Untitled Document
April 20, 2024 [GMT]
டொனால்டு டிரம்ப் மனநலம் குன்றியவர்: - கிம் ஜாங் உன் விமர்சனம்
[Friday 2017-09-22 17:00]

அமெரிக்க அதிபர் பேசுவது நாய் குரைப்பது போன்றது என்று விமர்சித்த வடகொரியா, தற்போது டொனால்டு டிரம்பை மனநலம் குன்றியவர் என்று கடுமையாக விமர்சித்துள்ளது. அணு ஆயுத சோதனையை தொடர்வதால் வடகொரியா மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடையை விதித்துள்ளது. திருந்தவில்லை என்றால் வடகொரியா முற்றிலுமாக அழிக்கப்படும் எனவும் அமெரிக்கா மிரட்டியுள்ளது.

அமெரிக்க அதிபர் பேசுவது நாய் குரைப்பது போன்றது என்று விமர்சித்த வடகொரியா, தற்போது டொனால்டு டிரம்பை மனநலம் குன்றியவர் என்று கடுமையாக விமர்சித்துள்ளது. அணு ஆயுத சோதனையை தொடர்வதால் வடகொரியா மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடையை விதித்துள்ளது. திருந்தவில்லை என்றால் வடகொரியா முற்றிலுமாக அழிக்கப்படும் எனவும் அமெரிக்கா மிரட்டியுள்ளது.

  

இதையடுத்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை மனநலம் குன்றியவர் என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் விமர்சித்துள்ளார். இதனிடையே புதிதாக தயாரித்துள்ள ஹைட்ரஜன் குண்டை பசுபிக்கில் சோதித்து பார்க்க உள்ளதாக கூறி வடகொரியா பதற்றத்தை அதிகரித்துள்ளது. ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வடகொரியா மீது புதிய தடைகள் விதிக்கப்படுவதாக அறிவித்தார்.

இதன்படி வர்த்தக உறவுக்கு அமெரிக்க வேண்டுமா? வடகொரியா வேண்டுமா? என உலக நாடுகள் தீர்மானித்து கொள்ளலாம் என்றும் அவர் கெடு விதித்துள்ளார். வடகொரியாவின் அணு ஆயுத வேட்கையை தணிக்க போர் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று அவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.com



ஈரானின் கழுத்தில் கை வைத்த இஸ்ரேல்!
[Saturday 2024-04-20 08:00]

ஈரானை தூண்டிவிட்டு, அதன் அணு ஆயுத பகுதிகள் மீது தாக்குதல் நடத்தும் திட்டமாக இருக்கலாம் இஸ்ரேலின் இந்த ஒற்றைத் தாக்குதல் என கூறப்படுகிறது. இஸ்ரேல் மீது கடந்த வார இறுதியில் ஏவுகணை மற்றும் ட்ரோன்களால் சரமாரி தாக்குதலை ஈரான் முன்னெடுத்தது. இதற்கு பதிலடி உடனே எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மிக சாதாரணமாக ஒரே ஒரு ஏவுகணையை இஸ்ரேல் வீசியுள்ளது.



ட்ரம்ப் வழக்கு விசாரணை: நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்த நபரால் பரபரப்பு!
[Saturday 2024-04-20 08:00]

டொனால்ட் டிரம்பின் குற்றவியல் விசாரணை நடைபெற்று வரும் நீதிமன்ற வளாகத்தில் திடீரென்று ஒருவர் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரவத்தை தன் மீது ஊற்றிக் கொண்ட அந்த நபர் அருகில் கூடியிருந்த செய்தி ஊடகங்கள் முன் துண்டு பிரசுரங்களை வீசியுள்ளார். அதன் பின்னரே தம்மீது நெருப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தீக்கொளுத்திக்கொண்ட அந்த நபர் 37 வயதான Maxwell Azzarello என அடையாளம் காணப்பட்டுள்ளார்.



ஒரே நாளில் கொட்டித்தீர்த்த மழை: ரூ 8,300 கோடி அளவுக்கு சேதம்!
[Saturday 2024-04-20 08:00]

பேய் மழைக்கு ஐக்கிய அமீரகத்தின் துபாய் மாகாணம் மொத்தமாக மூழ்கிய நிலையில், சேதம் மட்டும் ரூ 8,300 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. துபாய் மாகாணத்தில் ஒராண்டுக்கான மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்ததை அடுத்து, சாலைகள், விமான நிலையம் என வெள்ளத்தில் மூழ்கியது. குடியிருப்புகள் வணிக வளாகங்கள், தொழில் கூடங்கள் அனைத்திலும் வெள்ளம் புகுந்துள்ளது.



ரொறன்ரோவை விட்டு வெளியேற முயற்சிக்கும் மக்கள்!
[Friday 2024-04-19 16:00]

ரொறன்ரோ மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வசிக்கும் பலர் வேறும் இடங்களுக்கு செல்ல முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வீட்டு வாடகைப் பிரச்சினையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ரொறன்ரோவில் இரண்டு படுக்கை அறைகளைக் கொண்ட வீடு ஒன்றின் சராசரி வாடகைத் தொகை மூவாயிரம் டொலர்களாகும்.



இஸ்ரேலுக்கு தொழில்நுட்ப உதவி வழங்குவதை எதிர்த்து போராட்டம்!
[Friday 2024-04-19 16:00]

கலிபோர்னியாவில் உள்ள கூகுள் நிறுவனத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி 28 ஊழியர்களை கூகுள் நிறுவனம் பணி நீக்கம் செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கூகுள் மற்றும் அமேசான் நிறுவனம் இஸ்ரேல் அரசுக்கு ஏஐ மற்றும் கிளவுட் தொழில்நுட்ப சேவை வழங்குவது தொடர்பாக 1.2 பில்லியன் டாலருக்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.



பிரேசிலில் இறந்த தந்தையை வங்கிக்கு அழைத்துச்சென்ற மகள்: வெளியான அதிர்ச்சியூட்டும் காரணம்!
[Friday 2024-04-19 16:00]

பிரேசில் நாட்டில் மரணித்த ஒருரை வங்கிக்கு அழைத்து சென்று கடன் பெற முயற்சித்த பெண்ணை நிதி மோசடியில் பிரேசில் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பிரேசிலில் அமைந்துள்ள ரியோ டீ செனிடியோ வங்கியில் கடந்த ஒருவாராமாக வங்கி கடனை பெருவதற்காக முயற்சித்து வந்துள்ளார். குறித்த பெண் அவரின் தந்தையின் பெயரிலேயே கடன் பெற முயற்சித்துள்ளார்.



அவுஸ்திரேலியர்கள் உடனடியாக வெளியேறுங்கள்: இஸ்ரேல் குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
[Friday 2024-04-19 16:00]

இஸ்ரேலின் பாதுகாப்பு நிலவரம் மிக வேகமானதாக மோசமானதாக மாறலாம் என்பதால் இஸ்ரேலில் உள்ள தனதுஅனைத்து பிரஜைகளையும் உடனடியாக வெளியேறுமாறு அவுஸ்திரேலியா வேண்டுகோள் விடுத்துள்ளது. வெளியேறுவது பாதுகாப்பான விடயம் என்றால் உடனடியாக வெளியேறுங்கள் என அவுஸ்திரேலியா வேண்டுகோள் விடுத்துள்ளது.



உக்ரைன் மீதான வெற்றிக்கு பிறகு ரஷ்யாவின் இலக்கு இந்த நாடு!
[Friday 2024-04-19 07:00]

உக்ரைன் மீது ரஷ்யா வெற்றியை பதிவு செய்தால், அதன் பின்னர் பால்டிக் நாடுகள் மீது விளாடிமிர் புடின் குறி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்கும் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை வரும் என தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் வீழ்ந்தால் ரஷ்யாவுடன் நேட்டோவின் கிழக்குப் பகுதி கடுமையான ஆபத்தில் சிக்கும் என்றே நிபுணர்கள் கருத்தாக உள்ளது.



ஈரானுக்கு எதிரான பதிலடியை கைவிடும் இஸ்ரேல்!
[Friday 2024-04-19 07:00]

ஈரான் தொடுத்த ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு கட்டாயம் பதிலடி உண்டு என கூறி வந்த இஸ்ரேல், தற்போது அதை கைவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானுக்கு எதிரான நடவடிக்கையை கைவிட்டதற்கு பரிசாக காஸா பகுதியில் ஹமாஸ் படைகளை மொத்தமாக அழிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



பரபரப்பான லண்டன் சாலையில் நடந்த பயங்கரம்!
[Friday 2024-04-19 07:00]

லண்டனில் பட்டப்பகலில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு பொதுமக்களிடையே ஒருவர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பதறவைத்துள்ள இந்த சம்பவத்தை அடுத்து, உயிருக்கு அஞ்சிய மக்கள் வாகனங்களில் பதுங்கியுள்ளதும் Tottenham பகுதியில் கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ளது.



1.3 மில்லியன் அமெரிக்கர்களை ஏமாற்றிய கனேடியர்!
[Thursday 2024-04-18 18:00]

கனேடியர் ஒருவருக்கு அமெரிக்க சிறையில் 10 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நீதிமன்றம் பல தசாப்தங்களாக நடந்த மோசடி வழக்கில், கனடா நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை இந்த வார தொடக்கத்தில் விதிக்கப்பட்டுள்ளது. 57 வயதான Patrice Runner என்ற நபர், 1994 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில், 1.3 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்களிடம் இருந்து சுமார் 17.5 கோடி($175 மில்லியன்) அமெரிக்க டொலர்களை மோசடி செய்த குற்றத்திற்காக தண்டனை பெற்றுள்ளார்.



2024 ஆம் ஆண்டின் உலகின் சிறந்த விமான நிலையங்கள்!
[Thursday 2024-04-18 18:00]

உலகின் சிறந்த விமான நிலையமாக தோஹாவின் ஹமாத் சர்வதேச விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பல வருடங்களாக உலகின் சிறந்த விமான நிலையம் என்ற அந்தஸ்தை தக்க வைத்திருந்த சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் அந்த அந்தஸ்தை இழந்திருக்கிறது. தற்போது இது உலகின் இரண்டாவது சிறந்த விமான நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த விமானத் துறை ஆலோசனை நிறுவனமான Skytrax நேற்று (17 ஏப்ரல்) ஜெர்மனியின் பிராங்ஃபர்ட்டில் (Frankfurt) நடந்த நிகழ்ச்சியில் இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.



கனடாவில் நிகழ்ந்த திரைப்படத்தை மிஞ்சிய திருட்டு சம்பவம்!
[Thursday 2024-04-18 18:00]

கனடா வரலாற்றிலேயே மிகப்பெரிய தங்கத் திருட்டு சம்பவம் என அழைக்கப்படும் சம்பவம் தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கனடா பொலிசார் தெரிவித்துள்ளனர். 2023ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி, சுவிட்சர்லாந்தின் சூரிச்சிலுள்ள வங்கி ஒன்றிலிருந்து கனடாவின் ரொரன்றோவுக்கு இரண்டு பார்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன.



ஈரானுக்கு பதிலடி கொடுக்க தயாராகும் இஸ்ரேல்!
[Thursday 2024-04-18 18:00]

ஈரானின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிடகமரூன் தெரிவித்துள்ளார். ஜெரூசலேத்திற்கான விஜயத்தின்போது வெளிவிவகார அமைச்சர் டேவிடகமரூன் இதனை தெரிவித்துள்ளார்.



கனடாவில் ஆசிய மாணவரின் துணிச்சல்!
[Thursday 2024-04-18 06:00]

கனடாவில் கொள்ளை சம்பவத்தை தடுக்க முயன்று கத்தியால் தாக்கப்பட்ட ஆசிய மாணவரின் மருத்துவ கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது அவருக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. கனடாவுக்கு புதியவரான Meraj Ahmed என்ற மாணவர் DoorDash உணவு விநியோக நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் மெராஜ் அகமது மற்றும் சக ஊழியர் ஒருவரும் கத்தியால் தாக்கப்பட்டு காயமடைந்தனர்.



பிரித்தானியாவுடன் மொத்த உறவையும் முறித்துக்கொண்ட இளவரசர் ஹரி!
[Thursday 2024-04-18 06:00]

பிரித்தானியாவில் குடியிருக்கும் வகையில், இனி இளவரசர் ஹரி நாடு திரும்ப வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் வெளியான ஆவணம் ஒன்று அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவின் கலிபோர்னியாவுக்கு குடிபெயர்ந்த ஹரி, தற்போது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் அங்கே வசித்து வருகிறார்.



இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலில் உயிர் தப்பிய 50 பேர்கள் தற்கொலை!
[Thursday 2024-04-18 06:00]

இஸ்ரேல் எல்லையில், நோவா இசை விழா படுகொலையில் இருந்து தப்பியவர்களில் 50க்கும் மேற்பட்டவர்கள் அடுத்தடுத்த மாதங்களில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. பாராளுமன்ற விவகார கூட்டத்தில் பேசிய ஒருவர், இந்த எண்ணிக்கை உண்மையில் அதிகமாக இருக்கலாம் என்றும், உயிர் தப்பியவர்கள் தற்போதும் தத்தளித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.



வானில் இருந்து விழுந்த மர்மப்பொருள்: புளோரிடாவில் நிகழ்ந்த சம்பவத்திற்கு பதில் கூறிய நாசா!
[Wednesday 2024-04-17 15:00]

புளோரிடாவில் உள்ள ஒரு வீட்டின் மீது மோதிய கனமான அந்த பொருள், சர்வதேச விண்வெளி நிலையத்தின் (ISS) ஒரு பகுதி என்பதை அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா (NASA) உறுதிப்படுத்தியுள்ளது. கென்னடி விண்வெளி மையத்தில் மாதிரியை ஆய்வு செய்த பின்னர், வீட்டின் மேல் விழுந்த அந்த உலோகப் பொருள் மார்ச் 2021 இல் சுற்றுப்பாதை புறக்காவல் நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்டது என நாசா தெரிவித்துள்ளது.



அரசாங்க ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கனடா அரசாங்கம்!
[Wednesday 2024-04-17 15:00]

கனடாவில் அரசாங்க ஊழியர்களுக்கு அதிர்ச்சி தகவல் ஒன்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் நான்கு ஆண்டு காலப் பகுதியில் சுமார் ஐயாயிரம் அரசாங்க ஊழியர்கள் பணிகளை இழக்க நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்தில் இந்த ஆட்குறைப்பு குறித்த யோசனை முன்மொழியப்பட்டுள்ளது.



சூரிய ஒளி தான் குழந்தைக்கு உணவு: ரஷ்ய நபரின் அதிர்ச்சி செயல்!
[Wednesday 2024-04-17 15:00]

சூரிய ஒளியை மட்டுமே கொடுத்து குழந்தையை பட்டினி போட்டு கொலை செய்த பிரபல சமூக ஊடக influencer-க்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் பிரபல சமூக ஊடக இன்ஃப்ளூயன்சர்(influencer) மாக்சிம் லியுட்டி(Maxim Lyutyi), தனது ஒரு மாத வயது மகன் கொஸ்மோவின் (Kosmos) துன்பகரமான காரணமாக அமைந்துள்ளார்.


Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா