Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 21, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து சிங்கள பேரினவாதிகளையும் அவர்களது அடிவருடிகளையும் தோற்கடியுங்கள்! - நக்கீரன்
[Sunday, 2012-09-02 11:08:49]
News Service

கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சி இருக்கின்றன. எதிர்வரும் செப்தெம்பர் 8 ஆம் நாள் தேர்தல் நடைபெற இருக்கிறது. கிழக்கு மாகாணத் தேர்தல் முடிவை இந்தியா மட்டுமல்ல மேற்குலக நாடுகளும் மிக ஆவலோடும் உன்னிப்போடும் கவனித்துக் கொண்டிருக்கின்றன.

  

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவு தமிழ்மக்களுக்கு மிகவும் முக்கியமானது. ததேகூ க்குப் பின்னால் தமிழ்மக்கள் அணிதிரண்டு நிற்கிறார்கள் என்ற செய்தி இந்தத் தேர்தல் மூலம் பன்னாட்டு சமூகத்துக்கும் வெளிநாட்டு இராசதந்திரிகளுக்கும் சொல்லப்பட வேண்டும்.

வடக்கும் கிழக்கும் தமிழர்களது மரபுவழித் தாயகம், அவர்கள் ஒரு தேசிய இனம், அவர்களுக்கு தன்னாட்சி உரிமை உண்டு, இறையாண்மை உண்டு போன்ற கோட்பாடுகளின் அடிப்படையில் இனச் சிக்கலுக்கு பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காணவேண்டும் என்பதை முன்னிறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறது.

இனச் சிக்கல் என்று எதுவும் இல்லை தமிழர்கள் அபிவிருத்தியை மட்டும் கேட்கிறார்கள் என்று ஆணவத்தோடு பேசும் மகிந்த இராசபக்சேக்கு இந்தத் தேர்தல் மூலம் தமிழ்மக்கள் நல்ல பாடம் படிப்பிக்க வேண்டும்.

இலங்கையில் பெரும்பான்மை சிறுபான்மை என்றில்லை எல்லோரும் சமம், எல்லோரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள், எல்லோரும் நல்லிணக்கத்தோடு வாழ வேண்டும் என்று கொச்சைத் தமிழில் மகிந்த இராசபக்சே பேசுகிறார். ஆனால் சிங்கள தேசிய கீதத்தை தமிழர்களது தொண்டைக்குள் திணிக்கிறார். தமிழ் ஊர்ப்பெயர்களை, தெருக்களின் பெயர்களை தனிச் சிங்களத்துக்கு மாற்றுகிறார்.

வவுனியா வடக்கு (நெடுங்கேணி) பிரதேச செயலாளர் பிரிவின் பட்டிக்குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட தமிழர் பூர்வீகக் கிராமமான அரியகுண்டான், அதாவெட்டுவெவ என்று சிங்களப் பெயரிடப்பட்டு வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதற்குப் பெயர்தான் சமத்துவமா? இதுதான் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கமா?

நெடுங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் வெடிவைத்தகல்லு கிராம அலுவலர் பிரிவின்கீழிருந்த 90 ஹெக்டர் வயலுக்குப் பாசனத்தை வழங்கும் 14 சதுர கிமீ நீரேந்தும் பரப்பளவுள்ளதுமான கொக்கைச்சாண்குளம் மற்றும் நீர்ப்பாசனப் பகுதிப் பூர்வீகத் தமிழ்க் கிராமத்தவர்கள் இனக்கலவரத்தில் வெளியேற, இவர்களது 200 ஏக்கர் வயற்காணி மற்றும் குடியிருப்புக் காணிகளில் 2010 ஆம் ஆண்டில் 165 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டனர். கொக்கைச்சாண்குளம் கிராமத்திற்கு 'கலாபோகஸ்வௌ' என சிங்களப் பெயர் சூட்டப்பட்டு வவுனியா தெற்கு சிங்களப் பிரதேச செயலாளர் பிரிவில் இணைக்கப்பட்டு தற்போது மற்றுமொரு நிர்வாகப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதற்குப் பெயர்தான் சமத்துவமா? இதுதான் நல்லிணக்கமா? இது அப்பட்டமான இனச் சுத்திகரிப்பு இல்லையா? இது பண்பாட்டு சிதைப்பில்லையா?

முல்லைத்தீவு மாவட்டம் நெலுக்குளம் பகுதியில் 400 க்கும் அதிகமான சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளன. கொக்குளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி போன்ற கரையோரக் கிராமங்களில் நூற்றுக் கணக்கான சிங்கள மீனவர்கள் மீள்குடியேற்றம் என்ற போர்வையில் நிரந்தரமாகக் குடியேற்றப்பட்டுள்ளார்கள். இந்தக் குடியேற்றத்தால் தமிழ் மீனவக் குடும்பங்கள் மீன்பிடித் தொழில் செய்து வாழமுடியாது இருக்கிறது.

பக்கத்தில் வாகரையில் உள்ள பட்டிப்பளை பிரிவில் 107 சிங்களக் குடும்பங்களை அரசு குடியேற்றியுள்ளது. இதனால் மீன்பிடித் தொழில் செய்து வந்த தமிழ்க் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஈச்சிலம்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சீனன் வெளி பகுதியில் கடற்கரையோரமாக அமைந்துள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான 20 ஏக்கர் காணியை ஆக்கிரமித்து சிறீலங்கா கடற்படை முகாம் அமைத்துள்ளது. இதனால் காணிச் சொந்தக்காரர்கள் தமது காணிகளில் குடியிருக்கவோ பயிர்ச் செய்கையில் ஈடுபடவோ முடியாதநிலை ஏற்பட்டுள்ளது.

இந்தக் கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள காணிகள் தோப்பூர் பிரதேச முஸ்லிம் மக்களினதும் சீனன்வெளி பிரதேச தமிழ் மக்களினதும் காணிகளாகும்.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுவதையும் இராணுவம் மற்றும் கடற்படைத் தளங்கள் அமைப்பதற்குத் தனியார் காணிகள் அபகரிகப்படுவதையும் தாங்கிய செய்திகள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளன.

சாவகச்சேரியில் அமைந்தள்ள காவல் நிலையத்துக்கு முன்பாக நீண்டகாலமாக இருந்த இந்துக் கோவிலின் ஒருபகுதியை இடித்துவிட்டு அதன் அருகில் உள்ள அரசமரத்தின்கீழ் விசாலமான புத்தர் கோயில் ஒன்று துரிதமாக அமைக்கப்பட்டுவருகின்றது. இதனை சிங்களக் காவல்துறையினரே முன்னின்று செய்கிறார்கள்.

இதுவரை காலமும் பொதுமக்கள் நடமாட்டம் அற்ற பகுதிகளிலும் இராணுவம் மற்றும் காவல் நிலையங்கள் உள்ள பகுதிகளிலும் சிறு புத்தர் சிலை அமைத்து வழிபாட்டுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதன் பின்னர் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளைக் கைப்பற்றி இவ்வாறான புத்தர் சிலைகள் நிறுவப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது வழிபாடுசெய்துவரும் இந்துக் கோயிலொன்று உடைக்கப்பட்டு அக்கோயில் அமைந்திருக்கும் இடத்தில் புத்தவிகாரை அமைக்கப்படுகிறது. இது இந்து சமயத்தினை இழிவுபடுத்தும் அதேவேளை பவுத்த பேரினவாதத்தின் கட்டு மீறிய வெறித்தனத்தைக் காட்டுகிறது.

குடாநாட்டில் தனியார் காணிகள் மற்றும் கட்டிடங்கள் 1000 கும் அதிகமான இடங்களில் இராணுவம் நிலை கொண்டுள்ளது.

இராணுவம் இவ்வாறு நிலை கொண்டுள்ள தென்மராட்சிப் பிரதேசத்தில் 300 ஏக்கர் நிலத்தையும் தெல்லிப்பளை பிரதேசத்தில் 61 ஏக்கர் நிலத்தையும் கைப்பற்றுவதற்கு இராணுவம் முயற்சி செய்து வருகிறது.

தற்போது யாழப்பாண மாவட்டத்தில் வீட்டுடன் இணைந்த காணிகள் 57 இலும் 5 வெற்றுக் காணிகளிலும் அரச காணி 1 இலும் வணிக நிறுவனம் 1 இலும் காவற்றுறையினர் குடிகொண்டுள்ளனர்.

இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் 716 காணிகள் உள்ளதாகக் கருதப்படுகிறது. இதில் வீட்டுடன் இணைந்த 378 காணிகளும் 283 வெற்றுக் காணிகளும 9 அரச காணிகளும் 46 வணிக நிறுவனங்களும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.

கடற்படையினரின் கட்டுப்பாட்டில் மொத்தம் 253 காணிகள் உள்ளதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. இதில் வீட்டுடன் 123 இணைந்த காணிகளும் 104 தனியார் காணிகளும் 19 அரச காணிகளும் 7 வியாபார நிறுவனங்களும் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளன.

அரசியலுக்கு அப்பால், இராணுவ மயப்படுத்தல், சிங்கள மயப்படுத்தல், பவுத்த மயப்படுத்தல் ஆகியவற்றுக்கு எதிராக அதி வணக்கத்துக்குரிய மன்னார் மறை மாவட்ட பேராயர் இராயப்பு யோசேப் அடிகளாரே ஓங்கிக் குரல் கொடுத்துவருகிறார். இதனால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

போர் முடிந்து விட்டதாகக் கூறப்பட்ட போதும் தமிழ் மக்களுக்கு எதிராக ஒரு முழுமையான போர் தற்பொழுது தொடக்கி வைக்கப்பட்டுள்ளது என்பதைத் தற்போது நடைபெறும் மண் பறிப்பு உறுதிப்படுத்துகின்றன என்று கொழும்பிலிருந்து வெளிவரும் முக்கிய தமிழ் வார செய்தித்தாளுக்கு வழங்கிய சிறப்புச் செவ்வியில் அவர் தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்தின் பல பகுதிகளில் இராணுவ தேவைகளுக்காகவும் இராணுவ குடியிருப்புக்களுக்காவும் 20,000 ஆயிரம் ஏக்கருக்கு மேலான நிலம் கபளீகரம் செய்யப்பட்டுள்ளதென ததேகூ இன் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரமேச்சந்திரன் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். இராணுவம் சட்டவிதிகளுக்குப் புறம்பான வகையில் எந்தக் காணியையும் கையகப்படுத்துகிறது. அவ்வாறு கையகப்படுத்தப்பட்ட காணிகளில் "இது இராணுவப் பிரதேசம்" என அறிவுப்புப் பலகையை சிங்களத்தில் எழுதி வைக்கப்பட்டுள்ளது.

வலிகாமம் வடக்கு 59.5 ச.கிமீ. பிரதேசத்தில் 45 கிராமசேவையாளர் பிரிவில் மக்கள் வாழ்ந்தார்கள். 2011 ஆம் ஆண்டு இறுதியிலிருந்து இதுவரை 21 கிராமசேவையாளர் பிரிவுகளில் மட்டும் மீளக் குடியேற மக்கள் அனுமதிக்கப்பட்டனர். அதுவும் அரைகுறையாகவே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எஞ்சிய 23 கிராம சேவகர் பிரிவுகள் இன்னமும் இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் சிக்கியுள்ளது. அதில் வாழ்ந்த 26,281 பேர் (7,273 குடும்பங்கள்) முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் வாழ்கிறார்கள்.

இப் பிரதேச மக்களில் 6,000 மக்கள் வரை கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக யாழ்ப்பாணக் குடாநாட்டில் அகதி முகாம்களில் அல்லற்படுகிறார்கள். சுமார் 25,000 மக்கள் நண்பர்கள் வீடுகளிலும் வாடகை இடங்களிலும் இருக்கிறார்கள்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் 18 உயர் பாதுகாப்பு வலயங்கள் இருக்கின்றன. இது யாழ்ப்பாணக் குடாநாட்டின் மொத்த 880 சகிமீ நிலப்பரப்பில் 260 சகிமீ பரப்பளவாகும்.

முல்லைத்தீவில், கிளிநொச்சியில் சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாத நிலையில் 3 இலட்சம் மக்கள் தறப்பாள் கொட்டில்களில் எந்த அடிப்படை வசதிகளுமின்றி நரக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் மட்டும் 44,559 பேர் (12,249 குடும்பங்கள்) தொடர்ந்தும் ஏதிலிகளாக வாழ்ந்து வருவதாக இடம்பெயர்ந்தோர் நலன்புரி அமைப்புக்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இவர்களில் பெரும்பாலானோர் 53 நலன்புரி நிலையங்களிலும் உறவினர் நண்பர்கள் வீடுகளிலும் அடைக்கலம் புகுந்துள்ளனர்.

வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ளடங்கும் சுமார் 8,000 ஏக்கர் காணிகளைத் தமது பயன்பாட்டுக்கு வழங்குமாறு இராணுவம் நெருக்கடி கொடுக்கிறது. தற்போது அந்தப் பகுதியை முழுமையாக ஆக்கிரமித்துள்ள இராணுவம் மற்றும் கடற்படை இந்தக் கோரிக்கையை விடுத்திருக்கிறது.

தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 23 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய 7,410 ஏக்கரும் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 2 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய 370 ஏக்கரும் இதில் அடங்குகிறது. 1990 ஆம் ஆண்டு முதல் இராணுவம் 8,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட வலிகாமம் வடக்கு மற்றும் வலிகாமம் கிழக்கின் சில பகுதிகளில் நிலைகொண்டுள்ளது.

இந்தப் பிரதேசங்கள் உயர்பாதுகாப்பு வலயமாக்கப்பட்டு மக்கள் மீளக்குடியமர்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகின்றது. இந்தப் பிரதேசத்தினுள் 18 கிராம சேவையாளர் பிரிவுகள் முழுமையாகவும் 7 கிராம சேவையாளர் பிரிவுகள் பகுதியாகவும் உள்ளடங்குகின்றன. இந்தப் பகுதிகளுக்குள் மீளக்குடியமர்வதற்கு 7,000 குடும்பங்கள் வரை ஏற்கனவே விண்ணப்பித்துவிட்டு மீள்குடியமர்வை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன.

சம்பூர் இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர். இவ்வூர் மூதூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்டது. மூதூர் நகரிலிருந்து 5 கிமீ தொலைவிலுள்ள சம்பூர் பிரதேசம் 2 கிராம அதிகாரி பிரிவுகளைக் கொண்டு 35.9 ஹெக்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. சம்பூர் வயல்கள் நிறைந்ததும் கடல் மற்றும் குளங்களை கொண்டதுமான‌ அழகிய கிராமமாகும். அத்தோடு இப்பிரதேசத்தில் உள்ள மற்றய கிராமங்களுக்கும் எடுத்துக்காட்டாக உள்ள ஒரு கிராமமாகும்.

2007 ஆம் ஆண்டு யூலை மாதம் சம்பூரை சிங்கள இராணுவம் கைப்பற்றியது. அதனை அடுத்து சம்பூர் மற்றும் மூதூர் கிழக்குப் பகுதியை உள்ளடக்கிய பிரதேசங்கள் அதிவுயர் பாதுகாப்பு வலயமாகச் சிறப்பு அரசிதழ் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டது. அங்கே மக்கள் மீளக்குடியேற முடியாது என்றும் மீறி அப்பகுதிக்குள் நுழைபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதற்குள் சம்பூர், கடற்கரைச்சேனை, கூனித்தீவு, சூடைக்குடா மற்றும் இளக்கந்தை ஆகிய 5 பாரம்பரியத் தமிழ்க் கிராமங்களும் அடங்குகின்றன.

மூதூர் பிரதேச செயலகத்தின் 2008 ஆம் ஆண்டுக் கணக்கீட்டின்படி இப்பிரதேசத்தில் 1940 குடும்பங்களைச் சேர்ந்த 7494 பேர் வாழ்ந்து வந்தனர். இந்த மக்கள் மொத்தம் 3,500 ஏக்கர் நெற்காணி, 600 ஏக்கர் குடியிருப்புக் காணிக்குச் சொந்தக்காரர்களாக இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அரசின் தேசிய அனல் சக்திக் கூட்டுத்தாபனமும் சிறிலங்கா மின்சார சபையும் இணைந்து சம்பூரில் திருகோணமலையில் 500 மெகா வார்ட் அனல் மின் உற்பத்தி நிலையத்தை 500 ஏக்கர் நிலப்பரப்பில் நிருமாணித்து வருகிறது.

இத் திட்டம் காரணமாக அங்கு வாழ்ந்து வந்த 7,494 பேர் தெருவோரத்துக்கு வந்துள்ளார்கள். அவர்கள் சிறு தறப்பாள் கொட்டில்களில் கடந்த 5 ஆண்டுகளாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமிழ்மக்கள் வாழந்த சுமார் 500 வீடுகளை எவ்வித முன்னறிவித்தலுமின்றி மகிந்த இராசபக்சே அரசு தரைமட்டமாக்கியது.

சம்பூர், மூதூர் கிழக்கு ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய ஆறு கிராம சேவகர் பிரிவுகளிலும் உள்ள ஏறத்தாள 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்க் குடும்பங்களின் பூர்வீக நிலங்கள் அரசின் இந்த நடவடிக்கையால் அபகரிக்கப்பட்டது. மொத்தம் 5547 சதுர மீற்றர் தமிழர் நிலம் அரசினால் கபளீரம் செய்யப்பட்டு விட்டது.

உயர்பாதுகாப்பு வலயங்கள் எனத் தாயகத்தின் வளமான நிலங்கள் முழுவதையும் ஆக்கிரமித்து வைத்திருக்கும் சிங்கள இராணுவம் இன்று போர் முடிந்துள்ள நிலையில் உயர்பாதுகாப்பு வலயங்கள் எதற்காக எனக் கேள்வி எழுப்பப்பட்டால் அவை அபாயகரமான பிரதேசங்கள் என்றும் கட்டுப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் என்றும் நேரத்திற்கொரு கதை சொல்லிக் கொண்டிருக்கின்றது.

மேலும் வி.புலிகள் வசம் இருந்த நிலங்கள், அவர்களுக்கு விற்கப்பட்ட காணிகள் போன்றவற்றை சிங்கள இராணுவம் கையகப்படுத்தியுள்ளது. மறுபுறத்தில் தொழிலுக்காக என்று கூறிக்கொண்டு வந்து தங்கும் சிங்களவர்கள் சில நாட்களிலேயே நிரந்தர வதிவுரிமை கேட்டவுடன் அவை வழங்கப்படுகின்றன.

போரில் பாதிக்கப்பட்ட மூன்ற இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் இன்னமும் அவர்களது சொந்தக் காணியில் குடியமர்த்தப்படவில்லை. கேட்டால் கண்ணிவெடி அகற்றப்படவில்லை என்கிறார் மகிந்த இராசபக்சே. ஆனால் சிங்களவர்கள் அந்த இடங்களுக்கு சுற்றலா சென்று திரும்புகிறார்கள்! அதுவும் கொஞ்நஞ்சமில்லை. மே 2009 க்குப் பின்னர் 125 இலட்சம் (சிங்கள) மக்கள் வடக்குக்கு சுற்றுலா சென்று திரும்பியுள்ளார்கள். ஒகஸ்ட் மாதத்தில் மட்டும் 100,000 சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாணத்துக்கு சென்றுள்ளார்கள். அதே காலகட்டத்தில் 10,000 ஊர்திகள் யாழ்ப்பாணம் சென்றுள்ளன.

போர் முடிந்து 3 ஆண்டுகள் கழிந்த பின்னரும் வடக்கு கிழக்கில் சிவில் நிருவாகம் முடக்கப்பட்டுளளது. இராணுவ ஆட்சியே தொடர்கிறது. வடக்கு கிழக்க ஆளுநர்கள் ஓய்வு பெற்ற சிங்கள இராணுவ தளபதிகள். திருகோணமலை, அம்பாரை, மன்னார், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர்கள் சிங்களவர்கள். இதில் திருகோணமலை அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர்கள் ஓய்வு பெற்ற இராணுவ தளபதிகள். கிழக்கு மாகாணசபை செயலர் சிங்களவர்.

இதுதான் மகிந்த இராசபக்சே கூறும் இனங்களுக்கு இடையிலான சமத்துவமா? நல்லிணக்கமா?

இடம்பெயர்ந்தவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்கள் சிவில் நிர்வாகத்தினால் நிருவகிக்கப்பட வேண்டும் எனவும் கட்டுப்பாடற்ற உச்ச நடமாட்ட சுதந்திரத்தை இடம்பெயர்ந்த மக்களுக்கு உறுதி செய்ய வேண்டும் எனவும் அய்.நா. உயர் தூதுவர் ஜோன் ஹோம்ஸ் கோரிக்கை விடுத்தார். ஆனால் அது மகிந்த இராசபக்சே காதில் விழவில்லை.

வி.புலிகளுக்கு இராணுவத் தீர்வு, தமிழர்களுக்கு அரசியல் தீர்வு என்று போர் நடக்கும் போது மகிந்த இராசபக்சே திருவாய் மலர்ந்தார். வி.புலிகளுக்கு எதிரான போர் அவர்கள் கைகளில் சிக்குண்டு கிடக்கும் தமிழர்களை விடுவிக்க மேற்கொண்டட மனிதாபிமான நடவடிக்கை என்று மகிந்த இராசபக்சே புளுகினார். இன்று வடக்கில் 8 பொதுமக்களுக்கு ஒரு இராணுவம் என்ற அடிப்படையில் தமிழ்மக்கள் இராணுவப் பிடிக்குள் அகப்பட்டு மூச்சுவிட முடியாது திணறுகிறார்கள்.

அவர்களது கலாசாரம் சீரழிக்கப்படுகிறது. அவர்களது சுதந்திரம் சப்பாத்துக் காலில் போட்டு மிதிக்கப்படுகிறது. தமிழ்மக்கள் போரில் வெற்றி கொள்ளப்பட்ட அடிமைகள் என நடத்தப்படுகிறார்கள். சிங்கள இராணுவத்தின் அனுமதியின்றி தேர், திருவிழா, திருமணம், பூப்பு நீராட்டுவிழா, விளையாட்டுப் போட்டிகள், கூட்டங்கள் எதுவும் நடத்த முடியாது!

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் தமிழர் நிலத்தை ஆக்கிரமித்து, இராணுவத்தினருக்கான படைத்தளங்கள், குடியிருப்புக்கள், உல்லாச விடுதிகள், நட்சத்திர விடுதிகள் அமைக்கப்பட்டு வருவதுடன் இராணுவத்தின் முழுமையான ஆதரவுடன் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஆனால் இவை குறித்து அறிந்தும் அறியாத நிலையில் முழு அமைச்சர் டக்லஸ் தேவானந்தா மற்றும் அரை அமைச்சர் கருணா போன்றோர் உள்ளனர்.

மகிந்த இராபக்சே சிங்கள இராணுவத்தைக் கொண்டு வட கிழக்கை பவுத்த மயமாக்கித் தமிழர்களது பண்பாட்டை, தேசிய அடையாளத்தை அழித்து வருகிறார். தெற்கே கனகராயன் குளம் தொடங்கி வடக்கே மாதகல் வரை பவுத்த விகாரைகள், பவுத்த தூபிகள், புத்தர் சிலைகள் பொதுக் காணிகளிலும் தனியார் காணிகளிலும் இராணுவம் நிர்மாணித்து வருகிறது.

மே,2009 க்குப் பின்னர் வடக்கு கிழக்கில் வாழும் மக்கள் சிங்களப் படையினரது இரும்புப் பிடிக்குள் சிக்கி அடிமைகள் போல் வாழ்கிறார்கள். அவர்களது வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டுள்ளது. வடக்கு ஒரு திறந்த வெளிச் சிறைசாலையாகக் காட்சி அளிக்கிறது.

எனவே தமிழ்மக்களது வீடுவாசல், காணிபூமிகளைப் பறித்தவர்களை, அவர்களது வாழ்வுரிமையைப் பறித்தவர்களை, அவர்களது வாழையடி வாழை என வந்த பண்பாட்டை சிதைத்தவர்களை எமது உணர்வுகளைக் காலில் போட்டு மிதித்தவர்களை, தமிழ்மக்களது தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமையைத் திட்டவட்டமாக மறுத்தவர்களை, உயிராய் வளர்த்த எமது விடுதலைக் கனவைக் கலைத்தவர்களை கிழக்க மாகாண மக்கள் இத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும்.

கிழக்கு மாகாணம் தமிழ்த் தேசியத்தின் கோட்டை. என்பதை கடந்த காலத் தேர்தல்களில் மக்கள் எண்பித்துக் காட்டியுள்ளார்கள்.

வன்னியில் கொல்லப்பட்ட 40,000 மக்கள் கொட்டிய குருதி, விட்ட கண்ணீர், சிந்திய வெயர்வை பிள்ளையான், கருணா கைகளில் படிந்துள்ளது!

தமிழினத்தின் போராட்டத்தை முதலமைச்சர் பதவிக்காக சிங்கள-பவுத்த பேரினவாதிகளுக்குக் காட்டிக் கொடுத்த பிள்ளையானை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்! கூட்டிக் கொடுக்கும் கருணாவின் முகத்தில் கரி அப்பவேண்டும்!

மக்கள் அவர்களது கையில் இருக்கும் வாக்குச் சீட்டு என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி சிங்கள - பவுத்த பேரினவாதத்தின் மொத்த வடிவமான மகிந்த இராசபக்சேயின் அய்க்கிய மக்கள் சுதந்திர முன்னணியை இத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும். அதற்கான பொன்னான வாய்ப்பு தமிழ்மக்களுக்குக் கிடைத்துள்ளது.

மிரட்டலுக்கு அஞ்சாது, அடக்குமுறைக்கு அடிபணியாது, சலுகைகளுக்கு மயங்கிவிடாது எமது உறவுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களை ஆதரித்து வாக்களிக்க வேண்டும். தேர்தல் முடிவைப் புலம் பெயர் தமிழர்கள் மட்டுமல்ல உலக நாடுகளும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

சிறைக் கைதிகளுடன் தொலைபேசி பேச்சு எதற்கு? 4ம் மாடியில் வைத்து சிவசக்தி ஆனந்தனிம் விசாரணை!
[Tuesday, 2013-05-21 16:10:58]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கொழும்பில் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (21) காலை நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். வவுனியா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதிகள் அவருக்கு எடுத்த தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பாகவே அவர் மீது குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர். குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசாரணைக்கு வருமாறு வவுனியா பொலிஸ் நிலையம் ஊடாக அழைப்பாணை அனுப்பப்பட்டதையடுத்தே சிவசத்தி ஆனந்தன் இன்று (21) காலை 10.00 மணிக்கு கொழும்பிலுள்ள பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குச் சென்றிருந்தார்.



முஸ்லிம் மக்களை ஒடுக்குமுறைக்கு உட்படுத்துவதில் இலங்கை மும்முரம் - அமெரிக்கா!
[Tuesday, 2013-05-21 16:04:56]

இலங்கையில் முஸ்லிம் மக்கள் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. 2012ம் ஆண்டுக்கான அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் சர்வதேச மதச் சுதந்திர அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கிறிஸ்தவ தேவாயலங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக விசாரணை நடாத்தி தண்டனை விதிக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



தனிநபர் பிரேரணை மூலம் 13ம் திருத்தத்தை நீக்க நடவடிக்கை!
[Tuesday, 2013-05-21 16:00:03]

13ம் திருத்தச் சட்டம் மற்றும் மாகாண சபை முறையை இரத்து செய்யுமாறு கோரி பாராளுமன்றில் தனிநபர் பிரேரணை ஒன்றை முன்வைக்கவுள்ளதாக ஹெல உறுமய கட்சியின் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். குறித்த பிரேரணை இந்த வாரம் பாராளுமன்றில் சமர்பிக்கப்படும் என அவர் தெரிவித்தார். 13ம் திருத்தச் சட்டமும் மாகாண சபை முறையும் பாராளுமன்ற முறைக்கு மாறானவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியாவில் மாநிலம் ஒன்று அதிகாரத்தை மீறி செயற்பட்டால் அம்மாநிலத்தின் அதிகாரத்தை மத்திய அரசு பொறுப்பேற்க முடியும்.



படைப் புலனாய்வாளர்களினால் முல்லைத்தீவு வாக்காளர் பட்டியல் சேகரிப்பு!
[Tuesday, 2013-05-21 15:52:52]

2013 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப் பட்டியலை தயாரிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள 2012 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் பட்டியல் முல்லைத்தீவு மாவட்டக் கிராம சேவகர்களிடம் இருந்து படைப் புலனாய்வாளர்கள் பெற்று வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது நாடளாவிய ரீதியில் 2013 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப் பட்டியல் தயாரிப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இதற்கான 2012 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் ஒவ்வொரு கிராம சேவையாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரக் கிராம சேவகர் பிரிவுகள் மற்றும் நகரப் பகுதிக் கிராம சேவகர் பிரிவுகளில் இவ்வாறு வழங்கப்பட்ட வாக்காளர் பெயர்ப் பட்டியலை இராணுவ முகாம்களில் இருந்து வந்து தம்மைப் புலனாய்வாளர்கள் என அறிமுகப்படுத்துபவர்கள் பெற்றுச் செல்கின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.



கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்க மன்மோகன் சிங்கிற்கு கடிதம் அனுப்பினார் தமிழக முதல்வர்!
[Tuesday, 2013-05-21 15:42:57]

கச்சதீவை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதலமைச்சர் ஜெயலலிதா திங்கட்கிழமை அனுப்பிவைத்துள்ள அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கச்சதீவை இலங்கையிடம் இருந்து மீண்டும் இந்தியாவுக்கு மீட்பது தொடர்பாக கடந்த 3-5-2013 அன்று தமிழக சட்டசபையில் கொண்டு வந்து ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பற்றி உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். அந்த தீர்மான நகலை இந்த கடிதத்துடன் இணைத்துள்ளேன்.



ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இந்தியாவிற்கு தோல்வி - ஏற்றுக்கொண்டார் இந்திய உயர்ஸ்தானிகர்! Top News
[Tuesday, 2013-05-21 15:36:16]

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இந்தியா தோல்வி கண்டுள்ளது எனவும் இதனை தான் ஒப்புக்கொள்வதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா, தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரிடம் ஒப்புக் கொண்டுள்ளார். நேற்று கொழும்பு ஹலதாரி ஹோட்டலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் இந்திய உயர் ஸ்தானிகரக்கு விசேட விருந்துபசாரமொன்று வழங்கப்பட்டது. அதில் இரு தரப்பினருக்குமிடையெ இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்திய உயர்ஸ்தானிகர் மேற்கண்டவாறு குறிப்பிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.



இந்திய இராணுவத்தை விரட்டவே புலிகளுக்கு பிரேமதாஸ ஆயுதங்களை வழங்கினார் - சஜித் விளக்கம்!
[Tuesday, 2013-05-21 09:49:06]

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸா ஆயுதங்களை கொடுத்தது ஏன்? என்று ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியின் மகனுமான சஜித் பிரேமதாஸ தெளிவுப்படுத்தியுள்ளார். யுத்தம் நிறைவடைந்து 4 ஆண்டுகள் பூர்த்தியடைந்ததை கொண்டாடும் வகையில் காலி முகத்திடலில் சனிக்கிழமை நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னாள் ஜனாதிபதி புலிகளுக்கு ஆயுதம் கொடுத்தார். அத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலமாக நாட்டைபிரிப்பதற்கு முயன்றனர் என்று குற்றஞ்சாட்டினார்.



இராணுவத்தின் காணி அபகரிப்புக்கு எதிரான 1478 ரிட் மனுக்கள் மீதான விசாரணை 27 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!
[Tuesday, 2013-05-21 09:38:00]

யாழ்ப்பாணத்தில் தமக்கு சொந்தமான காணிகளை இழந்துள்ள 1,474 பேர் தாக்கல் செய்துள்ள ரிட் மனுக்கள் மீதான விசாரணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் மே மாதம் 27 ஆம் திகதி வரையிலும் ஒத்திவைத்துள்ளது. தமக்கு சொந்தமான 6381 ஏக்கருக்கு கூடுதலான் பாரம்பரிய தனியார் நிலங்களை சுவீகரிக்க அரசாங்கம் எடுக்கு நடவடிக்கைகளை எதிர்த்தே கடந்த 15 ஆம் திகதி புதன்கிழமை இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நீதியரசர் கே. ஸ்ரீஸ்கந்தராஜா முன்னிலையில் நேற்று ஆராயப்பட்டன. 1474 ரிட் மனுக்களையும் ஏற்கவேண்டும் என்பதற்கான ஆதாரங்களை மே மாதம் 27 ஆம் திகதி முன்வைக்குமாறு பணித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் அன்றைய தினத்திற்கே வழக்கையும் ஒத்திவைத்தது.



நிறைவேற்று அதிகாரம் உள்ளபோது வடக்கு தேர்தல் பற்றி அச்சம் கொள்ளவேண்டியதில்லை! - மல்வத்து பௌத்த பீடம் அரசுக்கு ஆலோசனை!
[Tuesday, 2013-05-21 09:34:47]

இலங்கையில் எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் நடத்தப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னதாக மாகாணசபைகளுக்கு உள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை ஒழித்துவிடுவதற்கான முஸ்தீபுகள் நடப்பதாக ஆளுந்தரப்பு தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலைமையில், தேர்தலுக்கு முன்னதாக அந்த அதிகாரங்களை ஒழிப்பதில் அரசாங்கம் அக்கறை செலுத்தத் தேவையில்லை என்று நாட்டில் செல்வாக்கு மிக்க மல்வத்து பௌத்த பீடம் அரசாங்கத்துக்கு ஆலோசனை கூறியுள்ளது.



பாடுமீன் சமூக அபிவிருத்திச் சங்கம் பிரான்ஸ் - இலவசபாட வகுப்புக்களை நடாத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
[Tuesday, 2013-05-21 09:30:17]

பிரான்ஸ் நாட்டை தளமாக கொண்டு செயற்படும் பாடுமீன் சமூக அபிவிருத்திச் சங்கம் பின் தங்கிய பகுதிகளில் கல்வி கற்கும் மாணவர்களில கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் இலவசபாட வகுப்புக்களை நடாத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.



13 ஆவது திருத்த சட்டத்தை ரத்துச் செய்யும் அதிகாரம் அரசாங்கத்திற்கு கிடையாது: வாசுதேவ, திஸ்ஸ விதாரண எச்சரிக்கை!
[Tuesday, 2013-05-21 09:27:37]

அரசியல் அமைப்பில் காணப்படுகின்ற 13 ஆவது திருத்தச்சட்டத்தை ரத்துச் செய்யும் தார்மீக அதிகாரம் அரசாங்கத்திற்கோ அதனைச் சார்ந்த பங்காளிக் கட்சிகளுக்கோ கிடையாது. அவ்வாறானதொரு நடவடிக்கை எத்தரப்பில் முன்னெடுக்கப்பட்டாலும் அதனை தோல்வியடையச் செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம் என்று அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார மற்றும் திஸ்ஸ விதாரண ஆகியோர் எச்சரித்துள்ளனர். மாகாணசபை முறைமையை ஒழிப்பதற்கு ஆளும் கட்சியில் உள்ள பெரும்பாலானவர்கள் எதிர்ப்பாகவே உள்ளனர். இந்த நிலையில் 13 ஆவது திருத்தச்சட்டத்தை ரத்துச் செய்வதற்கான பிரேரணையை கொண்டு வந்தாலும் அதனை நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் அப்பிரேரணையானது மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவின்றி தோல்வியடையும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.



எமது படையினரை நாம் எங்கு வைத்திருப்பதென்பதை தீர்மானிக்கும் உரிமை சர்வதேச சமூகத்துக்கு கிடையாது: - இராணுவத் தளபதி ஜெகத் ஜயசூரியா
[Tuesday, 2013-05-21 09:27:05]

வடக்கில் நாம் பெரும் படைக்குறைப்பை மேற்கொண்டுள்ளோம் போர்க்காலத்தில் யாழ். மாவட்டத்தில் 16 இராணுவ முகாம்கள் இருந்தன. தற்போது 3 இராணுவ முகாம்கள் மாத்திரமே அங்குள்ளன என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜெகத் ஜயசூரியா தெரிவித்துள்ளார். அரச வானொலி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே இராணுவத் தளபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.



ஐ.நாவின் தீர்மானங்களை நிறைவேற்றாத அரசு, தமிழர்களின் பிரச்சினையைத் தீர்க்குமா? - பொன். செல்வராசா
[Tuesday, 2013-05-21 09:13:15]

யுத்தத்தை மறக்க வேண்டும் என்று அசோகச் சக்கரவர்த்தி கூறியுள்ள வேளையில் அரசாங்கம் போரின் வெற்றியைக் கொண்டாடுகின்றது. ஐக்கிய நாடுகளின் தீர்மானங்களை நெறிப்படுத்த முடியாத அரசு தமிழ் பேசும் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பார்களா என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா கேள்வி எழுப்பினார். 2006ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதி யுதத்தில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களின் 4ஆம் ஆண்டு நிறைவு அஞ்சலியும் ஆத்மசாந்திப் பூசையும் மட்டக்களப்பு நகர தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. அதன் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.



முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பு நினைவு சுமந்து யேர்மனியில் தொடரும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் Top News
[Tuesday, 2013-05-21 09:13:12]

முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பு நினைவு சுமந்து யேர்மனியில் தொடரும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பு நினைவு சுமந்து யேர்மனி பெர்லின் மற்றும் பீலேபெல்ட் நகரங்களில் கவனயீர்ப்பு மற்றும் இன அழிப்பு கண்காட்சி முன்னெடுக்கப்பட்டது . யேர்மனியின் தலைநகரத்தில் மக்கள் நடமாடும் நகர மத்தியில் கவனயீர்ப்பு நிகழ்வு பல்லின சமூகத்தினரிடம் செல்லும் வகையில் சிறீலங்கா அரசு ஈழத்தமிழர்கள் மீது முன்னெடுக்கும் இன அழிப்பை வெளிக்காட்டும் முகமாக யேர்மன் மொழியில் தகவல்கள் வாசிக்கப்பட்டு மற்றும் பதாதைகள் தாங்கி துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது .



சிறிலங்கா ஜனாதிபதி மகிந்தராஜபக்சவின் சீனப் பயணம் பிற்போடப்பட்டுள்ளது!
[Tuesday, 2013-05-21 09:10:25]

சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சீனாவிற்கான பயணம் பிற்போடப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. எதிரவரும் 27ம் திகதியே அவர் சீனாவுக்குப் பயணமாகவுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. முன்னதாக, சிறிலங்கா அதிபர் நாளை சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. எனினும், இந்தப் பயணம் பிற்போட்படு எதிர்வரும் 27ம் நாள் தொடக்கம் 30ம் நாள் வரை இடம்பெறும் என்று சீன வெளிவிவகார அமைச்சு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. புதிய சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்தப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள நெருக்கமான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



சிரேஷ்ட அமைச்சரின் பெயரில் பண மோசடி
[Tuesday, 2013-05-21 08:59:31]

சிரேஷ்ட அமைச்சர் ஒருவரின் பெயரைப் பயன்படுத்தி இளைஞர் யுவதிகளை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கண்டி நீதிவான் நீதிமன்றத்தினால் 25 ஆயிரம் ரொக்கப் பிணையிலும் இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் சரீரப்பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கண்டி வெரல்லகம பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு தான் நிதி மோசடியில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டதையடுத்து பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மேற்படி நபர் சிரேஷ்ட அமைச்சர் ஒருவரது பெயரைக் கூறி அவர் தனக்கு மிகவும் நெருங்கியவர் என போலியான கதைகளைக் கூறியும் அவரூடாக வங்கிகளில் தொழில் பெற்றத் தருவதாகக் கூறியுமே இவ்வாறு பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பன்வில பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இது தொடர்பான மேலதிக விசாரணைகள் ஜுன் மாதம் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டன.



வாய் பேச முடியாத சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய குடும்பஸ்தர் - திருகோணமலையில் சம்பவம்
[Tuesday, 2013-05-21 08:45:10]

திருகோணமலை லிங்கநகர் பகுதியைச் சேர்ந்த 12 வயதான விசேட தேவையுடைய சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய 33 வயதான நபர் ஒருவர் எதிர்வரும் 31ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த சிறுமி கடந்த சனிக்கிழமை பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கைது செய்யப்பட்டவர் லிங்கநகரைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி என தெரியவந்துள்ளது. அவரது மனைவி வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சந்தேகநபர் சிறுமியை பலாத்காரதிற்கு உட்படுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை யாழ்ப்பாணத்தில் தங்கி வேலை செய்வதாகவும் தாய் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும் விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது நான்காம் தரத்தில் கல்வி பயிலும் வாய் பேசமுடியாத சிறுமி தனது ஆசிரியரிடம் இப்பிரச்சினையை தெரிவித்தன் பின்னர் சம்மந்தப்பட்ட நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



மனித உரிமைக்கும் சுதந்திரத்திற்கும் ஸ்ரீலங்காவில் இன்னும் இடமில்லை - மனித உரிமை ஆர்வலர் குழு தெரிவிப்பு!
[Monday, 2013-05-20 22:34:42]

இலங்கையில் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியுடன் யுத்தம் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் அந்நாட்டில் அடிப்படை மனித உரிமைகளுக்கும் சுதந்திரத்துக்கும் மரியாதை மென்மேலும் குறைந்துகொண்டு போவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம், அரச படைகளும் விடுதலைப் புலிகளும் செய்ததாகக் குற்றம்சாட்டப்படும் போர்க்குற்றங்களை விசாரிக்கவோ சட்ட நவடிக்கை எடுக்கவோ அர்த்தமுள்ள நடவடிக்கை ஒன்றையும் இதுவரையில் எடுக்கவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது.



மே18 நான்காம் ஆண்டு நினைவேந்தல், மயிலாடுதுறையில் நடைபெற்றது. Top News
[Monday, 2013-05-20 21:10:53]

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை போர்க்குற்றநாள் நினைவேந்தல் நிகழ்வு நேற்றுமுன்தினம் மயிலாடு துறையில் இடம்பெற்றது (18 05 2013). இதில் ஏராளமான தமிழின உணர்வாளர்கள் கலந்துகொண்டதோடு படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு அஞ்சலிகளையும் செலுத்தியுள்ளனர்.



நெதர்லாந் நாட்டில் இடம்பெற்ற தமிழினவழிப்பின் 4ம் அண்டு நினைவு நாள். Top News
[Monday, 2013-05-20 20:22:03]

சிங்கள பேரினவாதம் 60 ஆண்டுகளாக தமிழிழ மக்கள் மீது திட்டமிட்ட தமிழினவழிப்பை மேற்கொள்கின்றது. சிங்கள பேரினவாதம் செய்த தமிழினவழிப்பின் உச்சக்கட்டமே 18. வைகாசி 2009ம் ஆண்டாகும். வைகாசி 18ம் திகதியை உலகெங்கும் வாழ்கின்ற தமிழீழ உறவுகள் ஓர் துயரநாளாகவும் தமிழீழ மண்ணை மீட்டெடுக்க வேண்டுமென உறுதியெடுக்கின்ற நாளாகவும் எழுச்சிப்பூர்வமாக நினைவுகூர்ந்து வருகின்றார்கள்.


Suresh-remax-2013-01-01
Canada Kanthasamy Kovil
INNSYS-20120930
TDE_Computers2011
Mahesan supramaniyam 031109
NIRO-DANCE-100213
RoyaShades-l2011(04-12-11)
Ramans2011
TamilsGuid-191012-2013
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com