Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
June 19, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
கிழக்கு மாகாணத் தேர்தல் - எம் இனத்தையே விழுங்க விடலாமா? இனப் படுகொலைக்கு உள்ளாகி வரும் தமிழரின் பிரச்சனைக்கு நாம் கேட்கும் தீர்வு என்ன?.
[Monday, 2012-08-13 10:01:43]
News Service

உலகில் வாழும் ஏனைய இன மக்கள் போல் நாமும் எமது வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்தில் சுயநிர்ணய அடிப்படையில் காணி காவற்துறை உட்பட்ட அதிகாரங்களோடு கூடிய ஆட்சி முறையில் எமது கல்வி பொருளாதாரம் மொழி கலை பண்பாடுகள் போன்றவற்றை நாமே கையாண்டு கௌரவமாக வாழ வேண்டும் என்பதையே நாங்கள் கேட்கிறோம்..ஆனால் எமக்கு மகிந்த அரசு தர விரும்பும் மகிந்த சிந்தனை என்ற தீர்வு என்ன?.

  

சிறுபான்மையினர் என்று இலங்கையில் யாருமே இல்லை,சிறுபான்மையினர் என்று எவருமே இருக்காமல் அவர்கள் பெரும்பான்மையினரோடு கலந்து கரைந்து இலங்கை ஒரு சிங்களப் பவுத்த நாடாக இருக்க வேண்டும்.அப்படி இருந்தால் பிரச்சனையே இருக்காது என்பது தான் அவரது சிந்தனை,முடிவான தீர்வு.

அதை அவர் நிறைவேற்ற வேண்டுமானால் தமிழர் தாயகம் என்று ஒன்று இருக்கக் கூடாது, தமிழ் மொழி அல்லது அவர்களது மதங்கள் அரச மட்ட அங்கீகாரம் பெறக் கூடாது,எங்கும் சிங்கள மொழி பௌத்த மதம் கோலோச்ச வேண்டும்,அவற்றை எதிர்க்கும் தமிழர் நசுக்கப்பட வேண்டும் அல்லது அழிக்கப்பட வேண்டும்,அதை ஊக்குவிக்கக் கூடிய பொருளாதார பலம் தமிழருக்கு இருக்கக் கூடாது. மகிந்தவின் நிகழ்ச்சி நிரலில் இவை மட்டும் தான் இன்று அதி முக்கியத்துவம் பெற்றுள்ளன.

காணி பறிப்பு சிங்களக் குடியேற்றம் சிங்களமொழி-பௌத்த மதத் திணிப்பு, தமிழர் பொருளாதார வர்த்தக வளங்களை பிடுங்கி சிங்களவருக்கு வழங்கல்,இராணுவ ஆட்சியால் தமிழரை அடக்கி ஒடுக்கல், இவற்றைத்தான் அதி உச்ச வேகத்தில் அவர் செய்து கொண்டிருக்கிறார். தமிழர் மீண்டும் வலிமை பெற்று தன் திட்டத்தை தடுக்க முன் அதை நிறைவேற்றி விட வேண்டுமென்று துடிக்கிறார்.

அவருக்கு இடைஞ்சலாக இருப்பவர் யார்?.ஒன்று சிங்கள எதிர்க் கட்சிகள் அடுத்தது தமிழர் தரப்பு மூன்றாவது சர்வதேசம்.முதலிரண்டு பிரிவினரையும் ஒட்டுக் குழுக்கள் குண்டர்கள் மற்றும் முப்படைகளின் உதவியோடு தனது சர்வாதிகார ஆட்சியால் சமாளிக்கிறார். ஆனால் சர்வதேசம் தான் அவருக்கு இப்போது மிகப் பெரிய சவாலாக உள்ளது.இரு அணிகளாகப் பிரிந்து நிற்கும் சர்வதேச வல்லரசுகளின் பனிப்போர் இப்போது இலங்கையிலேயே மையம் கொண்ண்டுள்ளது.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் கட்டுப்பாடு உலக வல்லாதிக்கத்தைத் தீர்மானிப்பதாகவும் இலங்கை அதன் மையப்புள்ளியாக இருப்பதாலும் இலங்கையைத் தமது கட்டுப்பாட்டில் நட்பு நாடாக வைத்திருப்பதில் வல்லரசுகள் முழுப் பலத்துடன் செயற் படுகின்றன.இலங்கை சீனச் சார்பாக இருப்பதால் இலங்கையை வழிக்குக் கொண்டுவர இலங்கைக்கு எதிராக பாவிக்க மேற்கு நாடுகளுக்கு கிடைத்துள்ள ஆயுதம் இலங்கை அரசு தமிழருக் கெதிராகச் செய்த செய்கின்ற அத்துமீறல்கள் தான். LLRC பரிந்துரைகளை செயற்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மூலம் மகிந்தவின் கழுத்தை நெரிக்கும் மேற்குலகை முற்றாகப் புறம் தள்ளி தனியச் சீன உதவியோடு மகிந்தவால் அதல பாதாளத்தில் விழும் இலங்கைப் பொருளாதாரத்தை மீட்க முடியாது. சர்வதேசத்தோடு முற்றாக அந்நியப்பட முடியாது.

அதனால் தமிழர் பிரச்சனைக்கு ஏதோ ஒரு தீர்வைக் கொடுத்து அதை அவர்கள் ஏற்றுக்கொண்டு விட்டதாகவும் காட்டி தமிழர் பிரச்சனை தீர்ந்து விட்டது என்று மேற்குலகைச் சமாளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் மகிந்தவுக்கு ஏற்ப்பட்டுள்ளது. அவர் என்ன தீர்வை இப்போது சிந்திக்கிறார்?. 13வது திருத்தத்தில் உள்ள காணி பொலிஸ் அதிகாரங்களையும் பிடுங்கி வடக்கு கிழக்கையும் பிரித்து ஒன்றுமே இல்லாத மாகாண சபையைத் தான் தீர்வாகக் கொடுக்க விரும்புகிறார்.

நீதிமன்றத் தீர்ப்பின் படி அதை எல்லா மாகாண சபைகளையும் ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டும். அதற்கான அவரது திட்டம்தான் மாகாணசபைத் தேர்தல்கள்.கிழக்கு மாகாண சபையை அரச சார்பான ஒன்றாக அமைத்து அங்கே வடகிழக்கு இணைப்பு வேண்டாம் காணி பொலிஸ் அதிகாரம் வேண்டாம் என்ற தீர்மானங்களை எடுப்பித்து; 13 ம் திருத்தச் சட்டத்திலிருந்து காணி பொலிஸ் அதிகாரங்களை நீக்கிவிட்டு வடக்குத் தேர்தலையும் தனியாக நடத்தி தமிழ் மக்கள் அரசிற்கு ஆதரவாகவே இருக்கிறார்கள் தமிழ் மக்களின் பிரச்சனையைத் தீர்த்து விட்டதாக உலகிற்குக் காட்டுவதே மகிந்தரின் திட்டமாகும்.

கிழக்குமாகாண சபையோடு சேர்த்து தான் சொன்னபடி காணி காவற்துறை அதிகாரம் வேண்டாம் என்று சொல்ல மறுத்த வடமத்திய மாகாண சபையையும், முரண்டுபண்ணும் சப்ரகமூவா மாகாணசபையையும் கலைத்து தேர்தலை நடத்துவதன் உள்நோக்கம் நீதிமன்ற ஆணைக்கிணங்க அனைத்து மாகாணசபைகளின் ஒப்புதலோடு 13 ம் திருத்தச் சட்டத்தில் உள்ள காணி பொலிஸ் அதிகாரத்தை பிடுங்கியபின் வட மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாகும்.

அத்துடன் LLRC பரிந்துரைகளை நிறைவேற்றுவதாகவும் அதற்குத் திட்டம் தயார் எனவும் அதற்கு 3 வருடக் காலக் கெடு தேவை என்றும் கேட்டுள்ளார். அந்த 3 வருடத்துள் தான் நினைக்கும் சிங்களப் பவுத்த ஸ்ரீலங்காத் திட்டத்தை நிறைவேற்றி விடலாம் என்றும் அவர் நம்புகிறார்.எனவே கிழக்கு மாகாணத் தேர்தலில் மகிந்த வென்றால் அதாவது கூட்டமைப்பு தோற்றால் தமிழரின் எதிர்காலம் சூனியமாகி விடும்.கிழக்கு மாகாணத் தேர்தல் எம்மை விழுங்க வருகின்ற பூதம் . தமிழினத்தின் அனைத்துச் செயற்பாடுகளும் முடக்கப்பட்டு இன ஒழிப்பு முழுமை செய்யப்படும். தமிழினத்தின் வாழ்வா சாவா என்ற நிலையைத் தீர்மானிக்கும் தேர்தலாக இந்த கிழக்கு மாகாணத் தேர்தல் அமைவதால் இதை ஒரு சாதாரண மாகாண சபைத் தேர்தலாகப் பார்க்காமல் எமது உயிர்நாடியாகப் பார்த்து நாம் செயற்பட்டேயாக வேண்டும்.

இலங்கையில் சட்டமோ நீதிபரிபாலனமோ தேர்தல்களோ சுதந்திரமாக இயங்கும் நிலை அங்கு இல்லை. ஏதோ பெயரளவில் அவை நடக்கத் தான் செய்கின்றன. அவை அரசின் வசதிக்கும் நன்மைக்கும் ஆகவே நடத்தப்ப்படுவது வழமையே.அரசின் நிகழ்ச்சி நிரலிற்கேற்ப நடைபெறும் தேர்தல்களுக்குள் எதிர்க் கட்சிகளும் செயற்பட்டேயாக வேண்டிய நிர்ப்பந்தம் உளளது. சென்ற வருடத்தின் முன்பே நடைபெற வேண்டிய வட மாகாண சபைத் தேர்தலை அரச வசதிக்கேற்ப நடத்த முடியாமையால் அதை நடத்தாமல் நிறுத்தி வைத்துக் கொண்டு தேர்தல் அடுத்த வருடம் நடைபெற வேண்டிய கிழக்கு மாகாண சபையை வேண்டுமென்றே கலைத்து விட்டு மகிந்த அங்கு தேர்தலை நடத்துகிறார். வேறுவழியின்றி எதிர்க் கட்சிகளும் அதில் பங்கு பற்றவேண்டிய நிர்ப்பந்தத்தில் த.தே.கூ.ம் அதில் போட்டியிடுகின்றது.

தமிழர் தரப்பிற்கும் சாதகமான பக்கங்களும் உள்ளன. முஸ்லிம் மக்களது பள்ளிவாசல்களும் அரச ஆதரவுப் பௌத்தர்களால் தாக்கப் படுவதாலும் அவர்களதும் காணிகளும் பறிக்கப் படுவதாலும் கணிசமான முஸ்லிம் மக்களும் அரசை எதிர்க்கிறார்கள்.அதனால் முஸ்லிம் காங்கிரஸ் தனியாகப் போட்டியிட நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளது.அதனால் நான்கு முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.இந்த நான்கு முனைப் போட்டியில் தனிப் பெரும் கட்சியாக த.தே.கூ.வரக்கூடிய வாய்ப்பு நிட்சயம் என்பதால் இரண்டு போனஸ் ஆசனங்களும் கிடைக்கும்.ஆனால் அதற்கு தமிழர் நிறையவே செயற்பட வேண்டி உள்ளது. அவர்களிடம் குறிப்பாக நிதி வழம் இல்லை.

தமிழரில் பலர் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களிக்கும் வசதி நிலைகூட இல்லாமல் தேர்தல் பற்றி நினைக்கவும் முடியாத நிலையில் உள்ளார்கள்.அவர்களுக்கு இத்தேர்தலின் முக்கியத்துவத்தைச் சொல்லி விளங்கப்படுத்தி வாக்களிக்கச் செய்ய வேண்டும்.அங்கு ஆள்பலம் இருப்பினும் நிதிபலம் இன்மையால் இயங்க முடியாத நிலைதான் காணப்படுகிறது.

புலம் பெயர் தமிழராகிய நாம் எம்மாலான அனைத்து வளங்களையும் பயன்படுத்த வேண்டிய தருணம் இது.மிகப் பெரும் ஆள், அம்பு, பண, படை பலம் உள்ள அரச தரப்போடு கூட்டமைப்பு மோத வேண்டி உள்ளது.அவர்களுக்கான வசதிகளை நாம் செய்து கொடுத்தால் அவர்களை நிட்சயம் பெரு வெற்றி பெறச் செய்யலாம். த.தே.கூ. கணிசமான ஆசனங்களைப் பெற்றால் பலமான தரப்பென்று முஸ்லிம் காங்கிரசும் இணைந்து ஆட்சி அமைக்க முன்வரும்.தவறினால் UNP போன்ற சிறு கட்சி ஒன்றை இணைத்தே ஆட்சி அமைக்கலாம்.தமிழர் சார்பான ஆட்சி அமையக் கூடிய நிலையில் முஸ்லிம் காங்கிரசும் ஒத்துழைக்க முன்வரும்.

அதனால் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை உருவாகும்.தொடர்ந்து வடமாகாண சபைத் தேர்தல் வந்தாலும் வலுவாக வெற்றி பெறலாம்.அதன் மூலம் மகிந்தவின் கனவுகளை நிர்மூலமாக்கலாம்.சர்வதேசத்திற்கும் பலமான ஒற்றுமையான தமிழரோடு சேர்ந்து மகிந்தவை வழிக்குக் கொண்டுவர வழி பிறக்கும். தமிழர் விடிவிற்கும் வழி பிறக்கும்.தமிழர் இப்போது தூங்கி விட்டால் கோட்டை விட்டால் பின்னர் எப்போதும் மீள முடியாது.தமிழர் சரித்திரத்தில் இந்தக் கிழக்கு மாகாணத் தேர்தல் ஒரு மிகப் பெரும் திருப்புமுனை. விழித்தெழுவோம். வேற்றுமை மறப்போம். விமர்சனம் தவிர்ப்போம். நமக்காகச் சிந்திக்காமல் நம் மக்களுக்காய்ச் சிந்திப்போம். பொது எதிரியை வெல்ல எம்பகையை மறப்போம்.உலகுக்கே உதாரணமாய்த் திகழ்வோம். சாதனை படைப்போம்.

-(வின் மகாலிங்கம்)-

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

13 ஆவது திருத்த சட்டத்தைத் திருத்துவது இன்னொரு வாக்குறுதி மீறல்: - எம்.ஏ. சுமந்திரன், நா.உ.
[Wednesday, 2013-06-19 10:46:32]

சிறீலங்கா அரசு சிறீலங்கா மக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நிலைமாறாமல் தொடர்ந்தும் தோல்வி கண்டுவருவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டி வந்துள்ளது. இலங்கையின் யாப்பில் கொண்டுவரப்படவுள்ள உச்தேச 13 ஆவது சட்டதிருத்தம் - இன்று சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட அதிகாரப்பரவல் மூலம் வழங்கப்பட்டுள்ள ஒரே சலுகை - இந்த வாக்குறுதி மீறல்களுக்கு இன்னொரு எடுத்துக்காட்டு.



இலங்கைத் தமிழர்களை இந்தியா கைவிடாது - மன்மோகன் சிங் உறுதி மொழி
[Wednesday, 2013-06-19 09:42:31]

இலங்கைத் தமிழர்களை இந்தியா கைவிடாது என இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்ததாக இலங்கைத் தமிழ் தேசியக் கூட்டணியின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமசந்திரன், செல்வன் அடைக்கலநாதன், எம்.ஏ. சுமந்திரன், பொன். செல்வராசா ஆகியோர் இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளனர். பிரதமர் மன்மோகன் சிங், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோரை செவ்வாய்க்கிழமை மாலை தனித்தனியாகச் சந்தித்து சுமார் அரை மணி நேரம் அவர்கள் பேச்சு நடத்தினர். இதன் பின்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சம்பந்தன், இலங்கையில் வடக்கு மாகாணத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே 13-ஆவது சட்டத் திருத்தத்தில் மாற்றம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வடகிழக்கு மாகாணங்களில் தமிழ் கலாசாரத்தையும், தமிழ் மொழியையும் அழிக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. அதை தடுத்து நிறுத்த இந்தியா விரைவான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இலங்கையில் தமிழ் இனம் அழிந்துவிடும்.



சிங்கள, முஸ்லிம் அதிகாரிகள் வடமாகாண அரச காரியாலயங்களில் பதவிக்கு அமர்த்தப்பட வேண்டும் - கோத்தபாய
[Wednesday, 2013-06-19 09:18:15]

வடமாகாணத்தில் தனி தமிழர்கள் மாத்திரமே வாழ முடியும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஜனாதிபதியின் சகோதரரும், பாதுகாப்பு செயலாளருமான கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வடமாகாணம் அனைத்து இனங்களையும் வரவேற்கும் மாகாணமாக இருக்க வேண்டும். சிங்களவர்கள் அங்கு தங்களது காணிகளை கொள்வனவு செய்யக்கூடிய உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும். குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற பகுதிகளில் சிங்களர்கள் சொந்த காணிகளை கொள்வனவு செய்து குடியேற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இதேபோன்று சிங்கள மற்றும் முஸ்லிம் அரசாங்க அதிகாரிகளும் வடமாகாண அரசாங்க காரியாலயங்களில் பதவிக்கு அமர்த்தப்பட வேண்டும் என்றும் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.



சாவகச்சேரியில் இராணுவத்தினர் கைப்பற்றியுள்ள காணியை மீட்டுத் தாருங்கள்: - பிரதேச செயலகத்திடம் பொதுமக்கள்
[Wednesday, 2013-06-19 08:57:52]

இராணுவத்தினர் சுவீகரித்துள்ள கெற்பேலிக் காணியில் தாம் முன்னர் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் என்றும், அந்தக் காணியைத் தமக்கு வழங்குமாறும் பொதுமக்கள் சிலர் சாவகச்சேரி பிரதேச செயலகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். சாவகச்சேரி பிரதேச செயலகத்தினால் காணிக் கச்சேரி நேற்று செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது. இதில் பெரும்எண்ணிக்கையான பொதுமக்கள் பங்கெடுத்தனர். இதில் பங்கெடுத்த பொதுமக்கள் சிலர், இராணுவத்தினர் கைப்பற்றியுள்ள கெற்பேலிக் காணியை மீட்டுத்தருமாறு கோரியுள்ளனர்.



ஒரே நாளில் 32 லட்சம் ரூபாய்க்கு தொலைபேசியை பயன்படுத்திய நபர் மீது விசாரணை
[Wednesday, 2013-06-19 08:47:34]

ஒரே நாளில் 32 லட்சம் ரூபாவை கையடக்க தொலைபேசி கட்டணமாக பதிவு செய்த ஒருவர் குறித்து கொழும்பு மோசடிகள் புலனாய்வுத் தரப்பினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இத்தாலியில் வசிக்கும் இலங்கையர் ஒருவருக்கு கையடக்க தொலைபேசி சேவையை வழங்கும் நிறுவனம் ஒன்று ரோமிங் வசதியுடன் கூடிய சிம் கார்ட் ஒன்றை வழங்கியுள்ளது. எனினும் குறித்த வாடிக்கையாளர் அந்த சிம்மை பயன்படுத்தவில்லை. அதனை அவரது உறவினரான மொஹமட் முஸாரப் என்ற அவரது உறவினரிடம் வழங்கியுள்ளார். அவர் ஒரே நாளில் 32 லட்சம் ரூபாவுக்கு ரோமிங்கை பயன்படுத்தியுள்ளார். இது குறித்து சேவை வழங்கும் நிறுவனம் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.



வவுனியா நெளுக்குளத்தில் தமிழர்களின் வீடுகள் தீக்கிரை
[Wednesday, 2013-06-19 08:39:51]

வவுனியா- நெளுக்குளம், பாரதிபுரம் பகுதியில் தமிழர்களின் சில வீடுகளை முஸ்லிம்கள் தீயிட்டு எரித்துள்ளதோடு, தமிழர்களின் பூர்வீக நிலங்களையும் ஆக்கிரமிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். பாரதிபுரம் பகுதியிலுள்ள விக்ஸ் மரக்காடு என்ற தமிழர்களின் பகுதியில் அடிப்படை வசதிகள் குறைந்த நிலையில் அப்பகுதியில் குறைவான மக்களே வசித்து வருகின்றனர். இந்நிலையில் அண்மையில் அப்பகுதியில் சில தொழில் முயற்சிகள் ஏற்படுத்தப்பட்டு இடம்பெயர்ந்த தமிழர்கள் குடியேறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதன்போது அப்பகுதியில் முஸ்லிம்கள் காணிபிடிப்பிலும் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக மக்கள் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்தனர். இதன்பின்னர் அந்த பகுதியில் எந்த முஸ்லிம்களும் காணி பிடிக்க கூடாது என்றும் அது தமிழர்கள் வசிக்கும் பகுதி என்றும் பொலிஸார் முஸ்லிம்களை எச்சரித்துள்ளனர். இந்நிலையில் தமிழர்களின் வீடுகள் சில தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வேலைக்கு சென்ற சமயம் இந்த நாசவேலையில் முஸ்லிம்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



நாவிதன்வெளி பிரதேச கணக்காளருக்கு புலிகளிடமிருந்து மிரட்டலாம்? - பாட்டி வடை சுட்ட கதை என சக ஊழியர்கள் விசனம்
[Wednesday, 2013-06-19 08:05:41]

நாட்டிலிருந்து கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் யுத்தம் முற்றாக நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கணக்காளரிற்கு 2013.05.25ஆம் திகதியிடப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் கடிதத்தலைப்பில் அம்பாறை மாவட்ட புலனாய்வு பொறுப்பாளர் ஈழவன் எனக்குறிப்பிடப்பட்டு மிரட்டல் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அக்கடிதம் கணக்காளரிற்கு முகவரியிடப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் தாங்களும் அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளரான அன்வர்டீன் என்பவரும் சேர்ந்து நாவிதன்வெளி பிரதேச செயலகத்தை முஸ்லிம் பிரதேச செயலகமாக மாற்றுவதற்கும், கூடுதலான முஸ்லிம் ஊழியர்களையும், தலைமை உத்தியோகத்தர்களையும் உள்ளீர்ப்பதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றீர்கள்.



வாஸ் குணவர்த்தன பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்கம்!
[Tuesday, 2013-06-18 21:35:07]

பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன அவருடைய பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார். பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலையுடன் தொடர்புபட்டதாக கடந்த 10ஆம் திகதி கைது செய்யப்பட்ட வாஸ் குணவர்தன சுகயீனம் காரணமாக பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 15ம் திகதி இரவு பிரதி பொலிஸ் மா அதிபர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



கியூபெக் அறிவுச்சோலை கல்வி நிலையத்தின் மூன்றாவது கலைச்சோலை நிகழ்வுகள்!Top News Top News
[Tuesday, 2013-06-18 21:21:12]

கியூபெக் அறிவுச்சோலை கல்வி நிலையத்தின் மூன்றாவது கலைச்சோலை கடந்த 08-06-2013 அன்று சனிக்கிழமை மாலை 7.00 மணியளவில் 100 Sauve .St.Marie Anne High School கலையரங்கில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதில் தமிழர் கலை கலாச்சாரவிழுமியங்களை முழுமையாக வெளிக்கொண்டுவரும் வண்ணம் இசை இயல் நாடகமென முத்தமிழையும் மிகவும் அழகாக கலைகள் மூலம் எமது கல்வி நிலைய மாணவர்களைமட்டும் கொண்டு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இன்நிகழ்வானது முற்று முழுதாக சிறார்களின் திறமைகளை வெளிக்கொண்டுவரும் நிகழ்வாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.



தமிழ் உணர்வாளர் மணிவண்ணன் அவர்களுக்கு அகவணக்கம்: - தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - விக்ரோறியா - அவுஸ்திரேலியா
[Tuesday, 2013-06-18 21:12:15]

தமிழ்த்தேசிய விடுதலைப்போராட்டத்திற்காக தன்னையையும் இணைத்துநின்ற தமிழ்த்திரைப்பட இயக்குநரும் நடிகருமான மணிவண்ணன் அவர்களின் மரணச்செய்தி அனைவரையும் கலங்கவைக்கின்றது. அவலங்களையே சுமந்துநிற்கின்ற ஒரு தேசத்தின் விடிவிற்காக குரல் எழுப்புகின்ற அனைவருமே அம்மக்களின் ஆழ்மனதில் எப்போதும் உயிர்ப்புடனே இருப்பார்கள்.



இலங்கை இராணுவத்தை வெளியேற்றக் கோரி வெலிங்டனில் இராணவ முகாம் முற்றுகை - 500 பேர் கைது!Top News
[Tuesday, 2013-06-18 20:52:27]

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள வெலிங்டனில் ராணுவ முகாம் மற்றும் பயிற்சி கல்லூரி உள்ளது. இங்கு கடந்த 27-ந்தேதி முதல் இலங்கையை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் விங் கமாண்டர் தசநாயகே, மேஜர் ஹரிச்சந்திரா ஆகிய 2 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதமும் எழுதினார். வெலிங்டன் ராணுவ முகாமில் இருந்து இலங்கை ராணுவ அதிகாரிகளை உடனே வெளியேற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஆகியவையும் இலங்கை வீரர்களுக்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிப்பதற்கு கண்டனம் தெரிவித்தனர்.



இந்தியா சென்றுள்ள கூட்டமைப்பினர் சல்மான் குர்ஷித்துடன் பேச்சுவார்த்தை! Top News
[Tuesday, 2013-06-18 20:12:14]

இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணசபைக்கு செப்டம்பர் மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்போவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. அதேசமயம் தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்கும் 13வது அரசியல் சட்டத்திருத்தத்தை மாற்றியமைக்க புதிய சட்ட மசோதாவை நிறைவேற்றவும் முயற்சி செய்து வருகிறது. ஒருவேளை அரசு கொண்டு வர உள்ள புதிய மசோதாவிற்கு ஆதரவு இல்லை என்றாலும், தேர்தலை நடத்துவதில் உறுதியாக உள்ளது. இதற்கு தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்க மறுக்கும் இலங்கை அரசின் செயற்பாடுகளை தொடர்ந்து கண்டித்து வரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.க்கள் இந்தியா சென்றுள்னர். சம்பந்தன் தலைமையில் அவர்கள் இன்று பிற்பகல் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை சந்தித்து இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விளக்கினர். 13வது அரசியல் சட்டத்திருத்தத்தை பலவீனமாக்க இலங்கை அரசு முயற்சி செய்கிறது என்றும், இதனை இந்தியா அனுமதிக்கக்கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தினர். பின்னர் அவர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.



நாட்டில் நீதியில்லை என்பதனை ஜனாதிபதி மகிந்தவே ஏற்றுக்கொண்டுள்ளார் - சரத்
[Tuesday, 2013-06-18 20:07:35]

இலங்கையில் நீதியில்லை என்பதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே ஒப்புக்கொண்டுள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அண்மையில் ஆளும் கட்சியின் வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் பாடசாலை ஆசிரியர் ஒருவரை முழங்காலிடச் செய்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பில் சரத் பொன்சேகா கருத்து வெளியிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட ஆசிரியைக்கு ஜனாதிபதியே தொலைபேசியில் அழைத்து, நீதி நிலைநாட்டப்படும் என தெரிவித்துள்ளதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் நாட்டில் நீதியில்லை என்பது புலனாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மகளுக்கு ஆலோசனை வழங்கிய ஆசிரியையை உண்மையில் பிரதேச அரசியல்வாதி பாராட்டியிருக்க வேண்டுமே தவிர, தண்டித்திருக்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.



இராணுவ முகாமில் வைத்து கைதுசெய்யப்பட்ட மருத்துவர் சிவசங்கர் விடுதலை!
[Tuesday, 2013-06-18 19:53:02]

இலங்கையின் வடக்கே, கிளிநொச்சி மாவட்டத்தில் கொக்காவில் இராணுவ முகாமுக்குச் சென்றிருந்தவேளை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி கைது செய்யப்பட்ட டாக்டர் இரத்தினசிங்கம் சிவசங்கர் திங்களன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அனுராதபுரம் மாவட்ட சுகாதார வைத்திய அதிகரியாகிய இவர், சுமார் ஐந்து மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் தன்னைக் கைது செய்திருந்ததாக அவர் தெரிவித்தார்.



இந்தியாவுடனான கடல் எல்லை மோதலை தீர்க்க சர்வதேசத்தின் உதவியை நாடும் இலங்கை!
[Tuesday, 2013-06-18 19:39:35]

இந்தியா கடல் எல்லையை விரிவுபடுத்தும் போது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் எல்லை பிரச்சினை ஒன்று எழும் பட்சத்தில் அதற்கு முகங்கொடுப்பதற்கு இந்தியா தயாராகவே உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்தியாவுக்கு சொந்தமான கடல் எல்லை விரிவுபடுத்தப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் தமக்கு சொந்தமான கடல் எல்லைகளை விரிவுபடுத்துவது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்தது. இதன்படி இந்தியா இரண்டாவது முறையாகவும் தமது கடல் எல்லையை விரிவுபடுத்துவது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது. இவ்வாறு இந்திய கடல் எல்லையை விரிவுபடுத்தும் போது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் எல்லை பிரச்சினை ஒன்று எழும் பட்சத்தில் அதற்கு முகங்கொடுப்பதற்கு இந்தியா தயாராகவே உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.



'எமது நிலம் எமக்கு வேண்டும்' - வெலிஓயா பிரதேச செயலரிடம் மகஜர் கையளிக்கவுள்ள முல்லை. மக்கள்!Top News
[Tuesday, 2013-06-18 19:34:51]

முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச எல்லைக் கிராமங்களில் வாழும் தமிழ் மக்கள், தமது பூர்வீக நிலங்களை தருமாறு கோரி முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் குழு தலைமையில் வெலிஓயா பிரதேச செயலருக்கு மகஜர் கையளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொக்கிளாய் கிழக்கு, கொக்கிளாய் மேற்கு, கருநாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய் வடக்கு, கொக்குத்தொடுவாய் மத்தி, கொக்குத்தொடுவாய் தெற்கு ஆகிய கரைத்துறைப்பற்று பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் வாழும் தமிழ் மக்கள் சார்பில் கையளிக்கப்படவுள்ள மேற்படி மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,



இந்தியாவிலிருந்து ஒரு கோடி பெறுமதியான ஹெரோயினை கடத்த முயன்ற நபர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைது!
[Tuesday, 2013-06-18 19:27:34]

சென்னையிலிருந்து இலங்கைக்கு ஹெரோயின் எடுத்து வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். யூ.எல். 122 என்ற விமானத்தில் பயணித்த ஒருவரே இலங்கை சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது பயணப் பையை சோதனையிட்ட போது ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. இவரிடமிருந்து ஒரு கிலோ 500 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். இவற்றின் பெறுமதி சுமார் ஒரு கோடி 20 லட்சம் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.



ஜனாதிபதிக்கு சகலவிதமான அதிகாரங்களும் உள்ள போது ஏன் மாகாண சபைகளின் இணைப்பில் அச்சமடைய வேண்டும்? - திஸ்ஸ
[Tuesday, 2013-06-18 19:19:52]

ஜனாதிபதிக்கு சகலவிதமான அதிகாரங்களும் உள்ள போது ஏன் மாகாண சபைகளின் இணைப்பில் இந்த அரசாங்கம் அச்சமடைய வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க கேள்வி எழுப்பினார். ராஜகிரியவில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.



13வது திருத்தச் சட்டம் தொடர்பிலான சிக்கல்களை இந்தியா கவனத்தில் கொள்ளும் - மன்மோகன் சிங்!
[Tuesday, 2013-06-18 16:45:31]

இலங்கையில் அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை இரத்துச் செய்வதற்கு இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகளால் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படும் முயற்சிகளின் தாற்பரியங்களை ஆராய்ந்த பின் தனது கருத்தை அறிவிக்கவுள்ளதாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளர். 'இலங்கையில் உள்ள பல அரசியல் கட்சிகள் தீர்மானிக்கவுள்ள விடயமாக இது இருப்பினும், நாம் அதன் தாற்பரியங்களை நிச்சயமாக கவனத்தில் எடுப்போம். அதன் பின் இலங்கையின் அதிகாரம் வாய்ந்தவர்களுக்கு இந்த விடயம் தொடர்பில் எமது கருத்தை தெரியப்படுத்துவோம்' என தி.மு.க. தலைவர் மு.கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில் இந்திய பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.



13 ஆவது திருத்த விவகாரம் - கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கறுப்பு பட்டி அணிந்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்!
[Tuesday, 2013-06-18 16:41:50]

கிழக்கு மாகாண சபையில் அங்கம் வகிக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்கள் கறுப்பு பட்டியணிந்து தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். 13 ஆவது திருத்தத்தில் மாற்றங்களை ஏற்படுத்தவேண்டாம் என்று கோரியே அவர்கள் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கிழக்கு மாகாண சபையமர்வு இன்று நடைபெற்றது. சபையமர்வின் போது எதிர்க்கட்சிகளை சேர்ந்த சகல உறுப்பினர்களும் பிரசன்னமாய் இருந்தபோதிலும் ஆளும் கட்சியில் ஒரு உறுப்பினர் மட்டுமே சமூகமளித்திருந்தார். ஆளும் தரப்பில் அங்கம் வகிக்கும் தேசிய சுதந்திர முன்னணி உறுப்பினரான ஜயந்த விஜயசேகர மட்டுமே வருகை தந்திருந்தார். இந்த பகிஷ்கரிப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல், கிழக்கு மாகாணசபை அதிகாரங்களில் ஆளுநர் மேலாதிக்கம் செலுத்தி வருவதைக் கண்டித்து அரச மேல் மட்டத்தில் முறையிட்டும் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை.


AJRwindows22.05.13
INNSYS-20120930
Mahesan supramaniyam 031109
TamilsGuid-191012-2013
Ramans2011
Suresh-remax-2013-01-01
TDE_Computers2011
NIRO-DANCE-100213
RoyaShades-l2011(04-12-11)
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com