Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
June 20, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு திரை இசை சக்கரவர்த்தி எனும் பட்டத்தை வழங்கி கௌரவித்தார் தமிழக முதல்வர் ஜெயலலிதா
[Thursday, 2012-08-30 20:23:20]
News Service

ஜெயா டிவியின், 14ம் ஆண்டு விழாவும், இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்திக்கு பாராட்டு விழாவும், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில் பங்கேற்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு திரை இசை சக்கரவர்த்தி எனும் பட்டத்தை வழங்கினார். ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல்வர் பங்கேற்ற முதல் சினிமா விழா இதுவாகும்.

  

தமிழத் திரையுலகில் மெல்லிசை மன்னர்களாகத் திகழ்ந்தவர்கள் எம்.எஸ்.விஸ்வநாதனும், டி.கே.ராமமூர்த்தியும். இருவரும் இணைந்தும், தனித் தனியாக பிரிந்தும் பல சாகாவரம் படைத்த பாடல்களைப் படைத்தனர். சென்னையில் நடந்த விழா ஒன்றில்தான் முதல் முறையாக மெல்லிசை மன்னர்கள் என்ற பட்டம் இந்த இசை மன்னர்களுக்கு வழங்கப்பட்டது. அதை வழங்கியவர் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆவார். அன்று முதல் இவர்கள் இருவரும் மெல்லிசை மன்னர் என்றும் மெல்லிசை மன்னர்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.

இந்நிலையில் மெல்லிசை மன்னருக்கு இதுவரை பத்ம விருதுகள் எதுவும் வழங்கப்படவில்லை. அந்த குறையை போக்கும்பொருட்டு ஜெயா டி.வி. சார்பில் ஒரு பட்டம் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஜெயா டி.வி. நேரடியாக மக்களிடம் போய் ஓட்டெடுப்பு நடத்தியது. அதில் "திரை இசை சக்கரவர்த்தி என்ற பெயரைத்தான் அதிகளவிலான மக்கள் ஓட்டளித்தனர். இதனையடுத்து அந்தபட்டத்தை அவருக்கு முதல்வர் வழங்கினார். மேலும் விஸ்வநாதன், ராமமூர்த்திக்கு, 60 பொற்காசுகள் கொண்ட, பொற்கிழியையும் ஜெயலலிதா வழங்கினார். பின்னர் மெல்லிசை மன்னர்கள் இருவரையும் வாழ்த்து பேசினார். இந்த விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் உள்ளிட்ட திரைபிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

காதல் சந்தியா ஜோடி போட்டு நடிக்கும் சந்தானம்
[Thursday, 2013-06-20 13:18:55]

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நானும் எத்தனை நாளைக்குத்தான் ஊரான் காதலையே ஊட்டி வளர்க்கிறது. எனக்கும் ஊட்டிக்குப்போய் டூயட் பாடனும்னு ஆசை இருக்காதா என்று சொல்லி, அப்பட நாயகி விசாகா சிங்குக்கு தானும் லவ் லட்டர் கொடுத்தார் சந்தானம். அது படத்துக்காக பேசிய டயலாக் என்றாலும, சந்தானத்துக்குள்ளும் அப்படியொரு எண்ணம் இருந்திருக்கிறது. அதன் வெளிப்பாடாக அதையடுத்து தான் நடித்து வரும் ஒவ்வொரு படங்களிலும் தனக்கொரு ஜோடி நடிகையை இணைத்து வருகிறார். குறிப்பாக, யா யா என்ற படத்தில் காதல் சந்தியாவை தனது ஜோடியாக்கியுள்ளார். ஒரு காலத்தில் பரத், ப்ருதிவிராஜ் போன்ற நடிகர்களுடன் டூயட் பாடிவந்த சந்தியாவுக்கு இப்போது சினிமாவில் மார்க்கெட் அச்சு கழண்டு கிடப்பதால், சந்தானம் கிடைப்பதே பெரிய விசயம் என்று இப்படத்தில் அவருக்கு ஜோடியாக காமெடி கதாநாயகியாக ஆக்டு கொடுத்திருக்கிறார்.



சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் வடிவேலு
[Thursday, 2013-06-20 13:07:34]

கல்லூரி மாணவர்கள் நகைச்சுவை நடிகர் வடிவேலு பேசி நடித்த கொமடி வசனங்களை இப்போதும் பயன்படுத்தி வருகின்றனர். அந்த அளவிற்கு அவரது பெருவாரியான வசனங்கள் மக்களோடு மக்களாக கலந்துவிட்டன. அவரது கொமடி வசனம் சினிமாக்காரர்களையும் கூட விட்டு வைக்கவில்லை. சிலர் அவரது கொமடிகளை எடுத்து தங்கள் படங்களுக்கும் பயன்படுத்துகின்றனர். அந்த வகையில், வின்னர் படத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்றொரு சங்கத்தை அமைத்து கொமடி செய்திருந்தார் வடிவேலு. தற்போது அந்த வசனத்தையே சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு படத்திற்கு தலைப்பாக்கியுள்ளனர். ஆனால், வடிவேலுவின் தலைப்பை படத்திற்கு பயன்படுத்தி விட்டு அவரை நடிக்க வைக்காமல் இருந்தால் நன்றாக இருக்காதே என்ற நட்பிற்காக படத்தில் ஒரிரு காட்சிகளில்தோன்றுமாறு அவரைக் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



காஜலின் இடத்தில் ஸ்ருதி ஹாசன்
[Thursday, 2013-06-20 13:03:20]

பாலிவுட்டில் லக் என்ற திரைப்படத்தின் மூலம் இந்தி திரையுலகிற்கு காலடி எடுத்து வைத்துள்ளார் ஸ்ருதி ஹாசன். ஆனால் படத்தின் தலைப்பில் மட்டுமே லக் இருந்ததே தவிர ஸ்ருதிஹாசனுக்கு லக் அடித்ததாக தெரியவில்லை. அதேநேரத்தில் தெலுங்கில் பவன்கல்யானுடன் நடித்த கப்பர் சிங் என்ற திரைப்படம் ஆந்திராவின் பட்டி தொட்டியெல்லாம் வசூலை வாரி குவித்துள்ளது. இப்படத்தின் மூலம் தெலுங்கில் முன்ணனி நடிகையாக வலம் வருகிறார் ஸ்ருதி ஹாசன். தற்போது தெலுங்கில் பலுபு, யெவடு, ராமய்யா வஸ்தாவய்யா ஆகிய தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தெலுங்கு படமான கப்பர் சிங் 2 ம் பாகத்தை படமாக்க திட்டமிட்டுள்ளனர். இதிலும் பவன் கல்யாண் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக காஜல் அகர்வால் என தகவல் எழுந்துள்ளது. ஆனால் காஜலின் சம்பள தொகை தயாரிப்பாளர்களை கதி கலங்க வைத்ததால், தற்போது அவருக்கு பதிலாக ஸ்ருதி ஹாசனையே ஒப்பந்தம் செய்துள்ளனராம்.



'வாங்கண்ணா வணக்கங்கண்ணா' பாடலில் விஜய்யுடன் நடனமாடிய ஜி.வி.பிரகாஷ்
[Thursday, 2013-06-20 12:44:30]

கொலிவுட்டில் வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ் குமார். மிகவும் குறுகிய காலத்திற்குள் 25 படங்களுக்கு இசையமைத்துள்ளார் ஜி.வி.பிரகாஷ். இவர் பரதேசி படத்திற்கு பின்பு அன்னக்கொடியும் கொடிவீரனும், தலைவா ஆகிய படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளர் பட்டியலில் சேர்ந்துள்ளார். மேலும் ஜி.வி.பிரகாஷை கதாநாயகனாக நடிக்க வைப்பதற்கான முயற்சிகள் நடந்து வந்தன. ஆனால் அதற்கு மறுத்துவிட்ட ஜி.வி., தற்போது மத யானைக்கூட்டம் என்ற படத்தை தயாரித்து வருகிறார். இதற்கிடையே சில படங்களில் பாடல் காட்சிகளில் முகம் காட்டி வந்த ஜி.வி.பிரகாஷ், தலைவா படத்தில் 'வாங்கண்ணா வணக்கங்கண்ணா' என்ற பாடலில் விஜய் மற்றும் சந்தானத்துடன் இணைந்து நடனமாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



யு சான்றிதழிற்காக போராடும் மரியான்
[Wednesday, 2013-06-19 18:38:39]

பரத்பாலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் மரியான். மூன்று எண்ணெய் நிறுவன தொழிலாளர்களை சூடானில் பிணையக் கைதிகளாக பிடித்து வைத்து சித்ரவதை செய்வதுதான் இப்படத்தின் மையக்கருவாம். அதிலிருந்து தனுஷ் எப்படி தப்பி வருகிறார் என்பதுதான் க்ளைமாக்சாம். ஆனால், இந்த க்ளைமாக்ஸ் காட்சியை கொடூரமான முறையில் படமாக்கியிருக்கிறார்களாம். இதனால் சென்சார் சான்றிதழுக்காக அனுப்பி வைக்கப்பட்ட மரியானுக்கு யுஏ சான்றிதழ் வழங்கிவிட்டார்களாம். யு சான்றிதழ் கிடைத்தால் படத்துக்கு வரிவிலக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்த மரியான் டீமி்ற்கு இநத யுஏ சான்றிதழ் விவகாரம் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் வருகிற 27-ந்தேதிக்கு படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பவர்கள், முன்னதாக படத்தை மேல்முறையீட்டு குழுவுக்கு அனுப்பி வைத்து எப்படியாவது யு சான்றிதழ் வாங்கி விட வேண்டும் என்று வரிந்து கட்டி நிற்கிறார்கள்.



கவுண்டமணியின் வேடத்தில் பிரம்மானந்தம்
[Wednesday, 2013-06-19 18:35:17]

ஆக்ஷன் கிங் அர்ஜூன் தயாரித்து நடிக்கும் படம் ஜெய்ஹிந்த்-2. ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் ஜெய்ஹிந்த். இப்படத்தில் அர்ஜூனுக்கு ஜோடியாக ரஞ்சிதா நடித்திருந்தார். இப்படத்தில் வரும் கவுண்டமணி- செந்தில் நகைச்சுவை காட்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருக்கிறார் அர்ஜூன். புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக சுர்வீன் சாவ்லா நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் செந்தில் நடிப்பது உறுதியாகிவிட்ட நிலையில், கவுண்டமணிக்கு பதில் தெலுங்கு நடிகர் பிரம்மானந்தம் நடிக்கப் போகிறாராம். ஏன் இந்த மாற்றம் என்ற கேள்விக்கு, அர்ஜூன் தரப்பில் சும்மா தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பழைய ஜெய்ஹிந்த் படத்துக்கும், ஜெய்ஹிந்த்-2க்கும் படத்தலைப்பை தவிர வேறு ஒற்றுமை ஒன்றும் இல்லை என்றும் தெளிவுப்படுத்தியுள்ளார்.



வீதிகளில் பிகினி உடையில் திரியும் நமீதா
[Wednesday, 2013-06-19 18:32:47]

சினிமாவில் குட்டை பாவாடை, பிகினி கலாசாராம் என்றெல்லாம் கட்டவிழ்த்து விட்ட நமீதாவுக்கு போதாத நேரம் போலிருக்கு. அதனால்தான் அவர் எந்த அளவுக்கு இறங்கி நடிக்க தயாராக இருந்தும் துக்கடா வேடங்களை அவருக்கு கொடுக்கக்கூட கோடம்பாக்கத்தில் எந்த புண்ணியவான்களும் முன்வரவில்லை. இதனால் தனது பெரிய உடம்பு, பெரிய திரைக்காரர்களுக்கு வேண்டாததாகி விட்டது என்று இப்போது சின்னத்திரை பக்கம் தலை காட்டி வருகிறார். ஆனால், கோலிவுட்டில் வேலை வெட்டி இல்லாமல், சதா வீட்டு மோட்டு வளையத்தையே பார்த்து பார்த்து அவருக்கு செம போரடித்து விட்டதாம். அதனால் அடிக்கடி மும்பைக்கும், சில வெளிநாடுகளுக்கும் எஸ்கேப்பாகி வருகிறார் நமீதா. அப்படி அங்கு செல்லும்போது, சென்னையில் வீதிகளில் செல்வது போல் உடம்பை கவர் பண்ணி செல்லாமல் பிகினி உடையணிந்து ஹாயாக காத்தாட திரிகிறாராம் நமீதா.



ரகசியமாக தயாராகும் ரஜினியின் புதிய படம்
[Wednesday, 2013-06-19 18:28:50]

கோச்சடையான் படத்துக்கு முன்பாக புதிய படமொன்றில் நடிக்க உள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி. இந்தியத் திரையுலகின் முதல் மோஷன் கேப்சரிங் படமாக தயாராகி வருகிறது கோச்சடையான். இதில் ரஜினி நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக பாலிவுட் நாயகி தீபிகா படுகோனேவும் நடிக்கின்றனர். படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதனிடையே ரஜினிகாந்த் கோச்சடையான் படத்தின் வெளியீட்டு முன்பாக ஒரு புதிய படத்தில் நடிக்க திட்டமிட்டிருக்கிறார். இதற்கு காரணம் கோச்சடையான் படம் தொடர்ந்து தள்ளிக் கொண்டே போவது தானாம். இந்தப் படத்தை ரஜினியின் ஆஸ்த்தான இயக்குனரான கே.எஸ்.ரவிக்குமார் இயக்க இருக்கிறார். சமீபத்தில் கே.எஸ்.ரவிக்குமாரை அழைத்து பேசிய ரஜினி, முத்து, படையப்பா பாணியில் நகைச்சுவை கலந்த ஆக்ஷன் படத்தை தயார் பண்ணுங்கள் என்று கூறியுள்ளாராம். மேலும் படத்தை இரண்டு மாதத்தில் முடித்துவிட வேண்டும் என்றும், படப்பிடிப்பு முடிவடைந்த பிறகுதான் படம் பற்றிய தகவல்களை வெளியிட வேண்டும் என்றும் கண்டிஷனும் போட்டிருக்கிறார்.



தமிழ் சினிமாவில் கேரள அழகிகளின் புதிய டிரெண்
[Wednesday, 2013-06-19 18:26:03]

கேரளாவில் இருந்து வந்த மூன்று அழகிகள், தமிழ் திரையுலகில் புதிய டிரெண்டை உருவாக்கி வருகிறார்கள். எந்த மொழி நடிகையாக இருந்தாலும், தமிழில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏனெனில் தமிழ் அவர்களுக்கென்று தனித்தனி அடையாளத்தை ஏற்படுத்தி தருகிறது. தற்போதைய சூழலில் பெரும்பாலான நடிகைகள் தாராளமாக கவர்ச்சி காட்டி நடித்து வருகின்றனர். இந்நிலையில் கேரளாவில் இருந்து வந்து தமிழ் படங்களில் நடிக்கும் 3 நடிகைகள் புதிய டிரெண்டை செட் பண்ணுகின்றனர். அதாவது, மூன்று பேரும் நடிப்பு தான் முக்கியம், கவர்ச்சி காட்டி நடிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர். நித்யா மேனனின் நடிப்பை இயக்குனர்களும், பத்திரிக்கைகளும் பாராட்டுகின்றன. ஆனால் அவர் எனக்கு கதாபாத்திரம் தான் முக்கியம், கவர்ச்சி காட்டி நடிக்க வேண்டிய அவசியம் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் தமிழில் மிக வேகமாக வளர்ந்து வரும் லக்ஷமி மேனனும், கவர்ச்சிக்கு தடை விதித்துள்ளார். இப்பட்டியலில் இணைந்துள்ளார் மற்றொரு நாயகி நஸ்ரியா நஸீம்.



சித்தார்த் - சமந்தா ஜோடி திருமணத்திற்கு பெற்றோர்களின் சம்மதம்
[Wednesday, 2013-06-19 18:19:38]

சித்தார்த், சமந்தா திருமண ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளதால் தனது கைவசம் உள்ள படங்களை விரைவில் முடிக்கவுள்ளார் சமந்தா. சமந்தாவை விட சித்தார்த்திற்கு வயது அதிகம். ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன. சமந்தா பெற்றோர் தரப்பிலும் அதிருப்தி இருந்தது. இதுபோல் சித்தார்த் பெற்றோரும் காதலை ஏற்கவில்லை. இதையடுத்து பெற்றோரை சமரசப்படுத்தி சம்மதம் வாங்கும் முயற்சியில் இருவரும் ஈடுபட்டுள்ளனராம். இது நிமிர்த்தமாக சமந்தா நேரடியாக சித்தார்த் வீட்டிற்கு சென்று, அவரது பெற்றோர்களையும், உறவினர்களையும் சந்தித்து நீண்ட நேரம் பேசி விட்டுச் சென்றுள்ளாராம். நீண்ட யோசனைக்கு பின்பு சித்தார்த் பெற்றோர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.



ஜெயம் ரவியுடன் ஜோடி சேரும் நயன்தாரா
[Wednesday, 2013-06-19 18:05:10]

பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்கு பின்பு நயன்தாராவின் மவுசு கூடிவிட்டது. இந்த ஆண்டு மட்டும் உதயநிதி ஸ்டாலின், அஜித், ஆர்யா ஆகியோருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதுதவிர கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் தமிழ் - தெலுங்கில் உருவாகும் அனாமிகா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தமிழில் மீண்டும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். ஜெயம் ராஜாவின் இயக்கத்தில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார். தில்லாலங்கிடிக்குப் பிறகு ராஜா - ரவி இணையும் இந்தப் படத்தை கல்பாத்தி அகோரத்தின் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஏற்கெனவே நிமிர்ந்து நில் படத்தில் ரவியின் ஜோடியாக நயன்தாராதான் ஒப்பந்தமானார். ஆனால் சில காரணங்களால் அவருக்குப் பதில் அமலா பால் ஒப்பந்தமானார். இப்போது மீண்டும் இருவரும் இணைகிறார்கள்.



இயக்குநர் மணிரத்தினத்தின் சினிமா குடோனில் தீ விபத்து - முழுவதும் தீக்கிரை
[Wednesday, 2013-06-19 17:58:56]

இயக்குநர் மணிரத்தினத்தின் திரைப்படப் பொருட்கள் தயாரிப்புக் கூடம் தீவிபத்தில் சிக்கிய சேதமடைந்தது. இந்த கிட்டங்கியானது தியாகராய நகர் ஜி.என்.செட்டி சாலையில் உள்ளது. இங்கு நேற்று நள்ளிரவில் தீவிபத்து ஏற்பட்டது. மின்சாரக் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் கிட்டங்கி முழுவதுமாக எரிந்து போய் விட்டது.



காஜல் அகர்வாலின் 28 வது பிறந்தநாள் இன்று
[Wednesday, 2013-06-19 17:53:13]

காஜல் அகர்வால் இன்று தனது 28வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பழனி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் காஜல் அகர்வால். அதன் பின் மோதி விளையாடு, நான் மகான் அல்ல, மாற்றான் ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு வெற்றி நாயகி என்ற பெயரை வாங்கிக் கொடுத்த படம் துப்பாக்கி தான். துப்பாக்கியின் வெற்றிக்கு பிறகு காஜலுக்கு தமிழ் திரையுலகில் மவுசு கூடிவிட்டது. தற்போது மீண்டும் விஜய்யுடன் இணைந்து ஜில்லாவிலும், கார்த்தியுடன் ஆல் இன் ஆல் அழகுராஜா என்ற படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் கமல் இயக்கி நடிக்கும் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை கால்ஷீட் பிரச்னையால் ஏற்க மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்திய படங்களில் நடிக்க ஆசைப்படுகிறார் ஜாக்கிசான்
[Wednesday, 2013-06-19 17:38:08]

முதன் முறையாக இந்தியாவில் நேற்று தொடங்கிய சீன திரைப்பட திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. டெல்லியில் நடைபெறும் இவ்விழாவை பிரபல நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான ஜாக்கிசான் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இந்த திரைப்பட விழாவில் ஜாக்கிசான் இயக்கி நடித்துள்ள 'தி சைனீஸ் ஜோடியாக்' என்ற படம் முதல் படமாக திரையிடப்பட்டது. இதுகுறித்து ஜாக்கிசான் கூறுகையில், நான் இந்தியாவில் 10 வருடங்களுக்கு முன் மல்லிகா ஷெராவத்துடன் 'தி மித்' திரைப்படத்தில் நடித்தேன். அந்த படப்பிடிப்பில் 4 மாதங்கள் இங்கு தங்கி இருந்த போது பல இந்திய படங்களை பார்த்தேன். பாட்டுப் பாடுவதும் ஆடுவதும் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் நல்ல பாடகர். இந்திய இயக்குனர்கள் நல்ல கதாபாத்திரத்துடன் என்னை அழைப்பார்கள் என்று நம்புகிறேன். நான் நன்றாக சண்டை போடுபவன் மட்டும் அல்ல, நல்ல நடிகனும் கூட. 3 இடியட்ஸ் மட்டும் இல்லாமல் பாலிவிட்டில் பல நல்ல படங்கள் உள்ளன.



ஐதராபாத்தில் விருது வழங்கும் விழா - சூர்யா, காஜல் அகர்வாலுக்கு விருது Top News
[Tuesday, 2013-06-18 19:14:34]

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் சிறந்த நடிகர், நடிகைகளுக்கு விருது வழங்கும் விழா ஐதராபாத்தில் நடந்தது. இதில் தமிழில் சிறந்த நடிகராக சூர்யா தெரிவு செய்யப்பட்டார். மாற்றான் படத்தில் ஒட்டிப் பிறந்த இரட்டையர் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்ததாக அவரை தெரிவு செய்தனர். சிறந்த நடிகையாக காஜல் அகர்வால் தெரிவு செய்யப்பட்டார். இவர் துப்பாக்கி படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தெரிவு செய்தனர். இதுபோல் தெலுங்கில் சிறந்த நடிகராக பவன் கல்யாண், சிறந்த நடிகையாக சமந்தாவும், சிறந்த வில்லன் நடிகராக சுதீப்பும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா விருதுகளை வழங்க, சூர்யாவும், காஜல் அகர்வாலும் மேடையில் ஏறி பெற்றுக் கொண்டனர். நாகர்ஜூனா, நித்யாமேனன் போன்றோரும் சிறந்த நடிகர், நடிகை விருதை பெற்றனர். விழாவையொட்டி நடிகர், நடிகைகள் நடனம் உட்பட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன.



சித்தார்த்திடம் தோற்றுபோன சந்தானம்
[Tuesday, 2013-06-18 18:59:29]

பொதுவாக சந்தானம் தான் காமெடி என்ற பெயரில் மற்றவர்களை கலாய்ப்பது வழக்கம். அதிலும், படப்பிடிப்பு தளங்களில் அப்பாவியாக நடிகைகள் யாராவது சிக்கிக்கொண்டால் போதும், அவர்களை அப்பளமாக்கி விடுகிற அளவுக்கு வறுத்து எடுத்து விடுவார். இதனால், சந்தானம் வருகிறார் என்றாலே சில இளவட்ட நடிகைகள் தலைதெறிக்க ஓடி ஒளிவார்கள். ஆனால், அப்படிப்பட்ட சந்தானத்தையே சில நடிகர்கள் கலாய்க்கத் தொடங்கி விட்டார்கள். அவர்களில் ஆர்யா, சித்தார்த் இருவரும் குறிப்பிடத்தக்கவர்கள். இதில் ஆர்யா, சந்தானத்தை நேரில் கலாய்ப்பதை விட போனில்தான் ஜாஸ்தியாக கலாய்ப்பாராம். சந்தானம் படங்களில் பேசிய டயலாக்குகளை கொண்டே, அதாவது அவர் வீசியெறிந்த பந்துகளையே அவர் மீது திருப்பி விடுகிறாராம். இதனால் ஆர்யாவின் போன் வருகிறது என்றாலே எமகண்டம் ஸ்டார்ட் ஆயிடுச்சே என்று அலறுகிறாராம் சந்தானம்.



தேடி வரும் வாய்ப்புக்களை ஏற்பேன் - நானாக யாரிடமும் கெஞ்ச மாட்டேன் சினேகா
[Tuesday, 2013-06-18 18:53:58]

எனக்கு வாய்ப்பு கொடுங்கள் என யாரிடமும் கெஞ்ச மாட்டேன் என்கிறார் புன்னகை இளவரசி சினேகா. தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த சினேகா, பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார். அத்துடன் படங்களில் நடிப்பதையும் குறைத்துக் கொண்டார். இந்நிலையில் நடிப்பிற்கு முழுக்கு போட்டு விட்டீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த சினேகா, திருமணத்திற்கு முன்பு ஹரிதாஸ் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். திருமணத்துக்கு பிறகு தான் அதன் ஷூட்டிங் முடிந்து வெளியானது. சினிமா வாழ்க்கைக்கும், நிஜ வாழ்க்கைக்கும் இடையே நான் ஒரு எல்லை வகுத்திருக்கிறேன். எல்லா பெண்ணும் திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழிக்க வேண்டும் என எண்ணுவார்கள், அதைத்தான் இப்போது நான் செய்து கொண்டிருக்கிறேன் நல்ல கதாபாத்திரங்கள் வந்தால் ஏற்பேன். அதுவும் என்னை தேடி வந்தால் தான் ஏற்பேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் எனக்கு வாய்ப்பு தரும்படி யாரிடமும் கெஞ்சி கொண்டிருக்க மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.



12 கோடிக்கு வியாபாரமான சிவகார்த்திகேயனின் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்'
[Tuesday, 2013-06-18 18:44:26]
சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல் படங்களில் நடித்த சிவகார்த்திகேயன் தற்போது நடித்துள்ள வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் ரூ. 12 கோடிக்கு வியாபாரமாகியுள்ளதாம். இது இதுவரை அவர் நடித்த படங்களில் அதிக விற்பனையான முதல் படமாகும். இதனால், காலரை தூக்கிவிட்டபடி நடிக்கத் தொடங்கியிருக்கும் சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தையும் 1.5 கோடியாக உயர்த்தியுள்ளாராம். மேலும், சம்பள விஷயத்தில் ஆரம்பத்திலிருந்தே படாதிபதிகளை மிரட்டும் வகையில் பேசும் அவர், இப்போது இன்னும் எகிறிப் பேசி வருகிறாராம். அதனால் சிவகார்த்திகேயனிடம் கால்சீட் கேட்டு வட்டம் போட்டு வந்த பட்ஜெட் படாதிபதிகள், அவர் மேல்தட்டு ஹீரோவாகி விட்டார் என்று முடிவு செய்து டிராக்கை மாற்றிக்கொண்டு வருகிறார்கள்.


த்ரிஷாவை வென்ற அமலா பால்..
[Tuesday, 2013-06-18 18:39:25]
நீ தானே என் பொன் வசந்தம் படத்திற்கு பிறகு கௌதம் மேனன் இயக்கும் படம் துருவ நட்சத்திரம். சூர்யா நாயகனாக நடிக்கும் இப்படத்தில், பார்த்திபன், சிம்ரன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஆனால் படத்தின் நாயகி யார் என்பதில் த்ரிஷாவுக்கும், அமலா பாலுக்கும் இடையே போட்டி நிலவியது. இதன் பின்னர் நீண்ட விவாதம் நடத்தி, தற்போது மார்க்கெட்டில் இருக்கும் அமலா பால் நடித்தால் நன்றாக இருக்கும் என முடிவு எடுத்தார்களாம். அத்துடன் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் வியாபாரத்திற்கு பலமாக இருக்கும் என்றும் நினைத்தார்களாம். இந்நிலையில் இது குறித்து அமலா பாலிடம் பேசி ஓ.கே வாங்கி விட்டார்களாம். இதனையடுத்து தலைவா படம் முடிந்த பிறகு, சூர்யாவுடன் இணைகிறாராம் அமலா பால்.


பவர்ஸ்டார் வேடத்தில் நடிக்கும் டி.ஆர் - பட்டைய‌‌ை‌ கிளப்பும் தாடிக்காரர்
[Tuesday, 2013-06-18 18:36:08]

'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தில் ஏற்படுத்திய பரபரப்பு காரணமாக, மளமளவென்று புதிய படங்களில் ஒப்பந்தமானார் பவர்ஸ்டார் என்கிற டாக்டர் சீனிவாசன். இதில், கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தை சந்தானத்துடன் இணைந்து தயாரித்த டைரக்டர் இராம.நாராயணன் பவர்ஸ்டாரை நாயகனாக்கி 'ஆர்யா சூர்யா' என்றொரு படத்தை இயக்கினார். படமும் வேகமாக வளர்ந்து வந்தது. ஆனால், பாதி வழியில் சென்று கொண்டிருந்தபோது, மோசடி வழக்கில் பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால், இப்போது பவர்ஸ்டார் நடித்த வேடத்துக்கு டி.ஆரை ஒப்பந்தம் செய்து மீதி படத்தை படமாக்கி வருகிறார் இராமநாராயணன். சின்னத்திரை தொடர்களில், இனி அவர் வேடத்தில் இவர் நடிப்பார் என்பது போன்று, இப்படத்திலும் கார்டு போடப்படுகிறதாம். மேலும், இதில் பவர் ஆடவிருந்த ஒரு குத்துப்பாட்டு இப்போது டிஆருக்கு கிடைத்திருக்கிறது.


Mahesan supramaniyam 031109
Suresh-remax-2013-01-01
INNSYS-20120930
Ramans2011
AJRwindows22.05.13
RoyaShades-l2011(04-12-11)
NIRO-DANCE-100213
TamilsGuid-191012-2013
TDE_Computers2011
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com