Untitled Document
March 28, 2024 [GMT]
வெளியிடப்பட்டது கூட்டமைப்பின் யாழ். மாநகர சபைத் தேர்தலுக்கான விஞ்ஞாபனம்! Top News
[Monday 2018-01-22 18:00]

யாழ். மாநகர சபைத் தேர்தலுக்கான தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்பட்டது. குறித்த நிகழ்வு இலங்கை தமிழரசு கட்சியின் இணைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் நல்லூர் இளங்களைஞர் மண்டபத்தில் இன்றுமாலை இடம்பெற்றது.

யாழ். மாநகர சபைத் தேர்தலுக்கான தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்பட்டது. குறித்த நிகழ்வு இலங்கை தமிழரசு கட்சியின் இணைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் நல்லூர் இளங்களைஞர் மண்டபத்தில் இன்றுமாலை இடம்பெற்றது.

  

சுத்தமான பசுமை மாநகரம் எனும் தொனிப்பொருளில் யாழ். மாநகர சபையின் தேர்தல் விஞ்ஞாபனத்தினை இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனிடம் வழங்கி வெளியிட்டு வைத்தார்.

தேர்தல் விஞ்ஞாபனத்தில் பல்வேறு செயற்திட்டங்கள் முன்மொமியப்பட்டுள்ளன.அதில், ஏற்கனவே முன்மொழியப்பட்டு உலக வங்கியினால் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் 'யாழ். நகர் அபிவிருத்தி' திட்டத்தினை விரைவாகச் செயற்படுத்தி, சர்வதேச நகரங்களுக்கு நிகரான நகரமாக யாழ். நகரை மேம்படுத்த சகல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கப்படும்.

போருக்கு முன்னரான காலப்பகுதியில் இலங்கையின் 3ஆவது முன்னணி நகராகத் திகழ்ந்த எமது யாழ். மாநகர சபையை மீளவும் அதன் பெருமை மிகு நிலைக்கு கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

இந்திய அரசாங்கத்தினால் யாழ். நகர மத்தியில் அமைக்கப்பட்டு வரும் கலாச்சார மத்திய நிலையத்தின் கட்டுமானப் பணிகள் துரிதப்படுத்தப்படும்.

மீளக் குடியேறும் முஸ்லிம் மக்களின் வீடமைப்பு, வாழ்வாதாரம் குறித்து உரிய முக்கியத்துவத்துடன் கவனம் செலுத்தப்படும்.

செங்குந்தா, சத்திரத்தடி, காக்கைதீவு, நாவாந்துறை, கொழும்புத் துறை, குருநகர், சின்னக்கடை, பாசையூர் சந்தைகளை நவீன வசதிகளுடன் புனரமைத்து மக்களின் மேம்பட்ட நுகர்வுக்கு வழி செய்யப்படும்.

கைத்தொழில், வணிக, உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் குடியிருப்பு வலயங்கள் உருவாக்கப்படும்.

நவீன சந்தை வர்த்தகர்களின் சகல நலன்களும் பேணப்படும்.

மாநகரினுள் ஐந்து குடும்பங்களுக்கு மேல் வதிகின்ற அனைத்து வீதிகளும், ஒழுங்கைகளும் மறு சீரமைக்கப்பட்டு தார் அல்லது கொங்கிரீட் வீதிகளாகத் தரமுயர்த்தப்படும்.

சிறுவர்கள், முதியோருக்கான பொழுது போக்கு மையங்களும், பூங்காக்களும் உருவாக்கப்படும்.

மாநகர சபை எல்லையினுள், சகல வீதிகளுக்கும் இலங்கை மின்சார சபை ஒத்துழைப்புடன், மின் விளக்குகளைப் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

துரையப்பா விளையாட்டரங்கு உட்பட்ட பொது விளையாட்டரங்குகளின் பாவனை குறித்த பொது மக்களுக்கு வசதியான கொள்கைகள் அறிமுகப்படுத்தப்படும்.

சர்வதேச தரங்களுக்கு அதி நவீன வசதிகளைக் கொண்ட உள்ளக விளையாட்டரங்கு ஒன்று அமைக்கப்படும்.

சகல சனசமூக நிலையங்களினதும் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் உதவு தொகைகளை வழங்கி, படிப்பகங்கள், முன்பள்ளிகளை நிறுவுவதற்கும், ஏற்கனவே இருக்கின்ற முன்பள்ளிகள், படிப்பகங்களுக்கான வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

பாடசாலைக் கல்வியைப் பூர்த்தி செய்த இளைஞர், யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் செயற்றிட்டங்களை முன்னெடுப்பதுடன், தொழிற்பயிற்சி மையம் ஒன்றினை நிறுவி தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தித்தருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் மகளிர் சுய உதவிக்குழு போன்ற வாழ்வாதாரச் செயற்றிட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மாநகரினுள் பொருத்தமான இடங்கள் அடையாளங்காணப்பட்டு புதிய சுற்றுலா மையங்கள் அமைக்கப்படுவதுடன், ஏற்கனவே இருக்கின்ற அனைத்து சுற்றுலா மையங்களும் புதுப் பொலிவு பெற வழிவகுக்கப்படும்.

தீயணைப்பு சேவைகள் மேம்படுத்தப்படும் எனப்பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இத் தேர்தல் விஞ்ஞாபனத்தினை வடமாகாண அவைத் தலைவரும், தமிழரசுக் கட்சியின் இணைத்தலைவருமான சீ.வி.கே.சிவஞானம் ஆதரவாளர்கள் மத்தியில் வாசித்து மக்களுக்கு வெளிப்படுத்தினார்.இந்த தேர்தல் விஞ்ஞாபன வெளியிட்டு நிகழ்வில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களான ஆர்.ஜெய்சேகரம், பா.கஜதீபன், ஆ.பரம்சோதி உட்பட மாநகர வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.

  
   Bookmark and Share Seithy.com



ஞானசார தேரருக்கு 4 வருட கடூழியச் சிறைத்தண்டனை! Top News
[Thursday 2024-03-28 16:00]

குரகல விகாரையில் இஸ்லாமிய மதத்திற்கு எதிராக வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக பொதுபல சேனா பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.



முன்னாள் போராளி பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது!
[Thursday 2024-03-28 16:00]

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்த குற்றச்சாட்டின் பேரில் வவுனியாவைச் சேர்ந்த அரவிந்தன் என்ற முன்னாள் போராளி பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.



இலங்கை நாணயத்தின் மதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு!
[Thursday 2024-03-28 16:00]

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295 ரூபாய் 54 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 305 ரூபாய் 33 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.



இலங்கையின் ஆட்சி முறையில் மாற்றங்கள் வேண்டும்!
[Thursday 2024-03-28 16:00]

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வை காண்பதற்கு இலங்கையின் ஆட்சி முறையில் மாற்றங்கள் இடம்பெறவேண்டும் என இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை தெரிவித்துள்ளது.



சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவன் விபத்தில் பலி!
[Thursday 2024-03-28 16:00]

மட்டக்களப்பு - பெரியகல்லாறு பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில், இம்முறை சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.



அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!
[Thursday 2024-03-28 16:00]

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐந்து பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



புன்னாலைக்கட்டுவன் விபத்தில் முதியவர் பலி!
[Thursday 2024-03-28 16:00]

யாழ்ப்பாணம் -புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நேற்று மாலை இடம் பெற்ற வீதி விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிறிய ரக உழவு இயந்திரமொன்றில் புல் ஏற்றுக் கொண்டிருந்த போது லொறி ஒன்று மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பாக சுன்னாகம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



ஜனாதிபதி ரணிலுக்கு மக்களாணை இல்லை!
[Thursday 2024-03-28 16:00]

நாடாளுமன்றத்தின் ஊடாக அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதிக்கு மக்களாணை கிடையாது என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.



பணவீக்கம் சடுதியாக குறைந்தது!
[Thursday 2024-03-28 16:00]

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையில் இலங்கையின் பணவீக்கம் மார்ச் மாதத்தில் 0.9 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது முந்தைய மாதத்தில் 5.9 சதவீதமாக பதிவாகியிருந்தது.



வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட யுவதி!
[Thursday 2024-03-28 16:00]

வவுனியா, சமனங்குளம் பகுதியில் இருந்து 23 வயது யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம் பொலிஸார் இன்று தெரிவித்தனர்.



தனிநபரின் மாதாந்த செலவு அதிகரிப்பு!
[Thursday 2024-03-28 16:00]

தனிநபர் ஒருவரின் மாதாந்த செலவு அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.



பசிலின் பதவி நாமல் வசமானது!
[Thursday 2024-03-28 16:00]

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார். அக்கட்சியின் நிறைவேற்று சபை கூட்டம் நேற்று பிற்பகல் கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க இதை தெரிவித்தார்.



முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் விபத்தில் பலி!
[Thursday 2024-03-28 16:00]

வவுனியா, ஓமந்தையில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் மரணமடைந்துள்ளார்.



அரிசி, பெரிய வெங்காயத்திற்கான விசேட பண்ட வரி குறைப்பு!
[Thursday 2024-03-28 16:00]

அரிசி மற்றும் பெரிய வெங்காயத்திற்கான விசேட பண்ட வரி இன்று முதல் குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி ஒரு கிலோ கிராம் அரிசிக்கு 65 ரூபாவாக இருந்த விசேட பண்ட வரி நேற்று முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதி வரை ஒரு ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.



இந்திய மீனவர்கள் மூவருக்கு சிறைத்தண்டனை!
[Thursday 2024-03-28 16:00]

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 36 தமிழக கடற்தொழிலாளர்ககளில் மூவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் , ஏனைய 33 பேருக்கும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.



வட, கிழக்கில் வழிபாட்டுத்தலங்களை இலக்கு வைத்த காணி அபகரிப்புகளால் பதற்றம் அதிகரிப்பு!
[Tuesday 2024-03-26 18:00]

இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்ந்தும் கரிசனைக்குரியதாகவே காணப்படுகின்றது. நாட்டின் வட, கிழக்கு மாகாணங்களில் காணி அபகரிப்புக்கள் அதிகரித்து வருவதுடன், சிலவேளைகளில் அவை மத வழிபாட்டுத்தலங்களை இலக்கு வைத்தவையாகக் காணப்படுகின்றன. இவ்வாறான செயற்பாடுகள் சமூகங்களுக்கு இடையில் பதற்றத்தைத் தோற்றுவித்துள்ளன என்று பிரிட்டனின் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம் தெரிவித்துள்ளது.



கீரிமலையில் காணி அபகரிப்பு முயற்சி - உரிமையாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் அளவீடு இடைநிறுத்தம்! Top News
[Tuesday 2024-03-26 18:00]

யாழ்ப்பாணம் - கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி நடவடிக்கைக்காக சுவீகரிக்கும் அடிப்படையில் அளவீடு செய்வதற்கு நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் இன்று காலை 10 மணியளவில் வருகை தந்திருந்தனர்.



இலங்கை நோக்கி புறப்பட்ட “டாலி“யே அமெரிக்க பாலத்தை தகர்த்தது!
[Tuesday 2024-03-26 18:00]

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் அமைந்துள்ள பால்டிமோர் பாலம் மீது சரக்கு கப்பல் ஒன்று ​மோதியதில் குறித்த பாலம் இடிந்து வீழ்ந்துள்ளது. குறித்த சரக்கு கப்பல் இலங்கை நோக்கிச் சென்ற கப்பல் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.



அக்குபஞ்சர் சிகிச்சை பெற்றவர் கிருமித் தொற்று ஏற்பட்டு மரணம்!
[Tuesday 2024-03-26 18:00]

அக்குபஞ்சர் சிகிச்சை பெற்றுக்கொண்ட யாழ் அச்சுவேலி கிழக்கு பகுதியை சேர்ந்த மாணிக்கம் சற்குணராஜா (வயது 64) என்பவர் கிருமித் தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.



மைத்திரியின் வாக்குமூலம் - பொய்த்தகவல்கள் பரவுவதாக சுதந்திரக் கட்சி குற்றச்சாட்டு!
[Tuesday 2024-03-26 18:00]

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு வழங்கிய வாக்குமூலம் தொடர்பில் பிரதான ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பொய்யான மற்றும் திரிபுபடுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகி வருவதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. இது போன்ற தவறான மற்றும் திரிபுபடுத்தப்பட்ட அறிக்கைகளை கண்டிப்பதாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.


Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா