Untitled Document
March 29, 2024 [GMT]
80 வயது தாயை கல்லூரிக்கு கூட்டிச் செல்லும் சீன பேராசிரியர்!
[Monday 2017-09-25 16:00]

சீனாவின் பேராசிரியர் ஒருவர் தன்னுடைய தாயையும் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சீனாவின் தென்மேற்கு பகுதியில் பள்ளி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றும் ஹூ மிங், மறதி நோயால் அவதிப்படும் தனது 80 வயது தாயை தன்னுடன் கல்லூரிக்கு அழைத்துச் செல்கிறார்.

சீனாவின் பேராசிரியர் ஒருவர் தன்னுடைய தாயையும் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சீனாவின் தென்மேற்கு பகுதியில் பள்ளி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றும் ஹூ மிங், மறதி நோயால் அவதிப்படும் தனது 80 வயது தாயை தன்னுடன் கல்லூரிக்கு அழைத்துச் செல்கிறார்.

  

மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது தாய், தனிமையில் வாடக்கூடாது என்பதற்காக அவரை கூடவே அழைத்துச் செல்வதாக அவர் கூறியுள்ளார். வகுப்பறையில் மாணவர்களுக்கு ஹூ மிங் பாடமெடுக்கும் போது, அவரது தாய் கடைசி பெஞ்சில் அமர்ந்து இருப்பார் என மாணவர் ஒருவர் கூறியுள்ளார்.இந்த செய்தி சீனா சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தாயை தன்னுடன் அழைத்து வருவதற்கு பள்ளி எதிர்ப்பு தெரிவிக்கவில்ல என ஹூ மிங் கூறியுள்ளார். மேலும் பள்ளி நிர்வாகம் எனக்கும் எனது தாய்க்கும் ஆதரவாகவே இருந்து வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



உக்ரைன் போருக்கு எதிர்ப்பு: ரஷ்ய பத்திரிகையாளருக்கு 2 ஆண்டு சிறை!
[Friday 2024-03-29 16:00]

உக்ரைனுடனான போரை எதிர்த்த பத்திரிகையாளருக்கு ரஷ்ய நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது. உக்ரைன் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ரஷ்ய பத்திரிகையாளருக்கு அந்நாட்டு நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. மைக்கேல் ஃபெல்ட்மேன் (Mikhail Feldman) என்ற பத்திரிகையாளர் உக்ரைன் மீதான தாக்குதலைக் கண்டித்து சமூக வலைதளங்களில் பதிவுகள் செய்து வந்தார்.



கடற்கரையில் கற்களை பொறுக்கினால் ரூ.2 லட்சம் அபராதம்: அதிரடி உத்தரவு ஏன்?
[Friday 2024-03-29 16:00]

கடற்கரைகளில் இருந்து கற்களை மக்கள் எடுத்து செல்வதை தடுப்பதற்காக கேனரி தீவுகளில் அபராதம் விதிக்கப்படுகிறது. கடற்கரைகள் மீது காதல் கொள்ளாதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது, பொழுதுபோக்கு, மன அமைதி ஆகியவற்றிக்காக பெரும் பாலான மக்கள் கடற்கரைகளுக்கு வந்து செல்கின்றனர். இவ்வாறு வந்து செல்லும் மக்கள் அங்குள்ள சங்குகள் மற்றும் கூலாங்கற்களை எடுத்து செல்வது வழக்கம்.



கனடாவில் ஏதிலி அந்தஸ்து கோரும் வெளிநாட்டு மாணவர்கள்!
[Friday 2024-03-29 16:00]

கனடாவில் வெளிநாட்டு மாணவர்கள் ஏதிலி அந்தஸ்து கோரும் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டிலிருந்து 2023ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் ஒன்றாரியோ கிட்சனர் கொனெஸ்டோகா கல்லூரியில் ஏதிலி அந்தஸ்து கோரிய சர்வதேச மாணர்களின் எண்ணிக்கை 324 வீதமாக அதிகரித்துள்ளது.



இஸ்ரேலுக்கு சர்வதேச நீதிமன்றம் கடும் உத்தரவு!
[Friday 2024-03-29 16:00]

காசாவிற்கு உதவிப் பொருட்கள் வழங்க மேலும் பல எல்லைகளை திறக்க வேண்டுமென சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ்க்கு எதிரான போர் என்ற பெயரில் காசா மீது தாக்குதல் நடத்தி இனப்படுகொலை செய்வதாக ஐ.நா.வின் சர்வதேச நீதிமன்றத்தில் தென்ஆப்பிரிக்கா குற்றம் சாட்டியது.



"ரஷ்யா நேட்டோவை தாக்க விரும்பவில்லை, ஆனால்.." - புடின் எச்சரிக்கை!
[Friday 2024-03-29 07:00]

ரஷ்யா நேட்டோவைத் தாக்க விரும்பவில்லை, ஆனால் F-16களை வழங்கும் விமானத் தளங்கள் 'சட்டப்பூர்வமான இலக்காக' இருக்கும் என ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார். மேற்கத்திய நாடுகள் F -16 போர் விமானங்களை உக்ரைனுக்கு வழங்க உள்ளன. அதாவது கீவிற்கு 42 போர் விமானங்களை அனுப்புவதாக அந்நாடுகள் உறுதி அளித்துள்ளன.



வடகொரியாவுக்காக ரஷ்யா செய்த செயல்!
[Friday 2024-03-29 07:00]

வடகொரியாவின் பொருளாதாரத் தடை கண்காணிப்பை புதுப்பிப்பதை ரஷ்யா தடுத்துள்ளது. அணு ஆயுதங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை வடகொரியா தடையை மீறி செய்து வருவதால், அந்நாட்டின் மீது பொருளாதார தடைகளை மேற்பார்வை செய்யும் தீர்மானத்தை ஐ.நா பாதுகாப்பு சபையில் அமெரிக்கா கொண்டு வந்தது.



பிரித்தானியாவுக்கு வரும்போது இளவரசர் ஹரியின் பாதுகாப்புக்கு மட்டும் இத்தனை கோடி செலவகுமா?
[Friday 2024-03-29 07:00]

இளவரசர் ஹரி வருங்காலத்தில் பிரித்தானியாவுக்கு வரும்போது தனியார் மெய்க்காப்பாளர்களை தொடர்ந்து பயன்படுத்த 5,00,000 பவுண்டுகள் செலவாகும் என தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு இளவரசர் ஹரி மற்றும் மேகனின் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக 1.58 மில்லியன் பவுண்டுகள் (2 மில்லியன் டொலர்கள்) செலுத்தப்பட்டது.



உலக மக்களை எச்சரிக்கும் பிரபல மருத்துவத்துறை நிபுணர்!
[Thursday 2024-03-28 18:00]

நம் வாழ்நாளிலேயே உலகம் இன்னொரு பெருந்தொற்றை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்று கூறும் மருத்துவத்துறை நிபுணர் ஒருவர், அப்படி எதுவும் நிகழாது என்பதுபோல நடந்துகொள்வது அறியாமையே என்கிறார். நம் வாழ்நாளில் இன்னொரு பெருந்தொற்றை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என எச்சரிக்கும் அந்த நபரின் பெயர் தேவி லலிதா ஸ்ரீதர்.



பால்டிமோர் கப்பல் விபத்து: நதியிலிருந்து இரண்டு பேர் சடலமாக மீட்பு!
[Thursday 2024-03-28 18:00]

பால்டிமோரில் கப்பல் விபத்துக்குள்ளான இடத்தில் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் பால்டிமோர் பகுதியில் உள்ள படாப்ஸ்கோ ஆற்றில் சரக்கு வாகனம் மோதியதில் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் இடிந்து விழுந்தது. பாலம் இடிந்து விழுந்த இடத்தில் தண்ணீருக்கு அடியில் இருந்த சிவப்பு பிக்கப் டிரக்கில் இருந்து இரண்டு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.



மீண்டும் நெருக்கடியில் பிரதமர் ரிஷி சுனக்!
[Thursday 2024-03-28 18:00]

சிறு படகுகளில் பிரித்தானியாவுக்கு குடிபெயரும் மக்களின் எண்ணிக்கை இந்த மூன்று மாதங்களில் பெருமளவு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தால் தற்போது பெரும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார் பிரதமர் ரிஷி சுனக். இந்த 3 மாதங்களில் மட்டும் 4,644 பேர்கள் சிறு படகுகளில் பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளனர்.



கனடாவில் நோய்த்தொற்று பரவுகை குறித்து அவசர எச்சரிக்கை!
[Thursday 2024-03-28 18:00]

கனடாவில் தட்டம்மை நோய்த் தொற்று பரவுகை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் நோயாளர் எண்ணிக்கை அதிகரித்து செல்வதாக குறிப்பிடப்படுகின்றது. கனடாவின் பிரதம பொதுச் சுகாதார அதிகாரி டொக்டர் திரேசா டேம் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.



மாஸ்கோ பயங்கரவாத தாக்குதலுக்கு பின் 143 பேர் மாயம்!
[Thursday 2024-03-28 06:00]

ரஷ்யாவில் கச்சேரி அரங்கில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பின் 140க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக அறிக்கைகள் கிடைத்துள்ளன. மாஸ்கோ நகரில் கச்சேரி அரங்கில் கடந்த வாரம் கொடிய பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் இறப்பு எண்ணிக்கை 140 ஆகவும், 360 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஹமாஸ் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்த அமெரிக்கா!
[Thursday 2024-03-28 06:00]

காசாவில் விமானங்களில் இருந்து பரசூட் மூலம் உதவிப்பொருட்களை விநியோகிப்பதை நிறுத்துமாறு ஹமாஸ் அமைப்பு கோரியுள்ளது. ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் இந்த கோரிக்கைக்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது. காசாவில் உணவுப் பற்றாக்குறையால் தவித்துவரும் மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக விமானங்களில் இருந்து பரசூட் மூலம் உதவிப்பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா உட்பட பல நாடுகள் ஈடுபட்டுள்ளன.



ஜேர்மன் பேர்லின் இருந்து சூரிச் சென்ற பஸ் விபத்து: ஐவர் பலி!
[Thursday 2024-03-28 06:00]

ஜேர்மனி - பெர்லினில் இருந்து சுவிட்சர்லாந்து நோக்கிச் சென்ற பேருந்து ஒன்று கிழக்கு ஜேர்மனியில் நெடுஞ்சாலையில் இருந்து புதன்கிழமை வந்ததில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உள்ளூர் நேரப்படி காலை 9.45 மணியளவில் (இரவு 7.45 AEDT) லீப்ஜிக் அருகே A9 நெடுஞ்சாலையில் விபத்து நடந்தது, இரு திசைகளிலும் சாலை மூடப்பட்டது.



உணவுக்காக ஓடி உயிரிழந்த காசா மக்கள்: பெரும் துயர நிலை!
[Wednesday 2024-03-27 18:00]

இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் நீடித்து வரும் நிலையில், காசாமீது அமெரிக்கா, வான்வெளிஊடாக வீசப்பட்ட உதவிப்பொருட்கள் கடலில் விழுந்தவேளை அவற்றை எடுக்க முயன்ற 12 பேர் கடலில்மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலின் ஆறுமாத இராணுவநடவடிக்கை காரணமாக காசவில் பெரும் பட்டினிநிலை உருவாகியுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.



பல்லாயிரம் உயிர்களை காப்பாற்றிய அமெரிக்க கப்பல் விபத்தின் கடைசி நேர அழைப்பு!
[Wednesday 2024-03-27 18:00]

அமெரிக்காவின் பால்டிமோர் பாலத்தின் மீது இடம்பெற்ற விபத்தில் பல்லாயிரம் உயிர்களை காப்பாற்றிய அழைப்பு தொடர்பில் மேரிலாண்ட் ஆளுநர் வெஸ் மூர் கருத்து வெளியிட்டுள்ளார். கப்பலானது அதன் செயல்திறனை இழந்தவுடன், அதன் அதிகாரிகள் ''கப்பல் மோதப்போகிறது. பாலத்தை நெருங்கி வருகிறது, அது திசைமாற்றி கட்டுப்பாட்டை இழந்துவிட்டது. "நாங்கள் அதைக் கட்டுப்படுத்தும் வரை, எல்லா போக்குவரத்தையும் நிறுத்த வேண்டும்."என்ற அழைப்பே பல்லாயிரம் உயிர்களை காப்பாற்றியுள்ளது.



முதன்முறையாக பிரபஞ்ச அழகிப் போட்டியில் பங்கேற்கும் சவுதி அழகி!
[Wednesday 2024-03-27 18:00]

பிரபஞ்ச அழகிப் போட்டியில் முதன்முறையாக சவுதி அரேபியா அழகி பங்கேற்கவுள்ளார். அந்த வகையில் மிக உயரிய அழகி போட்டியாக இருக்கும் மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் முதன்முறையாக சவுதி அரேபியா நாட்டின் 27 வயதான மாடல் ரூமி அல்கஹ்தானி (Rumy Alqahtani பங்கேற்கவுள்ளார். உலகின் பல்வேறு நாடுகள் அழகிகளுக்கான போட்டிகளை நடத்துகின்றன. அதில் வெற்றிப்பெறும் பெண்ணுக்கு அந்நாட்டு அழகு பட்டம் கொடுக்கப்படுகிறது. அப்படி ஒவ்வொரு நாட்டு அழகிகளையும் கொண்டு உலக அழகி போட்டி நடைபெறும்.



ஒரு பாலினத் திருமண சட்டமூலத்துக்கு தாய்லாந்து அங்கீகாரம்!
[Wednesday 2024-03-27 18:00]

ஒரு பாலினத் திருமணங்களை சட்டபூர்வமாக்கும் சட்டமூலத்துக்கு தாய்லாந்து நாடாளுமன்ற கீழ் சபை இன்று அங்கீகாரம் வழங்கியது. இச்சட்டமூலத்துக்கு 399 எம்.பிகள் ஆதரவாகவும் 10 எம்.பிகள் எதிராகவும் வாக்களித்தனர். இதன்மூலம், தென்கிழக்காசியாவில் ஒருபாலினத் திருமணத்துக்கு அங்கீகாரம் வழங்கும் நாடாக தாய்லாந்து விளங்கவுள்ளது .



மாஸ்கோ தாக்குதலின் பின்னணி: புடின் முன்வைத்துள்ள பகிரங்க குற்றச்சாட்டு!
[Wednesday 2024-03-27 06:00]

மாஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் தீவிரவாத இஸ்லாமியக் குழு இருப்பதாக ரஷ்ய ஜனாிதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மாஸ்கோவில் உள்ள குரோகஸ் நகர மண்டபத்தின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய 11 பேர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.



வடக்கு - கிழக்கில் புலம்பெயர் தமிழரின் முதலீட்டை தடுப்பதில் இரகசியமாக செயல்படும் முக்கிய நாடு!
[Wednesday 2024-03-27 06:00]

கனடா உள்ளிட்ட பல்வேறு புலம்பெயர் நாடுகளில் வாழும் வடக்கு - கிழக்கின் புலம்பெயர் தமிழர்களின் முதலீட்டை தடுப்பதில் இந்தியா இரகசியமாக செயற்பட்டு வருவதாக பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி ஆருஸ் தெரிவித்துள்ளார்.


Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா