Untitled Document
April 19, 2024 [GMT]
அதிகாரத்தைக் கைப்பற்றும் ஆயுதமாக அரசியலமைப்பை பயன்படுத்த வேண்டாம்! - மகிந்தவைக் கோரும் சம்பந்தன்
[Friday 2017-11-17 08:00]

அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றுவதற்கு அரசியலமைப்பு தயாரிப்பை பயன்படுத்த வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவிடம் கோரிக்கை விடுத்தார்.

அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றுவதற்கு அரசியலமைப்பு தயாரிப்பை பயன்படுத்த வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவிடம் கோரிக்கை விடுத்தார்.

  

அரசியலமைப்பு தயாரிப்பை எதிர்ப்பதாயின் பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணைக்கு எதிராக வாக்களித்திருக்க முடியும். மக்கள் மத்தியில் இனரீதியான குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்.

2018ஆம் ஆண்டு வரவு- செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான இறுதிநாள் விவாதம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் ஜனாதிபதியிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்திருந்தார்.

"உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. அரசாங்கத்தைத் தோற்கடித்து தேர்தலில் வெல்லவேண்டியதேவை உங்களுக்கு உள்ளது. அது உங்களுடைய அரசியல் செயற்பாடு என்பதால் அது குறித்து எவரும் முறைப்பாடு செய்ய முடியாது. எனினும், இதனை அடைவதற்காக இனங்களுக்கிடையில் பதற்றமொன்றை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கின்றீர்கள். இதனாலேயே அரசியலமைப்பு நாட்டை பிரிக்கும் என்ற பிரசாரத்தை முன்னெடுக்கின்றீர்கள். அரசியலமைப்பு தயாரிப்புக்கு எதிர்ப்புதெரிவிப்பதாயின், ஏன் பாராளுமன்றத்துக்கு வந்து பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கவில்லை" என்றும் கேள்வியெழுப்பினார்.

அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமாயின் வேறுவழிகளில் அதனைக் கைப்பற்றுங்கள். அதில் எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அதிகாரத்துக்கு வருவதற்காக அரசியலமைப்பை ஒரு வழியாகப் பயன்படுத்த வேண்டாம் என்றார். "மக்களால் மதிக்கப்படும் சிரேஷ்ட தலைவரான நீங்கள் அரசியலமைப்பு தயாரிக்கும் செயற்பாடுகளில் பங்குதாரராக கலந்துகொள்ளவேண்டும் என விரும்புகின்றோம். இதற்கு ஒத்துழைப்பு வழங்குவது உங்களுடைய அடிப்படைக் கடமையாகும். இதிலிருந்து விலகமுடியாது" என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், அரசியலமைப்பு தொடர்பில் எதிரான கருத்துக்களைக் கேட்க முடிகிறது. இது துரதிஷ்டவசமானது என்பதுடன், இவ்வாறான கருத்துக்கள் நாட்டின் எதிர்கால பொருளாதாரத்துக்கு சாதகமாக அமையாது என்பதை அவர்கள் உணரவேண்டும். அரசியலமைப்பின் கடந்தகால மற்றும் தற்கால அனுபவங்கள் குறித்து நாட்டிலுள்ள சகல மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதுடன், இது நாட்டில் அக்கறையுடையவர்களின் அடிப்படையாகும். இதுவிடயத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ பாராளுமன்றத்திலும், அதற்கு வெளியேயும் எடுத்துள்ள நிலைப்பாடானது சமூகங்களுக்கிடையில் குரோதத்துக்கே வழிவகுக்கும்.

அவர் அதிகாரங்கள் பகிரப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதுடன், அதிகாரங்கள் கொழும்பில் மாத்திரமே இருக்கவேண்டும் எனக் கூறிவருகிறார். பதினெட்டாவது திருத்தத்தின் ஊடாக இதனை அவர் நடைமுறைப்படுத்த முயற்சித்திருந்தார். இவ்வாறான செயற்பாடுகள் அதிகாரத்தில் இருக்கும் தரப்பினருக்கே நன்மை பயப்பதாக இருக்கும். அதனால் மக்களுக்கு எந்தவித நன்மையும் ஏற்படாது. அதிகாரத்தில் நேரடியாகப் பங்கெடுப்பதாயின் அதிகாரம் பகிரப்பட வேண்டும். நாட்டை பிளவுபடுத்துவதற்கு முயற்சிகள் எடுக்கப்படுவதாக மஹிந்த ராஜபக்‌ஷ கூறிவருகின்றார். அவருடைய இந்தக் கருத்து பிழையானது என்பதை திட்டவட்டமாகக் கூறுகின்றேன். பிரிக்கப்படாத, ஒற்றுமையான நாட்டை உறுதிப்படுத்தும் வகையில் அரசியலமைப்பு என்பதை நாம் முன்வைத்த யோசனைகளில் பகிரங்கமாக குறிப்பிட்டுள்ளோம்.

அரசியலமைப்பை தயாரித்து பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, அங்கீகாரத்துடன் சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியிருந்தார். இவ்வாறான நிலையிலேயே தேசிய அரசாங்கம் தற்பொழுது அரசியலமைப்பு தயாரிக்கும் பணிகளை முன்னெடுத்துள்ளது. அரசியலமைப்பு சபை மற்றும் வழிநடத்தல் குழு அமைக்கப்பட்டு, பொது மக்களின் கருத்துக்களும் பெறப்பட்டு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இவற்றின் ஊடாக அரசியலமைப்பு வரைபு தயாரிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டாலும், சர்வஜன வாக்கெடுப்பிலேயே இறுதி முடிவு எடுக்கப்படும். மக்களுக்குத் தெரியாமல் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்பட விரும்பவில்லை. ஆனால் முன்னாள் ஜனாதிபதி தன்னால் முன்மொழியப்பட்ட விடயத்துக்கு எதிரான நிலைப்பாட்டை தற்பொழுது எடுத்துள்ளார்.

2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் திகதி முழு பாராளுமன்றத்தையும் அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணையொன்று சபையில் நிறைவேற்றப்பட்டது. அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகள் இதன் மூலம் ஆரம்பமானது. அரசியலமைப்பு தயாரிப்பு பணிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாயின் ஏன் பாராளுமன்றத்தில் வந்து அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணைக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ வாக்களிக்கவில்லை.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்படவுள்ளன. அரசாங்கத்தைத் தோற்கடித்து தேர்தலில் வெல்லவேண்டியுள்ளது. இது உங்களுடைய அரசியல் செயற்பாடு என்பதால் யாரும் அதற்கு எதிராக முறைப்பாடு செய்ய முடியாது. இதனை அடைவதற்காக இனங்களுக்கிடையில் பதற்றமொன்றை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கின்றீர்கள். மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழி இதுவல்ல.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 2015ஆம் ஆண்டு பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டது. அதில் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு அரசாங்கம் வழங்கிவரும் அர்ப்பணிப்பு மற்றும் முன்னெடுத்திருக்கும் நடவடிக்கைகளை வரவேற்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தவும், சமாதானத்தை ஏற்படுத்தவும் ஐ.நா மனித உரிமைகளுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு அரசியலமைப்பு ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டியுள்ளன. 2012, 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் நிலைமை மோசமாக இருந்ததுடன், இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகளைக் கொண்டுவருவதற்கான நிலைமை காணப்பட்டது. அவ்வாறு தடைகள் கொண்டுவரப்பட்டிருந்தால் நாடு நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கும். ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை. ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற நாங்கள் நடவடிக்கைகள் எடுக்கக் கூடாதா எனக் கேட்விரும்புகின்றேன்? எம்முடன் ஒத்துழைத்து செயற்படுமாறு கோருகின்றோம்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டுவரை பத்து வருடங்கள் ஆட்சியில் இருந்தார். இதற்கு முன்னர் சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான அரசாங்கத்திலும் அங்கம் வகித்திருந்தார். இதற்கமைய 20 வருடங்களாக மஹிந்த ராஜபக்‌ஷ அதிகாரத்தில் இருந்துள்ளார். 2015ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் என்பன நடைபெற்றன. இந்த நாட்டிலுள்ள மக்கள் உங்களை மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யவுமில்லை. உங்களை பிரதமராகவும் தெரிவுசெய்யவில்லை.

2010 ஆண்டு தேர்தலிலும் 2015ஆம் ஆண்டு தேர்தலிலும் நீங்கள் பெற்றுக் கொண்ட வாக்குகளை ஒப்பிட்டுப் பார்க்கையில் உங்களை தெரிவுசெய்ய மக்கள் விரும்பவில்லையென்பது தெளிவாகப் புரிந்தது. மக்களால் வழங்கப்பட்ட இந்த ஆணை மதிக்கப்பட வேண்டும். மக்கள் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாகவும், ஐ.தே.கவைச் சேர்ந்த பிரதமராக ரணில் விக்ரமசிங்கவையும் மக்கள் தெரிவுசெய்துள்ளனர். இரண்டு கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டும் என்பதை மக்கள் விரும்புகிறார்கள் என்பதே இதன் அர்த்தமாகும்.

நீங்கள் தலைவர் என்பதுடன் உங்களுடைய தந்தை மீது நாம் மிகுந்த மதிப்பு வைத்துள்ளோம். மறைந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிக்கு சென்றபோது, அவருடன் சேர்ந்து சென்ற ஒரேயொரு அரசியல்வாதி உங்களுடைய தந்தையாராவார். தன்னை பின்தொடர்வது நிழல் என்று நினைத்ததாக பண்டாரநாயக்கவே கூறியிருந்தார். அந்த நாளிலிருந்து உங்கள் தந்தையார் மீது நான் மிகுந்த கௌரவத்தைக் கொண்டிருக்கின்றேன். அந்த மதிப்பை நீங்களும் கொண்டிருக்கவேண்டும் என்றே விரும்புகின்றோம்.

அரசியலமைப்பு தயாரிக்கும் செயற்பாட்டுக்கு நீங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இது உங்களுடைய அடிப்படைக் கடமையாகும். நீங்கள் இந்தக் கடமையிலிருந்து தவறமுடியாது. நாடு இதனையே எதிர்பார்த்துள்ளது. நாடு மீண்டும் இருண்ட யுகத்துக்குப் போகக் கூடாது என்பதையே மக்கள் விரும்புகின்றனர். நாட்டில் ஒளியைப் பெற்று முன்னோக்கி நகர்ந்து செல்லவேண்டும் என கருதினால் கட்டாயமாக புதிய அரசியலமைப்பொன்றை தயாரிக்கவேண்டும். மக்களை ஒன்றிணைப்பதற்கு இது அவசியமாகும். இலங்கை எமது நாடு என்ற உணர்வுடன் சகலரும் ஒற்றுமையாக வாழக்கூடிய உணர்வு வழங்கப்பட வேண்டும். பிரிக்கப்படாத நாட்டுக்குள் நீங்கள் இதனைச் செய்ய வேண்டும்.

சுதந்திரக் கட்சிக்கு நாம் எதிரானவர்கள் அல்ல. எங்களை எதிரானவர்களாக பார்க்க வேண்டாம் என சு.க எம்.பிக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம். கடந்த காலத்தில் சு.கவுக்கு தேர்தல்களில் ஆதரவு வழங்கியுள்ளோம். எனவே அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகளில் சகலரும் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

  
   Bookmark and Share Seithy.com



யாழ்ப்பாணத்தில் இருந்து நள்ளிரவில் கடத்தப்படும் சுண்ணக்கற்கள்!
[Friday 2024-04-19 05:00]

யாழ்ப்பாணத்தில் இருந்து நள்ளிரவு வேளை சுண்ணக்கற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு திருகோணமலைக்கு கொண்டு செல்லப்படுவதாக மக்கள் என்னிடம் முறையிட்டுள்ளார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.



வவுனியாவில் இன்று கூடுகிறது தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு!
[Friday 2024-04-19 05:00]

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று வவுனியாவில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. கட்சி முகம்கொடுத்துள்ள வழக்குகள், ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக இதில் ஆராயப்படவுள்ளது.



கனடாவின் இனஅழிப்புக் குற்றச்சாட்டு - இலங்கை அரசின் தோல்வி!
[Friday 2024-04-19 05:00]

தமிழ் இன அழிப்புத் தொடர்பில் கனடாவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் நினைவுச் சின்னத்தை இலங்கையால் தடுத்து நிறுத்த முடியவில்லை என இராஜதந்திர அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.



மேதினத்தில் பலத்தை நிரூபிப்போம்!
[Friday 2024-04-19 05:00]

மே தினத்தின் பின்னர் பொதுஜன பெரமுன கட்சிக்குள் பாரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.



மாரடைப்பால் கணவன் மரணம், உயிரை மாய்த்தார் மனைவி! - இரு பெண் பிள்ளைகள் நிர்க்கதி.
[Friday 2024-04-19 05:00]

நெடுங்கேணியில் மாரடைப்பு காரணமாக கணவன் இறந்ததும், கணவனின் இழப்பை தாங்க முடியாத மனைவி தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். நேற்று மதியம் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.



சுற்றுலாவியிடம் உளுந்து வடை, தேனீருக்கு 800 ரூபாய் கறந்தவர் கைது!
[Friday 2024-04-19 05:00]

வெளிநாட்டு சுற்றுலா பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் கடையில் இருக்கும் நபர் களுத்துறை சுற்றுலா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.



14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாவிகள் இலங்கை வருகை!
[Friday 2024-04-19 05:00]

இந்த வருடத்தின் முதல் 14 வாரங்களில் 700, 000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது



இதய சத்திர சிகிச்சையில் தவறு - உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் குற்றச்சாட்டு!
[Friday 2024-04-19 05:00]

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக, உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.



கிணற்றில் தவறி விழுந்து பெண் மரணம்!
[Friday 2024-04-19 05:00]

வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை உயிரிழந்துள்ளார். மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



கனடா 400 கிலோ தங்க கொள்ளை - பிரசாத் பரமலிங்கம் உள்ளிட்ட 6 பேர் கைது!
[Thursday 2024-04-18 16:00]

கனடாவில் இடம்பெற்ற மிகப் பெரிய தங்கக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஏர் கனடா விமான சேவையின் இரண்டு பணியாளர்களும், பிரசாத் பரமலிங்கம் என்ற தமிழரும் அடங்குவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.



ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகளுக்கு எமது ஆட்சியில் தண்டனை! - தேசிய மக்கள் சக்தி வாக்குறுதி.
[Thursday 2024-04-18 16:00]

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் சூத்திரதாரிகளுக்கும் குற்றவாளிகளுக்கும் எமது ஆட்சியில் தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.



அதிகளவு உயிரிழப்புகளுக்கு மாரடைப்பே பிரதான காரணம்!
[Thursday 2024-04-18 16:00]

கடந்த வருடங்களில் அதிகளவில் உயிரிழப்புக்கள் ஏற்பட்டமைக்கு பிரதான காரணம் மாரடைப்பு என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அத்தோடு, 2010 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலும் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு பிரதான காரணமும் மாரடைப்பு என்று சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.



மைத்திரிக்கு தடை உத்தரவு நீடிப்பு!
[Thursday 2024-04-18 16:00]

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.



உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் - ஞாயிறன்று இரண்டு நிமிட மௌன அஞ்சலி!
[Thursday 2024-04-18 16:00]

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் ஐந்தாண்டுகளை நினைவுகூரும் வகையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (21) காலை 8.45 மணியளவில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு அனைவரையும் கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் கேட்டுக் கொண்டார்.



நயினாதீவில் பெண்ணுக்கு நடுக்கடலில் பிரசவம்!
[Thursday 2024-04-18 16:00]

யாழ்ப்பாணம் - நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ளார்.



வாக்குறுதி கொடுத்து ஏமாற்றினார் கோட்டா!
[Thursday 2024-04-18 16:00]

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வாக்குறுதியினால் தான் ஏமாற்றப்பட்டதாக, கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.



தேவிபுரத்தில் கட்டுத்துவக்கு வெடித்து குடும்பஸ்தர் காயம்!
[Thursday 2024-04-18 16:00]

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் இன்று பிற்பகல் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



ஆரையம்பதியில் கரையொதுங்கிய பெண்ணின் சடலம்!
[Thursday 2024-04-18 16:00]

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் இன்று கரை ஒதுங்கியதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர் . குறித்த சடலம் 55 வயது மதிக்கத்தக்க பெண்ணுடைய சடலம் எனவும் இது வரை சடலம் அடையாளம் காணப்படவில்லை எனவும் எனவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர் .



ரஷ்ய இராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு - இராணுவ மேஜர் கைது!
[Thursday 2024-04-18 16:00]

ரஷ்ய இராணுவத்தில் பணியாற்ற அனுப்புவதாக கூறி பணம் பெற்ற இருவர் கைது செய்யப்பட்டதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. சந்தேக நபர்களில் ஒருவர் ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் என தெரிவிக்கப்படுகின்றது.



ஓமான் வளைகுடாவில் மூழ்கிய கப்பல் - 21 இலங்கை மாலுமிகள் மீட்பு!
[Thursday 2024-04-18 05:00]

ஓமான் வளைகுடாவில், கடும் புயலில் சிக்கி கவிழ்ந்த கப்பலில் இருந்த 21 இலங்கை பணியாளர்களை ஈரானிய அவசர சேவைகள் பிரிவு காப்பாற்றியுள்ளதாக ஈரானிய அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.


Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா