Untitled Document
April 19, 2024 [GMT]
அத்துமீறினால் 100 மில்லியன் ரூபா அபராதம்!
[Tuesday 2017-10-17 08:00]

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசிப்போருக்கு கடும் சிறைத் தண்டனையும் 100 மில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட அபராதமும் அறவிடப்படுமென மீன்பிடி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இலங்கை கடற்படையினரின் பணிகளுக்கு இடைஞ்சல் விளைவிக்கும் வகையில் கலகங்களை முன்னெடுக்கும் இந்திய மீனவர்களுக்கெதிராக, கடற்படை சட்ட விதிமுறைகளுக்கமையவே எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அமைச்சர் கூறினார்.

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசிப்போருக்கு கடும் சிறைத் தண்டனையும் 100 மில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட அபராதமும் அறவிடப்படுமென மீன்பிடி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இலங்கை கடற்படையினரின் பணிகளுக்கு இடைஞ்சல் விளைவிக்கும் வகையில் கலகங்களை முன்னெடுக்கும் இந்திய மீனவர்களுக்கெதிராக, கடற்படை சட்ட விதிமுறைகளுக்கமையவே எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அமைச்சர் கூறினார்.

  

இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் இரு நாடுகளதும் அமைச்சர்கள் மட்ட மூன்றாவது சந்திப்பு கடந்த வாரம் புது டில்லியில் நடைபெற்றது. இதன்போதே, இலங்கை அரசாங்கம் சார்பில் அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் குழு, இந்திய அமைச்சர்கள் மட்ட பிரதிநிதிகளிடம் இவ்விடயங்கள் தொடர்பில் அறிவித்ததாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய அமைச்சர் அமரவீர, இச்சந்திப்பு தொடர்பில் விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாட்டை நேற்று பிற்பகல் நடத்தினார். இதில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இலங்கையில் நடைமுறையிலுள்ள பொட்டம் ட்ரோலிங் சட்டத்திற்கமைய தற்போது சுமார் 25 ஆயிரம் ரூபா வரையிலான தண்டப்பணமே அறவிடப்படுகிறது. எனினும் இதில் செய்யப்படவுள்ள வெளிநாட்டுப் படகு சட்டமூல திருத்தத்திற்கமைய படகுகளின் நீளத்துக்கேற்ப பெருந்தொகை தண்டப்பணம் அறவிடப்படும். இதன்படி செலுத்தப்பட வேண்டிய அபராதம் 100 மில்லியன் ரூபாவிற்கும் மேற்படலாமென்றும் இலங்கைத் தரப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ சுமந்திரன் இந்திய அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டியதாகவும் அமைச்சர் அமரவீர விளக்கமளித்தார்.

இச்சந்திப்பில் இரு தரப்பினருக்குமிடையில் பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்களைக் கைதுசெய்தல் மற்றும் படகுகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகள் இலங்கை அரசாங்கத்தால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமென இந்தியாவுக்கு நாம் உறுதியாக கூறியதாகவும் அமைச்சர் அமரவீர தெரிவித்தார்.

"பொட்டம் ட்ரோலிங்" கடல் வளத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இந்திய அரசாங்கம் ஏற்றுக்கொண்டதாகவும் அதற்கமைய எதிர்காலத்தில் பொட்டம் ட்ரோலிங் செய்வதற்கு அனுமதி வழங்கப்படாதென்றும் ஏற்கனவே அத்துறையில் ஈடுபட்டோருக்கு மாற்று தொழில் அறிமுகம் செய்யப்படுமென்றும் இந்திய தரப்பினர் வாழங்கிய வாக்குறுதிகள் சந்திப்புக்களில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியதென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கை படகுகளில் வி.எம்.எஸ் பொருத்தப்பட்டிருப்பது போன்று இந்திய படகுகளிலும் அவை பொருத்தப்பட வேண்டுமென இலங்கை தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக்கொண்ட இந்திய தரப்பு, விரைவில் முதற்கட்டமாக ஆயிரம் படகுகளுக்கு வி.எம்.எஸ் பொருத்துவதற்கு இணங்கியதாகவும் அவர் கூறினார்.

நல்லிணக்க அடிப்படையில் இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் மீன் பிடிப்படகுகளை இலங்கை அரசாங்கம் விடுவித்தமையை இந்தியா பாராட்டியுள்ள அதேநேரம், தற்போது விடுவிக்கப்பட்டுள்ள மீன் பிடிப்படகுகள் பாவனைக்கு உட்படுத்தப்படாதிருப்பதால் எதிர்காலத்தில் கைப்பற்றப்படும் மீன்பிடிப் படகுகளை பாதுகாப்பாக வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. எனினும் அக்கோரிக்கையை ஏற்க இலங்கை மறுத்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கையிலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை இந்தியாவுக்கூடாக செல்ல அனுமதிக்குமாறும் இலங்கை தரப்பு இச்சந்திப்பின்போது இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



கச்சதீவு விடயத்திலும் ஈழத்தமிழர்கள் பார்வையாளர்கள்.
[Friday 2024-04-19 20:00]

இந்து சமுத்திரத்தைக் கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும், நிர்வகிக்கவும்வல்ல கேந்திர மையத்தில்இந்தியாவும் இலங்கைத் தீவும் அமைந்திருப்பதனால் இன்றைய சர்வதேச ஒழுங்கு மாற்றத்தில் இந்தபிராந்தியம் முக்கியத்துவம் பெற்றதாக விளங்குகிறது. இந்த நிலையில் இந்தியாவிலும் இலங்கையிலும்தேர்தல்கள் நெருங்கி வரும் வேளையில் பாக்கு நீரிணை சார்ந்தும், கச்சதீவு சார்ந்தும் இரு நாடுகளிலும் தேர்தல் அரசியல் நலன்களுக்காக செயற்கையான ஒரு முறுகல்நிலை தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது.



யாழ்ப்பாணத்தில் அன்னை பூபதியின் நினைவேந்தல்! Top News
[Friday 2024-04-19 16:00]

மட்டக்களப்பில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.



திருகோணமலையில் நினைவுகூரப்பட்ட அன்னை பூபதி!
[Friday 2024-04-19 16:00]

மட்டக்களப்பில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின் 36ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருக்கோணமலை மாவட்ட பணிமனையில் இன்றையதினம் இடம்பெற்றது.



செம்மணியின் அயல் கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ஆபத்து! - ஐங்கரநேசன் எச்சரிக்கை.
[Friday 2024-04-19 16:00]

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைக்கப்படுமாயின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படும் என தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



சுதந்திரக் கட்சி பிரச்சினையில் தலையிட முடியாது! - கைவிரித்தது தேர்தல் ஆணைக்குழு.
[Friday 2024-04-19 16:00]

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் நிலவும் உட்பூசல் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தமது ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



ஈரானிய ஜனாதிபதிக்கு உயர் பாதுகாப்பு!
[Friday 2024-04-19 16:00]

ஈரான் - இஸ்ரேலுக்கு இடையில் எந்த நேரத்திலும் மோதல் நிலைமை ஏற்படலாம் என்ற பரபரப்புக்கு மத்தியில், ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.



புங்குடுதீவில் மனித எலும்பு எச்சங்கள் மீட்பு!
[Friday 2024-04-19 16:00]

யாழ். புங்குடுதீவில் கட்டடம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் இருந்து மனித எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது.



ஈரான் ஜனாதிபதியின் பயணம் கடைசி நேரத்தில் ரத்தாகலாம்!
[Friday 2024-04-19 16:00]

ஈரான் ஜனாதிபதியின் இலங்கைக்கான பயணம் கடைசி நேரத்தில் இரத்துச் செய்யப்பட வாய்ப்புண்டு என்று நாடாளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.



சஜித்துக்கு ஆதரவளித்தால் ரணிலுக்கு பதவி! - தூண்டில் போடுகிறது ஐக்கிய மக்கள் சக்தி.
[Friday 2024-04-19 16:00]

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி, சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் பட்சத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பதவி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க குறிப்பிட்டுள்ளார்.



அருட்தந்தை சிறில் காமினி வாக்குமூலம்!
[Friday 2024-04-19 16:00]

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் விசாரிப்பதற்காக 'ஞானார்த்த பிரதிபய' கத்தோலிக்க பத்திரிகையின் பிரதம ஆசிரியர் அருட்தந்தை சிறில் காமினி இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.



யாழ்ப்பாணத்தில் இருந்து நள்ளிரவில் கடத்தப்படும் சுண்ணக்கற்கள்!
[Friday 2024-04-19 05:00]

யாழ்ப்பாணத்தில் இருந்து நள்ளிரவு வேளை சுண்ணக்கற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு திருகோணமலைக்கு கொண்டு செல்லப்படுவதாக மக்கள் என்னிடம் முறையிட்டுள்ளார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.



வவுனியாவில் இன்று கூடுகிறது தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு!
[Friday 2024-04-19 05:00]

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று வவுனியாவில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. கட்சி முகம்கொடுத்துள்ள வழக்குகள், ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக இதில் ஆராயப்படவுள்ளது.



கனடாவின் இனஅழிப்புக் குற்றச்சாட்டு - இலங்கை அரசின் தோல்வி!
[Friday 2024-04-19 05:00]

தமிழ் இன அழிப்புத் தொடர்பில் கனடாவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் நினைவுச் சின்னத்தை இலங்கையால் தடுத்து நிறுத்த முடியவில்லை என இராஜதந்திர அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.



மேதினத்தில் பலத்தை நிரூபிப்போம்!
[Friday 2024-04-19 05:00]

மே தினத்தின் பின்னர் பொதுஜன பெரமுன கட்சிக்குள் பாரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.



மாரடைப்பால் கணவன் மரணம், உயிரை மாய்த்தார் மனைவி! - இரு பெண் பிள்ளைகள் நிர்க்கதி.
[Friday 2024-04-19 05:00]

நெடுங்கேணியில் மாரடைப்பு காரணமாக கணவன் இறந்ததும், கணவனின் இழப்பை தாங்க முடியாத மனைவி தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். நேற்று மதியம் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.



சுற்றுலாவியிடம் உளுந்து வடை, தேனீருக்கு 800 ரூபாய் கறந்தவர் கைது!
[Friday 2024-04-19 05:00]

வெளிநாட்டு சுற்றுலா பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் கடையில் இருக்கும் நபர் களுத்துறை சுற்றுலா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.



14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாவிகள் இலங்கை வருகை!
[Friday 2024-04-19 05:00]

இந்த வருடத்தின் முதல் 14 வாரங்களில் 700, 000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது



இதய சத்திர சிகிச்சையில் தவறு - உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் குற்றச்சாட்டு!
[Friday 2024-04-19 05:00]

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக, உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.



கிணற்றில் தவறி விழுந்து பெண் மரணம்!
[Friday 2024-04-19 05:00]

வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை உயிரிழந்துள்ளார். மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



கனடா 400 கிலோ தங்க கொள்ளை - பிரசாத் பரமலிங்கம் உள்ளிட்ட 6 பேர் கைது!
[Thursday 2024-04-18 16:00]

கனடாவில் இடம்பெற்ற மிகப் பெரிய தங்கக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஏர் கனடா விமான சேவையின் இரண்டு பணியாளர்களும், பிரசாத் பரமலிங்கம் என்ற தமிழரும் அடங்குவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா