Untitled Document
April 19, 2024 [GMT]
அடிக்கடி பாண் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா ?
[Sunday 2018-01-07 12:00]

சாப்டாச்சா..?, வீட்லே லேட் ஆயிடுச்சு, வரும் வழியிலே ப்ரெட் ஆம்லேட் சாப்பிட்டு வந்தேன். அம்மா! டிபன் என்ன?! கேட்கும் குழந்தைகளுக்கு உடனே மன மகிழ்ச்சி தரும், தாய் கொண்டு வந்து வைக்கும் சூடான பிரெட் மசாலா.இப்படி எத்தனையோ ஃபாஸ்ட்ஃபுட் ஐட்டங்கள் வீட்டிலேயே செய்ய வாய்ப்பாக, ப்ரெட் போன்ற உணவுகள் வந்துவிட்டது.

சாப்டாச்சா..?, வீட்லே லேட் ஆயிடுச்சு, வரும் வழியிலே ப்ரெட் ஆம்லேட் சாப்பிட்டு வந்தேன். அம்மா! டிபன் என்ன?! கேட்கும் குழந்தைகளுக்கு உடனே மன மகிழ்ச்சி தரும், தாய் கொண்டு வந்து வைக்கும் சூடான பிரெட் மசாலா.இப்படி எத்தனையோ ஃபாஸ்ட்ஃபுட் ஐட்டங்கள் வீட்டிலேயே செய்ய வாய்ப்பாக, ப்ரெட் போன்ற உணவுகள் வந்துவிட்டது.

  

தங்கள் கைகளால் குழந்தைகளுக்கு சுவையான சிற்றுண்டிகள் செய்துகொடுப்பதில் மகிழும் தாய்மார்கள், அதோடு மட்டும் நின்றுவிடாமல், அந்த சிற்றுண்டிகளில் சேர்க்கப்படும் பொருட்களைப் பற்றியும் அவை எதிலிருந்து தயாராகிறது.

அதனால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன என்பது போன்ற தகவல்களையும் அறிய வேண்டிய அவசியம், தற்காலங்களில் ஏற்பட்டு விட்டது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் :

வீடுகளில் பாட்டிமார்கள் காலையில் சூடான பொங்கல் அதற்கு சுவையான தேங்காய் சட்னி மற்றும் சாம்பார் செய்துவிட்டு, குழந்தைகளை சாப்பிட வாருங்கள் என்று அழைக்கவே வேண்டாம்.

பொங்கலில் மிதக்கும் நெய்யின் வாசனையிலும் முந்திரிப்பருப்பின் மணத்திலும், ஏற்கெனவே, குழந்தைகள் சமையலறையைச் சுற்றி நின்றுகொண்டு, எப்படா, சாப்பிடக் கூப்பிடுவார்கள் என்று ஆர்வத்துடன் நின்று கொண்டுதான், இருப்பார்கள்.

பெற்றோரும் குழந்தைகளின் ஆர்வத்தை அறிந்து, அவர்களை அதிக நேரம் காக்க விடாமல், வாழை இலைகளில் சூடாகப் பரிமாறும்போது, சுவையான உணவு, அவர்கள் வாயில் மணமுடன் கரையும்.

ஆரோக்கிய உணவுகள்:

இதுபோலத்தான், கார அடை, இடியாப்பம் மற்றும் ஆப்பம் போன்ற பலகாரங்கள் செய்யும் நேரங்களிலும், பிள்ளைகள் நாக்கில் எச்சிலூறும்.

அப்போதெல்லாம், செய்யும் உணவுகளில் என்ன சேர்க்கிறோம் என்று வீடுகளில் உள்ள அன்னையருக்கு நன்கு தெரியும், மேலும், கலப்படம் போன்ற பாதிப்புகள் அக்காலங்களில் வெகு அரிதே.

கொள்முதல் பொருட்கள் :

வீட்டிலே கடையும் வெண்ணைய், தங்கள் வயலில் விளைந்த அரிசி மற்றும் உளுந்து பயிறு போன்ற தானியங்கள், வருடம் ஒரு முறை சந்தைகளில் மொத்தமாக வாங்கும், புளி, மிளகு, கடுகு, மிளகாய் மல்லி மற்றும் இன்னபிற சமையல் பொருட்கள்.

காய்கறிகள் எல்லாம் தோட்டத்திலேயே விளையும், கறி வேப்பிலை, இஞ்சி மஞ்சள் போன்றவையும். எனவே, அவர்களை மீறி, அவர்களுக்கு தெரியாத ஒரு சமையல் பொருள், சமையலில் இடம்பெற்றதே இல்லை எனலாம்.

இன்று அப்படியா?

டிவியில் வரும் விளம்பரங்கள்:உடனடி மிக்ஸ், தண்ணீர் விட்டு அப்படியே, கொட்டினால்.., ஒரு நிமிடத்தில், டிபன் ரெடி!

பாக்கெட்டை பிரித்து சூடு பண்ணி, முட்டையை மேலே வைத்தால் போதும்! முட்டை தானாகவே, ஆம்லேட் ஆகிவிடும் என்று விளம்பரங்கள் வராததுதான், பாக்கி!

தொடர்ந்து ஒளிபரப்பாகும் கவர்ச்சி விளம்பரங்கள்! படித்தவர்கள் படிக்காதவர்கள் என்ற பேதங்கள் இன்றி, எல்லோரும் கார்ப்பரேட் விளம்பர வலைகளில் சிக்கிக் கிடக்கிறார்கள், சிந்தித்து செயல்படும் ஆற்றலை இழந்து, விளம்பரங்களின் உண்மைத் தன்மைகளை ஆராயாமல், பெரிய கம்பெனி தயாரிப்பு நன்றாகத் தான் இருக்கும், என்ற சுய தீர்ப்பில், விட்டில்களாக விழுகிறார்கள்.

எங்கும் அவசரம், காலை உணவுக்கு நேரமில்லை, சமைப்பதற்கும், சாப்பிடுவதற்

விளைவு, என்னவாகும்? புதுப்புது துரித உணவுகள்! அவற்றில், வீட்டில் அன்று பாட்டி சமைத்து பரிமாறிய பொங்கல், இடியாப்பம் போன்றவற்றின் சத்தான சுவை இருக்குமா?

உணவை பிள்ளைகளின் விருப்பம் அறிந்து, யாருக்கு எது பிடிக்கும் என்று அதைச் செய்யும் அன்னையின் அன்பு, அந்த இயந்திர உணவுகளில் இருக்குமா?

பாக்கெட் உணவுகளில் என்ன பொருள் இருக்கிறது, அதில் சேர்க்கப்பட்டிருக்கும் கெமிக்கல்கள் என்னென்ன? எல்லோருக்கும் தெரியுமா??

பாக்கெட்களில் வரும் எந்த உணவும் இரசாயனக் கலப்பில்லாமல் வருவதில்லை, எதுவும் சேர்க்கவில்லை என்றால், அந்த உணவு கெட்டுப்போய், ஒரே நாளில் குப்பைக்குப் போய்விடும் என்று ஆய்வாளர்கள் சொல்லிதான் நாம் அறிந்துகொள்ள வேண்டுமா, என்ன?

பிரெட்களில் என்ன இருக்கிறது :

ப்ரெட் ஜாம், ப்ரெட் ஆம்லேட், ப்ரெட் மசாலா போன்ற மிக விரைவான காலை சிற்றுண்டிகள் தயாரிப்பில் பயன்படும் ப்ரெட் என்பது, சிறிது மாவை ஈஸ்ட், சர்க்கரை, உப்பு மற்றும் கெமிக்கல் சேர்த்து, ஓவனில் வைத்து, மாவு உப்பிய பின் எடுக்கப்படும் ஒரு தின்பண்டம்.

அதிக உப்பு :

இதில் சர்க்கரையுடன் அதிகமாக சேர்க்கப்படும் ஒரு பொருள் உப்பு, தினசரி தேவையின் அளவை விட, மிக அதிக அளவு உப்பு இதன் மூலம் உடலில் சேர்கிறது.

சேர்ந்த உப்பு இரத்தத்தில் கலந்து, உப்பின் அளவு கூடுகிறது. அளவு கூடும் உப்பு, அழையா விருந்தாளியாக இரத்த அழுத்தத்தையும் கொண்டு வருகிறது.

ரத்த அழுத்தம் :

சிறுவயது முதல் குழந்தைகளுக்கு பிரெட்டைப் பழக்கப்படுத்திய பின், அவர்களின் இளம் வயதில் உப்பின் தன்மை உடலில் அதிகரித்து, இரத்தத்தில் கலந்த உப்பின் மூலம் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதுவே, மிகக் கடுமையான இதய பாதிப்புகளும் ஏற்படக் காரணமாகி விடுகிறது.

இதய நோய்கள்:

இதுவே, மிகக் கடுமையான இதய பாதிப்புகளும் ஏற்படக் காரணமாகி விடுகிறது. உடலில் அதிகமாக சேர்ந்த உப்பினால்தானே. இதோடு கூட வீடுகளில் செய்யும் ப்ரெட் ஆம்லேட்களில் இன்னும் கொஞ்சம் உப்பைச் சேர்ப்பார்கள், ஏற்கெனவே ப்ரெட்டில் மிகையாக உள்ள உப்புடன் கூடுதல் உப்பும் கலந்து, உடலில் சேரும்போது, என்னவாகும்?

எல்லா பிரட்டும் அப்படித்தான் :

சிலர், வெள்ளை பிரெட் கெடுதல் அது முற்றிலும் மைதா என்று கோதுமை, ஓட்ஸ் போன்ற தானியங்களில் தயாரிக்கப்பட்ட பழுப்பு வண்ண பிரெட்டை பயன்படுத்துகின்றனர். அவற்றில் நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் இருக்கலாம், ஆயினும், கெமிக்கல் மற்றும் ஈஸ்ட் சேரும்போது, அவற்றின் ஆற்றல் பாதித்து, இரசாயன உப்புக்களின் தன்மையே அதிகரித்து விடுகிறது.

துரித உணவுகள் தரும் பாதிப்புகளைப் போக்க...

தினமும் பிரெட் சாப்பிடுவதில்லை, ஆனாலும், அவ்வபோது சாப்பிட வேண்டிய நிலை, வேலை செய்யும் இடங்களில் கிடைக்கும் உணவைத் தானே சாப்பிட வேண்டி இருக்கிறது, இந்த பாதிப்புகளை தவிர்க்க ஏதேனும் வழிகள் உள்ளனவா என்று சிலர் கேட்கக்கூடும்.

ப்ரெட் இல்லை எந்த துரித உணவாக இருந்தாலும், அவற்றை உண்ட பின்னர், சிறிது, பழங்கள், வெள்ளரி அல்லது மோர் இவற்றைப் பருகி வர, பாதிப்புகள் உடலில் சேராமல், வெளியேறி விடும் என்கின்றனர், ஆய்வாளர்கள்.

மலச்சிக்கல் :

ஆயினும், உடலில் மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது, மிக அவசியம். நிற்கக்கூட நேரமில்லாமல், ஓடியாடி உழைப்பது எதற்காக? காரணங்கள் பலவாக இருந்தாலும், ஒரு வாய் சாப்பாடு நிம்மதியாக உண்ண வேண்டும் என்பது தானே, அதன் முடிவாக இருக்க முடியும்?

ஒரு வேளை சாப்பாட்டைக் கூட நிம்மதியாக சாப்பிட முடியாமல், கிடைத்ததைத் தின்று, பசியை விரட்டாமல், உணவிலும், தரமான சாப்பாட்டிலும் அக்கறை செலுத்த, உடல் நலமாகும், மனமும் வளமாகும்!

  
   Bookmark and Share Seithy.com



தினமும் இரவில் குளித்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?
[Friday 2024-04-19 16:00]

காலையில் குளிப்பதை விட இரவில் தூங்கும் முன்பு குளித்தால் ஏற்படும் நன்மைகளை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். உடலின் பாகங்களை தூய்மையாக வைத்திருக்க தினமும் குளிப்பது மிகவும் அவசியமாகும். உடல் சூட்டையும் சரி செய்ய உதவுகின்றது. தினமும் தலைக்கு குளிப்பதால் சிலருக்கு தலைவலி மற்றும் சைனஸ் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். நாம் காலையில் குளிப்பதை விட இரவு நேரத்தில் குளித்தால் பல நன்மைகள் கிடைக்கும்.



ஆஸ்துமா ஏற்படுவதற்கான காரணம் என்னனு தெரியுமா?
[Thursday 2024-04-18 18:00]

ஆஸ்துமா நோய் எவ்வாறு ஏற்படுகிறது இதற்கான அறிகுறிகள் என்ன? இதை எவ்வாறு தடுக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். இந்த நோயை வீசிங் இளைப்பு போன்ற பெயர்களால் அழைப்பார்கள். இது சுவாசப் பாதைக்குள் காற்று நுழையும் போது காற்றில் உள்ள தூசிகள் போன்றவற்றை நமது நாசிகளுக்குள் உள்ள ரோமங்கள் தடுக்கின்றன.



கோடை காலத்தில் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?
[Wednesday 2024-04-17 15:00]

கோடை காலத்தில் தண்ணீர் எவ்வளவு பருக வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். நமது உடலில் ஏறத்தாழ 70 சதவீதம் அளவுக்கு நீர்ச்சத்து நிரம்பியுள்ளது. நம் உடலில் உள்ள நச்சுக்களை சிறுநீர் மூலமாகவும், வியர்வை மூலமாகவும் வெளியேற்றுவதற்கு இந்த நீர்ச்சத்து உதவியாக இருக்கின்றது. கோடை காலத்தில் அதிக வெயில் காரணமாக நீரிழப்பு ஏற்படுகின்றது. உடம்பில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டாமல் இருக்க அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.



காலை உணவாக சாதம் சாப்பிடலாமா?
[Tuesday 2024-04-16 18:00]

காலை உணவுக்கு அரிசி சாதம் சாப்பிடலாமா? என்ற கேள்விக்கு பதில் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இன்று பலரும் காலை உணவாக சாதம் எடுத்துக் கொள்ளும் நிலையில், இதனால் சுறுசுறுப்பாகவும் இருக்க முடியும். ஏனெனில் இதில் கார்போஹைட்ரேட் அதிகமாகவே இருக்கின்றது. பல நன்மைகளை நமக்கு அளித்தாலும் காலை உணவாக சாதம் சாப்பிடுவது நல்லதல்ல என்று கூறப்படுகின்றது. அப்படி சாப்பிட்டால் என்ன என்பதையும் தெரிந்து கொள்வோம்.



மாம்பழம் சாப்பிட்டால் தீங்கா?
[Monday 2024-04-15 18:00]

இயற்கை மற்றும் செயற்கை முறையில் பழுத்த மாம்பழங்களை எளிதாக கண்டுபிடிக்க சில டிப்ஸ்களை இங்கு தெரிந்து கொள்வோம். முக்கனிகளில் ஒன்றாக இருக்கும் மாம்பழத்தை பழங்களின் ராஜா என்றும் கூட அழைப்பார்கள். கோடை காலத்தில் மாம்பழத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் இன்று ரசாயனங்கள் தெளித்து பழுக்க வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.



கல்லீரலை சுத்தப்படுத்தும் கோவக்காய் குழம்பு!
[Sunday 2024-04-14 18:00]

கோவக்காய் ஒரு சிறந்த இயற்கை மருந்தாக காணப்படுகின்றது. இது கல்லீரலை பாதுகாப்பதில் முக்கியமாக ஒரு காயாக பார்க்கப்படுகின்றது. வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை உணவுகளில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் இருக்கும் கிருமிகள் மற்றும் நச்சுகள் வெளியேறி கல்லீரல் வீக்கம் குறைக்க பெரிதும் துணைப்புரிகின்றது. இரும்புச்சத்து, பொட்டாசியம், போன்ற தாதுக்கள் கோவக்காயில் அதிகமாக இருக்கிறது. இவை எலும்பு வளர்ச்சி, இதயம், ரத்தம் நரம்புகளின் சீரான இயக்கத்திற்கு உதவுகிறது.



செரிமான கோளாறுக்கு தீர்வு கொடுக்கும் பூண்டு ஊறுகாய்!
[Saturday 2024-04-13 18:00]

பொதுவாகவே அனைவரும் சமையலில் பயன்படுத்தும் பொருட்களில் இன்றியமையாத பொருளாக பூண்டு காணப்படுகின்றது. பூண்டு உடலுக்கு மிகவும் நல்லது. இதில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பல மருத்துவ குணங்கள் உள்ளமை அனைவரும் அறிந்ததே. பூண்டானது நிறைய மருத்துவ குணங்கள் நிறைந்தது. வாயுத் தொல்லை, நெஞ்சுக்குத்தல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத்தரும்.



சுண்டைக்காய்க்குள் மறைந்திருக்கும் ரகசியம்!
[Friday 2024-04-12 18:00]

காய்கறிகளுள் மிகவும் சிறிதான காய் சுண்டைக்காய். சுண்டைக்காயை நுண் ஊட்டச் சத்துக்களின் சேமிப்புக் கிடங்கு என்று சொன்னால் மிகையாகாது. கசப்பு சுவை கொண்ட இந்த சுண்டையில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.சுண்டை வயிற்றில் உள்ள வாயுக்களை அகற்றி உடலை கட்டுக்கோப்புடன் காத்துக்கொள்ள உதவுகிறது.



தொப்பை பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கும் கறிவேப்பிலை குழம்பு!
[Thursday 2024-04-11 16:00]

பொதுவாகவே அனைவருக்கும் உடல் எடையைக் குறைத்து, உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், என்னதான் முயற்சி செய்தாலும் பலருக்கு தொப்பையை குறைக்க முடியவில்லையே என்ற கவலை இருக்கத்ததான் செய்கின்றது. அப்படிப்பட்டவர்கள் ஆரோக்கியமாக முறையில் தொப்பையை குறைக்கம் கறிவேப்பிலை குழம்பு எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.



கொரியன் பெண்களின் அழகு ரகசியம் என்னனு தெரியுமா?
[Wednesday 2024-04-10 18:00]

சரும பராமரிப்பு என்பது இப்போது பரவலாக காணப்படுகின்றது. இந்த பராமரிப்பு ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாக பயன்படுத்தப்படுகின்றது. இந்த சரும அழகுக்குறிப்புக்களை கொரியன் பெண்கள் எந்த விதமாக பயன்படுத்துகிறார்கள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.



தினமும் ஒரு துளி எண்ணெய் தொப்புளில் விட்டால் என்ன பயன் தெரியுமா?
[Tuesday 2024-04-09 18:00]

நமது உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் நோய் வருவதற்கும் நாம் தான் காரணமாக இருக்கின்றோம். நமது உடலில் ஒரு பிரச்சனை வருவதற்கு முன்னர் அதை இல்லாமல் செய்வதற்கு நம்மிடம் இருக்கும் இயற்கையான விஷயங்களை செய்ய வேண்டும். அப்படியான ஒரு விஷயத்தை தான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம். தேங்காய் எண்ணெயை தொப்புளில் விடுவதால் என்ன நன்மை கிடைக்கின்றது என்பதை தெரிந்து கொள்ளலாம்.



அரிசி தண்ணீரை வைத்து இவ்வளவு விஷயங்கள் செய்யலாமா?
[Monday 2024-04-08 18:00]

பொதுவாகவே அனைவரும் வீட்டில் அரிசி கழுவிய தண்ணீரை கீழே ஊற்றிவிடுவோம். ஆனால் நம்மில் பலரும் அறியாத அளப்பரிய நன்மைகளை இந்த அரிசி கழுவிய தண்ணீர் கொண்டுள்ளது. கூந்தல், சருமம், முகம் ஆகிய அனைத்திற்கும் அழகு சேர்க்கும் ரகசியங்களை நாம் அன்றாடம் வீணாக்கும் அரிசி தண்ணீர் கொண்டுள்ளது. இதனை சரும பொலிவுக்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் எவ்வாறு பயன்படுத்தலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.



குழந்தைகளை ஏசி-அறையில் தூங்க வைக்கலாமா?
[Sunday 2024-04-07 16:00]

கோடை காலத்தில் குழந்தைகளுக்கு ஏசி போட்டு தூங்க வைக்கும் பெற்றோர்களுக்கான பதிவே இதுவாகும். கோடை காலம் நடந்து கொண்டிருப்பதால் வெயிலின் தாக்கமும் அதிகமாகவே இருந்து வருகின்றது. இதனை சமாளிக்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தவித்து வருகின்றனர்.



வெள்ளி கொலுசு அணிவதன் நன்மைகள்!
[Saturday 2024-04-06 16:00]

பொதுவாகவே நமது முன்னோர்கள் எதையும் காரணம் இல்லாமல் சொல்லி வைக்கவில்லை. அவர்களின் ஒவ்வொரு செயலுக்கும் துல்லியமான அறிவியல் காரணம் கட்டாயம் இருக்கும். அந்த வகையில் கலாசாரத்தில் பெண் குழந்தைகள் காலில் வெள்ளி கொலுசு அணியும் வழக்கம் பழங்காலத்திலிருந்தே இருந்து வருகிறது. எப்போதும் தங்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் தமிழர்கள் காலில் அணியும் கொலுசு வெள்ளியில் தான் அணிய வேண்டும் என கூறியமைக்கு என்ன காரணம் என சிந்தித்திருக்கின்றீர்களா? வெள்ளியில் கொலுசு அணிவதனால் ஏற்படும் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.



சரும பொலிவிற்கான அழகுக்குறிப்புக்கள்!
[Saturday 2024-04-06 07:00]

பெண்கள் அழகாக இருப்பதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் நேரத்தை செலவு செய்கின்றனர். செலவு செய்யும் அந்த நேரத்தை கொஞ்சம் பயனுள்ளதாக எப்படி மாற்றலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். இதற்காக நீங்கள் வீட்டில் காணப்படும் சமயலறை பொருட்களை உபயோகித்தால் போதும். இந்த வீட்டு அழகுக்கு பொருட்கள் மூலம் முகம் பளீச் என்று காணப்படுகின்றது.



நாவூரும் சுவையில் காரசாரமான நண்டு மசாலா குழம்பு!
[Thursday 2024-04-04 18:00]

பொதுவாகவே மனித பிறவிக்கு மாத்திரமே உணவை சமைத்து சாப்பிடும் வரம் கிடைக்கின்றது. உணவு என்றாலே அனைவர்க்கும் பிடித்த ஒன்று தான். அதிலும் அசைவ உணவு என்றால் சொல்லவே வேண்டாம் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அசைவத்தில் பலவித உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.அசைவத்தில் கோழி,மீன் ,இறால், நண்டு, என்று பெரிய பட்டியலே இருக்கின்றது.



பிரியாணியால் தீங்கு ஏற்படுமா?
[Wednesday 2024-04-03 18:00]

நம்மில் பெரும்பாலான நபர்கள் பிரியாணி அடிக்கடி சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ள நிலையில், இதனால் உடம்பிற்கு தீங்கு ஏற்படுமா என்பதை இந்த காட்சியில் தெரிந்து கொள்வோம். பிரியாணி சுவையான உணவு என்றாலும் அடிக்கடி சாப்பிட்டால் உடல் நலத்திற்கு தீங்கு ஏற்பட வாய்ப்புள்ளது. இதில் அதிக அளவு கலோரிகள், கொழுப்பு, சோடியம் உப்பு உள்ளதால் பல பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது.



கம கம வாசனையில் ஆளை தூக்கும் ஆம்பூர் பிரியாணி செய்வது எப்படி?
[Tuesday 2024-04-02 18:00]

பொதுவாகவே உலகளாவிய ரீதியில் மிகவும் பிரசித்தி பெற்ற உணவுகளில் பிரியாணி முக்கிய இடம் வகிக்கினறது. அந்த வகையில் தமிழகத்தில் மிகவும் பிரபல்யமான ஆம்பூர் பிரியாணியை வீட்டிலேயே எளிய செய்முறையில் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.



கைகளில் வியர்வை வர என்ன காரணம் தெரியுமா?
[Monday 2024-04-01 18:00]

எல்லோருக்கும் எதாவது ஒரு நோய் இருக்கும். அந்த நோய்கள் எல்லாம் வெவ்வேறு வகையாக காணப்படும். ஹைப்பர்ஹைட்ராசிஸ் என்பது சாதாரணமானது. இது குழந்தையிலிருந்தே மரபணு காரணமாகவோ, பருவ மாற்றம், பதட்டம், கோபம் போன்ற உணர்ச்சி நிலை, சுற்றுச்சூழல் இப்படி சில காரணங்களால் வியர்வை வரும்.



கொளுத்தும் வெயிலுக்கு புதினா தண்ணீர்!
[Sunday 2024-03-31 17:00]

கோடை கால வெயிலை சமாளிப்பதற்கு புதினா தண்ணீர் எப்படி உதவியாக இருக்கின்றது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். கோடை காலம் வந்துவிட்டாலே வெயிலின் தாக்கம் அதிகரித்து விடுகின்றது. இதனால் மக்கள் கடும் அவதியில் சிக்கிக் கொள்கின்றனர். தற்போது வெயில் என்பது அளவுக்கு அதிகமான இருந்து வரும் நிலையில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.


Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா