Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 18, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்தை சுவீகரிப்பது குறித்து கர்நாடக முதல்வர் ஆலோசனை!
[Sunday, 2012-06-10 09:04:07]
News Service

தலைமறைவான நித்யானந்தாவை தேடி, தமிழகம் உட்பட பல மாநிலங்களுக்கு போலீசார் விரைந்துள்ளனர். பிடதி ஆசிரமத்தை அரசு கையகப்படுத்துவது தொடர்பாக முதல்வர் சதானந்த கவுடா தலைமையில் நாளை மறுநாள் நடக்கவுள்ள அவசரக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

  

நித்யானந்தா வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள ஆர்த்திராவ், கன்னட "டிவி' சேனலில் பேட்டியளித்தார். இதற்கு மறுப்புக்கூற ஏற்பாடு செய்திருந்த பத்திரிகையாளர் சந்திப்பில், நீதிமன்ற சம்மன் பற்றி கன்னட, "டிவி' சேனல் நிருபர் கேள்வி எழுப்பியதால், கோபமடைந்த நித்யானந்தா, அவரை வெளியேற்ற தன் சீடர்களுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, நிருபரை சீடர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். தன்னை, பணி செய்யவிடாமல் தடுத்து தாக்கிய நித்யானந்தா, அவரது சீடர்கள் மீது போலீசில் நிருபர் புகார் செய்திருந்தார்.

கன்னட, "டிவி' நிருபருக்கு நடந்த அவமரியாதையைக் கண்டித்து, கன்னட அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. பிடதி ஆசிரம நுழைவு வாயில் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். ஆசிரமத்துக்குள் கற்களை வீசினர். பாதுகாப்புக்கு நின்ற போலீசார் உட்பட ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் காயமடைந்தனர். போலீசார் தடியடி நடத்தி, கூட்டத்தைக் கலைத்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட, கன்னட அமைப்பினர் 25 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு நேற்று வரை நீதிமன்றம் ஜாமின் வழங்கவில்லை.

நிருபரை பணி செய்யவிடாமல் தடுத்த, நித்யானந்தாவின் பெண் சீடர்கள் நான்கு பேர் உட்பட எட்டு பேரை போலீசார் கைது செய்து, நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். அவர்களுக்கு நீதிபதி ஜாமின் வழங்கினார். இது குறித்து விசாரணை நடத்த நித்யானந்தாவை போலீசார் தேடினர். ஆனால், அவர் ஆசிரமத்தில் இல்லை.ராம்நகர் மாவட்ட போலீஸ் எஸ்.பி., அனுபம் அகர்வால், நித்யானந்தாவிடம் விசாரணை நடத்த வந்தபோது, அவர் அங்கிருந்து தலைமறைவாகி விட்டது தெரிய வந்தது. அவரைக் கைது செய்ய அனுபம் அகர்வால், ராமகிருஷ்ணா தலைமையில் போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது.

நித்யானந்தா, மதுரை ஆதீன மடத்துக்கு சென்றிருக்கலாம் என்றும், மைசூருவில் தலைமறைவாக இருக்கலாம் என்றும் இரு வேறு தகவல்கள் கூறப்படுகின்றன. ஆசிரமத்தை சுற்றி, 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. ஜூன் 23ம் தேதி வரை இத்தடை அமலில் இருக்கும். இதனால், ஆசிரமம் வெறிச்சோடிக் காணப்படுகிறது. ஆசிரமம் கேட்டின் முன், 25 போலீசார் வேனில் அமர்ந்தபடி உள்ளனர். நேற்று காலை தமிழகத்திலிருந்து வந்த காரில் இரண்டு பக்தர்கள் இருந்தனர். இவர்களை உள்ளே அனுமதித்தனர்.

நித்யானந்தாவை தேடி, மதுரைக்கு ஒரு போலீஸ் படையும், மற்றொரு படை மைசூருவுக்கும் சென்றுள்ளது. நேற்றும், இன்றும் நீதிமன்றம் விடுமுறை என்பதால், நாளை நீதிமன்றத்தில் ஜாமின் பெற்ற பின்னரே நித்யானந்தா வெளியே வருவார் என்று கூறப்படுகிறது."நித்யானந்தாவை கைது செய்ய வேண்டும். ஆஸ்ரமத்தை அரசு கையகப்படுத்த வேண்டும்' என்றும், பெங்களூரு, மைசூரு, பெல்லாரி, மாண்டியா, ஹாசன் போன்ற நகரங்களில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

இன்று மைசூரு ரோடு காளி ஆஞ்சநேயா தேவஸ்தானம் முன்பிருந்து இந்து, கன்னட அமைப்பினர், பிடதி ஆஸ்ரமம் நோக்கி ஊர்வலம் செல்லப் போவதாக அறிவித்துள்ளனர். இதற்கிடையில், ஆஸ்ரமத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற கோரிக்கை குறித்து, முதல்வர் சதானந்த கவுடா தலைமையில் வரும் 12ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடக்கவுள்ளது.

கர்நாடக மாநிலம் தார்வாடில் நிருபர்களிடம் பேசிய அம்மாநில சட்ட அமைச்சர் சுரேஷ் குமார் கூறியதாவது:பிடதி ஆசிரம விஷயத்தில் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறுவது தவறு. நேற்று முன்தினம்) நடந்த ரகளைக்குப் பின்னர், ஆசிரமத்தைச் சுற்றி, 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதிலிருந்தே அரசு கவனம் செலுத்துகிறது என்பதை அறிந்து கொள்ளலாம். நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில், ஆட்சேபணைக்குரிய நடவடிக்கைகள் நிகழ்வதாக புகார்கள் வந்துள்ளதால், அந்த ஆசிரமத்தை கையகப்படுத்துவது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருகிறது. நிதியானந்தா தியான பீடத்திற்கு நிர்வாகி ஒருவரை நியமிக்கவும் திட்டமிட்டுள்ளது என்றார்.

இரவோடு இரவாக, நித்யானந்தா வட மாநிலத்துக்கு தப்பி சென்றிருக்கலாம் என, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.மதுரை ஆதீனம் மூலம் முன்ஜாமின் பெற, நித்யானந்தா தீவிர முயற்சி செய்து வருகிறார். மதுரை ஆதீனம், பிடதி ஆஸ்ரமத்தில் தங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஜாமின் கிடைத்த பின், நித்யானந்தா வெளியுலகில் தலை காட்ட முடிவு செய்துள்ளார்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

"எனது மகளின் மரணத்துக்கு நீதி வழங்குங்கள்" - நீதிபதியிடம் கதறி அழுத டில்லி மாணவியின் தாய்!
[Saturday, 2013-05-18 06:36:07]

தில்லியில், ஓடும் பேருந்தில் துணை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில் சாகேத் விரைவு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை அவரது தாய் சாட்சியம் அளித்தார். அப்போது, "எனது மகளின் மரணத்துக்கு நீதி வழங்குங்கள்' என்று நீதிபதியிடம் கண்ணீர் மல்க அவர் கை கூப்பி வேண்டிக் கொண்டார். தில்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 16-ஆம் தேதி ஓடும் பேருந்தில் துணை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். 13 நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு சிங்கப்பூரில் அவர் உயிரிழந்தார்.தில்லி சாகேத் விரைவு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தினமும் விசாரிக்கப்பட்டு வருகிறது. அதில் மாணவியின் தாய் வெள்ளிக்கிழமை அளித்த சாட்சியம் வருமாறு:



100 மி.லீ குடிநீர் பாக்கெட் 7 ரூபா - தண்ணீர் தட்டுப்பாட்டால் தவிக்கும் சென்னை!
[Saturday, 2013-05-18 06:07:26]

பாட்டில், கேன் மற்றும் பாக்கெட்டுகளில் பொதிக்கப்பட்ட குடிநீரை தயாரிக்கும் நிறுவனங்கள், ஸ்டிரைக் அறிவித்து உற்பத்தியை நிறுத்தி உள்ளதால், சென்னை குடிமையங்களில், ஒரு பாக்கெட் குடிநீர் ஏழு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கேன் குடிநீர் பயன்படுத்தி பழக்கப்பட்ட சென்னைவாசிகள், ஸ்டிரைக்கினால் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டால், கேன்களைதேடி அல்லல்பட்டனர்.மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் தருவதாக கூறி, தமிழகத்தின் நகர்ப்புறங்களில், 900க்கும் மேற்பட்ட குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.சென்னை, காஞ்சிபும் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும், இந்த தொழிலில், 309 நிறுவனங்கள் செயல்படுகின்றன.



முள்ளிவாய்க்காலில் தமிழர்களைக் கொன்று குவிக்க துணைபோன காங்கிரஸ் தலைமையகத்துக்கு பூட்டுப்போட முயன்றவர்கள் கைது!
[Saturday, 2013-05-18 05:56:49]

சென்னை, சத்தியமூர்த்தி பவனுக்கு, பூட்டு போடும் முற்றுகை போராட்டம் நடத்திய, இந்து மக்கள் கட்சியினர், 4 பேர் கைது செய்யப்பட்டனர். இலங்கை, முள்ளிவாய்க்கால் பகுதியில், 2 லட்சம் தமிழர்களை கொன்று குவிக்கக் காரணமான, காங்கிரஸ் கட்சியை, தமிழகத்தை விட்டு வெளியேறும்படி கோரி, சத்தியமூர்த்தி பவனுக்கு பூட்டு போடும் முற்றுகை போராட்டமும் நடத்தப்படும் என, இந்து மக்கள் கட்சியினர் அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று, சத்தியமூர்த்தி பவன் அருகே, இந்து மக்கள் கட்சியினர் திரண்டனர். அவர்கள் அனைவரும், கையில் கொடியுடனும், பூட்டுக்களுடனும் ஓடி வந்து கோஷமிட்டனர்.



பா.ம.க.நிறுவனர் ராமதாசுக்கு வரும் 20ம் தேதி "பைபாஸ் சர்ஜரி'!
[Saturday, 2013-05-18 05:52:37]

பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கு, வரும், 20ம் தேதி, சென்னையில் பைபாஸ் சர்ஜரி நடக்கவுள்ளது. விழுப்புரத்தில் போலீஸ் தடையை மீறி, கடந்த, 30ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின், மேலும் சில வழக்குகளிலும், கைது செய்யப்பட்ட அவர், அனைத்து வழக்குகளிலும் ஜாமின் பெற்று, கடந்த, 11ம் தேதி விடுதலை ஆனார். மூச்சு திணறல் காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில், அன்று இரவே அவர் சேர்க்கப்பட்டார்.



மனைவிக்காக இன்னொரு தாஜ்மகால் கட்டினார் போஸ்ட் மாஸ்டர்!
[Saturday, 2013-05-18 05:49:39]

உத்தர பிரதேசத்தில் மீண்டும் ஒரு காதல் சின்னம் கட்டப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற போஸ்ட் மாஸ்டர்ஒருவர், தன் மனைவியின் நினைவாக, தாஜ்மகாலின் மாதிரியில்,கட்டடம் ஒன்றை கட்டிஉள்ளார். உத்தர பிரதேச மாநிலம், புலந்த்சர் மாவட்டத்தை சேர்ந்தவர், பைசல் ஹசன் கதாரி, 77. தபால் துறையில், போஸ்ட் மாஸ்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி, தஜம்முலி பேகம், 2011ல், மரணம் அடைந்தார்.பைசல் ஹசன் - தஜம்முலி பேகம் தம்பதிக்கு, குழந்தை இல்லை என்றாலும், ஒருவருக்கொருவர், மிகுந்த பாசத்துடன் வாழ்ந்து வந்தனர். அதனால், மனைவி இறந்ததும், அவர் மீது கொண்ட பாசம் காரணமாக, அவரின் உடலை அடக்கம் செய்த இடத்தில், சிறிய அளவிலான, தாஜ்மகால் கட்ட, பைசல் ஹசன்திட்டமிட்டார்.



பெண்களை வைத்து வீரர்களை மடக்கிய சூதாட்டக்காரர்கள் - மன்னிப்புக் கேட்டார் ஸ்ரீசாந்த் தந்தை!
[Friday, 2013-05-17 17:00:05]

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட வீரர்களுக்கு பெண்களை சப்ளை செய்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில் சிக்கிய கிரிக்கெட் வீரர்களுக்கு பெண்களையும் புக்கிகள் சப்ளை செய்ததாக டெல்லி போலீசார் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளனர். நடப்பு ஐபிஎல் 6வது கிரிக்கெட் தொடரின் கரும்புள்ளியாக ஸ்பாட் பிக்சிங் விவகாரம் அமைந்திருக்கிறது. டெல்லி போலீஸ் அதிகாரி பத்ரீஷ் தத்தின் மர்ம மரணத்தின் மூலம் அம்பலத்துக்கு வந்த கிரிக்கெட் மோசடியில் அடுத்தடுத்து புது தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.



இந்திய மீனவர்களை விடுவிக்கும்படி இலங்கை அதிகாரிகளிடம் கெஞ்சினார் சல்மான் குர்ஷித்!
[Friday, 2013-05-17 16:47:06]

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று இலங்கையிடம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் வலியுறுத்தியுள்ளார். இலங்கை தூதரக அதிகாரிகளிடம் தொலைபேசி வாயிலாக பேசிய சல்மான் குர்ஷித், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விரைவில் இலங்கை விடுதலை செய்ய வேண்டும். 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த வழக்குகளை விரைந்து முடிக்கவும், அவர்கள் வெளியில் வருவதற்கும் வழி காண வேண்டும்.



8 வயது மாணவனை சுவரில் தலையை மோதிக் கொன்ற ஆசிரியர் கைது!
[Friday, 2013-05-17 16:43:46]

மேற்கு வங்க மாநிலம், 24வது தெற்கு பர்கானா, பசந்தி நகர் பகுதியில் நிர்தேஷ்காளி என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது.நேற்று முன் தினம், இப்பள்ளியில் படிக்கும் 8 வயது மாணவன் வகுப்பறையில் புத்தகப் பையை தூக்கி வீசியதற்காக கோபமடைந்த ஆசிரியர் அந்த மாணவனை அடித்துள்ளார். அவனை பிரம்பால் அடித்தும் ஆவேசம் அடங்காத ஆசிரியர் மாணவனின் தலையை பிடித்து சுவற்றில் மோதினார். இதனால், தலையில் பலத்த காயமடைந்த மாணவனை சிகிச்சைக்காக பெற்றோர் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.சிகிச்சை பலனின்றி அந்த மாணவன் இன்று பரிதாபமாக உயிரிழந்தான். இச்சம்பவம் தொடர்பாக ஆசிரியரை கைது செய்த போலீசார், 8 வயது மாணவனை இவ்வளவு கொடூரமான முறையில் தண்டித்தது குறித்து விசாரித்து வருகின்றனர்.



வயதுச் சர்ச்சையில் சிக்கினார் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்!
[Friday, 2013-05-17 16:40:20]

பிரதமர் மன்மோகன் சிங்கின் வயது எண்பதா எண்பத்தி இரண்டா என்ற புதிய சர்ச்சை தற்போது தலைதூக்கியுள்ளது.பாராளுமன்ற மேல்சபை தேர்தலில் போட்டியிட பிரதமர் மன்மோகன் சிங் அசாம் சட்டசபை செயலாளரிடம் கடந்த புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்.அந்த மனுவில் வயது தொடர்பாக குறிப்பிட்ட அவர், தனக்கு 82 வயதாவதாக கூறியுள்ளார். ஆனால், பிரதமரின் இணைய தளம் மற்றும் பாராளுமன்ற இணைய தளம் ஆகியவற்றில் பிரதமரின் பிறந்த தேதி 26-09-1932 என குறிப்பிடப்பட்டுள்ளது.



தேம்பித் தேம்பி அழுதபடி சிறைக்குச் சென்ற சஞ்சய் தத்!
[Friday, 2013-05-17 16:35:26]

சிறைவாசம் அனுபவிக்கத் தொடங்கியுள்ள நடிகர் சஞ்சய்தத் நேற்று இரவு முழுவதும் தூக்கமின்றி தவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சஞ்சய் தத்தின் தனது சிறைவாசத்தின் முதல் நாள் இரவு அனுபவம் தொடர்பாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்றிரவு 11 மணியளவில் சிறையில் அவருக்கென ஒதுக்கப்பட்ட அறைக்கு சஞ்சய் தத் அழைத்துச் செல்லப்பட்டார். வீட்டில் இருந்து அனுப்பப்பட்ட உணவை சாப்பிட்ட பின்னர், குடிப்பதற்கு அவர் தண்ணீர் கேட்டார். சிறை அதிகாரிகள் ஒரு பாட்டிலில் தண்ணீர் தந்தனர்.



ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்ட கிரிக்கெட் வீரர்கள் சிக்கியது எப்படி?
[Friday, 2013-05-17 09:53:55]

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடைசியாக விளையாடிய 3 போட்டிகளிலும் ஸ்பாட் பிக்சிங் நடந்தது என்று டெல்லி போலீஸ் கமிஷனர் நீரஜ் குமார் கூறினார்.இது பற்றி, டெல்லியில் போலீஸ் கமிஷனர் நீரஜ் குமார் அளித்த பேட்டி: ஸ்ரீசாந்த், சாண்டிலா, அங்கீத் சவான் ஆகியோரை தவிர மற்ற வீரர்கள் யாரும் சூதாட்டத்தில் ஈடுபடவில்லை. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடந்த 5, 9 மற்றும் 15ம் தேதிகளில் முறையே புனே வாரியர்ஸ், பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ் அணிகளுடன் ஆடிய ஆட்டங்களில் ஸ்பாட் பிக்சிங் நடந்துள்ளது. இதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது.போட்டியின்போது தாங்கள் கூறியபடி செய்ய போவதை தெரிவிக்க குறிப்பிட்ட சில சிக்னல்களை வீரர்களுக்கு தரகர்கள் சொல்லி கொடுத்துள்ளனர்.



தமிழகத்தில் போர்க்கொடி தூக்கியுள்ள கேன் வாட்டர் நிறுவனங்கள் - சுத்திகரிக்கப்பட்ட தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து!
[Friday, 2013-05-17 09:49:30]

மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் உரிமம் பெறாத மேலும் 92 கேன் வாட்டர் நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து கேன் வாட்டர் நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி போராட்டத்தில் குதித்துள்ளன. நிலத்தடி நீரை சுத்திகரிக்க தமிழகத்தில் 950 பேக்கேஜ் குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. இவை தண்ணீரை சுத்திகரித்து கேன்களில் அடைத்து சப்ளை செய்கின்றன. இந்நிலையில், கேன் தண்ணீர் சரியாக சுத்திகரிக்காமல் சப்ளை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பான வழக்கு சென்னை பசுமை தீர்ப்பாயத்தில் நடந்தது. இதையடுத்து, மாசு கட்டுப்பாட்டு வாரியம் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு சென்று ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் என தீர்ப்பாயம் உத்தரவிட்டது.



மகனின் திருமண அழைப்பிதழ் ஒன்றுக்கு 15 ஆயிரம் ரூபா செலவிட்டுள்ள கர்நாடக அரசியல் தலைவர்!
[Friday, 2013-05-17 09:39:48]

பெல்லாரி சுரங்க அதிபரும், தேவகவுடாவின், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான சூரிய நாராயண ரெட்டி, தன் மகன் சரத் திருமண அழைப்பிதழை தயாரிக்க, அழைப்பிதழ் ஒன்றுக்கு, 15 ஆயிரம் ரூபாய் செலவழித்துள்ளார். அழைப்பிதழ்களை தயாரிப்பதில் புகழ் பெற்ற, மும்பை ரவீஷ் கபூர் பிரின்டர்ஸ் நிறுவனத்தில், இந்த அழைப்பிதழ்களை தயாரித்துள்ளனர். இவர்கள், ஏற்கனவே, இரண்டு ஆண்டுகளுக்கு முன், தொழிலதிபர் ராஜ்குந்த்ரா, பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி ஆகியோரின் திருமண அழைப்பிதழை தயாரிக்க, அழைப்பிதழ் ஒன்றுக்கு, 12 ஆயிரம் ரூபாய் கட்டணமாக பெற்றுள்ளனர்.



தைரியமிருந்தால் சட்டசபைக்கு வரட்டும் - கருணாநிதிக்கு சவால் விட்ட அமைச்சர்!
[Friday, 2013-05-17 09:34:11]

கருணாநிதிக்கு தைரியமிருந்தால், சட்டசபைக்கு வந்து, கருத்துகளைக் கூறட்டும்,''என, வீட்டுவசதித் துறை அமைச்சர் வைத்திலிங்கம் சவால் விடுத்துள்ளார். அ.தி.மு.க., அரசின் சாதனைகளைப் பாராட்டி, புதிய தமிழகம் எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி பேசுகையில்,"தி.மு.க.- தே.மு.தி.க., எம்.எல்.ஏ.க்களும், சபையில் இருந்திருந்தால், இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். எதிர்காலத்தில், அவர்களும் சபையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்,'' என்றார். இதற்கு, நிதி அமைச்சர் பன்னீர்செல்வம், "தி.மு.க.வை, யாரும் வெளியேற்றவில்லை. வெளியேற வேண்டும் என, திட்டமிட்டு அவர்களே வெளியேறி விட்டனர்.



இந்தியப் பெருங்கடலில் சீன ஆதிக்கம் அதிகரிப்பு - தமிழகத்தில் விமானப்படையை பலப்படுத்துகிறது இந்தியா!
[Friday, 2013-05-17 09:27:46]

இந்திய பெருங்கடலில், சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால், அதை கண்காணிக்க வேண்டிய கட்டாயம், மத்திய அரசுக்கு உருவாகியுள்ளது. அதனால், இந்திய விமானப் படையின், புதிய விமான தளம், தஞ்சாவூரில் அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா, வரும், 27ம் தேதி நடைபெறுகிறது. இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமான தளங்கள், தமிழகத்தில், கோவை அருகே சூலூரிலும், சென்னையை அடுத்த தாம்பரத்திலும் ஏற்கனவே உள்ளன. தற்போது, மூன்றாவதாக, தஞ்சாவூரில், புதிய விமானத் தளம், 150 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா, வரும், 27ம் தேதி நடக்கிறது. ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி, புதிய விமான தளத்தை திறந்து வைக்கிறார்.



சிறையில் அடைக்கப்பட்ட சஞ்சய் தத்துக்கு ஒருமாதம் வீட்டுக் சாப்பாடு வழங்க நீதிமன்றம் அனுமதி!
[Thursday, 2013-05-16 19:02:37]

மும்பை தொடர் குண்டுவெடிப்பில் நடிகர் சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டு சிறைதண்டனை விதித்து மும்பை தடா கோர்ட் தீர்ப்பளித்தது. சஞ்சய் தத் சில படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டு இருந்ததால், கோர்ட்டில் சரண் அடைய நேற்று வரை அவகாசம் அளித்தது. அவகாசத்தை மேலும் நீடிக்க கோரும் மனுக்களை சுப்ரீம் கோர்டடு தள்ளுபடி செய்தது. இதையடுத்து நடிகர் சஞ்சய்தத் இன்று பிற்பகல் மும்பை தடா கோர்ட்டில் சரண் அடைந்தார். பின்னர் அவர் மும்பை ஆர்தர் ரோடு சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.



வளரும் தலைக் குழந்தைக்கு முதல்கட்ட ஆபரேஷன் வெற்றி!
[Thursday, 2013-05-16 18:57:46]

திரிபுரா மாநிலம், அகர்தலா அருகே உள்ள ஜிராணியா கிராமத்தை சேர்ந்த அப்துல் ரகுமான். கூலி வேலை செய்யும் இவரது மனைவிக்கு 18 மாதங்களுக்கு முன்னர் பெண் குழந்தை பிறந்தது. ரூனா பேகம் என பெயரிடப்பட்டுள்ள இந்த குழந்தைக்கு பிறக்கும் போதே மண்டை ஓட்டின் உள்புறம் மூளை அமைந்துள்ள பகுதியில் திரவம் கோர்த்துக் கொண்டதால் தலையின் அளவு சராசரி அளவை விட இருமடங்கு பெரிதாக இருந்தது. ரூனா பேகத்திற்கு 1 1/2 வயதான போது தலையின் விட்டம் 94 சென்டி மீட்டராக ஆகிவிட்டது. நாளடைவில் இந்த அளவு இன்னும் அதிகரித்துவிடும்.



டோணியும், ஹர்பஜனும் மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை ஒழிக்க சதி செய்கின்றனர் - ஸ்ரீசாந்த்தின் தந்தை குற்றச்சாட்டு!
[Thursday, 2013-05-16 18:05:17]

கேப்டன் மகேந்திர சிங் டோணியும், ஹர்பஜன் சிங்கும் சேர்ந்து என் மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை ஒழித்துக் கட்டப் பார்க்கின்றனர்.இருவரும் சேர்ந்து செய்த சதியால்தான் இப்போது எனது மகன் மாட்டியுள்ளான். அவன் அப்பாவி என்று கூறியுள்ளார் ஸ்ரீசாந்த்தின் தந்தை சாந்தகுமாரன் நாயர். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது- என் மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை முற்றிலுமாக முறித்துப் போட டோணியும், ஹர்பஜன் சிங்கும் முடிவு செய்து விட்டனர். இருவரும் சேர்ந்து கூட்டு சதி செய்து எனது மகனை மாட்டி விட்டுள்ளனர். மிகப் பெரிய சதித் திட்டம் இதில் அடங்கியுள்ளது. ஹர்பஜன் சிங் தனக்குத் தெரிந்த பஞ்சாப் டிஎஸ்.பி மூலம் இந்த சதியை அரங்கேற்றியுள்ளார்.



கைக்காசு கூட இல்லாமல் திரியும் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்!
[Thursday, 2013-05-16 17:59:56]

பிரதமர் மன்மோகன் சிங்கின் கைவசம் எந்த ஒரு பணமும் இல்லையாம். அவரது அமைச்சரவை சகாக்களுடன் ஒப்பிடும் போது 1996ம் ஆண்டு வாங்கிய மாருதி கார் மட்டுமே மன்மோகனிடம் உள்ளதாம். ராஜ்சபா எம்.பி., தேர்தலில் போட்டியிடுவதற்காக பிரதமர் மன்மோகன் சிங் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் இந்த இந்த விபரம் குறிப்பிடப்பட்டுள்ளது. ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவதற்காக பிரதமர் மன்மோகன் சிங் நேற்று அசாம் மாநில அதிகாரியிடம் வேட்புமனுவை சமர்ப்பித்தார். அதில் அளிக்கப்பட்ட உறுதி சான்றில் மன்மோகன் சிங்கிற்கு சொந்தமாக பணம் ஏதும் இல்லை எனவும், ஒரு பழைய கார் மட்டுமே அவருக்கு சொந்தமாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டத்துக்கு துணைபோன இந்திய அணி பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 3 வீர்ர்கள் கைது!
[Thursday, 2013-05-16 17:05:13]

ஐபிஎல் போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங் செய்து சிக்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் 3 பேரையும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் மற்றும் அஜீத் சாண்டிலா ஆகியோர் ஐபிஎல் போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து டெல்லி போலீசார் அந்த 3 பேரையும் இன்று காலை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 3 வீரர்களையும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) சஸ்பெண்ட் செய்துள்ளது. கைது செய்யப்பட்ட மூவரும் இன்று டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. கிரிக்கெட் வீரர்கள் தவிர டெல்லியில் 7 புக்கீகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


TDE_Computers2011
NIRO-DANCE-100213
Suresh-remax-2013-01-01
Ramans2011
INNSYS-20120930
Canada Kanthasamy Kovil
Mahesan supramaniyam 031109
TamilsGuid-191012-2013
RoyaShades-l2011(04-12-11)
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com