Untitled Document
March 29, 2024 [GMT]
நாமலும், பிரசன்னவுமே ஒற்றுமையை கெடுக்கின்றனர்! - தயாசிறி
[Thursday 2017-12-14 08:00]

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பிளவடையாமல் இருப்பதையே  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரும்புவதாகவும் எனினும், சிலர் தங்களின் சுயலாபம் கருதி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிளவுப்படுத்த முனைவதாக, அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பிளவடையாமல் இருப்பதையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரும்புவதாகவும் எனினும், சிலர் தங்களின் சுயலாபம் கருதி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிளவுப்படுத்த முனைவதாக, அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

  

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்றது. இதன்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் வகையிலேயே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் தயாசிறி ஜயசேகர,

கேள்வி: ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பிளவுப்படுத்த முயல்வதாக நீங்கள் குறிப்பிடும் அந்த இருவர் யார்?

பதில்: ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைய விரும்புபவர்களையும், இணைய விடாது தடுப்பது வேறு யாரும் இல்லை பிரசன்ன ரணதுங்கவும், நாமல் ராஜபக்ஷவுமே இவ்வாறு செயற்படுகின்றனர். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முழுமூச்சுடன் செயற்பட்டு வருகின்றார். எனினும், பொதுஜன பெரமுன எனத் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிளவுப்படுத்தலாம் என எண்ணுகின்றனர். தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியே வெற்றிபெறும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைய விரும்புபவர்களை நாம் புறக்கணிக்கப் போவதில்லை தற்போதும் சிலர் இணைந்த வண்ணமே உள்ளனர்.

கேள்வி: பொதுஜன பெரமுன அணியினர் பல பகுதிகளில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன​ர். அவர்கள் தேர்தலில் வெற்றிப்பெறுவது உறுதியா?

பதில்: தேர்தலின் பின்னர் பொதுஜன பெரமுன என்ற ஒன்று இருக்கப்போவதில்லை. அவர்கள் எண்ண நினைக்கிறார்கள் என்றால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை எவ்வகையிலாவது பிளவுபடுத்தி, தாங்கள் இடம்​பிடித்த விடலாம் என்று. அவ்வாறு நடக்கப்போவதில்லை. தேர்தலின் பின்னர் அவர்களின் இருப்பே கேள்விக் குறியாகிவிடும். கிராமப் புறங்களில் பொதுஜன பெரமுன என்ற ஒன்று இல்லை. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் அவர்களுக்குப் பலமுறை அழைப்பு விடுக்கப்படடது. இறுதிகட்ட கலந்துரையாடலும் மேற்கொள்ளப்பட்டது. எனினும் கலந்துரையாடல் வெற்றியளிக்கவில்லை. அதனை அவர்களே நிராகரித்தனர். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பலமாகவே உள்ளது.

கேள்வி: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவும் அண்மையில் தொலைபேசியில் உரையாடியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்தக் கலந்துரையாடலின் நோக்கம் என்ன? நான்கு வருடங்களின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். அரசாங்கத் தரப்பில் தாங்கள் எதனைக் கூறுகிறீர்கள்?

பதில்: பசில் ராஜபக்ஷவுடன் ஜனாதிபதி கலந்துரையாடலை​ மேற்கொண்டார் என எனக்குத் தெரியாது. ஆனால், கலந்தரையாடியதாக கூறப்படுகிறது. எது எவ்வாறாக இருப்பினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிளவடையாமல் எவ்வாறு பாதுகாப்பது, என்பது தொடர்பிலேயே எந்த முயற்சியையும் மேற்கொண்டு வருகிறார். எனினும், முன்னோக்கிச் செல்லவே முயற்சிக்கிறோம் என்றார்.

  
   Bookmark and Share Seithy.com



பிளவை நோக்கி பொதுஜன பெரமுன!
[Friday 2024-03-29 16:00]

ஜனாதிபதி தேர்தலில் கட்சியின் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க வேண்டும் என மற்றைய தரப்பினரும் உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது.



நாடு முழுவதும் தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு!
[Friday 2024-03-29 16:00]

நாடளாவிய ரீதியில் உள்ள கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்றும், நாளை மறுதினமும் இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



எந்த தேர்தல் முதலில் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்!- பசில்
[Friday 2024-03-29 16:00]

எந்த தேர்தல் முதலில் நடைபெற வேண்டும் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள் என முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்றுக்குழுவிடம் தெரிவித்துள்ளார்.



முட்டை இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டது!
[Friday 2024-03-29 16:00]

முட்டை இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.



எந்த தேர்தலை எதிர்கொள்வதற்கும் மொட்டு தயார்!
[Friday 2024-03-29 16:00]

பொதுஜன பெரமுன எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள தயாராக உள்ளதாக பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம் சந்திரசேன தெரிவித்துள்ளார்.



எச்ஐவி தொற்றாளர் எண்ணிக்கை 14 வீதத்தினால் அதிகரிப்பு!
[Friday 2024-03-29 16:00]

நாட்டில் எச்ஐவி தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 14 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக இலங்கையின் தேசிய எயிட்ஸ் தடுப்பு திட்டத்தின் பணிப்பாளர் டாக்டர் ஜானகி விதானபத்திரன தெரிவித்துள்ளார்.20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் இந்த தொற்றால் பாதிக்கப்படும் ஆபத்தில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



வாடகை குடியிருப்பாளர்களை பாதுகாக்க சட்டம்! - கனடியப் பிரதமர் அறிவிப்பு.
[Friday 2024-03-29 05:00]

கனடாவில வாடகைக் குடியிருப்பாளர் சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் வாடகைக் குடியிருப்பாளர்களை பாதுகாக்க கூடிய வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.



நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்குமாறு மைத்திரிக்கு உத்தரவு!
[Friday 2024-03-29 05:00]

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



நாமல் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட 10 வருடங்கள் காத்திருக்க வேண்டும்!
[Friday 2024-03-29 05:00]

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளர் இல்லை என்று கூறியுள்ள அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இன்னும் ஐந்து அல்லது பத்து வருட காலத்திற்குப் பின்னரே ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்ச போட்டியிட முடியும் என்று கூறினார்.



அம்பாந்தோட்டையில் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் - அவசரப்படுகிறது சினோபெக்!
[Friday 2024-03-29 05:00]

இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ள எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் நிர்மாணப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க சீனாவின் சினோபெக் நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது.



உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள 7 ஆலயங்களை விடுவிக்க நடவடிக்கை!
[Friday 2024-03-29 05:00]

யாழ்ப்பாணத்தில் அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.



வட்டுக்கோட்டை இளைஞன் கொலை -பகுப்பாய்வு அறிக்கைகளுக்கு உத்தரவு!
[Friday 2024-03-29 05:00]

வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.



அனுரவிடம் தமிழ் மக்களுக்கான தீர்வு இல்லை!
[Friday 2024-03-29 05:00]

தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமார திசாநாயக்கவிடம் தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வுகள் இல்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.



தேர்தலை தீர்மானிக்க பசில் தேர்தல் ஆணையாளர் அல்ல!
[Friday 2024-03-29 05:00]

பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தேர்தல் ஆணையாளரல்ல,எந்த தேர்தலை நடத்த வேண்டும் என்று அவர் தீர்மானிக்க வேண்டிய அவசியமில்லை.அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தெரிவித்தார்.



குளியல் காட்சிகளை படம் பிடித்தவர் கைது!
[Friday 2024-03-29 05:00]

யாழ்ப்பாணம் - கொழும்புத்துறையில் ஆண் ஒருவர் குளிப்பதை மறைந்திருந்து தொலைபேசியில் காணொலி எடுத்துக் கொண்டிருந்த நபரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.



சுங்கத்தில் சிக்கியுள்ள கீரி சம்பாவை விடுவிக்கவே தற்காலிக வரிக் குறைப்பு!
[Friday 2024-03-29 05:00]

அரிசி இறக்குமதியை அனுமதிப்பதற்காக அல்ல, தற்போது சுங்கத்தில் சிக்கியுள்ள அரிசியை அகற்றுவதற்காகவே அரிசி மீதான விஷேட பொருட்கள் வரி குறைக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.



ஞானசார தேரருக்கு 4 வருட கடூழியச் சிறைத்தண்டனை! Top News
[Thursday 2024-03-28 16:00]

குரகல விகாரையில் இஸ்லாமிய மதத்திற்கு எதிராக வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக பொதுபல சேனா பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.



முன்னாள் போராளி பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது!
[Thursday 2024-03-28 16:00]

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்த குற்றச்சாட்டின் பேரில் வவுனியாவைச் சேர்ந்த அரவிந்தன் என்ற முன்னாள் போராளி பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.



இலங்கை நாணயத்தின் மதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு!
[Thursday 2024-03-28 16:00]

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295 ரூபாய் 54 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 305 ரூபாய் 33 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.



இலங்கையின் ஆட்சி முறையில் மாற்றங்கள் வேண்டும்!
[Thursday 2024-03-28 16:00]

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வை காண்பதற்கு இலங்கையின் ஆட்சி முறையில் மாற்றங்கள் இடம்பெறவேண்டும் என இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை தெரிவித்துள்ளது.


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா