Untitled Document
April 20, 2024 [GMT]
நீதி நிலைநாட்டப்படும் என்கிறார் பிரதமர்!
[Wednesday 2018-01-10 07:00]

 லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டு 9 வருடங்களும் நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்து 3 வருடங்களும் கடந்து விட்டன. ராஜபக்‌ஷவின் இருண்ட ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட கொலைகளுக்கு எதிராக நீதியை நிலைநாட்ட நல்லாட்சி அரசு இன்றுவரை அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டு 9 வருடங்களும் நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்து 3 வருடங்களும் கடந்து விட்டன. ராஜபக்‌ஷவின் இருண்ட ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட கொலைகளுக்கு எதிராக நீதியை நிலைநாட்ட நல்லாட்சி அரசு இன்றுவரை அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

  

பிரதமர் ரணில் விக்ரமசிங்க வௌியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, ஊழல் நிறைந்த அரசுக்கு எதிராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தானும் கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் 21ம் திகதி நல்லாட்சிக்காக அரசியல் போராட்டத்தில் கைகோர்தோம். நாங்கள் நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த வேண்டுமானால் 2015ம் ஆண்டு ஜனவரி 8ம் திகதி எமக்கு வாக்களிக்குமாறு வேண்டியிருந்தோம். இலங்கையின் பொருளாதாரத்தை முன்னேற்றி, அரசாங்கத்தின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத வன்முறையை ஒழிப்பதற்கும், நமது சட்ட முறைமை மற்றும் குற்றவியல் நீதி அமைப்பு முறையின் சுயாதீனத்தன்மை மற்றும் கௌரவத்தை பாதுகாப்பதற்கும் நாங்கள் உறுதியளித்தோம்.

இப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற இன்னும் பல காலம் தேவைப்பட்டாலும், இதுவரை கடந்து வந்த பயணத்தில் பல தடைகளுக்கும் சவால்களுக்கும் வெற்றிகரமாக முகங்கொடுத்ததை எண்ணி மகிழ்ச்சி அடைகிறோம் என்று பிரதமர் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளில், 17 வது திருத்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், அரசியலமைப்பு சபை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்டதன் மூலம் பொலிஸ், நீதித்துறை, அரச சேவை ஆகியவற்றை விரிவுபடுத்தவும், அரசியல்வாதிகளின் கட்டளைகளுக்கு அடிபணியாது மனசாட்சியுடன் சேவை வழங்கவும் சுதந்திரமளிக்கப்பட்டது. இலங்கை பிரஜைகளுக்கு தகவல் அறிவதற்கான சட்டத்தை இயற்றியதோடு, குற்றத்திற்கு ஆளானவர்களுக்கும், நீதியின் முன்னால் நிற்கும் சாட்சியாளர்களுக்கும் உதவி மற்றும் பாதுகாப்புக்கான உரிமையை உறுதிப்படுத்தியுள்ளோம். நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக அரசிற்கு எதிரான சிக்கலான நிதியியல் குற்றங்களை விசாரணை செய்வதற்கும், நீதிக்கு முன் கொண்டு வருவதற்கும் பொலிஸிற்கு அதிகாரம் வழங்கப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இப்போதைக்கு லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டு 9 வருடங்களும் நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்து 3 வருடங்களும் கடந்து விட்டன. ராஜபக்‌ஷவின் இருண்ட ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட கொலைகளுக்கு எதிராக நீதியை நிலைநாட்ட நல்லாட்சி அரசு இன்றுவரை அர்ப்பனிப்புடன் ஈடுபட்டு வருகிறது. ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகளை நடத்தியவர்களுக்கு எதிராக நீதி பயன்படுத்தப்படுமென நாங்கள் உறுதியளிப்பதோடு, அந்த நோக்கத்திற்காக அரசு மேலும் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்று பிரதமர் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



சஜித், அனுர கட்சிகளின் யோசனைகளை கத்தோலிக்க திருச்சபை ஏற்றுக்கொள்ளவில்லை!
[Saturday 2024-04-20 16:00]

ஐக்கிய மக்கள் சக்தியும் தேசிய மக்கள் சக்தியும் சமர்ப்பித்துள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரைணை தொடர்பான யோசனைகளை கத்தோலிக்க திருச்சபை ஏற்றுக்கொள்ளவில்லை என அருட்தந்தை சிறில் காமினி பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.



ரணில் தமிழ் மக்களின் ஆதரவைப் பெற முடியாது!
[Saturday 2024-04-20 16:00]

ரணில் விக்கிரமசிங்க, ராஜபக்ஷக்கள் பக்கம் நிற்கும் வரை அவரால் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத் தமிழ் மக்களின் ஆதரவைப் பெற முடியாது என்று சஜித் அணி பக்கம் தாவியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.



மூதூரில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி மயங்கி விழுந்து மரணம்!
[Saturday 2024-04-20 16:00]

திருகோணமலை - மூதூர் பெரியவெளி குளத்து வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் இன்று மதியம் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.



உக்ரைன் போரில் இலங்கையர்கள் இல்லை!- கைவிரிக்கிறது ரஷ்யா
[Saturday 2024-04-20 16:00]

உக்ரைன் போரில் இலங்கையர்கள் ஈடுபட்டதாக கூறப்படுவதற்கு ஆதாரம் இல்லை என கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகம் கூறியுள்ளது. அத்துடன் உக்ரைன் மோதலில் இலங்கை பிரஜைகளின் பங்கேற்பு குறித்து எந்த தகவலும் இல்லை என்றும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.



நண்பர்களுக்கிடையில் வாக்குவாதம் - ஒருவர் குத்திக் கொலை!
[Saturday 2024-04-20 16:00]

வாழைச்சேனை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கையடக்கத் தொலைபேசி தொடர்பில் இரு நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் நீண்டதில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.



யாழ்.பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புக்கள் பீடாதிபதியாக பேராசிரியர் வேல்நம்பி தெரிவு!
[Saturday 2024-04-20 16:00]

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புக்கள் பீடத்தின் பீடாதிபதியாக சிரேஷ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.



உமாஓயா திட்டத்தினால் 5 ஆண்டுகளில் 4,500 கோடி ரூபா இழப்பு!
[Saturday 2024-04-20 16:00]

அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல அரசியல் அழுத்தங்களினால் உமாஓயா திட்டத்தை மக்களுக்கு வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்தினால் வருடத்திற்கு 900 கோடி ரூபா நாட்டுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக மின்சார மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞசன விஜேசேகர தெரிவித்துள்ளார்.



முதலை கடித்து முதியவர் மரணம்!
[Saturday 2024-04-20 16:00]

முதலை கடித்த நிலையில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொண்டுகள்சேனை பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.



ஐசுடன் கைதானார் பொலிஸ் கான்ஸ்டபிள்!
[Saturday 2024-04-20 16:00]

கட்டான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 800 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் விசேட சுற்றிவளைப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.



வெலிங்டனில் தூதரகத்தை அமைக்கிறது இலங்கை அரசு!
[Saturday 2024-04-20 16:00]

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கையின் உயர்ஸ்தானிகராலயம் ஒன்றை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.



இலங்கைக்கு முதல் தங்கப் பதக்கத்தை பெற்றுக்கொடுத்த எதிர்வீரசிங்கம் காலமானார்!
[Saturday 2024-04-20 06:00]

இலங்கையின் முன்னாள் மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் தனது 91 ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார்.உயரம் பாய்தல் வீரரான நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் 1952 மற்றும் 1956 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை சார்பாக பங்கேற்ற பெருமையை பெற்றுள்ளார்.



கிளிநொச்சியில் அன்னை பூபதி நினைவேந்தல்! Top News
[Saturday 2024-04-20 06:00]

தமிழரசு கட்சி ஏற்பாட்டில் கிளிநொச்சி பொது சேவை சந்தை முன்பாக நேற்று அன்னை பூபதியின் நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது.



ஈரானிய ஜனாதிபதியின் வருகைக்கு அமெரிக்கா எதிர்ப்பு!
[Saturday 2024-04-20 06:00]

ஈரானிய ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் வெளிவிவகார அமைச்சிடம் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருப்பதாக சிங்கள நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.



யாழ். பல்கலைக்கழக நிதியாளருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!
[Saturday 2024-04-20 06:00]

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிதியாளருக்கு எதிராகப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.



ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையும் சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள்!
[Saturday 2024-04-20 06:00]

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆதரவாளர்கள் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியுடன் வேகமாக இணைந்து கொண்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.



ஒட்டாவா கொலைகளுடன் தொடர்புடைய இளைஞன் பிணை கோரவில்லை!
[Saturday 2024-04-20 06:00]

கனடா- ஒட்டாவாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட இலங்கை இளைஞன் பிணை கோருவதை எதிர்பார்க்கவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 19 வயதான குறித்த இளைஞன் கடந்த மார்ச் மாத ஆரம்பத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மீது ஆறு கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.



சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குளம் மக்கள் போராட்டம்!
[Saturday 2024-04-20 06:00]

அண்மையில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி நேற்று வவுனியா தரணிக்குளம் கிராம மக்கள் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



ஜேவிபி- பேராயர் சந்திப்பு குறித்து சந்தேகம் கிளப்புகிறது ஐதேக!
[Saturday 2024-04-20 06:00]

ஜனாதிபதி தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் மக்கள் விடுதலை முன்னியினர், கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையுடன் இணைவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரண்கே பண்டார தெரிவித்துள்ளார்.



சுற்றுலாவிகள் கூடும் இடங்களில் சுற்றிவளைப்புகள்!
[Saturday 2024-04-20 06:00]

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் இடங்களில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நுகர்வோர் அதிகார சபை பணிப்பாளர் சஞ்சய் ரணசிங்க தெரிவித்துள்ளார்.



ஐஸ் போதைப்பொருளுடன் கடற்படை அதிகாரிகள் கைது!
[Saturday 2024-04-20 06:00]

முல்லேரிய பிரதேசத்தில் சுமார் 7.5 மில்லியன் ரூபா பெறுமதியான 510 கிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இலங்கை கடற்படையின் இரண்டு லெப்டினன்ட் கமாண்டர்களும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா