Untitled Document
April 25, 2024 [GMT]
குர்திஸ்தானுக்கு செல்லும் சர்வதேச விமானங்களை நிறுத்திய ஈராக்!
[Saturday 2017-09-30 09:00]

இராக்கின் வட பகுதியில் நடத்திய கருத்து வாக்கெடுப்பில் குர்திஸ்தான் விடுதலைக்கு ஆதரவாக 92 சதவீத மக்கள் வாக்களித்துள்ள நிலையில், இந்த வாக்கெடுப்பை எதிர்த்துவரும் இராக் மத்திய அரசு, குர்திஸ்தான் பகுதிக்குச் செல்லவேண்டிய, அங்கிருந்து வெளியே வர வேண்டிய சர்வதேச விமானங்களை ரத்து செய்துள்ளது.குர்திஸ்தான் பகுதியில் உள்ள இர்பில், சுலைமானியா விமான நிலையங்களின் கட்டுப்பாட்டை தங்களிடம் ஒப்படைக்காவிட்டால், வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் உள்நாட்டு விமானங்கள் மட்டுமே அங்கு செல்லும் என்று பாக்தாத் அறிவித்துள்ளது.

இராக்கின் வட பகுதியில் நடத்திய கருத்து வாக்கெடுப்பில் குர்திஸ்தான் விடுதலைக்கு ஆதரவாக 92 சதவீத மக்கள் வாக்களித்துள்ள நிலையில், இந்த வாக்கெடுப்பை எதிர்த்துவரும் இராக் மத்திய அரசு, குர்திஸ்தான் பகுதிக்குச் செல்லவேண்டிய, அங்கிருந்து வெளியே வர வேண்டிய சர்வதேச விமானங்களை ரத்து செய்துள்ளது.குர்திஸ்தான் பகுதியில் உள்ள இர்பில், சுலைமானியா விமான நிலையங்களின் கட்டுப்பாட்டை தங்களிடம் ஒப்படைக்காவிட்டால், வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் உள்நாட்டு விமானங்கள் மட்டுமே அங்கு செல்லும் என்று பாக்தாத் அறிவித்துள்ளது.

  

"இங்கே சர்வதேச சமூகம் இங்கே இருக்கிறது. எனவே இந்த நடவடிக்கை குர்து மக்களுக்கு மட்டும் எதிரானதல்ல," என்று பிபிசியிடம் வியாழக்கிழமை தெரிவித்தார் இர்பில் விமான நிலைய இயக்குநர் தலார் ஃபைக் சாலி.மனிதாபிமான, ராணுவ மற்றும் தூதரகம் சார்ந்த விமானங்களுக்கு இத் தடையில் இருந்து விலக்கு இருப்பதாக பிறகு அவர் கூறினார்.

விமான நிறுவனங்கள் இராக்குக்கு ஆதரவு

பாக்தாதின் கோரிக்கையை ஏற்று தங்கள் விமானங்களை ரத்து செய்யவுள்ளதாக லுஃப்தான்சா, ஆஸ்திரியன் ஏர் லைன்ஸ், துருக்கிஷ் ஏர் லைன்ஸ் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

குர்திஸ்தான் எதிர்வினை

இந்த தடை சட்டவிரோதமானது, குர்துக்களுக்கு எதிரான தண்டனை என்று குர்திஸ்தான் வட்டார அரசு கூறியுள்ளது. இந் நிலையில், குர்திஷ் பேஷ்மேர்கா படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் வளம் மிக்க கிர்குக் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய பகுதிகளுக்கு ராணுவத்தை அணுப்பும்படி இராக் பிரதமரை அந்நாட்டுப் பாராளுமன்றம் கேட்டுக் கொண்டதை எதிர்கொள்ள சட்ட நடவடிக்கைகளை எடுக்கவிருப்பதாகவும் குர்திஸ்தான் வட்டார அரசு சூளுரைத்துள்ளது.ஏற்கெனவே, இர்பில், சுலைமானியா விமான நிலையங்கள் இராக் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன.

இந்தத் தடை ஐ.எஸ். படையினருக்கு எதிரான போரை பலவீனப்படுத்தம் என்றும் குர்திஸ்தான் வட்டார அரசின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.குர்து சிறுபான்மை மக்களைக் கொண்டுள்ள இரான், துருக்கி போன்ற அண்டை நாடுகளும் குர்திஸ்தான் வாக்கெடுப்பை எதிர்த்துள்ளதோடு, குர்திஸ்தான் மீதான அழுத்தத்தை அதிகரித்துள்ளன.

பிற நாடுகள் எதிர்ப்பு

கச்சா எண்ணெய் இறக்குமதி விவகாரத்தில் இராக்கின் மத்திய அரசுடன் மட்டுமே தொடர்பு வைத்துக்கொள்ளவோம் என்று துருக்கி பிரதமர் பினாலி இல்திரிம் கூறியதாக இராக் பிரதமர் அபாதி தெரிவித்தார்.குர்திஸ்தானுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்துவரும் சுத்திகரித்த கச்சா எண்ணை போக்குவரத்தை வெள்ளிக்கிழமை இரான் தடை செய்துவிட்டதாக டாஸ்நிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.இதனிடையே, இந்த கருத்து வாக்கெடுப்பை அமெரிக்கா அங்கீகரிக்கவில்லை என்று அந்நாட்டு ராஜீயத் துறை செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

பின்னணி

கருத்து வாக்கெடுப்பின் முடிவுகளை ரத்து செய்யவேண்டும் என்று இராக் பிரதமர் ஹைதர் அல்-அபாதி வலியுறுத்திவரும் நிலையில், குர்திஸ்தான் தலைவர்கள் அந்த வாக்கெடுப்பு 'சட்டபூர்வமானது' என்று வலியுறுத்தி வருகின்றனர். அந்த வாக்கெடுப்பின் முடிவுகள் பாக்தாத்துடனும் அண்டை நாடுகளுடனும் பிரிவினை தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தும் உரிமையைத் தங்களுக்கு வழங்கியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.மத்திய கிழக்குப் பகுதியில் மக்கள் தொகைப்படி நான்காவது பெரிய மரபினம் குர்து இனம். எனினும் அவர்களுக்கு இதுவரை நிரந்தர தேசிய அரசு.இராக்கில் அவர்கள் 15-20 சதவீதம் உள்ளனர். 1991ல் தன்னாட்சிப் பகுதி கிடைக்கும்வரை, குர்துக்கள் இராக்கில் பல பத்தாண்டுகளாக ஒடுக்குமுறைகளை அனுபவித்தனர்.

  
   Bookmark and Share Seithy.com



"தாக்குதலை தடுக்க தவறிவிட்டேன்" - பதவியை ராஜினாமா செய்த மூத்த இஸ்ரேல் அதிகாரி!
[Thursday 2024-04-25 06:00]

ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலுக்கு பிறகு, இஸ்ரேலிய இராணுவ புலனாய்வு தலைவர் ராஜினாமா செய்துள்ளார். கடந்த ஆண்டு 7ம் திகதி பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் இஸ்ரேலியர்கள் மற்றும் வெளிநாட்டு குடிமக்கள் என 1200 பேர் கொல்லப்பட்டனர்.



ஆங்கிலேய கால்வாயில் பரிதாபம்: 5 பேர் பலியான சம்பவத்தில் 3 பேர் கைது!
[Thursday 2024-04-25 06:00]

ஆங்கில கால்வாயில் குழந்தை உட்பட ஐந்து பேர் உயிரிழந்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆங்கிலேய கால்வாயைக் கடக்க முயன்ற போது சிறுமி ஒருவர் உள்பட ஐந்து குடியேற்றத் தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேரை பிரித்தானிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.



பாரிஸ் ஒலிம்பிக்கில் தாக்குதலுக்கு திட்டமா? - 16 வயது சிறுவன் கைது!
[Thursday 2024-04-25 06:00]

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் "வீர மரணம் அடைய விரும்புகிறேன்" என்று கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறப்படும் 16 வயது சிறுவனை பிரான்ஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஜூலை 21ம் திகதி நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் "வீர மரணம் அடைய விரும்புகிறேன்" என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக கூறப்படும் 16 வயது சிறுவனை பிரான்ஸ் நாட்டின் பயங்கரவாத எதிர்ப்பு காவல்துறை கைது செய்துள்ளது.



இரத்தம் சொட்ட பக்கிங்ஹாம் அரண்மனை அருகில் பாய்ந்து சென்ற குதிரைகளால் பரபரப்பு!
[Wednesday 2024-04-24 18:00]

மத்திய லண்டனில் சாலை நடுவே ரத்தம் சொட்ட ஐந்து குதிரைப்படை குதிரைகள் சாரதி இல்லாமல் பாய்ந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குதிரைகளின் ஒரு சாரதிக்கு காயம்பட்டிருக்கலாம் என்றே முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மத்திய லண்டனின் தெருக்களில் ஒரு ஜோடி குதிரைகள், பீதியடைந்து, அவற்றில் ஒன்று ரத்தத்தில் நனைந்தபடி பாய்ந்து சென்றுள்ளது.



ஈரானுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட நாடொன்றிற்கு அமெரிக்கா எச்சரிக்கை!
[Wednesday 2024-04-24 18:00]

ஈரானுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட பாகிஸ்தான், தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. ஈரான் ஜனாதிபதியான Ebrahim Raisi, மூன்று நாட்கள் அரசுமுறைப் பயணமாக பாகிஸ்தான் சென்றிருந்தார். ஏப்ரல் 22ஆம் திகதி ஈரான் ஜனாதிபதியும், அவரது மனைவியும், வெளியுறவு அமைச்சர் முதலான சில அமைச்சர்களும், மூத்த அதிகாரிகளும் பாகிஸ்தான் சென்றார்கள். தற்போது அவர்கள் ஈரான் திரும்பிவிட்டனர்.



காட்டுத்தீ அபாயத்தில் கனடா!
[Wednesday 2024-04-24 18:00]

வழக்கத்துக்கு மாறாக, குளிர்காலத்தில் உஷ்ணம், அதிகரித்து வரும் வறட்சி மற்றும் எதிர்வரும் மாதங்களில் வழக்கத்தைவிட வெப்பம் அதிகமாக இருக்கும் என எச்சரித்துள்ள வானிலை ஆராய்ச்சி மையம் என பல காரணங்களால், மீண்டும் ஒரு பயங்கர அழிவை ஏற்படுத்தும் காட்டுத்தீ சூழலை கனடா எதிர்கொள்ளும் அபாயம் உள்ளதாக பெடரல் அரசு எச்சரித்துள்ளது.



இங்கிலாந்து சிறுவனின் கையில் கிடைத்த அபூர்வ வளையல்!
[Wednesday 2024-04-24 18:00]

சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான வளையல் இங்கிலாந்து சிறுவன் ஒருவர் கையில் கிடைத்துள்ள சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த ரோவன் என்ற 12 வயது சிறுவன் தனது செல்லப்பிராணியுடன் அப்பகுதியில் நடைப்பயிற்சி சென்றுள்ளான். அப்போது தரையில் ஒரு வினோதமான பொருள் தட்டுப்பட்டுள்ளது.



கனடாவின் தேடப்படும் குற்றவாளி: தகவலுக்கு $100,000 சன்மானம்!
[Wednesday 2024-04-24 06:00]

டொராண்டோ பொறியாளரின் துப்பாக்கி சூடு கொலை வழக்கில் கனடாவின் தேடப்படும் குற்றவாளியான நபர் தொடர்பான தகவலுக்கு $100,000 சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது. “கடின உழைப்பாளி" என்று குடும்பத்தினர் விவரித்த டொராண்டோ பொறியாளர் Shamar Powell 2023 ஜூலை மாதத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு பரிதாபமாக கொல்லப்பட்டார்.



லண்டனில் புனித ஜார்ஜ் விழாவில் பரபரப்பு!
[Wednesday 2024-04-24 06:00]

லண்டனின் மையப்பகுதியில் நடைபெற்ற புனித ஜார்ஜ் விழாக் கொண்டாட்டத்தில் வன்முறை வெடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் லண்டனின் மையப்பகுதியில் நடைபெற்ற புனித ஜார்ஜ் விழாக் கொண்டாட்டத்தில் வன்முறை வெடித்தது.



லண்டன் வாழ் தமிழர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
[Wednesday 2024-04-24 06:00]

பிரித்தானியாவில் தமிழர்களை இலக்கு வைத்து கொள்ளை கும்பல் ஒன்று செயற்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் லண்டன் சவுத்ஹோல் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் 25 ஆயிரம் பவுண்ட்ஸ் பெறுமதியான தங்க நகைகளை பறி கொடுத்துள்ளார். குறித்த பெண்மணி அந்தப் பகுதியிலுள்ள மெற்றோ வங்கிக்கு சென்று அங்குள்ள பெட்டகத்தில் வைத்திருந்த தங்க நகைககளை எடுத்து வந்துள்ளார்.



ஈரானின் பலம் கண்டு அதிர்ச்சியடைந்த அமெரிக்க கட்டளை மையம்!
[Tuesday 2024-04-23 18:00]

இஸ்ரேலை பொறுத்த வரை ஈரான் விடயத்திலும், ஈரான் உருவாக்கி வைத்துள்ள துணை படைகளை பொறுத்தளவிலும் இரண்டு தெரிவுகள் தான் இருகின்றது. ஈரான் உருவாக்கி வைத்துள்ள பிரச்சினையை இஸ்ரேல் முடிக்கப் போகிறதா அல்லது சமாளித்துக்கொண்டு இருக்க போகிறதா? ஈரான் பிரச்சினையை நிரந்தரமான முடித்து வைக்கும் முடிவை நோக்கி தான் இஸ்ரேல் சென்றுக் கொண்டு இருக்கிறது என்பது களநகர்வுகளை பார்க்கும் போதும் ஊகிக்கக் கூடியதாக இருக்கிறது.



சீனாவுக்காக உளவு பார்த்ததாக ஜேர்மன் நாடாளுமன்ற உறுப்பினரின் உதவியாளர் கைது!
[Tuesday 2024-04-23 18:00]

சீனாவுக்காக உளவு பார்த்ததாக, ஜேர்மன் நாடாளுமன்ற உறுப்பினரின் உதவியாளர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியின் வலதுசாரிக் கட்சியான Alternative for Deutschland (AfD) கட்சி நாடாளுமன்ற உறுப்பினர், Maximilian Krah. இவரது உதவியாளரான Jian G என்று ஊடகங்கள் குறிப்பிட்டுள்ள Jian Guo என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.



இஸ்ரேல் ராணுவ தலைமையகம் மீது ஹிஸ்புல்லா இயக்கம் தாக்குதல்!
[Tuesday 2024-04-23 18:00]

லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அடிக்கடி இஸ்ரேலைத் தாக்குகிற நிலையில் இஸ்ரேலும் பதிலடி கொடுத்த வடக்கு இஸ்ரேலில் உள்ள இராணுவ தலைமையகம் மீது ராக்கெட்டுகளை வீசியதாக ஹிஸ்புல்லா கூறினார்.



கனேடிய நகரமொன்றில் பற்றியெரிந்தபடி பயணித்த ரயில்!
[Tuesday 2024-04-23 18:00]

கனேடிய நகரமொன்றில், பற்றியெரிந்தபடி ரயில் ஒன்று பயணிக்கும் காட்சிகள் வெளியாகி மனதை பதைபதைக்கச் செய்துள்ளன. ஞாயிற்றுக்கிழமை இரவு, 10.49 மணியளவில், கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள லண்டனில், பற்றியெரிந்தபடி பயணித்த ரயில் ஒன்றைக் கண்ட பலர் அவசர உதவியை அழைத்தனர்.



பலவீனமாக உள்ள நாணயம்: தங்கத்தை வாங்கி குவிக்கும் சீன மக்கள்!
[Tuesday 2024-04-23 06:00]

உலக அளவில் தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில் சீன மக்கள் தொடர்ச்சியாக தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்கத்தை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றான சீனா, தற்போது அதிகம் வாங்கும் நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது. சீனாவும் இந்தியாவும் பொதுவாக உலகின் மிகப்பெரிய தங்கம் வாங்கும் நாடுகள் என்றே அறியப்படுகிறது.



லண்டனில் உயிருடன் தீயில் கருகிய இருவர்!
[Tuesday 2024-04-23 06:00]

வடக்கு லண்டனில் Walthamstow பகுதியில் குடியிருப்பு ஒன்று தீக்கிரையான சம்பவத்தில், அக்கம் பக்கத்தினர் அலறல் சத்தம் கேட்டதாகவும், பலியான இருவரும் உயிருடன் எரிந்திருக்கலாம் என்றே அஞ்சப்படுகிறது. தொடர்புடைய கோர சம்பவம் ஞாயிறன்று இரவு சுமார் 10.25 மணியளவில் நடந்துள்ளது. தகவலையடுத்து 6 தீயணைக்கும் வாகனங்கள் சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளது.



எபோலா தொற்று உருவான குகை குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை!
[Tuesday 2024-04-23 06:00]

கென்யாவில் உள்ள மவுண்ட் எல்கான் தேசிய பூங்காவில் அமைந்துள்ள உலகின் மிக ஆபத்தான கிடும் குகை உலகின் அடுத்த தொற்றுநோயை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. குறித்த குகையானது மனித வரலாற்றில் மிகவும் கொடிய வைரஸ்களின் இருப்பிடமாக மாறியுள்ளது என்றே நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். உயிர் ஆபத்தை ஏற்படுத்தியுள்ள எபோலா மற்றும் மார்பர்க் கிருமிகள் அங்கு தொடங்கியதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.



கனடாவில் அறிவிக்கப்பட்டுள்ள வேலை நிறுத்தப் போராட்டம்!
[Monday 2024-04-22 18:00]

கனடாவின் பொதுப் போக்குவரத்துத்துறை பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. ரி.ரீ.சீ போக்குவரத்து சேவையின் தொடர்பாடல், இலத்திரனியல் மற்றும் சமிக்ஞை பணியாளர்கள் இவ்வாறு தொழிற்சங்கப் போராட்டத்தில் குதிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.



புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவுக்கு அனுப்பியே தீருவோம்: பிரித்தானிய பிரதமர் சூளுரை!
[Monday 2024-04-22 18:00]

சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவுக்கு அனுப்பியே தீருவோம் என மீண்டும் சூளுரைத்துள்ளார் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக். நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்கள் இரண்டு ஆண்டுகளாக ருவாண்டா திட்டத்துக்கு முட்டுக்கட்டையாக இருந்துவந்துள்ளார்கள் என்று கூறிய ரிஷி, இதுவரை நடந்ததெல்லாம் போதும், இனி தாமதிக்கமுடியாது, இன்று இரவு நாடாளுமன்றம் கூடும், ருவாண்டா திட்டம் தொடர்பில் வாக்கெடுப்பு நடந்தே தீரும் என்று கூறியுள்ளார் அவர்.



வெளியுலக மக்களைக் கண்டாலே கடுமையாக தாக்கும் ஆதிவாசிகள்!
[Monday 2024-04-22 18:00]

வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள அந்தமான் தீவுகளில் ஒன்று வட சென்டினல் தீவு. அங்கு, Sentinelese என்னும் ஒரு கூட்டம் ஆதிவாசிகள் வாழ்கிறார்கள். பாதுகாக்கப்பட்ட அந்த பகுதிக்குச் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை. 2006ஆம் ஆண்டு, இந்திய மீனவர்கள் சிலர் அந்த தீவின் அருகில் சட்ட விரோதமாக நண்டு பிடிக்கச் சென்றுள்ளார்கள். அவர்களில் சுந்தர் ராஜ் (48) மற்றும் பண்டித் திவாரி (52) என்னும் இருவர் இரவில் படகில் நங்கூரம் பாய்ச்சிவிட்டு தங்கள் படகுகளிலேயே தூங்கிவிட்டிருக்கிறார்கள். அவர்கள் தூங்கும்போது, படகு மெல்ல நகர்ந்து சென்டினல் தீவின் அருகே சென்றுவிட்டிருக்கிறது.


Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா