Untitled Document
April 25, 2024 [GMT]
தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் அம்மா மனைவி குழந்தைகளைக் கொன்றேன்! - தொழிலதிபரின் 5 பக்க கடிதம்
[Tuesday 2017-12-12 16:00]



சென்னை பல்லாவரம் அருகே உள்ள பம்மலில், அம்மா, மனைவி, இரண்டு குழந்தைகள் என நான்குபேரை கொலைசெய்துவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்ற தொழிலதிபரின் கதை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால், தொழிலதிபர் இந்த முடிவை எடுத்ததாக அவர் எழுதிய 5 பக்க கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

சென்னை பல்லாவரம் அருகே உள்ள பம்மலில், அம்மா, மனைவி, இரண்டு குழந்தைகள் என நான்குபேரை கொலைசெய்துவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்ற தொழிலதிபரின் கதை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால், தொழிலதிபர் இந்த முடிவை எடுத்ததாக அவர் எழுதிய 5 பக்க கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

  

சென்னையை அடுத்த பம்மல், ஏழுமலை தெருவைச் சேர்ந்தவர் தாமோதரன். இவர், அங்கு ஜவுளிக்கடை நடத்திவந்தார். இவரது மனைவி தீபா. இவர்களுக்கு ரோஷன், மீனாட்சி என்ற இரண்டு குழந்தைகள். தாமோதரனின் அம்மா சரஸ்வதி. இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் குடியிருந்துவந்தனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு தாமோதரனுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனால், தொழிலை நடத்தவும் குடும்பத்துக்கும் எனக் கடன் வாங்கியிருந்தார். ஆனால், தொழிலில் தொடர்ந்து நஷ்டம் ஏற்படவே, விரக்தியின் எல்லைக்குத் தள்ளப்பட்டுள்ளார் தாமோதரன். இதனால், தற்கொலை செய்துகொள்ள முடிவுசெய்துள்ளார்.

தான் மட்டும் தற்கொலை செய்துகொண்டால், குடும்பத்தின் நிலைமை மோசமாகிவிடும். குடும்பத்தினர் மிகவும் சிரமப்படுவார்கள் என்று தாமோதரன் கருதியுள்ளார். குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற முடிவுக்கு அனைவரும் சம்மதிப்பார்களா என்ற கேள்வியும் தாமோதரனுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால், அனைவரையும் கொலை செய்துவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற முடிவை தாமோதரன் எடுத்துள்ளார்.

இதற்கான ஏற்பாடுகளைச் செய்த தாமோதரன், ஒவ்வொருவராகக் கொலை செய்துள்ளார். பிறகு, தானும் கழுத்தை அறுத்துக்கொண்டார். இன்று காலை (12.12.2017) தாமோதரனின் வீட்டிலிருந்து யாரும் வெளியில் வரவில்லை. அதனால், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சங்கர்நகர் போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிமூலம் தலைமையிலான போலீஸார், தாமோதரன் வீட்டுக்குள் வந்துபார்த்தனர். அப்போது, படுக்கையறையில் ரத்த வெள்ளத்தில் அனைவரும் மிதந்தனர். இதில், தாமோதரனுக்கு மட்டும் உயிர் இருந்தது. இதையடுத்து அவரை மீட்ட போலீஸார், சென்னை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். மற்றவர்களின் உடல்களைப் பிரேதப் பரிசோதனைக்காக போலீஸார் அனுப்பினர்.

இதையடுத்து, தாமோதரனின் வீட்டை போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது 5 பக்கங்கள் கொண்ட கடிதம் சிக்கியது. அதில், தாமோதரன் தற்கொலை செய்துகொண்டதன் காரணத்தை விரிவாகக் குறிப்பிட்டிருந்தார்.இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு தாமோதரனுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவரது குடும்பம் வறுமையில் சிக்கியது. குடும்பத்தை நடத்த முடியாமல் அவர் பெரிதும் சிரமப்பட்டுள்ளார். இதனால், குடும்பத்தினரைக் கொலைசெய்துவிட்டுத் தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்போது, உயிருக்கு ஆபத்தான நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரிடம் விசாரித்தால் மட்டுமே உண்மை நிலைமை தெரியவரும். தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது" என்றனர்.

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "தாமோதரன், நான்கு பேரை எப்படிக் கொலை செய்தார் என்று விசாரணை நடந்துவருகிறது. நள்ளிரவில் இந்தச் சம்பவம் நடந்திருக்க வாய்ப்புள்ளது. ஒருவர் தூங்கிக்கொண்டிருக்கும்போது கழுத்தை அறுத்து கொலை செய்தால் அவரது அலறல் சத்தம் நிச்சயம் மற்றவர்களுக்கு கேட்டிருக்கும் அதனால், தூக்க மாத்திரையை அனைவருக்கும் கொடுத்துதான் இந்தச் செயலை தாமோதரன் செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். அவரது வீடு முழுவதும் ரத்தமாகக் காட்சியளித்தது. மேலும், தாமோதரனுக்கு கடன் தொல்லையும் அதிகமாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால், அவருக்கு கடன் கொடுத்தவர்கள்குறித்து விசாரித்துவருகிறோம்" என்றார்.

தாமோதரன் வீட்டின் அருகில் வசித்தவர்கள் கூறுகையில், "குடும்பத்தில் நான்கு பேரைக் கொலை செய்ய தாமோதரனுக்கு எப்படிதான் மனசுவந்தது என்று தெரியவில்லை. ஈவு இரக்கமற்ற மனதோடுதான் அவர் இந்தக் கொடூரத்தை நிகழ்த்தியிருக்க வேண்டும். சென்னையில் சில நாள்களுக்கு முன்பு பணம் கொடுக்காததால், பெற்ற தாயை தஷ்வந்த் கொலை செய்த சுவடு மறைவதற்குள் இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது. இந்தச் சம்பவம் எங்களுக்கு அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது" என்றனர் வேதனையுடன்.

சென்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தினாலும் கொலைக்கான காரணம், அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்த இரண்டு குழந்தைகளைப் பார்த்து பலர் கதறினர்.

  
   Bookmark and Share Seithy.com



தமிழகத்தில் மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்!
[Thursday 2024-04-25 18:00]

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.



“தேர்தல் அறிக்கையை விளக்க வேண்டும்” - பிரதமரை சந்திக்க நேரம் கேட்ட கார்கே!
[Thursday 2024-04-25 18:00]

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.



தமிழகத்தை உலுக்கிய வழக்கில் நாளை தீர்ப்பு!
[Thursday 2024-04-25 18:00]

தமிழகத்தில் பேராசிரியை நிர்மலாதேவி, கல்லூரி மாணவிகளை தவறான வழியில் ஈடுபடுத்த முயன்ற வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாக உள்ளது. 2018 ஆண்டில் கல்லூரி மாணவிகள் சிலரை, ஆசைவார்த்தை கூறி பாலியல் ரீதியாக பயன்படுத்த முயன்றதாக பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார்.



பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு!
[Thursday 2024-04-25 18:00]

பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக எழுந்த புகாரினைத் தொடர்ந்து, விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் கடந்த 19ஆம் திகதி தொடங்கி, 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதற்கான பிரச்சாரங்களில் கட்சி பிரமுகர்கள் ஈடுபட்டு வருகின்றன.



“ஒரு கட்சி அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறை” - ராகுல் காந்தி!
[Thursday 2024-04-25 06:00]

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.



“வீரர்களுடைய மனைவிகளின் தாலியைப் பறித்தது யார்?” - டிம்பிள் யாதவ் கேள்வி!
[Thursday 2024-04-25 06:00]

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.



“ராகுல் காந்தி மாவோயிஸ்ட் தலைவர் என்று நினைக்கிறாரா?” - தேவகவுடா தாக்கு!
[Thursday 2024-04-25 06:00]

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.



தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியின் தோற்றத்தை வைத்து கிண்டல்: பெருகும் ஆதரவு!
[Wednesday 2024-04-24 18:00]

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியின் தோற்றத்தை வைத்து கிண்டல் செய்யும் நெட்டிசன்களுக்கு எதிரான கருத்துக்களை பலரும் தெரிவித்து வருகின்றனர். இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், சீதாபூரைச் சேர்ந்த மாணவி பிராச்சி நிகம் (Prachi Nigam). இவர், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 98.5 சதவிகித மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளார்.



உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சை மேற்கொண்ட இளைஞர் மரணம்!
[Wednesday 2024-04-24 18:00]

உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சைக்கு சென்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி முத்தியால்பேட்டை டி.வி. நகரைச் சேர்ந்தவர் செல்வநாதன். இவருக்கு, ஹேமசந்திரன், ஹேமராஜன் (26) என்று இரட்டை ஆண் மகன்கள் உள்ளனர். இதில் ஹேமசந்திரன் பி.எஸ்.சி. ஐ.டி. முடித்து டிசைனிங் பணியிலும், ஹேமராஜன் சித்தா பார்மசிஸ்ட் பணியிலும் இருந்தனர்.



பெற்றோர்களுக்கு தமிழக அரசு விடுத்துள்ள எச்சரிக்கை!
[Wednesday 2024-04-24 18:00]

குழந்தைகள் ஸ்மோக் பிஸ்கட் உட்கொள்ள வேண்டாம் எனவும், உயிருக்கு ஆபத்து எனவும் தமிழக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் ஸ்மோக் பிஸ்கட் உட்கொண்ட சிறுவன் ஒருவன் வலியால் துடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



மோடி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்: சீமான் ஆவேசம்!
[Wednesday 2024-04-24 18:00]

இசுலாமியப் பெருமக்கள் மீது வெறுப்பை உமிழும் பேச்சுக்கு பிரதமர் மோடி பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இது தொடர்பாக சீமான் வெளியிட்ட அறிக்கையில், "இராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பரப்புரையின்போது இசுலாமியப் பெருமக்களை இழிவுப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி பேசியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.



'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி!
[Wednesday 2024-04-24 06:00]

'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள்.



பாபநாசம் பட பாணியில் கொலை: போலீசாரே அதிர்ந்த சம்பவம்!
[Wednesday 2024-04-24 06:00]

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.



'பஞ்சுமிட்டாய் போல நைட்ரஜன் பிஸ்கட் தடை செய்யப்படுமா?
[Wednesday 2024-04-24 06:00]

நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் துடிதுடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் நைட்ரஜன் பிஸ்கட்டுக்கு எதிராக பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். அண்மையில் சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோ ஒன்றில் நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்தான். இது தொடர்பான தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதில் அந்தச் சிறுவன் உயிரிழந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.



பள்ளிக்கரணை ஆணவக்கொலை சம்பவத்தில் மீண்டும் அதிர்ச்சி!
[Tuesday 2024-04-23 18:00]

சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு காதல் திருமண எதிர்ப்பால் இளைஞர் ஒருவர் ஓட ஓட வெட்டி ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் கொலையான இளைஞனின் காதல் மனைவியும் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



4 கோடி ரூபாய் சிக்கிய விவகாரம்: விடுதி ஊழியர்கள் காவல் நிலையத்தில் ஆஜர்!
[Tuesday 2024-04-23 18:00]

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.



அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவிற்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!
[Tuesday 2024-04-23 18:00]

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த எம்.பி. சஞ்சய் சிங், சன்பிரீத் சிங் எனப் பலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.



ராமர் புகைப்படம் உள்ள பிளேட்டில் சிக்கன் பிரியாணி: சர்ச்சையில் சிக்கிய ஹொட்டல்!
[Tuesday 2024-04-23 18:00]

ராமர் புகைப்படம் பொறிக்கப்பட்ட பிளேட்டுகளில் சிக்கன் பிரியாணி விற்பனை செய்யப்பட்ட ஹொட்டலை இந்து அமைப்பை சேர்ந்த சிலர் அடித்து நொறுக்கியுள்ளனர். சமீப காலமாக கடவுள் ராமரை வைத்து சர்ச்சைகள் வந்தவண்ணம் உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் ராமரை பாஜக அடையாளப்படுத்துவது தான்.



தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்!
[Tuesday 2024-04-23 06:00]

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.



'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன்!
[Tuesday 2024-04-23 06:00]

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன. இந்நிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார்.


Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா