Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 20, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
மார்பகப் புற்றுநோயை தடுக்கும் சக்தி வாய்ந்தது அத்திப்பழம்!
[Monday, 2012-08-20 21:57:25]
News Service

அத்திப்பழம் ஆரோக்கியமான அழகை தரக்கூடிய ஊட்டச்சத்து மிக்க பழம் என்று உணவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அத்திப்பழத்தைத் தொடர்ந்து உட்கொள்பவர்களுக்கு மெனோபாஸ் பருவத்தில் பெண்களுக்கு வரக்கூடிய மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்பழத்தில் உள்ள பென்சால்டைஹைடு என்ற இரசாயனப்பொருள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களுக்கு எதிராகப் பணிபுரியக்கூடியது.

  

அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது உடல்பருமனை கட்டுப்படுத்துகிறது. அத்திப்பழத்தில் வைட்டமின் பி, கே ஆகியவை அடங்கியுள்ளன. இது ஆன்டி ஆக்ஸிடென்ட் அடங்கியுள்ளது. இதில் அதிக அளவு கால்சியம், இரும்புச்சத்து, மாங்கனீசு போன்றவை காணப்படுகின்றன.

அத்திப்பழம் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது இதற்குக் காரணம் அதில் உள்ள பொட்டாசிய சத்துதான். பரபரப்பான இன்றைய சூழ்நிலையில் சமைத்து உண்பதை விட ரெடி மேட் உணவு வாழ்க்கைக்கு பெரும்பாலேனோர் மாறிவருகின்றனர். டின்களில் பதப்படுத்தப்பட்ட பொருட்கள், வறுத்த பொரித்த உணவுகள், துரித உணவுகள் இவற்றை அதிகம் உண்ண தொடங்கிவிட்டனர். இதில் அதிக அளவில் சோடியம் அடங்கியுள்ளது. இதுவே உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. எனவே அத்திப்பழத்தை உட்கொள்வதன் மூலம் உயர் ரத்த அழுத்த நோயை கட்டுப்படுத்தலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

இதில் உள்ள இரும்புச்சத்து, இரத்த சோகை நோய் ஏற்படாமல் தடுக்கிறது. அதேபோல் கால்சியம் சத்து அதிகம் உள்ளதால் எலும்புத் தேய்மானத்தையும் தடுக்கிறது. இப்பழத்தில் காணப்படும் பொட்டாசியம், சிறுநீரில் ஏற்படக்கூடிய கால்சிய இழப்பைக் குறைக்க உதவுகிறது. எனவே எலும்புகளை வலுவாக்க இருவிதங்களில் செயல் புரிகிறது அத்திப்பழம்.

இதில் உள்ள ஆக்ஸலேட் ரசாயனம் சிறுநீரக கல் ஏற்படாமல் தடுக்கிறது. அத்தி மர இலைகளைச் சாப்பிட்டு வந்தால் இன்சுலின் சுரப்பு சரியாவதோடு நீரிழிவு நோயில் இருந்து விடுபடலாம். இதயநோய் ஏற்படாமல் தடுக்கிறது மேலும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது. நீரில் கரையக்கூடிய மற்றும் கரையாது நார்ப்பொருள் அத்தியில் காணப்படுவதால் மலச்சிக்கல் பிரச்னைக்கும் தீர்வாக உள்ளது.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

போக்குவரத்து பொலிசார் வண்டியின் மீட்டரைப் பார்க்காமலே வேகத்தை கணிப்பது எப்படி என்று தெரியுமா?
[Sunday, 2013-05-19 21:32:57]

நம் வண்டியின் ஸ்பீடோ மீட்டரைப் பார்க்காமலேயே போக்குவரத்து காவல்துறையினர் அதிக வேகம் என்று அபராதம் கட்டச் சொல்வது எப்படி? நாம் போகும் வேகத்தை தூரத்திலிருந்தே அவர்கள் எப்படிக் கணிக்கின்றனர்? இந்த இடத்தில்தான் டாப்ளர் எஃபெக்ட் என்ற ஒப்பற்ற அறிவியல் அடிப்படை உதவுகிறது. அந்த அடிப்படையை ஆராய்ந்து உலகுக்குத் தந்தவர் ஆஸ்திரிய அறிவியல் மேதை கிறிஸ் டியன் டாப்ளர். ஆஸ்திரியாவின் சால்ஸ்பர்க் நகரில் 1803ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி பிறந்தவர் டாப்ளர். இவர் தந்தை, கல் உடைக்கும் தொழிலாளி. இளவயதில் நோஞ்சான் குழந்தையாக இருந்ததால், தந்தையின் தொழிலிலிருந்து தப்பித்தார் டாப்ளர். பள்ளிக் கல்வியை முடித்து, வியன்னாவிலும் சால்ஸ்பர்கிலும் வானியல் மற்றும் கணிதத்தைக் கற்றுத் தேர்ந்தார். பின் பிராகா பல்தொழில் நுட்பக் கல்லூரியில் பணியாற்றினார்.



குறைந்த விலையில் Asus அறிமுகப்படுத்தும் புதிய லேப்டொப்!Top News
[Sunday, 2013-05-19 12:31:10]

முதற்தர கணனி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான Asus நிறுவனமானது கணனி வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாப்பானதாகக் கருதப்படும் Ubuntu இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட மடிக்கணினிகளை அறிமுகப்படுத்துகின்றது. Asus 1015E எனும் பெயர் கொண்ட இக்கணனிகள் 1.1 GHz வேகத்தில் செயலாற்றவல்ல Intel Celeron dual-core processor, பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியவற்றினைக் கொண்டு காணப்படுவதுடன் 10.1 அங்குல அளவு மற்றும் 1366 x 768 Pixel Resolution உடைய திரையினைக் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.



உடல் உபாதைகளை சரிசெய்யும் சில விசித்திரமான இயற்கை வைத்தியங்கள்!
[Sunday, 2013-05-19 11:46:29]

உடலில் பிரச்சனைகள் ஏற்படும் போது, அதனை குணப்படுத்துவதற்கு சிறந்த வழியென்றால் அது இயற்கை வைத்தியங்கள் தான். பணத்தை செலவழித்து மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதை விட, இயற்கை வைத்தியங்களை பின்பற்றினால், உடலில் உள்ள பிரச்சனைகள் நீங்குவதோடு, வேறு எந்த பிரச்சனையும் உடலைத் தாக்காமலும் தடுக்கும். ஆனால் கெமிக்கல் கலந்த மருந்து மாத்திரைகளை பின்பற்றினால், அது சில நேரங்களில் பக்க விளைவுகளை ஏற்படுத்தி, நிலைமையை இன்னும் மோசமாக்கச் செய்யும். இயற்கை வைத்தியம் என்றதும் வேறு ஏதோ ஒன்று என்று எண்ண வேண்டாம்.



கணினி வன்றட்டின் (Hard Disk) நிலையை அறிவதற்கு உதவும் மென்பொருள்!
[Sunday, 2013-05-19 08:28:30]

நம் கம்ப்யூட்டரின் ஹார்ட் ட்ரைவில், பைலை சேவ் செய்கையில், அல்லது புதிய புரோகிராம் ஒன்றை இன்ஸ்டால் செய்கையில், டிஸ்க்கில் உள்ள ட்ரைவில் இடம் பற்றாக்குறையாக உள்ளது என்ற செய்தி நமக்கு அச்சத்தைத் தரலாம். அப்படி என்ன நான் அதிகக் கோப்புகளை உருவாக்கி, அல்லது புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து, ஹார்ட் டிஸ்க்கின் இடத்தைப் பயன்படுத்தி விட்டேன் என ஆச்சரியப்படலாம். உடனே ட்ரைவின் ஒவ்வொரு பகுதியாகச் சென்று, எங்கு அதிக இடம் பயன்படுத்தப்பட்டு உள்ளது எனத் தேடித் தேடிப் பார்க்கலாம். உங்களின் இந்த நேரத்தில் உதவத்தான் WinDirStat என்ற புரோகிராம் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.



கறுப்பான சருமமா? பப்பாளி, ஆரேஞ்சு இருக்க கவலை எதற்கு?
[Saturday, 2013-05-18 19:52:16]

கருப்பான சருமம் கொண்ட பெண்கள் கோடை காலத்தில் தைரியமாய் வெளியே சுற்றலாம். ஏனெனில் அவர்களுக்கு வெப்பத்தினால் ஏற்படக்கூடிய கொப்புளங்கள், கோடைகால சரும பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. கருப்பான பெண்கள் களையாக மாற வழிகள்...

* முகத்திற்கு பேஷியல் போடும் முன்பு முகத்தில் உள்ள அழுக்குகளை துடைத்து எடுக்கவேண்டும். காய்ச்சாத பாலை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு சிறிதளவு பஞ்சில் நனைத்து முகத்தை துடைக்கவேண்டும்.



Lenovo அறிமுகப்படுத்தும் IdeaPad Yoga 11S ஹைப்பிரிட் மடிக்கணனிகள்!Top News
[Saturday, 2013-05-18 13:43:48]

முன்னணி கணினி உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான Lenovo ஆனது IdeaPad Yoga 11S எனும் புத்தம் புதிய ஹைப்பிட் மடிக்கணனியினை அறிமுகப்படுத்தியுள்ளது. 11.6 அங்குல அளவுடையதும் 1366 x 768 Pixel Resolution உடையதுமான திரையினைக் கொண்டுள்ள இக்கணினியானது i3,i5 மற்றும் i7 Processor களை கொண்ட மூன்று பதிப்புக்களாக உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் பிரதான நினைவகமாக 4GB RAM இணைக் கொண்டுள்ளதுடன் சேமிப்பு நினைவகமாக 128GB Solid State Disk (SSD) இணையும் உள்ளடக்கியுள்ளன.



விதைகளின் ராஜாவான பாதாமை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!
[Saturday, 2013-05-18 13:09:52]

நட்ஸ்களின் ராஜாவாக விளங்கும் பாதாமில் நிறைய நன்மைகள் உள்ளங்கியுள்ளன. இந்த சூப்பர் நட்ஸ் உடல், சருமம் மற்றும் முடி என பலவற்றிற்கு ஆரோக்கியத்தை தருவதில் சிறந்ததாக உள்ளது. அதிலும் இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் உடலை வலுவுடனும், எந்த ஒரு நோயும் அண்டாமல் பாதுகாக்கிறது. குறிப்பாக பாதாமில் வைட்டமின் பி2, வைட்டமின் ஈ, பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச்சத்து, மாங்கனீசு, புரோட்டீன், பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் காப்பர் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இதில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு நிறைந்திருப்பதால், இது இதயத்தை ஆரோக்கியத்துடன் வைப்பதில் பெரிதும் துணையாக உள்ளது. இவ்வாறு பாதாமின் நன்மைகளைப் பற்றி சொன்னால் சொல்லிக் கொண்டே போகலாம். ஏனெனில் அதன் நன்மைக்கு எல்லையே இல்லை. இப்போது அந்த பாதாமை தினமும் சாப்பிடுவதால், உடலில் உண்டாகும் 15 நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.



ஞாபகம் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்!
[Saturday, 2013-05-18 12:51:52]

"வீட்டுக்கு வரும்போது தேங்காய் எண்ணை வாங்கிக் கொண்டு வரச் சொல்லி எத்தனை தடவை சொன்னாலும் இந்த மனிசன் மறந்து போட்டு வந்து நிற்கிறார்" என அம்மாவிடம் பேச்சு வாங்கும் அப்பாவைப் பார்க்க பாவமாக இருக்கும். ஞாபகம் என்பது எவ்வளவு அவசியம் என்பதை பரீட்சை எழுதும் மாணவர்கள் நன்கு உணர்ந்திருப்பார்கள். வினாத்தாள் கையிலிருக்கும் போது நினைவுக்கு வராத விடைகள் பரீட்சை மண்டபத்திற்கு வெளியே வந்ததும் ஞாபகத்திற்கு வரும்போது "அடடே" என்று சொல்வதைத் தவிர என்ன செய்ய முடியும். இப்படியான நினைவுகள் என்பன நீண்ட காலத்திற்கு சேமிக்கப்பட்ட தகவல்கள் என விஞ்ஞானிகள் வரையறை செய்வார்கள். கண், காது, மூக்கு, நாக்கு, உடல் தொடுகை போன்ற பல்வேறு புலன்கள் மூலம் கிடைக்கும் தகவல்கள் மூளைகள் மூலம் கிடைக்கும் தகவல்கள் மூளையில் சேமிக்கப்படும் போது அது ஞாபகத்திற்கு அடித்தளமாகிறது.



புதிய வகை "டெஸ்ட் டியூப் பேபி" சிகிச்சை முறையை கண்டுபிடித்தனர் பிரிட்டிஷ் விஞ்ஞானிகள்!
[Friday, 2013-05-17 22:26:56]

இயற்கையாக பிள்ளை பெற்றுக் கொள்வதில் பிரச்சினை உள்ள ஜோடிகளில் ஆணின் விந்தையும் பெண்ணின் முட்டையையும் உடலுக்கு வெளியில் சேர்த்து கருவை உருவாக்கும் ஐ வி எஃப் சிகிச்சை முறையில், வெற்றி வாய்ப்பை கணிசமான அளவில் அதிகரிக்கக்கூடியது என தாம் நம்பும் தொழில்நுட்பம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளதாக பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த வகையில் கரு உருவாக்கப்படுகின்ற பிள்ளையைத்தான் டெஸ்ட் டியூப் பேபி என்று சொல்வார்கள்.



சொந்த பந்தத்தில் இருந்த மணமக்கள் தேர்வு காலப்போக்கில் மாறியது - திருமணப் பொருத்தம் பற்றி சில தகவல்கள்!
[Friday, 2013-05-17 22:03:59]

திருமணத்திற்கு மணமக்கள் தேர்வு செய்வது முன்பெல்லாம் உள்ளூரில் சொந்த பந்தத்தில் என்றுதான் இருந்தது. காலப்போக்கில் இந்த நிலை மாறி கல்வி, வேலைவாய்ப்பு என்று நாட்டின் பல பகுதிக்கும் இளைஞர்கள் செல்லும் நிலை ஏற்பட்டு விட்டதால் மணமக்கள் தேர்வு செய்ய அங்கங்கேயுள்ள திருமணத் தகவல் நிலையங்களை நாட வேண்டிய அவசியம் பெற்றோர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. மணமக்களின் பெற்றோர்கள் புதிதாக அறிமுகம் ஆவதால் அவர்களைப் பற்றியும் மணமகன் அல்லது மணமகள் பற்றியும் முழுமையாக தீர விசாரித்திடுவது மிகவும் முக்கியம்!



உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கும் சில முறையற்ற பழக்கங்கள்!
[Friday, 2013-05-17 17:22:45]

பெரும்பாலும் மன அழுத்தத்தை அதிகரிப்பதில் பழக்கவழக்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிலும் நம்மை ரிலாக்ஸ் செய்ய வைக்கும் என்று நினைத்து செய்யும் பழக்கவழக்கங்கள் தான் அதிக அளவில் மன அழுத்தத்தை தூண்டிவிடுகின்றன. உதாரணமாக, தொலைக்காட்சி பார்த்தால், மன அழுத்தம் குறையும் என்று மனதை ரிலாக்ஸ் செய்ய டிவியைப் பார்ப்போம். ஆனால் உண்மையில் அவை தான், மன அழுத்தத்தை அதிகரிக்கின்றன. அதிலும் இன்றைய அவசர உலகில் அனைத்தும் அவசரமாக நடப்பதால், வாழ்க்கையே ஒருவித அவசரத்தில் ஓடுகிறது. இதனால் மன அழுத்தம் மட்டுமின்றி, வேறு பல உடல்நல பிரச்சனைகளும் உண்டாகின்றன. எனவே மனதை அழுத்தமின்றி வைப்பதற்கு, ரிலாக்ஸ் செய்ய மேற்கொள்ளும் தவறான செயல்களை மேற்கொள்ளாமல் இருப்பதே, மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான சிறந்த வழியாகும். இப்போது மன அழுத்தம் குறையும் என்று நினைத்து செய்யும் தவறான பழக்கவழக்கங்கள் என்னவென்று பார்த்து, அவற்றை தவிர்த்து, மன அழுத்தத்தைக் குறைப்போம்.



கரு முட்டை மூலம் உயிர்ப் பிரதியாக்கம் - அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை!
[Friday, 2013-05-17 14:24:50]

மனிதக் கரு முட்டை ஒன்றை உயிர்ப் பிரதியாக்கம் மூலம் அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்கிறார்கள். இதுவரை பிரிட்டிஷ் ஆய்வாளர்கள்தான் டோலி என்ற செம்மறி ஆட்டுக்குட்டியை 1996ஆம் ஆண்டில் உருவாக்கியிருந்தனர். அன்று முதல் அதே இனப்பெருக்க உயிர்ப் பிரதியாக்க வழிமுறைகளை பயன்படுத்தி மனித கலங்களை உருவாக்க விஞ்ஞானிகள் முயற்சித்து வந்தனர். மரபணுக்கூறுகள் (டி என் ஏ) அகற்றப்பட்ட ஒரு முட்டையினுள் வயதுக்கு வந்த ஒருவரின் கலத்தில் உள்ள பதார்த்தங்களை மாற்றீடு செய்ததாக ''ஒரேகொன்னை'' சேர்ந்த விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.



துல்லியமாக இலக்கு வைக்க பயன்படும் ஸ்மார்ட் ரைபிள்ஸ்!Top News
[Friday, 2013-05-17 13:19:08]

ஸ்மார்ட் ரைஃபில்ஸ் - இந்த அதி நவீன துப்பாக்கி மூலம் வைக்கப்படும் டார்கெட்டை துல்லியமாக நீங்கள் மட்டுமல்ல உங்கள் அருகில் இருக்கும் இன்னொருவரும் கணிக்க முடியும், இதன் வீடியோ டார்கெட் லென்ஸ் மூலம் அதன் மூலம் அந்த டார்கெட்டை கரெக்டாய் சுட முடியும் மற்றும் அதை உடனே வீடியோவாக வெப் தளத்திர்க்கும் சேர்க்கவும் முடியும். இப்படி உங்கள் துப்பாக்கியின் டார்க்கெட்டை இன்னொருவரும் பார்த்து அஸிஸ்ட் செய்வதனால் தவறு செய்ய வாய்ப்பில்லை.



LED விளக்குகள் கண்பார்வையை பறிக்கும் - ஆய்வில் தகவல்! Top News
[Thursday, 2013-05-16 18:17:38]

தற்போது மிக அதிகமாக பயன்படுத்திவரும் எல்இடி விளக்குகளால் மனிதர்களின் கண் பார்வைக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று ஸ்பெயின் நாட்டு ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பல ஆண்டுகளாக விலை குறைவான குண்டு பல்புகளைத்தான் மக்கள் பயன்படுத்தி வந்தனர். ஆனால், இவை வெப்பத்தை அதிகளவில் உமிழ்வதாகவும், மின்சாரத்தை அதிகளவில் உறிஞ்சுவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு மாற்றாக எல்இடி எனப்படும், 'லைட் எமிட்டிங் டையோடு' விளக்குகள் அறிமுகம் ஆனது. இவை குண்டு பல்புகள் பயன்படுத்தும் மின்சாரத்தில் 5ல் ஒரு பகுதியை மட்டுமே பயன்படுத்துவதாகவும், சுற்றுச்சூழலுக்கு மிக சிறப்பானது என்றும் கூறப்பட்டது. இதனால், ஐரோப்பிய யூனியனில் பல ஆண்டுகளுக்கு முன்பே குண்டு பல்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுவிட்டது. இந்தியாவில் 2009ம் ஆண்டில் 100 வாட்ஸ் குண்டு பல்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது.



நடிகர் தனுஷுக்கு 3 படத்தில் இருந்த நோய் உங்களுக்கு இருக்கா? எப்படி கண்டுபிடிப்பது? இதை படியுங்கள்...
[Thursday, 2013-05-16 18:12:08]

"பைபோலார் டிஸ்ஆர்டர்" எனப்படும் இருமுனையப் பிறழ்வைப் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்? இது ஒரு விதமான மன அழுத்தமே. ஆனால் சற்று ஆபத்தானது. இதனை பற்றி சமீபத்தில் வந்த ஒரு தமிழ் படத்தில் கூட நாம் பார்த்திருப்போம். அது தான் நடிகர் தனுஷ் நடித்த "மூணு" திரைப்படம். இந்த படத்தில் தனுஷ் கூட இருமுனையப் பிறழ்வால் தான் பாதிக்கப்பட்டிருப்பார். இருமுனையப் பிறழ்வு என்பது அதிகப்படியான வெறி மற்றும் சோர்வு கோளாறான ஓர் மனநோய் ஆகும். இது பெயருக்கு ஏற்றது போல் இருமுனையப் பிறழ்வால் பாதிக்கப்பட்ட ஒருவரின் மனநிலையானது அதீத அளவில் ஊசலாடும். இது பல வாரங்கள் அல்லது மாதங்கள், ஏன் அதற்கும் மேலாக கூட நீடிக்கும். நூற்றில் ஒருவர் வாழ்க்கையில் ஏதாவது ஒரு கட்டத்தில் இருமுனையப் பிறழ்வால் பாதிக்கப்படுவர். இது பொதுவாக டீன் ஏஜில் (விடலைப் பருவத்தில்) அல்லது அதற்கு பிறகு தான் ஆரம்பிக்கும். ஆனால் இது நாற்பது வயதிற்கு மேல் வருவது அபூர்வமே. இது ஆண் பெண் என்ற பேதமில்லாமல் இருவருக்கும் வரும் பொதுவான பாதிப்பாகும். இப்போது இந்த இருமுனையப் பிறழ்வு இருப்பதை உறுதி செய்யும் சில அறிகுறிகளை பார்க்கலாமா!



Gmail தரும் புத்தம் புதிய வசதி - மின்னஞ்சல் மூலமும் இனி பணம் அனுப்பலாம்!Top News
[Thursday, 2013-05-16 15:27:51]

ஜிமெயிலின் வாலட் சர்வீஸ் அனைவரும் அறிந்ததே. இப்போது ஜிமெயிலின் வாலட் இன்னுமொரு புது வசதியை செய்திருக்கிறது. அதாவது இனி உங்களது தெரிந்த / தெரியாத நண்பர்களுக்கும் பணம் ஜஸ்ட் ஒரு ஈமெயிலிலே அனுப்ப முடியும். அதாவது கம்போஸ் பட்டனை அழுத்தும் போது கீழே டாலர் சிம்பல் வரும் அதன் மூலம் எவ்வளவு அனுப்ப வேண்டுமோ அவ்வளவு அனுப்பினால் உங்கள் கிரடிட் கார்ட் அல்லது வங்கி கணக்கில் (ஏற்கனவே படத்தில் காட்டியிருப்பது போல் உள்ள ரெஜிஸ்ட்டர் செய்த வங்கி கணக்கு) இருந்து கழித்து கொள்வார்கள் அது போக இதற்க்கு சர்வீஸ் சார்ஜ் இல்லை.



மலேரியா நோய்க்காவி நுளம்புகளே மனித மணத்தால் அதிகம் கவரப்படுகின்றன - ஆய்வில் தகவல்!
[Thursday, 2013-05-16 15:16:31]

மலேரியா நோய்க் கிருமிகளை காவி வருகின்ற நுளம்புகள் (கொசுக்கள்) மிகவும் அதிகமாக மனித உடலின் மணத்தினால் கவரப்படுவதாக அது குறித்து ஆராயும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். மலேரியா நோய்க் கிருமியைக் காவி வரும் நுளம்பு, அந்தக் கிருமி இல்லாமல் வரும் நுளம்பைவிட மூன்று மடங்கு அதிகமாக மனித வியர்வை மணத்தினால் கவரப்படுவதாக அவர்கள் கூறுகிறார்கள். அதனால், இந்த கிருமிகளை காவி வருகின்ற நுளம்பினால் மனிதன் கடிபடும் வாய்ப்பு மூன்று மடங்கு அதிகமாக இருப்பதாக நெதர்லாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இவ்வாறு நோய்க்கிருமிகளை காவிவரும் அந்த நுளம்புகள் அதிகம் கவரப்படுவதற்கு, அந்த நோய்க்கிருமிகளின் உயிர் வாழ்வதற்கான மற்றும் இனப்பெருக்கம் செய்வதற்கான முயற்சியும் காரணமாக இருக்கலாம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.



பெண்களின் கண்களில் ஏற்படும் பிரச்சினைகளும் அவற்றிற்கான தீர்வுகளும்!
[Wednesday, 2013-05-15 22:22:07]

பெண் என்றால் கண்களுக்கு மைதீட்டவேண்டும். கண்களுக்கு மைபோடுவது நல்லது என்று பெரியவர்கள் கூறியிருக்கிறார்கள். நமது கண் இமைகளிலே எண்ணெய் உற்பத்தியாகிறது. Meibomian என்ற சுரப்பி கண் இமைகளில் ஆயிலை உற்பத்தி செய்கிறது. நாம் அடிக்கடி கண்களை சிமிட்டிக்கொண்டே இருக்கிறோமே, அது சிரமமின்றி வழுவழுப்பாக இயங்கவும், கண்ணீரை பலப்படுத்தவும் அந்த ஆயில் அவசியமாகிறது. கண்மையால் கண்களுக்கு அழகு கிடைக்கும் என்பது உண்மை. ஆனால் மையால் கண்களுக்கு ஆரோக்கியம் கிடைப்பதாக இதுவரை எந்த ஆய்வும் கூறவில்லை. 'பெண்கள் எதற்கெடுத்தாலும் அழுவார்கள். அது அவர்கள் பலகீனம்' என்று சொல்வார்கள். ஒருவிதத்தில் பெண்களின் அழுகை அவர்கள் கண்களுக்கு நல்லது. துக்க அழுகை, விபத்து அழுகை, மிதமான அழுகை போன்ற ஒவ்வொன்றின்தன்மைக்கு ஏற்ப கண்ணீரின் ரசாயனதன்மை மாறும்.



பாதுகாப்பான முறையில் புளூடூத் சாதனங்களை பாவிப்பதற்கான சில வழிமுறைகள்!
[Wednesday, 2013-05-15 22:01:48]

நாம் கம்ப்யூட்டர்கள், பொழுதுபோக்கு சாதனங்கள், டெலிபோன் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது அவை தங்களுக்குள் பல வகைகளில் இணைத்துக் கொள்கின்றன. பலவித வயர்கள், கேபிள்கள், ரேடியோ சிக்னல்கள், இன்ப்ரா ரெட் கதிர்கள் எனப் பல வகைகளில் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது. ஆனால் புளுடூத் சாதனங்களை இணைப்பதில் தனி வழி கொண்டுள்ளது. குறைந்த மின் சக்தி பயன்பாடு, ஒரே நேரத்தில் எட்டு சாதனங்களுடன் தொடர்பு, எந்த வகையிலும் ஒன்றுக்கொன்று குறுக்கிட்டு செயல் இழக்காத நிலை, இணைந்திடும் சாதனங்கள் நேராக இருந்திடத் தேவையற்ற நிலை, 32 அடி வட்டத்தில் புளுடூத் தொழில் நுட்பம் கொண்ட எந்த சாதனத்தையும் கண்டு இணையும் லாகவம் எனப் பல ப்ளஸ் பாய்ண்ட்களை அடுக்கிக் கொண்டு செல்லலாம்.



சீன மருத்துவர்களால் ரொக்கட் தொழில்நுட்பத்தில் செயற்கை இதயம் உருவாக்கம்!Top News
[Wednesday, 2013-05-15 17:26:44]

சீன மருத்துவர்கள் ராக்கெட் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்கும் செயற்கை இதயத்தை உருவாக்கியுள்ளனர். டியான்ஜின் டொ இன்டர்நேஷனல் கார்டியாவாஸ்குலார் (Tianjin TEDA International Cardiovascular) மருத்துவமனை மருத்துவர்கள் இந்த செயற்கை இதயத்தை உருவாக்கியுள்ளனர். இந்த செயற்கை இதயம் செம்மறியாடு ஒன்றிற்கு 2 மாதங்களுக்கு முன்பு பொருத்தப்பட்ட நிலையில் அந்த ஆடு 62 நாட்களாக நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது. இதனால் மற்ற கண்டுபிடிப்புகளுடன் ஒப்பிடுகையில் இந்த செயற்கை இதயம் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. இந்த செயற்கை இதயம் சிறியதாகவும், எடை குறைந்ததாகவும், அதிக பாதுகாப்புடனும் உருவாக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


Mahesan supramaniyam 031109
TDE_Computers2011
Canada Kanthasamy Kovil
Suresh-remax-2013-01-01
TamilsGuid-191012-2013
INNSYS-20120930
NIRO-DANCE-100213
Ramans2011
RoyaShades-l2011(04-12-11)
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com