Untitled Document
April 19, 2024 [GMT]
ஈபிஆர்எல்எவ் விலகிச் சென்றாலும் பெறுமதியான கட்சி இணைந்துள்ளது! - சிறிநேசன் எம்.பி
[Sunday 2018-01-07 19:00]

கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ் பிரேமச்சந்திரன் கூட்டு என்பது தலைமையை கைப்பற்ற வேண்டும் என்ற அடிப்படையிலேயே செயற்பட்டு வருவதாகவும் அதன் காரணமாகவே அவர்களுக்குள்ளும் போட்டி ஏற்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ் பிரேமச்சந்திரன் கூட்டு என்பது தலைமையை கைப்பற்ற வேண்டும் என்ற அடிப்படையிலேயே செயற்பட்டு வருவதாகவும் அதன் காரணமாகவே அவர்களுக்குள்ளும் போட்டி ஏற்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

  

மட்டக்களப்பு சின்னஊறணியில் அமைக்கப்பட்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் அலுவலகம் நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாநகரசபைக்கு சின்னஊறணி நான்காம் வட்டாரத்தில் போட்டியிடும் கந்தசாமி சத்தியசீலனின் தேர்தல் செயற்பாடுகளுக்காகவே இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 1972ஆம் ஆண்டு ஒரு அரசியல் யாப்பை கொண்டு வந்திருந்தார்கள். சிங்களம் அரச கருமமொழி, பௌத்தம் அரச மதம் என்பனவே அதில் இருந்த முக்கியமான விடயமாகும். இதனால் தமிழர்கள் மொழி ரீதியாகவும் மத ரீதியாகவும் பின்தள்ளப்பட்டார்கள். 1964ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தத்தை கொண்டுவந்து எமது சகோதரர்களான மலையக தமிழர்களை நாட்டை விட்டு வெளியேற்றினார் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா.

1995ஆம் ஆண்டு 600ற்கும் மேற்பட்ட மக்கள் வதை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட செம்மணி புதைகுழி சம்பவமும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலத்தில் நடைபெற்றது. அதேபோல் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற படுகொலைகளையும் நிகழ்த்தியது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தான். 1987ஆம் ஆண்டு இந்திய ஒப்பந்தத்தின் மூலமாக மாகாண சபை திட்டத்தின் மூலம் எமக்கு கிடைக்கவிருந்த தீர்வொன்றினை முழுமையாக எதிர்த்த கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியாகும். இப்படிப்பட்ட கட்சியை சேர்ந்தவர்களும் தமிழ் மக்களிடம் வாக்குகளை கேட்டு வருகின்றார்கள்.

எமது இனப்பிரச்சினை இற்றைவரை தீர்வு எட்டப்படாமல் இழுபட்டுக்கொண்டிருப்பதற்கு காரணமும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தான். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினை சேர்ந்த மகிந்த அவர்களும் இதற்கு காரணமாவார். ஆகவே இப்படிப்பட்டவர்கள் எம்மிடம் வாக்கு கேட்பதற்கு அருகதையற்றவர்களாவர்.இதேபோன்று 1957ஆம் ஆண்டு பண்டா - செல்வா ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டபோது அதை கிழித்தெறிய வேண்டுமென பாதயாத்திரை செய்தவர் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த ஜே.ஆர்.ஜயவர்த்தன அவர்களாவார்.

1965ஆம் ஆண்டு டட்லி - செல்வா ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டபோது அதனை நிறைவேற்றாமல் கைவிட்டது ஐக்கிய தேசியக் கட்சி தான். 1983ஆம் ஆண்டு இலங்கையில் மிக மோசமானதொரு இனக் கலவரத்தை அரங்கேற்றியது ஐக்கிய தேசியக் கட்சியாகும். எங்களுடைய வரலாற்றில் பயங்கரவாத தடைச் சட்டம் என்ற மோசமானதொரு சட்டத்தை கொண்டுவந்து சாட்சிகளே இல்லாமல் தமிழ் இளைஞர், யுவதிகள் வேட்டையாடப்பட்டது ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் தான்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி என்பன இதுவரை காலமும் எமது பிரச்சினைகளை தீர்த்து வைக்கவில்லை. தீர்த்து வைப்பதாக கூறி இப்போது ஓரளவிற்கு செயற்பட்டு வருகின்றனர். தீர்த்து வைத்தால் தான் நாம் அவர்களை பற்றி சிந்திக்க முடியும். கடந்த காலங்களில் பல்வேறு தவறுகளை செய்தவர்கள் இப்போது எங்களிடம் வாக்குகளை கேட்பதற்கு தகுதியற்றவர்களாவர். நாங்களும் அவர்களுக்கு வாக்களிப்பதற்கு தயாராக இல்லை.

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவும் பசில் ராஜபக்ச பொருளாதார அமைச்சராகவும் கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும் பிள்ளையான் முதலமைச்சராகவும் இருந்த காலம் தான் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு பொற்காலமாக இருந்தது.இன்றைய நிலையில் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. பசில் ராஜபக்ச பொருளாதார குற்றவாளியாகவும் கோத்தபாய ராஜபக்ச பொருளாதார குற்றவாளியாகவும் மனித உரிமை மீறல் குற்றவாளியாகவும் விசாரிக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றனர். மற்றவர் சிறையிலிருக்கின்றார்.

இப்படியான சூழ்நிலையில் அந்தக் கட்சிக்கு வாக்களிப்பதன் மூலம் நீங்கள் எதனையும் சாதித்து விடமுடியாது. கடந்தகால கற்பனையில் மிதந்துகொண்டிருக்காமல் இந்தக் காலத்தில் வெல்லப்போகின்ற கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான் என்பதை நாங்கள் மிகவும் உறுதியாக கூறுகின்றோம். நாங்கள் செய்கின்ற அபிவிருத்திகளுக்கு சில நேரங்களில் விளம்பரம் இல்லாமல் போகின்றது. எமது பணிகள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. நாடாளுமன்றத்திலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இரண்டு கோடி ரூபாவினை தங்களுடைய தேவைக்காக பெற்றிருக்கின்றனர் எனவும் தான் மட்டும் அப்பணத்தினை பெறவில்லை எனவும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஊடகங்களில் குறிப்பிட்டிருக்கின்றார்.

இது அரசாங்கத்தின் பணமோ எங்களின் பணமோ அல்ல. மக்களின் வரிப்பணத்தில் பெறப்பட்ட பணத்தினை அரசாங்கம் குறிப்பிட்ட சில ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கும் அமைப்பாளர்களுக்கும் கொடுத்திருந்தது. எங்களுக்கு அந்தப் பணம் கிடைக்கவில்லை. அந்த நிலையில் தான் நாங்கள் நாடாளுமன்றத்திலும் குரல் கொடுத்து பிரதமர் ரணில் அவர்களிடமும் குரல் கொடுத்து அபிவிருத்திக்காக இரண்டு கோடி ரூபாவினை தரவேண்டுமென பிடிவாதமாக கேட்டதன் காரணமாகவே அந்த இரண்டு கோடி ரூபாவினை கடந்த டிசம்பர் மாத முற்பகுதியில் அவர்கள் தந்திருந்தார்கள்.

ஊழல் மோசடிகளோ கையூட்டுகளோ இல்லாமல் நாங்கள் எங்களுடைய பணிகளை திருப்திகரமாக மனநிறைவோடு செய்துகொண்டிருக்கின்றோம். எனவே உண்மையான செய்திகளை கண்டறிந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்.

கஜேந்திரகுமார் பொன்னமபலம் - சுரேஷ் பிரேமச்சந்திரன் இணைந்துதான் போட்டியிடுவார்கள் என நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் அவர்கள் இணைந்தால் யார் தலைமைப் பதவி வகிப்பதென அவர்களுக்குள் ஒரு போட்டி உருவாகிவிட்டது. இப்போதிருக்கின்ற கூட்டு என்பது தலைமையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் தான் செயற்படுகின்றார்கள்.1944ஆம் ஆண்டு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் என்ற கட்சி ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்களின் தலைமையில் உருவாக்கப்பட்டது. 1948, 1949களில் வாக்குரிமைச் சட்டம், குடியுரிமைச்சட்டம் போன்றவற்றை ஐக்கிய தேசியக்கட்சி உருவாக்கி இந்திய வம்சாவளியினரின் குடியுரிமையை பறிக்க முற்பட்டபோது தந்தை செல்வா அவர்கள் அதனை எதிர்த்தார்.

அப்போது அவர் அகில இலங்கை தமிழ் காங்கிரஸில் ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்களுக்கு அடுத்த தலைவராக இருந்தார். ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்கள் வாக்குரிமைச் சட்டம், குடியுரிமைச்சட்டம் என்பவற்றிற்கு ஆதரவு வழங்கி இந்திய வம்சாவளி மக்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவதற்கு காரணமாக இருந்தார். வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு தவறினை அவர் செய்திருந்தார். அந்தப் பரம்பரையில் இப்போதும்கூட தவறுகள் இடம்பெறுகின்றது .

தேவையற்ற குறுக்குத்தனமான சில விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அந்த விமர்சனங்களில் தமிழர்களின் கலாச்சாரம், நாகரீகங்கள் கூட பின்பற்றப்படுவதில்லை.மூத்த பிரஜைகளை மிகக்கேவலமான வார்த்தைப் பிரயோகங்களால் விமர்சிக்கின்ற மோசமான கலாச்சாரங்களை நாங்கள் பார்க்கின்றோம்.

இன்று எங்களுடன் எந்த துரோகமும் செய்யாத ஜனநாயக போராளிக்கட்சி இணைந்துள்ளது. ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சி எங்களுடன் இருந்து விலகிச்சென்றாலும் அதனைவிட பெறுமதியான கட்சி எங்களுடன் இணைந்துள்ளது என்றார்.

  
   Bookmark and Share Seithy.com



கச்சதீவு விடயத்திலும் ஈழத்தமிழர்கள் பார்வையாளர்கள்.
[Friday 2024-04-19 20:00]

இந்து சமுத்திரத்தைக் கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும், நிர்வகிக்கவும்வல்ல கேந்திர மையத்தில்இந்தியாவும் இலங்கைத் தீவும் அமைந்திருப்பதனால் இன்றைய சர்வதேச ஒழுங்கு மாற்றத்தில் இந்தபிராந்தியம் முக்கியத்துவம் பெற்றதாக விளங்குகிறது. இந்த நிலையில் இந்தியாவிலும் இலங்கையிலும்தேர்தல்கள் நெருங்கி வரும் வேளையில் பாக்கு நீரிணை சார்ந்தும், கச்சதீவு சார்ந்தும் இரு நாடுகளிலும் தேர்தல் அரசியல் நலன்களுக்காக செயற்கையான ஒரு முறுகல்நிலை தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது.



யாழ்ப்பாணத்தில் அன்னை பூபதியின் நினைவேந்தல்! Top News
[Friday 2024-04-19 16:00]

மட்டக்களப்பில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.



திருகோணமலையில் நினைவுகூரப்பட்ட அன்னை பூபதி!
[Friday 2024-04-19 16:00]

மட்டக்களப்பில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின் 36ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருக்கோணமலை மாவட்ட பணிமனையில் இன்றையதினம் இடம்பெற்றது.



செம்மணியின் அயல் கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ஆபத்து! - ஐங்கரநேசன் எச்சரிக்கை.
[Friday 2024-04-19 16:00]

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைக்கப்படுமாயின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படும் என தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



சுதந்திரக் கட்சி பிரச்சினையில் தலையிட முடியாது! - கைவிரித்தது தேர்தல் ஆணைக்குழு.
[Friday 2024-04-19 16:00]

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் நிலவும் உட்பூசல் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தமது ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



ஈரானிய ஜனாதிபதிக்கு உயர் பாதுகாப்பு!
[Friday 2024-04-19 16:00]

ஈரான் - இஸ்ரேலுக்கு இடையில் எந்த நேரத்திலும் மோதல் நிலைமை ஏற்படலாம் என்ற பரபரப்புக்கு மத்தியில், ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.



புங்குடுதீவில் மனித எலும்பு எச்சங்கள் மீட்பு!
[Friday 2024-04-19 16:00]

யாழ். புங்குடுதீவில் கட்டடம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் இருந்து மனித எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது.



ஈரான் ஜனாதிபதியின் பயணம் கடைசி நேரத்தில் ரத்தாகலாம்!
[Friday 2024-04-19 16:00]

ஈரான் ஜனாதிபதியின் இலங்கைக்கான பயணம் கடைசி நேரத்தில் இரத்துச் செய்யப்பட வாய்ப்புண்டு என்று நாடாளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.



சஜித்துக்கு ஆதரவளித்தால் ரணிலுக்கு பதவி! - தூண்டில் போடுகிறது ஐக்கிய மக்கள் சக்தி.
[Friday 2024-04-19 16:00]

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி, சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் பட்சத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பதவி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க குறிப்பிட்டுள்ளார்.



அருட்தந்தை சிறில் காமினி வாக்குமூலம்!
[Friday 2024-04-19 16:00]

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் விசாரிப்பதற்காக 'ஞானார்த்த பிரதிபய' கத்தோலிக்க பத்திரிகையின் பிரதம ஆசிரியர் அருட்தந்தை சிறில் காமினி இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.



யாழ்ப்பாணத்தில் இருந்து நள்ளிரவில் கடத்தப்படும் சுண்ணக்கற்கள்!
[Friday 2024-04-19 05:00]

யாழ்ப்பாணத்தில் இருந்து நள்ளிரவு வேளை சுண்ணக்கற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு திருகோணமலைக்கு கொண்டு செல்லப்படுவதாக மக்கள் என்னிடம் முறையிட்டுள்ளார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.



வவுனியாவில் இன்று கூடுகிறது தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு!
[Friday 2024-04-19 05:00]

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று வவுனியாவில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. கட்சி முகம்கொடுத்துள்ள வழக்குகள், ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக இதில் ஆராயப்படவுள்ளது.



கனடாவின் இனஅழிப்புக் குற்றச்சாட்டு - இலங்கை அரசின் தோல்வி!
[Friday 2024-04-19 05:00]

தமிழ் இன அழிப்புத் தொடர்பில் கனடாவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் நினைவுச் சின்னத்தை இலங்கையால் தடுத்து நிறுத்த முடியவில்லை என இராஜதந்திர அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.



மேதினத்தில் பலத்தை நிரூபிப்போம்!
[Friday 2024-04-19 05:00]

மே தினத்தின் பின்னர் பொதுஜன பெரமுன கட்சிக்குள் பாரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.



மாரடைப்பால் கணவன் மரணம், உயிரை மாய்த்தார் மனைவி! - இரு பெண் பிள்ளைகள் நிர்க்கதி.
[Friday 2024-04-19 05:00]

நெடுங்கேணியில் மாரடைப்பு காரணமாக கணவன் இறந்ததும், கணவனின் இழப்பை தாங்க முடியாத மனைவி தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். நேற்று மதியம் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.



சுற்றுலாவியிடம் உளுந்து வடை, தேனீருக்கு 800 ரூபாய் கறந்தவர் கைது!
[Friday 2024-04-19 05:00]

வெளிநாட்டு சுற்றுலா பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் கடையில் இருக்கும் நபர் களுத்துறை சுற்றுலா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.



14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாவிகள் இலங்கை வருகை!
[Friday 2024-04-19 05:00]

இந்த வருடத்தின் முதல் 14 வாரங்களில் 700, 000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது



இதய சத்திர சிகிச்சையில் தவறு - உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் குற்றச்சாட்டு!
[Friday 2024-04-19 05:00]

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக, உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.



கிணற்றில் தவறி விழுந்து பெண் மரணம்!
[Friday 2024-04-19 05:00]

வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை உயிரிழந்துள்ளார். மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



கனடா 400 கிலோ தங்க கொள்ளை - பிரசாத் பரமலிங்கம் உள்ளிட்ட 6 பேர் கைது!
[Thursday 2024-04-18 16:00]

கனடாவில் இடம்பெற்ற மிகப் பெரிய தங்கக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஏர் கனடா விமான சேவையின் இரண்டு பணியாளர்களும், பிரசாத் பரமலிங்கம் என்ற தமிழரும் அடங்குவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா