Untitled Document
April 25, 2024 [GMT]
சர்வதேச இந்து இளைஞர் பேரவையுடன் இணைந்து மன்னார் மாவட்ட அறநெறி பாடசாலைகளின் இணையம் நடாத்திய இந்து மாநாடு! Top News
[Wednesday 2017-10-18 08:00]

 சர்வதேச இந்து இளைஞர் பேரவையுடன் இணைந்து மன்னார் மாவட்ட அறநெறி பாடசாலைகளின் இணையம் நடாத்திய  இந்து மாநாடு  கடந்த  ஞாயிற்றுக்கிழமை மன்னார் நகர மண்டபத்தில்  சிறப்பாக  நடைபெற்றது.

சர்வதேச இந்து இளைஞர் பேரவையுடன் இணைந்து மன்னார் மாவட்ட அறநெறி பாடசாலைகளின் இணையம் நடாத்திய இந்து மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை மன்னார் நகர மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

  

மன்னார் நகரம் முழுவதும் நந்திக்கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட நிலையில் மன்னார் நுழைவாயிலில் உள்ள பாலத்தடியில் ஆரம்பமான ஊர்வலம் பெரும்திரளான சைவ மக்களுடன் மன்னார் நகரசபை மண்டபத்தை வந்தடைந்தது. இவ் ஊர்வலத்தில் நடராஜர் திருவுருவத்தினை இளைஞர்கள் தோளிலே சுமந்து வர சைவ பெரு மக்கள் நந்திக்கொ டிகளை ஏந்திய வண்ணம் கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வில் கலந்து கொண்ட விருந்தினர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்படடனர் அதனை தொடர்ந்து நந்தி கொடி ஏற்றும் நிகழ்வு இடம்பெற்றது. இந்து மாநாட்டு நிகழ்வுகள் இரு அரங்குளாக நடை பெற்றன காலை நிகழ்வுகள் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அரங்கில் நல்லை திருஞானசம்பந்தர் ஆதின முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞான சம்பந்த சுவாமிகள் முன்னிலையில் மன்னார் அறநெறி பாடசாலைகளின் இணையத்தின் தலைவர் செந்தமிழருவி சிவஸ்ரீ மகா தர்மகுமார குருக்கள் தலைமையில் இடம் பெற்றன.

இந்நிகழ்வில் சிறப் பு விருந்தினர்களாக யாழ்.பல்கலைகழக விரிவுரையாளர் சட்டத்தரணி கோசலை மதன் கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி அதிபர் செந்தமிழ் சொல்லருவி ச.லலீசன், வவுனியா தமிழ் சங்க ஸ்தாபகர் தமிழருவி த.சிவகுமாரன், சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் ஸதாபகர் இலக்கியமணி சி.கணேஸ்குமார் ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக ஈலிங் கனக துர்க்கை ஆலய தலைவர் ரீ.யோகநாதன், லண்டன் சிவன் கோவில் அறங்காவலர் வி.கணேசமூர்த்தி ,மன்னார் ஆங்கில வள நிலைய முகாமையாளர் எஸ்.சண்முகலிங்கம் ,மன்னார் சித்தி விநாயகர் இந்துகல்லூரி அதிபர் த.தனேஸ்வரன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

இந்நிகழ்வில் திருமுறையினை அறநெறி ஆசிரியர்கள் ஓத தமிழ்த்தாய் வாழ்த்தினை திருமதி லி.சுபோதினி பாடினார். திருக்கேதீச்சர பிரதம குரு சிவஸ்ரீதி.கருணானந்த குருக்க ளின் ஆசியுரையினையை தொடர்ந்து கீரி ஸ்ரீ முருகன் அறநெறி பாடசாலை மாணவர்களின் சிவதாண்டவம் நடன நிகழ்வும் கவின்கலாலய நாட்டியபள்ளி மாணவி கே.எஸ். திவிஸாவின் நடன நிகழ்வும் இடம்பெற்றது அதனை தொடர்ந்து சிறப்பு சொற்பொழிவுகள் பிரதம விருந்தினர் இடம் பெற்றன அதனை தொடர்ந்து மன்னார் அறநெறி பாடசாலைகளின் இணையத்தின் செயலாளர் ம.நடேசசானந்தனின் நன்றியுரையுரையுடன் காலை நிகழ்வுகள் நிறைவு பெற்றன.

மாலை நிகழ்வுகள் முத்தமிழ் வித்தகர் விபுலானந்தர் அரங்கில் தமிழ்நாடு பேரூர் ஆதினம் இளைய சந்நிதானம் தவத்திரு.மருதாச்சலம் அடிகளார் முன்னிலையில் சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் இலங்கை கிளைத்தலைவர் சிவத்தமிழ் செல்வர் சிவ.கஜேந்திரகுமார் தலைமையில் நடை பெற்றன.

இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலைமாமணி சொல்வேந்தர் சுகி சிவம் அவர்களும் சிறப்ப விருந்தினர்களாக பேராதனை பல்கலைகழகத்தின் தமிழ்த்துறை தலைவர் வ.மகேஸ்வரன் யாழ். அறிவு திருக்கோவில் தலைவர் மனவளகலை பேராசிரியர் அருள்நிதி சி.முருகானந்தவேல் மட்டகளப்பு இந்து இளைஞர் மன்ற தலைவர் சீ.யோகேஸ்வரன,; ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக மன்னார் இந்து ஆலயங்களின் ஒன்றிய தலைவர் வைத்திய கலாநிதி மு.கதிர்காமநாதன், யாழ்.இந்துகல்லூரி அதிபர் ஏ.ஐ.தயானந்தராஜா, லண்டன் சிவன் கோவில் அறங்காவலர் எஸ்.பரமேஸ்வரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வானது வீராச்சாமி குழுவினரின் மங்கல வாத்தியத்தினை தொடர்ந்து பஞ்புராணம், தமிழ்த்தாய் வாழ்த்தினை மன்னார் சித்தி விநாயகர் இந்து கல்லூரி மாணவர்க ள் வழங்கினர். சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் ஊடக இணைப்பாளர் கி.வசந்தரூபனின் வரவேற்புரையினை தொடர்ந்து தலைமையுரையும் சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் உப செயலாளர் வீ.பிரதீபனின் பேரவையின் நோக்கங்கங்களும் குறிக்கோளும் என்ற தலைப்பில் சொற்பொழிவு இடம்பெற்றது அதனை தொடர்ந்து சிறப்பு சொற்பொழிவுகள் பிரதம விருந்தினர் உரைகள் இடம் பெற்றன அதனை தொடர்ந்து மட்டகளப்பு அழகியல் கல்லூரி மாணவர்களின் வயலின் இசையும் மன்னார் சைவக்கலை இலக்கிய மன்றத்தினரின் நாட்டிய நிகழ்வும் இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து சமய,சமூக,கலை பணிகளை ஆற்றிவரும் பெரியோர் கௌரவிப்பு நிகழ்வு நடை பெற்றது. இக்கௌரவிப்பு நிகழ்வில் கலாநிதி மறவன்புலவு க.சச்சிதானந்தம், சிவசம்பு. இராமகிருஸ்ணன்,சுப்பிமணியம்..பி ருந்தாவனநாதன், வீராச்சாமி அரிகரபுத்திரன் ஆகியோருக்கு சிறப்பு விருதுகள் வழங்கி பாராட்டும் நிகழ்வு இடம் பெற்றன.அதனை தொடர்ந்து சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் செயலாளர் ல.சதீஸ்குமாரின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றன.

  
   Bookmark and Share Seithy.com



ஈரான் ஜனாதிபதியின் விமானத்துக்கு முன்னால் புறப்பட்ட இஸ்ரேலிய விமானம்!
[Thursday 2024-04-25 16:00]

இலங்கையிலிருந்து ஈரான் ஜனாதிபதியின் விமானம் புறப்படுவதற்கு முன்னர் இஸ்ரேலிய விமானமொன்று அங்கிருந்து புறப்பட்டது என விமானங்களின் பயணங்களை கண்காணிக்கும் பிளைட்ராடர் 24 .கொம் தகவல் வெளியிட்டுள்ளது.



பொய் சொல்கிறார் பேராயர்! - கோட்டா கடும் தாக்கு.
[Thursday 2024-04-25 16:00]

பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவரை கடுமையாக சாடியுள்ளார்.



சம்பந்தனுக்கு 3 மாத விடுமுறை!
[Thursday 2024-04-25 16:00]

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தனுக்கு சம்பளத்துடன் கூடிய மூன்று மாத கால விடுமுறை வழங்க நாடாளுமன்றம் இன்று அனுமதி வழங்கியது.



பசில்- ரணில் பேச்சில் இணக்கம் - பரந்துபட்ட கூட்டணிக்கு தயார்!
[Thursday 2024-04-25 16:00]

பரந்த அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கான அதன் முதல் நடவடிக்கையாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர் பசில் ராஜபக்ஷ மற்றும் ஏனைய கட்சிகள் மற்றும் குழுக்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியதுடன் மே தினத்திற்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலை கருத்தில் கொண்டு அரசியல் பணிகளை துரிதப்படுத்த தீர்மானித்துள்ளார்.



சஜித்துடன் சீன உயர்மட்டக் குழு சந்திப்பு!
[Thursday 2024-04-25 16:00]

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச உறவுகள் திணைக்களத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவினர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியின் பிரதிநிதிகளை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து புதன்கிழமை பிற்பகல் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர் .



தமிழரசுக் கட்சி வழக்கு -ஜூனுக்கு ஒத்திவைப்பு!
[Thursday 2024-04-25 16:00]

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.



சாதாரண தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு 30 ஆம் திகதி முதல் தடை!
[Thursday 2024-04-25 16:00]

எதிர்வரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை இலக்காகக் கொண்டு இடம்பெறும் மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் எதிர்வரும் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் இடைநிறுத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.



மஹிந்தவிடம் 1000 மில்லியன் ரூபா கேட்கிறார் மைத்திரி!
[Thursday 2024-04-25 16:00]

ஊடகங்கள் ஊடாக வெளியிட்ட அறிக்கையினால் ஏற்பட்ட அவமதிப்புக்காக தனக்கு இழப்பீடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு சட்டத்தரணி ஊடாக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். மைத்திரிபால சிறிசேனவுக்கு 1,000 மில்லியன் ரூபா இழப்பீட்டுத் தொகையை 14 நாட்களுக்குள் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.



மொட்டுவில் பொருத்தமான பல வேட்பாளர்கள்!
[Thursday 2024-04-25 16:00]

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமது கட்சியிலிருந்து பொருத்தமான வேட்பாளர் நிறுத்தப்படுவார் என, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமது கட்சியில் பல வேட்பாளர்கள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



படுகொலைகளுக்குப் பின்னால் இருந்த கோட்டா!
[Thursday 2024-04-25 06:00]

2005 ஆம் ஆண்டு ஜோசப் பரராஜசிங்கம் எம்.பி.,படுகொலை, 2006 ஆம் ஆண்டு ரவிராஜ் எம்.பி.படுகொலை ,2009 ஆம் ஆண்டு இறுதி யுத்த படுகொலைகள், 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆகிய 4 சம்பவங்களின் பின்னாலும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ,முன்னாள் ஜனாதிபதியுமான கோட்டாபாய ராஜபக்‌ஷவே இருந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. யான சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.



புலிகளுக்கு எதிராக போரிட்ட இராணுவத்தினர் உக்ரைன் - ரஷ்யாவில் தங்களுக்குள் மோதுகின்றனர்!
[Thursday 2024-04-25 06:00]

விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிராக போராடிய இலங்கை இராணுவத்தினர் இன்று உக்ரைன் மற்றும் ரஷ்யா இராணுவத்தில் சேர்ந்து மோதிக் கொள்கிறார்கள். இராணுவ முகாம் உதவியாளர்களாக இலங்கையர்கள் அழைக்கப்பட்டு பலவந்தமான முறையில் யுத்த களத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். சட்டவிரோதமான முறையில் முன்னெடுக்கப்படும் இச்செயற்பாடுகள் குறித்து அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.



உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகளுக்கு உயர்ந்தபட்ச தண்டனை!
[Thursday 2024-04-25 06:00]

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் தமது அரசாங்கத்தில் விசேட விசாரணை ஆணைக்குழுவின் ஊடாக விசாரணைகளை முன்னெடுப்போம். ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கமைய வழக்கு விசாரணை மேற்கொள்ள விசேட நீதிமன்றம் அமைத்து, தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரையும் சட்டத்தின் முன் கொண்டு வருவதுடன், அவர்களுக்கு வழங்கக் கூடிய உயர்ந்தபட்ச தண்டனையை வழங்கவும் நடவடிக்கை எடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.



இழுபறியில் தமிழரசு - வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!
[Thursday 2024-04-25 06:00]

திருகோணமலை நீதவான் நீதிமன்றில் புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி நிர்வாகத் தெரிவு தொடர்பான வழக்கு எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.



தலைமன்னார் சிறுமி கொலை குற்றவாளி பொலிஸ் துணையுடன் இந்தியாவுக்கு தப்பியோட்டம்!
[Thursday 2024-04-25 06:00]

தலைமன்னாரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த சம்பவத்தில் கைதான சந்தேக நபரான அப்துல் ரகுமான் என்ற நபர் வவுனியா வைத்தியசாலையிலிருந்து தப்பித்து இந்தியாவுக்கு சென்றுள்ளார். பொலிஸாரின் பொறுப்பற்ற செயற்பாடுகள் அதிருப்திக்குரியன என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸவிடம் கேள்வி எழுப்பினார்.



சூல கொடிதுவக்குவுக்கும் சஹ்ரானுக்கும் என்ன தொடர்பு?
[Thursday 2024-04-25 06:00]

பயங்கரவாதி சஹ்ரானுக்கும் இராணுவ புலனாய்வு பிரிவின் அப்போதைய பணிப்பாளர் சூலா கொடித்துவக்கும் இடையிலான தொடர்பு என்ன? களனி கம பகுதியில் வெடிபொருட்கள் அடங்கிய லொறியை சோதனை செய்ய பொலிஸார் முற்படுகையில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் அதற்கு தடை விதித்து வாகனத்தை விடுவிக்க அறிவுறுத்தியது ஏன்? என ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யான காவிந்த ஜயவர்தன கேள்வி எழுப்பினார்.



ஈரான் - இலங்கை ஜனாதிபதிகள் சந்திப்பு - 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!
[Thursday 2024-04-25 05:00]

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்கும் இடையில் நேற்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.



வெடுக்குநாறி மலை விவகாரம் - தொடர்கிறது மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணை!
[Thursday 2024-04-25 05:00]

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் வவுனியா மனிதவுரிமை ஆணைக்குழுவினரால் நெடுங்கேணிப் பொலிசார் மற்றும் வனவளத் திணைக்கள அதிகாரிகளிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.



பொய்கூறும் கோட்டாவின் புத்தகம்!
[Thursday 2024-04-25 05:00]

தன்னை தமிழ், முஸ்லிம் மக்களே விரட்டியடித்தார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளமை முற்றிலும் பொய்யானது. அவர் இவ்வாறாக சிறுபான்மை மக்கள் மீது குற்றச்சாட்டை முன்வைத்து தனது பாவத்தை கழுவிக்கொள்ள முயற்சிக்கின்றார்என ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி கபீர் ஹாசீம் தெரிவித்தார்.



இறக்குமதி பால்மா விலை குறைகிறது!
[Thursday 2024-04-25 05:00]

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை இன்று முதல் குறைக்கப்படவுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் பால்மா பக்கட்டின் விலை 250 ரூபாயினால் குறைக்கப்படவுள்ளது. அத்துடன், 400 கிராம் பால்மா பக்கட்டின் விலை 100 ரூபாயினால் குறைக்கப்படவுள்ளது.



மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளில் முன்னேற்றம் இல்லை! - அமெரிக்கா குற்றச்சாட்டு.
[Wednesday 2024-04-24 16:00]

1983ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டுவரை இடம்பெற்ற மனித உரிமை துஸ்பிரயோகங்கள் தொடர்பிலான விசாரணைகளில் சிறிதளவு முன்னேற்றமும் இல்லை அதேபோல 1988-89 ஜேவிபி கிளர்ச்சிகாலத்தில் இடம்பெற்ற மனித உரிமை துஸ்பிரயோகங்கள் குறித்த விசாரணைகளிலும் எந்த முன்னேற்றமும் இல்லை என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.


Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா