Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 25, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
குடும்பத்துடன் லாஸ் ஏஞ்சல்ஸில் ஓய்வெடுக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்
[Saturday, 2012-05-26 07:00:49]
News Service

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தனது குடும்பத்தாரோடு லாஸ் ஏஞ்சல்ஸில் ஓய்வு எடுத்து வருகிறார்.இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கோச்சடையான், மணிரத்னத்தின் கடல் ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். எப்பொழுது பார்த்தாலும் பிசியாக இருக்கும் அவர் தனது குழந்தைகளுடன் நேரத்தை செலவிட நினைத்தார்.

  

இதையடுத்து அவர் ஒரு குட்டி பிரேக் எடுத்து தனது குடும்பத்தாருடன் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றுள்ளார்.

ஓய்வெடுக்க அங்கு சென்றார். ஆனால் தான் ஒப்பந்தம் ஆகியுள்ள ஹாலிவுட் படமான மங்கீஸ் ஆப் பாலிவுட் பட வேலைகளையும் அவ்வப்போது கவனித்து வருகிறார். அங்குள்ள யூனிவர்சல் ஸ்டுடியோஸுக்கு தனது குழந்தைகளை அழைத்துச் சென்று சுற்றிக் காண்பித்துள்ளார். அப்போது ரஹ்மானைப் பார்த்த வெளிநாட்டவர்கள் அவரை சூழ்ந்து கொண்டு ஆட்டோகிராப் வாங்கினர் என்று கூறப்படுகிறது.

இந்திய பிரபலகங்கள் வெளிநாடுகளில் ஓய்வு எடுக்கச் செல்வதே அங்கு தன்னை யாரும் அடையாளம் கண்டு கொள்ள மாட்டார்கள் என்று தான். ஆனால் ரஹ்மானோ உலக அரங்கில் பிரபலமான இசையமைப்பாளர். அவரை எப்படி வெளிநாட்டவர்கள் அடையாளம் கண்டு கொள்ளாமல் இருப்பார்கள்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

திரையுலகின் தில்லு முல்லு பவர் ஸ்டார் பணம் இன்றி தவிப்பு - வீடுகள் விற்பனை!
[Saturday, 2013-05-25 18:20:14]

பவர்ஸ்டார் என்றாலே பல பிரச்சனைகளுக்கு சொந்த்க்காரர்கள் தான். ஏன் எனில், கோலிவுட் திரையுலகின் தில்லு முல்லு பவர் ஸ்டார் சீனிவாசன் பல நிதி மோசடி பிரச்சனைகளில் சிக்கி சிறைவாசம் சென்றுள்ளார். அதே போல் டோலிவுட்டின் பவர்ஸ்டார் பவன் கல்யானுக்கும் மாபெரும் நிதி சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். தெலுங்கில் பிரபல நடிகராக இருப்பவர் பவர்ஸ்டார் பவன் கல்யாண். ஆந்திராவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலிலும் இருக்கிறார். பவன் கல்யாணுக்கு திடீர் நிதி நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இதனால் தனது வீடுகளை விற்க முடிவு செய்துள்ளார்.



கேன்ஸ் திரைப்பட விழாவில் வித்யாபாலனுக்கு தவளைக்கறி விருந்து..
[Saturday, 2013-05-25 18:16:25]

66வது கேன்ஸ் திரைப்படவிழா தற்போது பிரான்ஸி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் பாலிவுட் கனவுநாயகி வித்யாபாலன் நடுவர்களில் ஒருவராக கலந்துகொண்டு சிறப்பித்துவருகிறார். நேற்று மதியம் இந்த விழாவில் கலந்து கொண்ட அனைத்து நடுவர்களுக்கு சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்தில் அனைவருக்கு தவளைக்கறி பரிமாறப்பட்டது. வித்யாபாலனுக்கு தவளை பரிமாறப்பட்டதால் அவர் அதிர்ச்சியடைந்தார். தவளைக்கறியோடு சிக்கன் பிரெஸ்ட்,விக்டோரியோ ஒயிட் அண்ட் பைன் ஆப்பிள் கலந்த ரம், ரோஸ்டட் கோகனட் ஐஸ்கிரீம், மற்றும் லாலிபாப் சாக்லேட் ரம் ஆகியவை பரிமாறப்பட்டது. இதில் தவளை தவிற மற்ற அனைத்து வகைகளையும் வித்யாபாலன் ருசித்து சாப்பிட்டார்.



பகலவனில் நடிக்க மறுத்த விஜய் - பட வாய்ப்பு ஜெயம் ரவிக்கு போனது...
[Saturday, 2013-05-25 18:09:42]

சினிமாவில் ஒரு நடிகர் மறுத்த கதையில் இன்னொரு நடிகர் நடிப்பது ஒன்றும் புதிய விடயமல்ல. அந்தவகையில் விஜய்க்காக சீமான் எழுதிய கதைதான் பகலவன். இதில் முதலில் நடிப்பதாகச் சொன்ன விஜய், பின்னர் தன்னை வைத்து முருகதாஸ், கெளதம்மேனன் என சில முன்னணி இயக்குனர்கள் படமெடுக்க முன்வந்ததால் சீமான் படத்தில் நடிக்க மறுத்தார். அதனால், பல மாதங்களாக அவருக்காகக் காத்திருந்த சீமான், பின்னர் ஜீவா உட்பட்ட சில நடிகர்களிடம் அந்தக் கதையைச் சொல்லி நடிக்கக் கேட்டார். விஜய் நடிக்க மறுத்த கதை என்பதால் அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்நிலையில், சமீபத்தில் பகலவன் கதையைக் கேட்டு ஜெயம் ரவி தான் நடிப்பதாக ஒப்புதல் தெரிவித்துள்ளாராம். தற்போது சமுத்திரக்கனியின் 'நிமிர்ந்து நில்' மற்றும் 'பூலோகம்' படங்களில் நடித்து வரும் ஜெயம் ரவி, அப்படங்களை முடித்ததும் சீமான் படத்தில் நடிக்கிறாராம்.



ஒரே நைட்டில் நடக்கிற கதைகள் தமிழிலேயே தாராளமாக உண்டு! - மீரா கதிரவனின் கதை..
[Saturday, 2013-05-25 18:07:54]

ஒரே நாளில் நடக்கிற கதை, ஒரு மணி நேரத்தில் நடக்கிற கதை மாதி‌ரி ஒரே நைட்டில் நடக்கிற கதைகள் தமிழிலேயே தாராளமாக உண்டு. இன்றைய தேதியில் விடியும்முன் என்றொரு படம் ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களை வைத்து தயாராகி வருகிறது. மீரா கதிரவனின் விழித்திரு படமும் ஒரு நைட் கதைதான். அவள் பெயர் தமிழரசியில் எந்த ஆச்ச‌ரியத்தையும் ஏற்படுத்தாதவர் விழித்திரு குறித்து சொல்லும் ஒவ்வொன்றுமே ஆச்ச‌ரியமானவை.



பிரியாணியின் முன்னோட்டம் வெளிவந்துவிட்டது...
[Saturday, 2013-05-25 18:02:14]


சிறுமி கடத்தல் வழக்கில் சிக்கிய மெண்டல் பட நடிகை சனாகான் தலைமறைவு!
[Saturday, 2013-05-25 17:55:45]

சல்மான் கானின் மெண்டல் படத்தில் நடித்து வரும் நடிகை சனா கான், தற்போது தலைமறைவாகியுள்ளதாக போலீஸாரால் அறிவிக்கப்பட்டுள்ளது. தனது உறவினர் ஒருவரின் திருமணத்துக்காக 15 வயதுச் சிறுமியை வலுக்கட்டாயமாகக் கடத்த முயன்றார் என்று சனாகான் மீது கடத்தல் வழக்கு பதியப் பட்டது. இந்நிலையில், அவர் தலைமறைவாகியுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.



பிரபல பின்னணிப் பாடகர் T.M.சௌந்தரராஜன் காலமானார்
[Saturday, 2013-05-25 17:52:30]

பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர் T.M.சௌந்தரராஜன் தனது 91வது வயதில் காலமானார். இதயக் கோளாறு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் பின்னர் வீடு திரும்பியிருந்தார். எனினும் இன்று அவர் உயிரிழந்துள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. தென்னிந்தியத் திரையுலகில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேல் பின்னணி பாடி வந்த இவர், சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 1923 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்த இவர், 1950 ஆம் ஆண்டு கிருஷ்ண விஜயம் என்னும் படத்தில் 'ராதே என்னை விட்டுப் போகாதடி'' எனும் பாடலை பாடியதன் மூலம் பின்னணிப் பாடகராக அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 10,000ற்கும் அதிகமான பாடல்களை இவர் பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



கிரிக்கெட் சூதாட்டத்தில் ஸ்ரீசாந்துடன் நெருங்கி பழகிய நடிகைகள்: - போலீஸ் விசாரணை.
[Saturday, 2013-05-25 17:49:51]

கிரிக்கெட் சூதாட்டத்தில் கைதான ஸ்ரீசாந்துடன் நெருங்கி பழகிய நடிகைகள் விவரங்களை போலீசார் சேகரிக்கிறார்கள். அவர்களிடம் விரைவில் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது. ஸ்ரீசாந்துடன் அதிக நெருக்கம் வைத்திருந்தவர் இந்தி நடிகை சுர்வின் சாவ்லா. இருவரும் ரியாலிட்டி ஷோ ஒன்றில் ஜோடியாக நடனம் ஆடினர். அதன் பிறகு அடிக்கடி சந்தித்து பேசினார்கள். இருவரும் காதலிப்பதாகவும் கிசுகிசுக்கள் வெளியானது. எனவே சுர்வின் சாவ்லாவிடம் போலீசார் விசாரணை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



பாரதிராஜாவின் புதுமை புரட்சி சின்னத்திரை சீரியலிலும் ஆரம்பம்..
[Saturday, 2013-05-25 17:30:30]
சினிமாவில் சமூக அக்கறையுடன் படங்கள் இயக்கி வருபவர் பாரதிராஜா. அவர் இயக்கிய சில படங்களுக்குக்காக தேசிய விருதுகளும் பெற்றுள்ளார். அதில் சிவாஜிகணேசன்-ராதா நடித்த முதல் மரியாதையும் ஒன்று. இப்படத்தில் இளையராஜாவின் இசையில் உருவான பாடல்கள் பட்டிதொட்டியெல்லாம் பட்டையக்கிளப்பியது. அந்த அளவுக்கு பாரதிராஜா - இளையராஜா - வைரமுத்து கூட்டணி கொடிகட்டிப்பறந்த பொற்காலம் அது. அந்த பாரதிராஜா தற்போது அன்னக்கொடி என்றொரு படத்தை இயக்கியிருந்தபோதும், அதற்கு முன்பு தெற்கத்தி பொண்ணு என்றொரு தொடரை கலைஞர் டி.விக்காக இயக்கி வந்தவர், இப்போது முதல்மரியாதை என்ற பெயரிலேயே ஒரு நெடுந்தொடரை இயக்கப்போகிறாராம். குடும்ப உறவுகள் பற்றிய செண்டிமென்டான தொடர் என்பதால், இதற்காக கிழக்குச்சீமையிலே படம் போன்று 7 பாடல்களையும் உருவாக்கியுள்ளாராம் பாரதிராஜா. அதோடு நில்லாமல் அந்த பாடல்களை ஆடியோ விழா நடத்தி சினிமா பாணியில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளார். பாரதிராஜா செய்யப்போகும் இந்த புதுமை சின்னத்திரை வட்டாரத்தை பரபரப்பாக்கியுள்ளது.


அஞ்சலிக்கு எதிராக தீவிரமாக செயற்படும் அமலா பால்..
[Friday, 2013-05-24 18:42:37]

சித்தியுடன் ஏற்பட்ட மனக் கசப்பு காரணமாக, முழுநேர தெலுங்கு நடிகையாகி விட்டார், அஞ்சலி. கோலிவுட்டிலிருந்து, பட விஷயமாக யாராவது பேசினாலும், தெலுங்கில், நான் ரொம்ப பிசி. அப்புறம் பார்க்கலாம் என, போனை, கட் பண்ணி விடுகிறாராம்.தெலுங்கில் ஏற்கனவே, சமந்தா, அமலா பால், கைகள் ஓங்கியிருப்பதால், அவர்களை வீழ்த்தி விட்டு, முன்னணி நடிகையாகி விட வேண்டும் என, முண்டியடித்து வருகிறார். அஞ்சலியின் இந்த அதிரடி முயற்சி காரணமாக, அமலா பால் பேசி வைத்திருந்த, ஒரு படம், அஞ்சலிக்கு வந்து விட்டதாம். அதனால், இதுவரை சத்தமில்லாமல் நடித்து வந்த அமலா, அஞ்சலிக்கு எதிரான நடவடிக்கைகளில், தீவிரமாக இறங்கியுள்ளதோடு, பட வாய்ப்புகளை கைப்பற்றுவதற்காக, சம்பளம், கிளாமர் போன்ற விஷயங்களில், தாராளம் காட்டவும் முடிவு செய்துள்ளாராம்.



ஐ படத்தில் பாடிபில்டராக நடிக்கும் விக்ரம்
[Friday, 2013-05-24 18:38:05]

உடல் எடையை ஏற்றியும், இறக்கியும் ஷங்கரின் 'ஐ' படத்தில் விக்ரம் நடித்துள்ளார். படத்தின் சில காட்சிகளில் பாடிபில்டராக விக்ரம் வருகிறார். தமிழ் நாடு பாடிபில்டிங் சாம்பியன் காமராஜ் வில்லனாகவும், முன்னாள் மிஸ்டர் இந்தியா அரசு நடுவராகவும் நடிப்பதாக கூறப்படுகிறது. ஐ படத்தின் நாயகன் வேடத்துக்காக விக்ரம் கடுமையாக உடற்பயிற்சிகளை செய்து உழைத்துள்ளார். தற்போது நியூசிலாந்தில் நடக்கும் படப்பிடிப்பில் இருக்கிறார். படத்தில் 'பாடிபில்டிங்' சம்பந்தப்பட்ட காட்சிகளை இயக்குனர் ஷங்கர் வைத்துள்ளார். முக்கியமான பாடிபில்டர்ஸ் படத்தில் வருகிறார்கள் என்கிறது பட வட்டாரம்.



'தீயா வேலை செய்யணும் குமாரு'விற்கு யு சான்றிதழ்..
[Friday, 2013-05-24 18:01:51]

கொலிவுட்டில் சித்தார்த், ஹன்சிகா மொத்வானி நடித்த தீயா வேலை செய்யணும் குமாரு படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது. இப்படத்தில் சந்தானம் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். மத கஜ ராஜா திரைப்படத்துக்குப் பின்பு சுந்தர்.சி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இயக்குனர் சுந்தர்.சி-யின் மனைவி குஷ்பூ சுந்தர் இப்படத்தை தயாரித்து இருக்கிறார். எங்கேயும் எப்போதும் படத்தின் இசையமைப்பாளர் சத்யா இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்றுவிட்டன. தீயா வேலை செய்யணும் குமாரு யூன் 14ம் திகதி வெளியாகிறது. இதனிடையே படம் தணிக்கைக் குழுவின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது. முழுப்படத்தையும் பார்த்த தணிக்கைக் குழு அதிகாரிகள் படத்திற்கு 'யு' சான்றிதழ் அளித்துள்ளனர். படத்தை யுடிவி நிறுவனம் விநியோகம் செய்யவிருக்கிறது.



இந்தியிலும் பாடல் பாடி கலக்கிய ரஜினி
[Friday, 2013-05-24 17:49:51]

கோச்சடையான் படத்துக்காக ரஹ்மான் இசையில் முதன் முறையாக இந்தியில் பாடியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். மகள் சௌந்தர்யாவின் இயக்கத்தில் ரஜினிகாந்து நடித்துள்ள படம் கோச்சடையான். இந்த படத்துக்காக ரஹ்மான் இசையில் தமிழில் ரஜினிகாந்த் பாடியுள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில் இந்தி பதிப்புக்காக தன் சொந்த குரலில் முதன் முறையாக ரஜினி பாடியுள்ளார். இந்த பாடலை இர்ஷத் கமில் என்பவர் எழுத, நேற்று பதிவு செய்தார் ரஹ்மான். பொதுவாக தான் எந்த மொழியில் நடித்தாலும் தன் சொந்தக் குரலில் டப்பிங் பேசுவதுதான் ரஜினி வழக்கம். அவருக்கு இந்தி மிக நன்றாகத் தெரியும். இதுவரை அவரது அனைத்து இந்திப் படங்களிலும் அவரே பேசியுள்ளார். ஆனால் இந்தியில் பாடுவது இதுதான் முதல் முறை. தமிழில் மன்னன் படத்தில் இளையராஜா இசையில் ஒரு பாடல் பாடியிருந்த ரஜினி, இப்போது கோச்சடையானுக்காக ரஹ்மான் இசையில் பாடியுள்ளார். கோச்சடையான் படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. ஜூன் முதல் வாரத்தில் படத்தின் ட்ரைலர் வெளியாகும் என்று தெரிகிறது.



நடிகைகள் பட்டியலில் முதலிடத்தில் தமன்னா
[Friday, 2013-05-24 17:41:13]

கடந்தாண்டில், அனைவரையும் கவர்ந்த பெண்கள் பட்டியலை, பிரபல பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில், முதல் இடத்தை, தமன்னா பிடித்துள்ளார். இந்த செய்தியை தொடர்ந்து, மார்க்கெட் சரிவினால் சோர்ந்து போயிருந்த தமன்னா, மீண்டும் உற்சாகத்துடன் வலம் வருகிறார்.இதற்கு இன்னொரு காரணமும் உள்ளது. தற்போது சினிமாவில் பிசியாக நடித்து வரும் பல நடிகைகளும், இந்த பட்டியலில் பின் தங்கியிருப்பது தான், அந்த காரணம். அனுஷ்காவிற்கு மூன்றாவது இடமும், இலியானா, டாப்சிக்கு 5 மற்றும் 6 வது இடமும், அமலா பாலுக்கு ஏழாவது இடமும், ஹன்சிகாவிற்கு எட்டாவது இடமும், தெலுங்கில் நம்பர் ஒன்னாக இருக்கும் சமந்தாவுக்கு ஒன்பதாவது இடமும் கிடைத்துள்ளதாம். இதுபோதாதா, தமன்னா சந்தோஷப்படுவதற்கு.



கெட்டப்பை மாற்றி புதிய பாணிககு மாறிய கெளதம்
[Friday, 2013-05-24 17:27:27]

மணிரத்னத்தின் கடல் படத்தில் அறிமுகமானவர் கார்த்திக்கின் மகன் கெளதம். அப்படத்தில் முதல் படம் என்று தெரியாத அளவுக்கு அவருக்கு நல்ல ட்ரெய்னிங் கொடுத்து நடிக்க வைத்திருந்தனர். இருப்பினும் படம் தோற்றுப்போனதால் கெளதமின் நடிப்பு பேசப்படவில்லை. அதோடு, மணிரத்னத்தின் அறிமுகம் என்பதற்காக அவரை வைத்து அடுத்தடுத்து படம் இயக்க காத்து நின்ற சில இயக்குனர்களும் அவரது முதல் தோல்வி நம்மை தொற்றிக்கொள்ளக்கூடாது என்று ஓட்டம் பிடித்தனர். இருப்பினும் சினிமாவில் இதெல்லாம் சகஜம் என்று மகனை தட்டிக்கொடுத்து வந்த கார்த்திக், அவருக்கான படவேட்டைகளிலும் தீவிரமடைந்தார். அவரது முயற்சியின் பலனாக இப்போது 3 படத்தை இயக்கிய ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் கை ராஜா வை படத்திற்கு கமிட்டான கெளதம், இப்போது தெலுங்கில் வெளியான அலமொடலய்ண்டி என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கிலும் நடிக்கிறார்.



சித்தார்த்தின் படத்தில் கௌரவ வேடத்தில் சமந்தா
[Friday, 2013-05-24 17:18:34]

சித்தார்த், ஹன்சிகா இணைந்து நடிக்கும், 'தீயா வேலை செய்யணும் குமாரு' என்ற படம், விரைவில் வெளிவருகிறது. காமெடி படங்களுக்கு பெயர் பெற்ற, சுந்தர்.சி தான், இந்த படத்தின் இயக்குனர் என்பதால், படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்போது, இந்த படத்தை பற்றிய போனஸ் செய்தி ஒன்றும் வெளியாகியுள்ளது. இந்த படத்தில், நடிகை சமந்தாவும், பிரபல தெலுங்கு நடிகர், ராணா டகுபாட்டியும், கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்களாம். 'தெலுங்கில் பிசியாக இருக்கும் சமந்தா, இந்த படத்தில், கவுரவ வேடத்தில் நடிக்க, எப்படி சம்மதித்தார் என, விசாரித்தபோது, மேலும் ஒரு சுவாரசியமான தகவல் கிடைத்தது. சித்தார்த் இந்த படத்தின் ஹீரோ என்பதால் தான், சமந்தா, இந்த படத்தில், கவுரவ வேடத்தில் நடிக்கிறாராம்.



ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் சூதாட்டத்தை மையப்படுத்தி உருவாகும் மலையாள படம்
[Friday, 2013-05-24 17:16:08]

மலையாளத்தில் கிரிக்கெட் வீரர்களை மையப்படுத்தி உருவாகி வந்த மதுவில்லினட்டம்வரே என்ற படத்தில் ஒரு கேரக்டரில் நடித்து வந்தார் இந்திய கிரிக்கெட் வீரரான ஸ்ரீசாந்த். ஆனால் இப்போது அவர் கிரிக்கெட் சூதாட்ட சர்ச்சையில் சிக்கி கைது செய்யப்பட்டிருப்பதால், அப்படத்தில் இருந்த அவர் நடித்த காட்சிகளை நீக்கியுள்ளனர். ஆனால், அதே மலையாள சினிமாவில் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களின் சூதாட்டத்தை மையமாக வைத்து தற்போது ஒரு படம் தயாராகிறது. அந்த படத்துக்கு கிரிக்கெட் என்றும் பெயர் வைத்து விட்டனர். அதில் முக்கிய கதாபாத்திரம் ஸ்ரீசாந்த் சம்பந்தப்பட்டதுதானாம். அவருக்கு இந்திய ரசிகர்கள் மத்தியில் இருந்த கிரேஸ், அவர் ஆட்டத்தில் காட்டிய வேகம் தொடங்கி கடைசியில் அவர் சூதாட்டத்தில் ஈடுபட்டு மக்களின் நம்பிக்கை எப்படியெல்லாம் வீணடித்து விட்டார் என்ற கோணத்தில் கதை செல்கிறதாம்.



படப்பிடிப்பின் போது நீச்சல் குளத்தில் வழுக்கி விழுந்த ஸ்ருதிஹாசன்
[Friday, 2013-05-24 17:10:35]

சமீபத்திய பரபரப்பு நடிகையான ஸ்ருதிஹாசன், தற்போது பிரபுதேவா இயக்கிவரும் ராமையா வஸ்தாவய்யா என்ற படத்தின் தெலுங்கு, இந்தி என இரண்டு பதிப்புகளிலும் நடித்து வருகிறார். ஏற்கனவே பல படங்களில இவர் பிசியாக நடித்து வருவதால், ஸ்ருதி கால்சீட் தரும் நாட்களில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை வேகவேகமாக படமாக்கி வருகிறாராம் பிரபுதேவா. இந்த நிலையில், கடந்த சில தினங்களுககு முன்பு, அப்படத்தின் தெலுங்கு பதிப்பில் ஜூனியர் என்.டி.ஆருடன் ஸ்ருதிஹாசன் நடிக்கும் காட்சிகளை ஐதராபாத்தில் நடத்தியிருக்கிறார் பிரபுதேவா. ஒரு நீச்சல் குளத்தில் நின்றபடி அவர்கள் பேசிக்கொண்டிருப்பது போல் காட்சி படமாக்கப்பட்டதாம். அப்போது எதிர்பாராதவிதமாக வழுக்கி விழுந்து விட்டாராம் ஸ்ருதிஹாசன். இதனால் அவரது கை, காலில் சிராய்ப்பு ஏற்பட்டு, ரத்தம் வழிந்திருக்கிறது. இதையடுத்து உடனே மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்ற ஸ்ருதி, அன்று ஒருநாள் மட்டும் ஓய்வெடுத்து விட்டு மீண்டும் மறுநாள் படப்பிடிப்பு கலந்து கொண்டாராம்.



தீயா வேலை செய்யனும் குமாரு படத்தில் சித்தார்த் - சந்தானத்தின் காமெடி கூட்டணி வெற்றி..
[Friday, 2013-05-24 16:29:07]

காமெடி ட்ரேக் ரெடி பண்ணும் விசயத்தில் மற்ற காமெடியன்களை விட சந்தானம் கூடுதலாக மெனக்கெடுவார். அதிலும் தனது அபிமானத்திற்குரிய ஹீரோக்கள் நடிக்கும் படமென்றால், தூங்காமல் உட்கார்ந்து காமெடி சீன்களை யோசிப்பார். அப்படி யோசித்தது தனக்கு நன்றாக இருப்பது போல் தெரிந்தால் உடனே அப்படத்தில் நடிக்கும் ஆர்யாவோ, சிம்புவோ, உதயநிதியோ யாராக இருந்தாலும் உடனே அவர்களுக்கு போன் போட்டு சீனை சொல்லுவார். அதைக்கேட்டு அவர்கள் விழுந்து விழுந்து சிரித்தால் அந்த காட்சியை ஓ.கே செய்வார். இல்லையேல் ஓரங்கட்டி விடுவார். இதேபாணியில்தான் சித்தார்த்துடன் முதல்முதலாக இணைந்து நடிக்கும் தீயா வேலை செய்யனும் குமாரு படத்துக்காகவும் கடுமையாக மெனக்கெட்டுள்ளாராம் சந்தானம். சித்தார்த்தும் ஒரளவு காமெடி சென்ஸ் உள்ளவர் என்பதால், இவர் சொல்லும் காட்சிகளுக்கு அவரும் தனது கருத்துக்களையும் உள்ளே திணிக்க, இப்படத்தில் எதிர்பார்த்ததைவிட சித்தார்த் - சந்தானத்தின் காமெடி கூட்டணி பெரிய அளவில் ஒர்க்அவுட்டாகி உள்ளதாம்.



பூனை குறுக்கே பாய்ந்ததால் அலறிய வித்யாபாலன்..
[Thursday, 2013-05-23 20:46:44]

தி தர்ட்டி பிக்சர், கஹானி போன்ற வித்தியாசமான கதையம்சம் உடைய படங்களில் நடித்த, வித்யா பாலன், ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். குறிப்பாக, தினமும் வீட்டை விட்டு வெளியே புறப்படும்போது, எதிரில், யாராவது வருகிறார்களா, என்பதை கவனித்தப் பிறகே வெளியேறுவார். அப்படிப்பட்ட வித்யா பாலன், சமீபத்தில் தன் கணவர் சித்தார்த்துடன், ஆஷிகி என்றொரு படத்தின் சிறப்புக் காட்சியை பார்க்க சென்ற போது, ஒரு பூனை, தியேட்டர் வாசலில், அவருக்கு குறுக்கே பாய்ந்து விட்டதாம். இதனால் அலறிய அவர், சகுனம் சரியில்லை என, கூறி, வீட்டுக்கு திரும்ப முடிவு செய்தார். கணவர், சமாதானப்படுத்தியதால், ஒரு வழியாக, தியேட்டருக்கு சென்றார். இருப்பினும், யாரிடமாவது வாய் கொடுத்தால், அது வம்பில் முடியக்கூடும் என, நினைத்து, படம் முடிந்து, வீட்டிற்கு வந்து சேரும் வரை, யாரிடமும், வாய் திறக்கவே இல்லையாம்.


Mahesan supramaniyam 031109
Ramans2011
INNSYS-20120930
TDE_Computers2011
AJRwindows22.05.13
Canada Kanthasamy Kovil
TamilsGuid-191012-2013
NIRO-DANCE-100213
RoyaShades-l2011(04-12-11)
Suresh-remax-2013-01-01
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com