Untitled Document
March 28, 2024 [GMT]
ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை நிறுவுவதற்குத் தேவையான நிதியுதவியைத் தமிழக அரசே செய்ய வேண்டும்:
[Thursday 2017-10-05 18:00]

ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கக்கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

ஐக்கிய அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலத்தில் 1636-ம் ஆண்டுத் தொடங்கப்பட்ட உலகின் முன்னணி பல்கலைக்கழகம் ஹார்வர்டு பல்கலைக்கழகமாகும். 350 ஆண்டுகள் பழமைவாய்ந்த இப்பல்கலைக்கழகமானது, உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியில் உலக அளவில் முதலிடம் வகிக்கிறது. இதில் ஆய்வுசெய்யப்பட்டு வெளியிடப்படும் ஆராய்ச்சி முடிவுகள் யாவும் உலகினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது. இங்குப் படித்த மாணவர்கள், பயிற்றுவித்த ஆசிரியர்களுள் 47 பேர் உலகின் உயரிய விருதாகக் கொண்டாடப்படும் நோபல் பரிசினைப் பெற்றிரருக்கிறார்கள் என்பது இப்பல்கலைக்கழகத்தின் சிறப்பினை விளக்குவதாகும்.

ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கக்கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஐக்கிய அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலத்தில் 1636-ம் ஆண்டுத் தொடங்கப்பட்ட உலகின் முன்னணி பல்கலைக்கழகம் ஹார்வர்டு பல்கலைக்கழகமாகும். 350 ஆண்டுகள் பழமைவாய்ந்த இப்பல்கலைக்கழகமானது, உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியில் உலக அளவில் முதலிடம் வகிக்கிறது. இதில் ஆய்வுசெய்யப்பட்டு வெளியிடப்படும் ஆராய்ச்சி முடிவுகள் யாவும் உலகினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது. இங்குப் படித்த மாணவர்கள், பயிற்றுவித்த ஆசிரியர்களுள் 47 பேர் உலகின் உயரிய விருதாகக் கொண்டாடப்படும் நோபல் பரிசினைப் பெற்றிரருக்கிறார்கள் என்பது இப்பல்கலைக்கழகத்தின் சிறப்பினை விளக்குவதாகும்.

  

இத்தகைய ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கென்று இருக்கையை அமைப்பதன் மூலம் தமிழைப் பன்னாட்டு அளவில் கற்கவும், ஆராய்ச்சிகள் பல மேற்கொள்ளவும் வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டு உலகின் தன்னிரிகல்லா உயர்தனி செம்மொழியான தமிழை உலகின் முதல் மொழியாக நிறுவுவதற்கும், தமிழின் இனிமையையும், மொழிவளத்தையும் பன்னாட்டு அளவில் பறைசாற்றுவதற்கும் ஓர் அரிய வாய்ப்பாக அமையும். தமிழின் தொன்ம இலக்கியங்களும், காப்பியங்களும் உலகளவில் ஆராயப்பட்டுத் தமிழர்தம் அறிவுக்கூர்மை உலகினரால் உணரப்படும் உன்னதத்தருணங்கள் அரங்கேறும்.

இப்பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவப்படுவதன் மூலம் தமிழ்த்துறைக்கு எனத் தகுதிகள் யாவும் வாய்க்கப் பெற்ற ஒரு பேராசிரியரை நியமித்து, அவருக்குக் கீழ் தமிழ்ப்புலமை நிறைந்த ஆசிரியர் பெருமக்களைச் சர்வதேசச் சமுதாயத்திற்குத் தமிழைக் கற்றுத்தரப் பணிக்குமர்த்தும். இதன்மூலம், தமிழின் இலக்கண இலக்கியங்கள், காப்பியங்கள், தமிழர்களின் கலை, இலக்கியம், பண்பாடு, வாழ்வியல் முறைகள், அறிவியல் நுட்பங்கள், தொன்ம வரலாறு, தொல்லியல் சான்றுகள் என்பது குறித்தான ஆய்வுகளுக்கு ஊக்கமளிக்கப்பட்டு ஜி.யு.போப்பும், வீரமாமுனிவரும் அறிந்த தமிழின் தொன்மையையும், பெருமையையும் உலகினர் அறிய வழிவகைச் செய்யப்படும்.

தமிழ்மொழியானது எத்தளத்திலும் நிலைபெறாது இருந்ததன் விளைவாகவே தமிழர்களுக்குத் தங்கள் மொழி குறித்துத் தாழ்வு மனப்பான்மை மேலீட்டு அந்நிய மொழி மோகத்தில் ஆங்கிலக் கவர்ச்சியில் வீழ்ந்து போயினர். தமிழ்ச்சமூகத்தில் புரையோடிப்போயிருக்கிற அத்தகைய அடிமை மனநிலைக்கு மருந்திடும் அருபெரும் பணியாக ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவப்படும் பெரும்பணி அமையும் என்பதில் துளியளவும் ஐயமில்லை.

அத்தகைய அளப்பெரும் பணிக்காய் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு உழைத்து வருகிற பெரும் மதிப்பிற்குரிய மருத்துவர் ஜானகி ராமன் அவர்களும், மருத்துவர் திருஞானசம்பந்தம் அவர்களும் போற்றத்தக்கவர்கள்; தமிழ்த்தேசிய இனத்தின் வருங்காலத் தமிழ்த்தலைமுறையினரால் கொண்டாடத்தக்கவர்கள். ஹார்வார்டு பல்கலைக்கழகத்திற்குள் தமிழ் இருக்கை அமைப்பதற்கு ஆறு மில்லியன் அமெரிக்க டாலர் ( இந்திய மதிப்பில் சுமார் 40 கோடி ரூபாய்) நிதியை இரண்டாண்டுக்குள் திரட்ட வேண்டும் என்று காலநிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அதில் ஒரு மில்லியன் அமெரிக்க டாலரை தாங்களே அளிப்பதாக மருத்துவப்பெருந்தகைகள் இருவரும் அறிவித்துள்ளனர்.

இதனால், மீதமிருக்கும் 5 மில்லியன் டாலர் நிதியை உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழர்களிடையே திரட்டுகிற பணிகள் நடந்தேறி வருகிறது. மொத்த நிதியையும் இப்போதே திரட்டி முடித்துவிட்டால் ஓராண்டுக்குள்ளேயே இருக்கையை அமைத்துவிடலாம். ஆனால், இதுவரை 3 மில்லியன் அமெரிக்க டாலர் மட்டுமே திரட்டப்பட்டிருக்கிறது என்பது கவலைக்குரியதாகும்.

உலகெங்கும் வாழும் தமிழர்களுக்குத் தாயகமாக விளங்கும் தமிழகத்தில் இருந்து அந்நிலத்தை ஆளும் அரசு இதற்காக எந்த முன்னெடுப்புகளையும் செய்யாது மிகுந்த வருத்தத்தைத் தருகிறது. ஆகையினால், தமிழ்த்தாயை அரியணை ஏற்றுவதற்குரிய அரிய வாய்ப்புகள் கனிந்துவந்தபோது தமிழகத்தை ஆண்ட அரசு துணைபுரியவில்லை என்ற வரலாற்றுப்பழிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அரசு உள்ளாக வேண்டாம் என்று அன்போடு அறிவுறுத்துகிறேன்.

தமிழுக்குத் தனியாகப் பல்கலைக்கழகம் அமைத்த அதிமுக நிறுவனர் எம்ஜியாரின் நூற்றாண்டுவிழா நடக்கும் இவ்வேளையில் இன்னொரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவ அவர் வழி வந்த அரசு நடவடிக்கை எடுத்தது என்பதே அவருக்கு இவ்வரசு செய்யும் உண்மையான மரியாதையாக இருக்கும் என்று கருதுகிறேன். எனவே, ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்குத் தேவையான நிதியுதவியைத் தமிழக அரசே செய்து தர தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் அருமைச்சகோதரர் மா.பா.பாண்டியராஜன் அவர்கள் துணைநிற்க வேண்டும் எனவும், தமிழக அரசே இதற்கு முழுப் பொருட்பேற்று ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!
[Thursday 2024-03-28 18:00]

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.



அரவிந்த் கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு!
[Thursday 2024-03-28 18:00]

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், அதில் 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.



வேட்பு மனுத்தாக்கல்: வெளியானது அண்ணாமலையின் சொத்து மதிப்பு!
[Thursday 2024-03-28 18:00]

கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடும் தமிழக பாஜக தலைவரின் சொத்து மதிப்பு விபரங்கள் வெளியாகியுள்ளது. கோவையில் போட்டியிடும் அண்ணாமலை நேற்று வேட்பு மனுத்தாக்கல் செய்த போது பிராமண பத்திரத்தில் தனது சொத்து விவரங்களை குறிப்பிட்டுள்ளார். அதன்படி, அண்ணாமலையிடம் கையிருப்பில் ரொக்கமாக ரூ.5.11 லட்சம் உள்ளது எனவும், வங்கி இருப்பில் ரூ.25,30,492 உள்ளது எனவும் தெரியவந்துள்ளது.



இங்கிலாந்தில் குடியுரிமை பெற்றவர் நாம் தமிழர் கட்சி பொதுச் செயலாளரா? - வெடித்தது அடுத்த சர்ச்சை!
[Thursday 2024-03-28 18:00]

இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் இந்தியாவில் நடைபெறும் தேர்தலுக்கான வேட்பு மனுவில் கட்சி பொதுச்செயலாளராக கையெழுத்திட முடியுமா என்று சர்ச்சைகள் எழுந்துள்ளது. 40 மக்களவை தொகுதிக்கான வேட்பாளர்களையும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரே மேடையில் அறிமுகம் செய்தார். இதில் 20 பெண் வேட்பாளர்களும், 20 ஆண் வேட்பாளர்களும் களமிறங்குகின்றனர்.



தனக்கு தானே ஊசிசெலுத்தி உயிரை மாய்த்துக்கொண்ட இளம் மருத்துவர்!
[Thursday 2024-03-28 06:00]

இந்திய மாநிலம் கேரளாவில் இளம் பெண்ணொருவர் தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் அபிராமி. 30 வயதான இவர், பிரதீஷ் ராகு என்பவரை கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டார்.



“பா.ஜ.க.விடம் இருந்து அ.தி.மு.க.வை மீட்கப் பாருங்கள்” - முதல்வர் பதிலடி!
[Thursday 2024-03-28 06:00]

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள கிருஷ்ணன் கோயிலில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தென்காசி பாராளுமன்ற திமுக வேட்பாளர் ராணிஸ்ரீகுமார் மற்றும் விருதுநகர் பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “எடப்பாடி பழனிசாமி காற்றிலேயே கம்பு சுற்றுபவர். இப்போது நடப்பது நாடாளுமன்றத் தேர்தல் பத்தாண்டுகளாக மக்கள் விரோத கொள்கைகளால், நாட்டை படுகுழியில் தள்ளியது ஒன்றிய பா.ஜ.க. அரசு. மண்புழு மாதிரி ஊர்ந்து பதவிக்கு வந்து, பதவி சுகத்திற்காகப் பச்சோந்தியாக மாறி, பா.ஜ.க.வுக்குப் பார்ட்னராக இருந்து, தமிழ்நாட்டு உரிமைகளை அடகு வைத்த பழனிசாமி, கூட்டணியிலிருந்து வெளியே வந்துவிட்டோம் என்று கபட நாடகம் நடத்துகிறார். எங்கேயாவது, பா.ஜ.க.வையோ, மோடியையோ விமர்சித்து ஒரு வார்த்தை பேசுகிறாரா?.



தமிழகத்தில் 1749 வேட்பு மனுக்கள் தாக்கல்!
[Thursday 2024-03-28 06:00]

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. மேலும் தமிழகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய இன்றே கடைசி (27.03.2024) நாள் ஆகும்.



ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்: சென்னையில் பரபரப்பு!
[Wednesday 2024-03-27 18:00]

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.



தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
[Wednesday 2024-03-27 18:00]

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.



ம.தி.மு.க. சின்னம் தொடர்பான வழக்கு: உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
[Wednesday 2024-03-27 18:00]

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. ஒரு தொகுதியில் போட்டியிட இருக்கிறது. சொந்த சின்னத்தில் மட்டுமே ம.தி.மு.க. போட்டியிடும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பம்பரம் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் (25.03.2024) அவசர வழக்காக தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நேற்று (26.03.2024) இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.



'நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம்' - அதிகாரப்பூர்வமாக அறிவித்த சீமான்!
[Wednesday 2024-03-27 18:00]

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.



தமிழக கடற்றொழிலாளர்களின் நலனைக் காக்கத் தவறும் மோடி அரசு: ஸ்டாலின் குற்றச்சாட்டு!
[Wednesday 2024-03-27 06:00]

தமிழக கடற்றொழிலாளர்களின் நலனைக் காக்கத் தவறிய அரசாக மோடி அரசு செயற்பட்டு கொண்டிருக்கிறது என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார். இதன் காரணமாக தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.



"பெருமாளுக்கு பக்தன், பெரியாருக்கு பேரன்" - துரை வைகோவின் அரசியல்!
[Wednesday 2024-03-27 06:00]

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் முன்னணி அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு ஒபந்தம் இறுதிசெய்து தேர்தல் பணிகளில் அதிரடி காட்டி வருகின்றன். அந்த வகையில், தமிழகத்தை ஆளும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒத்துக்கப்பட்டுள்ளது. விசிக, சிபிஐ மற்றும் சிபிஎம் அகிய கூட்டணி கட்சிகளுக்கு திமுக தலா 2 இரண்டு தொகுதிகள் ஒதுக்கியுள்ளது. மற்ற கூட்டணி கட்சிகளான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு தலா ஒரு தொகுதி என 19 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கும், மற்ற 21 தொகுதிகளில் திமுக 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றது.



இ.பி.எஸ்.ஸுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சரமாரி பதிலடி!
[Wednesday 2024-03-27 06:00]

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. இதன் ஒரு பகுதியாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (25.03.2024) பிரச்சாரம் மேற்கொண்ட போது, “நானாவது எய்ம்ஸ் செங்கல்லை காட்டினேன். ஆனால் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியிடம் பல்லை காட்டுறாரு” எனத் தெரிவித்து பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி இருக்கும் படத்தை காண்பித்திருந்தார்.



“இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும்” - ஓ. பன்னீர்செல்வம் அதிரடி!
[Tuesday 2024-03-26 18:00]

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.



பிரதமர் இல்லம் முற்றுகை: ஆம் ஆத்மியினர் குண்டுக்கட்டாக கைது!
[Tuesday 2024-03-26 18:00]

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், அதில் 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.



பம்பரம் சின்னம் கோரிய வழக்கு: தேர்தல் ஆணையம் பதில்!
[Tuesday 2024-03-26 18:00]

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.



இலங்கை - இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பில் இந்தியா வெளியிட்டுள்ள அறிவிப்பு!
[Tuesday 2024-03-26 18:00]

கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பாக இந்தியா - இலங்கை கூட்டு பணிக்குழு விரைவில் கூடும் என சென்னை மேல் நீதிமன்றத்தில் இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. குறித்த கூட்டு பணிக்குழுவின் ஆறாவது கூட்டத்திற்கு கடந்த ஆண்டு இறுதியில் இந்தியா இரண்டு திகதிகளை இலங்கைக்கு முன்மொழிந்தது. ஆனால் உள்நாட்டு பிரச்சினைகள் காரணமாக இலங்கை அதில் பங்கேற்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.



வேலுப்பிள்ளை பிரபாகரன் மீது சத்தியம் செய்து பிரச்சாரத்தை ஆரம்பித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்!
[Tuesday 2024-03-26 06:00]

இந்திய சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர், வேலுப்பிள்ளை பிரபாகரன் மீது சத்தியம் செய்து தனது பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார். மக்களவை தேர்தல் பிரச்சாரங்கள் தமிழகத்தில் சூடுபிடித்துள்ள நிலையில் எதிர்வரும் மார்ச் 27ஆம் திகதி வேட்பு மனுதாக்கல் நிறைவடைய உள்ளது.



சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு!
[Tuesday 2024-03-26 06:00]

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன் 17 ஆவது சீசன் இந்த ஆண்டு (2024) மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. அந்த வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 22 இல் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி - பெங்களூரு அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இதில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா