொடுக்கணும்ங்கிறது இல்லை. இளம் தலைமுறைகிட்ட அது குறித்த விழிப்புஉணர்வை ஏற்படுத்தணும்னு முடிவு செய்தேன்.

இப்போ வளர்ந்து வர்ற குழந்தைகள் அம்பேத்கரையும், பெரியாரையும் முன்னோடியா எடுத்துக்கணும்னு விரும்பினேன். அதனால அவங்ககிட்ட இருந்து சாதி ஒழிப்பை ஆரம்பிக்கிறதுதான் முக்கியம். அதுக்காகத்தான் இந்த 'சங்கர் தனிப்பயிற்சி மையம்'. இங்க வாரத்தில் ஐந்து நாட்கள், பள்ளிக் குழந்தைகளுக்கு அவங்களோட பாடங்களுடன் சேர்த்து அம்பேத்கர், பெரியார் பற்றியும் கற்றுத்தர்றோம். அந்தந்த பாடத்துக்கான ஆசிரியர்களை நியமிச்சு பாடம் சொல்லிக் கொடுக்கிறோம். மற்ற இரண்டு நாட்களில் சிலம்பு, பறைனு தமிழ் கலைகளும் இந்தப் பள்ளியில் கற்றுக்கொடுக்கப்படும்.

எந்த ஒரு மாற்றம் கொண்டு வரணும்னு நினைச்சாலும் அதை முதல்ல நம்மகிட்ட இருந்து ஆரம்பிக்கணும்னு சொல்லுவாங்க. அதனாலதான் நான் அந்த மாற்றத்தை என் சங்கர் வாழ்ந்த மண்ணுல இருந்து ஆரம்பிச்சிருக்கேன். பயிற்சி மையத்தில் இப்போதைக்கு 20 பேர் சேர்ந்திருக்காங்க. இன்னும் நிறைய பேர் சேரணும்னு துண்டு பிரசுரமும் கொடுத்துட்டு இருக்கேன். சொல்ல மறந்துட்டேன்... இது எல்லாத்தையும் இலவசமாதான் செய்றோம். என் சம்பளத்தில்தான் இந்த முயற்சியை எடுத்திருக்கேன். லாபம் என் நோக்கம் இல்ல. சின்ன வயசுல இருந்தே சாதி ஒழிப்பு பற்றின தெளிவான பார்வையை குழந்தைகளுக்குள்ள விதைச்சு வளர்க்கணும் என்பதுதான் என்னோட லட்சியம். அவங்க மூலமா ஒரு நாலு பேர் திருந்துனா, இன்னொரு ஆணவக் கொலை நடக்காமத் தடுக்க முடியும்!"

நீர் திரளப் பார்த்த கண்களில் இப்படி உறுதி திரண்டு பார்ப்பது மகிழ்வு தோழி!

  
   Bookmark and Share Seithy.com



'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி!
[Wednesday 2024-04-24 06:00]

'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள்.



பாபநாசம் பட பாணியில் கொலை: போலீசாரே அதிர்ந்த சம்பவம்!
[Wednesday 2024-04-24 06:00]

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.



'பஞ்சுமிட்டாய் போல நைட்ரஜன் பிஸ்கட் தடை செய்யப்படுமா?
[Wednesday 2024-04-24 06:00]

நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் துடிதுடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் நைட்ரஜன் பிஸ்கட்டுக்கு எதிராக பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். அண்மையில் சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோ ஒன்றில் நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்தான். இது தொடர்பான தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதில் அந்தச் சிறுவன் உயிரிழந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.



பள்ளிக்கரணை ஆணவக்கொலை சம்பவத்தில் மீண்டும் அதிர்ச்சி!
[Tuesday 2024-04-23 18:00]

சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு காதல் திருமண எதிர்ப்பால் இளைஞர் ஒருவர் ஓட ஓட வெட்டி ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் கொலையான இளைஞனின் காதல் மனைவியும் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



4 கோடி ரூபாய் சிக்கிய விவகாரம்: விடுதி ஊழியர்கள் காவல் நிலையத்தில் ஆஜர்!
[Tuesday 2024-04-23 18:00]

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.



அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவிற்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!
[Tuesday 2024-04-23 18:00]

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த எம்.பி. சஞ்சய் சிங், சன்பிரீத் சிங் எனப் பலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.



ராமர் புகைப்படம் உள்ள பிளேட்டில் சிக்கன் பிரியாணி: சர்ச்சையில் சிக்கிய ஹொட்டல்!
[Tuesday 2024-04-23 18:00]

ராமர் புகைப்படம் பொறிக்கப்பட்ட பிளேட்டுகளில் சிக்கன் பிரியாணி விற்பனை செய்யப்பட்ட ஹொட்டலை இந்து அமைப்பை சேர்ந்த சிலர் அடித்து நொறுக்கியுள்ளனர். சமீப காலமாக கடவுள் ராமரை வைத்து சர்ச்சைகள் வந்தவண்ணம் உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் ராமரை பாஜக அடையாளப்படுத்துவது தான்.



தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்!
[Tuesday 2024-04-23 06:00]

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.



'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன்!
[Tuesday 2024-04-23 06:00]

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன. இந்நிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார்.



'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'- முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
[Tuesday 2024-04-23 06:00]

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.



'மோடி மீது நடவடிக்கை வேண்டும்' - தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்!
[Monday 2024-04-22 18:00]

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.



நேரில் ஆஜரான செந்தில் பாலாஜி: காவலை நீட்டித்த நீதிமன்றம்!
[Monday 2024-04-22 18:00]

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.



தேர்தல் முடிவுக்கு முன்பே போட்டியின்றி வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர்!
[Monday 2024-04-22 18:00]

மக்களவை தேர்தலில் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார். இந்திய மாநிலமான குஜராத், சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கு, காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. மேலும், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் உள்பட 8 வேட்பாளர்களும் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர்.



லட்சக்கணக்கில் ஏலம் போன கூரை கத்தாழை மீன்!
[Monday 2024-04-22 18:00]

தஞ்சாவூரில் 25 கிலோ எடை கொண்ட கூரை கத்தாழை என்ற மீன் ஒன்று மட்டுமே லட்சக்கணக்கில் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. தமிழக மாவட்டமான தஞ்சாவூர், அதிராம்பட்டினம் நகராட்சியில் உள்ள மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திற்கு மீனவர்கள் தினமும் மீன் விற்பனை செய்து வருகிறார்கள்.



பழனி முருகன் கோவிலுக்கு நாட்டுச் சர்க்கரை கொள்முதல்!
[Monday 2024-04-22 06:00]

பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பிரசாதங்கள் தயாரிக்க ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருந்து கரும்புச் சர்க்கரை எனப்படும் நாட்டுச் சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.



தேர்தல் பறக்கும் படை கலைப்பு: எல்லையில் மட்டும் கண்காணிப்பு!
[Monday 2024-04-22 06:00]

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.



தமிழகத்தில் பட்டப்பகலில் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரிப்பு!
[Monday 2024-04-22 06:00]

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டப்பகலில் சித்தப்பா மீது மகனே பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்து உள்ள சவரக்கோட்டை பிரிவு பகுதியில் வசித்து வருபவர் வடமலை. அவருடைய மகன்கள் சின்னவன் மற்றும் மணி. மணியின் மகன் செந்தில். கடந்த நான்கு நாட்களுக்கு முன்னதாக செந்தில் அவருடைய விவசாய நிலத்தில் அறுவடை பணிக்காக டிராக்டரில் சென்றுள்ளார். அப்பொழுது சித்தப்பா சின்னவன் மற்றும் செந்தில் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.



குஜராத்தில் தீவிரமடையும் போராட்டம்: நெருக்கடியில் பாஜக!
[Sunday 2024-04-21 18:00]

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் மொத்தமுள்ள 26 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த முறை ஆளும் பாஜக அரசு குஜராத்தை கைப்பற்ற வேண்டும் எனத் தீவிரமாக தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், குஜராத்தின் மக்களவைத் தொகுதிகளில் ஒன்றான ராஜ்கோட்டில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் பர்சோத்தம் ரூபாலா களமிறக்கப்பட்டுள்ளார்.



தேர்தலுக்கு பின் சென்னை திரும்பும் மக்கள்: திணறும் பரனூர்!
[Sunday 2024-04-21 18:00]

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.



தூர்தர்ஷன் இலச்சினை காவி நிறத்துக்கு மாற்றம்!
[Sunday 2024-04-21 18:00]

இந்திய அரசுத் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனமான தூர்தர்ஷனின் இலச்சினை காவி நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளதற்கு பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இது தங்களின் புதிய அவதாரம் என தூர்தர்ஷன் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.


Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா