Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 20, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
வடக்கு கிழக்கில் தற்போதும் இராணுவ நிலைகள் அதிகம் காணப்படுகின்றன: பிபிசி செய்தியாளர்..
[Friday, 2012-08-10 12:55:58]
News Service

சிறிலங்காத் தீவில் உண்மையான மீளிணக்கப்பாட்டு முயற்சிகள் நடைபெறுவதாக கூறப்படுகின்ற போதிலும், இவ்வாறான தமிழ் மொழிப் புறக்கணிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதன் கருத்து என்ன?

  

இவ்வாறு கேள்வி எழுப்புகிறார் 2009ம் ஆண்டுக்கு பின் முதல்தடவையாக முல்லைத்தீவுப் பகுதிக்கு இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்ட பிபிசி செய்தியாளர் Charles Haviland.

அதன் முழுவிபரமாவது:

சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் வடுக்களை இன்றும் பார்க்க முடிகிறது. சிறிலங்காவில் அரங்கேற்றப்பட்ட, மிகக் கொடூரமான யுத்த நடவடிக்கை இடம்பெற்ற இடத்தில் நாம் நின்றிருந்தோம். அங்கேயிருந்த மிக உயரமான பனைமரங்களின் தலைகள் துண்டிக்கப்பட்டிருந்தன. தமிழ்ப் புலிகள் மற்றும் சிறிலங்கா இராணுவத்திற்கும் இடையில் பல பத்தாயிரக்கணக்கான மக்கள் அகப்பட்டனர்.

இவ்வாறு அகப்பட்டுக் கொண்டவர்களில் வயது குறைந்த சிறார்களை புலிகள் அமைப்பு பலாத்காரமாக படையில் இணைத்துக் கொண்டதுடன் தப்பிக்க முயன்றவர்கள் சுடப்பட்டனர். அத்துடன் சிறிலங்கா இராணுவமானது இந்த மக்களைக் குறிவைத்து குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டது. போரின் பின்னர் எஞ்சியிருந்த கட்டடங்களில் பெரும்பாலானவை பாதுகாப்பற்றனவாகவும், அழிக்கப்பட வேண்டிய நிலையிலும் காணப்படுகின்றன.

பெரும்பாலான கட்டடங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் தற்போது காணப்படும் பேருந்துகளும் அழிவடைந்துள்ளன. மக்கள் பயன்படுத்திய உடைகள், கதிரைகள் போன்ற பல்வேறு பொருட்களும் ஆங்காங்கே காணப்படுகின்றன.

சேதமடைந்திருந்த கத்தோலிக்க தேவாலயம் ஒன்றை நான் பார்த்தேன். இத்தேவாலயத்தைச் சூழ புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகள் அகற்றப்பட்டிருந்தன. சிங்கள இராணுவத்தினன் ஒருவன் என்னை அத்தேவாலயத்திற்கு கூட்டிச் சென்றான். நான் ஒரு றோமன் கத்தோலிக்கன் என அந்த இராணுவத்தினன் என்னிடம் தெரிவித்தான். சிறிலங்காவில் வாழும் பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் குறிப்பாக சிறிலங்கா இராணுவத்தில் இவ்வாறான கத்தோலிக்கர்கள் இருப்பது மிகக் குறைவாகும்.

நான் முன்னர் சந்தித்திருந்த ஒரு மனிதன் தனது சகோதரன் ஒருவரையும், சகோதரி ஒருவரையும் யுத்தத்தில் இழந்திருந்ததாக என்னிடம் தெரிவித்தார். "நாங்கள் மனித உடலங்களின் மேலால் ஏறிச் செல்ல வேண்டியிருந்தது" என அந்த மனிதர் கூறினார்.

யுத்தம் இடம்பெற்ற இந்தப் பகுதியில் விதைக்கப்பட்டிருந்த நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டதன் பின்னரே, இதுவரை காலமும் இடம்பெயர்ந்தோர் முகாங்களில் தங்கியிருந்த மக்கள் திரும்பி வரத்தொடங்கியுள்ளனர். கட்டங்கள் சில எஞ்சியுள்ள போதிலும் கூட அவை மீளக் கட்டவேண்டிய நிலையில் காணப்படுகின்றன.

முன்னரை விட தற்போது இந்த மக்களது வாழ்வு இயல்பானதாக இருப்பது போன்று தெரிகிறது. தமிழ் மீனவர் ஒருவர் நந்திக்கடல் நீரேரியில் மீன்பிடியில் ஈடுபட முடியும். இங்கே இறங்குதுறைமுகம் மற்றும் படகுகள் காணப்படுகின்றன.

2009ல் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது மக்கள் நந்திக் கடல்நீரேரியின் ஊடாக சிறிலங்கா இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு தப்பிச் சென்றிருந்தனர். நந்திக் கடலின் கரையிலேயே கொல்லப்பட்ட புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடலமும் காணப்பட்டதாக ஒளிப்படங்கள் உறுதிப்படுத்தின.

இந்த நிலத்தில் யுத்தம் இடம்பெற்றதற்கான சாட்சியங்கள் குறைவாகக் காணப்படுகின்றன. இங்கு காணப்படும் அறிவுறுத்தல்கள் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே எழுதப்பட்டுள்ளன. இந்தப் பகுதியின் உள்ளுர் மக்களின் மொழியாக காணப்படும் தமிழ் மொழி இவ்வாறான அறிவுறுத்தல்களில் பயன்படுத்தப்படவில்லை. போரின் போது பெருமளவானவற்றை இழந்த இந்த மக்களின் சொந்த மொழியான தமிழ் மொழி இங்கு புறக்கணிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்றே கைப்பற்றப்பட்ட புலிகளின் கருவிகள் வைக்கப்பட்டுள்ள இடம், பிரபாகரனின் பதுங்குகுழி மற்றும் சுற்றுலா மையம், நந்திக்கடல் நீரேரி போன்றவற்றிலும் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளிலேயே அறிவுறுத்தல்கள் தொங்கவிடப்பட்டுள்ளன.

பிரபாகரனின் பதுங்குகுழியைப் பார்வையிடுவதற்காக பாடசாலை மாணவர்கள், ஜேர்மனியில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் சிலர் வந்திருந்தனர். தமிழ் மொழியில் பேசக்கூடிய சிங்கள இராணுவத்தினன் ஒருவன் இவர்களிற்கு வழிகாட்டினான். இது வரவேற்கப்படக் கூடிய விடயமல்ல. அங்கு தமிழ் வார்த்தை ஒன்றைக் கூட காணமுடியவில்லை.

இது தொடர்பாக இரு இடங்களில் நாம் சிறிலங்கா இராணுவத்திடம் வினாவினோம். "தமிழ் மொழியைப் பேசக் கூடிய ஒருவரும் இங்கில்லை. ஆனால் விரைவில் தமிழ் மொழி மூல அறிவுறுத்தல்களை வழங்க நாம் விரும்புகிறோம்" என இராணுவத்தினன் ஒருவன் தெரிவித்தான். இது தொடர்பாக தான் மேலாதிகரிகளிடம் எடுத்துக் கூறியபோதிலும் அவர்கள் இதில் ஆர்வங்காட்டவில்லை என பிறிதொரு இராணுவத்தினன் குறிப்பிட்டான்.

தமிழ் மக்கள் தாம் இரண்டாந்தர மக்களாக நடாத்தப்படுவதாக உணர்ந்ததன் பெறுபேறாகவே யுத்தம் பல பத்தாண்டுகளாக தொடரப்பட்டது. சிறிலங்காத் தீவில் உண்மையான மீளிணக்கப்பாட்டு முயற்சிகள் நடைபெறுவதாக கூறப்படுகின்ற போதிலும், இவ்வாறான தமிழ் மொழிப் புறக்கணிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதன் கருத்து என்ன?

சிறிலங்கா அரசாங்கமானது உடனடியாக கவனத்திற் கொள்ள வேண்டிய விடயங்கள் பல உள்ளன. தொழில் வாய்ப்பு பிரச்சினைகளும் சிறிலங்காவின் வடக்கு கிழக்கில் காணப்படுகின்றன. முன்னாள் புலி உறுப்பினர் ஒருவரைச் சந்திக்கின்ற சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. தொழில் வாய்ப்பை பெற முடியாதிருப்பதாகவும், ஆனால் யுத்தம் ஒன்று மீண்டும் தொடர்வதை தான் விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

சிறிலங்காவின் வடக்கு கிழக்கில் தற்போதும் இராணுவ நிலைகள் அதிகம் காணப்படுகின்றன. சிறிலங்காவின் வடக்கில் பயணிக்கும் போது இதனை உணரமுடிகிறது. அத்துடன் இராணுவத்தால் நிர்வகிக்கப்பட்ட பல உணவகங்கள், கடைகள் போன்றன தற்போது மூடப்பட்டுள்ளன.

தமிழ் புலிகள் மீண்டும் தோன்றி வன்முறை உருவகலாம் என்பது தொடர்பில் தாம் அச்சம் கொண்டுள்ளதாக அரசாங்கம் தற்போதும் கூறிவருகிறது. சிறிலங்கா இராணுவப் புலனாய்வுச் செயற்பாடுகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

"மக்கள் என்ன செய்கிறார்கள்? அவர்கள் எங்கே போகிறார்கள்? என்பது தொடர்பாக அறிக்கையிடுமாறு நாம் கேட்கப்பட்டுள்ளோம். ஆனால் பாடசாலை மாணவர்களின் நடவடிக்கைகளை நாம் ஒருபோதும் கண்காணிப்பதில்லை. மக்களின் மதிய உணவு என்ன என்பதைக் கூட நாம் அறிந்து வைத்துள்ளோம்" என அவ் அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.

-புதினப்பலகை-
(மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி)

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

முப்பது வருடங்களாக தமிழர்கள் போராடி அழிவைத்தான் பெற்றுக்கொண்டுள்ளனர் - ஹிஸ்புல்லா
[Monday, 2013-05-20 07:59:39]

பதவிகளுக்காக முஸ்லிம் சமூகத்தை காட்டிக் கொடுக்க மாட்டேன் என பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். முஸ்லிம்கள் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கும் பல சவால்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் முஸ்லிம் சமூகம் பொறுமையுடனும் நிதானத்துடனும் செயற்பட வேண்டும். முஸ்லிம் சமூகத்தை நிதானத்துடன் வழி நடத்த வேண்டிய பொறுப்பு முஸ்லிம் அரசியல் தலைவர்கள், சமூக சமய தலைவர்களுக்கு உண்டு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முஸ்லிம்களுக்கு கடந்த காலங்களில் ஏற்பட்ட பிரச்சினைகளை விட அதிகமான பிரச்சினைகள் எதிர்காலத்தில் வரலாம் பாரிய சவால்கள் ஏற்படலாம். எந்த பிரச்சினை வந்த போதும் நாம் பொறுமையாகவும் நிதானத்துடனும் நடந்து கொள்ள வேண்டும்.



மேற்குலகிற்கு அடி பணிந்து வடமாகாணசபை தேர்தலை நடாத்துவது படையினரை அவமானப்படுத்தும் செயல் - சம்பிக்க ரணவக்க
[Monday, 2013-05-20 07:50:35]

மேற்குலக அழுத்தங்களுக்கு அடிபணிந்து வடக்கு மாகாணசபைக்குத் தேர்தலை நடத்துவது தாய்நாட்டுக்காக தமது உயிர்களைக் கொடுத்த போர்வீரர்களை அவமானப்படுத்தும் செயல் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஜாதிக ஹெல உறுமயவினால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட போர்வீரர்களை நினைவு கூரும் நான்காவது ஆண்டு நினைவு நிகழ்வில் உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஈழப்போரில் வெற்றி பெற்றிருந்தால், இப்போது சிறிலங்காவுக்கு எதிராக அரசியல் நடத்தும் இந்திய அரசியல்வாதிகளான கருணாநிதியும், ஜெயலலிதாவும் உயிருடன் கூட இருந்திருக்கமாட்டார்கள். பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் அரசியல்வாதிகளான சம்பந்தன், ரவூப் ஹக்கீம், அசாத் சாலி போன்றோரும் உயிருடன் இருந்திருக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



போலிப்பிரச்சாரங்களை விடுத்து இராணுவக் குறைப்பினை ஏற்றுக்கொள்ளுங்கள் - கோத்தாபாய கோரிக்கை!
[Monday, 2013-05-20 07:23:10]

43ஆயிரம் படைவீரர்கள் நிலைநிறுத்தப்பட்டிருந்த வடக்கில் தற்போது 13ஆயிரத்து 200 படைவீரர்களே கடமையில் உள்ளனர். போலிப்பிரச்சாரங்களை விடுத்து இராணுவக் குறைப்பினை ஏற்றுக்கொள்ளுங்கள் என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, வடக்கில் தற்போது இராணுவத்தின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் உள்நாட்டு பாதுகாப்பு விவகாரங்களில் புறச் சக்திகள் தலையீடு செய்வதற்கு ஒரு போதும் அனுமதியளிக்க முடியாது. அண்மையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷித், காணி சுவீகரிப்பு மற்றும் படையினர் நிலைநிறுத்தம் தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், இந்தத் தகவல்களில் உண்மைகள் எதுவும் இல்லை. வடக்கில் பலாலி, காங்கேசன்துறை பகுதிகளில் காணி சுவீகரிப்பு தொடர்பில் இந்தியா கேள்வி எழுப்பவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



தமிழீழ மக்களின் சுதந்திர வேட்கையினை முரசறைந்த தமிழீழ சுதந்திர சாசனம் : 110 000 மேற்பட்ட மக்கள் பங்கெடுப்பு ! சிங்கள தேசத்திற்கு பேரிடி!Top News Top News
[Sunday, 2013-05-19 22:04:59]

தமிழர் தேசத்தினை போரில் வெற்றிகொண்டுவிட்டதென்ற மிதப்பில் சிங்கள தேசம் தனது இராணுவ அணிவகுப்புடன் பவனிவந்தவேளை, 1 இலட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கெடுத்துக் கொண்ட தமிழீழ சுதந்திர சாசனம் முரசறையப்பட்டது. 2009ம் ஆண்டுக்கு பின்னரான ஈழவிடுதலைப் போராட்டத்தின் விடுதலைப்பாதையில் இராஜதந்திர களத்தில் தமிழீழ சுதந்திர சானத்தின் முரசறைவு தமிழர் தரப்பின் வரலாற்று முக்கியமிக்கதொரு பெரும் அரசியல் முன்னகர்வாக கருதப்படுவதோடு ஆயிரக்கணக்கான தமிழீழத் தாயக மக்கள் தங்கள் கருத்துக்களை இச்சாசன உருவாக்கத்திற்கு வழங்கியுள்ளமை உணர்வெழுச்சியினை ஏற்படுத்தியுள்ளது.



மனித எலும்புக்கூடுகள் குருநாகல் மலையில் மீட்பு!
[Sunday, 2013-05-19 21:43:37]

குருநாகல், யதிஸ்ஸா மலைப் பகுயிலிருந்து மனித எலும்புக்கூடுகள் இரண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளன.பொலிஸருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின்படி இவ் மனித எலும்புக் கூடுகள் இரண்டும் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. எலும்புக் கூடுகளில் ஒன்று ஆண் எனவும் மற்றையது பெண் எனவும் சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.



பிரான்சில் நடைபெற்ற மே. 18 தமிழின அழிப்பு நினைவு நாள் Top News
[Sunday, 2013-05-19 21:12:43]

தமிழின அழிப்பு நினைவு நாள் மே. 18 நான்காவது ஆண்டில் பிரான்சில் மாபெரும் நினைவுப் பேரணி 18.05.2013 நடைபெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும், அதன் உப கட்டமைப்புக்களும், தமிழீழ மக்கள் பேரவையும் இணைந்து இப் பேரணியை ஏற்பாடு செய்திருந்தனர். இன்றைய போராட்டத்தில் குர்திஸ்தான் விடுதலை அமைப்பும் பங்கு கொண்டு தமது முழு ஆதரவையும் தெரிவித்தனர்.



ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண சீனா அழுத்தம் கொடுக்க வேண்டும் - கூட்டமைப்பு!
[Sunday, 2013-05-19 21:00:04]

தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண சீனா, இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு யதார்த்தமான முறையில் தீர்வு காண்பதற்கும், அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பதற்கும் அரசாங்கம் மெய்யாகவே முனைப்புகாட்ட, சீனா அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளின் அழுத்தங்களை ஈடு செய்வதற்கு இலங்கை அரசாங்கம் சீனாவின் உதவியை நாடி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.



பிரபாகரனின் படம் ஜெயலலிதாவுக்கு ஓட்டுக் கேட்கும்போது பிடித்தது, இப்போது பிடிக்கவில்லையா? சீமான் கேள்வி!
[Sunday, 2013-05-19 20:52:15]

கடலூரில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்துக்கு போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதையடுத்து சிறிய அளவுக் கூட்டமாக உள்ளரங்கில் ஒரு திருமண மண்டபத்தில் கூட்டம் நடைபெற்றது. இதனால், பொதுக்கூட்டத்துக்காகப் போடப்பட்ட மேடைகளை கட்சியினர் பிரித்து எடுத்தனர். மேடை கலைக்கப்பட்டு பேனர்கள் எடுக்கப்பட்டது. இந்நிலையில் உள்ளரங்குக் கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், கடந்த தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஓட்டுக் கேட்டு பல்வேறு கூட்டங்களை நடத்தினேன். அந்தக் கூட்டங்கள் நடந்த மேடைகளில் எல்லாம் பிரபாகரன் படத்தைப் போட்டிருந்தோம். அப்போது பிடித்தது, இப்போது பிடிக்கவில்லையா? இதுபோல் 2 ஆயிரத்துக்கும் அதிகமான கூட்டங்களில் நான் பேசியிருக்கிறேன். அந்தக் கூட்டங்களில் எல்லாம் பிரபாகரன் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அப்போதெல்லாம் என்ன கலவரமா வெடித்தது?



மாகாணசபை முறைமை அவசியமா? இல்லையா? - சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த அரசு திட்டம்!
[Sunday, 2013-05-19 20:44:48]

வடக்குத் தேர்தலுக்கு எதிராக பத்து லட்சம் கையொப்பங்கள் திரட்டப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வடக்குத் தேர்தல் நடத்துவதனை தடுக்குமாறு கோரி தேசிய சுதந்திர முண்ணனி இந்தக் கோரிக்கையை முன்வைக்கவுள்ளது. வடக்குத் தேர்தல்களை ரத்துச் செய்யுமாறு கோரி பத்து லட்சம் கையொப்பங்கள் திரட்டப்பட்டு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. பொதுமக்களின் கையொப்பங்கள் திரட்டும் நடவடிக்கை நாளை முதல் ஆரம்பமாகவுள்ளது. கொழும்பில் நடைபெறவுள்ள இந்த ஆரம்ப நிகழ்வில் கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச கலந்து கொள்வார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. வடமாகாணசபைத் தேர்தலுக்கு முன்னதாக காணி,மற்றும் காவல்துறை அதிகாரங்கள் ரத்துச் செய்யப்படவுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.



மெரினாவில நடைபெற்ற மே 18 போர்க்குற்றநாள் நினைவேந்தல் நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். Top News
[Sunday, 2013-05-19 20:44:05]

சிங்கள இனவெறியர்களால் இலங்கைத் தீவில் ஈழத்தில் நடாத்தப்பட்ட தமிழினப் படுகொலையின் நான்காம் ஆண்டு நினைவு தினம் நினைவேந்தல் நிகழ்ச்சியாக இன்று 19.05.13 சென்னை மெரினாவில் கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிகழ்வானது மே 17 இயக்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.



இலங்கை, சிங்கள பெளத்தர்களின் நாடு எனக் கூறுபவர்கள் இந்நாட்டின் வரலாறு தெரியாதவர்கள் - சுரேஷ் எம்.பி
[Sunday, 2013-05-19 20:39:12]

இலங்கை சிங்கள பெளத்தர்களின் நாடு எனக் கூறுபவர்கள் இந்நாட்டின் வரலாறு தெரியாதவர்கள். விஜயன் வருகைக்குப் பின்னரே இலங்கையில் பெளத்த மதம் பரவியதாக மகாவம்சம் தெரிவிக்கின்றது. இப்படியிருக்க இது சிங்கள பெளத்தர்களின் நாடு என எப்படி கூற முடியும்? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். விஜயனின் வருகைக்கு முன்னர் இங்கு நாகர்கள் வாழ்ந்துள்ளனர். அவர்கள் தமிழ் பேசுபவர்கள், சிவ வழிபாடு செய்பவர்கள், தமிழ் பண்டைய மொழி. இதற்கு நீண்ட வரலாறு உண்டு. சிங்கள மொழி நான்காம் நூற்றாண்டில் தோன்றியதாக கூறப்படுகின்றது.



மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதி ஓ.ஏ.ராமையா காலமானார்.
[Sunday, 2013-05-19 20:30:51]

மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதி ஓ.ஏ.ராமையா காலமானார். சுகவீனமுற்றிருந்த அவர், தனது 76-வது வயதில் நேற்றிரவு காலமானார். ஓ.ஏ.ராமையா நாவலபிட்டி, பூண்டுலோயாவில் உள்ள தோட்டமொன்றில் 1938ம் ஆண்டில் பிறந்தார். ஹட்டனில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது பூதவுடல், நாளை ஹட்டன் நகரசபை மண்டபத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர், மாலை நாவலபிட்டிக்கு தகனக் கிரியைக்காக கொண்டுசெல்லப்படவுள்ளது. செங்கொடிச் சங்கத்தின் செயலாளர் ஓ.ஏ.ராமையா, 1950களின் இறுதியில் தனது தொழிற்சங்க வாழ்க்கையைத் தொடங்கினார். இலங்கை பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் செயலாளராகவும் பணியாற்றிய அவர், மலையக தொழிற்சங்க அரசியலில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக பங்களிப்புச் செய்துள்ளார்.



படையினரின் பிரசன்னம் வட மாகாணசபைத் தேர்தலின்போது அதிகரிக்கும் - சுட்டிக்காட்டியது கபே!
[Sunday, 2013-05-19 15:02:46]

எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள வட மாகாணசபைத் தேர்தலின் போது படையினரின் பிரசன்னம் அதிகரிக்கும் என தேர்தல் கண்காணிப்பு நிறுவனங்கள் அச்சம் வெளியிட்டுள்ளன. தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வடக்கில் இராணுவத்தின் பிரசன்னம் உயர்வடையக் கூடிய சாத்தியம் அதிகரித்துள்ளதாக கபே என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது, தேர்தல் நடாத்தப்படுவதற்கு முன்னதாக கருத்துச் சுதந்திரம், ஊடக சுதந்திரம் மற்றும் சுதந்திரமாக நடமாடக் கூடிய உரிமைகள் முழுமையாக உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார். சுதந்திரமாக சென்று பிரச்சாரங்களை மேற்கொள்வதில் தொடர்ந்தும் தடைகள் நீடிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அத்திவாரம் தமிழரசுக் கட்சியே - மாவை சேனாதிராஜா எம்.பி!
[Sunday, 2013-05-19 14:58:10]

'தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து அதன் அத்திவாரமாக தமிழரசுக்கட்சி திகழ்கிறது' என்று தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். நல்லூர் பிரதேச சபையின் நிதியில் அமைக்கப்பட்ட 'யாழ்ப்பாணம் வரவேற்கிறது' வளைவு திறப்பு விழா, இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறுகையில்,



யுத்த வெற்றிக் கொண்டாட்டத்தின்போது கடலில் மூழ்கிய கடற்படை வீரரின் சடலம் மீட்பு!
[Sunday, 2013-05-19 14:53:27]

யுத்த வெற்றி விழா கொண்டாடத்தின் போது காணாமற் போன கடற்படை வீரரது சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. இவரது சடலம் பம்பலப்பிட்டி கடற்பரப்பில் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். காலி முகத்திடல் கடற்பரப்பில் நேற்று (18) காலை இடம்பெற்ற யுத்த வெற்றிவிழாவின் போது குறித்த சிறிய ரக படகு மூழ்கியது. படகில் இருவர் பயணித்ததாகவும் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும் ஒருவர் தப்பித்துக் கொண்டதாகவும் கடற்படை தகவல்கள் தெரிவித்தன.



ஸ்ரீலங்கா அரசிற்கு எதிராக அணி திரட்டுகின்றார் அமைச்சர் டக்ளஸ்!
[Sunday, 2013-05-19 11:29:30]

13வது அரசியலமைப்பு திருத்த சட்டத்தை ஒழிக்கும் நடவடிக்கைக்கு எதிராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான குழுவொன்று ஒன்றிணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 13வது திருத்தத்திற்கு அமைய காணி, காவல்துறை அதிகாரங்கள் மாகாணசபைகளிடமே தொடர்ந்து இருப்பதையும், 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்தவும் இந்த அணி உருவாக்கப்பட்டுள்ளது. டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையிலான இந்த அணியில் ஆளும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 31 பேர் இடம்பெற்றுள்ளனர்.



ஸ்ரீலங்காவிற்கு எதிரான ஐ.நா தீர்மானத்தின் பின்னரான நிலைமைகள் குறித்து அமெரிக்கா கவனம்!
[Sunday, 2013-05-19 11:15:16]

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னரான நிலைமைகள் குறித்து அமெரிக்கா கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்துமாறு கோரி இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்தத் தீர்மானத்தில் குறிப்பிட்பட்ட பரிந்துரைகளை அரசாங்கம் பின்பற்றுகின்றதா? இல்லையா? என்பது குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்ட எஸ்.கஜேந்திரன் உள்ளிட்ட 15 பேர் விடுதலை!
[Sunday, 2013-05-19 09:00:35]

கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உட்பட 15 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.பி.லக்சிறி விஜியசிங்க தெரிவித்தார். முள்ளிவாய்க்காலில் இறந்த தமிழ் உறவுகளை நினைவுகூரும் முகமாக மன்னார் பெரியகடை பொதுமண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட அஞ்சலி கூட்ட நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரன் உள்ளிட்ட 9 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் கைது செய்யப்பட்டனர். இதன் போது செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் ஜோசப் பெணாண்டோவும் கைது செய்யப்பட்டார்.



'புலிகளின் தலைவர் பிரபாகரன் எரித்திரியாவில் இருப்பது பேய் கதை' - இராணுவப்பேச்சாளர் ருவான்
[Sunday, 2013-05-19 07:25:25]

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற யுத்தத்தில் நந்திக்கடல் களப்பில் பலியாகிவிட்டார். அதனை அவருடைய சகாக்களே உறுதிப்படுத்திவிட்டனர். இந்நிலையில், பிரபாகரன் எரித்திரியாவில் இருப்பது என்பதை இலங்கை படைத்தரப்பு முற்றாக மறுத்துள்ளதுடன். பிரபாகரன் எரித்திரியாவில் இருப்பது என்பது ஒரு பேய்கதையாகும் என்றும் இராணுவம் அறிவித்துள்ளது.



இறந்த உறவுகளுக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் விட முடியவில்லை - மாவை சேனாதிராசா
[Sunday, 2013-05-19 07:17:29]

இறந்தவர்களுக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் விட முடியாத அளவிற்கு இராணுவ அடக்குமுறையை இந்த அரசாங்கம் பிரயோகித்து வருகின்றது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் போது உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் மே 18 நினைவு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


RoyaShades-l2011(04-12-11)
INNSYS-20120930
Canada Kanthasamy Kovil
TDE_Computers2011
TamilsGuid-191012-2013
Suresh-remax-2013-01-01
NIRO-DANCE-100213
Mahesan supramaniyam 031109
Ramans2011
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com